Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Sunday, June 10, 2018

மனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன?


தேதி: 14 நவம்பர் 2013
பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ராஜேஷ் குமாரிடம் தனது SBI ATM கார்டை கொடுத்து பணம் எடுத்து வர அனுப்புகிறார். கணவர் ரூ.25 ஆயிரம் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது இயந்திரத்தில் இருந்து பணம் வழங்கப்பட்டுவிட்டதாக ரசீது மட்டும் வந்துள்ளது, ஆனால் பணம் வரவில்லை!!
உடனே ராஜேஷ் குமார் 24 மணி நேர கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டுள்ளார், அவர்கள், 'பணம் வராதது ATM ஃபால்ட், அதனால் உங்கள் பணம் உங்கள் வாங்கிக் கணக்குக்கே திரும்பி வழங்கப் படும்" என்று சொல்லி வைத்து விட்டனர். ஆனால் ரெண்டு நாளாகியும் பணம் வராததால் சம்பந்தப் பட்ட வங்கிக்கே ராஜேஷ் குமார் சென்று புகார் கொடுக்க, வங்கியினரோ, தவறேதும் நடக்கவில்லை பணம் வழங்கப் பட்டுவிட்டது என்று தெரிவிக்க, கணவனும் மனைவியும் ஷாக்காகிப் போயினர்.
பின்னர், எங்கெங்கோ அலைந்து திரிந்து அந்த ATM மில் இருந்த கேமராவில் ராஜேஷ் குமார் பணமெடுத்த CCTV FOOTAGE ஐப் பெற்றனர். அதில் பணம் வராதது தெளிவாகப் பதிவாகியிருந்தது. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அன்றைய தேதியில் 25000 ரூபாய் கணக்கை விட அதிகமாக இருந்ததாக தகவலையும் அவர்கள் பெற்றனர்.
அதைப் பார்த்த வங்கியினரோ, "வந்தனாவோட கார்டில் பணம் எடுத்ததாகச் சொல்லறீங்க ஆனால் இதில் வந்தானா ஆளே இல்லையேய்யா" என்று கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.
"நானே குழந்தை பிரந்ததால் வெளியே போகமுடியாமத்தானே ஏன் வீட்டுக்காரை அனுப்பி பணம் எடுத்துக்கிட்டு வராச் சொன்னேன் அப்புறம் அந்த ATM கேமராவில் நான் எப்படி இருப்பேன்?" என்று வந்தனா கேட்டிருக்கிறார்.
அதற்கு "அம்மணி, நாங்க இந்த கார்டும், PIN நம்பரும் உங்களுக்கு கொடுத்தது நீங்க பயன்படுத்த மட்டும் தான், அவற்றை இன்னொருத்தர்கிட்ட (அது உங்க கணவராவே இருந்தாலும்) குடுத்தது தப்பு, தப்பை உங்க மேல வச்சிக்கிட்டு நீங்க எங்க மேல எந்த கேசும் போட முடியாது" என்று திருப்பி அடித்திருக்கின்றனர்.
"அப்போ எனக்கு உடம்புக்கு முடியலைன்னா என்ன பண்றது?"ன்னு வந்தனா கேட்க அதுக்கு
"நீங்க ஒரு SELF Signed செக் கொடுத்தனுப்பி வங்கியில் பணம் எடுத்திருக்கலாம், அல்லது உங்களால் வர இயலாமையையும், உங்கள் கணவர் உங்கள் கணக்கை இயக்க நீங்க அனுமதிக்கிறீர்கள் என்பதையம் கடிதம் மூலம் வங்கிக்கு தெரிவித்து உங்கள் கணவரை வங்கிக்கு அனுப்பி பணம் பெற்றிருக்கலாம், அதை விடுத்து PIN நம்பரை கணவரிடம் தெரிவித்தது விதி மீறல்" என்று SBI ஆணித்தரமாகத் தெரிவித்து விட்டது. அது மட்டுமில்லாமல், அன்றைய தேதியில் அந்த ATM மில் 25000 எக்ஸஸ் ஆக ஒன்னும் இல்லைன்னும் கணக்கு காண்பித்திருக்கின்றனர்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் கணக்கு வைத்திருப்பவரின் அனுமதிக் கடிதம் இன்றி ஒருவரது ஏடிஎம் அட்டையை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
நீதி: கணவன் மட்டுமல்ல வேறு யாரும் இன்னொருத்தர் ATM கார்டை உபயோகித்து பணம் பெறக்கூடாது,உங்களால் வெளியில் செல்ல இயலாது என்ற நிலையில் Self signed செக் அல்லது அனுமதி கடிதம் மூலமே உங்கள் கணக்கை இயக்க வேண்டும். இதை மீறி நடக்கும்போது, தவறு ஏதேனும் நேர்ந்தால் சல்லி பைசா திரும்ப கிடைக்காது.

Thursday, November 19, 2015

நாங்கள் நிறைய அணைகள் கட்டியுள்ளோம்

 நாங்கள் நிறைய அணைகள் கட்டியுள்ளோம் அப்படின்னு யாரோ சொல்றாங்க, ஆனாலும் ஒன்னு கூட நம்ம கண்ணுக்குத் தெரியலையே?  என்ன காரணம்?


இந்த நேரத்தில் சம்பந்தேமேயில்லாமல் எல்லோரும் அறிந்த ஒரு சின்ன கதை, ஞாபகத்திற்கு வருகிறது. 

ஒருமுறை இந்திய அமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டு அமைச்சருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அந்த வெளிநாட்டு மந்திரி சொன்னார் “சார் அதோ தெரியுது பாருங்க அணை அந்த அணையை  நான் தான் டெண்டர் எடுத்து கட்டினேன். அதில் வந்த வருமானத்தை வைத்து தான் இந்த வீட்டை கட்டினேன்”

“ஓ அப்படியா மகிழ்ச்சி. அணையும் வீடும் அழகாக உள்ளது ”பாராட்டினார்.

பின்னர் ஒருமுறை அந்த வெளிநாட்டு அமைச்சர் இந்தியா வந்து அமைச்சரை சந்தித்தார்.

பில்கேட்ஸ் பங்களாவைவிட மிகப்பெரிய பங்களாவில் சந்திப்பு. பங்களாவின் அழகில் மயங்கியே போனார் அமைச்சர்.

எங்க நாட்டு பங்களாவைவிட மிக அழகாக கட்டியுள்ளார்கள் என பாராட்டினார்.

“இது யாருடையது?”

“என் பங்களாதான் “

 “வாவ் வெரி நைஸ். எப்படி கட்டினீங்க?”

“அதோ தெரியுது பாருங்க அந்த அணையை  நான் தான் கட்டினேன். அதில் கிடைத்த தொகையை கொண்டுதான் இதை கட்டினேன்”

வெளி நாட்டு அமைச்சர்”- “அங்க எந்த பாலமும் தெரியலையே?”
நம்ம அமைச்சர் கூலாக பதில் சொன்னார்....

“நீங்க அணையை  கட்டிவிட்டுதான் அதில் வரும் வருமானத்தை எடுப்பீங்க....நாங்க அணை கட்டாமலே முழுசா சுட்டிடுவோம் இல்ல.....”

Friday, August 21, 2015

காபி செய்ய அனுமதிக்காத இணைய பக்கங்கள்- உடைப்பது எப்படி?

சில இணைய பக்கங்களில் ஒரு சங்கதி வெகுநாட்களாகவே எரிச்சலூட்டவதாக இருந்து வந்தது.  உதாரணத்துக்கு தினமலர் இணைய பக்கங்களைப் படிக்கும் போது சுவராஷ்யமான விஷயங்கள் இருந்தால் அதில் ஓரிரு வரிகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து காபி செய்ய முயன்றால் அது அனுமதிக்காது.  ரைட் கிளிக்,  லெஃப்ட் கிளிக் என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கோ வேலைக்கே ஆகாது என்று சொல்லும்.

நேற்று எதுயெதுக்கோ தீர்வு தரும் கூகுளாண்டவர் இதுக்கு ஒரு வழி சொல்ல மாட்டாரா என்று முயன்றேன், தேடலுக்குப் பின்னர் தெரிந்தது......  ஆம்....... "தீர்வு இருக்கிறது"!!

பொதுவாக தற்போதுள்ள இணைய உலவிகள் [Web Browsers] அனைத்தும் ஜாவா ஸ்க்ரிப்ட் என்னும் செயலிகளை அவற்றினுள்ளேயே இருந்து செயல்பட அனுமதிக்கின்றன.  அதிலுள்ள கோட்கள் மூலம் இணைய உளவிகள் பல்வேறு செயல்களை மேற்கொள்கின்றன.  இந்த ரைட் கிளிக்,  லெஃப்ட் கிளிக் செய்தால் செலக்சன்/காபி செய்யாதே என்ற கட்டளையை மேற்கொள்வதும் இதே ஜாவா ஸ்கிரிப்டுகள் தான்.

எனவே காபி செய்வது தடுக்கப் பட்டுள்ள ஒரு இணைய பக்கத்தில் உள்ள வாக்கியங்களையோ, படங்களையோ காபி செய்ய வேண்டுமானால் முதலில் இந்த ஜாவா ஸ்கிரிப்டு பயலை "செத்த சும்மா இருடா......" என்று ஓரங்கட்ட வேண்டும்.  காபி செய்து முடிந்த பின்னர் மீண்டும் அவனை செயல் பட அனுமதிக்க வேண்டும், இல்லா விட்டால் இணைய பக்கத்தில் நடக்க வேண்டிய மற்ற மாமூல் செயல்பாடுகள் பாதிக்கப் பட்டுவிடும்.  இதற்கான வழி முறைகள் ஒவ்வொரு பிரவுசருக்கும் மாறுபடும். இதை எளிய முறையில் விளக்கமாக கீழுள்ள இணைய பக்கத்தில் கொடுத்துள்ளார்கள்.  படித்து உங்கள் உலவிக்கு எது தேவையோ அந்த முறையை செயல் படுத்திக் கொள்ளலாம்.

How to Bypass Right Click Block on Any Website

இதில் ஒவ்வொரு முறையும் ஜாவா செயலிகளை நிறுத்துவதும், பின்னர் செயல்படுத்துவதும் அசவுகரியமாக இருக்கலாம்.  இதைவிட எளிதான வழி உள்ளதா என்றால், இருக்கிறது ஆனால் அது Firefox Browser க்கு மட்டும் உள்ளது.
  
"RightToClick" என்ற ADD-ON ஐ Firefox Browse-ல் நிறுவ வேண்டும்.  எப்படி? அதற்கு Firefox பிரவுசரைத் திறந்து இந்த இணைய பக்கதிற்குச் சென்று Add to Firefox ஐச் சொடுக்கவும்.


சில நொடிகளில் உங்கள் பிரவுசர் தரவிறக்கம் செய்து, "RightToClick" -ஐ நிறுவலாமா என்று அனுமதி கேட்கும், ஆமாம் என்று சொல்லுங்கள்.


நிறுவியதும் உங்கள் உலவியை மூடி பின்னர் மீண்டும் திறக்க வேண்டும். உலவியில் மேலே வலது மூலையில் ஒரு அம்புக் குறி தென்படும்.  காபி செய்ய அனுமதியில்லாத இணைய பக்கத்தை திறந்து, இந்த அம்புக் குறியின் மேல் சொடுக்கினால் போதும், வழக்கம் போல செலக்ட், காபி, வேண்டிய இடத்தில் பேஸ்ட் அனைத்தும் செய்யலாம்.  இம்முறையில் படங்கள், வார்த்தைகள் [Text] அனைத்தும் காபி செய்ய முடியும்.


இதை தங்களது சொந்த பயன்பாட்டுக்கு மட்டும் உபயோக்கிக்கவும், வேறோரோவர் படைப்பை மொத்தத்தையும் அனுமதியின்றி காபி செய்து தங்களது இணைய பக்கத்தில் போடுபவர்கள் தயவுசெய்து தவிர்க்கவும்.  நன்றி.............!! 

Monday, February 9, 2015

2015 பிப்ரவரி 823 வருடங்களுக்கு ஒரு முறை தான் வருமா?




இந்த 2015 பிப்ரவரியில் 4 ஞாயிறு 4 திங்கள் 4 செவ்வாய் 4புதன் 4 வியாழன் 4 வெள்ளி 4 சனிக் கிழமைகள் வருதாம்.! இது 823 வருடங்களுக்கு ஒரு முறை தான் வருதாம்.! இதை சீனாவில் பணப்பை வருடம் என்பார்களாம்..
இந்த செய்தியை 5 க்ரூப்புகளில் 11 நிமிடங்களுக்குள் நாம் பங்கிட்டு கொண்டால் 4 நாட்களுக்குள் நமக்கு பணம் கொட்டுமாம்.. இப்படி ஒரு அபத்தமான செய்தி வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது..
நம்ம ஆட்களும் அதை வைரல் ஃபீவராக பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.! அட அப்பாவிகளா.! இந்த பிப்ரவரி 1ம் தேதி ஞாயிறு, 28ம் தேதி சனிக் கிழமை.. இது மாதிரி வர எதுக்குப்பா 823 வருஷம் காத்திருக்கணும்..! வெறும் 6 வருடம் போதுமே.!
2009 & 2003 ஆம் ஆண்டு காலண்டரை பார்க்கவும்..! முகனூல் காலத்திலும் மூட நம்பிக்கைகளை வலைத்தளங்களில் இது போல பரப்புவது நாம் தான்.. இனியாவது இது போல ஆதாரமில்லாத செய்திகளைப் பரப்ப வேண்டாமே.

‪#‎கோடி_பெரியார்_வேணும்_போல‬

Monday, December 15, 2014

சாவி திருடும் காட்சியின் ஒரிஜினல் ஸீன்

Wednesday, August 28, 2013

மைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்!!

அன்புள்ள மக்கள்ஸ்,

இன்றைக்கு மைதாவைப் பத்தி ஒரு பதிவில் பார்த்தோம்.  [சுட்டி] நாமும் கிட்டத்தட்ட இதே விபரங்களோடு ஒரு பதிவும் போட்டிருக்கிறோம்.   நாட்டில சில நல்ல உள்ளங்கள் இருக்கு.  அதுங்க என்ன பண்ணும்னா அப்படியே "குறு....குறுன்னு ........" கம்பியூட்டரையே வச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டு இருக்கும்.  எதாச்சும் உடல் நலனுக்கு கெடுதல்னு பதிவு வந்தா, அதெல்லாம் ஒண்ணுமில்ல, நல்லதுதான், அமரிக்காவில் அப்படி, ஆப்பிரிக்காவில் இப்படின்னு போட்டு படிக்கிறவங்களை குழப்பிவிட்டு, சரி ஒண்ணுமில்லை போலிருக்குன்னு நினைக்கிற நிலைக்கு தள்ளி விட்டு விடுவார்கள்.  பதிவோட நோக்கத்தையும் கெடுத்த மாதிரி ஆச்சு, நாலு பேரு நாசமா போனாங்கலேன்னு மனசுக்குள்ள ஒரு குரூர சந்தோசம். அது போகட்டும், கழுதை.  நாம இப்ப விஷயத்துக்கு வருவோம்.  இன்னைக்கு நாம் படிச்சதில் மைதா தயாராவது எப்படி என விளக்கியுள்ளார்கள்.  அதை இங்கே தருகிறோம்.  அதுசரி, மேட்டர் என்னன்னு நீங்க கேட்பீங்க!!  [என்னது கேட்க மாட்டீங்களா?!  அதானாலென்ன, கேட்டீங்கன்னே வையுங்களேன்!!]  அதில்தான் நமக்கு தீராத சந்தேகம் ஒன்னு இருக்கு, கொஞ்சம் பொருங்க!!

 ------------------------------------------------------------------------------------
 மைதா தயாரிப்பு முறை:

முதலில் கோதுமையை நன்றாக தீட்டுகிறார்கள். கோதுமையில் இருந்து தவிடும் நுண்ணுயிரிகளும் தீட்டுதலின் மூலம் நீக்கப்படுகின்றன. பின்னர் அதை மாவாக அரைக்கிறார்கள். அந்த மாவு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர் அந்த மாவில் பென்சாயில் பெராக்சைடு (BENZOYL PER OXIDE) எனும் வேதிப்பொருளை கலக்குகிறார்கள். இந்த வேதிப்பொருள் கோதுமை மாவில் உள்ள மஞ்சள் வண்ணத்தை நீக்கி தூய வெண்மையாக மாற்றுகிறது. 

         இந்த வேதிப்பொருள் ஒரு நச்சாகும். தலைமுடியை கறுப்பாக மாற்றும் சாயத்தில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் இது. இது மைதாவில் உள்ள மாவுப்பொருளுடன் இணைந்து உருவாக்கும் நச்சுப்பொருள் சர்க்கரை வியாதிக்கு காரணியாகிறது. மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது கலக்கப்பட்டவுடன் மைதா வெகுமிருதுவாக மாறுகிறது. 

               சர்க்கரை வியாதிக்கு மருந்து தயாரிக்கும் ஆலைகளில் உள்ள சோதனைச்சாலைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் முதலில் வெள்ளெலி, சிறுபன்றி, குரங்கு ஆகிய விலங்கினங்களிடம் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. இந்த மிருகங்களுக்கு சர்க்கரை வியாதியை உண்டாக்க இந்த அல்லோக்சான் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த அல்லோக்சான் சேர்க்கப்படும் மைதாவை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகத்தானே செய்யும். 

              இவை தவிர மைதாவில் செயற்கை வண்ணங்கள், தாது எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதனப்பொருட்கள், வெள்ளை சீனி, சாக்கரின், அஜினோமோட்டோ ஆகிய பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை மைதாவை மேலும் அபாயகரமானதாக மாற்றுகின்றன. இவை தவிர குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரேட் போன்றவைகளும் கலக்கப்படுகின்றன. கோதுமை தீட்டப்படும் போதே 76 விழுக்காடு வைட்டமின்களும், தாது பொருட்களும் அகற்றப்படுகின்றன. அத்துடன் 97விழுக்காடு நார்ச்சத்தும் களையப்படுகிறது. களையப்பட்ட சத்துகளை மீண்டும் சேர்க்க செயற்கையாக உருவாக்கப்படும் வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் கூட்டப்படுகின்றன. ஆனால் இவை இயற்கையாக கிடைப்பவற்றுக்கு இணையானவை அல்ல. 
----------------------------------------------------------------------------------------
சரி இப்போ நம்ம சந்தேகத்துக்கு வருவோம்.  [இதை தீர்த்துட்டா ஆயிரம் பொற்காசு தருவியான்னு கேட்டுடாதீங்க, ஆயிரம் பைசா வேணா தாரேன்!!].  மேலே உள்ள வரிகளில் இருந்து சில [விஜயகாந்த் மாதிரி] சில புள்ளி விவரம்!!
முதலில் கோதுமை அரைக்கப் படுகிறது- அரைக்க செலவு ஆகும்.
அதுக்கப்புறம் அதில்  பென்சாயில் பெராக்சைடு கலக்கிறாங்க என்றால், அந்த கெமிக்கலை எவன் சும்மா தருவான், அதுக்கும் பணம் செலவாகும்.
மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.-  ஹி ....... ஹி ....... ஹி .......  உங்களுக்கே புரிஞ்சிருக்கும், அல்லோக்சான் நம்ம மாமனோ மச்சானோ ஃபேக்டரியில் தயார் பண்ணமாட்டன், அதை வாங்கித்தான் பயன்படுத்தணும். அதுக்கும் காசு செலவாகும்.
அது மட்டுமா,
செயற்கை வண்ணங்கள், 
தாது எண்ணெய்கள், 
சுவையூட்டிகள், 
 பதனப்பொருட்கள், 
வெள்ளை சீனி, 
சாக்கரின், 
அஜினோமோட்டோ 
என மேலும் அரை டஜன் அயிட்டங்கள் சேர்க்கிறாங்கலாம்.  எம்புட்டு செலவாகுமோ!!
இத்தனையும் படித்த பின்னர் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுந்தது.  கீழே உள்ள படத்தை பாருங்க.

அப்படியே அரைச்சு விற்கப்படும் கோதுமை கிலோ 47 ரூபாய்,  ஆனால் அத்தனை கெமிக்கல்கள் [அது நல்லதோ கேட்டதோ] சேர்த்து, அரைத்தல் பிரித்தல் என என்னென்னமோ பிராசஸ் பண்ணி வரும் மைதா அதை விட விலை குறைவாய் கிலோ ரூ.36 -க்கே கிடைப்பதெப்படி?  விளங்கலையே?


 

Friday, May 10, 2013

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

அன்புள்ள மக்கள்ஸ்,

பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

 

 அந்த கூட்டு பெருங்காயம் .....

 இந்த கூட்டு பெருங்காயம் .....

 

அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.

இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம். 

 அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?

 

ஒரு வகையான அராபிய பிசின் 60%, 

மைதா 30%, 

பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10% 

இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம்.  இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா?  அது தான் இல்லை.  "பெருங்காய டப்பாக்களின்  மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால்  நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன்.  அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ........... 

 

படத்திற்கு நன்றி: ஆயுர்வேத மருத்துவம்


இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

வயிறு புண்ணாகும்....
வயிற்றில்  வாயு அதிகமாகும் ..
நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும் ...

பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.

இதைப் பத்தி ஒரு  பதிவை பார்த்தேன், நான் ரசித்தவை லிஸ்டில் போடலாம்னு நினைச்சேன், பிரச்சினையின் தீவிரம் காரணமாக லிங்கை தனிப் பதிவாக போட முடிவு செய்தேன்.  இதை தெரிந்தவர்கள் எல்லோருடனும் மெயில் மூலமாகவோ, அல்லது வாய்மொழி மூலமாகவோ கூட பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

Wednesday, May 1, 2013

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்காக............





குழந்தைகள் முன்னைலையில் செய்யக்கூடாதவை!!!
************************************************

*கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

*தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

*குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

*குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.


_________________________________________________

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...

*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...

*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...

*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...

*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...

*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...

*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது...

*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...

*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது...

4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...!
 
நன்றி:  Facebook 

Sunday, April 28, 2013

ஹார்ட் அட்டாக்: எப்ப வரும், எப்படி வரும்னு தெரியாது...........

வணக்கம் மக்கள்ஸ்!!

எங்கள் ஊரில் ஒரு பையன், வயது முப்பதுக்குள்தான் இருக்கும்.  திருமணமாகி ஒரு கைக்குழந்தை இருக்கிறது.  ஒருநாள் திடீரென மாரடைப்பு, அகால மரணம்.  இவனுக்கு மாரடைப்பு வருவதற்கு காரணம் இருக்கிறது.  எங்கள் ஊரில் வாரம் இரு முறை ஆடு கசாப்பு போடுவார்கள், புதன், ஞாயிறு.  இரண்டுநாளும் இவன் வாங்குவான், இவன் மட்டுமே அரைக்கிலோ உள்ளே தள்ளுவான்.  அது மட்டுமல்ல கோழியும் அவ்வப்போது முழுதாகத் தள்ளுவான்.  ஆனால், உடல் உழைப்பு அவ்வளவாகக் கிடையாது, துணிக்கடையில் உட்கார்ந்தபடியே கஷ்டமர்களுக்கு துணியை கட் பண்ணி விற்பது தான் இவரது வேலை.  சின்ன வயசில் செத்துட்டனே என்ற வருத்தம் இருந்தாலும் இவ்வளவு சின்ன வயதில் இவனுக்கு ஏன் மாரடைப்பு வந்தது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆக தவறான உணவுப் பழக்கம், தேவைக்கு மீறி கொழுப்பு வகைகளை உண்ணுதல் போதிய உடலுழைப்பு இல்லாமை -இவைதான் மாரடைப்பு இளவயதில் வருவதற்கான காரணம் என்று நானும் வெகு நாட்களாக நம்பியிருந்தேன்.  ஆனால் இந்த நினைப்பைத் தவறு என்று உணர்த்துகின்ற வகையில் சமீபத்திய சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

சில வாரங்களுக்கு முன்னர் செய்தித் தாள்களில் படித்த ஒரு செய்தி வியப்பாக இருந்தது. 45 வயதை நெருங்கும் யோகா சொல்லித் தரும் மாஸ்டர் ஒருவருக்கு மாரடைப்பு.  இவர் யோகா கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாது தானும் தீவிரமாக பயிற்சி செய்பவர், அசைவம் உண்ணுவதில்லை, வெஜிடேரியன் உணவை பிராச்சாரமும் செய்பவர்.  இப்படிப் பட்ட ஒருத்தருக்கு மாரடைப்பா....??  இது எதைக் கொண்டும் புரிந்துகொள்ள முடியாத விந்தையாகப் பட்டது.

இந்த குழப்பத்தில் இருந்து மீழும் முன்னர் இதே மாதிரி ஒரு சம்பவம் ஓரிரு தினங்களுக்கு முன்னர் எங்கள் அலுவலக முன்னால் ஊழியர் ஒருவருக்கும் நடந்திருக்கிறது.  வயது முப்பதை நெருங்குகிறார்.  தனியார் மென்பொருள் நிறுவனத்தில்  நல்ல வருமானம், சுத்த சைவம், ஜிம் அது இதுன்னு போய் உடலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக் கூடிய பையன், திருமணத்திற்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள், சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது.  இது எதனால் நடந்திருக்கக் கூடும் என்று எங்களால் இன்னமும் யூகிக்கவே முடியவில்லை.

புவனேஷ்- எங்கள் அலுவலக முன்னாள் ஊழியர், சில தினங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்தார், காரணம் மாரடைப்பு.   இவரைப் பார்த்தால் மாரடைப்பு வந்து பொசுக்கென்று போயிடுவார் என்பது போலவா தெரிகிறது? 

எனவே, மென்பொருள் துறையில் வேலை பார்க்கும் கண்மணிகளே, ஹார்ட் அட்டாக் என்பது எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது, ஆனா வந்திட்டா ஒன்னும் பண்ண முடியாது.  நான் சைவம்தானே சாப்பிடறேன், நல்லா எக்சர்சைஸ் எல்லாம் பண்றேனே, எங்க வீட்டில் யாருக்கும் ஹார்ட் அட்டாக் வந்ததே இல்லையே..........  இதெல்லாம் மறந்திடுங்க. உங்கள் இதயம் நலமாக இருக்கிறதா என்பதை வருடத்திற்கு ஒரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது, உங்களில் 99.99% பேர் நலமுடன்தான் இருப்பீர்கள், இருப்பினும்  யாரவது ஒருத்தருக்கு பிரச்சினை இருந்தால் தவிர்க்கக் கூடிய நிலையிலேயே அதை சரி செய்து கொள்வது நல்லது.

மீண்டும் சந்திப்போம் வணக்கம் மக்கள்ஸ்!!

Wednesday, April 24, 2013

இறந்தவர் உடலை தகனம் செய்யும் முன்னர் குளிப்பாட்டுவது எதற்கு?


மதுரை மாவட்டம், திருமங்கலம்
அருகே உள்ள தும்மக்குண்டை சேர்ந்தவர்
அசோகன் (வயது 45).
இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள்
உள்ளனர். அசோகன் தி.மு.க. கிளைச்
செயலாளராக இருந்து வருகிறார்.
கடந்த சில
நாட்களுக்கு முன்பு அசோகனுக்கு திடீர
மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே உறவினர்கள் அவரை மதுரையில்
உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால்
சிகிச்சை பலனின்றி அசோகன்
நேற்று மதியம் இறந்து விட்டதாக
அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்
கூறினர்.
இதையடுத்து உறவினர்கள்
அவரது உடலை சொந்த
ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கிற்
ஏற்பாடுகளை செய்தனர் அசோகனின் உடல்
ஊர்வலமாக
மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதில் உறவினர்கள், கட்சியினர்
கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி
மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட
அவரது உடலை தகனம்
செய்வதற்கு முன்பு அசோகனின் உடல்
மீது தண்ணீர் ஊற்றப்பட்டது.
அப்போது அவரது உடல் அசைந்தது.
சிறிது நேரத்தில் அவர்
எழுந்து அமர்ந்தார். இதைப்பார்த்த
அவரது உறவினர்கள்
அங்கிருந்து அலறியடித்துக்
கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும் அவரது மனைவி கணவர்
உயிரோடு தான் இருக்கிறார்
என்று மிகவும் சந்தோஷப்பட்டு ஆனந்த
கண்ணீர் வடித்தார். பின்னர் அவர்
அசோகனுக்கு பழச்சாறு கொடுத்தார்.
அதைக் குடித்த அவர் தான் நன்றாக
இருப்பதாக கூறினார்.
இதையடுத்து உறவினர்கள்
அசோகனை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
டாக்டர்களால் இறந்து விட்டவர்
என்று கூறப்பட்டவர்
உயிரோடு எழுந்து உட்கார்ந்த அதிசயம்
அப்பகுதியில்
ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள து.
கடந்த சில
நாட்களுக்கு முன்பு இதே போல்
டி.கல்லுப்பட்டி ,
மீனாட்சி புரத்தை சேர்ந்த நடராஜன்
மாரடைப்பால் இறந்து விட்டதாக
அதே தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள்
கூறினார்கள். ஆனால் அவருக்கும்
இறுதி சடங்குகள் செய்த போது, மீண்டும்
உயிர் பிழைத்தார்.
நன்றி:
என்ன ராக்கம்மா,மாமனுக்கு அஞ்சு ஆறு கஞ்சி கிஞ்சி உதுறது ?!?
 [Facebook]
 

Monday, March 25, 2013

நோய்களில் இருந்து நம்மை காக்க இயற்கை வழி விவசாய விலை பொருட்கள்-வழி கட்டும் இளைஞர்.

அன்புள்ள மக்கள்ஸ்,

இன்று Facebook கில் உலாவிய போது மன நிறைவைத் தரும் ஒரு செய்தி கண்ணில் பட்டது. சுட்டி.  கைநிறைய சம்பளம் வாங்கும் இளைஞர் ஒருவர் மன நிறைவு கிடைக்காமல் விவசாயத்திற்கு திரும்பிய கதை.  அதுவும், பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள் போடாத விவசாயம்!! நிலங்களை பிளாட்டு போட்டு விற்கும் இக்காலத்தில் இப்படி ஒருவர்.  இவர் மாதிரி ஊருக்கு ஒருத்தர் இருந்தா எப்படி இருக்கும்!!  நம்ம நாடே சொர்க்கமாயிடும். அவர் பெயர் ரூசோ.  ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை உதறித் தள்ளியவர் இன்றைக்கு மாதம் 15 லட்சம் சம்பாதிக்கிறார், 40 பேருக்கு வேலை தருகிறார், மக்களுக்கு விஷமற்ற உணவுப் பொருட்களையும் தருகிறார்!


லட்சம் டன்களில் கொட்டப் படும் பூச்சி மருந்துகளும், ரசாயன உரங்களும் தான் இன்றைக்கு திரும்பிய பக்கமெல்லாம்  பரவியிருக்கும் சர்க்கரை, கேன்சர், உயர் இரத்த அழுத்தம் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான காரணமாகும்.  இதை எந்த டாக்டரும் வெளியில் சொல்ல மாட்டான், சொன்னா அவன் பிழைப்பில் மண் விழும்.   பல கொடிய நோய்கள் வருவதற்கு நாம் உண்ணும் விஷ உணவே காரணம். இவற்றுக்கு மாற்று வழி இயற்க்கை வழியில் விளைவிக்கப் பட்ட உணவுகளை வாங்கிப் பயன்படுத்துவது தான்.  அந்த புனித பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மாதிரி நல்ல ஆத்மாக்க்களை ஆதரிக்க வேண்டும், அதன் மூலம், நம்மையும் நாட்டையும் காத்துக் கொள்ள முடியும்.  


இவரைப் பற்றி படித்தவுடன் இவரது வலைத்தளம் இருக்கிறதா எனத் தேடித் பார்த்தேன், இருக்கிறது:  சுட்டி.




" Raasi Eco Organic Pvt Ltd "
Rousseau

1275 6th main road, thiruvalluvar nagar,
thiruvanmiyur,Chennai - 41.

Phone : 0454 - 45018540
Mobile : +91 8939915767

Email : thairuso@gmail.com
Website : www.thenaturalstore.org

சென்னையில் உள்ளவர்கள் திருவான்மியூரில் உள்ள இவரது கடைக்கு நேரில் சென்றோ, வீட்டு டெலிவரி கேட்டோ பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.  தமிழகத்தின் பிற பகுதிகளில் இவரைத் தொடர்பு கொள்ள: சுட்டி.
 
ரூசோவின் தோட்டத்தில் இயற்க்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

கீழே இந்தியா டுடேயில் வந்த கட்டுரை.

 







மேலே உள்ளது ரூசோவின் விவசாயப் பண்ணைகள், ரூசோக்கு நமது சல்யூட்!!


Sunday, March 10, 2013

ஒரு டம்ளர் பால்....... செய்நன்றி மறவாத மருத்துவர்.

அன்புள்ள மக்கள்ஸ்,

எனக்கு என்னுடைய நண்பர் அனுப்பிய மெயில் இது.  பிடிடித்திருந்ததால் தங்களுடன் பகிர்கிறேன்!! 












 









Monday, January 28, 2013

சட்டத்தின் பார்வையில் ஒழுக்கமான கள்ளச் சாமியார்கள் லிஸ்ட் [காரணத்துடன்]

சென்ற பதிவில் பாலியல் ஒழுக்கம் என்பதைத் தவிர்த்துப் பார்த்தாலும் "ரஞ்சிக் கோட்டை வாலிபன்" ஆன்மீகவாதியாக இருக்கத் தகுதியற்றவர் என்பதைப் பார்த்தோம்.  பதிவின் இறுதியில் பொதுவாக ஆன்மீகவாதிகள் என்ற பெயரில் உலாத்திக் கொண்டிருக்கும் போலிகளை எப்படி கண்டுகொள்வது என்றும் சொல்லியிருந்தோம்.  சில நண்பர்கள், ரஞ்சிதானந்தா மாட்டிக் கொண்டார்  என்பதற்காக எல்லோரும் அவரைப் போட்டு நொங்குகிறோம், மாட்டாதவர்களை பற்றி சொல்லவில்லையே என்று ஆதங்கப் பட்டனர்.  அவர்கள் மனக்குறையைத் தீர்க்கவே இந்தப் பதிவு.  தனிப்பட்ட முறையில் நாமும் ஒரு ஆன்மீகப் பாதையில் செல்வதால் நாம் செல்லும் வழி தான் உயர்ந்தது மற்றவர்கள் எல்லோரும் போலி என்று நாம் திரித்து கூற  முயல்வதாக சில அன்பர்கள் நினைக்கலாம், ஆகையால் ஆத்திக அன்பர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தக்க சான்றுகள் மூலமாகவே நாம் போலிகளைத் தோலுரித்துக் காட்ட இருக்கிறோம்.

உதாரணத்துக்கு, ஒரு பெண்ணைப் பெற்றவர்கள் மாப்பிள்ளை தேடும்போது வருங்கால மருமகன் நாட்டின் சட்டத்தை மதித்து நடந்தால் மட்டும் போதும் என்பதோடு நில்லாமல் வேறு சில தகுதிகளையும் பார்ப்பார்கள்.  நாட்டின் சட்டத்தை மதித்தால் போதும் என்றால் புகைப் பிடித்தல், மது அருந்துவது கூட தற்போது சட்டப் படி தப்பில்லை என்று ஆகிவிட்டது.  ஒரு ஆணும் பெண்ணும் சம்மதத்தோடு உடல் உறவில் ஈடுபட்டால் அது சட்டப் படி குற்றம் ஆகாது என்று உச்ச நீதிமன்றமே சமீபத்திய தீர்ப்பொன்றில் கூறி விட்டது.  இதையெல்லாம் வைத்து மேற்சொன்ன பழக்கங்களைக் கொண்ட ஒரு பையனை  நாட்டின் சட்டப் படி நல்ல 'குடி'மகன் என்று தங்கள் பெண்ணுக்கு மணமுடிக்க சம்மதிப்பார்களா?  இல்லையே!!  காரணம், நாட்டின் சட்டம் ஒருபுறம் இருந்தாலும் தங்களுக்கென்று ஒரு அளவுகோல் வைத்துள்ளார்கள் அதை தங்கள் வருங்கால மருமகன் பூர்த்தி செய்பவனாக இருக்க வேண்டுமென்று எதிர் பார்க்கிறார்கள்.

அதே மாதிரி, நமக்கு ஆன்மீக வழிகாட்டியாய் இருப்பவர்கள் நாட்டின் சட்டப் படி எந்த தப்பும் செய்யாத ஒரு நல்ல குடிமகனாய்/மகளாய் இருந்தால் மட்டும் போதாது, ஆன்மீக ரீதியாகவும் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.  அந்தத் தகுதிகள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1.  ஆன்மீகவாதி தான்தோன்றியாக உருவாக இயலாது: இந்தியாவில் எந்த ஆன்மீகவாதியாக இருந்தாலும் சரி, அவர்கள் பகவத் கீதையை ஆதாரப் பூர்வமானது என்பதை  மறுக்க மாட்டார்கள்.  எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.  அவர்களில் பலர் கீதையை தினமும் போதிக்கிறார்கள், சிலர் பொழிப்புரையும் கூட எழுதியிருக்கிறார்கள்.   ஒரு ஆன்மீக இயக்கத்தின் தலைவர், உலகெங்கும் பிரச்சாரம் செய்பவர், லட்சக் கணக்கில் தொண்டர்களை உருவாக்குபவர் என்றால் அவர் குறைந்த பட்சம் பகவத் கீதையின் படியாவது ஒரு தகுதி பெற்ற ஆன்மீகவாதியாக இருக்க வேண்டும்.  அவ்வாறு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்ப்போமா?.

ஆன்மீகப் பாதையில் முதல் படி என்ன என்று கீதையின் கீழ்க்கண்ட பதம் கூறுகிறது.
  
tad viddhi pranipatena
pariprasnena sevaya
upadeksyanti te jnanam
jnaninas tattva-darsinah
                                                             [பகவத் கீதை 4.34]

இந்த அறிவை தன்னையுணர்ந்த ஒரு ஆன்மீக குருவை அணுகி , அவரைச் சரணடைந்து, சேவை செய்து, பணிவுடன் கேள்விகள் கேட்பதன் மூலம் அறிந்து கொள்ளவும்.  தன்னையுணர்ந்த ஆன்மாக்கள் இவ்வுண்மையை உனக்கு போதிக்கத் தக்கவர், ஏனெனில் அவர் உண்மையைக் கண்டவர். 

தன்னையுணர்ந்த ஒரு குருவிடம் சரணடைந்து அவரை வழிகாட்டியாக ஏற்பது தான் ஆன்மீகத்தின் அறிச்சுவடியாகும்.  நாம் இந்த முடிவை பகவத் கீதையின் படி எட்டியுள்ளோம்.  அப்படியானால், நமக்கு குருவாக இருப்பவரும் இதே மாதிரி நடப்பவராக இருந்திருக்க வேண்டும், அதாவது அவரும் ஒரு ஆன்மீக குருவிடம் இருந்து கற்றவராக இருக்க வேண்டும்.  இப்படியே குரு-சீடர் என்று சங்கிலியாக பின்னோக்கிச் சென்றால் அது பகவத் கீதையை முதலில் போதித்த ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று முடியும்.   இதைத்தான் பகவான்,  இன்னொரு பதத்தில் கூறுகிறார்.

evam parampara-praptam
imam rajarsayo viduh
sa kaleneha mahata
yogo nastah parantapa


தலை சிறந்த இவ்விஞ்ஞானம் இவ்வாறாக குரு -சீடர்கள் பரம்பரை சங்கிலி வழியாக வந்தடைகிறது, புனிதப் பண்புகளைப் பெற்ற அரசர்கள் அவ்வண்ணமே இதைப் பெற்றனர்.  காலப் போக்கில் சில சமயம் இச்சங்கிலி அறுந்து போய் இந்த அறிவு தொலைந்தது போல தோற்றம் உண்டாகிறது.

மேற்கண்ட பதங்களை வைத்துப் பார்க்கும்போது பகவத் கீதையை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆன்மீகவாதிக்கு குரு என்பவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு முன்னர் குரு -சீடர் பரம்பரையும் இருக்க வேண்டும்.  இந்த ஒரு சான்றே போதும் தற்போது ஆன்மீகவாதிகள், சாமியார்கள் என்று போலியாகத் திரிபவர்கள் அத்தனை பேரையும் தகுதி இழக்கச் செய்வதற்கு.  பெரும்பாலானவர்கள் தாங்களே ஞானம் பெற்றுவிட்டோம் என்பார்கள், அல்லது அவர்களுக்கு முன்னர் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைக்குள்  தொடர்பு முடிந்து போய்  யாரவது ஒருத்தர் தான்தோன்றியாக இருப்பார்.

2.  நான்தான் கடவுள் என்று சொல்லுபவன்/பிறர் இவனை கடவுள் சொல்வதை அனுமதிப்பவன் ஆன்மீகவாதியில்லை:  இதையடுத்து போலிகள் என்று பார்த்தால், தான் கடவுளின் அவதாரம் என்று சொல்பவர்கள் வருகிறார்கள்.  சிலர் நேரடியாகவே தான் கடவுள் என்று சொல்கிறார்கள், சிலர் அவ்வாறு பொது மேடைகளில் சொவதில்லை ஆனாலும் அவரது சீடர்கள் என்ற பீடைகள் சொல்லித் திரிகின்றன.  அந்த மாதிரி கடவுள்கள் சிலர் இண்ணமும் சமூகத்தில் உடம்புடனே திரிந்து கொண்டிருக்கின்றனர், சிலர் மண்டையைப் போட்ட பின்னர் ஊர் ருக்கு சிலைகளாக தீராத  தரித்திரமாக சமூகத்தைப் பீடித்திருக்கிறார்கள்.

யார் வேண்டுமானாலும் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளலாம்,  ஆதாரம் என்ன?  இறைவன் எப்போது, எங்கே தோன்றுவான், அவன் என்னென்ன பணிகளைச் செய்வான் என்பதை ஸ்ரீமத் பாகவதம் முன்னரே கூறுகிறது.  அதன்படி, பூமியில் 5000 வருடங்களுக்கு முன்னர் துவாபர யுகத்தில்  ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டிய பின்னர் தான் வந்த வேலை முடிந்ததும் தனது லோகமான கோலோக விருந்தாவனத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடைய அடுத்த அவதாரம் புத்தர்.  அவருக்குப் பின்னர் கல்கி கலியுகத்தின் இறுதியில் தோன்றுவார்.  கலியுகம் 4,32,000 வருடங்கள், அதில் 5000 வருடங்கள் முடிந்துள்ளன, இன்னமும் மீதமுள்ள  4,27,000 வருடங்கள் முடிந்த பின்னரே கல்கி தோன்றுவார்.  ஆகையால், இதற்கிடையில் நான்தான் கடவுள் என்று யாரெல்லாம்  சொல்கிறார்களோ  அவர்கள் அனைவருமே போலிகள் தான்.

3.  கடவுளுக்கு வடிவம் கிடையாது, பிரம்மம் என்ற ஒன்று இருக்கு, அதற்க்கு எந்தப் பண்பும் கிடையாது, நாம் முக்தியடைந்தால் அந்த பிரம்மத்துடன் ஐக்கியமாகி, பிரம்மமும் நாமும் ஒன்றோடு ஒன்றாக ஆகிவிடுவோம்என்பவர்கள் போலிகள்:  

na tv evāhaḿ jātu nāsaḿ
na tvaḿ neme janādhipāḥ
Bhagavad-gītā 2.12

நானோ, நீயோ இங்கே கூடியுள்ள அரசர்களோ யாரும் இல்லாமல் இருந்த ஒரு காலம் இதுவரை இல்லை, எதிர்காலத்திலும் ஒருபோதும் நாம் இல்லாமல் போகப் போவதுமில்லை.

ஆங்கிலத்தில் I [நான்-I st Person], You [நீ-அர்ஜுனன் IInd Person], they [அவர்கள்-அரசர்கள் Third Person], என்று மூன்று நிலைகளிலும் கடந்த காலத்திலும் இனி வரும் காலத்திலும் நாம் இருப்போம், ஒருபோதும் இல்லாமல் போக மாட்டோம் என்று பகவான் கூறுகிறார்.  இதை படித்த பின்னர் கூட எந்த முட்டாளாவது கடவுளுடன் ஐக்கியமாய் போவோம் என்று போதிப்பானா?  அவ்வாறு போதிப்பவன் போலி.


4.  போகும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருப்பவன் போலி:  


dehino 'smin yathā dehe
tathā dehāntara-prāptir
dhīras tatra na muhyati


இந்தப் பிறவியிலேயே, சிறுவயது, இளைஞன், வயது முதிர்ந்தவன் என ஆன்மா வெவ்வேறு உடல்களை மாற்றுவதைப் போல இறப்பிற்குப் பின்னால் வேறொரு உடலைப்  பெற்றுக் கொள்ளும், அறிவுத் தெளிவான ஒருவன் இம்மாற்றங்களைக் கண்டு குழம்பிப் போவதில்லை. 

இந்த பதத்தில், இந்த தேகம் நிலையற்றது, ஆடையைப் போன்றது, கிழிந்த ஆடையை விடுத்து வேறு நல்ல ஆடைகளை நாம் உடுத்துவது போல, ஆன்மா இந்த உடல் வசிக்கத் தகுதியற்றது என்னும்போது அதை விட்டு நீங்கி வேறு உடலில் நுழைகிறது என்கிறார்.  ஒரு ஆன்மீக வாதி என்பவன், இதை உணர்ந்து, நீங்கள் இந்த தேகமல்ல, ஆன்மா என்ற உண்மையை உரைப்பவராக இருக்க வேண்டுமேயன்றி,   அங்கே போகிறவர்களுக்கு கையை தூக்கு, காலைத் தூக்கு, நெற்றியில் விரலால் அமுக்கு என்று வைத்தியம் பார்ப்பவராக இருக்கக் கூடாது.  வைத்தியம் பார்ப்பது தவறல்ல, வைத்தியத்தைப் பார்க்க நிறைய மருத்துவ மனைகள் இருக்கின்றன.  ஆன்மீகவாதி ஆன்மாவைக் காப்பாற்றுபவராக இருக்க வேண்டும், அழிந்து போகும் உடலை அல்ல.

5. மேஜிக் வித்தைகளைச் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல: வாயில் லிங்கம் எடுத்தல், காற்றில் கையசைத்து சாம்பல், வாட்ச், மோதிரம், தங்கச் செயின்களை எடுத்து பணக்காரர்களுக்கு/வி.ஐ.பி.க்களுக்கு  மட்டும் கொடுத்தல் போன்ற மேஜிக் வேலைகளைச் செய்பவன் ஆன்மீகவாதி அல்ல.  விலையுயர்ந்த தங்கச் செயினை கையை அசைத்து கொண்டுவரும் இவர்களால், விலை மலிவான ஒரு பூசணிக்காயை அவ்வாறு கொண்டு வர முடியுமா என்று கேட்கப் பட்ட கேள்விக்கு ஐம்பது வருடமாக இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பி.சி.சொர்க்கார் என்னும் மேஜிக் வித்தைக்காரர் இந்த வேலைகளை இவர்களை விட நன்றாகச் செய்வார். அவர் இரயில் எஞ்சினையே மறைத்தாலும் தன்னை கடவுளின் அவதாரம் என்று ஒருபோதும் சொன்னதில்லை.  கடவுள் என்றால், கோவர்த்தன மலையையே இடது கை சுண்டு விரலால் தூக்குவார், இந்த பிரபஞ்சத்தையே படைப்பார்.  

மேற்கண்ட முறைகள் வாயிலாக, சட்டத்தின் பார்வையில் தவறு செய்தவர்களா இல்லையா என்று பாராமல், சாஸ்திரத்தின் பார்வையில் உருப்படாத போலிகள் லிஸ்ட் இங்கே தருகிறோம் அடைவுக்குள் காரணமும் தந்துள்ளோம்: 

மேஜிக் வித்தை செய்த புட்டபர்த்தி காரர்  [தன்னை கடவுள் என்று சொல்ல அனுமதித்தவர், மேஜிக் செய்தவர், குரு பரம்பரை இல்லை ]


தலையில் கர்சீப் கட்டிய ஷிர்டிக் காரன் [தன்னை கடவுள் என்று சொல்ல அனுமதித்தவர், குரு பரம்பரை இல்லை ]

திருவண்ணாமலை 'கு'மணன் [குமனாஷ்ரமம் புகழ்..]- [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு பரம்பரை இல்லை.  செத்த பின்னர் ஆஷ்ரம சொத்துக்கள் தம்பி மகனுக்கே போய்ச் சேர வேண்டும் என்று உயில் எழுதிய பற்றற்றவர். ]

வடலூர் காரர் [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு பரம்பரை இல்லை ]

செக்ஸ் பண்ணிகிட்டே கடவுள்கிட்ட போகச் சொன்ன சீஷோ [ஈனம் மானம் எதுவுமே இல்லாத மோசடிப் பேர்வழி ]

அமெரிக்காவில் ஒரு மீட்டிங்கில் பேசி அதை வச்சே காலத்தை ஒட்டிய தலப்பாக் கட்டு, அவருடைய ஹம்சா குரு  [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு உண்டு, ஆனால் அந்த குருவுக்கு வேறு யாரும் குரு இல்லை, அதாவது குரு பரம்பரை இல்லை ]

பாழுங் கலை "Art of Killing" தாடிக் காரன் [கையைத் தூக்கு காலைத் தூக்கு, மூக்கை அமுக்கு, மூச்சை இழு, விடு  அதுதான் ஆன்மிகம் என்றவர், எல்லோரும் கடவுள் என்னும் போலி, நச்சுப் பாம்பு தற்போது ரஞ்சிதானந்தாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.  இவரோட குரு அமேரிக்கா புண்ணிய பூமின்னு அங்கே போய் செத்து பின்னர் பிணம் 20 நாள் னாராம இருந்ததாக சான்றிதழ் பெற்றவர்.  பயோகிராபி எழுதியவர் ]

இலங்கையில் இருந்து வந்து திருச்சி விராமலையில் மடம் போட்டு
 பெண்களைக் கற்பழித்த நடிகர் செந்திலின் ஜெராக்ஸ் [பயங்கரமான கிரிமினல், பாலியல் ரீதியாக தண்டனை பெற்றவர் ]

ஷங்கர் ராமனைப் போட்டுத் தள்ளியதில் குற்றம் சாட்டப் பட்டுள்ள  காஞ்சிபுரத்தான் [பாலியல் ரீதியாக எழுத்தாளரால் குற்றம் சாட்டப் பட்டவர் ]

நான் பீடி குடித்தால் என் வாயில் வாசனை வராது, நீ குடித்தால் வாசனை வரும் அதனால் நான் தான் கடவுள் என்ற யாகாவா முனி
[கீழ்ப் பாக்கத்துக்கு போக வேண்டிய ஆள் , ஆனா  ஏன் வெளியிலேயே விட்டிருந்தாங்கன்னுதான் புரியலை, செத்துட்டாரு. ]

கமலஹாசனின் வசூல்ராஜா புகழ் கட்டிப் பிடி வைத்தியம் பண்ணும் கேரளாக் காரி  [குருவோ, குரு பரம்பரையோ இல்லாதவர், முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி காணாமல் போய்விடுவோம் என்று போதிகிறார்,  ரஞ்சிதானந்தாவை ஆதரிக்கிறார் ]

யாரும் கல்யாணம் பண்ணாதீங்கோ, புள்ளைகுட்டி பெத்துக்காதீங்கோ என்று சொல்லும் " பிரம்ம கிழவிகள்" இயக்கம் [குருவோ, குரு பரம்பரையோ இல்லாதவரகள், கொஞ்சநாள் முன்னாடி செத்த கிழவனை கடவுள் என்கிறார்கள், 500 கோடிக்கு மேல் கடவுள் கிட்ட ஆன்மாக்கள் ஸ்டாக் தீர்ந்து போயிடும் ஆகையால் யாரும் செக்ஸ் செய்யாதீர்கள், குழந்தை பெறாதீர்கள், ஆன்மா இல்லாத குழந்தையா பொறக்கும் என்று டுபாக்கூர் விட்டவர்கள். எப்போதோ உலக மக்கள் தொகை 500 கோடியைத் தாண்டிவிட்டது, குழந்தைகள் பிறக்கின்றன, ஆனாலும் இவர்கள் இயக்கத்தில் சேரும் ஆடுகள் மட்டும் குறையவில்லை.]  

நம்மை கதவைத் திறந்து ஆனந்தத்தை வரவழைக்கச் சொல்லிவிட்டு, அவன் கதவைப பூட்டிக் கொண்டு ரஞ்சிதானந்தம் பார்த்தவன்[குருவோ, குரு பரம்பரையோ இல்லாதவர், எல்லோரும் கடவுள் என்பவர்.  இவரது பக்தர்கள் இவரை கடவுள் என்று சொன்னாலும் நடவடிக்கை எடுக்காதவர்]

செவ்வாடைத் தொண்டர்களை கொண்ட கீழ்மருவத்தூர்க்காரன் [முழுக்க முழுக்க கற்பனையாக ஒரு கடவுளை உருவாக்கி,  ஆயிரம் கோடிகளில் சொத்து சேர்த்தவர், அதற்க்கு தனது பெண்டாட்டி பிள்ளை குட்டிகளை காவலுக்கு போட்டிருப்பவர் ]

நாலு லட்சம் வருஷத்துக்கப்புறம் வரவேண்டிய கல்கி இப்பவே ஆணும் பெண்ணுமா வந்துட்டோம் என்று சொல்லித் திரியும் புருஷன் பெண்டாட்டி பொறம்போக்குகள் .....[இவர்கள் கல்கி அவரதாரம் என்கிறார்கள்.  கல்கி ஒருத்தார் மட்டுமே அதுவும் ஆண்.  அப்படியானால்  எப்படி புருஷன், பெண்டாட்டி இருவரும் கல்கியாக இருக்க முடியும்? அதுவும் 4,27,000 வருடங்கள் கழிந்த பின்னரே வர முடியும், இப்போதே எப்படி வந்தார்கள்?]

முரளீதரன் [ரொம்ப மோசமானவர் இல்லை, ஆனால் தலப்பாக்கட்டு போன்றவர்களை மேற்கோள் காட்டுவதால் இவருக்கு விஷயம் தெரியவில்லை]

ககி சவம்  [அனுபவத்தை வைத்து புருடா விட்டுக் கொண்டு திரிபவர், குரு , குரு  பரம்பரை எதுவும் இல்லாதவர்]

 வேலூர் தங்கக் கோவில் காரர் [தான்தோன்றி சாமியார், குரு , குரு  பரம்பரை எதுவும் இல்லாதவர், தத்துவ ரீதியாக போலி, போலியோ போலி......]

ஈசா கிழவர் [மொக்கைச் சாமியார், எந்த அடிப்படையும் இல்லாதவர், வேணுமின்னா மரம் நடட்டும், வேறு எதற்கும் பிரயோசனமில்லாதவர்] 

கேரளாவின் ஐயோ..... அப்பா.......... [சாஸ்திரத்தில் சொல்லப் படாத வழிபாட்டு முறை]. 

Saturday, January 26, 2013

படுக்கையறையில் காமிரா வைக்காமல் கள்ளச் சாமியாரை கண்டுபிடிப்பது எப்படி?

கள்ளச் சாமியார்கள் மக்களை ஏய்த்து வருவது எப்போ ஆரம்பித்தது என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாத அளவுக்கு ரொம்ப காலமாக நடந்து வருகிறது, தற்போதும் நடக்கிறது, இனி வரும் காலங்களிலும் நடக்கும்.  இவர்களிடம் ஏமாறுபவர்கள் வெறும் அப்பாவிகளா என்று பார்த்தால் அதுவும் இல்லை.  அதிபுத்திசாலித்தனம் கொண்ட,  நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களும், பெரிய பணக்காரர்களும் இவர்களிடம் எளிதில் ஏமாந்து கற்பையும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், வாழ்க்கையையும் தொலைக்கிறார்கள். இவ்வளவு படித்த நீங்கள் எப்படி எமாந்தீர்கள் என்று கேட்டால், "எங்களை விடுங்கள், அமரிக்காவில் மக்கள் மனங்களை படிக்கத் தெரிந்த மனோதத்துவ நிபுணரே [சைக்காலஜிஸ்ட்] இந்த சாமியார் பேச்சைக் கேட்டு தான் சேர்த்து வைத்திருந்த ஒன்று முதல் இரண்டு கோடி ரூபாய் வரையிலான சொத்துக்களை இவருக்கு தானமாக வழங்கியிருக்கிறார், நாங்கள் எம்மாத்திரம்?" என்று அவரது சாமர்த்தியத்தை பறை சாற்றுகிறார்கள். வெறும் பேச்சை வைத்தே ஆயிரம் கோடிகளில் சொத்து சேர்க்கத் தெரிந்த இந்த மாதிரியான சாமியார்களிடம் இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தும் சாமர்த்தியம் இருக்கிறது,  ஆனால் அவர்கள் பிராடு வேலை செய்யப் போய்விட்டது தான் துரதிர்ஷ்டவசமாகும். 


சமீபத்தில் பிரபலமான கள்ளச் சாமியார் தன்னை நடிகையோடு இருப்பதாக காட்டிய காட்சி உண்மையல்ல, கணினியால் சித்தரிக்கப் பட்டது என்று சாதிக்கிறார்.  அந்த காட்சி படமாக்கப் பட்ட நேரமும், தேதியும் ஒவ்வொரு காட்சியிலும் தோன்றுகிறது.  அதே சமயம் இவர் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பொது நிகழ்ச்சியும் ஊரறிய படமாக்கப் படுகிறது, அந்த நடிகையும் அவ்வப்போது விமானத்தில் பறப்பவர்.  வீடியோவில் காட்டப் படும் தேதி, நேரங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து அந்த நேரத்தில் நாங்கள் வேறு இடத்தில் இருந்தோம், அந்த காட்சியில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று காட்ட இவர்கள் இதுவரை ஏன் முயற்சிக்கவில்லை என்பது விந்தையாக இருக்கிறது.  ஏதோ நம்ம அதிர்ஷ்டம் ஒரு புண்ணியவதி  இவர் படுக்கையறையில் கேமராவை வைத்து நம்மைக் காப்பாற்றி விட்டார், கேமாரவில் பெண்ணுடன் சிக்கியதால், இவர் ஒருத்தர் மட்டும் போலி ஆன்மீக வாதி மற்றவர்கள் யோக்யர்கள் என்று அர்த்தமல்ல. "மாட்டாத வரை எல்லோரும் யோக்கியர்களே" என்ற தத்துவத்தின் அடிப்படையில் வெளியில் கொல்லை பேரு இன்னமும் சிக்காமல் உலாத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் பலர் கடைசி வரை எல்லா அயோக்கியத்தனமும் செய்து வாழ்ந்து, மாண்ட பின்னர் தலைமுறை தலைமுறைக்கும் கடவுளாக்கப் படுகின்றனர் என்பது தான் ஜீரணிக்க முடியாத உண்மை. இந்த மாதிரி படுக்கையறையில் வைக்கப் படும் கேமராக்களை நம்பாமல் போலி ஆன்மீகவாதிகளை அடையாளங்கண்டு நம்மை காத்துக் கொள்ள வழி இருக்கிறதா என்று பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கம்.




பொதுவாக கள்ளச் சாமியார் என்றால் பெண்களுடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருப்பவர், அவ்வாறு அல்லாதவர் நல்ல சாமியார்  என்று நம்மில் பலரும் தவறாக நினைக்கிறோம்.  உண்மை அதுவல்ல.  பாலியல் ரீதியான ஒழுக்கம் என்பது ஆன்மீக வாதிக்கு உண்டான தகுதிகளில் ஒன்றுதானே தவிர அதுவே முழுத் தகுதியும் ஆகிவிடாது.   சொல்லப் போனால் திருமணம் செய்து குழந்தைகளோடு இருப்பவர்களும் நல்ல ஆன்மீக வாதிகளாக இருக்க முடியும்.  உண்மையில் தகுதியான சாமியாரால்  கள்ளத் தனம் செய்யவே முடியாது, எனவே கள்ளச் சாமியார் என்ற சொற்றொடரே முரணாகும். "கருணையான கொலைகாரன்", "நேர்மையான திருடன்" என்பது போல !!  நாம் இவர்களை போலி ஆன்மீகவாதிகள் எனலாம், இதன் பொருள் இறைவனை அடைய நமக்கு வழிகாட்ட தகுதியற்றவர்கள் என்பதாகும்.

முதலில் எல்லோருக்கும் தெரிந்த திருவண்ணாமலை ராஜசேகரனை எடுத்துக் கொள்வோம். பாலியல் ரீதியாக அல்லாமல், மற்ற விஷயங்களை வைத்து இவர் ஒரு நல்ல ஆன்மீகவாதிதானா என பார்ப்போம். பின்னர் இதையே மற்றவர்களுக்கு எவ்வாறு விரிவுபடுத்துவது என்றும் பார்ப்போம்.


1. இவருடைய குரு யார்?:  உலகெங்கிலும் லட்சக் கணக்கான சீடர்களுக்கு தான் குரு என்கிறார்.  முதலில் சீடனாகவேண்டும், குருவின் போதனையைப் பின்பற்றி பூரணத்துவம் பெற வேண்டும் அதற்க்கப்புறம் தான் குருவாக முடியும்.  இவர் முதலில் ஊரைச் சுற்றி எக்கச் சக்கமான சீடர்களை உண்டு பண்ணிவிட்டு அவர்களில் பலரை சந்நியாசம் என்ற நிலை வரை உயர்த்தியதாகச் சொல்லிவிட்டு, அதற்க்கப்புறம் தான் இவரே சீடராகியிருக்கிறார்?  இந்த கூத்து எங்கே நடக்கும்?  சமீபத்தில் தான் மதுரை ஆதீனத்தை தன்னுடைய குரு என்று சொல்லிக் கொண்டார்.   அப்படியானால் இத்தனை நாட்கள் இவருக்கு குருவாக இருந்தது யார், அவர் தற்போது இவருடைய குருவா இல்லையா?  அந்த மாதிரி குருவை மாற்றுவது ஏற்கத் தக்கதா?   தற்போது மதுரை ஆதீனத்தால் கலட்டி விடப் பட்டு பாதியாகிப் போன பின்னர் இவருடைய குரு யார்?  குருவே தேவை இல்லை என்று அர்த்தமா?  

இவர் 120 நாடுகளில் தனது இயக்கத்தை விரிவு படுத்தி லட்சக்கணக்கான தொண்டர் படையைச் சேர்த்ததோ,  நூற்றுக் கணக்கான கோடி சொத்து செர்த்ததோ, பள்ளியில் படிக்கும் போது தனது பையில் படத்தை வைத்து அழகு பார்த்த நடிகையையே பின்னொரு நாளில் தனக்கு  "பணிவிடை" செய்ய வைத்ததோ [காணொளி சுட்டி1] [காணொளி சுட்டி2], வெறுமனே டிப்ளமோ படித்த இவர் BITS பிலானியில் பயின்றவரை சிஷ்யை ஆக்கியதோ எதுவும் ஆச்சரியமாகத் தோன்றவில்லை.  தான் அள்ளி முடியுமளவுக்கு தலை நிறைய முடியை வளர்த்து வைத்துக் கொண்டு டஜன் கணக்கான வெளிநாட்டவர்களுக்கு மொட்டையடித்து அவர்கள் கையில் ஒரு தண்டத்தைக் கொடுத்து (மூங்கில் கம்பு)  நிற்க வைத்தாரே, [சுட்டி] அது தான் வியப்பாக இருக்கிறது!!  ஒருத்தர்  கூட, "ஏன் ஸ்வாமி, நீங்க மட்டும் பொம்பளைங்களை விட நீளமா முடியை வச்சிக்கிட்டு, எங்களையெல்லாம்  மொட்டை அடிக்கச் சொல்வது ஏன்?"  என்ற கேள்வியே கேட்டிருக்க மாட்டாரா?!   

2. பெண்கள் சந்நியாசம் ஏற்பது தகுமா?:  இவர் சந்நியாசம் வழங்குவதை ஆண்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை, பெண்களையும் சேர்த்துக் கொள்கிறார். [சுட்டி] அவர்களுக்கு மொட்டையடிப்பதில்லை என்பது மட்டுமே வேறுபாடு.  திருமணத்திற்கு முன்னர் பிரமச்சாரியம், திருமணமானதும் கிரகஸ்தன், ஐம்பது வயதில் மனைவியுடன் புனிதத் தளங்களுக்கு செல்லும் வானபிரஸ்தான், இறுதியாக எல்லாவற்றையும் துறந்த நிலையை அடைந்த சந்நியாசி போன்ற நான்கு நிலைகளில், முதல் மூன்றில் பெண்கள் இருப்பினும் நான்காவதான சந்நியாசம் என்பது ஆண்களுக்கு மட்டும்தான்.  இது தான் வேத கலாச்சாரம்.  பெண்கள் துறவு நிலைக்கு ஏற்றவர்கள் அல்ல, வாழ்வில் எந்த ஒரு காலகட்டத்திலும் அவர்கள் தங்கள் பெற்றோர்கள், கணவர், சகோதரர்கள் அல்லது தங்களது வயது வந்த மகன்களுடனோ மாத்திரமே இருக்க வேண்டும்.  தனியான வாழ்வு அவர்களுக்கு வேத கலாசாரம் தரவில்லை.  சந்நியாசம் அவர்களுக்கு இல்லை.   முக்கியமாக கலி யுகத்தில் ஆண்களாயினும் சந்நியாசம் என்பதே தவிர்க்கப் படவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.  பருவடைந்த இளம்பெண் ஒரு போதும் திருமணம் முடிக்காமல் இருக்கலாது என்ற வேதங்களின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு  இவர் இளம்பெண்கள் கையில் கமண்டலம், தண்டத்தைக் கொடுத்து சந்நியாசினி என்று பெயரும் கொடுத்து அனுப்புகிறார்,  இந்த அட்டூழியம் எங்கே நடக்கும்? எந்த வகையில் இவர் வேத கலாசாரத்தைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார் என்று புரியவில்லை.




3. இவர் பற்று  இல்லாதவரா? உங்களுக்கு சொந்த பந்தங்கள் மேல் பற்று இல்லையா என்ற கேள்விக்கு இவர் சொல்கிறார், "எனக்குள் வாழ்க்கையைப் பற்றி ஏற்ப்பட்ட கருத்துக்களின் முதிர்ச்சியினால் ஆசாபாசங்கள் முழுக்க முழுக்க என்னிடமிருந்து உதிர்ந்து விட்டன.  அவ்வாறு ஆசாபாசங்கள் தானாகவே உதிர்ந்தத பின்னர் தான் நான் சந்நியாச வாழ்க்கையையே ஏற்றேன்".  [சுட்டி] இவர் தேனொழுகப் பேசுவது எல்லாம் மயிர் கூச்செறியச் செய்யும் வண்ணம் தான் இருக்கும் ஆனால் அத்தனையும் பேத்தல் என்பது கொஞ்சம் உற்று நோக்கினால் விளங்கும். உதாரணத்துக்கு   இவரது மடத்தில் அதிகப் படியான வருமானம் வரும் துறை,  சிலைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகும்.  இதை இவரது உடன்பிறந்த தம்பி கோபி என்பவருக்கும், அண்ணன்  செந்தில்குமார் என்பவருக்கும் தான் ஒப்படைத்திருக்கிறார்.  மேலும் பணம் கொழிக்கும் முக்கிய வேலைகள் அத்தனையும் இவர்கள் கைவசமே இருக்கக் கூடும். ஆக இவர் தலையில்  இருந்த முடியைக் கூட இழக்க மனமில்லை, அப்புறம் சொந்த பந்தம் எங்கே உதிர்வதற்கு!!

4.  சந்நியாசி வண்ண உடைகள் உடுத்தலாமா?  சந்நியாசம் ஏற்ற பின்னர் காவி உடை மட்டுமே உடுத்த வேண்டும்.  சங்கர மடத்திலோ, வைணவ சம்பிரதாயங்களிலோ  சந்நியாசிகள் எங்கும் வண்ண உடைகள் உடுத்த இயலாது.  அனால் இவரது படத்தை கூகிளில் ஒரு தமாசுக்கு தேடினால் இவர் அணியாத வண்ணமே இல்லை என்னும் அளவுக்கு எல்லா வண்ணத்திலும் உடை உடுத்துகிறார்.  இது எதில் சேர்த்தி என்றே தெரியவில்லை. 


5.  சாதுவுக்கு களங்கம் ஏற்படுமா?  இவர் பாலியல் குற்றச்சாட்டால் சிறைக்குச் சென்று விசாரணை முடிந்து வெளிய வந்த சமயம்.  தான் சிறைக்குச் சென்றதால் களங்கப் பட்டதாகவும் அதைப் போக்க தன்னைச் சுற்றி தீ வைத்து ஏதேதோ சடங்குகளைச் செய்து அவற்றை நிவர்த்தி செய்யப் போவதாகவும் சொல்லிக் கொண்டார்.  ஒருத்தர் உண்மையில் ஆன்மீகத்தில் பூரணத்துவம் அடைந்தவர் என்றால் அவரை யாராலும் களங்கப் படுத்த முடியாது.  சொல்லப் போனால் அவர் செல்லுமிடங்கள் எல்லாம், அவரது  பாதம் பட்டவுடன் தங்களது களங்கத்தை போக்கிக் கொள்ளும்.  மற்றவர்கள் புனித நதிகளில் நீராடும்போது அவர்கள் பாவங்களை நதிகள் ஏற்கும், அதே நதியில் ஒரு தூய ஆன்மீகவாதி இறங்கும் போது மற்றவர்களால் சேர்ந்த பாவங்கள் நீங்கி அந்த நதிகளுக்கே விமோசனம் கிடைக்கும்.  ஆக நான் ஜெயிலுக்குள் போனதால் களங்கமடைந்தேன் என்பதே பித்தலாட்டம், அதுக்கு முன்னாடியே களங்களாகத்தான் இருந்தார் என்பதுதான் நிஜம்.   போகாத களங்கத்தை  போக்க சாமான்ய மக்களுக்கு விநியோகிக்கப் படும் ரேஷன் கடை மண்ணெண்ணையை  வீணடித்தது மகா அயோக்கியத் தனம்.  [சுட்டி].



 6.  மேலே உள்ள தகவல் விக்கி பீடியாவில் இருந்து எடுத்தது.  இதையே இவரது தளங்களிலும் புத்தகங்களிலும் பார்க்கலாம்.  இவர் பிறந்த தேதி -ஜனவரி 1, 1978 என்று கொடுக்கப் பட்டுள்ளது,  ஆனால் இவரது பாஸ்போர்ட்டில் மார்ச் 13, 1977 என கொடுக்கப் பட்டுள்ளது.  எது உண்மை?  மேலும், இவர் ஞானமடைந்த தேதி ஜனவரி 1, 2000 என்கிறார்.  தமிழ்நாட்டில் பிறந்த இவருக்கு ஏன் எல்லாமே ஆங்கில நாட்காட்டியைப் பொறுத்தே நகர்கிறது என்பது மட்டும் விளங்கவில்லை   மேலே கடைசியில் உள்ள தகவல் இவரே பலமுறை தொலைக்காட்சிகளில் சொல்லியிருக்கிறார், "நான் கடவுள் என்று சொல்லவில்லை, நீங்கள் எல்லோரும் கடவுள் என்று சொல்ல வந்திருக்கிறேன்".  இது தான் இருப்பதிலேயே மிகப் பெரிய பித்தலாட்டம். அதெப்படி எல்லோரும் கடவுள் ஆக முடியும்?  மனுஷன் மனுஷன் தான், கடவுள் கடவுள் தான்.  மனுஷன் இப்போதும் வீடு பேரு அடைந்த பின்னரும் கூட இறைவனுக்கு சேவை செய்யும் நிலைதான், அதில் தான் அவனுடைய உண்மை நிலை, மாறாத நிலை.  [சுட்டி ]

7.  பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது இவர் காறித் தூ.....  என்று எல்லோர் முன்னிலும் துப்பியிருக்கிறார், [சுட்டி 8:00 வது நிமிடத்தில்] இதை ஒரு சாது செய்வாரா என்பதை முடிவு செய்ய உங்களுக்கே விட்டு விடுகிறேன்.  இவர் வாயிலிருந்து சில சாபங்கள் வெளி வந்திருக்கின்றன:

"அழிக்கப் பட்ட சிவாலயங்கள் உங்கள் வம்சத்தை நாசமாக்கும்".  [சுட்டி] 
"120 நாடுகளில் உங்கள் சிலைகளை வைத்து செருப்பால் அடிப்பார்கள்"   [சுட்டி 8:00 வது நிமிடத்தில்]

இந்த வார்த்தையெல்லாம்  தான் சாது, ஜீவன் முக்தி [அப்படின்னா என்ன கருமமோ தெரியல] அடைந்தவர் என்று சொல்லிக் கொள்பவர் வாயிலிருந்து வரலாமா?  புராணங்களில் முனிவர்கள் சாபம் கொடுப்பார்கள் ஆனால் உண்மையில் அது வரம்.  அகலிகை "கல்லாய் போகக் கடவது" என்று சாபம் பெற்றது போலத் தோன்றும். ஆனால் இராமனின் பாதம் அவள் மீது பின்னால் படப் போவதற்கான வரம் அது.   தனக்கு கெடுதியே வந்தாலும் ஒரு சாது பதிலுக்கு கெடுதி செய்ய மாட்டார், நன்மையையே செய்வார்.  ஆனால், வம்சம் நாசமாகப் போகட்டும் செருப்பால் அடிப்போம் என்பதெல்லாம் அத்தகைய வகையைச் சார்ந்ததல்ல.  மூன்றாம் தர மனிதர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், சாதுக்கள் வாயில் இருந்து வராது.

8.  இவர் ஒரு கதை சொல்கிறார். [சுட்டி] ஒரு ஜென் மாஸ்டர் புகைப் பிடிக்காதே, குடிக்காதே  என்று எல்லோருக்கும் சொல்லிவிட்டு அவர் எப்போ பார்த்தாலும் புகை பிடிப்பாராம்.  இதைப் பார்த்த ஒருத்தர் என்ன மாஸ்டர் எங்களை "புகைப் பிடிக்காதே, குடிக்காதே" என்று சொல்லிவிட்டு நீங்க மட்டும் பார்க்கும் போதெல்லாம் புகைக்கிறீர்களே என்று கேட்டாராம். அதற்க்கு அவர், என்னோட லெவலே வேற, அதனால உன் லெவலுக்கு பொருந்தும் அறிவுரை எனக்குப் பொருந்த வேண்டியதில்லை, "Don't do what Masters do, do what they say" என்றாராம்!! .  இவர் வீடியோவில் நடிகையோடு மாட்டியபோது இதைச் சொல்லித் தப்பித்திருக்கலாம், ஏனோ விட்டுவிட்டார்!!  அது போகட்டும், உண்மையில் ஒரு சாதுவுக்கு இப்படிப் பட்ட நியமங்கள் எதையும் பின்பற்றத் தேவையில்லையா?  நிச்சயம் தேவை.  அவர்கள் தன்னை உணர்ந்த ஆன்மாக்கள் அவர்களுக்கு எந்தக் கட்டுப் பாடும் தேவையில்லை என்றாலும், அவர்கள் எதைப் போதிக்கிறார்களோ அதை பின்பற்றவும் செய்வார்கள் காரணம் அவர்களைப் பார்த்து மற்றவர்களும் பின்பற்ற வேண்டுமென்பதற்காக!!  

9.  இவரு அப்பப்போ சிவன் [சுட்டி], கிருஷ்ணன் வேஷம் போடுறாரு [சுட்டி].   அதற்க்கு என்ன அர்த்தம்னு இன்னமும் விளங்கவில்லை.  இவரும் அவர்களைப் போல படைத்தல், காத்தல் அழித்தல் செய்யத் தகுதியாவரா?  [வருஷத்துக்கு ஒரு தடவை சீக்ரெட்டா அம்மன் வேஷமும் போடுவாராம், அதைப் பார்க்க காசு கொஞ்சம் ஜாஸ்தியாம், அதற்காகத்தான் தலையை மொட்டையடிக்காம வச்சிக்கிட்டு திரியறாராம்!!].  எந்த தூய பக்தரும் நான் சிவன், நான் கிருஷ்ணன் என்று சொன்னதாகச் சரித்திரமே இல்லை.  எல்லோரும் நான் அவர்களின் திருவடி சேவகன் என்றே சொல்லியிருக்கிறார்கள் அதுவே உண்மையும் கூட. 

இது போல இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம்.  இவரைப் பற்றி வெளியிடப்பட்ட  நடிகையுடனான படம் பொய் என்றே நிரூபிக்கப் பட்டாலும், இவர் ஒரு நல்ல ஆன்மீகவாதி இல்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.  

பொதுவாக போலி ஆன்மீக வாதிகளை எப்படி கண்டுபிடிப்பது?

  • நான் கடவுளேதான் என்று சொல்வான், அல்லது அவனது சீடர்கள் அவனை கடவுள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

  • ஆன்மீக குருவே தேவை இல்லை, என்று இவர்கள் குருவாக இருந்து உங்களிடமிருந்து பணத்தை பிடுங்கிக் கொண்டிருப்பார்கள்.  அவர்களுக்கென்று ஆன்மீக குரு யாரும் இருக்க மாட்டார்கள், அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு முன்னர் ஒன்றிரண்டு தலைமுறைக்கு மேல் யாராவது ஒருத்தர் குரு இல்லாமல் தான்தோன்றியாக இருப்பான்.

  • வாயில் இருந்து லிங்கம் எடுப்பது, கையில் இருந்து திருநீறு வாட்ச், தங்க மோதிரம் தங்கச் சங்கிலி எடுத்தல் போன்ற வேலைகளைச் செய்வான்.  தங்கம் வி.ஐ.பி க்களுக்கு மட்டும் தான் கிடைக்கும், ஏழைகள் லிங்கம் எடுக்கும் மேஜிக் வித்தையை எல்லோருடனும் உட்கார்ந்து பார்க்கலாம். அவன் கொடுக்கும் வாட்ச் எங்கே எப்போது வாங்கியது என்பதையும் கண்டுபிடிக்கலாம். 

  •   மடத்துக்கு போகும் பக்தர்களுக்கு குரு வைத்தியம் பார்ப்பார், நோய்கள் பலவற்றை குணப் படுத்துவார்.  [வைத்தியம் பார்ப்பது தப்பில்லை, ஆனால் அது ஆன்மீக வாதியின் வேலையும் இல்லை.  வைத்தியம் மருத்துவர்தான் பார்க்கணும், அதற்க்கு மருத்துவ மனைக்குத்தான் செல்ல வேண்டும்.  ஆன்மீகவாதி, ஆன்மாவை உணரவும், இறைவனை உணரவும் வழி சொல்ல வேண்டும். ]

  • முக்தி அடைந்தால் நீங்க கடவுளோடு ஒன்னாயிடுவீங்க, அதற்க்கப்புறம் கடவுள் நீங்க என்ற பேதம் மறைந்து போயிடும் என்று போதிப்பவர்கள். 
  • கடவுளுக்கு உருவமே இல்லை என்பவர்கள்.   கண் இல்லாதவன் குருடன், காது இல்லாதவன் செவிடன், கால் இல்லாதவன் நொண்டி, தலை இல்லாதவன் முண்டம், இப்படி எது எதெல்லாம் இல்லைன்னு திட்டுகிறோமோ  அத்தனையும் ஒண்ணாச் சேர்த்து ஒரே வார்த்தையில் திட்டனுமா?   உருவம் இல்லாதவனேன்னு சொன்னாப் போதும், அதைத்தான் இவர்கள் செய்கிறார்கள்,

 எது போலி என்று சொல்லிவிட்டோம், இனி எது நல்லது என்பதையும் சொல்ல வேண்டும்.  நல்ல ஆன்மீக வாதியை கண்டுபிடிப்பது எப்படி?  அடுத்த பதிவில் பார்ப்போம்.