Tuesday, February 23, 2016

அடுத்து ஆட்சி யாருடையது? ஒரு கணிப்பு.

அ.தி.மு.க ஆட்சி முடிய போகிறது.
அடுத்து என்ன தி.மு.க தானே ???...
ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து " உனக்கு ஒரு தண்டனை.
அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை திங்க வேண்டும் அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள வேண்டும்"
எது வேண்டும்? என்றான்.
அந்த மனிதன், செருப்படி வாங்கினால் கேவலம் என்று எண்ணி, வெங்காயம் திண்பதாக ஒத்துக் கொண்ட்டான்.
அதன்படி வெங்காயம் திங்க தொடங்கினான். 30-35 வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை.
எனவே அவன் "மன்னா...என்னால் வெங்காயம் திங்க முடியவில்லை எனவே நான் செருப்பு அடியே வாங்கிக் கொள்கிறேன்" என்றான்.
அதன்படி செருப்பால் அடி வாங்க தொடங்கினான். 40-50 செருப்படி வாங்கியவன் வலி தாங்க முடியாமல் அலறியபடி தன்னால் செருப்படி வாங்க முடியவில்லை.
எனவே வெங்காயமே தின்பதாக கூறினான்.
மீண்டும் சில வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை.
எனவே செருப்படி வாங்க தொடங்கினான், வலி தாங்க முடியவில்லை, மீண்டும்
வெங்காயம்-
எரிச்சல் தாங்கவே முடியவில்லை,
மீண்டும் செருப்படி என மாற்றி மாற்றி வாங்கி கொண்டிருந்தான்.
அவன் யாரென்று தெரியுமா? முகம் காட்டும் கண்ணாடியை பாருங்கள்..!!!
நாமேதான்.
வேறு வழியே கிடையாது என அறிவிலி போல் சிந்திக்கவும் தெரியாமல்,செயல்படவும் தெரியாமல் 5 ஆண்டு தி.மு.க, எரிச்சல் தாங்க முடியாமல், 5 ஆண்டு அ.தி.மு.க, வலி தாங்கவும் முடியாமல் மீண்டும் தி.மு.க இருவரிடமும் வாங்கிக் கொண்டிருப்பது யார்..? நாம் தானே..?


[ஃபேஸ் புக்கில் படித்தது] 



கீழே உள்ள படம் உங்களில் பலருக்குப் பரிச்சயமானது தான்.  ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் செய்திருக்கிறேன்.  இந்த படங்கள் சொல்ல வருவது என்ன?  அதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்!!

Thursday, February 4, 2016

கெயில் - இளிச்சவாயன் தமிழன் மட்டுமே............

கெயில் எரிவாயு குழாய் கேரளாவிலும், கர்நாடகாவிலும் விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் சாலை ஓரங்களின் வழியாக கொண்டு செல்லப் படும்.  தமிழகத்தில் மட்டும் அது ஆயிரக்கணக்கான் விவசாய நிலங்கள் வழியாகச் செல்லும்.

இதற்காக நிலங்கள் கையகப் படுத்தப் படும், அங்கிருக்கும் மரங்கள் பிடுங்கி வீசப் படும், நஷ்ட ஈடு அடிமாட்டு விலைக்கு தரப் படும், இருபுறம் 6 மீட்டருக்கு எந்த விவசாயமும் செய்யக் கூடாது, எக்காரணத்தைக் கொண்டு குழாய் வெடித்தாலும் அந்த விவசாயியே [ஒரு வேலை உயிர் தப்பியிருந்தால்] குற்றவாளியாக்கப் படுவார்.




தமிழக அரசு இதை எதிர்த்து வழக்கு போட்டது, ஆனால் உப்பு சப்பில்லாத வழக்கறிஞர்கள் செயல்பாடு யாருக்கு சாதகமாக இருந்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.  வரைவுத் திட்டம் போடும்போது தமிழக அரசு சும்மா இருந்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்ற சுப்ரீம் கோர்ட்டின் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.  அப்பாவி மக்களை நம்ப வைத்து முதுகில் குத்தியிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.




விவாசாயிகளுக்கு ஆதரவாக எந்த கட்சியும் இல்லை.  காரணம் அதனால் எத்தனை வாக்குகளை இழந்து விடப் போகிறோம் என்பதே.  தமிழக மக்கள் அனாதையாக சாக வேண்டியது தான், யாரும் காக்கப் போவதில்லை.