Saturday, December 20, 2014

பகவத் கீதையை தேசிய நூலாக்கலாமா? சோ இராமஸ்வாமிக்கு பதில்.

பத்திரிகையாளர் திரு.சோ இராமஸ்வாமி அவர்கள் தனது முகநூல் பக்கத்தில், 17-12-14 தேதியிட்ட அவரது துக்ளக் வார இதழில் "சுஷ்மா ஸ்வராஜ், ‘பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்க வேண்டும்’ என்று கோரியிருப்பது உள்ளிட்டவை குறித்து  அவர் வெளியிட்டுள்ள தலையங்கத்தைப் பகிர்ந்துள்ளார். 

துக்ளக் தலையங்கம் (17-12-14) வாசிக்க: சுட்டி

அவரது தலையங்கத்தில் இது பற்றி முக்கியமான கருத்துகள்:

 ‘பகவத் கீதை ஒரு மதச்சார்பற்ற நூல்’ என்று சிலர் வாதிடுகிறார்கள். இது, ஏற்கவே முடியாத வாதம்.

கிருஷ்ணரின் அல்லது விஷ்ணுவின் மேன்மையை விளக்குகிற நூலை முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ எப்படி ஏற்பார்கள்? 

இந்த கருத்துக்கள் கருத்துக்கள் சரிதானா என்பதை அலசுவதே இந்த பதிவு.


பகவத் கீதையை பா.ஜ.க வில் எத்தனை பேருக்கு ஆழமாகத் தெரியும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. திருவாளர் சோ அவர்களுக்கும் ஒன்னும் தெரியாது என்பதே வெகுநாட்களுக்கு முன்னர் நான் அறிந்து கொண்ட உண்மை. இன்னொரு பக்கம் பகவத் கீதையை புரிந்து கொள்ள வெறும் சமஸ்க்ருதம் மட்டும் தெரிந்தால் போதும், சோ வுக்கு அம்மொழி மிக நன்றாகத் தெரியும் ஆகையால் அவருக்கு பகவத் கீதையைப் பற்றி பேச எழுத தகுதி இருப்பதாகப் பலர் நினைக்கக் கூடும், அது சரியா? உதாரணத்துக்கு ஆங்கிலம் பிரமாதமாகத் தெரிந்தவனை அழைத்து வந்து ஆங்கிலத்தில் மெடிக்கல், எஞ்சினியரிங், கம்பியூட்டர் சயன்ஸ் புத்தகங்களைக் கொடுத்து படித்து விளக்கம் கொடு என்றால் கொடுத்து விடுவானா? மாட்டான். காரணம் மொழி வேறு விஞ்ஞானம் வேறு.   ஒரு துறையைப் பற்றி பேச அந்த துறையில் பாண்டித்தியம் [expertise] பெற்றிருக்க வேண்டும்.  ஒரு மொழியை தெரியும் என்பதாலேயே அதில் எழுதப் பட்டுள்ள அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்பது அறியாமை.   ஒரு வேலை நாடறிந்த நகைச்சுவை நடிகன் பிரமாதமா எழுதுவார், பேசுவார் என்று அவரிடம் மேற்கண்ட அதே புத்தகங்களை கொடுத்து விளக்கச் சொன்னால் என்ன செய்வார்? அவரும் ஞே...... என்று தான் விழிப்பார். இங்கே இது தான் நடந்து கொண்டிருக்கிறது. 

பா.ஜ.க வினருக்கு மட்டுமல்ல, உயர்திரு சோ இராமசாமிக்கும் விஞ்ஞான ரீதியாக பகவத் கீதையைத் தெரியாது. ஏனென்றால் இவர்கள் யாரும் பகவத் கீதை சொன்னபடி அதைக் கற்றவர்கள் இல்லை. தகுதியுடைய குருவை சரணடைந்து, சேவை செய்து, அவரிடம் கேள்விகள் கேட்டு இந்த விஞ்ஞானத்தைக் கற்றுக் கொள்வாயாக என்று கீதையில் சொல்லப் பட்டுள்ளது.  இவர் அதைப் பின்பற்றியாகத் தெரியவில்லை.  இவருக்கு சமஸ்க்ரிதம் தெரியும், இவரே படித்தார், இவருக்கு என்ன தோன்றியதோ அதை அதற்ககு வியாக்யனமாக கொடுக்கிறார். "சர்வ தர்மான் பரித்யஜ்ய" என்று சொன்னவரையே ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு சொந்தமானவர் என்று சொல்லியிருப்பதே இதற்குச் சான்று.  

sarva-dharman parityajya 
mam ekam saranam vraja 
aham tvam sarva-papebhyo 
moksayisyami ma sucah 
BG-18.66

TRANSLATION
Abandon all varieties of religion and just surrender unto Me. I shall deliver you from all sinful reaction. Do not fear.


"சர்வ யோனிசு கவுந்தேயா" என்று எல்லா உயிர்களுக்கும் தந்தை நானே என்று பகவான் சொல்கிறார், என்றால் மத பாகுபாடின்றி அனைவரையும் படைத்தவர் அவர் அல்லவா? அவரை குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமே சொந்தம் என்பது அறியாமை அல்லவா?  
sarva-yonisu kaunteya 
murtayah sambhavanti yah 
tasam brahma mahad yonir 
aham bija-pradah pita-BG 14.4
 
TRANSLATION It should be understood that all species of life, O son of Kunti, are made possible by birth in this material nature, and that I am the seed-giving father.
 


ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை வணங்கியே தீர வேண்டுமென்றா சொல்கிறார்? நான் உண்மையைச் சொல்லிவிட்டேன், அதை ஏற்பதும் மறுப்பதும் உனது விருப்பம் என்றல்லவா சொன்னார்? அப்புறம் கீதை எங்கே வற்புறுத்துகிறது?  

 iti te jñānam ākhyātaḿ
guhyād guhyataraḿ mayā
                                                           vimṛśyaitad aśeṣeṇa
                                                         yathecchasi tathā kuru BG-18.63

Thus I have explained to you knowledge still more confidential. Deliberate on this fully, and then do what you wish to do.

இதையெல்லாம் மெத்தப் படித்த அறிவாளி சோ ஏன் இந்த தவறைச் செய்ய வேண்டும்? முன்னர் சொன்னபடி வெறும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர் கணினி புத்தகத்தைப் படித்தால், விண்டோஸ் என்பது ஜன்னல் என்று, ஆப்பிள் ஒரு பழம் என்றும், வைரஸ் ஒரு நோய்க் கிருமி என்றும்........ வியாக்யானம் தருவார். இப்போது சோ அவர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.  


இறுதியாக:

பகவத் கீதை இந்துக்களுக்கோ, இந்தியர்களுக்கோ மட்டுமல்ல மனிதர்கள் அனைவருக்கும் சொந்தமானது.

ஸ்ரீ கிருஷ்ணரே கடவுள், அவரே இந்த பிரபஞ்சத்தை படைத்து, காத்து அழிக்கிறார். [இது பொய் என்றால் அதை பைபிள், குரானை வைத்து நிறுவலாம்]

ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட வேண்டும் என்று பகவத் கீதை கட்டாயப் படுத்தவில்லை.

பகவத் கீதை மதச் சார்பற்ற நூல், ஏனென்றால் எல்லா மதங்களையும் விட்டொழித்து என்னை மட்டுமே சரணடைவாக என்கிறார் பகவான், விட்டொழிக்கும் லிஸ்டில் இந்து மதமும் அடக்கம்.

 
குருவை நாடி சரணடைந்து, சேவை செய்து பகவத் கீதையை பயில வேண்டும். அப்படி பயிலாதவர் பகவத் கீதை இதைத்தான் சொல்கிறது அதைத்தான் சொல்கிறது என்று சொல்லும் தகுதியை இழக்கிறார். தகுதிக்கு மீறிய செயலை யாரும் செய்யக் கூடாது, துக்ளக் ஆசிரியர் சோ வும் இதற்க்கு விதி விலக்கல்ல.
 
 

Monday, December 15, 2014

சாவி திருடும் காட்சியின் ஒரிஜினல் ஸீன்

Friday, November 14, 2014

வட்டத்தை விட சதுரம்தான் புத்திசாலி எப்பிடி தெரியுமா?

இன்னைக்கு ஒரு ஜோக் படிச்சேன்.

வட்டத்தை விட சதுரம்தான் புத்திசாலி எப்பிடி தெரியுமா?
,
,
,
தெரியலையா?
,
,
,
ஏன்னா வட்டத்துக்கு மூலை கிடையாதே சதுரத்திக்குதான் நாலு மூலை இருக்கு!!

ஆஹா.......   ஜோக் நல்லாயிருக்கேன்னு சொல்லி இதை மொழி பெயர்த்து வெள்ளைக்காரன் ஒருத்தனுக்கு அனுப்பினேன். 


A Square is more intelligent than a Circle, do you know how?
.
.

You don't !! OK. I will tell you the answer.
 .
.

The square is more intelligent than a circle because the square has got four corners whereas the circle has got none !!



படிச்சுப் பாத்துட்டு எப்படியும் நம்மள மாதிரியே விழுந்து விழுந்து சிரிக்கப் போறான்,  அவன் ஃபிரண்டு சர்க்கிளில் நாம ஃ பேமஸ் ஆகப் போறோம்னு மிதப்பில இருந்தேன்.  அவன்கிட்ட இருந்து பதில் வந்தது.  சிரிப்பே வரலை, இது ஜோக்கே இல்லைன்னு அந்த வெள்ளைக்காரன் எழுதியிருந்தான்.   ஆனாலும் நான் அவனை சிரிக்க வைக்கனும்னு நினைச்சேன் இல்லையா, அதுக்காக பதிலுக்கு அவன்  அவங்க ஊர் ஜோக் ஒன்னை எழுதி அனுப்பினான்.  ஜோக்னா இது மாதிரி இருக்கனும்யா, பாத்துக்கோன்னான்.

Do you Know why fishermen are selfish?
.
.

You don't !! OK. I will tell you the answer.
 .
.

The fishermen are selfish because they sell "fish".


அடடா!!  வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்யா!!  அருமையா யோசிக்கிறான்!!  சரி இந்த ஜோக்கை தமிழில் எழுதி முதல் ஜோக்கை சொன்ன நண்பருக்கு அனுப்பலாம்னு முயற்சி பண்ணினேன்.

மீனவர்கள் எல்லாம் ஏன் சுயநலக்காரர்களாக இருக்கிறாங்கன்னு தெரியுமா?
 ,
,
,
ம்........  தெரியாது தானே!!  உன்னாலே  பதில் கண்டுபிடிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும், நானே பதிலை சொல்லிடறேன்.
,
,
,

ஏன்னா அவங்க மீன் விற்கிறாங்க, அதான்!!

இதை நண்பருக்கு மெயிலில் அனுப்பினேன்.  படிச்சுப் பார்த்த அவர், க்ர்ர்ர்ர்ர்ர்ர்.............. தூ.........  ன்னு துப்பிட்டுப் போயிட்டார்..........


ஏம்பா, ஒரு ஜோக் எழுதி சிரிக்க வச்சு பேர் வாங்கலாம்னு பார்த்தா ஒருத்தரும் நம்மல விட மாட்டேங்கிறாங்களேப்பா............   ம்.......  இப்போ புரியுது, இதில் அமரிக்கா காரன் வேலை எதுவும் இல்லை.  எங்கே நான் போட்டியா வந்துடுவேனோன்னு கவுண்டமணியும், வடிவேலுவும்  பண்ற உள்நாட்டு சதி தான் இது..............  இது பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது, எப்படியும் காமடி பண்ணி சிரிக்க வச்சே தீருவேன்.  ஹா........   ஹஹா......ஹா............


Thursday, November 13, 2014

பாவாடை அணியாமல் ஷகிலா குளிக்கும் படம் பார்க்க ஆசையா?

சமீபத்தில் நம்ம நண்பர் ஒருத்தர் தன்னோட நிறைவேறாத ஆசைகள் என்னென்ன என்று ஒரு பெரிய லிஸ்டு போட்டு ஒன்னொன்னா சொல்லிகிட்டே வந்தார்.

கமலஹாசன் தன்னுடைய பேச்சை கேட்பவர்களுக்குப் புரியும்படியா பேசணும்.

முருகதாஸ் ஆங்கிலப் படங்களை கப்பியடிகாம படமெடுக்கணும்.

விஜய் தன்னுடைய படங்களில் நடிக்கவும் செய்யணும்.

இப்படியெல்லாம் ஏடாகூடமா சொல்லிகிட்டே போனார். என்னடா இது மனுஷன் இவ்வளவு hopeless ஆக இருக்கறேன்னு பார்த்தேன்.  பேசிகிட்டே வரும் போது இன்னொரு நிறைவேறாத ஆசை

"பாவாடை அணியாமல் ஷகிலா குளிக்கும் படம் பார்க்க ஆசையா இருக்கு!!" அப்படின்னு சொன்னார்.

இதப் போய் எதுக்கு இந்த மனுஷன் நிறைவேறலைன்னு சொல்றாருன்னு யோசிச்சேன். நான் அவருக்கு ஒரு ஐடியா சொன்னேன்,

"இது ரொம்ப ஈசியாச்சே. இப்பவும் ஷகீலா குளிக்கிற சீனு நிறைய படத்தில இருக்கு, அதுல ஒரு சி டி எடுத்து போடுங்க. அவங்க படத்துல குளிக்கிற சீனு வர்றப்போ நீங்க பாவாடை கட்டாம இருங்க. சிம்பிள்......"

இதை கேட்டதும் மூஞ்சி அஷ்ட கோணலா மாறிடுச்சு, ஏன்னு எனக்கு விளங்கல. அடுத்து என்னோட சந்தேகத்தையும் அவர்கிட்டே கேட்டேன்,

"அதுசரிப்பா, பாவாடையெல்லாம் நீ எதுக்கு கட்டிக்கிட்டு இருக்கே?"

அப்படியே என்னை எரிக்கிறா மாதிரி முறைக்கிறாரு.  நான் தப்பா எதாச்சும் சொன்னேனா?  விளங்கலே...............

Saturday, November 8, 2014

கருப்பு பணம் திரும்ப வருமா? வரும்........ ஆனா வராது...........!!


 நம்ம திரைப்படங்களில் காலம் காலமாக கிளைமேக்ஸில் அடிக்கடி இடம் பெரும் காட்சி ஒன்று உண்டு.  கதாநாயகன் வில்லனை அடித்து துவைத்து போட்டுவிட்டு கடைசியாய் பிழைத்துப் போ என்று உயிர் பிச்சை கொடுத்து விட்டு அந்த இடத்திலிருந்து ஒரு பத்தடி திரும்பிப் பார்க்காமல் நகர்ந்திருப்பார்.  அடி வாங்கி இரணகளத்தில் இருக்கும் வில்லன் அப்போதும் அடங்க மாட்டார்.  தன்னிடமுள்ள ஆற்றல் அனைத்தையும் திரட்டி எப்படியோ எழுந்து ஹீரோவைத் தாக்க அவர் பின்னால் ஓடுவார்.  ஓடும்போது சும்மா ஓடமாட்டார்.   "ஏய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ............."  என்று பக்கத்து ஊருக்கே கேட்கும்படி காட்டு கத்தலாக கத்திக் கொண்டே ஓடுவார்.  இவர் கத்தும் சத்தம் கேட்ட ஹீரோ திரும்பிப் பார்ப்பார்.  அதுக்கப்புறம் வில்லன் உசிரு மிஞ்சுமா என்ன?  இதில் நம்மில் பலருக்கும் புரியாத ஒரு விஷயம், வில்லன் ஏன் அவ்வளவு பெரிய கூச்சலை எழுப்பிக் கொண்டே ஓட வேண்டும், சப்தம் போடாமல் போனால் ஹீரோவை எளிதில் போட்டுத் தள்ளிவிடலாம் அல்லவா?  ஆனால் ஒரு வில்லனும் அவ்வளவு புத்திசாலியாய் செயல்படுவதில்லை, குறைந்த பட்சம் தமிழ்ப் படங்களில் இது நடக்காது!!






கறுப்புப் பணத்தை மீட்கப் போன நமது அரசின் செயலும் கிட்டத் தட்ட இப்படித்தான் இருக்கிறது.  "கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப் போகிறோம்" என்று சென்ற காங்கிரஸ் ஆட்சியில் ஆரம்பிக்கப் பட்ட கோஷம் இதோ....... அதோ........என்று வருடக் கணக்கில் இழுத்தடிக்கப் பட்டது.  இப்போ அறுநூறு சொச்சம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் சிக்கியிருக்கின்றன.  அதில் பாதிக்கும் மேல் பணமேயில்லையாம்.  இவ்வளவு வருடங்கள் எச்சரிக்கை விட்டும் எந்த மடையனாவது பணத்தை அங்கே வச்சிருப்பானா?  அப்படி வச்சிருந்தா, அவனை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளனும், பணத்தை போட்டதுக்காக அல்ல, இவ்வளவு எச்சரிக்கை பண்ணியும் பணத்தை பத்திரமான இடத்துக்கு மாத்தாம இருந்ததுக்காக!!


ஆனா, நம்ம பிரதமர் கடந்த தேர்தலில் என்னென்ன வாக்குறுதி எல்லாம் குடுத்தாரு, அதை நம்பி நாமெல்லாம் என்னென்ன கனவில் மிதந்தோம்!!


  • வெளிநாடுகளில் 80 லட்சம் கோடி இந்திய பணம் சட்டத்திற்குப் புறம்பாக பதுக்கி வைக்கப் பட்டுள்ளது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  மொத்த கறுப்புப் பணத்தையும் மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம். 
  • அதைக் கொண்டு வந்தால் இந்தியாவின் மொத்த கடனையும் அடைத்து, நாடு முழுவதையும் சிங்கப்பூர் போல மாற்றி, ஆளுக்கு கையில் மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க முடியும். 
  • அடுத்த முந்நூறு வருஷத்துக்கு வரியில்லாத பட்ஜெட் போடுவோம்.
  • எல்லா சாலைகளும் மூஞ்சியைப் பார்க்கும் கண்ணாடி மாதிரி மாத்திடுவோம்.
  • ஊருக்கு ஒரு அப்போலோ ஆஸ்பத்திரி கட்டுவோம்.  கருணாநிதி மாதிரியே குப்பனும் சுப்பனும் கூட அந்த ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கலாம்.
  • பதுக்கியவர்கள் பெயர்களை காங்கிரஸ் அரசு வெளியிட மறுத்து, காப்பாற்றி வருகிறது, நாங்கள் அவர்களை வெளிச்சதுக்கு கொண்டு வருவோம்,
மோடி பேசுவதைக்  கேட்டவர்கள், அவர் ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்தியா சொர்க்கமாகிவிடும் என்றே நம்பினார்கள்.  அவ்வாறே ஆட்சியையும் மாறியது, மோடியும் வந்தார்.  நடந்தது என்ன? 
 
நேத்து NDTV -யில் இது குறித்து ஒரு விவாதத்தைப் பார்த்தேன்.  அப்பத்தான் கறுப்புப் பணம் மேலிருந்த கறுப்பு சாயம் வெளுத்தது.  உண்மை என்ன?

  • வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் சிலர் பெயர்கள் மட்டுமே இவர்களுக்கு கிடைத்திருக்கிறது, அதுவும் நேரிடையாக அல்ல, ஜெர்மானிய அரசுக்கு எப்படியோ கிடைத்த தகவலை நம் அரசோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அதிலும் பலரது கணக்குகள் சட்டபடியானதாகவும் இருக்கக் கூடும். 
  • அவர்கள் எவரது பெயரையும் இவர்களால் வெளியிட முடியாது காரணம் அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக பணத்தை பதுக்கியுள்ளனர் என்று நிரூபிக்கப் படும் முன்னர் அவர்களது வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிடுவது அவர்களது தனிநபர் உரிமையில் மூக்கை நுழைப்பதாகும்.
  • இன்னும் எவ்வளவு பேர் எங்கெங்கெல்லாம் ஒழித்து வைத்திருக்கிறாகள் என்ற தகவல் எதுவும் அரசிடம் இல்லை. 
  • ஒரு குறிப்பிட்ட நபரின் கணக்கில் உள்ள பணம் சட்டத்துக்குப் புறம்பானது என்று நிரூபணம் அரசிடம் தற்போது இல்லை.  அவ்வாறே நிரூபித்தாலும் பணத்தை கொடு என்று நேரிடையாக அந்த வங்கியை நாட முடியாது.  எனவே மிகப் பெரும் கேள்வியே, பணத்தை எப்படி மீட்பது என்பது தான்.  [இதுவே தெரியாமல் தான் அத்தனை வாக்குறுதிகளையும் வாரி வழங்கியிருக்கிறார்கள்!!]
  • பதுக்கியுள்ள பணம் 80 லட்சம் கோடி என்றவர்கள் தற்போது வெறும் 14,000 கோடி மட்டுமே என்கிறார்கள்.   இது தமிழகத்தில் ஒரு வருடத்திய TASMAC சாராய விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் பாதி.  அதிலும் கள்ளப் பணம் என்று பார்த்தால் இன்னமும் குறையும்.  இதைப் பிரித்துக் கொடுத்தால் ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்கப் போவது என்ன தெரியுமா?  பிதாமகன் படத்தில் சூர்யா கொடுப்பாரே அது தான்!!

கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி அன்பே வா...... படத்தில் பயன்படுத்திய சோப்பு டப்பா, ஒவ்வொரு குடிமகனுக்கும்............


பணத்தை எப்படி இந்தியாவுக்குள் கொண்டு வருகிறார்கள்?  மொரிஷியஸ் நாட்டுக்கு கடத்தி அங்கிருந்து மும்பை பங்கு சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதன் மூலம் உள்ளே வருகிறது.  மொரிஷியஸ் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருப்பதால் அங்கிருந்து வரும் பணத்தைப் பற்றி எந்த கேள்வியும் எழுப்பப் பட மாட்டாது என்ற சலுகை வழங்கப் பட்டுள்ளது!!

 பணத்தை எப்படித்தான் மீட்பது?

கறுப்புப் பணத்தில் இரண்டு வகை.  ஒன்று நேர்மையாக சம்பாதிக்கப் பட்டு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது. இரண்டாவது, அந்த பணமே சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் ஈட்டப் பட்டது.  இது எந்த வகையாய் இருந்தாலும் யார் எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எந்தத் தகவலும் இல்லாத பட்சத்தில் நேரிடையாக வங்கியை நாட முடியாது.  [இதிலும் கூட, அமரிக்க அரசு சிலருடைய கணக்குகளை கேட்டுப் பெற்று பணத்தை மீட்டுள்ளதகச் சொல்கிறார்கள்].

நடைமுறையில் என்னதான் செய்தால் பணத்தை மீட்க முடியும்?  முதலில் இந்தியர்கள் இந்தியாவில் வசிப்போர்  மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் [NRI] அனைவரையும் தாங்கள் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பணம் வைத்துள்ளோம் என்று முழுத் தகவலையும் இந்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.  இதனடிப்படையில், இந்த லிஸ்டில் இல்லாத அத்தனை கணக்குகளில் உள்ள பணம் அனைத்தும் கறுப்பு பணமே என்று சொல்லி அதை திருப்பித் தர கோர முடியும், அதற்கான வழிமுறைகளை ஐக்கிய நாடுகள் [United Nations] ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மனமிருந்தால் மார்க்க பந்து..........   இல்லையில்லை.......... மார்க்கமுண்டு.   மனது வைப்பார்களா?

Saturday, November 1, 2014

கத்தி: முருகதாஸு இன்னும் எத்தனை பேருக்கு மொட்டையடிப்பாரோ

கத்தி படம் வெளிவருமா வராதா என்று மாதக்கணக்கில் ஊடகங்களில் விவாதிக்கப் பட்டு அதன் மூலமே படத்தின் பெயர் பிரபலமாகிவிட்டிருந்தது.  இறுதியில் மம்மிக்கு தொலைகாட்சி உரிமை கொடுக்கப் பட்டதால் படம் வெளியாகும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப் பட்டும் அடுத்த நாளே படம் ரிலீசும் ஆனது.  ஆனால் படத்தின் இயக்குனர் முருகதாஸுக்கு தலைவலி தான் தீர்ந்தபாடில்லை!!  படத்தின் கதை என்னுடையது என்று மீஞ்சூர் கோபி என்பவர் புலம்பிக் கொண்டிருக்கிறார்.  இவரை கதாரிசியராகப் போட்டு எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டதாகக் கோர்ட்டு படி ஏறியிருக்கிறார்.   கதைக்கு சன்மானமாக ஏதாவது கொடுத்தாரா என்றால், "இந்த ஒன்னறை வருஷத்தில் நாலே நாலு இட்லி. ஒரு டீ அவ்வளவுதான் வாங்கிக்கொடுத்திருக்கிறார். பிறகு ஒரு தடவை நூரு ரூபாய் மட்டும் கொடுத்தார்.  அதுவும் அன்று இரவு விவாதம் முடிய நடுநிசியானது. போக்குவரத்து வாகனம் இல்லை என்பதால் அந்த 100 ரூபாய் கொடுத்தார்." என்று வேதனையோடு வெதும்புகிறார்.

மீஞ்சூர் கோபி

கதை இவருடையது என்றால் காட்சிகளை வேறு ஆங்கிலப் படங்களில் இருந்து முருகதாஸ் களவாடியிருப்பதாக இணையங்களில் தகவல்கள் உலவுகின்றன.

காட்சிக்கு காட்சி அடிசிருக்காருய்யா..........!!




ஆத்தீ .........பாடல்.


இது மட்டுமல்ல, படத்தில் மின் விளக்கை ஆன் செய்தும், ஆ ஃப் செய்தும் வில்லன்களைப் பந்தாடும் காட்சியும் அப்பட்டமான காப்பியம்.



முருகதாஸுக்கு இந்த வேலைகள் புதிதல்ல.  ஆனால், கதையின் உரிமையாளர் கோபிக்கு தரவேண்டிய இடத்தை கொடுத்திருந்தால் அது வாழ்வில் அவருக்கு ஒரு திருப்பு முனையாகக் கூட இருந்திருக்கும்.  கீழ்க் கோர்டில் வழக்கை சரியாக எடுத்துரைக்கத படியால் தள்ளுபடியாகி தற்போது உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.  இதுபோன்ற வழக்குகள் வருடக் கணக்கில் இழுத்தடிக்கும், பத்து வருடங்கள் கூட ஆகலாம், இறுதியில் பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று தீர்ப்பு வரக்கூடும்.  மலையைத் தோண்டி எலியைப் பிடித்த கதைதான், போட்ட முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்காது.  எனினும், எனக்கு பணம் இரண்டாம் பட்சம் கதை என்னுடையது தான் பெயர் கிடைத்திருந்தால் அதுவே போதும் என்கிறார்.

தங்கள் கதை களவாடப் பட்டு இந்தியா போன்ற நாடுகளில் படமாவது குறித்து வெள்ளைக்கார பயலுவ ஒருபோதும் கவலைப் பட மாட்டானுங்க, பலமுறை அது தெரியாமல் கூட போகலாம்.  ஆனா நம்மூரில் உள்ள ஒரு அறிமுக படைப்பாளிக்கு அது பெரும் மனவலியாக இருக்கிறது.  முருகதாஸு இன்னும் எத்தனை பேருக்கு மொட்டையடிப்பாரோ தெரியவில்லை.................


மீஞ்சூர் கோபி என்பவர்

Thursday, September 25, 2014

ஐ.நா. ராஜபக்சே பேச, கருப்புக்கொடி- கண்ணாடிய திருப்பினா எப்படிடா வண்டி ஓடும்?

Muthuramalingam Subramanian feeling confused
ஐ.நா.சபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர். சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருணாநிதி அறிக்கை மூலம் கருப்பு தினம் கொண்டாட அழைப்பு விடுத்திருந்தார்.
இதுல என்ன லாஜிக் இருக்குன்னே தெரியலை. இங்க இருந்து கருப்பு சட்டை போட்டு வீட்ல கறுப்புக் கொடி ஏத்தினா என்னவிதமான ஆக்கப்பூர்வமான விளைவை உண்டாக்கும்..? எதுக்காக இப்படி பண்ணனும்..? இதனால் ராஜபக்சேவுக்கு என்னவிதமான நெருக்குதலை ஏற்படுத்தும்..?? யார் என்ன கலர் சட்டை போட்டு இருக்காங்கன்னு கணக்கெடுத்தா ஐநாவுல பேசவைப்பாங்க..?உண்மையிலேயே தெரியாம கேக்குறேன்.


ஆட்டோ ஓடாததற்கு காரணம் கண்ணாடியை திருப்பி வச்சிருந்தது தான்.  அதை சரியா வச்சதும் பாருங்க பிரச்சினையில்லாம ஓடும்.







Thursday, July 31, 2014

சத்யராஜ் தத்தெடுத்த நாய்- தொழில் இரகசியம் என்ன?

வணக்கம் மக்கள்ஸ்,

தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ், "தகடு........தகடு.........", "என்னம்மா கண்ணு, சவுக்யமா?", "என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே!!"  போன்ற பஞ்ச் வசனங்களால் புகழின் உச்சிக்குச் சென்றவர்.  வில்லன்களும் கதாநாயகனாகி வெற்றி பெற முடியும் என்று ரஜினிக்கப்புறம் மீண்டும் நிரூபித்தவர்.


அவரு இப்போ ஊரே மெச்சும்படி ஒரு வேலையை பண்ணியிருக்காரு.  என்ன அது?  ஒரு தெரு நாயை தத்தெடுத்திருக்கார்.  நாய்ன்னா சாதாரண நாயில்ல, அது சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 அடுக்காக இடிபாடுகளில் சிக்கி உயிர் தப்பிய ஒரு நாய்.  அதை தற்போது இவர் தத்தெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


சத்யராஜ் பெரியார் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்,  அவற்றை ஏற்றுக் கொண்டவர்.   "மனிதனை சிங்கம் என்று ஒப்பிடுவது முட்டாள் தனம், ஒரு காளை என்றால் ஏர் பூட்டியாவது ஓட்டலாம், சிங்கத்தை வைத்து என்ன செய்ய முடியும், அதனால் என்ன பிரயோஜனம்?" என்றெல்லாம் பகுத்தறிவோடு சிந்திப்பவர். 

கட்டிடத்தில் இடிந்து விழுந்ததில் தொழிலாளிகள் பலர் 72 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் கூட காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள்.  அவர்களில் யாராவது ஒருத்தரை தத்தெடுத்திருக்கலாம்.  ஆனால் அவர் தத்தெடுக்கத் தேர்ந்தெடுத்ததென்னவோ ஒரு நாய்.   அதற்க்குக் காரணம் இல்லாமலா இருக்கும். அதில் ஒளிந்திருக்கும் பகுத்தறிவு என்ன என்பதைத்தான் இங்கே நாம் புரிந்து கொள்ள முயல்கிறோம்.

தேடிப் பார்த்ததில் தமிழகத்தில் 58 பேருக்கு ஒரு தெரு நாய் தான் இருக்காம்.  இவர்களில் ஒருத்தர் ஒரு நாயை தத்தெடுத்தாலும் தெருநாயே இல்லாம போயிடும்னு ஒரு புளு கிராஸ் காரர் புள்ளி விவரம் கொடுத்திருக்கார்.  நாய்ப் பிரச்சினையைத் தீர்க்க இவங்க கிளம்பிட்டாங்கைய்யா..............கிளம்பிட்டாங்க!!

ஆக ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கணும், தமிழகத்தில் உணவின்றி தவிப்பது நாய்கள் மட்டும் தான்.  மனுஷனுங்க எல்லாம் ஈமு கோழி வளர்த்ததில் கிடைத்த லாபத்தை வைத்து கல்யாண் ஜுவல்லரி நகைக் கடையில் தங்கம் வாங்கி சுகபோகமா இருக்காங்க.  எனவே மனிதர்களைப் பற்றி கவலையே படத் தேவையில்லை.  நாய்கள் நன்றாக இருந்தாலே போதும், மனிதன் தெருவில் படுத்துக் கிடந்தாலும் பரவாயில்லை.

அதுசரி நாய் ஒரு உயிர் அது கஷ்டப்படுவதைப் பார்த்து இறக்கம் கொள்வது வரவேற்கத் தக்கதே.   அதே மாதிரி கோழி, ஆடு இதுங்களை வெட்டும் பொது கூட வலிக்கத் தான் செய்யும், நாய் படும் துன்பத்துக்கு இணையாக அவையும் துன்பப் படும், அதற்கு ஏதாவது வழியுண்டா?  உங்கள் வீட்டு சமையல் கட்டில் இனி காய்கறிகளோடு நிறுத்துவீர்களா?


Friday, July 4, 2014

இதுக்குத்தான்யா ஹிந்தி கத்துக்கனும்கிறது!!

வணக்கம் மக்கள்ஸ்!!

மோடி அரசு ஹிந்தியை கட்டாயமாக்க முற்பட்டதிலிருந்து சமூக வலைத்தளங்களில் ஹிந்தியை கற்றுக் கொள்வது பற்றி அலசி காயப் போட்டுவிட்டார்கள் [கழுவி ஊத்திட்டாங்கன்னும் சொல்லலாம்!!].  "மொழிகள் பல கல்" என்ற தமிழ் பழமொழி உண்டு, அதை ஏன் யாரும் கண்டுகொள்ள வில்லை என்று புரியவில்லை.

ஹிந்தியை எப்போது வேண்டுமானாலும் மூன்றே மாதத்தில் புத்தகத்தைப் படித்தே கற்றுக் கொள்ளலாம், தேவைப் பட்டவர்கள் வேண்டியபோது கற்றுக் கொள்ளட்டுமே என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.  அந்த மாதிரி கற்றவர்களை இதுவரை நான் பார்க்கவில்லை.  மேலும், வெளிமாநிலங்களில் ஹிந்தி படமோ, ஹிந்தியில் யாராவது பேசினாலோ எல்லோரும் புரிந்துகொள்ளும் போது அங்கே பேந்தப் பேந்த நிற்பவர்கள் யாரென்று பார்த்தால் தமிழர்களாக இருப்பார்கள், அவர் எந்த உயர் பதவியில் இருந்தாலும்!  அது தான் ஏனென்று புரிய மாட்டேன்கிறது!!

ஹிந்தி காரன் இப்போ நம்மூர்ல வந்து கூலி வேலை செய்யுறானே என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.  பெங்களூர் மென்பொருள் துறையில் முன்னணி நகரம், நம்மூரில் இருந்து எண்ணற்றோர் அங்கே பனி புரிகிறார்கள்.   அதே சமயம் அங்கிருந்து சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பனி புரிபவர்களும் இருக்கிறார்கள்.  ஏன்?  ஆக, ஹிந்தி காரன் எத்தனை பேர் இங்கே வந்து பணிபுரிகிறான் என்பது முக்கியமல்ல, நமக்கு ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு செல்லும் வாய்ப்பிருக்கிறதா என்பதே முக்கியம்.

மொத்தத்தில் தென் மாநிலங்களைத் தவிர்த்து மற்ற இந்திய பகுதிகளுக்கு வேலைக்காகவோ, குறுகியகால பயனமாகவோ போனால் ஹிந்தி அவசியம்.  ஏன்னா அங்கே ஒரு பய ஹிந்தியை விட்டா வேறு எதிலும் பேச மாட்டான், ஹிந்தி பற்று காரணமல்ல, அவனுக்கு ஹிந்தியை விட்டா வேறு எதுவும் தெரியாது, வராது!!

எங்க அலுவலகத்தில் இருந்து சுத்த தமிழர்கள் ரெண்டு பேர் ஒரு முறை கொல்கத்தா சென்றிருந்தனர்.  அவங்களுக்கு ஹிந்தி தெரியாதுன்னு சொல்லத் தேவையில்லை!!  அங்கே ஒரு அறை எடுத்து தங்கினார்கள்.  காலையில் டிபன் பரிமாறப் பட்டது.  அதில் வைக்கப் பட்ட இனிப்பு நன்றாக இருந்ததாம்.  அது முடிந்ததும், ரூம் பாய் ஏதோ ஹிந்தியில் கேட்டிருக்கிறான்.  அவன் சொல்வதை வைத்து அன்றிரவுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்கிறான் என்பது மட்டும் நம்மாளுங்களுக்குப் புரிந்தது.  ஆனால் என்ன என்பது புரியவில்லை.

அதில் ஒரு விவரமான ஆள், "டேய் இன்னிக்கு காலையில் குடுத்தானே ஸ்வீட்டு, அது வேணுமான்னு கேட்கிறான்டா" என்று 'கண்டுபிடித்து' சொல்லியிருக்கிறார்.  இன்னொரு நண்பர், அப்படியா என்று கேட்டுவிட்டு, "சார்  சாஹியே"  என்று சொல்லிவிட்டார்.  [ஆளுக்கு ரெண்டு, மொத்தம் நாலு வேணும்].  அதைக் கேட்ட ரூம் பாய் மிரண்டு போய் இவர்களை பீதியாக பார்த்த படியே அங்கிருந்து கீழே இறங்கி போயிருக்கிறான்.

உடனே லாட்ஜ் மேனேஜர் பதட்டத்தோடுஇவர்கள் அறைக்கு வந்திருக்கிறார்.  "சார், அந்த ரூம் பையன் என்ன கேட்டான், நீங்க அவன் கிட்ட என்ன சொன்னீங்க?"

"அதுவா, காலையில குடுத்தீங்களே ஸ்வீட்டு, அது வேணுமானு கேட்டான் வேணும்னு சொன்னோம், ஆளுக்கு ரெண்டா கொண்டான்னு சொன்னோம்" என்று விளக்கியிருக்கிறார்.

அதற்கு மேனேஜர், "ஐயையோ சார், அவன் ஸ்வீட்டு வேணுமான்னு கேட்கவில்லை சார், நைட்டுக்கு கில்மா வேணுமான்னு கேட்டிருக்கிறான், நீங்க ஒன்னு பத்தாது ரெண்டா கொண்டான்னு சொன்னதும் பய புள்ள மெரண்டு போயிட்டான் சார்" என்று போட்டுடைத்திருக்கிறார்.

இந்த மேட்டரை இங்கே வந்து சொன்னதும் கேட்டவர்களெல்லாம் தரையில் விழுந்து புரண்டு சிரித்தனர்!!  [அதில ஒரு அம்மா பெங்காலி!!]

Wednesday, June 25, 2014

1.76 லட்சம்- எங்கேயிருந்து இந்த நம்பரை புடிச்சுகிட்டு வந்தாங்களோ ?

வணக்கம் மக்கள்ஸ்,

இந்த 1.76 இலட்சம் என்ற நம்பர் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.  அதை மறக்கலாம்னு பார்த்தா சுத்தி சுத்தி ஞாபகப் படுத்திகிட்டே இருக்காங்களே!!




இந்த நம்பர்  திரும்பத் திரும்ப தென்படுவது ஏன்?  இது வெறும் மனப்பிராந்தியா?  எனக்கு வடிவேலு குடிப்பதை மறக்க எடுத்த முயற்சிதான் ஞாபகம் வருகிறது!!

Sunday, June 15, 2014

தினமலர் வாசகர் கருத்து வாக்கெடுப்பின் லட்சணம்

வணக்கம் மக்கள்ஸ்,

இன்று தினமலர்  தளத்தில் வாசகர் கருத்து வாக்கெடுப்பைப் பார்த்தேன்.  இதோ படம்.


இதில் கீழே வலது மூலையில் எனது கணினியில் இணையத்தின்படி செட் செய்த நேரம் உள்ளது.  சரி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த வாசகர் %  பார்க்கும் போது ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா?  இல்லையா?  சரி ரெண்டையும் கூட்டிப் பாருங்கள்!!  88+13=101..........!!  இது நூறைத் தாண்டலாகாது!!  எப்படி இவர்களுக்கு 101 வந்துச்சோ தெரியலை..........ஹி .......ஹி .......ஹி .......


ஒருவேளை அசின் வவ்வாலை நேரில் பார்த்தால் இந்த ரியாஷன் தான் குடுப்பாரோ?  #கற்பனை!!


Wednesday, May 7, 2014

தமிழ் படங்களில் காப்பியா......எவன் சொன்னான்?

வணக்கம் மக்கள்ஸ்!!

தமிழ் சினிமாக்கள் சிலவற்றின் கதைகள் ஆங்கிலப் படங்களைப் பார்த்து காப்பியடிக்கப் படுகின்றன என்ற தவறான குற்றச் சாட்டு அப்பாவி சினிமாக்காரர்கள் மீது சில பொறாமை பிடித்தவர்களால் இணையத்தில் பரப்பப் பட்டு வருகிறது.  பதிவுலகில் பெயரும் புகழும் சம்பாதித்து அதை வைத்தே நூறு கோடி பணம் சேர்க்கலாம் என்ற பேராசை பிடித்த பதிவர்கள் செய்யும் பித்தலாட்டம் அது.  ஆனால் அது உண்மையல்ல. 

 

உதாரணத்துக்கு சமீபத்தில் வந்த "தெய்வத் திரு(ட்டு)மகள்" என்ற படம்  ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை I am Sam என்ற ஆங்கிலப் படத்தைப் போலவே இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக அது காப்பி என்ற அபாண்டமான பழியைச் சுமத்தி இருக்கிறார்கள்.  அவர்களுக்கெல்லாம் ஒரு உண்மையை தெளிவு படுத்த விரும்புகிறேன், அந்த படம் காப்பியெல்லாம் இல்லை.  எப்படி தெரியுமா?  கீழே உள்ள இரண்டு படங்களைப் பாருங்கள்.


ஆங்கிலப் படத்தில் கதாநாயகன் குழந்தைக்கு பலூன் வாங்கப் போகும் காட்சியில் எல்லா பலூன்களும் ஒரே நிறத்தில் இருக்கின்றன, இடது புறமாக இருந்து வலது புறமாக சாலையைக் கடக்கின்றார்கள்.  குழந்தை கதாயகனின் கையைப் பற்றிக் கொண்டு நடக்கிறது.
அதே தமிழ் படத்தில், பல வண்ண பலூன்கள், வலது புறமாக இருந்து இடது புறமாக சாலையைக் கடக்கின்றார்கள்.  குழந்தை தனியாக முன்னால் நடக்கிறது.
இது மாதிரியெல்லாம் உத்து உத்து பார்த்தால் I am Sam படத்துக்கும், தமிழில் வந்த படத்துக்கும் ஆறு வித்தியாசமாச்சும் நிச்சயம் கண்டு பிடிச்சிடலாம்.  சாமர்த்தியசாளிகளால் அது சாத்தியம்வே!!  மூணு மணி நேரப் படத்துக்கு ஆறு வித்தியாசம் போதாதா?  அப்புறம் எப்படி காப்பியடிச்சான்னு விவரமில்லாம சொல்றீங்க?

சிலர் இதோட மட்டுமல்ல பல படங்களுக்கும் இதே குற்றச் சாட்டை வைக்கின்றனர்.  அவை அனைத்துமே தவறு.

இந்திரன் சந்திரன் Moon Over Parador படத்தோட காப்பியம்.  அட மக்குங்களா, அந்த படத்தில மீசையை ஒட்டுவான், இதில மேசையை ஷேவ் பண்ணுவான், போதாதா?  ரெண்டும் வேற வேறப்பா!!





ராஜபார்வை கிளைமேக்ஸ் பார்த்தால் The Graduate படத்தோட கிளைமேக்ஸ் மாதிரியே இருக்காம்.  அட குருட்டு பசங்களா, ஆங்கிலப் படத்தில் அவனுக்கு கண்ணு தெரியுது, தமிழ் படத்தில் தள்ளிகிட்டு போறவனுக்கு கண்ணு தெரியாது, ரெண்டும் ஒன்னு தான்னு சொல்லாதீங்கப்பு!!






அதே மாதிரி எனக்குள் ஒருவன் Reincarnation of Peter Proud மாதிரியே தான்  தோணும்,அது  வெறும் மனப் பிராந்தி.  தெளிவா இருங்க, ரெண்டும் வேற!!






என்னய்யா இது ரெண்டும் ஒரே மாதிரி இருக்கேன்னு நீங்க வம்புக்கு வருவீங்க.  அதுக்கும் நாங்க ரெடியா பதில் வச்சிருக்கோம்.  உதாரணத்துக்கு, ரெண்டு பேர் லவ் பண்ற மாதிரி படமெடுத்தா அது, "ஏக் துஜே கே லியே"  மாதிரியே இருக்குன்னு சொல்வீங்களா?  அப்போ லவ் பண்ற மாதிரி யாருமே இனி படமே எடுக்கவே முடியாதே!!  அப்படின்னு கிடிக்கி பிடியா போடுவோம், உங்க பதில் என்ன ?  [ஆஹா........ மாட்டிகிட்டீங்களா.......... மாட்டிகிட்டீங்களா..........!!].

அப்போ என்னவெல்லாம் செய்தால் ஒரு படம் இன்னொரு படத்தில் இருந்து காப்பியடிச்சதுன்னு சொல்லலாம்?  ஒரிஜினல் கதை தான் என்று  எப்படிச் சொல்வது?


எந்த கட்டத்தில் ஒரு படம் இன்னொரு படத்தின் காப்பி என்று சொல்ல முடியும்?

இது யார் வழுக்கைத் தலையன், யார் இல்லை என்று சொல்வது போல கஷ்டமான கேள்வி.  என்ன வழுக்கைத் தலையனா, அதுக்கு இங்க என்ன சம்பந்தம்ன்னு புரியவில்லை தானே!!  பொறுங்கள் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்!!   ஒருத்தனுக்கு தலையில் ஒரு முடி கூட இல்லை என வைத்துக் கொள்வோம்.  அவனை வழுக்கைத் தலையன் என்போம்.  அவன் தலையில் ஒரே ஒரு முடி இருபதாகக் வைத்துக் கொள்ளுங்கள்.  இப்போ அவன் வழுக்கைத் தலையன்  இல்லை என்போமா?  கிடையாது!!  சரி இன்னொரு முடியை சேர்ப்போம். அவன் தலையில் ரெண்டு முடி உள்ளன. இப்போ?  ஹி .......ஹி ....... இப்பவும் அவர் வழுக்கைத் தலையன் தான்.  இப்படியே அவர் தலையில் முடிகளை அதிகரித்துக் கொண்டே செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போ கேள்வி: எந்த ஒரு முடியை அவர் தலையில் சேர்க்கும்போது அவரை வழுக்கைத் தலையர் இல்லை என்போம்?  [இதையே ரிவர்சிலும் சொல்லலாம்.  தலை முழுக்க முடி உள்ளவனிடம் இருந்து ஒவ்வொரு முடியாக நீங்க வேண்டும்.  எந்த ஒரு ஒரு குறிப்பிட்ட முடியில் அதை நீக்கும் பொது அவர் வழுக்கை என்ற பெயர் பெறுவார்?  இது ஏதோ ஒரு லஜிக்காம், எனக்கும் முழுசா தெரியலை]

அப்படி இருக்கு இந்த காப்பியடிச்ச கதை!!  காப்பி என்றால் இருவர் காதலிக்கும் காட்சியைக் கூட இன்னொரு முறை எடுக்க முடியாது.  அப்படியே ஒரு படத்தில் இருந்து ஒன்னொன்னா சேர்த்துகிட்டே போனா எப்போ அது காப்பின்னு சொல்லலாம்?  எதுவரை காப்பி இல்லை?
 
சரி இப்போ சில தமிழ் படங்கள் கதை உருவாவது எப்படி என்று பார்த்தால், இது பற்றி செய்தி  தாட்கள் மூலம் நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.  வடிவேலு, "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" என்று சொன்னது போல இதற்கென்று ஏதாவது நட்சத்திர ஹோட்டல்களில் ரூம் போட்டு சம்பந்தப் பட்டவர்கள் கதையைப் பற்றி விவாதிப்பார்கள்.  "ஸ்டோரி டிஸ்க ஷன்" என்று இதற்குப் பெயர். அந்த ரூமில் அப்படி என்னதான் நடக்கும்?  ஆங்கிலப் பட வீடியோ கேசட்டுகள் [தற்போது சி.டிக்கள்] எடுத்து வந்திருப்பார்கள், அவற்றில் நாலஞ்சு படத்தைப் பார்த்து அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று பிச்சு போட்டு, நம்ம கலாச்சாரத்துக்கு [அப்படின்னு ஒன்னு முன்ன இருந்தது, இப்போ சீரழிஞ்சு போச்சுங்கிறது வேற விஷயம்!!] ஏற்ற மாதிரி அங்கங்க கொஞ்சம் டிங்கரிங் பண்ணுவார்கள்.  அதாவது ஆங்கிலப் படத்தில் கதாநாயகி, நாயகன் மற்றும் வில்லன் இருவருடனும் கசாமுசா செய்வதாக இருக்கும்.  இங்கே நாயகனுடன் மட்டும் தான் அது நடக்கும், வில்லனைப் பார்த்ததும், "நீங்க ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப் பட்டிருந்தா பரவாயில்லை, ஒரு தாயைப் பார்த்து ஆசைப் படலாமா?" என்பது போல மாற்றி விட வேண்டும், அவ்வளவு தான் கதை ரெடி.

 இதையெல்லாம் காப்பி என்று சொல்வது தவறு.  இதற்கு வேறு பெயர் இருக்கிறது.

உடல் ஊனமுற்றவர்கள்-மாற்றுத் திறனாளிகள்
விபச்சாரம் செய்வோர்-பாலியல் தொழிலாளிகள்
இலவசம்-விலையில்லா பொருள்
இரண்டு இனத்துமல்லாதவர்கள்-திருநங்கைகள்
புட்டுகிட்டான்-வைகுண்டப் பதவியை அடைந்தார்.

இப்படியெல்லாம் கண்டுபிடிச்ச நாம் காப்பியடிப்பதை மட்டும் சும்மா விடுவோமா?

காப்பியடித்தல் - இன்ஸ்பிரே ஷன்.

எங்க ஆளுங்களுக்கு வருவது இன்ஸ்பிரே ஷன் !!   God Father படத்தை காப்பியடிக்கவில்லை, இன்ஸ்பிரே ஷன்ஆகி Xerox செய்தார் அம்புட்டுதேன்!!

தொடர்புடைய பதிவுகள்:

சினிமா கதைகள்- எங்கேயிருந்து உருவப் பட்டன? -லிஸ்ட்.

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா ?

 கமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா? புதிய தகவல்கள் – வீடியோக்களுடன்

தமிழ் சினிமாவில் ‘அதிபுத்திசாலிகள்’ : எ காப்பி ஸ்டோரி

"கொலாப்ஸ்" வருண்: நக்குற நாய்க்கு செக்கு என்ன, சிவலிங்கம் என்ன.........??

வணக்கம் மக்கள்ஸ்!!

இது ஒரு வம்பிழுக்கும் பதிவு, வேண்டாமென்பவர்கள் ஒரு ஸ்டேப் பேக் ஆகிக்கோங்க.  இந்தப் பதிவை படிக்க நீங்க கொஞ்சம் அதிகம் படித்திருக்க வேண்டும்.  எவ்வளவு தெரியுமா?  அது ரொம்ப ஜாஸ்தி!!  எட்டாம் கிளாஸ்!! அதில் வரும் அறிவியலும் கணிதமும் தெரிந்திருக்க வேண்டும்.  ஹி .......ஹி .......ஹி .......  [நம்ம கொலாப்ஸ் இதுக்கே  நாறிப் போய் கிடக்கிறார் என்பது தான் காமடி!!].

பதிவர்கள் வீண் சண்டை போடக்கூடாது என்று நமது நலன் விரும்பும் சில மூத்த பதிவர்களின் ஆதங்கம் நமக்கும் புரிகிறது.  ஆனாலும் ஒரு சிலவற்றை பாக்கி வைக்காமல் முடிக்க வேண்டும் என்று நீதி நூல்கள் கூறுகின்றது.  அவை, நெருப்பு, கடன், நோய், கொடிய எதிரி- இவற்றையெல்லாம் மிச்சம் வைக்காம காலி செய்துவிட வேண்டும், மிச்சம் வச்சா அது பின்னாடி நம்மையே காலி செய்துவிடும்.

அந்த வகையில் கொலாப்சின் உண்மையான ரூபத்தை தோலுரித்துக் காட்டுவதில் இறங்கிய நாம் அதை முடிக்காமல் நிறுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்,  ஆனால் இது தொடராது நிச்சயம் முற்றுப் புள்ளி வைப்போம் என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறோம்!!

"கொலாப்ஸ் பிளீஸ்........!!" மாமா வருண் அவர்களுக்கு தமக்கே எல்லாம் தெரியும் மற்றவன் அத்தனை பேரும் மடையர்கள் என்ற எண்ணம் வெகு காலமாகவே இருந்து வருகிறது.  இதை நாட்டு வெடி வைத்து தகர்த்தெறிந்தவர் பதிவர் வவ்வால்.  அதை தொடர்ந்து செய்தும் வருகிறார்.  இதனால் பல வலைப்பூக்களில் கொலப்சின் டவுசர் கிழிக்கப்பட்டது.   வவ்வால் போடுவதில் தனது டவுசரை கிழிக்கும் பின்னூட்டங்களை தடுக்க தன்னுடைய தளத்திற்கு "கமண்டு மாடரேஷன்" வைத்தார், தனது கேனத்தனம் வெளிப்படுத்தும் வவ்வாலின் பின்னூட்டங்களை வெளியிடாமலேயே தவிர்த்தார்.  இப்படியே தினமும் டவுசர் கிழிந்ததால் ஏற்பட்ட அவமானத்தால் கூனி குறுகிப் போன "கொலாப்ஸ்" வருண் உள்ளுக்குள்ளயே புழுங்கி புழுங்கி மனோவியாதிக்கு ஆளாகிப்போனார். வவ்வாலை நேரடியாக எதிர்கொள்ள வழியில்லாமல் ஒரு கள்ள பெயரில் ஐ.டி . யை உருவாக்கி சொந்த பதிவிலேயே பின்னூட்டங்கள் போட்டுக் கொள்கிறார்.  அத்தோடு நில்லாமல் தனியாக வவ்வாலை தாக்குவதற்கென்றே ஒரு பிளாக்கையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.  சுட்டி.

படித்தவன் சூதும் வாதும் செய்யலாமா?  செய்தால் அவன் கதி .......  என்னவாகும் என்று நான் சொல்ல விரும்பவில்லை.

"எதற்கெடுத்தாலும் விக்கிபீடியாவைப் படித்து அதைப் புரிந்து கொள்ளாமலேயே சும்மா அடித்து விடுகிறவர்" என வவ்வாலை இவர் குற்றம் சுமத்துகிறார்.   வவ்வாலை "விக்கிநக்கி" என்ற ஒரு தரங்கெட்ட புது வார்த்தையைப் பயன்படுத்தி அழைக்கிறார்.  ஆனால் உண்மையில் யார் விக்கிநக்கி என்பதைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.


கொலாப்ஸ் தன்னை விஞ்ஞானத்தில் எக்ஸ்பெர்ட் என்று சொல்லிக் கொள்கிறார்.   அப்பேற்பட்டவர்,

உயிர் வாழ எது முக்கியம்?  ஹைட்ரஜனா,  ஆக்சிஜனா இல்லை தங்கமா?

என்று கேள்வி கேட்டு பதிவு போட்டிருக்கிறார்.  இதை வச்சு ஒரு வாழ்க்கை தத்துவத்தை விளக்கப் போறாராமாம்.

"ஏன்யா முதலில் ஆக்சிஜன் இல்லாம உயிரினம் தோன்றியிருக்குமா?  வெறும் ஹைட்ரஜன் Gas ஐ மட்டும் வச்சிக்கிட்டு வாழ்ந்திட முடியுமா?  அதே மாதிரி ஒவ்வொரு தனிமத்துக்கும் ஒரு பயன்பாடு இருக்கிறதல்லவா?  எனவே, எந்த மடையனாச்சும் இப்படி ஒரு ஒப்பீடு செய்வானா?"  என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.  ஆனால்  இப்படி கேனத் தனமாக சிந்திப்பது தான் கொலாப்ஸ் வருணின் ஸ்பெஷலே!!  அதையும் படிச்சிட்டு ஆஹா....... என் அறிவுக்கண்ணை திறந்து உட்டுட்டீங்கன்னு சொல்லி பின்னூட்டம் போடும் மாங்கா மடையனுங்களும் இருக்கானுங்க என்பது தான் உச்சகட்ட காமடி.

சரி ஒரு கருத்தை விளக்குவதற்கு கற்பனை கதைகள் தேவை தான், அவை லாஜிக்குக்கு அப்பாற்பட்டவை என்றே எடுத்துக் கொள்வோம்.  ஆனால் அடுத்து எது பெரிசுன்னு தீர்ப்பை சொல்ல ஒரு அறிவியல் பாடம் எடுத்திருக்காரே, அதை ஒரு எட்டாம் கிளாஸ் பையனை கூப்பிட்டு காண்பித்தாலும் கைகொட்டி சிரிப்பான், காரி துப்புவான்.  சுட்டி.

சரி இதுக்கு அப்படி என்னதான் தீர்ப்பு என்ன சொல்ல வருகிறார்?  ஹைட்ரஜன் தான் இருப்பதிலேயே முக்கியமாம்.  காரணம்?  ரெண்டு ஹைட்ரஜன் சேர்ந்து Atomic Fusion ஆவதால் தான் சூரியனில் இருந்து வெளிச்சம் வருதாம். அதனால் தான்.  நமக்கு தூக்கிவாரிப் போட்டுடிச்சு.  என்னடா இது ஹைட்ரஜன் ஹீலியமா மாறுவதால் தானே சூரியன் போன்ற நட்சத்திரங்களில் வெளிச்சம் உருவாகுதுன்னு எட்டாம் கிளாசில் படிச்சோம்,  வெறும் ரெண்டு ஹைட்ரஜன் சேர்ந்தா எப்படி ஹீலியமா மாறும், எதை வச்சு இந்த எல்லாம் தெரிஞ்ச எல்லப்பன் இந்த அடி அடிக்கிறாருன்னு குழம்பிடுச்சு.

அவரு அதுக்கு போட்டிருந்த படத்தை பார்த்த அப்புறமா விளங்குச்சு. அதை  விக்கிபீடியாவில இருந்து எடுத்திருக்கார் !!  சரி எடுத்தாரு போட்டாரு, அங்கே சொல்லியிருப்பதை இவரு புரிஞ்சிகிட்டாரா என்றால் அங்கதான் இடிக்குது.   ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும் சுழற்சிக்குப் பெயர், proton–proton chain reaction.

The proton–proton chain reaction is one of several fusion reactions by which stars convert hydrogen to helium.

இதில் proton–proton என்ற வார்த்தையை படித்த இந்த மாங்கா ரெண்டு புரோட்டான் சேர்ந்து ஹீலியமா மாறுதுன்னு அதுவாவே அர்த்தம் பண்ணிகிச்சு, அப்படியே பதிவும் போட்டுடுச்சு. 




இந்த படத்தில் மொத்தம் ஆறு ஹைட்ரஜன் அணுக்கள் [சிவப்பு வண்ணம்] ஈடுபட்டுள்ளன, வினையின் முடிவில் அவற்றில் நான்கு ஹீலியம் அணு உருவாவதற்கு போக  இரண்டு ஹைட்ரஜன்அணுக்கள் மீதம் உள்ளது.   எல்லாம் தெரிஞ்ச எல்லப்பன் உண்மையில் ஒன்னு ரெண்டு எண்ணுவதிலேயே ஃ பெயில்!!  எதையும் யோசிப்பதில்லை, அல்லது பொறுமையாகப் படிப்பதும் இல்லை.  சும்மா அடித்து விடுவது.  இத்தனையும்  செய்துவிட்டு தான் எழுதுவதை படிக்க வரும் இளிச்சவா பயல்களை [Gullible] தான் எல்லாம் தெரிஞ்ச எல்லப்பன் என்று நம்ப வைப்பதில் கைதேர்ந்தவர் கொலாப்ஸ்!!



விக்கிபீடியாவில் படிச்சிட்டு அந்த படத்தை அப்படியே எடுத்து பதிவில் போட்டுவிட்டு, அவன் சொல்லியிருப்பதை புரிந்துகொள்ளாமல் கேனத்தனமாக அர்த்தம் செய்துகொண்டு, தன்னுடைய முட்டாள் மண்டையில் பட்டதை எழுதும் மாமா கொலாப்ஸ் பிளீஸ்.......  வருண் தான் உண்மையிலேயே விக்கிநக்கி என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர், அவரை விட பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது.

இந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு அடுத்தவர்களை விக்கிபீடியாவை மட்டும் படித்தவன் என்று ஏளனம் செய்வது சரியா? ஆனால், கொலாப்ஸ் வருண் அதையும் செய்வார், அதுமட்டுமல்ல தவறை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார், தான் சொன்னது அத்தனையும் சரிதான்..... சரிதான்.........  என்று சப்பை கட்டும் கட்டுவார்.  அதுசரி, நக்குற நாய்க்கு செக்கு என்ன, சிவலிங்கம் என்ன.........?? எல்லாம் ஒன்னு தானே!!

Tuesday, May 6, 2014

பதிவர் வருனுக்கு வந்திருப்பது "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" என்னும் மனச்சிதைவு நோய்.

வணக்கம் மக்கள்ஸ்!!

கொலாப்ஸ் பிளீஸ்.................  வலைப்பூவை நடத்தி வரும் பதிவர், மாமா, கொலாப்ஸ் என்றெல்லாம் செல்லமாக அழைக்கப் படும் திரு. வருன் [நல்லா கவனிங்க நான் போட்டிருப்பது வருன், கடைசி எழுத்து "ன்", உச்சரிப்பில் இதே பெயரை வச்சிக்கிட்டு கொள்ளை பேரு நாட்டில் இருக்கலாம், அதற்கு நான் பொறுப்பல்ல!!] அவர்களுக்கு ஏதாவது மன வியாதி இருக்கலாம் என நாம் யூகித்தோம், அது உண்மைதான் என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.

கொலப்சுக்கு வந்திருப்பது "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" என்னும் மனச்சிதைவு நோய். இதை வேலூரைச் சார்ந்த டாக்டர். கியூட்டி பிகாசோ [Dr.Cutie Picasso] என்ற மனோதத்துவ நிபுணர் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்.  இது என்ன நோய், என்ற விவரங்கள் குறித்து நாம் டாக்டர். கியூட்டி பிகாசோஅவர்களைக் கேட்டு புரிந்து கொண்டோம்.  அதை இங்கே உங்களுக்குத் தருகிறோம்.


நீங்கள் அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள்.  அதில் மெல்லிய மனம் படைத்த அம்பியாக விக்ரம் இருப்பார்.  சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்து அந்நியனாக உருவெடுப்பார்.  ஆனால் இங்கே கொலப்சுக்கு அப்படியே தலை கீழ்.

நடைமுறையில் அவர் அந்நியன் போல கொடூரமான கேரக்டர்.  தளிர் சுரேஷில் இருந்து, தமிழ் இளங்கோ, வீடு திரும்பல் மோகன் குமார் வரைக்கும்  எல்லோரையும் காரணமேயில்லாமல் இம்சை பண்ணுவார், ஆனால் மனதுக்குள் நாமும் நல்லவனாக வாழக் கூடாதா என்ற ஏக்கமும் அவருக்கு இருக்கிறது.

இதுதான் கொலாப்ஸ் பிளீஸ்........ வருனின் நிஜ கேரக்டர்...................

இந்த கேரக்டரா ஆகனும்னு மனசுக்குள் ஆசை...............

ஆனால் அவரால் நல்ல கேரக்டராக மாற முடியவில்லை.  இருந்தும் அவரது ஆள் மனதுக்குள் அந்த ஆசை தீவிரமாக வளர்ந்து மென்மையான "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" ஆக மாறுகிறார்.  இதன் விளைவாக அந்த மென்மையான குணம் வரும்போது அனானி பெயரில் அவரது வலைப்பூவிலேயே பின்னூட்டங்கள் போடுவார்.  அப்புறம் அடாவடி வருனாக வந்து பதிலும் போட்டுக் கொள்வார்.  ஆனால் படிப்பவர்களுக்கு ரெண்டு பின்னூட்டமும் ஒருத்தருடையது மாதிரியே இருப்பதாகத் தோன்ற, இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவையா என்று காரி உமிழ ஆரம்பித்தனர்.  உடனே அனானி ஆப்ஷனையே தனது பதிவில் இருந்து நீக்குகிறார் அடாவடி கேரக்டரில் இருந்த கொலாப்ஸ்.

ஆனாலும், நல்ல கேரக்டராக மாற வேண்டும் என்ற ஆசை மட்டும் போகவே இல்லை.  அதன் விளைவாக புது கேரக்டர் ஒன்று உருவானது.  அதன் பெயர்தான் அனந்து ராமகிருஷ்ணன்!!  இந்த சாப்ட் கேரக்டர் என்ன பண்ணும் தெரியுமா?  கொலப்சுக்கு எதிராக  பதிவு போட்டால் அங்கே போய் அனானி பெயரில் லந்து பண்ணும், ஆனால் சொந்தப் பதிவில் அனந்து ராமகிருஷ்ணன் என்ற பெயரிலேயே பின்னூட்டம்  போடும்.  அதில், ஐயா நீங்க நேர்மையானவர், வல்லவர், நல்லவர் என்று கொலாப்சை புகழும், எதிரியாகக் கருதுபவர்களை வசை பாடும்.  அதற்கு அடாவடி கேரக்டர் ஒரிஜினல் ஐ.டி யிலேயே வந்து, "ஆமாம் பாத்தியா?"  என்று பதிலும் போடும். 

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, அனந்து ராமகிருஷ்ணன் என்ற ஒரு  "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" கேரக்டர் இருப்பதே கொலப்சுக்குத் தெரியாது, ஆனால் அனந்து ராமகிருஷ்ணனுக்கு கொலாப்ஸ் கேரக்டர் இருப்பது தெரியும்.  இதனால், கொலாப்ஸ் "நான் அனானி பெயரிலோ, சாப்டு கேரக்டர் அனந்து ராமகிருஷ்ணன் பெயரிலோ எங்கும் பின்னூட்டம் போடுவதில்லை" என்றே சொல்லிக் கொண்டிருக்கும்.  அது பொய் என்று மற்றவர்கள் நினைக்கக் கூடும்.  ஆனால் அது உண்மையே.  அப்படி ஒரு கேரக்டர் இருப்பதே அவருக்குத் தெரியாது, ஆகையால் அவரைத் தெரியாமலேயே இதெல்லாம் நடப்பதால் அவர் மறுக்கிறார்.  எனவே அவர் மீது தப்பேயில்லை, யாரும் சந்தேகப் படாதீர்கள்.

இந்த வியாதிக்கு தீர்வுதான் என்ன என்பதையும் டாக்டர். கியூட்டி பிகாசோ விடம் கேட்டோம்.  அதற்கு சக பதிவர்களாகிய நாம் தான் உதவ வேண்டுமாம்.  என்ன செய்ய வேண்டும்?  அந்த அடாவடி கொலாப்ஸ் கேரக்டர் எல்லோரையும் வம்பிக்கிழுக்கும்,  திட்டி பின்னூட்டம் போடும்.  நாம் ஐயோ பாவம், மனோ வியாதி என்று விட்டு விட்டால் அது ஆபத்து [நமக்கில்லைங்க, அவருக்கு!!].  வியாதி இன்னும் முத்திப் போகும்.  பதிலுக்கு லூசு, மெண்டல்...........   என்று என்னென்ன மட்டமான வார்த்தைகள் தெரியுமோ அத்தனையும் கொண்டு அவரைத் திட்ட வேண்டும்.  ஆள் குஷியாயிடுவார், வியாதியும் படிப்படியாகக் குறையும்!!  எல்லோரும் இதைக் கடை படித்தால் கொலாப்சிடம் அவர் விரும்பும் மென்மையான பண்பு வளர்ந்துவிடும்!!

பின் குறிப்பு:  இந்தப் பதிவுக்கும் இன்னொரு பதிவில் வெளியான பின்னூட்டங்களுக்கும் [சுட்டி] எந்த சம்பந்தமுமில்லை.  அவ்வாறு நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

Monday, May 5, 2014

கொலாப்ஸ் பிளீஸ்.........!! புலித்தோல் போர்த்திய பூனை!!

வணக்கம் மக்கள்ஸ்!!

இந்தப் பதிவில் நம்மை வம்பிக்கிழுத்த ஒருத்தருக்கு கணக்கு செட்டில் செய்யப் போகிறோம்.  வம்பு சண்டை வேண்டாம்பா என்பவர்களும், மென்மையான உள்ளம் கொண்டவர்களும் ஒரு ஸ்டெப் பேக் ஆகிக்கோங்க.....  டென்ஷனாகாதீங்க "ரிலாக்ஸ் பிளீஸ்............!!"

முதலில் பிரச்சினையின் பின்னணி என்ன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.  [வரலாறு முக்கியம் அமைச்சரே!!]

"கொலாப்ஸ் பிளீஸ்............!!"  என்ற வலைப்பூ உங்களில்  தெரிந்திருக்கும்.  நாம் வலைப்பூ ஆரம்பிப்பதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பே அதற்கு வாசகராக இருந்துள்ளோம், பல பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டுள்ளோம்.  அதன் ஓனர் "கொலாப்ஸ்" அவரும் நம் கடைக்கு அவ்வப்போது வருவார்.


நாம் ஆத்தீகர், அவர் நாத்தீகர் [அப்படின்னு சொல்லிக்கிறார்!!].  எனவே நமக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள்  தவிர்க்க முடியாதவை.

ஆனாலும் பொதுவாகவே,

  • அவர்  கருத்துக்கள் அத்தனையும் வெளியிட்டிருக்கிறோம், ஒருபோதும் எதையும் நீக்கியதில்லை.
  • முடிந்தவரை நமது பதிலை, நிலைப்பாட்டை, அவை அவருக்கு ஏற்கத் தக்கதாக இல்லாவிடினும், சொல்லியே வந்திருக்கிறோம்.
  • அவரை எதிர்த்து ஒருபோதும் கடுஞ் சொற்களைப் பயன்படுத்தியதில்லை.

மொத்தத்தில் அவரது கருத்துகளை  நமது பதிவில் வெளியிட முழு சுதந்திரம் கொடுத்தே வந்துள்ளோம்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நாம்,

‘கூமுட்டை’யின் ‘கூரு’ கெட்ட எட்டு கேள்விகளுக்கு பதில்கள்...............

என்று  ஒரு பதிவை வெளியிட்டிருந்தோம்.  அதில் "கொலாப்ஸ்" பின்னூட்டமிட்டிருந்தார்.  நாமும் வழக்கம் போல பதிலும் தந்தோம்.  என்ன ஆயிற்றோ தெரியாது.  குடு.....குடுன்னு... அவரது கடைக்கு ஓடினார், நம்மை கன்னா........பின்னாவென்று கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி ஒரு எதிர் பதிவைப் போட்டார்.  சுட்டி.

நல்லா கவனிக்கணும், இவர் இந்த மாதிரி வேலை செய்வது இது முதல்முறை அல்ல, மேலும் இவர் சண்டையிடுபவர்கள் எல்லோரும் வம்பிழுப்பவர்களும் அல்ல.  நமக்கு முன்னாடி வீடு திரும்பல் மோகன் குமாரிடம் சண்டைபோட்டு அவருடைய பதிவில் போட்டிருந்த பின்னூட்டங்கள் அத்தனையும் அழித்துவிட்டு "உன் கூட கா.........." என்று திட்டிவிட்டு ஓடி வந்திருக்கிறார்.  மோகன்குமார் யாரிடமும் வம்புசண்டைக்கு போகாதவர், அன்பானவர், புதியவர்களை ஆதரிப்பவர்.  ஏதோ நாம் தான் வம்பிழுக்கிறோம் சண்டை போட்டார், ஆனால் மோகன்குமார்?

நமக்குப் பின்னும் இவர் இன்னொருத்தரை நொந்து போக வைத்திருக்கிறார்.  அவரோ இன்னமும் வெள்ளந்தி, பதிவர் தமிழ் இளங்கோ. என்னதான் ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் பின்னூட்டமிட்டாலும் பொறுமையாகவே பதில் சொல்லுவார்.  அவரையே பொறுமையிழக்கச் செய்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!!  கொலாப்ஸ் பதிவிற்கு சுட்டி.  இந்தப் பதிவிற்கு மெண்டல், லூசு போன்ற வார்த்தைகளை தனது பதிவில் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்ப்படுத்திய பெருமை கொலப்சையே சாரும்.  தமிழ் இளங்கோவின் பதிவு சுட்டி.

பதிவர் தமிழ் இளங்கோ நொந்து போய் பதிவு போட்டதும் கொலாப்சுக்கு ரொம்ப சந்தோசம்.  அப்படி மகிழ்ச்சியா கொலாப்ஸ் போட்ட பதிவு சுட்டி.





ஒருவரது எழுத்துக்களை வைத்தும் அந்த நபரைப் பற்றி சில குணாதிசயங்களைப் புரிந்துகொள்ள முடியும்.  அன்பர் கொலப்சின் எழுத்துக்களைப் படிக்கும் போது அவர் வம்புசண்டைக்குப் போகக் கூடிய ஆள் இல்லை.  மென்மையானவர், ஆனால் வடிவேலு "நானும் ரவுடி தான்" என்பது போல, வம்பு சண்டைக்காரன் என்ற பிம்பத்தை வெளிப்படையாக உருவாக்க நினைக்கிறார்.  அது ஏன் என்பது மட்டும்  விளங்கவில்லை. ஒரு பூனை புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயமுறுத்த நினைக்கிறது, ஆனால் அதனால்  புலி போல கர்ஜிக்க முடியவில்லை, "மியாவ்..........மியாவ்.........." என்றே கத்தி காமடி செய்கிறது!!


இதையெல்லாம் வச்சிப் பார்க்கும் போது ஒன்னு மட்டும் தெளிவா புரியுது.  அன்பர் கொலப்சுக்கு இருப்பது ஒருவித மனோ வியாதி.  எங்கேயாச்சும் போய் தினமும் வம்பு சண்டை இழுக்க வேண்டும்.  அது யாராக இருந்தாலும் கவலையில்லை.  சாதுவா இருக்கிறவங்களை கீழ்த்தரமான வார்த்தைகளை பேச வைக்க வேண்டும்.  உடனே இவருக்கு ரொம்ப சந்தோசம்.  இதற்கு காரணம் பதிவர் வவ்வாலு சொன்னாரு, அமரிக்காவில் வேலை செய்யும் கொலாப்சை அவரது முதலாளி வெள்ளைக்கார துரை  போட்டு வறுத்தெடுக்கிறார் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை இங்கே பதிவுலகில் வந்து கொட்டுகிறார்".  எனக்கென்னவோ இது கூட சரியாத்தான் இருக்கும் போலத் தோணுது.

ஐயா, மனோ தத்துவ நிபுணர்களே இந்த வியாதிக்கு பேரு என்ன, அதுக்கு தீர்வு என்ன?  கண்டுபிடிச்சு இந்த கொலப்சை சரி பண்ணுங்கப்பா..........  தொல்லை தாங்க முடியவில்லை!!