Thursday, June 20, 2013

தாய் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உயிர் உண்டா?



கவலை தோய்ந்த முகத்துடன் அந்த பெண், எதிரே அவர் வழக்கமாகச் சந்திக்கும் லேடி டாக்டர்.

"சொல்லுங்கம்மா, என்ன விஷயமா வந்திருக்கீங்க?" ஆரம்பித்தார் டாக்டரம்மா.

 மேடம், எனக்கொரு சிக்கல், என்னை நீங்கதான் இதிலிருந்து எப்படியாவது காப்பாத்தணும்.

சரி, பிரச்சினை என்னன்னு சொல்லுங்க?

என்னோட முதல் குழந்தைக்கு இன்னும் ஒரு வருஷம் கூட ஆகலே, அதுக்குள்ளே திரும்பவும் நான் இப்போ உண்டாயிருக்கேன், இவ்வளவு குறைஞ்ச இடைவெளியில இன்னொரு குழந்தை வேண்டாம்னு நினைக்கிறேன்.

சரி, அதுக்கு நான் இப்போ என்ன பண்ணனும்னு சொல்றீங்க?
 
இத கலைச்சிடலாம்னு இருக்கேன், இதுக்கு உங்களைத்தான் மலை போல நம்பியிருக்கேன்.  
 

டாக்டரம்மா, அப்படியே ஒரு கணம் யோசிச்சுட்டு, திரும்ப அந்த பெண்ணைப் பார்த்து, "கருக்கலைப்பு செய்தால் அது உங்க உடம்பை பாதிக்கும், அதனால உங்களுக்கு அந்த மாதிரி பாதிப்பில்லாத இன்னொரு யோசனை சொல்லட்டுமா?" என்றார்.

 இதைக் கேட்டதும் அந்தப் பெண் முகத்தில் புன்னகை , எப்படியும் டாக்டரம்மா கருக் கலைப்புக்கு ஒத்துக்கத்தான் போறாங்க என நினைத்து, "சொல்லுங்க மேடம்" என்று தலையை ஆட்டினார்.

டாக்டரம்மா தொடர்ந்தார், " நீங்க எப்படியும் ஒரு குழந்தை தான் வேணும்னு முடிவு பண்ணிட்டீங்க, ஏன்னா ரெண்டு குழந்தைகளையும் பார்த்துக்க முடியாது, கருக்கலைப்பு பண்ணின்னா நீங்க டவுன் ஆயிடுவீங்க, அதனால பேசமா இப்போ இருக்கே கைக்குழந்தை, அதைக் கொன்னுடுங்க, அடுத்த ஆறு மாசத்துக்கு எந்த குழந்தையைப் பத்தியும் நீங்க கவலையே பட வேண்டாம், உங்களுக்கும் ஒன்னும் ஆகாது, ஃ பைனலா நீங்க நினைச்ச மாதிரியே ஒரு குழந்தை தான் இருக்கும்"

இதைக் கேட்டதும் அப்பெண் வெகுண்டெழுந்தாள் : "என்னை என்ன கொலைகாரியாக்கப் பார்க்கிறீங்களா, தன்னோட குழந்தையை எந்த தாயாச்சும் கொல்லுவாளா?  என்ன மாதிரி யோசனை குடுக்குறீங்க நீங்க"

டாக்டரம்மா பொறுமையை இழக்காமல் பேசினார், "எந்த அம்மாவும், தன்னோட குழந்தையை கொல்ல மாட்டாங்க தான், ஆனால் நீங்க அதுக்கும் ரெடியா இருக்கேன்னு இப்போ தானே சொன்னீங்க? என்ன ஒரு வித்தியாசம் அது வயித்துக்குள்ள இருக்கு, இது உங்க இடுப்பில இருக்கு. அதனால அது குழந்தை இல்லைன்னு ஆயிடுமா? ரெண்டுமே உங்க குழந்தைங்க தானே?  ரெண்டுல ஒன்னை கொல்லனும்ன்னா உங்க கையில இருப்பதை கொ
ல்வது தான் பெட்டர், உங்க ஆரோக்கியம் பாதிக்காது"

 

தற்போது அந்தப் பெண்ணுக்கு எல்லாம் உரைத்தது, அதற்குப் பின்னர் கருக்கலைப்பு பற்றி அவள் நினைக்கவும் இல்லை. 




தாய் வயிற்றில் உள்ள 21 வார குழந்தை, மருத்துவரின் கையைப் பற்றுகிறது, அது குழந்தை இல்லையா?

Tuesday, June 18, 2013

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் ...............

நன்றி:
 Manithan
பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள்.
அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

Sunday, June 16, 2013

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

 
 
இந்த கண்டிஷனிலும் மேக் அப்பை சரி பண்ணும் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா?
அன்புள்ள  மக்கள்ஸ்,

கணவன் மனைவிக்கிடையே சடை சச்சரவுகள் வருவதற்கு காரணம் புரிதல் சரியாக இல்லாததுதான்.  பெண்கள் என்ன சொல்றாங்க என்று நேரடியா அர்த்தம் பணிகிட்டு கூமுட்டைத் தனமா எதையாவது சொல்லி/செஞ்சி காலம் காலமா உருப்படாம போயிட்டோம், இனியும் அது கூடாது.  அவங்க சொல்வதற்கான உண்மையான அர்த்தம் என்னனு புரிஞ்சிகிட்டு சூதனமா நடந்துக்கோங்க.  [ஐயா,இது காமடியா தோணலாம், ஆனா மேட்டர் சீரியஸ், சரியாத்தான் எழுதியிருக்காங்க].
நன்றி: Manithan 
உங்கள் மனைவியை புரிந்து கொள்ள
அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
*********************************

மனைவி : நமக்கு வேணும்
அர்த்தம் : எனக்கு வேணும்

மனைவி ; உங்க முடிவு
அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம்

மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..
அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க

மனைவி : தாராளமா.. செய்யுங்க
அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை

மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை
அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன்

மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.

மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு
அர்த்தம் : வேற வீடு பாக்கணும்

மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?
அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்

மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.

மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?
அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு

மனைவி : சரி
அர்த்தம் : நோ..

மனைவி : நோ
அர்த்தம் : சரி

மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்கங்க

மனைவி : ஒண்ணுமில்லை
அர்த்தம : நிறைய இருக்கு

மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை
அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும்
 
 
 
 
தீயா காப்பியடிக்கணும் கொமாரு................


Friday, June 14, 2013

தொலைக் காட்சி விளம்பரங்கள்: என்னதான்யா சொல்ல வர்றானுங்க?

 
படத்தில் வலதுபுறம் இருக்கும் பெரும்புள்ளி யார்?  ஒரு க்ளு: இவருக்கு சொந்த ஊர் ராமேஸ்வரம்.
அன்புள்ள மக்கள்ஸ்!!
பொருள் தரமானதா இல்லை கேவலமானதா என்பது முக்கியமில்லை, அதை நல்லா விளம்பரப் படுத்தினா போதும் ஓஹோன்னு ஓடும்.  விளம்பரம் இல்லையென்றால் இன்றைக்கு கிரிக்கெட்டே இல்லை.  இவனுங்க ஆடி சம்பாதித்தை விட விளம்பரங்களில் நடித்து சம்பாதித்ததே அதிகம். இது கிரிக்கெட் ஆட்டக் காரர்களுக்கு மட்டுமல்ல சில நடிகை/நடிகர்களுக்கும் பொருந்தும்.   கிரிக்கெட் வீரர்கள் யாரும் கோலாக்களை குடிப்பதில்லை என்பதும் எல்லா ஷாம்பு, சோப்பு விளம்பரங்களில் வரும் நடிகைகள் தலைக்கு சீயக்காய் பொடியையும், உடலுக்கு கடலைமாவு+பயத்தம் மாவை மட்டுமே பூசி குளிக்கிறார்கள் என்பதும் நம்மை போன்ற பல எமாளிகளுக்குத் தெரியாது!!   இப்படியெல்லாம் நம்மை முட்டாள்களாக்கும் தொலைகாட்சி விளம்பரங்களில் இருந்து நமக்கு தெரிய வரும் முக்கியமான விஷயங்கள் சிலவற்றை இன்னைக்கு பார்ப்போம்!!  [நன்றி: Facebook].
 
1.  கரீனாவுக்கு பொடுகு, கத்ரினாவுக்கு வறண்ட முடி, ஷில்பாவுக்கு முடி கொட்டுதல், பிரியங்காவுக்கு சிப்-சிப்   இதெல்லாம் இவங்களுக்கு இருக்குதுன்னு நமக்கு விளம்பரங்கள் மூலமாத்தானே தெரிஞ்சது!!
[chip-chip]- அப்படின்னா என்னன்னு யாராச்சும் சொல்லுங்கப்பா!!]
2.  Deodorant போடுவதே பொண்ணுங்களை மடக்கத்தான்.
3. டூத் பேஸ்ட் எதை எடுத்தாலும், அதேதான் எல்லா பல் டாக்டர்களும், DENTAL ASSOCIATION OF INDIA வும் பரிந்துரைக்கும் பிராண்டாம். 
4. பொண்ணு கல்யாணம் பண்ணிக்க இன்ட்ரஸ்ட் காமிக்கலைன்னா நகைக் கடைக்கோ, துணிக்கடைக்கோ கூட்டிட்டுப் போய்க் காண்பிச்சா போதும், உடனே சம்மதிச்சுடுவா பிரச்சினை ஓவர்.

5. கப்சியும், அக்காமாலாவையும் குடித்து வந்தால் போதும் கவலையெல்லாம் பறந்து போகும், சீக்கிரமே சூப்பர்மேன் ஆயிடலாம்.

6. பெரிய பெரிய நடிகர்களாக இருந்தாலும் பாவம் ஏழைப் பட்டவர்கள், பத்து ரூபாய் கூல் டிரிங்க்ஸ்க்காக உசிரையே பணயம் வைப்பார்கள்.
7. ஷாம்பு விளம்பரத்தில் வரும் SPECIAL EFFECTS எல்லாம் அவதார் படத்தையே தூக்கி சாப்பிட்டு விடும்.
8. அமுல் கம்பனியில், பால் பொருட்கள் உற்பத்தி செய்யிறதுக்கு இருக்கும் எக்ஸ்பர்ட்சை விட கார்ட்டூன் வரையும் திறமைசாலிங்களை அதிகமா இருப்பாங்க போலிருக்கு.

9. பைக் வாங்குவதே பொண்ணுங்களை பிக் அப் பண்ணத்தான். 
 
10. எந்த சோப்பை எடுத்துக் கொண்டாலும் அது 99.9% கிருமிகளை அடியோடு ஒழித்துக் கட்டுவதாகவே இருக்கும்.

11. Bacardi என்பது இசை குறுந்தகடுகளை தயார் பண்ணும் கம்பனி என்றும், Directors special/Kingfisher என்பது மினரல் வாட்டர் தயாரிக்கும் கம்பனி என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
12. இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திட்டா நாம செத்ததுக்கப்புறம் பெண்டாட்டியும் பிள்ளைகளும், சந்தோஷமா இருப்பாங்க. 

13. குழந்தைகள் சேற்றில் விழுந்து புரண்டு வெள்ளை யூனிபார்ம் முழுசும் பழுப்பு கலரில் ஆன பின் வீட்டுக்கு வந்தா அம்மா "கரை நல்லது" ன்னு ரொம்ப சந்தோசப் படுவாங்க.

14. ஒரு அம்மாவும் அவங்க மகளும் எப்போ பேசினாலும் தலைக்கு பூசும் எண்ணையைப் பத்தியேதான் பேசுவாங்க. .

15. எந்தக் காரை எடுத்தாலும், அதுதான் நம்பர் 1 பிராண்டு என்று அதன் "SATISFIED CUSTOMERS" சொல்வார்கள். 
16. கருப்பா பொறந்ததே பாவம். 
17. No matter what kind of expert one is, he'll always wear a white laboratory coat.

18. ஏழு நாளில் சிவப்பழகு மாதிரி ஏதாவது கிரீமை போட்டால் தான் ஒரு பொண்ணு மிஸ் இந்தியாவாகவோ, உலக அழகியாகவோ வர முடியும்.
 
19. ஒரு பொண்ணுகிட்ட லவ்வை சொல்ல துணிச்சலை விட நல்ல வாசனை அடிக்கும் ஒரு deodorant இருந்தாலே போதும்.
20. மூஞ்சியில் சளார்... ன்னு தண்ணீரை அடிச்சாத்தான் அதுக்கப்புறம் முகத் தோல் எப்பவுமே கிளியரா இருக்கும். 
கடைசியா:
இது என்னன்னு படிங்களேன்:   
Mutualfundinvestmentsaresubjecttomarketriskspleasereadtheofferdocumentcarefullybeforeinvesting.

- Rameez Raja
 
 

Wednesday, June 12, 2013

வெள்ளைச் சர்க்கரை: அனைத்து உடல் சீர்கேடுகளுக்கும் மூல காரணம்.

 Facebook -ல் படித்தது.

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

இதையும் வாசிக்கலாமே!!

கட்டாயம் தவிர்க்க வேண்டிய வெள்ளை நிற உணவுகள்.
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..


இப்பக்கத்தின் கீழே:  Photoon-பொருள் ஒன்று, அதன் தோற்றம் பார்ப்பவர் கோணத்தை பொறுத்து மாறும்.



Friday, June 7, 2013

பதில் சொல்ல முடியாத களவாணிப் பயலின் கேள்விகளுக்கு பதில்கள்.

வணக்கம் மக்கள்ஸ்,  
Facebook -ல் நமக்கு நண்பர்கள் அதிகமில்லை, எதையும் கஷ்டப்பட்டு எழுதுவதும் இல்லை.  சிலரது பக்கங்களை படிப்பதுண்டு.  அதில் நம்மை மிகவும் கவர்ந்தவர், களவாணி பய என்ற திருச்சிக்கார நண்பர்.   நீங்கள் கிளென் மெக்ராத், கார்டினி வால்ஸ், மால்கம் மார்ஷல், இயன் பிஷப் போன்றவர்களின் பவுலிங்கை கூட சமாளித்து விடலாம் ஆனால் இவர் போடும் பவுன்சர் கேள்விகளுக்கு பதிலே சொல்ல முடியவில்லை, பெரும்பாலும் கிளீன் போல்டுதான் ஆக வேண்டியிருக்கிறது!!  இவரது முப்பது கேள்விகளை முன்பு இந்த கேள்விகளுக்கு யாரவது பதில் சொல்லுங்களேன்!! என்ற பதிவாக வெளியிட்டோம், தற்போது மேலும் நாற்ப்பது கேள்விகளைக் கேட்டுள்ளார்.  அவை மொத்தமாக பதிவின் இறுதியில் உள்ளன. நீங்கள் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை, ஆனால் ஒரு கேள்வியைப் படித்தாலும் எல்லாவற்றையும் படித்து முடித்து விடுவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்!!
 [4,5,6 or 7 என நான்கு பகுதிகளாக வந்த கேள்விகளில் சிலவற்றுக்கு மட்டும் நாம் பதில் கண்டுபிடித்து சமாளித்துள்ளோம் முடிந்தால் நீங்களும் சிலவற்றுக்கு பதில்களை பின்னூட்டத்தில் போடலாம். 
கீழே உள்ள கேள்விகளின் முதல் நம்பர் 4,5,6 or 7 இவற்றில் எந்தப் பகுதியில் இந்தக் கேள்வி வருகிறது என்பதையும் இரண்டாம் நம்பர் அந்தப் பகுதியில் எத்தனையாவது கேள்வி என்பதயும் குறிக்கிறது!!]
4.3. காருக்கு ஒரு ஸ்டெப்னி இருக்றப்ப, அத்தன சக்கரம் இருக்ற ரயிலுக்கு ஏன் ஒரு ஸ்டெப்னி கூட இல்ல..??
பதில் 1: கார்ல ஏதாவது ஒரு டயர் பஞ்சர் ஆனாலும் கார் ரோட்டில் இருந்து விலகி ஓரத்தில் இருக்கும் மரத்திலோ, கிணற்றிலோ போய் விழுந்துவிடும். ஆனா ரயில் சக்கரத்துக்கு என்ன ஆனாலும் தண்டவாளத்தில்தான் போக முடியும்.  ஆபத்து இல்லை. அதனால ஸ்டெப்னி வைக்கவில்லை. அப்புறமா சக்கரத்தை மாத்திக்கலாம்.
 பதில் 2: காரில்  நாலு சக்கரம் தான் அதுவும் கேப் விட்டு தூரம் தூரமா இருக்கு, பஞ்சரானா சப்போர்ட் இல்லை, ஆனால் ரயிலுக்கு நிறைய சக்கராம், அத்தனை சக்கரமும் ஒரே வரிசையில் ஒன்னு பின்னாடி ஒண்ணா இருக்கு, ஒரு சக்கரம் பஞ்சரானாலும் அதுக்கு முன்னாடி இருக்கும் சக்கரமும், பின்னாடி இருக்கும் சக்கரமும் ஸ்டேஷன் போகும் வரை சமாளித்துக் கொள்ளும். 
4.4 கேமரா லென்ஸ் வட்டமா இருக்கு, ஆனா போட்டோ மட்டும் எப்படி சதுரமா வருது ?
பிலிம் சதுரமா இருக்குமோ....!! டவுட்டு..... 
5.1. ஆயிரம் ஃபிகர அசால்ட்டா சைட் அடிக்கும் போது இருக்குற சந்தோசம், ஒரே ஒருத்திய மட்டும் சின்சியரா லவ் பண்ணும் போது காணாம போயிடுதே அது ஏன் ?
கல்யாணத்த பண்ணுங்க பாஸ்,  பொண்ணுங்களைப் பத்தி பண்ணி வச்ச கற்பனை, கனவுகள் அத்தனையும் மொத்தமா  காணாம போயிடும்.
5. 2. சாமியார் அறைகளில் வீடியோ பிடிக்கும் இந்த செய்தி நிறுவனங்கள் ஏன் கடலில் மீனவர்கள் மீது நடக்கும் அத்துமீறலை படம் பிடிக்கமுன்வரவில்லை..?
படத்தை புடிச்சது செய்தி நிறுவனம் இல்லை, சிலர் உதவியுடன் ஒரு தனி நபர்பிடித்தார். அதை காசாக்கிக் கொண்டு, படம் பிடித்தவரை கோர்ட்டு கேசுன்னு அலைய விட்டது மட்டுமே செய்தி நிறுவனம்
5.3 டாக்டர்கள் நர்சை காதலித்தால் இப்படிதான் Propose செய்வார்களோ.. I LOVE U SISTER.. ??
மருத்துவம் படிக்க சில பல கோடிகள் வேண்டும் பாஸ், அதுக்கப்புறம் நர்ஸை ஒருத்தர் கரெக்ட் பண்ணப் போனா போட்ட முதலுக்கே மோசமாயிடுமே தலைவா.
5.7 கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவானாம்,அப்போ டெய்லி ஷேவிங்பண்ண கத்தி எடுக்கும் சலூன்காரர்??
இப்போ சலூன்காரர்கள் கத்தியெல்லாம் எடுப்பதில்லையே, பிளேடு மட்டும் தானே பயன்படுத்துகிறார்கள்.  [பிளேடுன்னா இந்த கேள்வி-பதில் மாதிரி இல்ல, நல்ல பிளேடு!!]
6.5 அது எப்படி தான் மழை வர்ற அன்னைக்கு மட்டும்,கதாநாயகி வெள்ளை கலர் டிரஸ் போட்டு வர்றாங்களோ ..??
 ஏன் அருவியில ஆத்துல குளிக்கும் பொது கூட வெள்ளை கலர் டிரஸ் போட்டு வர்றாங்களே !!
6.6 “என் அப்பாவுக்கு நான் எத்தனையாவது மகன்” என்பதை என்னிடமே ஆங்கிலத்தில் எப்படி கேட்டுக்கொள்வது..?
 What is your order in your father's issues !!
6.8.குடிதண்ணீர்க் குழாய்ல பம்ப் போட்டு இழுக்கறவனுங்களை குற்றஞ் சொல்ற அரசு,இன்வர்ட்டர் விஷயத்தில் மௌனித்திருப்பது ஏன்?
இன்வர்டருக்கு கரண்டை யாரும் பம்ப் வச்சு இழுப்பதில்லை தானா வந்து நிறையுது. 
6.10 அது ஏன்யா பெட்ரோல் விலைய நல்லிரவுள்ள உயர்துறாங்க. பகல்ல உயர்துனா உயராதா?
ஒரு நாள் என்பது நள்ளிரவு 12:00 AM மில் இருந்து தான் துவங்குகிறது, ஒரு குறிப்பிட்ட தேதியில் பெட்ரோல் விலை உயர்வு என்றால், அந்த தேதி துவங்கும் நள்ளிரவு 12:00 மணிக்குத்தான் அது அமலுக்கு வரும்.  இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது கூட நள்ளிரவில் 12:00 மணிக்குத்தான்!!
 7. 2.புல்வெளியில் நடக்காதீர்.! தக்காளி போர்டை எப்படி புல்லுக்கு நடுவுல கொண்டு போயி வச்ச.?
முதலில் நிலத்தை புல் செடி எதுவும் இல்லாம கிளீன் பண்ணிட்டு, புல்வெளியில் நடக்காதீர்.! என்ற போர்டை கொண்டு போய் strong-ஆக  நட்டு வச்சிட்டு அதற்க்கப்புறம் வெளியிலேயே நின்னுகிட்டு தண்ணீர் ஊற்றி புல்லை  வளர்ப்பாங்க.
7.4 கி.மு, கி.பி அப்படீங்கறாங்களே , அப்படீன்னா டிசம்பர் 25 ஏண்டா ஆங்கில வருட பிறப்பா வைக்கலை..?
அவங்க வச்சிருப்பாங்க, ஆனா அதுக்கப்புறம் நீங்க சும்மாவா இருப்பீங்க?  ஏண்டா ஜனவரி 1 ஆம் தேதியை முதல் வருசமா வச்சிருக்கலாமே, அதென்னடா 25 ஆம் தேதி, எங்கேயிருந்து இந்த நம்பரை புடிச்சுகிட்டு வந்தீங்கன்னு கேள்வி தான் கேட்டுகிட்டு இருந்திருப்பீங்க .
7. 6. சிப்ஸூக்கு தமிழ்ல என்ன ???
Chip-சில்லு.  Silicon chip என்பதை சிலிகான் சில்லு என்று சுஜாதா எழுதியிருக்கிறாரே படித்ததில்லையா? சிப்ஸூக்கு தமிழ்ல சில்லுகள் ???
 
அனைத்து  கேள்விகளும்:
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-4)
1.ஐம்பது பைசா கிராப் ஷீட்ல அவ்வளவு பொறுமையாக கோடு போட்டது யாரு ..?

2.நமது ராணுவம் பதுங்கி இருந்து தாக்குவது எப்படி என்பதை நமது ட்ராஃபிக் போலீசிடம் ஏன் கற்றுக் கொள்ள கூடாது ..?

3.காருக்கு ஒரு ஸ்டெப்னி இருக்றப்ப, அத்தன சக்கரம் இருக்ற ரயிலுக்கு ஏன் ஒரு ஸ்டெப்னி கூட இல்ல..??

4.கேமரா லென்ஸ் வட்டமா இருக்கு ,ஆனா போட்டோ மட்டும் எப்படி சதுரமா வருது ?

5.நாங்கலாம் கற்பூரம் மாதிரி’ன்னு பெரும பேசுறவன் தலைல தீய வச்சு பாக்கனுன்னு ஆசை. கப்புன்னு புடிக்குதான்னு..யாராவது இருகங்களா...??

6.பொண்ணுங்க கிட்ட பேசும்போது , கண்ணை பார்த்து தான் பேசணுமாமே .? அப்புறம் எதுக்கு ஃபுல் மேக்கப்..?

7.பெண்கள் தங்கள் மொபைலுக்கு தாங்களாகவே ரீ-சார்ஜ் பண்ணுவதை பார்க்கும் தருணங்களில் மனது போவது எனக்கு மட்டும் தானா ..??

8.கோவில் சுவர்களில் கடவுளின் நாமத்தை விட காதலர்களின் ஹார்ட்டீன் தான் நிறையத்தேரிகிறது. இதற்குப் பெயர்தான் தெய்வீகக் காதலோ?

9.5 கிலோ மீட்டரில் இந்திய மீனவனை அடிக்கிறான் கேட்க வக்கில்ல நமக்கெதுக்கு 5000 கிமீ பாய்ந்து தாக்கும் ஏவுகணை?

10.டூத் பேஸ்டில் உப்பு இருக்கான்னு மைக்க தூக்கிட்டு வந்து கேக்குறிங்க?வாங்குறதுக்கு துப்பு இருக்கான்னு யாராவது கேக்குறிங்கள?
 

என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-5)

1.ஆயிரம் ஃபிகர அசால்ட்டா சைட் அடிக்கும் போது இருக்குற சந்தோசம், ஒரே ஒருத்திய மட்டும் சின்சியரா லவ் பண்ணும் போது காணாம போயிடுதே அது ஏன் ?

2.சாமியார் அறைகளில் வீடியோ பிடிக்கும் இந்த செய்தி நிறுவனங்கள் ஏன் கடலில் மீனவர்கள் மீது நடக்கும் அத்துமீறலை படம் பிடிக்கமுன்வரவில்லை..?

3.டாக்டர்கள் நர்சை காதலித்தால் இப்படிதான் Propose செய்வார்களோ.. I LOVE U SISTER.. ??

4.க்ரிக்கெட்ல பவர் ப்ளே பவர் ப்ளேன்றாங்களே அந்த டைம் பவர் ஸ்டார் வந்து ஆடுவாரா?

5.ஆடி மாசம் வந்தா ஆத்தாளுக்கு கூழ் ஊத்தறோம் காசு குடு என வசூலுக்கு வந்துடறாங்க.சொந்த காசை போட்டு கூழ் ஊத்தினா அருள் கிடைக்காதா?

6.எங்கள பாக்கவச்சு இசைசேனல்கள்ல காதல் SMS அனுப்புரீங்களே,பீச்சுல நீங்க டாவுகட்டும்போது நாங்க எட்டிபாத்தா ஒத்துக்குவீங்கலாடா?

7.கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவானாம்,அப்போ டெய்லி ஷேவிங்பண்ண கத்தி எடுக்கும் சலூன்காரர்??

8.ஒவ்வொரு ஆணின் கடனுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் ..இது உண்மையா..? பொய்யா ..?

9.ஒருமாதிரி இருக்குறவைங்களத்தான் மனேஜரா போடுவாய்ங்களா? இல்ல இவிங்க மனேஜரா ஆனதும் ஒரு மாதிரியா ஆயிருவாய்ங்களா?

10.மே மாதத்தில் பிறந்த குழந்தைகள் பள்ளியில் சாக்லேட் தரமுடியாமல் கவலைப்படுவதை கவனித்திருக்கிறீர்களா?
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-6)

1.அம்பது ரூபாய் கொடுத்து ஒரு லிட்டர் கூல் ட்ரிங்க்ஸ்
வாங்கி குடிச்சி ஏதோ ஒரு தனியார் நிறுவனத்துக்கு லாபம் கொடுக்கிறதவிட எழுபது ரூபாய் கொடுத்து ஒரு குவார்ட்டர் வாங்கி அரசாங்கத்துக்கு வருமானம் தர்றது தப்பா...?

2.உங்களை அண்ணனாதான் நினைச்சேன்னு சொல்ற பொண்ணுங்கள கேக்கறேன்... வாய தொறந்து அண்ணானு கூப்பிட்டு தொலைய வேண்டியதுதான...?

3.சூப்பிச் சூப்பிக் குடிக்கிறதாலதான் சூப்புன்னு பேரு வந்துச்சோ...??

4.நீங்க ஃபோட்டோ எடுத்ததால ஃபேஸ்புக்ல போடுறீங்களா.. இல்ல ஃபேஸ்புக்ல போடுறதுக்காகவே ஃபோட்டோ எடுக்குறீங்களா..?

5.அது எப்படி தான் மழை வர்ற அன்னைக்கு மட்டும்,கதாநாயகி வெள்ளை கலர் டிரஸ் போட்டு வர்றாங்களோ ..??

6.“என் அப்பாவுக்கு நான் எத்தனையாவது மகன்” என்பதை என்னிடமே ஆங்கிலத்தில் எப்படி கேட்டுக்கொள்வது..?

7.சமீபத்திய படங்கள்ல கரண்ட் கட் ஆகிறமாதிரி காட்சியே வரல. என்னத்த இயல்பா எடுக்குறாங்களோ..??

8.குடிதண்ணீர்க் குழாய்ல பம்ப் போட்டு இழுக்கறவனுங்களை குற்றஞ் சொல்ற அரசு,இன்வர்ட்டர் விஷயத்தில் மௌனித்திருப்பது ஏன்?

9.தரமற்ற ஒரு பொருளை ஏமாற்றி விளம்பரம் செய்தால் தண்டனை உண்டா? சினிமாவுக்கும் இது பொருந்துமா?

10.அது ஏன்யா பெட்ரோல் விலைய நல்லிரவுள்ள உயர்துறாங்க. பகல்ல உயர்துனா உயராதா?
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-7)

1."அப்ப நான் உனக்கு முக்கியமில்ல”..? எனக் கேட்காத காதலியும், “அப்படியில்ல”னு சமாளிக்காத காதலனும் எங்கேனும் இருக்கிறார்களா என்ன ..??

2.புல்வெளியில் நடக்காதீர்.! தக்காளி போர்டை எப்படி புல்லுக்கு நடுவுல கொண்டு போயி வச்ச.?

3.ஆண் கடவுள் மனிதப்பெண்களை திருமணம் செய்தது போல , பெண் கடவுளுக்கு ஆண் மனிதனை திருமணம் செய்ய அனுமதி இல்லையா..?

4.கி.மு, கி.பி அப்படீங்கறாங்களே , அப்படீன்னா டிசம்பர் 25 ஏண்டா ஆங்கில வருட பிறப்பா வைக்கலை..?

5.ஜல்லிக்கட்டு விளையாட்டை கடுமையாக எதிர்க்கிறேன்! வீடு கட்ட உதவும் ஜல்லியில் என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கிறது?

6.சிப்ஸூக்கு தமிழ்ல என்ன ???

7.சாமி படத்தில் நடிக்கும் போது விரதம் இருக்கேன்னு சொல்றாங்களே அப்போ பேய் படத்தில நடிச்சா மாமிசம் , ரத்த சூப்பெல்லாம் குடிப்பாங்களா......?

8.அறிவு கம்மியா இருக்குறவங்கள லூசு அப்படின்னு சொல்லுறோம்,அப்படின்னா அறிவு அதிகமா இருக்குறவங்கள டைட் அப்படின்னு சொல்லலாமா?

9.இந்த அதிர்ச்சி அடையும்போது சொடய்ங் சொடய்ங் னு நாலு ஏங்கிள்ல காட்டுரானுகளே சீரியல்ல.. அந்த மியூசிக்க கண்டுபுடிச்சது யாரு??

10.கோடி கணக்கான பணத்தில் எடுத்து லாபங்களை அள்ளும் படங்களுக்கு எதுக்கு வரி விலக்கு..?

Saturday, June 1, 2013

தினமணியில் வந்த ஒரு அறிவியல் விளக்கம் சரிதானா?

அன்புள்ள மக்கள்ஸ்,

நேற்று தினமணியில் ஒரு கல்வி கட்டுரையைப் படித்தேன்.  [சுட்டி]



உங்கள் உள்ளங்கையை முகத்தின் முன்னால், அரை அடிக்கும் சற்று குறைவான தூரத்தில் வைத்துக் கொண்டு வாயை அகலத் திறந்து ஹா...... என   [டூத் பேஸ்ட் விளம்பரத்தில் வருவது போல!!]  காற்றை வெளியிட்டால் அது வெப்பமாக இருக்கும்.


அதே சமயம், வாயைக் குவித்து வேகமாக ஊதினால் நமது மூச்சுக் காற்று குளிர்ச்சியாக இருக்கிறதே ஏன்? அதற்கு என்ன காரணம் தெரியுமா?


இதே கேள்வியை +2 பயிலும் போதும் எங்கள் வகுப்பு மாணவன் கேட்டான்.   ஆனால் பதில் அப்போ கிடைக்க வில்லை.

தினமணி இதற்குத் தரும் விளக்கம்:

வாயை அகலத் திறந்து கையின் பின்புறத்தில் வெளி மூச்சை விட்டால் அது வெப்பமாக இருக்கும். உடம்பின் வெப்பத்தை நுரையீரலிலிருந்து எடுத்துக்கொண்டு வருவதால் வெளி மூச்சு வெப்பமாக இருக்கிறது.

வாயைக் குவித்து வேகமாக காற்றை ஊதுகிறோம். அது குளிர்ச்சியாக இருக்கிறது. எப்படி? கையை தொலைவாக வைத்துக்கொண்டு காற்றை வேகமாக ஊதும்போது நீங்கள் எதிர்பார்ப்பதுபோல அது வாயிலிருந்து வரும் மூச்சுக் காற்று அல்ல. அட அப்படியா? பின் எந்தக் காற்று அது. அக்கம் பக்கத்தில் உள்ள அறை வெப்பக் காற்றுதான் அது. நீங்கள் ஊதும் காற்று அறைக் காற்றை முட்டித் தள்ளி கையில் பட வைக்கிறது.

இந்த விளக்கம் சரிதானா?   கையை முகத்துக்கு அருகிலேயே வைத்துக் கொண்டு, மூச்சை உள்ளிழுத்து மேலே சொன்ன இரண்டு மாதிரியும் காற்றை மாற்றி மாற்றி ஊதிப் பாருங்கள், வெப்பமாகவும், குளிர்ச்சியாகவும் மாறி மாறி உணரமுடியும்!!  கையின் தொலைவும் காற்றும் மாறவில்லை, பின் எப்படி இந்த மாற்றம்?  மேலே தினமணி கட்டுரை சொல்லும் விளக்கம் சரிதானா?  உண்மை என்ன?

இதற்க்கான பதில் பின்வரும் கானொளியில் உள்ளது.  [23 ஆம் நிமிடத்தில் இருந்து].



அதிக அழுத்தப் பகுதியில் இருந்து, குறைவான அழுத்தப் பகுதிக்குச் செல்லும் போது காற்று விரிவடையும்.  அவ்வாறு விரிவடையும் காற்று குளிர்ச்சியடைகிறது.  டூத் பேஸ்ட் விளம்பரத்தில் காட்டுவது போல ஹா........ என காற்றை வெளியிடும் போது அதன் அழுத்தம் மாறுபடுவதில்லை, ஆகையால் வெப்பமாகவே உள்ளது.  ஆனால், வாயைக் குவித்து ஊதும் போது வாயில் காற்று அழுத்தத்திற்குட்படுகிறது, வெளியே குறைந்த அழுத்தப் பகுதிக்கு வரும் போது விரிவடைந்து குளிர்கிறது.  இதில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் பின்னூட்டத்தில் விவாதிக்கலாம்.