Sunday, November 18, 2012

இறைநம்பிக்கையுள்ள பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

இறைவன் இருக்கிறான் என்ற அசையாத நம்பிக்கை கொண்ட அன்பு சகோதரர்களே, சில தினங்களுக்கு முன்னாள், கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற கேள்விக்கே பதில் தெரியாத கூமுட்டைகள் பதிவுலகில் ஒன்று சேர இருப்பதாக அறிய வந்தேன்.  அங்கு இறைநம்பிக்கையுள்ள நண்பர்கள் சிலர் சென்று எங்களுக்கு வாய்ப்பில்லையா என்று கேட்டதைப் பார்த்து எனக்கு வருத்தம் ஏற்ப்பட்டது.  அவர்கள் அப்படி என்ன எழுதிவிடப் போகிறார்கள்?    இரண்டு பாறாங்கல்லு சேர்ந்து குட்டி போட்டுச்சும்பாங்க, திடீர்னு ஒன்னுமேயில்லாததில் இருந்து கம்பியூட்டர் தானா வந்துசும்பாங்க, எப்போதும் போல அதே உளறல் தானே.  இவர்களிடம் வாய்ப்புக் கேட்பதை விட இறைநம்பிக்கையுள்ள நாம் ஏன் ஒன்று சேர்ந்து இவர்கள் விடுவது அத்தனையும் பேத்தல் என்று வெளிச்சம்போட்டு காண்பிக்கக் கூடாது?

 ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.  நாத்தீக பதிவர்களுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.  அவர்களிடம் பாகுபாடு என்பதே இல்லை.


அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள்.  மேலும் ஒரு இலக்கு நோக்கி இருக்கிறார்கள்.

அதாவது கடவுள் இல்லை என்பது எல்லோருடைய ஒருமித்த கருத்து, மாற்றுக் கருத்தே இல்லை.  கடவுள் இருக்கிறான் என்பவர்கள் எல்லோரையும் எதிர்க்க வேண்டுமென்ற ஒரே இலக்கு அவர்களுடையது.



ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் அப்படியில்லை.  நாம் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை அதுமட்டுமல்ல, வெவ்வேறு திசை நோக்கி இருக்கிறோம்.

அதாவது நாம் ஏற்றுக் கொண்ட பாதை அல்லது மார்க்கம் வெவ்வேறாக இருக்கிறது.  இது ஏதோ நாம் வெவ்வேறு திசை நோக்கி இருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது.  இதை ஒரு பிரச்சினையாக நாம் நினைக்கக் கூடாது  அம்மணமாகத் திரிபவர்கள் எல்லோரும் அம்மணமாக இருப்பதைத் தவிர வேறு மாதிரி இருக்க முடியாது.  அது மாதிரி இல்லை என்பவன், "இல்லை" என்பதத் தவிர  வேறு என்ன சொல்ல  முடியும்? ஆனால் ஆடை உடுத்துபவன் வேஷ்டி கட்டலாம், பேன்ட் சர்ட் போடலாம் கோட் சூட் கூட போடலாம். இங்கு இறைவனை அடைய பாதைகள் பல உண்டு.  ஆனாலும், நமக்குள்ளும் ஒரு ஒற்றுமை இருக்கிறது, எல்லோரும் இறைவன் இருக்கிறான் என்று  நம்பும் இனம் என்பதில் நாம் எல்லோரும் ஒரே இனம்.

எனவே நண்பர்களே நாம் அனைவரும் ஒன்று படுவோம், நாம் 100% நம்பி பின்பற்றும் மார்க்கத்தை நமக்குள் வைத்திருப்போம், இவர்கள் விடுவது பேத்தல் என்பதை அறிவியல் முறையிலும் லாஜிக் முறையிலும் முறியடிப்போம்!!  இந்த முயற்சியில் ஒன்று சேர நீங்கள் விரும்பினால் நானும் இணையத் தயார்.  உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

195 comments:

  1. மிக புதுமையான முயற்சி. வேற்றுமையில் ஒற்றுமை. உங்கள் முயற்சிக்கு என் முழு ஆதரவு. (not that it matters!)

    ReplyDelete
  2. நானும் வர்ரேங்க ....

    ReplyDelete
    Replies
    1. @ தருமி

      ஐயா தங்களைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன், தாங்கள் இந்த முயற்சிக்கு தலைமையேற்று வழி நடத்த வேண்டுகிறேன், மறுக்காமல் ஏற்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று வரும் பதிவுகளில் சொல்கிறேன்.

      Delete
  3. சகோ தாசு ,
    நல்ல் முயற்சி. அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் ஏதாவது சொல்லுங்கள் நமக்கு பிரச்சினை எளிதாகி விடும்.

    நாதிகர்களை எதிர்ப்பதில் அன்பு,அமைதி உண்டானால் மகிழ்ச்சியே!!

    எனினும் நாத்திகர் ,ஆத்திகர் என்பதன் விளக்கமும் காலரீதியாக பொருள் மாற்றம் அடைந்த்வை.

    நாத்திகன் என்றால கடந்த காலத்தில் வைதீக வேதங்கள்,புராணங்கள் ஆகியவற்றை மறுப்பவன் என்றே பொருள்.

    உங்கள் பதிவில் இன்னொரு பொருள் குற்றமும் இருக்கிறது. நாத்திகர் அனைவரும் ஒரே கொள்கை உடையவர் அல்ல.

    //அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். மேலும் ஒரு இலக்கு நோக்கி இருக்கிறார்கள்.

    அதாவது கடவுள் இல்லை என்பது எல்லோருடைய ஒருமித்த கருத்து, மாற்றுக் கருத்தே இல்லை. கடவுள் இருக்கிறான் என்பவர்கள் எல்லோரையும் எதிர்க்க வேண்டுமென்ற ஒரே இலக்கு அவர்களுடையது.//

    பவுத்தம்,சமணம் போன்ற நாத்திக மதங்களில் ஆன்மாவின் அழியாத் தன்மை ஏற்கப்படுகிறது.

    ஆனால் சார்வாகத்தில் ஆன்மா என்பது கிடையாது.

    ஆகவே எதையும் அறிந்து சான்றுகளோடு எழுதுவதே சரி!!!

    சிந்திக்க மாட்டீர்க்ளா!!!!!!!!!!

    நன்றி!!!

    ReplyDelete
  4. சார்வாகன், இறைவன் இல்லைன்னு சொல்ற எல்லா கழுதையும் எங்களுக்கு ஒரே கழுதைதான்.............!! பேசாம உங்க பேரை நக்கீரன் என்று மாத்தி வச்சுக்குங்க, இப்படி லென்ஸ் வச்சுகிட்டு குறை கண்டுபுடிக்கிற உங்களுக்கு அதுதான் ரொம்ப பொருத்தமா இருக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. சகோ தாசு,
      நாங்கள் மனிதனும் ஒரு விலங்கு என்பதை இயல்பாக ஏற்பவர்கள். கழுதைக்கும் குதிரைக்கும் ஒரே முன்னோர் என்பது உங்களுக்கு தெரியுமா? ஹி ஹி அப்புறம் உங்க ராதனந்தா சுவாமி பற்றி ஒரு பதிவு போட்டு இருக்கிறேன். மறுப்பு தெரிவிக்க முடியுமா? இன்னும் நிறைய விடயம் இருக்கிறது.

      http://aatralarasau.blogspot.com/2012/11/swamy.html

      நக்கீரன் என் தாத்தா இறையனார்(சிவன்) தருமிக்கு(நம் அய்யா அல்ல!!!) எழுதிய பாட்டிலே பொருள் குற்ரம் கண்டவர். அபோதும் சிவன் சாதி கொண்டு என் தாத்தாவை இழிவு படுத்த‌
      திருப்பி போட்டு

      சங்கறுப்பது எங்கள் குலம்
      சங்கரனாருக்கு ஏது குலம் "

      என்றவர் என் தாத்தா!!!
      அச்சாசோ வைணவ பதிவில், சிவன் பற்றி பேசலாமா?? மன்னிக்கவும்

      நன்றி

      Delete
    2. \\நாங்கள் மனிதனும் ஒரு விலங்கு என்பதை இயல்பாக ஏற்பவர்கள்.\\ எந்த விலங்கு உங்களை மாதிரி பேன்ட் சர்ட்டு போட்டுக்கிட்டு திரியுது? எந்த உராங்குட்டான் குரங்காவது கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டு பின்னூட்டம் போட்டதைப் பார்த்திருக்கீங்களா? ஆனா நீங்க போடுறீங்க. நாய் ரோட்டில் போகும்போதே இன்னொரு பெட்டை நாயை பார்த்துவிட்டால், அங்கேயே எல்லாம் பண்ணும், நீங்க எப்படி? மனிதன் என்பவன் வெறும் மிருகம் இல்லை, Civilized Animal. Civilization போயிடுச்சுன்னா அவன் மிருகம்தான்.

      \\ராதனந்தா சுவாமி பற்றி ஒரு பதிவு போட்டு இருக்கிறேன். மறுப்பு தெரிவிக்க முடியுமா?\\ அவரு பேரே ஒழுங்கா தெரியலை, இந்த லட்சணத்துல அவரைப் பத்தி பதிவு வேற போட்டுட்டீங்களா? ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க, ஒருமுறை பகவான் பேரைச் சொல்லிட்டாலே அவரை நாங்க பக்தரா ஏத்துக்குவோம், அது திட்டுவது மாதிரி சொன்னாலும், அவர் என் வயசலவுக்கு பக்தியில ஈடுபட்டு தினமும் இறைவன் நாமங்களைப் பாடி வந்தவர். அப்படிப் பட்டவரை ஒருத்தர் திட்டினால் அதைக் கேட்பதை விட ஏதாவது ஒரு குளத்தில் விழுந்து சாவது மேல். ஆகையால் உங்க பதிவை நான் படிக்கப் போவதில்லை, அது மாபெரும் தவறு, எனவே மன்னிக்கவும். மற்றபடி வேறு யாராவது படித்து அவரைப் பற்றி மேலும் தேடி அவர் எழுதியதைப் படித்தால் நிச்சயம் பக்தராகிவிடுவார்கள். நன்றி.

      Delete
    3. நண்பர் ஜெயதேவு தாசு,
      //எந்த விலங்கு உங்களை மாதிரி பேன்ட் சர்ட்டு போட்டுக்கிட்டு திரியுது? எந்த உராங்குட்டான் குரங்காவது கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டு பின்னூட்டம் போட்டதைப் பார்த்திருக்கீங்களா? ஆனா நீங்க போடுறீங்க. நாய் ரோட்டில் போகும்போதே இன்னொரு பெட்டை நாயை பார்த்துவிட்டால், அங்கேயே எல்லாம் பண்ணும், நீங்க எப்படி? மனிதன் என்பவன் வெறும் மிருகம் இல்லை, Civilized Animal. Civilization போயிடுச்சுன்னா அவன் மிருகம்தான்.//
      நாங்கள் மனிதன் ஒரு விலங்கு என்கிறோம். உங்கள் சாமியார்களின் செயல்கள் இப்படித்தான் இருக்கிறது.தங்களின் தத்த்வங்கள் பலன் அளிக்கமல்தானே பணம் சேர்க்க, பாலியல் லீலைகளில் ஈடுபட பிரச்சினை ஆகி நீதிமன்றங்களில் நிற்கிறார்கள்.
      ஒரு நித்யானந்தா மாட்டிக் கொண்டாலும்.இஸ்க்க்கானின் லீலைகள் உலகறிந்தது.
      இஸ்கான் சாமியார்களை விட விலங்குகள் எவ்வளவோ மேல்.

      //அவரு பேரே ஒழுங்கா தெரியலை, இந்த லட்சணத்துல அவரைப் பத்தி பதிவு வேற போட்டுட்டீங்களா? ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க, ஒருமுறை பகவான் பேரைச் சொல்லிட்டாலே அவரை நாங்க பக்தரா ஏத்துக்குவோம்,//
      நான் ஜெயதேவ் தாஸ் என மட்டும் சொல்லுங்கள் இங்கு பின்னூட்டம் போட்ட எத்னை பேர் ராதானந்த் என்ற ரிச்சர்ட் ஸ்டீவன்ஸ் ஐ நம்புகிறார்கள் எனத் தெரியவில்லை.

      ஸ்லோச்சனா தாஸ் கொலை வழக்கில் கிர்த்தானந்தா ஸ்வாமிக்கு ராதானந்த் உதவினாரா?
      //அவர் என் வயசலவுக்கு பக்தியில ஈடுபட்டு தினமும் இறைவன் நாமங்களைப் பாடி வந்தவர். அப்படிப் பட்டவரை ஒருத்தர் திட்டினால் அதைக் கேட்பதை விட ஏதாவது ஒரு குளத்தில் விழுந்து சாவது மேல். ஆகையால் உங்க பதிவை நான் படிக்கப் போவதில்லை, அது மாபெரும் தவறு, எனவே மன்னிக்கவும்//

      படித்து மன்ம் மாறிவிடும் என பயமா? எதையும் மாற்றுக் கருத்துகளோடு அறிவதே அறிவு. இப்படி சொன்னா எப்படி ஆன்மீகம் வளர்ப்பது?. பதிவுலக ஆன்மீக வாதிகளின் தலைவராக முயலும்போது இது கூட செய்யவில்லை எனில் எப்படி?எனினும் இந்த இணைப்பில் ரிச்சர்ட் ஸ்டீவன்ஸ் பற்றி படிக்கவும்.
      http://www.harekrsna.org/gbc/black/radanath.htm
      http://www.facebook.com/pages/Radhanatha-Swami-is-a-GURU-Fraud/236708009701264
      இறைவன் நாமத்தை பாடினால் உத்தமன் என்பது நம்பிக்கை. செயல்களின் ஆவணங்களே சான்றுகள்.
      //மற்றபடி வேறு யாராவது படித்து அவரைப் பற்றி மேலும் தேடி அவர் எழுதியதைப் படித்தால் நிச்சயம் பக்தராகிவிடுவார்கள். நன்றி.//
      இப்படிப் படிக வேண்டிய புத்த்கம் சொல்லுங்கள் அதையும் விமர்சிக்கிறோம்
      அப்படி பக்தர்கள் ஆன எவராவது நமக்கு தகவல் சொல்லவும் அன்புடன் வேண்டுகிறேன்.
      இப்படி சாமியார்கள் பின்னால் சென்று மோசடியில் சிக்காதீர்கள், அருகில் சென்று ஆலோசனை கேட்டால் வரும் விளைவுக்கு யார் பொறுப்பு???
      நீங்க இஸ்கான் (ஜிபிச்) பக்தரா ?? ஆம்/இல்லை சொல்லுங்கள்!!!
      நன்றி!!!!

      Delete
    4. @ சார்வாகன்

      வைஷ்ணவ நிந்தனை மிகவும் ஆபத்தானது என்று நான் 100% நம்புகிறேன், ஆகையால் அவர்களிடம் குறைகளே இருந்தாலும் அதை லென்ஸ் வைத்துப் பார்த்து தீரா பாவத்தை ஏற்க விரும்பவில்லை. நட்பு முறையில் தாங்களும் அதைத் தவிர்ப்பது நல்லது, அல்லாவிடில் விளைவை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். ஏனெனில் நான் இதுபோல நிந்தனை செய்தவர்கள் என்னென்ன ஆனார்கள் என்று நேரில் பார்த்தவன். நீங்கள் தெரிவித்திருக்கும் குற்றச் சாட்டுகள் அரதப் பழசு, அதில் உள்ள அரசியல் எல்லாம் அத்துபடி, நான் மேற்சொன்ன காரணத்துக்காக எதையும் கண்டுகொள்ள விருப்பமில்லை. நான் எந்த பெயரைச் சொன்னாலும் நீங்க அவரை டார்கெட் செய்து உங்களை நீங்களே ஆபத்தில் சிக்க வைத்து விடுவீர்கள், உங்களை அந்த நிலைக்கு விட எனக்கு மனமில்லை, எனவே நான் வேறு எந்த தகவலும் தங்களுக்கு தர இயலாது.

      Delete
    5. @ சார்வாகன்

      இராதாநாத் சுவாமி நல்ல வைஷ்ணவர், அவருக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் மேல் வீண்பழி சொல்லி பாவத்தை விலைக்கு வாங்காதீர்கள்.

      Delete
  5. //சார்வாகன், இறைவன் இல்லைன்னு சொல்ற எல்லா கழுதையும் எங்களுக்கு ஒரே கழுதைதான்.............!! //

    ஆரம்பமே இவ்வளவு சூடா...சற்று கண்ணியமாக கருத்தை வைக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. சகோ சு.பி

      அவர் என்ன சொன்னாலும் நாம் கண்டு கொள்வது இல்லையே.ஏதோ இப்பத்தான் கொஞ்சம் பேச ஆரம்பிக்கிறார். அப்படியே கருத்து கொட்டும் பாருங்க!!

      இதுவரை நம்து ஆபிரஹாமிய மத விமர்சனம் மட்டும் பார்த்தீர்கள் அல்லவா, பாருங்கோ பாகவதம்,பகவத் கீதை மீது வைக்கும் விமர்சனத்தை. திராவிட பாணி ஆபாச விமர்சனம் அல்ல. தர்க்க ரீதியான ஆன்மா&கர்மபலன் மறுப்பு வாதம்.அதுவே சார்வாகம்!!

      நாம் உண்மையான மத சார்பற்றவர்கள்!!!

      நன்றி

      Delete
  6. வாழ்த்துக்கள் ...! இதைத் தான் நான் எதிர்ப்பார்த்தேன்.

    ReplyDelete
  7. நானும் வாறேன். தினமும் காலை எழுந்திருக்கிறேன். இரவு தூங்குகிறேன்.
    விழித்திருக்கும் போதெல்லாம் இறை நாமமே - அதாவது "அன்னம் பிரம்மம்" என்ற இறை நாமத்தை மறப்பதில்லை. இதைத் தவிர வேறு என்ன செய்யவேண்டும்? சொல்லுங்கள், செய்து விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நாம் என்ன செய்ய வேண்டும் என்று விரைவில் தெரிவிக்கிறேன் சார்.

      Delete
    2. @பழனி.கந்தசாமி

      நாம் என்ன செய்ய வேண்டும் என்று விரைவில் தெரிவிக்கிறேன் சார்.

      Delete
  8. எந்த கடவுள் மெய் கடவுள் என்ற விவாததிற்கு தீர்வு வைத்துவிட்டு, நாத்திகம் மெய்யா பொய்யா என வரலாமே .. ஆத்திகர்கள் அவனவன் தன் சிந்தைக்கு ஏற்ப கடவுளை உருவாக்கி வைத்துவிட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்று என உலகம் முழுவதும் செய்வதை மாற்றிக் காட்டுங்கள். பிறகு நாத்திகர்கள் மீது கை வைக்கலாம் ..

    ஒருவனுக்கு எழுந்த நிற்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பெண்டாட்டி என்றக் கதையில் .. ஆதாரமில்லாத கடவுளுக்கு ஓராயிரம் இலக்கணங்கள், பிரிவுகள், மதங்கள் ஐயோ டா ... ! தலை சுற்றுகின்றது .. !

    ReplyDelete
    Replies
    1. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுவக் கூடாது. இறைவன் இருக்க முடியாது என்று இன்னமும் விஞ்ஞானமே சொல்லவில்லை, உங்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. எனவே நீங்கள் அளப்பது எல்லாம் உமது கற்பனை, அதில் விஞ்ஞானம் எதுவுமில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

      உங்களுக்கு வக்கும் இல்லை, பெண்டாட்டிகளும் இல்லை, நீங்கள் எங்களைப் பார்த்து இப்படி பேசலாமா?

      Delete
  9. ரம்பம் ஆச்சா... இனி களைகட்டும்...!!! ஹா... ஹா...

    இது அவரவர் உணர வேண்டிய விஷயம் ஆச்சே...!

    ReplyDelete
  10. போட்டி இனிதே ஆரம்பிக்கட்டும். நான் வேடிக்கை பார்க்கிறேன்.
    kannan from abu dhabi.
    http://samykannan.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. @ Samy Kannan

      நடக்கப் போவது உண்மைக்கும் பொய்க்குமான போராட்டம். வருகைக்கு நன்றி நண்பரே.

      Delete
  11. தலைவரே, இதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியும்னு நினைக்கிறீங்களா?

    ReplyDelete
    Replies
    1. @செங்கோவி
      இத்தனை பதிவர்கள் நம்பிக்கையின் பேரில்தானே பதிவு போடுறோம், நல்லது நடக்கும் இதையும் நம்புவோம்!!

      Delete
  12. //ஆடை உடுத்துபவன் வேஷ்டி கட்டலாம் பேன்ட் சர்ட் போடலாம் கோட் சூட் கூட போடலாம்.
    இங்கு இறைவனை அடைய பாதைகள் பல உண்டு. ஆனாலும் நமக்குள்ளும் ஒரு ஒற்றுமை இருக்கிறது எல்லோரும் இறைவன் இருக்கிறான் என்று நம்பும் இனம் என்பதில் நாம் எல்லோரும் ஒரே இனம்.எனவே நண்பர்களே நாம் அனைவரும் ஒன்று படுவோம்//
    இப்படி எல்லாம் அறைகூவல் விட்டு இறைநம்பிக்கையாளர்களை அழைத்தீர்களே நாத்திக தர்மி ஐயாவையும்,bandhu,பெரியவர் பழனி கந்தசாமி தவிர எவருமே வரவில்லை. உங்க இறைநம்பிக்கையாளர்கள் இஸ்லாமிய சகோக்கள் எல்லாம் எங்கே போனார்கள்? இஸ்லாமியர்களை குளிர்விப்பதற்காக தேவா என்று ஒரு பதிவர் துப்பாக்கி படத்தை தாக்கி பாலஸ்தீன, காஷ்மீர் அட்டூழியங்களை ஆதரித்தும் எழுதியுள்ளார். தமிழ்மணம் மகுடத்தில் கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகையாக அவரின் இடுகையை உங்க இஸ்லாமிய இறைநம்பிக்கையாள சகோக்கள் கொண்டுவந்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு சினிமா ஆகாது அப்படியிருக்கும் போது உங்க இறைநம்பிக்கையாளருக்கான பதிவில் அல்லவா அவர்கள் முன்னணியில் வந்து நின்றிருக்க வேண்டும். ஏன் வரவில்லை இறைவன் என்பது அரபு அல்லா மட்டும் தான்.நீங்க சொல்லுற மாதிரி இறைவனை அடைய பாதை பல பாதைகள் எல்லாம் கிடையாதுங்க. அரபு ஆக்கிரமிப்பை கொண்டுவரும் ஒரு பாதை மட்டும் தான். உங்க விருப்பபடி வேஷ்டி கட்டவோ, பேன்ட் சர்ட் போடவோ நீங்க நினைக்கிற மாதிரி முடியாதுங்க. குரான் சொல்கிறபடி தான் உடை உடுக்க முடியும் .இது தான் நீங்க அறைகூவல்விட்ட இறைநம்பிக்கையாளர்களின் இலச்சணம். நல்ல விடயங்களை தெரியபடுத்தும் பகுத்தறிவாளர்களுக்கும் அறிவியலுக்கும் எதிராக எழுதுவதை விடுத்து வேறு பதிவுகள் எழுதுவது நல்லது.அல்லது இஸ்லாம் மாதிரி காமடியாக போய்விடும்.

    ReplyDelete
    Replies
    1. @ வேகநரி

      உங்கள் கருத்தில் நியாயம் இருக்கிறது. நீங்க சொல்வது அத்தனையும் ஏற்கத் தக்கதே, இப்போதைக்கு என்னால் எதையும் மறுக்க முடியவில்லை. நன்றி நண்பரே!!

      Delete
    2. @வேகநரி
      தேவா நீங்கள் நினைக்கும்படியான நபர் அல்ல... அவரை புரிந்து கொள்ள அவரது வலைதளத்தின் முந்தய இடுகைகளை படிக்கவும்.:)

      Delete
  13. சகோ.தாஸ்

    உங்களுக்காக ஒரு கேள்வியை இவர்களிடம் கேட்போம் ..

    பரிணாமம் என்பது கோடான கோடி ஆண்டுகளில் உயிரினத்தின் படிப்படியான வளர்ச்சி என்பதாகும்...இயற்கை தேர்வு ,சூழலுக்கு ஏற்ற மாற்றம் என்று குறிப்பிடுகிறார்கள்..இங்கு நாம் ஒரு கேள்வி கேட்கலாம்..பரிணாம வாதப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதற்கு உயிரினங்கள் தொடர்ச்சியாக உயிர் வாழ்ந்திருக்க வேண்டும்..ஆனால் பல விடயங்கள் இல்லையென்றால் உயிர்கள் அடுத்த தலைமுறையை தொடாது என்பது நிதர்சனம்...

    * ஒரு பெண் உயிரினம் ஒரு குட்டி ஈனுயும் போது அதன் பிறப்புறுப்பு flexiblity எனும் வளைந்து கொடுக்க கூடிய தன்மையை பெற்றிருக்க வேண்டும்..எந்த அளவு என்றால் ஒரு குழந்தைன் தலை வெளிவரும் அளவு விரிந்து கொடுக்க வேண்டும்..

    இப்போது நம் கேள்வி அந்த விரிந்து கொடுக்கும் தன்மை எப்போதிருந்து வந்தது..?? முதலில் இல்லை என்றால் குட்டியும் காலி பெண் உயிரியும் காலி..பின் எப்படி பரிணாமம் வளர்ச்சி பெற, மூலம் இருந்திருக்க முடியும்...??? பரிணாமம் நடைபெற உயிரியின் வழிதோன்றல் இருந்திருக்க வேண்டும் அல்லவா..?? இடையில் கட் ஆனால் மீண்டும் பக்கத்தில் இருந்த உயிரியில் இருந்தா resume ஆகும் ..கேட்பதற்கே காமெடியாக உள்ளது..

    சொல்லுங்கள் பரிணாம வேட தாரிகளே..!!!

    நன்றி !!!

    ReplyDelete
    Replies
    1. @ நாகூர் மீரான்
      அறிவியல் + லாஜிக் ரீதியாக இந்த போலிகளை எதிர்கொள்ள தாங்கள் உதவ முடியுமா நண்பரே?

      Delete
    2. @ நாகூர் மீரான்

      தங்கள் கமண்டு எங்கே காணும்? நீக்கி விட்டீர்களா? பிளாக்கரில் என்னென்னமோ நடக்குதுப்பா. சரி நீங்க சொன்னதை பார்த்தேன். இவ்வளவு கேனையாவா இருப்பேன்.... சே..... சரி சகோ மத்தி யோசிப்போம்.

      Delete
    3. நாம் நீக்கவில்லை...சகோ.

      Delete
  14. Donkey and horse.
    Is this a uL-kuthu?

    ReplyDelete
    Replies
    1. @ Anonymous November 19, 2012 2:27 PM

      It is not uL-kuthu, it is velikkuththu!!

      Delete
  15. Nagoor Meeran, Let evolution wait.

    First tell who is your God.
    Allah, or Murugan or Shiva or Jesus or Madasami.

    Decide among yourself. Have a consensus and then come.

    ReplyDelete
  16. நானும் கலந்துக்க வாரேன்

    ReplyDelete
    Replies
    1. @அபுபக்கர்

      மிக்க நன்றி சார், விரைவில் என்ன செய்ய வேண்டுமென்று தெரிவிக்கிறேன்.

      Delete
  17. இந்துத்வாவும் இஸ்லாமியமும் ஒண்ணா சேர்ந்துகிட்டா!யோசிக்கவே நல்லாயிருக்குதே!

    சீக்கிரம் நாட்டாமை சாமி யாருன்னு முடிவு கட்டுங்கப்பா.

    ReplyDelete
    Replies
    1. ராச நடராசரு,

      நாட்டாமை சாமி யாருன்னு முடிவு சொன்னா வெட்டுக்குத்தாகிடும்ல,எந்த நாட்டாமை சாமியா இருந்தாலும் வடிவம்,உருவம் இருந்தா மார்க்கபந்துக்கள் ஒத்துக்க மாட்டாங்க, வடிவம் இல்லைனு சொன்னா பூசாரி கூட்டம் ஒத்துக்காது:-))

      Delete
  18. இஸ்லாத்தை பொருத்தவரை அல்லாஹ், இறைவன், கடவுள், பகவான், கர்த்தர் என்று எந்த பெயரில் வேண்டுமானாலும் கூப்பிட தடை சொல்லவில்லை. ஆனால் அந்த இறைவன் ஒருவன்தான். அவன் மனிதனாக அவதாரம் எடுக்க மாட்டான். என்பதில் உறுதியாக உள்ளது. இந்த கருத்தை ஒத்துக் கொள்ளும் மார்க்கங்களையே இஸ்லாம் ஓரளவு நெருங்கி வரும்.

    ReplyDelete
    Replies
    1. நான் உங்ககிட்ட இருந்து எவ்வளவோ எதிர் பார்த்தேன், நீங்க பட்டும் படமா போவது எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தந்திருக்கிறது நீங்கள் இந்த முயற்சியில் lead role எடுக்க வேண்டும், நீங்களே சொல்லுங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் நம்பிக்கை எதையும் யாரும் மாற்றச் சொல்லப் போவதில்லை, இவர்களை லாஜிக் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் எதிர் கொண்டு இவர்கள் முட்டாள்கள் என நிரூபிக்க வேண்டும் அவ்வளவுதான். தங்கள் +ve பதிலை எதிர் பார்க்கிறேன்.

      Delete
    2. சு.பி.சுவாமிகள்,

      //இஸ்லாத்தை பொருத்தவரை அல்லாஹ், இறைவன், கடவுள், பகவான், கர்த்தர் என்று எந்த பெயரில் வேண்டுமானாலும் கூப்பிட தடை சொல்லவில்லை. ஆனால் அந்த இறைவன் ஒருவன்தான். அவன் மனிதனாக அவதாரம் எடுக்க மாட்டான். என்பதில் உறுதியாக உள்ளது. //

      எந்த பேரு வேண்டுமானாலும் இருக்கலாம் சரி, எந்த வடிவம்? சில்லி சிக்கன், சில்லி பீஃப் எல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லுவாரா ?மாட்டு மூத்திரம் குடிக்கலாம்னு சொல்லுவாரா?

      எனக்கு தெரிஞ்சு எந்த விலங்கும் இன்னொரு விலங்கின் மூத்திரம் குடிப்பதில்லை :-))

      உங்க கூற்றுப்படி பார்த்தா கிருஷ்ணரு அவதாரம் இல்லைனு ஆகிடுமே :-))

      Delete
    3. @ வவ்வால்

      நான் ஒன்னு சேர்க்கலாம்னு பார்த்தா நீங்க பாகுபாடுகளை திரும்பத் திரும்ப மந்திரம் ஒதுரா மாதிரி சொல்லி சொல்லியே பிரிச்சிடுவீங்க போலிருக்கே!!முதல் வருகைக்கு நன்றி வவ்வால்!!

      Delete
    4. நண்பர் ஜெய தேவ தாஸ்!

      நாத்திகத்தை எதிர் கொள்ள நான் என்றுமே தயார். அதனைத்தான் அவ்வப்போது எனது பதிவுகளில் சொல்லி வருகிறேன். நீங்களும் உங்களின் பதிவுகளில் சொல்லி வருகிறீர்கள். அனால் நாம் இருவரும் தேர்ந்தெடுத்த மார்க்கங்கள் வேறு வேறு. எனவே இதில் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

      Delete
    5. சு.பி.சுவாமிகள்,

      இதெல்லாமா கேட்பாங்க, நீங்க சைவம் சாப்பிடனும் , முக்கியமா மாட்டுக்கறிலாம் சாப்பிடவே கூடாது, அப்புறம் அல்லா படத்தை உங்க பதிவில போட்டுக்கணும், இப்போ ஜெயதேவ தாசர் கிருஷ்ணர் படம் போட்டுக்கிறார்ல அதே போல தான்.

      அப்புறம் நீங்க எல்லாம் நாத்திக எதிர்ப்பாளர்கள் தான் :-))

      ஹி...ஹி ஏக இறைவனுக்கு உருவம் இருக்கான்னு நீங்க கேட்டாலே நீங்களும் நாத்திகர் தான் :-))

      Delete
  19. பாப்போம்: ஜெயிப்பது அப்துல்காதரா அமாவாசையா என்று?

    ReplyDelete
    Replies
    1. @நம்பள்கி

      Truth always Triumphs!!

      Delete
  20. சகோ.சு.பி வேண்டுகோளுக்கு சங்கு ஊதற மாதிரி தெரியுதே:)

    ReplyDelete
    Replies
    1. @ ராஜ நடராஜன்

      Thanks for coming Sir!!

      Delete
  21. எந்தக் கழுதையும் நல்ல கழுதையே இந்த மண்ணில் பிறக்கயிலே.....
    அவை அரபுக் கழுதையாய்...இஸ்கான் கழுதையாய் மாற்றம் அடைவது மண்ணின் குறையா?

    நாம் ஆராரோ என்று தாலாட்ட...

    அவர்கள் போறீரோ என்று வெடி(குண்டு) வைக்க..

    ReplyDelete
    Replies
    1. @ ராவணன்

      பாட்டு நல்லாயிருக்கு, நல்லவன், கெட்டவன் எல்லா இடத்திலும் இருக்கான், வருகைக்கு நன்றி !!

      Delete
  22. சபாஷ் சரியான போட்டி ................புலிகேசி மாதிரி நீங்கள் ஒரு மத சண்டை மைதானத்தை உருவாக்கி வைக்கிறீர்கள் .
    உணர்ச்சி வசபடாத கருத்து மோதலாக இருக்க வேண்டும் ..
    உணர்ச்சி வசபடுபவர்கள் தோல்வியைதான் தழுவுவார்கள் ........

    ReplyDelete
  23. சுவனப் பிரியன் பதிவுகளை தவறாமல் வரிக்கு வரி படிப்பவன் என்ற முறையில் அவரை நான் நன்கு அறிவேன்.

    சுவனப் பிரியன் மதம் வேறாக இருக்கலாம். நியாயம் எங்கு இருக்கோ அதைப் போற்றவேண்டும். மேலும் அவரிடம் அவ்ரைப படைத்த ஆண்டவன் அறிவையும் நல்ல மனதையும் அள்ளிக் கொடுத்துள்ளார்.

    ஆம், சுவனப் பிரியன் ஒரு அறிவாளி; புத்திசாலியும் கூட. நான் அவருடன் ஒத்துப் போகிறேன்: இந்த உலகத்தைப் படைத்தது அல்லா தான். ஏன், நான் இத்தனை நாள் நம்பிக்கொண்டிருந்த என் கடவுளான எம்பெருமான் ஈசன் சிவபெருமான் கூட இவ்வுலகைப் படைக்கவில்லை.

    எனது தீர்ப்பு:
    அல்லா தான் இந்த மூவுலகத்தை படைத்த மற்றும் இந்த மூவுலகத்திற்கும் ஒரே கடவுள்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ............. வந்துட்டாரய்யா வந்துட்டாரு!! சார் நீங்க கொஞ்ச நாள் முன்னாடி இயேசு கிறிஸ்துதான் படைச்சாருன்னு சொல்லிக்கிட்டு இருந்ததா ஞாபகம் இப்போ என்ன ஆச்சு!!

      Delete
    2. உண்மை தான்; சுவனப் ப்ரியன் பதிவைப் படித்தவுடன்...அல்லா தான் கடவுள் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். சும்மா நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் என்று அளக்கக் கூடாது!

      My motto is simple:

      To err is human!
      And a human, if you believe you are one, must accept his mistake and move forward.
      Therefore, the one and the only GOD is Almighty Allah! The rest are reverse....reverse of what?

      Pl. find out...

      Delete
    3. டாக்டர் சார்!

      //சுவனப் பிரியன் மதம் வேறாக இருக்கலாம். நியாயம் எங்கு இருக்கோ அதைப் போற்றவேண்டும். மேலும் அவரிடம் அவ்ரைப படைத்த ஆண்டவன் அறிவையும் நல்ல மனதையும் அள்ளிக் கொடுத்துள்ளார்.//

      நன்றி சார். எல்லா புகழும் இறைவனுக்கே!

      //எனது தீர்ப்பு:
      அல்லா தான் இந்த மூவுலகத்தை படைத்த மற்றும் இந்த மூவுலகத்திற்கும் ஒரே கடவுள்.//

      எனது தீர்ப்பும் அதுதான். அதைனை பலரும் பலவிதமாக அழைக்கின்றனர். கடவுள், இறைவன், கர்த்தர், என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.

      'அல்லாஹ் என்று அழையுங்கள். அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன'
      -குர்ஆன் 17:110

      அந்த இறைவனை இன்ன உருவம் என்று கொடுக்காது எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம் என்று குர்ஆனே அனுமதிக்கிறது.

      Delete
  24. குள்ள நரிகள் குழி பறித்து வைத்திருக்கும் இடத்தில் நின்று எப்படி அய்யா ஆட்டம் ஆட முடியும். இடறி விழுந்தால் எதிரிகள் எள்ளி நகையாட வழிவகுக்கும். குள்ள நரிகளை அல்லது குள்ள நரித்தனத்தையாவது அப்புறப்படுத்துங்கள். அப்புறம் பாருங்கள்.. இறை நம்பிக்கையாளர்கள் வரிந்து கட்டுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. @ உதயம்
      அவங்களை திருத்துவது கஷ்டம், ஆனா அவங்க கையில் சிக்கும் அப்பாவிகளை காக்க முயற்சிப்போம்,நன்றி நண்பரே!!

      Delete
  25. @இக்பால் செல்வன்

    // எந்த கடவுள் மெய் கடவுள் என்ற விவாததிற்கு தீர்வு வைத்துவிட்டு, நாத்திகம் மெய்யா பொய்யா என வரலாமே .. //

    ஏன்??? நாத்திகம் தப்புன்னு நிரூபிச்சிட்டு அப்புறம் எங்க சண்டைய வச்சா ஒத்துக்க மாட்டீங்களா???

    ReplyDelete
  26. @அஞ்சா சிங்கம்

    / உணர்ச்சி வசபடாத கருத்து மோதலாக இருக்க வேண்டும் ..
    உணர்ச்சி வசபடுபவர்கள் தோல்வியைதான் தழுவுவார்கள் ........ //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அத நீங்க சொல்றீங்களா?? நல்ல காமெடி இது... எத்தனையோ தடவை உணர்ச்சிவசப்பட்டு கெட்ட வார்த்தைய பயன்படுத்தி இருக்கீங்க... / இஸ்லாமியர்களின் மூளை குண்டில(சாரி சகோஸ், புரிதலுக்காக, இந்த வார்த்தைய பயன்படுத்த எனக்க்கும் இஸ்டம் இல்ல) இருக்குன்னு சொன்னவர் நீங்க சிங்கம்...நாம் எழுதும் எழுத்து நம் வளர்ப்பை சொல்லும்... இனியாவது பார்த்து கண்ணியமான வார்த்தைகலை பயன்படுத்துங்கள்...

    ReplyDelete
  27. @ஜெயதேவ்

    // ஆஹா ............. வந்துட்டாரய்யா வந்துட்டாரு!! சார் நீங்க கொஞ்ச நாள் முன்னாடி இயேசு கிறிஸ்துதான் படைச்சாருன்னு சொல்லிக்கிட்டு இருந்ததா ஞாபகம் இப்போ என்ன ஆச்சு!! //

    இது போன்ற கிண்டல்களை செய்து கொண்டு, நீன்கள் ஆத்திகர்களை ஒன்று சேர்க்க முடியாது... உங்கள் கருத்தில் நீங்கள் உண்மையாளராக இருந்தால், இது போன்ற கிண்டல்கலை தவிர்த்துக் கொள்ளுங்கள்...

    இப்ப உங்க பிரச்சனை அவர் முன்னர் எந்த கடவுளை நம்பினார் என்பதா?? அல்லது ஆத்திகர்களை எதிர்க்க வேண்டும் என்பதா??

    ReplyDelete
    Replies
    1. @ சிராஜ்
      மிக்க நன்றி சிராஜ். அவரும் நானும் இப்படி தமாஷ் பேசுவது வழக்கம்தான், தப்பா எடுத்துக்க மாட்டார். சரி நம்ம நோக்கத்துக்கு உங்களால் முடிந்த பங்கை அளிக்க முன் வருவீர்களா?

      Delete
    2. சகோ ஜெயதேவ்..

      முடிந்ததை செய்கிறேன் சகோ.. நேரம் அனுமதித்தால்...

      Delete
  28. சாரி.. சென்ற கமெண்டில் // ஆத்திகர்களை எதிர்க்க வேண்டும் என்பதா?? // இந்த இடத்தை "நாத்திகர்கள்" என்று மாற்றிப் படிக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. சிராஜ்,

      சந்தர்ப்பவாதம் பொங்கி வழிந்தாலும் , உங்கள் நாத்திக எதிர்ப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!

      //சாரி.. சென்ற கமெண்டில் // ஆத்திகர்களை எதிர்க்க வேண்டும் என்பதா?? // இந்த இடத்தை "நாத்திகர்கள்" என்று மாற்றிப் படிக்கவும்...//

      ஹி..ஹி ஏன் தப்பா உளறுனிங்க நீங்க பாடிகாட் முனிஸ்வரனுக்கு ,எலுமிச்சம் பழம் வச்சு கும்பிடலை அதான், இனிமே பாடிகாட் முனிஸ்வரன், சுடலை மாட சாமியை எல்லாம் நிந்தனை செய்ய கூடாது சொல்லிட்டேன்.

      ஹரே ராமா ,ஹரே கிருஷ்ணாவை எல்லாம் நம்ப ஆரம்பிச்ச பின்னாடி , முனிஸ்வரன், சுடலை மாடனை எல்லாம் நம்பாமலா போயிட போறிங்க :-))

      இல்லை பார்ப்பன சைவ கடவுளை நம்புறவங்க ஆத்திகர்களே வாங்கன்னு சொன்னாதான் நீங்களாம் ஒன்னு கூடி நாத்திகர்களை எதிர்ப்பீர்களா?

      அடங்கொக்கா மக்கா நாத்திகர்களை எதிர்க்கணும்னா கூட சைவ அடிப்படையில தான் கூடுறாங்கய்யா :-))

      கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என இதை தானா சொன்னாங்க :-))

      அடப்போங்கய்யா நீங்களும் உங்க ஆத்திக கூட்டு கறியும் :-))

      Delete
  29. சகோ.தாஸ்

    //@ நாகூர் மீரான்
    அறிவியல் + லாஜிக் ரீதியாக இந்த போலிகளை எதிர்கொள்ள தாங்கள் உதவ முடியுமா நண்பரே?//

    என்னை கேட்டால் ஒருவர் கொண்ட நம்பிக்கை அவராலேயே புரிந்து கொள்ள முடியாது என்றால் அது பரிணாமம் தான்...

    ஏகப்பட்ட ஓட்டைகள் கொண்ட ஒரு நம்பிக்கை...பரிணாமம் பேசுவோர் உண்மையிலேயே நம்பிக்கை வைத்துள்ளனர் என்றா நினைக்கிறீர்கள்..நிச்சயம் அல்ல..அவர்களும் ஏதாவது ஒரு கடவுளை வீட்டில் வழிபடுவோர்தான்..!!! வவ்வால் நாத்திகம் பேசுவோருக்கு ஆதரவாக கருத்து இடுவார்..ஆனால் அவர் வழிபடுவது சுடலை மாடன் சாமியை..!!!

    சார்வாகன் தவிர மற்ற நபர்கள் பரிணாமம் குறித்த தகவல்களை தந்து பார்த்ததுண்டா..??? சார்வாகன் மட்டுமே அறிவியல் என்று எதையாவது காட்டுவார்..மற்றவர்கள் இஸ்லாமை தாக்குவதாலேயே வருவார்களே ஒழிய அவர்களுக்கு பரிணாம நம்பிக்கையும் கிடையாது சிந்தனையும் கிடையாது..

    இவர்கள் நாத்திகம் என்று வெளியில் காட்டிக்கொள்வது அதிகமாக முஸ்லிம்களை (மட்டும்)எதிர்க்கவே..!!! அப்படியும் சில இந்து கடவுள்களை விமர்சனம் செய்வது ஜாதி பாசமாக இருக்கலாம்..!!!அதனால் நாத்திகம் எனும் முகமுடி எப்போதெல்லாம் வெளிவருகிறதோ அப்போது மட்டும் குட்டு வைக்கலாம்..மற்றபடி இவர்களை பொருட்டாக கருதுவது தேவை இல்லாதது..!!!அந்த அளவு பரிணாம நம்பிக்கையும் அவர்களிடத்தில் இல்லை....

    நம்மிடத்தில் காணப்படக்கூடிய கடவுள் நம்பிக்கை அளவு அவர்களிடத்தில் பரிணாம நம்பிக்கைகளோ கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய ஆதாரமோ கிடையாது....நாம என்னதான் கேட்டாலும் இயற்க்கை தேர்வு ,சூழலுக்கு ஏற்ற மாற்றம், செல்கள் பிரிதல் இதையே தான் சொல்லுவார்கள்..ஆக நமக்கு இது நேர விரையம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..

    " பரிணாமம் என்பது கொள்கை அல்ல..சில நோக்கத்திற்காக போடப்பட்ட முகமூடி ...அவ்வளவே.. "

    (தவிர்க்க முடியாத கட்டாயம் ...செய்து தான் ஆகவேண்டும் என்ற நிலை ஏற்படின் "கடவுள் இருக்கிறான்" என்ற ஆதாரங்களை அள்ளித்தர நாமும் தயார் ..)

    நன்றி !!!

    ReplyDelete
    Replies
    1. @நாகூர் மீரான்

      ரொம்ப தெளிவா கருத்தை சொல்றீங்க சகோ நன்றி. தொடர்ந்து பேசுவோம்........

      Delete
    2. @நாகூர் மீரான்...

      உங்க கிட்ட பேசணும் சகோ.. எனது இந்த எண்ணிற்க்கு கால் பண்ண முடியுமா??

      +91-994-158-5566

      Delete
    3. நாகூர் மீரான்,

      //! வவ்வால் நாத்திகம் பேசுவோருக்கு ஆதரவாக கருத்து இடுவார்..ஆனால் அவர் வழிபடுவது சுடலை மாடன் சாமியை..!!!//

      ஆக மொத்தம் சுடலை மாடன் சாமியை கும்பிடுறவங்க எல்லாம் மனுஷனே கிடையாதுன்னு ஜெயதேவ தாசு போலவே முடிவு செய்யுறிங்க, அப்புறம் என்னதுக்கு கிருஷ்ணரை கும்பிடுறவங்க எல்லாம் உங்க கூட்டாளின்னு சொல்லிக்கிறிங்க, ஒரு உங்களுக்கு இருப்பது பார்ப்பன பற்று அல்லவா :-))

      மாமிசம் மனிதர்களுக்கான உணவல்லனு தாசு பதிவு போட்டு இருக்கார், எனவே நீங்கள் அதனையும் ஏற்றுக்கொண்ட ஒரு சைவர் என நம்புகிறேன் :-))

      நான் அசைவம் சாப்பிடும், சுடலை மாடன் பக்தராகவே இருந்து விட்டு போகிறேன் ,அதை தைரியமாக என்னால் சொல்ல முடியும், உங்களைப்போன்ற சந்தர்ப்பவாதிகளால் அதெல்லாம் முடியாது :-))

      Delete
  30. [[எனது தீர்ப்பும் அதுதான். அதைனை பலரும் பலவிதமாக அழைக்கின்றனர். கடவுள், இறைவன், கர்த்தர், என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.]]

    சுவனப் பிரியன், நீங்கள் அப்படி நினைக்கலாம்; இதில் எனக்கு உடன் பாடு இல்லை; SORRY, அல்லாஹ் மட்டுமே கடுவுள்; மீதி எல்லாம் சும்மா...இதை நண்பர் ஜெயதேவும் ஒரு நாள் ஒத்துக் கொள்வார்; விரைவில் எதிர்பாருங்கள். அவரது மாற்றம் உங்கள் கையில் தான் உள்ளது.

    ReplyDelete
  31. @ சகோ ஜெயதேவ் தாஸ்
    பதிவும்,பின்னூட்டங்களும் நாகரிகமாகவும் ,ஜாலியாகவும் இருக்குது..
    விவாதம் கடைசிவரை இப்படியே சென்றால் நல்லது .....நானும் நேரமிருப்பின் கலந்துக்கொள்கிறேன் உங்கள் கட்சி சார்பாக ...
    @சகோ நம்பள்கி ..
    தங்களுடைய பின்னூட்டங்களைப் பார்த்தால் " ஏதோ இனம் புரியாத
    உள்குத்து " இருக்கிறாப்போல ஸ்மெல் அடிக்குது ...!!!
    எதுக்கும் நானு 'பஜாருல உஜாரா 'இருந்துக்கிறேன் இல்லேன்னா..??

    ReplyDelete
    Replies
    1. @ சகோ Nasar

      வருகைக்கு மிக்க நன்றி சகோ.

      Delete
  32. @வவ்வால்

    ஏன் இந்த கோபம்?? நான் இதில் கூட்டு சேர்றேன்னு சொல்லவே இல்லையே?? சேரலாம், சேராமலும் போகலாம்.. நாளைய கமெண்ட்ஸ் பார்த்து தான் முடிவு பண்ணனும் ... :) :-) :-))

    இது ஒரு பொருந்தா கூட்டணி தான்.. பட் முயற்சிப்பதில் தவறில்லை..லெட் தெம் ட்ரை சம்திங்க்....

    ReplyDelete
    Replies
    1. சிராஜ்,

      கோவமெல்லாம் இல்லிங்கோ, சூரியன் எனப்படும் இயற்கை காரணிக்கு தை பொங்கல் வச்சாக்கூடா ஏற்றுக்கொள்ள மாட்டேன் , அந்த பொங்கலையும் சாப்பிட மாட்டேன்னு ஒரு காலத்தில சொன்னவராச்சே திடீர்னு ஶ்ரீகிருஷ்ணாவும் ஏக இறைவன் தான் பெயரில் என்ன இருக்குன்னு களத்தில் குதித்த அதிர்ச்சி தான் :-))

      தைப்பொங்கல் போன்ற விவசாயிகளின் விழாவை கூட இந்து மத சடங்காக பார்ப்பவர்கள் , கோகுலாஷ்டமி ,கிரிஷ்ண ஜெயந்தி கொண்டாட தயாரானது பரிணாம வளர்ச்சி தான் :-))

      சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையின் பூங்கோதையின் ... ஆஹ்ஹா ஹா ...

      Delete
  33. @நாகூர் மீரான்...

    உங்க கிட்ட பேசணும் சகோ.. எனது இந்த எண்ணிற்க்கு கால் பண்ண முடியுமா??

    +91-994-158-5566

    ReplyDelete
  34. சகோ.ஜெயதேவ்தாஸ்...
    ஆத்திகர்களிடையே வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் உங்கள் நோக்கம் மெய்யாலுமே மிகவும் நன்மையான ஒன்று..!

    //இறைநம்பிக்கையுள்ள நாம் ஏன் ஒன்று சேர்ந்து இவர்கள் விடுவது அத்தனையும் பேத்தல் என்று வெளிச்சம்போட்டு காண்பிக்கக் கூடாது?//---இதைத்தான் நானும் நம்மில் பலரும் செய்து வருகிறோம் சகோ.

    //இவர்கள் விடுவது பேத்தல் என்பதை அறிவியல் முறையிலும் லாஜிக் முறையிலும் முறியடிப்போம்!! இந்த முயற்சியில் ஒன்று சேர நீங்கள் விரும்பினால் நானும் இணையத் தயார்.//---இதையும் கூட நானும் நம்மில் பலரும் செய்து வருகிறோம் சகோ.

    எனவே... நான் ஏற்கனவே இதில் இணைந்துதான் இருக்கிறேன்..!

    அதில், என்ன ஒரு விஷயம் என்றால்... நாத்திகத்துக்கு எதிரான கருத்துக்களில் நம்மில் பரஸ்பர ஆதரவு இல்லை. ஆத்திகர்களிடம் அது வந்தால்... நிச்சயம் ஒரு நல்ல திருப்பு முனையாக இருக்கும்..!

    சகோ.சீராஜ் சொல்வது படி...
    //ஏன்??? நாத்திகம் தப்புன்னு நிரூபிச்சிட்டு அப்புறம் எங்க சண்டைய வச்சா ஒத்துக்க மாட்டீங்களா???//----முதலில் இதை ஆரம்பிபோம்..!

    இதை சரியாக செய்து கொண்டு இருக்கும்போதே... 'யாரின் வாதம் நாத்திகத்தை இல்லாமல் ஆக்குகிறது' என்று நமக்கே போகப்போக புரிந்துவிடும்..! எந்த தரப்பு வாதம் சிறப்பாக செயல்பட்டது என்று நமக்கு புரிந்ததோ அதுவே சரியான இறைமார்க்கம் என்று நாத்திக எதிர்ப்பு விவாதப்போக்கின் இறுதியில் சகோ.சிராஜ் சொன்ன சண்டைக்கே கூட வேலை இல்லாமல் எளிதாக நாம் அறிந்து கொண்டு விடலாம்..!

    ReplyDelete
    Replies
    1. ஆக....

      நாத்திகத்துக்கு எதிரான எனது முதல் கேள்விகளை வைக்கிறேன்..!

      நாத்திகர்களே...
      இந்த உலகத்தில் பிறந்தீர்கள்; வளர்ந்தீர்கள்; வாழ்ந்தீர்கள்; இறுதியில் இறந்தீர்கள்..!

      எதற்கு இந்த பல்லண்டம்-அண்டம்-கேலக்ஸி-சூரிய குடும்பம்-பூமி-உயிர்கள்-மனிதன்-போன்ற அனைத்து செட்டப்புகளும் உள்ளன..?

      நாம் ஏன் உயிர் வாழ்கிறோம்..? நோக்கம் என்ன..?
      தொண்டுள்ளத்தோடு-தியாகியாக-பிறர்க்கின்னா செய்யா நல்லவனாக-சட்டத்தை ஏமாற்றாமல் இவ்வுலக சமூகத்தில் நாம் வாழ்வதால் எல்லாம் என்ன பலன் நமக்கு..?

      Delete
    2. ***நாத்திகர்களே...
      இந்த உலகத்தில் பிறந்தீர்கள்; வளர்ந்தீர்கள்; வாழ்ந்தீர்கள்; இறுதியில் இறந்தீர்கள்..! ***


      சகோ! திருத்தம்!! நாங்க இன்னும் இறக்கவில்லை!!! உயிரோடதான் வந்து பதில் எழுதுறேன் ஆவியாக இல்லை!

      Delete
    3. ***எதற்கு இந்த பல்லண்டம்-அண்டம்-கேலக்ஸி-சூரிய குடும்பம்-பூமி-உயிர்கள்-மனிதன்-போன்ற அனைத்து செட்டப்புகளும் உள்ளன..? ***

      சரி, ரெண்டாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் போவோம்..

      * அப்போ வாழ்ந்து இறந்த மனுஷங்க யாருக்கும் கடவுள் அல்லாவே தெரியாது. அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கமும் தெரியாது சரியா?

      * கேலக்ஸியும் தெரியாது.

      ஆனால் அந்த மக்கள் பிறந்தார்கள், வாழ்ந்தார்கள், இன்புற்றார்கள், துன்புற்றார்கள், சந்ததிகளை உருவாக்கினார்கள், இறந்தார்கள்.. சரியா?

      அதுபோல் நான் வாழ்ந்து சாவதால் என்னத்தை இழக்கப் போறேன் நான் னு சொல்லுங்க?

      கடவுளைத் தெரியாமல் வாழ்ந்து, சாவது எல்லாம் ரொம்ப நல்லதுங்க.

      2000 ஆண்டுகள் முன்னால வாழ்ந்த மக்கள் வாழ்க்கை எல்லாம் வேஸ்ட் டு, அர்த்தமற்றதுனு சொல்றீங்களா???

      Delete
    4. //சரி, ரெண்டாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் போவோம்..

      * அப்போ வாழ்ந்து இறந்த மனுஷங்க யாருக்கும் கடவுள் அல்லாவே தெரியாது. அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கமும் தெரியாது சரியா? //-------என்ன இப்படி சொல்லிட்டீங்க சகோ.வருண்..?

      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகுன்னு சொன்னவரு ரெண்டாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவரு சகோ. அதே காலகட்டத்தில்... இயேசு வாழ்ந்தார். அதுக்கு முன்னர் மோசஸ் வாழ்ந்தார். அதுக்கு முன்னர் இப்ராஹிம் வாழ்ந்தார்..! அதற்கெல்லாம் முன்னாள்... ஆதி மனிதன் ஆதம் நபி உட்பட எல்லாரும் ஏக இறைவனை-ஒரே கடவுளை-அல்லாஹ்வை-தெய்வத்தை-GOD ஐ நம்பினார்கள்..! அறியவும்..!

      அறிவியல் தெரிந்த நீங்கள் தெரியாதவர்கள் போல வாழ்வில்லையே..! அப்புறம் எதுக்கு ரிவர்ஸ் கியர்..?

      அப்புறம்... எனது... //நாம் ஏன் உயிர் வாழ்கிறோம்..? நோக்கம் என்ன..?
      தொண்டுள்ளத்தோடு-தியாகியாக-பிறர்க்கின்னா செய்யா நல்லவனாக-சட்டத்தை ஏமாற்றாமல் இவ்வுலக சமூகத்தில் நாம் வாழ்வதால் எல்லாம் என்ன பலன் நமக்கு..?//---க்கான பதில் காணவில்லை...!

      Delete
    5. நாத்திகர்களே...
      இந்த உலகத்தில் பிறந்தீர்கள்; வளர்ந்தீர்கள்; வாழ்ந்தீர்கள்; இறுதியில் //ஒருநாள் இறக்கப்போகிறீர்கள்...!//---இப்போ ஓகேவா சகோ.வருண்..! :-)

      Delete
    6. ****நாம் ஏன் உயிர் வாழ்கிறோம்..? நோக்கம் என்ன..?****

      அப்பா அம்மா பெற்றார்கள்! சரியா?

      நான் பொறந்துட்டேன். சரியா?

      என்னை அன்பா வளர்த்து ஆளாக்கி, படிக்க வச்சாங்க, நலலது கெட்டதுனு அவங்களுக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க. சரியா? நான் வளர்ந்துட்டேன்.

      இதில் என்னோட நோக்கம் என்னனு கேட்டால் நான் என்ன சொல்ல? எங்க அப்பா அம்மாவைக் கேக்கனும் நீங்க! :)

      ***தொண்டுள்ளத்தோடு-தியாகியாக-பிறர்க்கின்னா செய்யா நல்லவனாக-சட்டத்தை ஏமாற்றாமல் இவ்வுலக சமூகத்தில் நாம் வாழ்வதால் எல்லாம் என்ன பலன் நமக்கு..? ***

      பிறரை அடிச்சால் அவங்களுக்கு வலிக்கும். எப்படி எனக்குத் தெரியும்? என்னை யாராவது அடிச்சா வலிக்கிது.:)

      பிறரை குத்தினால்/சுட்டால் அவங்க இறந்துபோயிடுவாங்க. அதனால் அவங்கள நம்பியிருப்பவர்கள் துன்பத்துக்கு உள்ளாவார்கள்! சரியா?

      என்னைக் குத்தி கொன்னுபுட்டாங்கன்னா என் அம்மா அப்பா எல்லாம் அழுவாங்க. நான் இல்லாமல் (திட்ட, அறிவுரை சொல்ல ஆளில்லாமல்) கஷ்டப்படுவாங்க. வயதான காலத்தில் அவங்களுக்கு உதவ ஆள இருக்க மாட்டாங்க. சரியா?

      என்னைப்போல் பிறரையும் நினைக்கிறேன். அவ்ளோதான்.

      பலன்: ???

      என்னால் உங்களுக்கு என்ன பலன் சகோ?

      என் மேல் ஏன் அன்பா இருக்கீங்க?? மனிதாபிமானத்துடன் ஏன் என்னிடம் நடந்துக்கிறீங்க? என்ன பலனை எதிர்பார்க்கிறீங்க???


      Delete
    7. அவங்களால் நமக்கு பலன் இருக்காது. இருந்தும் ஒரு சிலர் கஷ்டப்படும்போது நம்மால் முடிந்தால் உதவுறோம். இதுபோல் பலன் எதிர்ப்பார்த்து எல்லாமே செய்வதில்லை, சகோ.

      வலி/வறுமை/துன்பம் எல்லாம் நமக்கு வந்தால் தாங்கமுடிவதில்லை.

      அதனால் பிறருக்கு வரும்போது நம்மால் முடிந்த அளவு உதவுறோம். அதில் ஒரு மன நிம்மதி கிடைக்கிது..

      சுயநினைவு இருக்கும்வரை, நாம் வாழும் காலம் வரை, இதை செய்துகொண்டே இருக்கிறோம்- உயிரிருக்கும் வரை.

      ஒரு நாள் நாம் உயிரிழக்கும்போது அந்த நிம்மதி தேவையில்லாமல் போயிடுது.. அவ்ளோதான்!

      Delete
  35. ***எனவே நண்பர்களே நாம் அனைவரும் ஒன்று படுவோம்***

    நீங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்தால் உலகில் பலபிரச்சினைகள் இருக்காது. இப்போ நடந்துகொண்டிருக்கிற "காஸா ஸ்ட்ரிப்" சண்டை முதல்க்கொண்டு!

    நம்ம குருதை ஜெயவேலை "காஸா"வுக்கு அனுப்பி சண்டையை நிறுத்தச் சொல்லுங்கப்பா!

    சண்டை நடக்கிற இடத்தைவிட்டுப்புட்டு இங்கே வந்து ஒற்றுமை பத்தி பேசிக்கிட்டு இருக்காரு! :)

    ReplyDelete
  36. ஜெயவேல்:

    நீங்க ஆத்திகரை ஒண்ணு சேர்க்கிறீங்களா? இல்லை நாத்திகரை "கழுதை"னு கேவலப்படுத்துறீங்களா?

    அது ஏன் கழுதைதான் கெடச்சதா? சிங்கம், புலி, மான் எல்லாம் கெடைக்கலையா?

    ஏன் இப்படி மற்றவரை தேவையே இல்லாமல் அவமானப்படுத்தி உங்க தரத்தை நீங்களே இறக்கிக்கிடுறீங்க??

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்குள் வேற்றுமை இல்லாமல் ஒரே இலக்கு நோக்கி இருக்கும்படியா ஒரு படத்தை தேடினேன் இது கிடைச்சது போட்டேன். அதுசரி, கழுதையும் ஒரு ஜீவன்தானே, இந்தியா உட்பட பல நாடுகளில் பாரங்களைச் சுமந்து செல்வதில் மனிதனுக்கு உறுதுணையாய் இருக்கிறதே. அதை ஏன் கேவலம் என்று சொல்கிறீர்கள்? அப்படியானால், மனிதன் கருப்பாய் இருப்பவனை கேவலம் என்பீர்களா? உங்களைப் போன்ற சிந்தனை உள்ளவர்களால் தான் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பாகுபாடே உருவானது. இந்த மாதிரி எண்ணத்தை உங்கள் ஆழ்மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் மற்றவர்களைக் குறை சொல்லக் கிளம்பியிருப்பது தான் வேடிக்கை.

      Delete
    2. அட அட அட!!

      செய்றதையும் செஞ்சுபுட்டு, சாதியை உருவாக்கின க்ரிடிட்டை நமக்கு கொடுத்துட்டார் வள்ளல், ஜெயதேவ்!!!

      நீங்க தேடுறதுதான் கெடைக்கும். கழுதைய தேடிப் போயி கழுதைய பிடிச்சு வச்சுருக்கிறீங்க! உங்க அற்ப ஆசையை தீர்த்துக்க!

      உடனே கழுதைனா என்ன மட்டமா? அது ஒரு ஜீவன், அது எங்க பகவானுக்கு சமம்..உங்களை எல்லாம் கழுதைனு சொல்ல நீங்க கொடுத்து வச்சிருக்கணும் னு வியாக்யாணம் வேற!!

      நல்லாயிருங்க!!!

      குதிரை ஜெயவேல் விட்ட வசனம்..

      ***இறைவன் இல்லைன்னு சொல்ற எல்லா கழுதையும் எங்களுக்கு ஒரே கழுதைதான்.............!! ***

      கழுதைமேலே இவரு வச்சிருக்க அன்பு பாசம் எல்லாம் தெரியுதா?? :)))

      LOL!

      Delete
    3. நாம எல்லா சிங்கமும் ஒண்ணுதான், எல்லா புலியும் ஒண்ணுதான்னு சொல்ல டக்குன்னு வராது. ஏன்னா நாம் ஆண்ட்றாடம் நேரில் பார்க்கும் ஒன்றுதான் ஞாபகத்துக்கு வரும். மாட்டுப் பால் லிட்டருக்கு 25 ரூபா. கழுதைப் பால் 50 மி.லி. நூறு ரூபா. கழுதையை கேவலம்னு சொல்லாதீங்க அம்புட்டுதேன்.

      Delete
  37. சிட்டிசன்,

    // முன்னாள்... ஆதி மனிதன் ஆதம் நபி உட்பட எல்லாரும் ஏக இறைவனை-ஒரே கடவுளை-அல்லாஹ்வை-தெய்வத்தை-GOD ஐ நம்பினார்கள்..! அறியவும்..!//

    ஏக இறைவன் ,ஒரே கடவுள் என சொல்லிவிட்டு அல்லா பேரை மட்டும் நடுவில போட்டுக்கிறிங்களே ஏன், அதை போடாமல் சொல்ல வேண்டியது தானே.

    இல்லை எனில் ஏக இறைவன், ஶ்ரீராமன், ஏக இறைவன் ஶ்ரீகிருஷ்ணா, ஏக இறைவன் , அய்யனார், ஏக இறைவன் பரம சிவன், ஏக இறைவன் சுடலை மாடன் என எல்லாரையும் சேர்க்க வேண்டாமா?

    சரி ஆதி மனிதன் ஆதம் ,ஏவாள் எப்படி தோன்றினார்கள்,பிரம்மனின் நெற்றியில் இருந்து தானே இல்லை காலில் இருந்தா? விளக்கவும்?

    பரிணாமம் இல்லைனே வச்சிக்கிட்டாலும் மனிதன் எப்படி தோன்றினான் என்பதற்கு ஏக சித்தாந்தம் ஒன்றினை சொல்லுங்கள் ,பின்னர் ஏக இறைவன் ஆகிய அய்யனார், சுடலை மாடன், அல்லா, ஏசு,கிருஷ்ணா, ராமா என ஒன்றாக வழிப்படலாம். :-))

    பின்னர் நாம் அனைவரும் ஆடு,மாடு,பன்றி,பறங்கிக்காய், பருப்பு சாம்பார் என ஒன்றாக சாப்பிடலாம் :-))

    மோடியை இந்தியாவின் பிரதமர் ஆக்கிடலாம், இஸ்ரேலை யூதர்களின் நாடு ஆக்கிவிட்டு உலக அமைதியை நிறுவி அனைவரும் மகிழ்வாக வாழ வேண்டும் என்பதே உலக மக்களின் ஆசை :-))

    ReplyDelete
    Replies
    1. ///என எல்லாரையும் சேர்க்க வேண்டாமா?///-----first explain about your idea or definition for 'a single GOD'..!

      //சரி ஆதி மனிதன் ஆதம் ,ஏவாள் எப்படி தோன்றினார்கள்,பிரம்மனின் நெற்றியில் இருந்து தானே இல்லை காலில் இருந்தா? விளக்கவும்?//---நெற்றியில் இருந்தும் காலில் இருந்தும் பிறக்க முடியுமா..? வவ்வால் நெற்றியில் இருந்தா... காலில் இருந்தா... அல்லது வேறு எப்படி பிறந்தது என விளக்கம் தருவீர்கள் என்று நம்புகிறேன்..!

      ///பரிணாமம் இல்லைனே வச்சிக்கிட்டாலும் ///-----how...? if only you prove it first this, then only you can ask question on creation. Otherwise, no other way except accept the truth.

      Delete
    2. சிட்டிசன் ,

      அட அதை தான் சாரே நானும் கேட்கிறேன் , கிருஷ்ணர் ஏக இறைவன் சொல்லுறிங்க அவரு பகவத்கீதையில வருணாசிரமம் இருக்குன்னு விளக்கம் கொடுக்கிறார், அப்போ பிரம்மா நெத்தியில,காலில் இருந்து மனிதன் பிறப்பதை ஏற்றுக்கொண்டு தானே இப்போ ஒன்னா சேந்தீங்க, அப்போ ந்நீங்க தானே விளக்கணும் :-))

      அப்புறம் மோடியும் ஆத்திகர் தான் அவரும் உங்க ஆளாயிட்டாரு இப்போ இனிமே எதுக்கு சண்டை , மோடி பிரதமர் ஆக சிட்டிசன் பிரச்சாரம் செய்தால் அதுவன்றோ மத நல்லிணக்கம் ,ஏக இறைவனின் சித்தம் அதுவாகவே இருக்கட்டும்!!!

      அப்புறம் நான் வாய தொறக்கப்போறேன் , நான் வழக்கம் போல அறிவியல் பதிவு போட்டுக்கிட்டு காலம் தள்ள போறேன் :-))

      -------------

      அஞ்சா ஸிங்கமே ,

      நோட் பண்ண ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்குப்பா :-))

      மார்க்க பந்துக்கள் எல்லாரும் சைவ உணவுக்கு மாறிட்டாங்க,இனிமே அசைவ உணவகங்களில் விலைக்குறைச்சிடுவாங்க :-))

      Delete
    3. //கிருஷ்ணர் ஏக இறைவன் சொல்லுறிங்க//------அட...?!?!?

      //பிரம்மா நெத்தியில,காலில் இருந்து மனிதன் பிறப்பதை ஏற்றுக்கொண்டு தானே இப்போ ஒன்னா சேந்தீங்க,//---------இது எப்போ நடந்துச்சு...!?!?!

      ஃபுல் மப்புல இருக்கீங்க போல..! தலைகீழா இல்லாம தெளிவா வாங்க..! பேசலாம்..! :-)

      Delete
    4. \\அப்போ பிரம்மா நெத்தியில,காலில் இருந்து மனிதன் பிறப்பதை ஏற்றுக்கொண்டு தானே இப்போ ஒன்னா சேந்தீங்க\\

      அது பிரம்மா இல்லை, விஷ்ணுவோட விஸ்வரூபத்தோட நெத்தி, கால் etc., இப்படியெல்லாம் புராணம் படிக்கிற மாதிரியே மத்ததையும் படிச்சிட்டு விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்னத்த சொல்ல?

      அதுசரி, எல்லா பக்தர்களும் இறைவனிடம் உன் திருவடியில் இடம் வேண்டும்னு தானே பாடுறாங்க, யாராச்சும் உன் நெத்தியில இடம் வேணுமின்னு பாடியிருக்காங்களா?

      Delete
    5. வவ்வால் ஏன் இன்னும் போட்டு தொங்கிகிட்டே இருக்கார்னு தெரியலையே..!!! சரிவிடுங்க அவருடைய சுடலைமாடன் சாமி மேல அவருக்கே நம்பிக்கை இல்லைனா நாம என்ன பண்றது..!!!

      :-))

      Delete
    6. ஹி../ஹி சிட்டிசன்,மீரான், ஜெயதேவருக்கு எல்லாம் சித்தம் கலங்கிப்போச்சுன்னு நினைக்கிறேன், முன்னுக்கு பின் முரணாக பேச\ஆரம்பிச்சுட்ட்டாங்க :-))

      எனது கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் மேற்கொண்டு பேசுவோம்?

      1)ஏக இறைவனின் பெயர் என்ன?

      2) அவர் ஆணா, பெண்ணா?

      3)வடிவம் என்ன?

      4)அவர் சைவ உணவினை உண்பாரா? அசைவமா?

      5)
      ஏக இறைவனின் மொழி என்ன?

      6)உலகம், உயிர் அனைத்தும் படைத்தது அவர் எனில் ,மனிதனை எப்படி படைத்தார்?

      7)மனிதர்கள் அனைவரும் சமம் தானே.

      8)மனிதன் இறந்த பின் புதைப்பதா? எரிப்பதா?

      9)எத்தனை திருமணம் செய்யலாம்.

      10)திருமணம் செய்ய பிறப்பின் அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்படுமா?

      இன்னும் பல கேள்விகள் உண்டு.இதற்கெல்லாம் பதில் சொல்லி கீழே அனைத்து ஆத்திகர்களும் ஒப்புதல் தெரிவித்து பெயரிட்டு பதிவு போடவும்.

      இக்கேள்விகளுக்கு மாற்றி மாற்றி பதில் சொன்னால் ஏக இறைவனே இல்லை என்பதாகும் :-))

      Delete
    7. @ வவ்வால்

      ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்க பொண்ணு பார்க்க போறான்னா, பெண்ணுக்கு நம்மை பிடிக்குமா, மற்ற விஷயங்கள் பொருந்துமா, கல்யாணத்தை எங்க வச்சிக்கிலாம் என்பதை வரை யோசிக்கலாம். குழந்தைக்கு என்ன பேர் வைக்கிறது, எந்த ஸ்கூலில் சேர்ப்பது, அதுங்களுக்கு உடம்பு சரியில்லைன்னா எந்த டாக்டர் கிட்ட காண்பிப்பது என்பது பற்றியெல்லாம் பொண்ணு பார்க்க போறப்பவே எவனாச்சும் யோசிப்பானா?

      நீங்க இப்ப அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. கடவுள் என்று ஒருத்தர் இருக்க முடியாதுன்னு நீங்க ஆணித் தரமா நிருபிங்க உங்க அத்தனை கேள்வியும் பஸ்பமாகிவிடும், எதுக்கு தண்டத்துக்கு நூத்தியெட்டு கேள்விகளை எழுதிகிட்டு இருக்கீங்க?

      Delete
    8. கடவுள் இருக்காருன்னு நிரூபியுங்க.
      அவரை பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் குண்டுவீசுவதை தடுக்க சொல்லுங்க.அப்புறம் இந்த பூகம்பம் ,இன்ன பிற கெட்ட விஷயம் எல்லாத்தையும் நிறுத்த சொல்லுங்க.

      இந்த உலகத்தில் ஒரு உயிர் கூட துன்பபடாம,பட்டினியால் சாவாம மன நிறைவோட சாகட்டும்.உங்க கடவுள் சாதிப்பாரா?

      (இந்த உலகத்தில் ஒரு உயிர் கூட துன்பபடாம,பட்டினியால் சாவாம மன நிறைவோட சாகட்டும்.//////////ஐயையோ.அப்புறம் பந்துக்கள் கொச்சிக்கபோறாங்க.அந்த கோபம உங்க மேல திரும்பிடபோகுது.)

      Delete
    9. மச்சி நீ கேளேன்.மச்சி___________ன்
      அருக்கமாட்டானுக்கு எயம்பத்திஎட்டு அருவாலாம்.அந்த கதைதான் தாஸ் கதை.

      Delete
    10. என்ன ஆணி புடுங்க போகணும்னு சொன்னீரு என்ன ஆச்சு? ரொம்ப ஓவரா ஆயிடிச்சோ!! நான் நீர் குடிச்ச மோரைச் சொன்னேன்!! அதுசரி, சண்டை, பட்டினி, போர் புண்ணாக்கு பருத்திக் கோட்டை இதெல்லாம் இருந்தால் கடவுள் இல்லைன்னு அர்த்தமா? உன் மூஞ்சியில என் பீச்சாங்கையை வைக்க............ இந்த லாஜிக்கை எவன் சொன்னான் உனக்கு? இதையெல்லாம் வச்சு அயோக்கியத் தனம் பண்ற கடவுள் இருக்கான், கொடுமைக்கார கடவுள் இருக்கான் அல்லது கையாலாகாத கடவுள் இருக்கான் என்றுதான் வருமே தவிர இல்லை என்று வராது. போய்யா தலையில் இருக்கும் கிட்னியை யூஸ் பண்ணு.............. பொறந்ததில் இருந்தே யூஸ் பண்ணாம அதை பத்திரமா புத்தம் புதுசா வச்சிருக்கே.....:((

      Delete
    11. \\அருக்கமாட்டானுக்கு எயம்பத்திஎட்டு அருவாலாம்.\\ நீ புடுங்கறது எல்லாமே வேண்டாத ஆணிதான். இந்த யோக்கியதையில இருந்துகிட்டு என் அருவாளப் பத்தி நீ பேசுறியா?

      Delete
    12. @ வவ்வால்.
      மூளையே இல்லாதவர்களிடம் பேசி என்ன ஆகப்போவுது?


      என்ன ஆணி புடுங்க போகணும்னு சொன்னீரு என்ன ஆச்சு? ரொம்ப ஓவரா ஆயிடிச்சோ!! நான் நீர் குடிச்ச மோரைச் சொன்னேன்!! அதுசரி, சண்டை, பட்டினி, போர் புண்ணாக்கு பருத்திக் கோட்டை இதெல்லாம் இருந்தால் கடவுள் இல்லைன்னு அர்த்தமா? உன் மூஞ்சியில என் பீச்சாங்கையை வைக்க............ இந்த லாஜிக்கை எவன் சொன்னான் உனக்கு? இதையெல்லாம் வச்சு அயோக்கியத் தனம் பண்ற கடவுள் இருக்கான், கொடுமைக்கார கடவுள் இருக்கான் அல்லது கையாலாகாத கடவுள் இருக்கான் என்றுதான் வருமே தவிர இல்லை என்று வராது. போய்யா தலையில் இருக்கும் கிட்னியை யூஸ் பண்ணு.............. பொறந்ததில் இருந்தே யூஸ் பண்ணாம அதை பத்திரமா புத்தம் புதுசா வச்சிருக்கே.....:(///////////////////////

      இதைதான் எதிர்பார்த்தோம்.இப்படித்தான் ஆகோனும்.இன்னும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

      அப்புறம் அந்த பின்லேடன்ஐ எந்த கெட்ட கடவுள் படைத்தார்?
      மோடியை எந்த நல்ல கடவுள் அல்லது பொருக்கி கடவுள் படைத்தார்?

      சொல்லும் வோய்.
      :-))))))

      @ வவ்வால்
      டாஸ்க்கு கொஞ்சம் சோடா வாங்கி தரவும்.

      Delete
    13. இதையெல்லாம் வச்சு அயோக்கியத் தனம் பண்ற கடவுள் இருக்கான், கொடுமைக்கார கடவுள் இருக்கான் அல்லது கையாலாகாத கடவுள் இருக்கான் என்றுதான் வருமே தவிர இல்லை என்று வராது. ///////////////////////

      ஐயோ.ஐயோ.
      செம காமெடி.
      இதுக்கு எதுக்குயா கடவுள்.?

      Delete
    14. அடடா.இம்மா நாழி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகிட்ட பேசிக்கிட்டு இருந்துட்டேனே.
      சரியாகிடும்.உங்களை அந்த கெட்ட கடவுள் காப்பாற்றுவார்.
      நல்ல கடவுளை நாங்க காப்பாத்துறோம்.

      அது சரி.
      நீங்க சொல்லுற சோ கால்டு __________ பல மாமாங்கமா சாப்பிடாம
      கக்கா போகாம இருக்குராராம்.
      அதுக்கும் நாங்க தான் ஏற்ப்பாடு பண்ணனுமா?

      Delete
    15. \\இதுக்கு எதுக்குயா கடவுள்.?\\ உம்முடைய கேனத் தனமான வாதம் எங்கே கொண்டு போகும்னுதான் சொன்னேனே தவிர அது சரி என்று சொல்லவில்லை, நீர் நிரூபிக்க வந்தது கடவுள் இல்லை என்று, அது உம்முடைய சொத்தையான வாதத்தால் நிரூபிக்க முடியாது. [ரொம்ப ஊத்திகிட்டா தலையில் இருக்கும் களிமண்ணு கரைஞ்சுகிட்டே போகும், பாத்து...........] எந்தெந்த மாதிரி கேனைகளை எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்குடா.......

      Delete
    16. இந்த பின்னூட்டங்களை படிப்பவர்கள் சொல்லுவார்கள்.
      யார் புண்ணாக்கு,பருத்திகொட்டை என்று.

      Delete
    17. \\நீங்க சொல்லுற சோ கால்டு __________ பல மாமாங்கமா சாப்பிடாம
      கக்கா போகாம இருக்குராராம்.
      அதுக்கும் நாங்க தான் ஏற்ப்பாடு பண்ணனுமா?\\ பொணம் தூக்குறது, கக்கூஸ் வாருவது என்று அசத்தும் ஆல் இன் ஆல் அழகுராஜா போலிருக்கே............ அதுசரி உன்னோட தொழிலுக்கு என்னைக் கேட்டா நான் என்னப்பா செய்ய முடியும்? யாருக்கு வாரனுமோ அவங்ககிட்டயே போயி கேளு...........

      Delete
    18. டாஸ்ஸு
      உமக்கு அந்த அளவுக்கு இல்லை.
      நீரும் பந்துக்கள் மாதிரியே மாத்தி மாத்தி பெசுரீர்.
      போ போய் அகண்ட வெளியில் வெளிக்கு இருக்க முடியாமல்
      அவதிப்படும் அந்த சோ கால்டு _________க்கு _______ கழுவி விடவும்.

      Delete
    19. \\இந்த பின்னூட்டங்களை படிப்பவர்கள் சொல்லுவார்கள்.
      யார் புண்ணாக்கு,பருத்திகொட்டை என்று.\\ படிக்கிறவன் இன்னொரு புண்ணாக்கா இருந்தா , புண்ணாக்கு சொல்லறது தான் சரி என்பான். இதெல்லாம் ஒரு பேச்சா?

      Delete
    20. பொணம் தூக்குறது, கக்கூஸ் வாருவது என்று அசத்தும் ஆல் இன் ஆல் அழகுராஜா போலிருக்கே............ அதுசரி உன்னோட தொழிலுக்கு என்னைக் கேட்டா நான் என்னப்பா செய்ய முடியும்? யாருக்கு வாரனுமோ அவங்ககிட்டயே போயி கேளு.........//////////////////

      அப்ப இவங்க எல்லாம் கேவலமானவேர்களா??
      நீர் தலித் எதிரியா?
      மாட்டுநீருயா.வசமா.

      இவங்க இல்லாட்டி உன்வீடு,தெரு கதையை நினைத்து பார்க்கவும்.
      ஓ.ஓ.ஓ.பொணத்த நடுவீட்டுல போட்டுக்கிட்டு கூடி உக்காந்து சாப்பிடுற கூட்டமா நீரு.

      Delete
    21. \\அவதிப்படும் அந்த சோ கால்டு _________க்கு _______ கழுவி விடவும். \\ பரம்பரை பரம்பரையா நீர் செய்து வரும் பிழைப்பில் நான் மண்ணை வாரிப் போடா மாட்டேன். நான் ரொம்ப நல்லவன். எனவே நீரே செய்யும்.

      Delete
    22. டாஸூ.பந்து சரியா பவுன்ஸ் ஆகலை பாரு.அது உன் மூஞ்சிக்கே கரெக்ட்ஆ திருநபி வருது.
      போய் நல்லா பாடம் படிச்சிட்டு கரெட்ஆ பந்து போடு.
      இப்படி பவுன்ஸ் ஆகாம பால் போடக்குடாது.சரியா?

      Delete
    23. \\அப்ப இவங்க எல்லாம் கேவலமானவேர்களா??\\ யோவ் இதெல்லாம் உம்மோட தொழில்னு சொன்னீரேய்யா? உன்னை அழகு ராஜான்னு சொல்லி அழகு பார்க்கிறேன், எங்கே தப்பா சொன்னேன்?

      Delete
    24. தாசுக்கு சர்க்கஸ் தான் தொழில் போல.
      will come back in next break.

      Delete
    25. @ எனக்கென்னமோ ஒரு ஐ.டி யை வச்சிக்கிட்டு கூலிக்கார பசங்க கமண்டு போடுறா மாதிரி தெரியுது. கிரிக்கெட் கோச்சிங் வேறயா. அப்புறம் break வேற. அடுத்தவன் வரப்போறானா? யோவ் நான் கூலிக்கு ஆள் வச்சு கமண்டு போடும் அளவுக்கு வசதியானவன் இல்லை. எதுக்கு என்னை லந்து பண்றீங்க?

      Delete
    26. ஜெய தேவரே,

      //நீங்க இப்ப அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. கடவுள் என்று ஒருத்தர் இருக்க முடியாதுன்னு நீங்க ஆணித் தரமா நிருபிங்க //

      நானும் அதான்பா கேட்குறேன் இன்னார் தான் கடவுள் ,அவரு பேரு இது, வடிவம் இது, இன்னது சாப்பிடுவார்னு சொல்லிட்டா அப்படி ஒன்னு இல்லைனு நிறுபிச்சுடுவேன் , ஆளுக்கு ஒரு கடவுள் பேரு, ஒரு கடவுள் சைவம், இன்னொரு கடவுள் அசைவம் ,ஒருத்தருக்கு பொண்டாட்டியே இல்லை, ஒருத்தருக்கு 2 பொண்டாட்டினு ஏகப்பட்ட கடவுளை காட்டுறிங்க, அதுக்கு ஏகப்பட்ட புனித நூல், நான் எந்த கடவுள் இல்லை ,எது புனித நூல் இல்லைனு நிறுபிக்க, ?

      ஒரே அடியா முடிவு செய்து கடவுள்னு ஒரு வஸ்துவை காட்டுங்க ,நானும் இல்லைனு காட்டுறேன் :-))

      இப்போ பெருமால் இல்லைனு சொன்னால் மார்க்க பந்துக்கள் அல்லா இருக்காரேனு சொல்லிடுவாங்க :-))

      அல்லா இல்லைனு சொன்னா அது பெருமால் இல்லைனு சொல்லவில்லை, அந்த காரணங்கள் பெருமாலுக்கு பொருந்தாது என்பீர் , இந்த போங்காட்டம் இல்லாம ஒரே ஒரு ஆளு ,அவரோட வீரப்பிரதாபம் மட்டும் சொல்லுங்கோ :-))

      மிச்சத்த நான் பேசிக்கிறேன்!!!!

      Delete
    27. இருக்கும் கடவுளுக்குத்தான் பெயர் வைக்க முடியும், இல்லாத கடவுளுக்கு பெயரும் இருக்காது. So உங்க லாஜிக் உதைக்குது.

      Delete
    28. அய்யா குடை பிடிச்சுட்டு போர பெரியவரே ஜெயதேவரே,

      இருக்கும் கடவுள் ,இல்லாத கட்வுள்னு வேற இருக்கா, ஏதோ ஒரு மண்ணு அது பேரு, வடிவம், குணம், உணவு பழக்க வழக்கம், இன்ன பிற கல்யாண குணங்களை சொன்னால் அது இல்லைனு நிறுபிக்க தயார் ,எல்லாம் கூடிப்பேசி ஒரு பேரு விவரம் சொல்லுங்கோ :-))

      Delete
  38. ////மனிதன் கருப்பாய் இருப்பவனை கேவலம் என்பீர்களா? உங்களைப் போன்ற சிந்தனை உள்ளவர்களால் தான் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பாகுபாடே உருவானது.////

    நோட் பண்ணுங்கப்பா ..........நோட் பண்ணுங்கப்பா ..........

    ReplyDelete
  39. கிராமத்துல ஒரு சொலவடை இருக்கு.வேலையத்த _________
    பூனையை கட்டி ____________ம்.

    அதுமாதிரி இருக்கு.

    நாங்க பகுத்தறிவை வளத்துக்குங்க என்று சொன்னா நடு வீட்டுல
    நாய் என்னமோ பண்ணுமாம் அந்த கதையாதான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நாங்க எந்த அறிவை வளர்க்கனும்னு எங்களுக்குத் தெரியும், நீங்க பொத்திகிட்டு இருந்தா போதும்.

      Delete
    2. அப்புறம் என்னாத்துக்கு இந்த பதிவு.?
      ஹி..ஹி.

      Delete
  40. வாங்கப்பா நாம் எல்லாரும் போய் நித்தி வகையறாக்களையும்,மார்க்க பந்து வகையறாக்களையும்,இன்ன பிற வகையறாக்களையும்
    தொழுதுண்டு வாழுவோம்.

    இல்லாட்டி நாம எல்லாரும் மொட்டை தலை ஆகிடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. நீர் எந்த வகையரான்னு சொல்லவே இல்லியே?

      Delete
    2. இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலு
      வகையை செர்ந்த்தவங்க.

      Delete
    3. \\இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலு\\ இத கண்டு புடிச்ச அண்ணனுக்கு ஒரு நோபல் பரிசு பார்சல்.

      Delete
    4. பதில் சொல்லுராமாம்.
      தம்பி தாஸ்.நீ வேஸ்டு பதிவுலகத்துக்கு.
      இப்படித்தான் டென்சன் ஆகணும்.ம்ம்ம்.இன்னும்.இன்னும்.
      :))))))))))))))

      உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பாக்குறேன்.
      கொஞ்சம் ஏசி போட்டுக்கொள்ளவும்.

      Delete
    5. கிளீன் போல்டு ஆனதுக்கப்புறம் எல்லா அண்ணனுங்களும் உடும் டயலாக் இதுன்னு எங்களுக்கு தெரியுமுங்கண்ணா ........... நீங்க வேணுமின்னா பெரிய டவலா எடுத்து வழியும் அசடை துடைச்சுக்குங்க. நாங்க எதுக்கு லாயக்குன்னு சொல்ற யோக்கியதை உமக்கு இருக்கான்னு முதலில் ரூம் போட்டு யோசிங்க. அப்புறம் பேசுங்க.

      Delete
    6. தாஸ் தம்பி புதுசு.அப்படித்தான் இருக்கும்.யாரும் வருத்தபடாதீங்க.தானா கொஞ்ச நாள்ல சரியாகிடுவார்.

      Delete
  41. அது சரி.
    இந்த புள்ள குட்டி அப்படின்னு சொல்லுவாங்கள்ள.
    அவங்களை போய் படிக்க வைங்க.
    எத்தனை பேரு எம்மாம்பெரிய சொம்பை தூக்க முடியாம தூக்கிகிட்டு வராங்க.

    ReplyDelete
  42. \\இந்த புள்ள குட்டி அப்படின்னு சொல்லுவாங்கள்ள.
    அவங்களை போய் படிக்க வைங்க.\\ இந்த புள்ள குட்டி அப்படின்னு சொல்லுவாங்கள்ள, அதுங்க உங்களுக்கு இல்லவே இல்லீங்களா? இருந்தா முதலில் அதுங்களை படிக்க வைக்கலாமே? நீங்க இங்க வந்து கமண்டு போட்டு அறிவுரை சொல்லி உங்க நேரத்தை வீணடிப்பது ஏன்? அறிவுரையெல்லாம் அடுத்தவங்களுக்குதானோ?

    \\எத்தனை பேரு எம்மாம்பெரிய சொம்பை தூக்க முடியாம தூக்கிகிட்டு வராங்க.\\அதுக்காக நீங்க இப்படி கண்க கலங்குறீங்களே, வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரையே மிஞ்சிட்டீங்க.........

    ReplyDelete
  43. இருந்தா முதலில் அதுங்களை படிக்க வைக்கலாமே? நீங்க இங்க வந்து கமண்டு போட்டு அறிவுரை சொல்லி உங்க நேரத்தை வீணடிப்பது ஏன்? அறிவுரையெல்லாம் அடுத்தவங்களுக்குதானோ?/////////////

    என்ன ஒரு அருமையான புரிதல்.ம்ம்ம்ம் .
    ஒண்ணும் சொல்லுரத்துக்கு இல்லை.
    இவ்வளவு மூடர் கூட்டமா?
    இன்னும் எத்தனை பெரியார் வேண்டுமோ?


    \\எத்தனை பேரு எம்மாம்பெரிய சொம்பை தூக்க முடியாம தூக்கிகிட்டு வராங்க.\\அதுக்காக நீங்க இப்படி கண்க கலங்குறீங்களே, வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரையே மிஞ்சிட்டீங்க......... //////////////


    அப்ப இந்த போஸ்ட் தேவை இல்லைதானே?
    இந்த பதிவை நீக்கிவிடவும்.
    உங்க பதில் உங்களுக்கு புரிந்தால் நான் சொன்னதை செய்வீர்கள்.

    இல்லாட்டி.ஹி.ஹி.ஹி.
    இந்த பதிவு சும்மா பொழுதுபோக்குக்கு,,ஹிட்ஸ்க்கு
    இதுதான் தீர்ப்பு.

    பஞ்சாயத்து முடிஞ்சிடுச்சு.
    போய் எல்லாரும் தலைய வாருங்க.
    எப்படி கலைஞ்சி போய் கிடக்கு பாருங்க.!!!

    ReplyDelete
  44. \\இவ்வளவு மூடர் கூட்டமா?
    இன்னும் எத்தனை பெரியார் வேண்டுமோ?\\ பெரியாரைப் பத்தி உமக்கு என்னையா தெரியும், பெரிய பு.......கி மாதிரி பேச வந்திட்டே? அவர் கொள்கைகளை நம்புவதால் பெரிய மூடன் நீர்தான் இந்த லட்சணத்துல மத்தவங்கள சொல்ல வந்திட்டீரா? உங்க பெரியார் வண்டவாளம் தண்டவாளத்தில் ஓடுது பாரு.

    http://www.youtube.com/watch?v=iHJVX679w2k&feature=watch_response
    http://www.youtube.com/watch?v=Y5cYO4H2GOk&feature=watch_response
    http://www.youtube.com/watch?v=VBmzX252gSM&feature=watch_response

    பாத்திட்டு நாக்கை பிடுங்கிக்கோ.


    \\இல்லாட்டி.ஹி.ஹி.ஹி.
    இந்த பதிவு சும்மா பொழுதுபோக்குக்கு,,ஹிட்ஸ்க்கு
    இதுதான் தீர்ப்பு.\\ ஹிட்சை வச்சிக்கிட்டு நாக்கையா வழிக்க முடியும்? தீர்ப்பு சொல்லிட்டீரே கையில் செம்பு இருக்கா? ஆஹா......... அது ரொம்ப அடி வாங்கியிருக்கும் போல இருக்கே......

    ReplyDelete
    Replies
    1. பூ.இதானா?நான் கூட பெரியார் வீட்டுல காமரா வச்சி எதோ
      போட்டிருக்கொன்னு கன்பியுஸ் ஆகிட்டேன்.
      தெருவுல எத்தனையோ நாய் இருக்கு எல்லாம்தான் கொலைக்குது.

      Delete
    2. \\இல்லாட்டி.ஹி.ஹி.ஹி.
      இந்த பதிவு சும்மா பொழுதுபோக்குக்கு,,ஹிட்ஸ்க்கு
      இதுதான் தீர்ப்பு.\\ ஹிட்சை வச்சிக்கிட்டு நாக்கையா வழிக்க முடியும்? தீர்ப்பு சொல்லிட்டீரே கையில் செம்பு இருக்கா? ஆஹா......... அது ரொம்ப அடி வாங்கியிருக்கும் போல இருக்கே......//////////////////////////


      சொம்பு இல்லை.நாங்க மணி அடிப்போம்.அப்புறம் ம்ம்ம் அதான்.எல்லாமும் பண்ணுவோம்.
      மேலும் சாம்பிராணி கூட போடுவோம்.
      கொஞ்சம் நல்லா புகையை இழுத்துக்கோங்க.எல்லா வியாதிக்கும் நல்லது.

      Delete
    3. \\நான் கூட பெரியார் வீட்டுல காமரா வச்சி எதோ
      போட்டிருக்கொன்னு கன்பியுஸ் ஆகிட்டேன்.\\ நீங்க இந்த கில்மா பட ஞாபகத்திலேயே எப்பவும் உலண்டுகிட்டு இருப்பீக போலிருக்கு. நாய் கத்தும் குதிரை கனைக்கும்கிறது எங்களுக்கும் தெரியுமுங்க. அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம மண்ணை தின்னுட்டு உங்க ஆளுங்க ஓடி வந்தானுங்க, முடிஞ்சா எல்லாத்தையும் பாருங்க.

      Delete

    4. \\சொம்பு இல்லை.நாங்க மணி அடிப்போம்.அப்புறம் ம்ம்ம் அதான்.எல்லாமும் பண்ணுவோம்.
      மேலும் சாம்பிராணி கூட போடுவோம்.
      கொஞ்சம் நல்லா புகையை இழுத்துக்கோங்க.எல்லா வியாதிக்கும் நல்லது. \\ என்ன கண்ணம்மா பேட்டைக்கு எதையோ தூக்கிகிட்டு போற ஆளுங்க போல தெரியுதே!!

      Delete
    5. \\அப்படித்தான் இருக்கும்.யாரும் வருத்தபடாதீங்க.தானா கொஞ்ச நாள்ல சரியாகிடுவார்.\\ இதை யாருக்கு சொல்றீரு? இந்த சமாளிபிகே ஷன்ஸ்ல நாங்கல்லாம் டாக்குடரு பாட்டம் வாங்கிவங்கண்ணா......... எங்ககிட்டயே விடாதீங்கண்ணா..............

      Delete
    6. கொஞ்சம் நல்லா புகையை இழுத்துக்கோங்க.எல்லா வியாதிக்கும் நல்லது. \\ என்ன கண்ணம்மா பேட்டைக்கு எதையோ தூக்கிகிட்டு போற ஆளுங்க போல தெரியுதே!!////////////

      ம்ம்ம்ம்ம்ம்.இப்படித்தான் நடிக்கணும்.
      இல்லாட்டி பந்துக்கள் கொச்சிப்பாங்க.
      (புரிஞ்சிடுச்சின்னு காட்டிக்காதீங்க.பொழப்பு போய்டும்.)

      Delete
  45. @ முட்டாப்பையன்

    கான்செப்டே இல்லாம காமடி பண்ண வந்தவன் மாதிரி இங்க அதையும் இதையும் சும்மா பேசிகிட்டு இருக்காம வேறெந்த பிளாக்கிலாவது ஏதாவது நல்ல பொணம் விழுவுதான்னு பாருங்க, நாலு காசாவது தேறும் இங்க ஒரு ம....ரும் கிடைக்காது, எதுக்கு உங்க பொன்னான டயத்தை வீணடிக்கிறீங்க?

    ReplyDelete
    Replies

    1. நாத்திகவாதிகள் இருக்கும் வரை யாரும் இங்க கல்லா கட்ட முடியாது.

      Delete
    2. Jayadev Das has left a new comment on the post "இறைநம்பிக்கையுள்ள பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.":

      \\நாத்திகவாதிகள் இருக்கும் வரை யாரும் இங்க கல்லா கட்ட முடியாது.\\ நீங்க பக்கா இந்துக்கள்னு சொன்னாங்களே?/////////////////////////


      குளம் கோத்திரம்,மூத்திரம் தெரிஞ்சாதான் பழகுவாங்க போல.

      Delete
    3. சரி சரி. போய் தண்ணிய குடி.
      அது எந்த தண்ணியோ.
      நான் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.
      தச்சமயத்துக்கு பை.
      :)))))))))

      Delete

    4. \\குளம் கோத்திரம்,மூத்திரம் தெரிஞ்சாதான் பழகுவாங்க போல.\\ பசு மூத்திரம்னா மருந்து செய்யலாம், நோய்களைக் குணமாக்கும், ஆனால் நாய் மூத்திரத்தைப் பத்தி தெரிஞ்சு எதுக்கு ஆவப் போவுது. அதை மெதிசிட்டாலே போயி குளிக்கணும்.

      ஆத்தீகனைப் பார்த்தால் நாத்தீகன் எனவும் நாத்தீகர்களைப் பார்த்தால் ஆத்தீகத்தை ஆதரிப்பதாகவும் லந்து செய்வதுதான் உமது பிழைப்பா?

      Delete
    5. \\சரி சரி. போய் தண்ணிய குடி.
      அது எந்த தண்ணியோ.
      நான் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.\\ புல்லா [எதையோ] போட்டிருக்கீங்க, பாத்து போங்க.

      Delete
  46. முட்டாப்பையர்,

    சு.பி.சுவாமிகள்,சிராஜ்,சிட்டிசன், மீரான்,ஜெயதேவர் எல்லாம் போலி ஆத்திகவாதிகள், இவர்கள் கருத்தெல்லாம் , இவர்களை உயர்ந்தவர்கள் என காட்டிக்கொள்ள வேண்டும், அவ்வளவே அனைவருமே வருணாசிரம பற்றுள்ளவர்கள்.

    சைவம் தான் மனித உணவுன்னு சொன்னாலும் ஒன்றுமே சொல்லாத போதே இவர்களின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்ளலாம், அசைவம் சாப்பிட்டாலும் பார்ப்பனர்களின் சைவக்கொள்கை உயர்வானது என அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்பதால் அதற்கு கருத்து சொல்லாமல் கள்ளமவுனம் சாதிப்பதில் இருந்தே மார்க்க பந்துக்களின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்ளலாம், விரைவில் வர்ணாசிரமம் சரியே என மார்க்கப்பந்துக்கள் சொல்வார்கள், அதையும் கேட்போம் :-))

    சுயமாக சிந்திக்க தெரியாமல் உயிரினம் என வாழ்பவர்களே மதவாதிகள் :-))

    இனிமே மார்க்க பந்து எவனாவது இந்துத்துவா அது இது என பேசட்டும் அப்போ இருக்கு கச்சேரி :-))

    ReplyDelete
    Replies
    1. சந்தர்ப்பம் வந்ததும் யார் யாரெல்லாம் கூட்டு சேருறாங்க !! உன்னை தீர்த்து கட்டுறேன் பாருன்னு குரவலையை நெரிச்ச ரெண்டு பேரு இப்போ கை கோத்துகிட்டா........... என்ன கொடுமை சரவணன் இது?

      Delete
    2. @ vavvaal
      அந்த உண்மைகளை விட்டுடீரே?
      எப்படி இத்தனை லிங்க் போட்டு கொல்லுறது-ன்னு trues கிட்டதான் கத்துக்கணும்.

      Delete
    3. அதுதான் மனித தன்மை.புரிதல்கள்.
      அதுக்காக பின்லேடன் மாதிரியும்,பாக்.தீவிரவாதி மாதிரியும்
      கெட்ட கடவுளாக இருக்கணுமா.?

      இந்த மனிதத்தை நாங்கள் கர்ப்பிக்கிறோம்.
      படிக்காதவனை என்ன என்று சொல்லுவது?

      Delete
    4. \\அதுதான் மனித தன்மை.புரிதல்கள்.\\ இந்த ஈர வெங்காயமெல்லாம் இல்லை, புருஷனைக் கொன்னவன்னு கேசை போட்டுவிட்டு பின்னர் அவனுடனேயே வியாபாரக் கூட்டு வச்சவ செய்யும் வேலை இது.

      Delete
    5. எப்பயா அந்த சர்கஸ் கூடாரத்த விட்டு இறங்குவே?

      அப்புறம் மனசுல இருக்குற எண்ணம்தானே வார்த்தையா வெளிப்படும்.உம்முடைய எண்ணங்களே உம்மை பற்றி தெளிவாக காட்டுது.
      அது சரி கெட்ட கடவுள் சகவாசம்,பிறப்பு அப்படித்தான் யோசிக்க சொல்லும்.

      Delete
    6. ஜெயதேவரே ,

      நீர் சொல்வதும் சரி தான் , சந்தர்ப்பவாதமா கூட்டு சேர்ந்துக்கிறோம் இல்லை , ஆனால் நாங்கள் மனிதர்களை முன்னிலை வைத்து தான் மோதிக்கிட்டோம், இப்போவும் மனிதர்களை மனிதர்களாக பார்க்கிறோம், அதையும் தாண்டி புனிதமானது கடவுள்னு நாங்க சண்டையும் போட்டுக்கலை, சந்தர்ப்பவாதமா கூட்டும் வச்சுக்கலை.

      நண்பனுக்காக குரல் கொடுக்கலாம், பின்னர் சக மனிதன் என புரிதலில் அமைதியாகவும் போகலாம்.

      கண்ணுக்கு தெரியாத கடவுள் பேரை வச்சு மனித உயிரை பறிப்பது, மத வாதம் என சண்டைப்போடுவது, என இருந்துவிட்டு , பின்னர் கூட்டு வைப்பது எப்படியோ?

      கிருஷ்ணர் சில்லி பீப் சாப்பிட்டால் ஒத்துப்பாரா :-))

      Delete
    7. @ வவ்வால்
      கொஞ்சம் யோசித்தி பாரும்.செம காமெடியா இருக்கும்.

      அப்படியே இந்த ஆசாமி எல்லாம் அந்த ஆசாமியோட உணவை சாப்பிடறுதுன்னும்
      அந்த
      ஆசாமிஈல்லாம் இந்த ஆசாமியோட உணவை சாபிடருதுன்னும் முடிவு செஞ்சா எப்படி இருக்கும்?

      Delete
    8. சமூக விரோத செயல்களில் ஈடுபடுறவன் எங்கேயும் இருப்பான். அவனுக்காக மத்த எல்லோரும் இறைமறுப்பை தழுவ வேண்டுமா? இறைவனை ஏற்ப்பது எங்களுக்கு பிடிச்சிருக்கு, உங்களுக்கு என்ன objection? அறிவியல் கடவுள் இருக்குன்னு நிரூபிக்காட்டியும் இல்லைன்னு சொல்லலையே?

      \\கிருஷ்ணர் சில்லி பீப் சாப்பிட்டால் ஒத்துப்பாரா :-))\\ இதை அவர்கிட்டயிருந்து தான் தெரிஞ்சுக்கணும் பகவத் கீதை படிக்கவும்.

      Delete
    9. \\அப்படியே இந்த ஆசாமி எல்லாம் அந்த ஆசாமியோட உணவை சாப்பிடறுதுன்னும்
      அந்த
      ஆசாமிஈல்லாம் இந்த ஆசாமியோட உணவை சாபிடருதுன்னும் முடிவு செஞ்சா எப்படி இருக்கும்?\\ நீர் புடவையும் ஜாக்கீடும் கட்டிக்கிட்டு, உங்க வீட்டு பாஸ் [இந்த முண்டத்தை கட்டிகிட்ட/கட்டிக்கப் போற அம்மா மன்னிச்சுக்கோங்க] ஜீன்ஸ் பேண்டும் டி-சரடும் போட்டுக்கிட்டு ஜோடியா நடந்து போனா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.

      ஏன்யா முண்டம், சைவ உணவு/அசைவம் உண்பவன் எல்லா நாட்டிலும், மதத்திலும் இருக்கான், ஏன் நாத்தீகனில் கூட இருப்பான். இதப் போயி மேட்டரா பேசிகிட்டு இருக்கியா?

      Delete
    10. ஆசாமிஈல்லாம் இந்த ஆசாமியோட உணவை சாபிடருதுன்னும் முடிவு செஞ்சா எப்படி இருக்கும்?\\ நீர் புடவையும் ஜாக்கீடும் கட்டிக்கிட்டு, உங்க வீட்டு பாஸ் [இந்த முண்டத்தை கட்டிகிட்ட/கட்டிக்கப் போற அம்மா மன்னிச்சுக்கோங்க] ஜீன்ஸ் பேண்டும் டி-சரடும் போட்டுக்கிட்டு ஜோடியா நடந்து போனா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.///////////////



      நீர் போட்ட இந்த பதிவை மீண்டும் படிக்கவும்.
      அப்புறம் பந்துக்களின் கமெண்ட்ஸ்ம் படிக்கவும்.

      சரியா பொருந்தும்.

      இதுக்குதான் அப்பவே சொன்னேன் நீர் சரிப்பட்டு வரமாட்டீருன்னு .
      பிம்பிளிக்கா பிளாப்பி.

      Delete

    11. \\நீர் போட்ட இந்த பதிவை மீண்டும் படிக்கவும்.
      அப்புறம் பந்துக்களின் கமெண்ட்ஸ்ம் படிக்கவும்.\\ நான் இந்த சந்து பொந்தை எல்லாம் நம்பி இல்லை. நம்ம ரூட்டே தனி.

      Delete
    12. சந்து பொந்தை எல்லாம் நம்பி இல்லை. நம்ம ரூட்டே தனி. ///////////////

      அப்படியே வானத்து ரூட் புடிச்சிக்கிட்டு போநீருன்னு வச்சுக்குங்க.
      அங்க பல ஆயிரம் கோடி ஆசாமிகள் இருப்பாங்க.
      அதுல உங்க ஆசாமிய தேடி கண்டுபிடிங்க.
      அப்புறம் பார்க்கலாம்.

      Delete

  47. \\கிருஷ்ணர் சில்லி பீப் சாப்பிட்டால் ஒத்துப்பாரா :-))\\ இதை அவர்கிட்டயிருந்து தான் தெரிஞ்சுக்கணும் //////////////////

    வரசொன்னா கேட்டு தெரிஞ்சிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. \\வரசொன்னா கேட்டு தெரிஞ்சிப்போம்.\\ உம்மா பேரை நியாயப் படுத்திகிட்டு இருக்கீரே!!

      http://www.asitis.com/3/13.html
      http://www.asitis.com/9/26.html

      Delete
    2. நாங்களும் தூணு,துரும்பு எல்லா இடத்திலையும் தேடுறோம்.
      பயபுள்ள எங்ஙன ஒளிஞ்சிருக்குன்னு தெரியலை.
      டாசு..கொஞ்சம் கண்டுபிடிச்சி கூட்டிட்டு வந்தா
      எல்லா விவரத்தையும் கேட்ட்டுடுவோம்.
      அப்புறம் .
      இருக்குற ஆசாமிகள் எல்லாரையும் கூட்டிட்டு வந்துடுங்க.
      மத்தவங்க கோச்சிக்க கூடாது பாருங்க.

      Delete
    3. \\வரசொன்னா கேட்டு தெரிஞ்சிப்போம்.\\ உம்மா பேரை நியாயப் படுத்திகிட்டு இருக்கீரே!!

      http://www.asitis.com/3/13.html
      http://www.asitis.com/9/26.html/////////////////

      நாய் கத்தும் குதிரை கனைக்கும்கிறது எங்களுக்கும் தெரியுமுங்க.
      ஹி..ஹி.

      Delete
    4. \\நாய் கத்தும் குதிரை கனைக்கும்கிறது எங்களுக்கும் தெரியுமுங்க. \\ ஈயடிச்சான் காப்பியடிக்கலாமா? நாய் கத்தாது குறைக்கும். கிருஷ்ணன் என்ன சாப்பிடுவான்னு தானே கேட்டிங்க அப்புறமென்ன? நரி ஊளையிடும், சிங்கம் கர்ஜிக்குனு என்ன lkg புள்ளைங்களுக்கு பாடமா நடத்துரீறு?

      Delete
  48. \\நாங்களும் தூணு,துரும்பு எல்லா இடத்திலையும் தேடுறோம்.
    பயபுள்ள எங்ஙன ஒளிஞ்சிருக்குன்னு தெரியலை.
    டாசு..கொஞ்சம் கண்டுபிடிச்சி கூட்டிட்டு வந்தா
    எல்லா விவரத்தையும் கேட்ட்டுடுவோம்.\\ கண்ணு முன்னாடியே நின்னாலும் குருடனுக்கு எங்கே தெரியப் போவுது? சூரியனின் ஒளி, தண்ணீரின் சுவை, பறவைகளில் கருடன், ஆண்களிடம் வீரம் [சாரி இது உம்மகிட்ட இல்லை], பெண்களிடம் கரப்பு இதெல்லாம் நான் அப்படின்னு சொல்றானே............ உம குருட்டு கண்களுக்குத் தெரியவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. சூரியனின் ஒளி, தண்ணீரின் சுவை, பறவைகளில் கருடன், ஆண்களிடம் வீரம் பெண்களிடம் கரப்பு இதெல்லாம் நான் அப்படின்னு சொல்றானே///////////

      அப்ப சாமி இல்லையா?
      ஒப்புதல் வாக்குமூலத்துக்கு நன்றி.

      Delete
    2. \\அப்ப சாமி இல்லையா?\\ அவரை உமோட குருட்டுக் கண்ணால் இப்போது பார்க்க முடியாது, நீர் பார்க்கணும்னா அதுக்கு இது தான் வழி. That is the meaning of omniscient.

      Delete
    3. ஜெயதேவுடு,

      நான் சரோஜா தேவி புத்தகம் கூட படிப்பேன் அதே போல பகவத் கீதையும் படிச்சு என்னா விவரம்னு தெரிஞ்சுப்பேன் ,ஆனால் சிராஜ், மீரான், சு.பிசுவாமிகள் எல்லாம் பகவத் கீதை படிச்சு அப்புறமா தான் சில்லி பீப் சாப்பிடணுமா?

      ஏன்பா ஒரு வார்தையில சொல்லப்படாதோ?

      அவா எல்லாம் சில்லீ பீஃப் ஆர்டர் செஞ்சிட்டு வெயிட்டிங் :_))

      Delete
    4. \\நான் சரோஜா தேவி புத்தகம் கூட படிப்பேன்.\\ இதென்ன டாக்டருக்கு படிச்சேன், வக்கீலுக்குப் படிச்சேன்னு சொல்லி பெருமைப் படர விஷயமா...........இந்த கருமாந்திரத்தை பப்ளிக்கா போட்டு உடைக்கனுமா? அதுசரி கல்யாணம் ஆச்சா இல்லியா? எல்லாம் பார்த்த பின்னாடியும் இந்த சரோஜாதேவியை விட முடியலையா? கஷ்ட காலம்யா ..........

      \\சிராஜ், மீரான், சு.பிசுவாமிகள்\\ more than them, you are so worried about it!!

      Delete
    5. ஜெய தேவுடு,

      பகவத் கீதைன்னு ஒரே புத்தகத்திலே ஒரே கதைய திரும்ப திரும்ப படிக்கிறீர், ஆனா சரோஜாதேவி புக்குல ஒவ்வொருக்கா புது கதை போடுறானே , விட முடியுமா:-))

      அவாள் எல்லாம் ஒத்தாசைக்கு வரணும்னு காலில் விழுந்து சேவிச்சு அழைச்சது நீர் தானே ,அப்போ அவாள் மேல அம்புட்டு அக்கரை தானே,அதான் அவாளுக்கும் சைவ உபன்யாசம் செய்தீரா இல்லையான்னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம் :-))

      நீர் பாட்டுக்கு மனுசன் சைவம் தான் சாப்பிடனும் சொல்லிட்டீர்ர் ஆனால் அவா சில்லி பீஃப் ஆர்டர் செஞ்சுட்டா , உம்மை கேட்காம எப்புடினு கேட்டு நிப்பாட்டி வச்சிருக்கேன், சீக்கிரமா சொன்னா நன்னா இருக்கும், யூ க்னோ சில்லி பீஃப் சூடா சாப்பிட்டா தான் நன்னா இருக்கும் :-))

      Delete

    6. அவாள் எல்லாம் ஒத்தாசைக்கு வரணும்னு காலில் விழுந்து சேவிச்சு அழைச்சது நீர் தானே ,அப்போ அவாள் மேல அம்புட்டு அக்கரை தானே,அதான் அவாளுக்கும் சைவ உபன்யாசம் செய்தீரா இல்லையான்னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம் :-))/////////////

      தீர்த்தம் கொடுத்தாலோனோ ?

      @ வவ்வால்
      இது தேறாத கேசு.
      இதுக்கு பந்துக்களே தேவலை.
      பிடிச்ச முயலுக்கு மூணு கால கேட்டியா பிடிக்கும்கள்.

      Delete
  49. \\அப்படியே வானத்து ரூட் புடிச்சிக்கிட்டு போநீருன்னு வச்சுக்குங்க.
    அங்க பல ஆயிரம் கோடி ஆசாமிகள் இருப்பாங்க.
    அதுல உங்க ஆசாமிய தேடி கண்டுபிடிங்க.\\ பெரியார் கொள்கையை படிச்ச மூஞ்சியப் பாரு.......

    ReplyDelete
    Replies
    1. ஹா.ஹா.
      டண்டனக்கா.ஏய் டனக்குனக்கா.

      Delete
    2. ஓய் ஜெயதேவுடு,


      எனக்கு ஒரு சந்தேகங்க்ணா , மோடி ஆத்திகரா ,நாத்திகரா, அவருக்கு கிருஸ்ணாவை புடிக்குமா ,புடிக்காதா ?

      மோடியை பிரதமர் ஆக்க உம்ம சப்போர்ட் உண்டா, ஏன் எனில் நான் அவரை எதிர்ப்பதால் நீர் ஆதரிப்பீரேன்னு தான் கேட்டேன் :-))

      இப்போ மோடியை நான் எதிர்ப்பது போல் நீரும் எதிர்த்தால் அப்பாலிக்கா என்னோட கருத்தை சந்தர்ப்பவாதமா ஆதரித்தீர்னு முட்டாப்பையர் சொல்லுவாரு :-))

      Delete
    3. \\இப்போ மோடியை நான் எதிர்ப்பது போல் நீரும் எதிர்த்தால் அப்பாலிக்கா என்னோட கருத்தை சந்தர்ப்பவாதமா ஆதரித்தீர்னு முட்டாப்பையர் சொல்லுவாரு :-))\\ நீர் உம்ம வாக்கில் வாதிடலாம், அந்த பையர் அவர் வாக்கில வாதிடலாம், ஆனா ரெண்டு பெரும் கொஞ்சி குலாவுரீங்களே, அதை நீங்க ரெண்டு பெரும் வீதயில உருண்டு பொரண்டு அடிச்சிகிட்டதை சேர்த்து நினைச்சா தான் வேடிக்கையா இருக்கு.

      Delete
    4. சகுனி வேலை பன்னுராமாம்.
      ம்கும்.
      போய் அடுத்த வீடு பாரும்.

      Delete
  50. @ முட்டாப்பையன்

    There is no substance in what you are writing, excuse me, unless you have something meaningful to present, please don't waste my time. Bye have a nice day [night]!!

    ReplyDelete
    Replies
    1. அடடா டிரைலர்கே இப்படியா?
      இன்னும் நான் மெயின் ஆயிட்டத்துக்கே வரலை.
      :))))))))

      Delete
  51. \\அடடா டிரைலர்கே இப்படியா?
    இன்னும் நான் மெயின் ஆயிட்டத்துக்கே வரலை.\\ வாயில நல்லா வருது............ போய்யா....... போ................. போங்கிறேன் ..............

    ReplyDelete
  52. என்னய்யா விவாதம் இது ...........நாகூர் பூரான் வந்து இன்னும் பூரான் உடலையா ?
    இந்த ஓட்டை ஏன் சின்னதா இருக்கு அந்த ஓட்டை ஏன் பெருசா இருக்கு . அந்த ஓட்டை ஏன் இந்த ஓட்டை மாதிரி இல்லை . இந்த ஓட்டை ஏன் அந்த ஓட்டை மாதிரி இல்லை ...........
    சரி தாஸ் ஐயா ..நான் ஒரு கேள்வி கேக்குறேன் .கடவுளால் முடியாத காரியம் அப்படின்னு ஏதாவது இருக்கா ...?
    அப்படி இருந்தால் அது என்ன ........பதில் சொல்லவும்

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு நான் இல்லைன்னு பதில் சொல்லுவேனாம், உடனே நீங்க

      "கடவுளாலேயே தூக்க முடியாத கல்லு ஒன்னை கடவுளால படைக்க முடியுமா"-ன்னு கேட்ப்பீங்களாம்!! இதெல்லாம் புளிச்சு போன ஜோக்குண்ணே, புதுசா எதாச்சும் இருந்தா சொல்லுங்க.

      Delete
  53. //, நீர் நிரூபிக்க வந்தது கடவுள் இல்லை என்று, அது உம்முடைய சொத்தையான வாதத்தால் நிரூபிக்க முடியாது.///

    என்னய்யா இது லூசுதனமா இருக்கு . ஒரு பொருள் இல்லை என்று சொல்பவர்களிடத்தில் நிருபிக்கும் பொறுப்பை குடுக்குறீங்க .. முட்டாள் தனமாக இல்லை ...............நீங்கள்தான் இருக்கு என்று சொல்றீங்க அப்போ இருப்பை நிருபிக்கும் பொறுப்பும் உங்களுடையது தானே ..
    பரிணாமம் இருக்கு என்று சொல்கிறோம் . அதை நிருபிக்கும் சான்றுகளை சகோ சார்வாகன் அடுக்கடுக்காக பதிகிறார் .
    நீங்கள் பரிணாமம் இல்லை என்று சொல்கிறீர்கள் . இல்லை என்று சொல்வதற்கு உங்களிடமா சான்று கேட்டோம் .?
    கொசுவை பற்றி பதிவு போடுறாரு ........சே என்னே மார்க்க விஞ்ஜானம் ...உங்க போச்தகத்தில் இந்தமாதிரி டக்கால்டி மேட்டர் எல்லாம் இல்லையா ..கொசுவுக்கு மருந்தடித்தால் அது முழுமையாக அழிவதில்லை அது அந்த மருந்தை தாங்கும் வீரியத்தை வளர்த்து கொண்டு அதை தன சந்ததிகளுக்கு குடுக்கிறது .. அதனால் மருந்தின் வீரியத்தை நாம் கூட்ட வேண்டியது இருக்கிறது ........
    இதுவும் ஒரு வகையில் பரிணாம வளர்ச்சிதான் . மாற்றம் ஒன்றே மாறாதது .......................அப்படி இருக்கும் போது பரிணாம எதிர்ப்பு என்பதே முட்டாள் தனமானது என்று உங்களுக்கு புரிய வில்லை . .........மார்க்க பந்துக்கள் துணை இருக்கு என்று நம்பி இறங்க வேண்டாம் மூழ்கி விடுவீர்கள் .பொருந்தா கூட்டணி வென்றதாக வரலாறு கிடையாது .

    ReplyDelete
    Replies
    1. \\என்னய்யா இது லூசுதனமா இருக்கு . ஒரு பொருள் இல்லை என்று சொல்பவர்களிடத்தில் நிருபிக்கும் பொறுப்பை குடுக்குறீங்க .. முட்டாள் தனமாக இல்லை ...............நீங்கள்தான் இருக்கு என்று சொல்றீங்க அப்போ இருப்பை நிருபிக்கும் பொறுப்பும் உங்களுடையது தானே ..\\ Dark Mater, Dark Energy தற்போது ரெண்டு சமாச்சாரங்கள், கடந்த சில வருடங்களாக இருப்பதாக உறுதியாகச் சொல்றாங்க. ஆனால் இதுவரைக்கும் அவற்றை எதை வச்சு பிடிக்கிறதுன்னு யாருக்கும் தெரியலை. இவை பின்னொரு நாளில் என்னன்னு கண்டுபிடிக்கலாம், ஆனாலும் கண்டுபிடிக்கவில்லையே, ஆகையால் அதுவரைக்கும் இவை இல்லை என்று ஆகிவிடாது. இறைவன் இருக்கிறான் என்பதை எதை வைத்துச் சொல்கிறோம்? எதையாவது எடுத்தால் அது எங்கேயாவது இருந்துதான் எடுக்க முடியும். சாமியார் கையிலிருந்து வாட்சை எடுத்தால் நம்பாதே என்று ஒருபுறம் சொல்லிவிட்டு, இவ்வளவு பெரிய பிரபஞ்சமே ஒண்ணுமே இல்லாததில் இருந்து தான் வந்துச்சு சொன்னால் அதை நம்ப நாங்கள் கேனைகள் இல்லை.

      அடுத்து, பிரபஞ்சம் தோன்றியது ஒருபுறம் இருந்தாலும், அதில் உள்ள ஜடம் எதுக்கும் அறிவு கிடையாது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு கூரான கல்லை தோண்டி எடுத்தாலும், அதை தானாக உருவானதாக நம்புவதில்லை அதை யாரோ மனிதன்தான் செய்திருப்பான், அதை ஏதோ ஒரு காரனத்துக்காகத்தான் செய்திருப்பான் என்றே சொல்கிறார்கள். இதை ஒருபுறம் சொல்லிவிட்டு, இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு எந்த நோக்கமும் இல்லை என்கிறீர்கள், கணினியைப் போல செயல்படும் மூளையையும் கேமரா போல செயல்படும் கண்களையும், பக்காவாகச் செயல் படும் இதயம் என்ற பம்பையும் யாரும் வடிவமைக்காமல் தானகவே உருவானது என்று நம்பச் சொல்கிறீர்கள் அதற்க்கு பரிணாமம் என்ற பெயரில் ஒரு நாமத்தைப் போடப் பார்க்கிறீர்கள். அதையெல்லாம் ஏற்ப்பதற்க்கும் நாங்கள் ஒன்னும் கேனைகள் இல்லை.

      \\பரிணாமம் இருக்கு என்று சொல்கிறோம் . அதை நிருபிக்கும் சான்றுகளை சகோ சார்வாகன் அடுக்கடுக்காக பதிகிறார் .
      நீங்கள் பரிணாமம் இல்லை என்று சொல்கிறீர்கள் . இல்லை என்று சொல்வதற்கு உங்களிடமா சான்று கேட்டோம் .?\\ எல்லா 45உயிர்களும் 0 கோடி வருடங்களுக்கு முன்னர் திடீரென்றுதான் தோன்றியதே தவிர ஒவ்வொன்றாகத் தோன்றவில்லை. மேலும் பரிணாமம் என்றால் குரங்கு எல்லாம் மனிதனாகி இருக்க வேண்டும் [அல்லது எது எதாக மாறியதோ அது மட்டும் தான் இருக்க வேண்டும்], பார்த்தால் குரங்கும் இருக்கிறது, மனிதனும் இருக்கிறான். இது எப்படி?

      \\கொசுவை பற்றி பதிவு போடுறாரு ........சே என்னே மார்க்க விஞ்ஜானம் ...உங்க போச்தகத்தில் இந்தமாதிரி டக்கால்டி மேட்டர் எல்லாம் இல்லையா ..கொசுவுக்கு மருந்தடித்தால் அது முழுமையாக அழிவதில்லை அது அந்த மருந்தை தாங்கும் வீரியத்தை வளர்த்து கொண்டு அதை தன சந்ததிகளுக்கு குடுக்கிறது .. அதனால் மருந்தின் வீரியத்தை நாம் கூட்ட வேண்டியது இருக்கிறது \\ கொசு மருந்தை எதிர்கொள்ளும் சக்தியைத்தான் பெறுகிறதே தவிர அது கரப்பான் பூச்சியாக மாறவில்லை.

      ........
      \\இதுவும் ஒரு வகையில் பரிணாம வளர்ச்சிதான் . மாற்றம் ஒன்றே மாறாதது .......................அப்படி இருக்கும் போது பரிணாம எதிர்ப்பு என்பதே முட்டாள் தனமானது என்று உங்களுக்கு புரிய வில்லை . .........மார்க்க பந்துக்கள் துணை இருக்கு என்று நம்பி இறங்க வேண்டாம் மூழ்கி விடுவீர்கள் .பொருந்தா கூட்டணி வென்றதாக வரலாறு கிடையாது .\\ நீங்கள் கோவிலுக்குப் போகாதவரா என்று நெஞ்சின் மேல் கை வைத்துச் சொல்லுங்கள் பார்ப்போம். உங்கள் எதிர்ப்பு கடவுளுக்கு எதிராகவா இல்லை கிரிக்கெட் பந்து, டென்னிஸ் பந்துகளுக்கு எதிராகவா எனபதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

      Delete
  54. ஜெயதேவர்,

    // தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு கூரான கல்லை தோண்டி எடுத்தாலும், அதை தானாக உருவானதாக நம்புவதில்லை அதை யாரோ மனிதன்தான் செய்திருப்பான், அதை ஏதோ ஒரு காரனத்துக்காகத்தான் செய்திருப்பான் என்றே சொல்கிறார்கள்.//

    அப்போ கூட இதெல்லாம் கடவுள் செய்தது என ஒன்றுமே கிடைக்கலையா?

    ஏனய்யா கிருஸ்ணர் பயன்ப்படுத்திய சட்டிப்பானை கூடவா கிடைக்கவில்லை?

    அப்போ மனுஷன் தான் கடவுள்,அஹம் பிரம்மாஸ்மி ஒத்துக்கலாமே அதையும் செய்ய மாட்டேள்?

    மாட்டு மூத்திரம் குடிச்சதில் உமக்கு மூளை செப்டிக் டேங்க் போல அழுகி போச்சு ஓய்?

    மூளை இருக்கவன் கிட்டே பேசலாம், ஏன் மூளை இல்லாதவன் கிட்டே கூட பேசலாம் , ஆனால் ஜெய தேவரு போல மூளை மக்கிப்போனவன் கிட்டே மட்டும் பேசக்கூடாது :-))

    ReplyDelete
  55. @வவ்வால்

    தலைப்பை விட்டு விலகாமல் உங்கள் கருத்துகளைப் பதியவும், பதிவில் சொல்லப் படாதது, தனிமனித தாக்குதல், இதெல்லாம் வேண்டாம்.


    ReplyDelete
  56. ஜெயதேவரு,

    எது ஓய் தனி மனித தாக்குதல், அதைப்பற்றி நீர் பேசுவது செம வேடிக்கை, தனியா ஒரு பதிவு போட்டு தனி மனித தாக்குதல் செய்துவிட்டு,அதை டெலிட் செய்ததை எல்லாம் தான் பார்த்தாங்க. பேசினா தைரியமா பேசனும், சாதாரணமா பேசுவதற்கே வலிக்குதா :-))

    நான் ரொம்ப லைட்டா தான் பேசுறேன், இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள கண்ணு கலங்குதே :-))

    போய் மணியாட்டி பஜனை செய்யும் ,பகவன் தொறப்பார் கண்ணை, இங்கே பெரியவங்க பதிவு போடுற இடத்தில எல்லாம் ஊடால வராம சமத்தா பொழப்பை பாரும்,இல்லைனா கதை கந்தல் ஆகிடும் ,வர்ரட்டா :-))

    ----------

    ஜெய தேவரு ரொம்ப மெர்சலாகிட்டதால் நாம் அவருக்கு மன அமைதியை தரவேண்டி அவருடனான உரையாடலை முடித்துக்கொள்கிறேன், அப்பால பின்னாடி பேசிக்கிட்டு இருந்தால் அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை!

    ReplyDelete
    Replies
    1. \\எது ஓய் தனி மனித தாக்குதல், அதைப்பற்றி நீர் பேசுவது செம வேடிக்கை, தனியா ஒரு பதிவு போட்டு தனி மனித தாக்குதல் செய்துவிட்டு,அதை டெலிட் செய்ததை எல்லாம் தான் பார்த்தாங்க. பேசினா தைரியமா பேசனும், சாதாரணமா பேசுவதற்கே வலிக்குதா :-)) \\ பின்னூட்டமிட்ட நண்பர்கள் மனது வலிக்கும் என்றார்கள் அதனால் நீக்கினேன், அதை எனது weakness என நினைக்கவேண்டாம். நீர் செய்யும் வாதத்தால் பிரயோஜனம் இருக்காது என்பதால் தவிர்க்கச் சொல்கிறேன், அர்த்தம் இருந்தால் இன்னும் ஆயிரம் பின்னூட்டங்களைச் சந்திக்கத் தயார். That is missing.

      Delete
    2. ஜெயதேவரே,

      // பின்னூட்டமிட்ட நண்பர்கள் மனது வலிக்கும் என்றார்கள் அதனால் நீக்கினேன், அதை எனது weakness என நினைக்கவேண்டாம்//

      பாருயா கத்தியால குத்திட்டு வலிக்கும்னு கத்திய உருவிக்கிட்டாரு :-))

      எம்புட்டு அடிவாங்கினாலும் வலிக்கலையேன்னு நீர் முதுகை நெளிச்சு வளைக்கிறதை மக்கள் பார்த்துண்டு இருக்கா ,அவாளுக்கே தெரியுங்க்ணா :-))

      //நீர் செய்யும் வாதத்தால் பிரயோஜனம் இருக்காது என்பதால் தவிர்க்கச் சொல்கிறேன், அர்த்தம் இருந்தால் இன்னும் ஆயிரம் பின்னூட்டங்களைச் சந்திக்கத் தயார். That is missing.//

      அடே நீர் பேசும் வாதத்தினை கேட்டு மானிட குலமே உய்வடையப்போகிறது , பேசாம ஒன்னு செய்யும் இதை எல்லாம் ஒரு கல்வெட்டில எழுதி தஞ்சாவூர் பெரிய கோவிலில் வைத்துவிட்டு பக்கத்துலயே குந்தும் , வரவங்க அறிவு வளர்ச்சியடையும் ...


      ஓ... நீர் வைணவ கோஷ்டியில்ல சிரி ரங்கத்துக்கு போயிடும் :-))

      Delete
  57. Did Muslims, Christians and Hindus agreed finally for a single God?

    After 183 comments, have you progressed even an inch, Mr.Jayadev?
    Isn't it frustrating that Theists are split over all issues?

    ReplyDelete
    Replies
    1. @Aathiga Tamilan

      As far as I am concerned, I don't have an iota of doubt as to who is God, how to reach him, what is the goal of life etc., Whatever path others are following it is left to the Supreme Lord seated in everyone's heart and the individual living being. Matter is over. Thanks for your coming!!

      Delete
  58. ///மேலும் பரிணாமம் என்றால் குரங்கு எல்லாம் மனிதனாகி இருக்க வேண்டும் [அல்லது எது எதாக மாறியதோ அது மட்டும் தான் இருக்க வேண்டும்], பார்த்தால் குரங்கும் இருக்கிறது, மனிதனும் இருக்கிறான். இது எப்படி?////

    பரிணாமத்தை விமர்சிக்க அதை கொஞ்சமேனும் படித்திருக்கணும் . அது எல்லாம் முடியாது நான் அதை படிக்க மாட்டேன் . ஆனால் லூசுத்தனமாக கேள்விகளை கேட்பேன் என்று அடம்பிடித்தால் எப்படி ..?
    வேண்டும் என்றால் ஒன்னு பண்ணுங்க . உங்க தளத்தின் மேலே எழுதி வச்சிருக்கீங்களே .அறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு.. என்று அதற்க்கு பதில் . இந்தியாவில் அறிவாளிங்க ரெண்டு பேறு .ஒன்னு நாகூர் பூரான் . இன்னொன்னு இந்த தர்மடி ஜெயதேவ் தாஸ் . அப்டீன்னு எழுதி வச்சுக்கங்க . நாங்களும் சிரிச்சி கிட்டு போயிடுவோம் .. ..........லாஜிக் கேள்வி கேக்குராராமாம் .

    ReplyDelete
    Replies
    1. அஞ்சா ஸிங்கம்,

      என்னங்க்ணா இப்படி சொல்லிட்டிக, மகா பெரியவா சு.பி.சுவாமிகள் வேற இப்போ பரிபூரண சைவமா மாறி ஆன்மீக குருவாகிட்டார், அவரை விட்டுப்புட்டு இவா ரண்டு பேரை மட்டும் சொன்ன பிரம்மஹத்தி தோஷம் ஆகிடாதோ :-))

      பாகவதமும், பகவத் கீதையும் படிச்சா போரும்ணா, பரிணாமம் எல்லாம் படிக்க வேணாம், பகவான் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம் தான் எடுத்திருக்கா குரங்கு அவதாரம் எடுக்கலை அதனால் குரங்கு பரிணாமம் அடையவில்லைனு ஶ்ரீமன் நாராயணன் சொல்லிட்டார் ,இனிமே நோ அப்பீல் யுர் கேஸ் இஸ் சம்மரில்லி ரிஜெக்ட்டட் :-))

      Delete
  59. \\ பரிணாமத்தை விமர்சிக்க அதை கொஞ்சமேனும் படித்திருக்கணும் . \\ அதை நீங்க செய்திருந்தா சார்வாகன் விடுறது எல்லாம் புருடான்னு எப்பவோ தெரிஞ்சுகிட்டு இருந்திருப்பீங்க!!



    \\அது எல்லாம் முடியாது நான் அதை படிக்க மாட்டேன் . ஆனால் லூசுத்தனமாக கேள்விகளை கேட்பேன் என்று அடம்பிடித்தால் எப்படி ..?\\ இதே லெவலுக்கு நானும் எழுத ரொம்ப நேரம் ஆகாது நீங்க வருத்தப் படுவீங்க.


    \\வேண்டும் என்றால் ஒன்னு பண்ணுங்க . உங்க தளத்தின் மேலே எழுதி வச்சிருக்கீங்களே .அறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு.. என்று அதற்க்கு பதில் .\\ டார்வின் தியரி அறிவியல்ன்னு பைத்தியாக் காரன் நினைப்பானா? அது அறிவியலா இருந்தா அதை நீங்க நம்புரீங்கலான்னு ஊர் ஊருக்கு வாக்கெடுப்பு கருத்து கணிப்பு நடத்திகிட்டு இருக்கனுன்களே ஏன்னு யோசிக்க வேண்டாமா?

    \\இந்தியாவில் அறிவாளிங்க ரெண்டு பேறு .ஒன்னு நாகூர் பூரான் . இன்னொன்னு இந்த தர்மடி ஜெயதேவ் தாஸ் . \\ அஞ்சா அசிங்கம்னு உங்களை சொல்ல அதிக நேரம் ஆகாது நண்பரே.

    \\அப்டீன்னு எழுதி வச்சுக்கங்க . நாங்களும் சிரிச்சி கிட்டு போயிடுவோம் \\ பைத்தியக்காரன் சும்மாவே சிரிப்பான், அவனுக்கு இது மாதிரி காரணம் வேற தேவையா?


    ..\\ ..........லாஜிக் கேள்வி கேக்குராராமாம் .\\ அது உம்மகிட்ட இல்லாதது அதுக்கு தலையில கிட்னி இருக்கிறவனுக்கு மட்டும் தான் வரும்.

    ReplyDelete
  60. @ வவ்வால்

    \\பாருயா கத்தியால குத்திட்டு வலிக்கும்னு கத்திய உருவிக்கிட்டாரு :-))\\ அதுதான் தூக்கிட்டேன்ல அப்புறம் எதுக்கு வலிக்குது வலிக்குதுன்னு புலம்புரீறு. இது மாதிரி தானே நீர் மத்தவங்களையும் அழ வக்கிறீரு? நீர் எதையோ எழுத ஒரு மனுஷன் நாலு நாளா ராத்திரி பகலா வேதனைப் பட்டிருக்கான்யா, தெரியுமா உமக்கு? .

    அதுசரி, நான் எழுதுவது எதுக்கும் ஆகதுங்கிறீங்க, அப்புறம் பிரயோஜனம் இல்லாத எடத்துல எதுக்குய்யா முன்னூறு கமண்டு எழுதிகிட்டு இருக்கீரு? நீர் தண்டச் சோறுன்னு நிரூபிக்கவா?

    ReplyDelete
  61. ஜெயதேவரு,

    நல்லா சமாளிக்கிறீர், நான் சொன்னது குத்துன உமக்கு வலிக்குதாம்னு, நமக்கு இல்லை, எனக்கு கொசு கடியெல்லாம் சகஜம் :-)))

    நீர் தனிமனித தாக்குதல் நடத்திட்டு என்னை பார்த்து அப்படி செய்வதாக சொன்னதால் சொன்னது.

    நாலு நாளா தூங்கலையா கடன் தொல்லையா இருக்கும் :-))

    அதுக்கெல்லாம் நான் தான் காரணமா?

    கரண்ட் இல்லாம நாட்டுல கொசுக்கடியால லட்சக்கணக்கான பேரு நிம்மதியா தூங்க முடியலை அதுக்கெல்லாம் காரணம் கொசுவை படைச்ச உம்ம பகவான் தான் சொன்னா நீர் ஒத்துப்பீரா?

    பிரயோஜனம் இல்லாம எழுதுவதாக நீரே ஒத்துக்கொண்டதற்கு நன்றி!

    அப்புறம் ஏன் இந்த வலைப்பதிவு தூக்கிட்டு ,சப்ளாக்கட்டை அடிக்க போறது தானே :-))

    ஆடு தானா கசாப்புக்கடைக்கு வரும் போது விட முடியுமா, அதான் குனிய வச்சு வெட்டுறோம். முடிஞ்சா பொழைச்சு ஓடிப்போயிரும், சும்மா மூக்கை சிந்திக்கிட்டு அழுவாச்சி நாடகம் போட வேண்டாம்.

    நீர் புலம்ப ஆரம்பிச்சதும் சரி பொழச்சு போகட்டும்னு விட்டேன் அப்புறம் திடீர்னு ரோஷம் வந்து எதுக்கு பினாத்தினீர் நீர் உஞ்சவிருத்தி செய்து பொழைப்பதை நிறுபிக்கவா? , இப்பவும் பொழச்சு போகட்டும்னு விடுகிறேன் ,கண் காணாத இடத்தில் பஜனை பாடிக்கொள்ளவும் :-))

    ReplyDelete
  62. @ வவ்வால்

    \\எனக்கு கொசு கடியெல்லாம் சகஜம் :-)))\\ சொரனையே இல்லியே, அப்புறம் அதெல்லாம் எப்படி தெரியும்.

    \\அப்புறம் ஏன் இந்த வலைப்பதிவு தூக்கிட்டு ,சப்ளாக்கட்டை அடிக்க போறது தானே :-))\\ வேஸ்டா யாரெல்லாம் பிளாக் போடுறான்னு கண்டு புடிக்கிற வெட்டியான் வேலையை உனக்கு எவன்யா குடுத்தான்?

    \\ஆடு தானா கசாப்புக்கடைக்கு வரும் போது விட முடியுமா, அதான் குனிய வச்சு வெட்டுறோம். முடிஞ்சா பொழைச்சு ஓடிப்போயிரும், சும்மா மூக்கை சிந்திக்கிட்டு அழுவாச்சி நாடகம் போட வேண்டாம்.\\ நீரு எனக்கு கருணை காமிக்கிறீரா? காமடி பன்னாதேய்யா........

    \\நீர் உஞ்சவிருத்தி செய்து பொழைப்பதை நிறுபிக்கவா?\\ இதென்னது புது வார்த்தை, ஓஹோ தமிழ் வாத்தியில்ல. உன்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கு. I don't care.

    ReplyDelete
  63. வணக்கம்
    அறிமுகப்படுத்தியவர்-கும்மாச்சி


    வாழ்த்துக்கள்

    பார்வையிடஇதோ முகவரி-வலைச்சரம்


    -நன்றி-


    -அன்புடன்-


    -ரூபன்-

    ReplyDelete