Sunday, June 10, 2018

மனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன?


தேதி: 14 நவம்பர் 2013
பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ராஜேஷ் குமாரிடம் தனது SBI ATM கார்டை கொடுத்து பணம் எடுத்து வர அனுப்புகிறார். கணவர் ரூ.25 ஆயிரம் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது இயந்திரத்தில் இருந்து பணம் வழங்கப்பட்டுவிட்டதாக ரசீது மட்டும் வந்துள்ளது, ஆனால் பணம் வரவில்லை!!
உடனே ராஜேஷ் குமார் 24 மணி நேர கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டுள்ளார், அவர்கள், 'பணம் வராதது ATM ஃபால்ட், அதனால் உங்கள் பணம் உங்கள் வாங்கிக் கணக்குக்கே திரும்பி வழங்கப் படும்" என்று சொல்லி வைத்து விட்டனர். ஆனால் ரெண்டு நாளாகியும் பணம் வராததால் சம்பந்தப் பட்ட வங்கிக்கே ராஜேஷ் குமார் சென்று புகார் கொடுக்க, வங்கியினரோ, தவறேதும் நடக்கவில்லை பணம் வழங்கப் பட்டுவிட்டது என்று தெரிவிக்க, கணவனும் மனைவியும் ஷாக்காகிப் போயினர்.
பின்னர், எங்கெங்கோ அலைந்து திரிந்து அந்த ATM மில் இருந்த கேமராவில் ராஜேஷ் குமார் பணமெடுத்த CCTV FOOTAGE ஐப் பெற்றனர். அதில் பணம் வராதது தெளிவாகப் பதிவாகியிருந்தது. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அன்றைய தேதியில் 25000 ரூபாய் கணக்கை விட அதிகமாக இருந்ததாக தகவலையும் அவர்கள் பெற்றனர்.
அதைப் பார்த்த வங்கியினரோ, "வந்தனாவோட கார்டில் பணம் எடுத்ததாகச் சொல்லறீங்க ஆனால் இதில் வந்தானா ஆளே இல்லையேய்யா" என்று கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.
"நானே குழந்தை பிரந்ததால் வெளியே போகமுடியாமத்தானே ஏன் வீட்டுக்காரை அனுப்பி பணம் எடுத்துக்கிட்டு வராச் சொன்னேன் அப்புறம் அந்த ATM கேமராவில் நான் எப்படி இருப்பேன்?" என்று வந்தனா கேட்டிருக்கிறார்.
அதற்கு "அம்மணி, நாங்க இந்த கார்டும், PIN நம்பரும் உங்களுக்கு கொடுத்தது நீங்க பயன்படுத்த மட்டும் தான், அவற்றை இன்னொருத்தர்கிட்ட (அது உங்க கணவராவே இருந்தாலும்) குடுத்தது தப்பு, தப்பை உங்க மேல வச்சிக்கிட்டு நீங்க எங்க மேல எந்த கேசும் போட முடியாது" என்று திருப்பி அடித்திருக்கின்றனர்.
"அப்போ எனக்கு உடம்புக்கு முடியலைன்னா என்ன பண்றது?"ன்னு வந்தனா கேட்க அதுக்கு
"நீங்க ஒரு SELF Signed செக் கொடுத்தனுப்பி வங்கியில் பணம் எடுத்திருக்கலாம், அல்லது உங்களால் வர இயலாமையையும், உங்கள் கணவர் உங்கள் கணக்கை இயக்க நீங்க அனுமதிக்கிறீர்கள் என்பதையம் கடிதம் மூலம் வங்கிக்கு தெரிவித்து உங்கள் கணவரை வங்கிக்கு அனுப்பி பணம் பெற்றிருக்கலாம், அதை விடுத்து PIN நம்பரை கணவரிடம் தெரிவித்தது விதி மீறல்" என்று SBI ஆணித்தரமாகத் தெரிவித்து விட்டது. அது மட்டுமில்லாமல், அன்றைய தேதியில் அந்த ATM மில் 25000 எக்ஸஸ் ஆக ஒன்னும் இல்லைன்னும் கணக்கு காண்பித்திருக்கின்றனர்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் கணக்கு வைத்திருப்பவரின் அனுமதிக் கடிதம் இன்றி ஒருவரது ஏடிஎம் அட்டையை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
நீதி: கணவன் மட்டுமல்ல வேறு யாரும் இன்னொருத்தர் ATM கார்டை உபயோகித்து பணம் பெறக்கூடாது,உங்களால் வெளியில் செல்ல இயலாது என்ற நிலையில் Self signed செக் அல்லது அனுமதி கடிதம் மூலமே உங்கள் கணக்கை இயக்க வேண்டும். இதை மீறி நடக்கும்போது, தவறு ஏதேனும் நேர்ந்தால் சல்லி பைசா திரும்ப கிடைக்காது.

Wednesday, January 31, 2018

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து!!

ஒரு ஊரில் பணக்காரன் இருந்தான். அவன் பெயர் சந்துரு. அவனிடம் ஏராளமான சொத்துக்கள் இருந்தன. எல்லா வாழ்க்கை வசதிகளும் அவனுக்கு இருந்தன. எவரிடமும் கைநீட்ட வேண்டிய அவசியம் அவனுக்கு கிடையாது. ஆனாலும், அவனிடம் ஒரு கெட்ட குணம் இருந்தது. ஏதாவது ஒரு பொருளைப் பார்த்தால் அதை தான் அடைந்து விட வேண்டும் என்பதுதான் அது.

ஒரு நாள் தன் காடு கழனிகளை காணச் சென்று கொண்டிருந்தான். பயிர் பச்சைகள் செழிப்பாக வளர்ந்திருப்பதை பார்த்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டு அவன் வீடு திரும்ப ஆரம்பித்தான். அப்பொழுது ராமு என்பவனின் தோட்டத்து வேலி ஓரம் நிறைய பூசணிக்காய்கள் காய்த்திருப்பதை பார்த்தான். தான்ஒரு பூசணிக்காயை எடுத்துச் சென்றால் என்ன என்று எண்ணினான். பூசணிக்காயில் பொரியல், கூட்டு எல்லாம் செய்யலாம் சுவையாக இருக்கும்.

நன்கு விளைந்த ஒரு பூசணிக்காயை பறித்தான் சந்துரு. அது சற்று கனமாக இருந்தது. அதை தோளின் மீது தூக்கி வைத்துக் கொண்டு விடுவிடுவென வீட்டை நோக்கி நடந்தான் அவன். அதை ராமு பார்த்து விட்டான். பணக்காரன் ஒருவன் திருடுகிறானே எவ்வளவு பாடுபட்டு வளர்த்த பூசணிக்காயை அது சந்தைக்கு கொண்டு போய் விற்கலாம் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தானே. அக்கம் பக்கத்தாரிடம் எல்லாம் பணக்காரனான சந்துரு. தன் தோட்டத்திலிருந்து ஒரு பூசணிக்காயை திருடிக் கொண்டு போய் விட்டானென்றும், அவனை விசாரித்து பூசணிக்காயை தனக்கு மீட்டுத்தர வேண்டும் என்று அவர்களை கேட்டுக் கொண்டான். ராமுவும், பணக்காரன் வீட்டிற்குச் சென்று அவனை விசாரிக்க தயாராயினர்.
அவர்கள் வரப்போகிற செய்தி சந்துருவுக்கு எட்டியது. ஊர்க்காரர்கள் வந்து தன்னை விசாரித்து தன் திருட்டு வெளிப்பட்டு விட்டால் என்ன செய்வது? திருட்டுப்பட்டம் கொடுத்து விடுவார்களே... "அதோ பூசணிக்காய். திருடன் போகிறான்! என்று சொல்லி சிரிப்பார்களே?' ஊர்க்காரர்களை எப்படி வசியப்படுத்துவது? சந்துரு யோசித்து அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தான். தவசுப்பிள்ளையை அழைத்து ஆட்டுக்கறி, கோழிக்குருமா, ரசம், பொரியல், பாயாசம் எல்லாம் உடனே தயாரிக்கச் சொன்னான். பெரிய பெரிய நுனி வாழை இலைகளை அறுக்கச் சொன்னான். எல்லாம் "மடமட'வென தயாராகிவிட்டன.
ஊர்க்காரர்கள் ராமுவுடன் வந்தனர். அவர்கள் விசாரணையை தொடங்குவதற்கு முன், ""வாங்க! வாங்க! நீங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து என் வீட்டுக்கு வந்திருப்பது என் பாக்கியம். உங்களை எல்லாம் என் வீட்டில் ஒரு நாள் சாப்பிடச் சொல்ல வேண்டுமென்று வெகுநாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். இன்று விருந்தும் தயாராகிவிட்டது. முதலில் நீங்கள் எல்லாரும் சாப்பிடுங்கள்,'' என்று சொல்லி எல்லாரையும் சாப்பிட உட்கார வைத்துவிட்டான். சமையல்காரரும், வேலைக்காரர்களும் ஒன்றின்மேல் ஒன்றாக உணவு வகைகளை கொண்டு வந்து இவைகள் நிறைய பறிமாறி அவர்களை பேச முடியாமல் திக்கு முக்காடச் செய்து விட்டனர். இவ்வளவு வகையான உணவுப் பொருள்களை சாப்பிட்டிராத அவர்கள் மூக்குபிடிக்க சாப்பிட்டனர். அப்பொழுது அவர்களுக்கு இவ்வளவு செலவழித்து பிரமாதமாக சமையல் செய்து இவ்வளவு பேர்களுக்கு சாப்பாடு போடுகிற தயாளமனம் படைத்த சந்துரு நாலணா பெறாத பூசணிக்காயை திருடி விட்டதாக சொல்கிறான். அவன் பேச்சை நம்பிக் கொண்டு நாம் விசாரித்து கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள கூடாது என்று எண்ணினர். அதனால் பணக்காரனை விசாரிக்காமலேயே சாப்பிட்ட சந்தோஷத்தில் போய்விட்டனர்.

அவர்களுக்கு சோற்றைப் போட்டு பூசணிக்காய் திருட்டை எப்படி சந்துரு மறைத்தார். அன்றிலிருந்துதான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த மாதிரி என்ற பழமொழி உருவானது.

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு அஞ்சு லட்சம் வழங்கினார் வைரமுத்து.-செய்தி.
(இந்த செய்திக்கும் மேலே சொன்ன கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!!)