Saturday, November 24, 2012

சைவ உணவு பற்றி பேச உயர்ந்த சாதியில் பிறக்காத எனக்கு உரிமையில்லையா?

நாம்  சிலதினங்களுக்கு முன்னர் சைவ/அசைவ உணவுகளில் மனிதனின் உடலமைப்புக்கு ஏற்றது எது என்ற பதிவை வெளியிட்டிருந்தோம்.  சுட்டி.  இதன் பின்னூட்டத்தில் பலர் பல எதிர் கேள்விகளை எழுப்பியிருந்தனர், எல்லாவற்றுக்கும் மேலே நமது நண்பர் ஒருவர் இதுகுறித்து ஒரு பதிவையும் போட்டுள்ளார். நம் மீது சில கேள்விகளைக் கேட்டுள்ளார்கள், அதற்க்கு நம் தரப்பில் இருந்து சில விளக்கங்களைத் தருவது நமது கடமையாகிறது.

எதிர் தரப்பு: சைவ உணவு உண்ணும் வகையில் தான் மனிதன் உடலமைப்பு உள்ளது என்பது உயர் சாதிக்காரர்களின் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம்.

நமது பதில்:  சைவ உணவுதான் மனிதனுக்கு ஏற்றது என்ற உண்மையை உணர்ந்தோர் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும், மதங்களிலும் மொழிகளும் இனங்களிலும் இருக்கிறார்கள், அவர்கள் எல்லோரும் உயர்சாதிக்காரர்களா?  தாவர உணவு என்பது உயர்சாதிக்காரனுக்கே நேர்ந்துவிட்ட உரிமையா? மற்றவர்கள் அதை ஆதரிக்கவோ, பின்பற்றவோ கூடவே கூடாதா?  அப்படி மீறிச் செய்தால் அவன் உயர்சாதிக்காரன் என்று அவன் மீது தார் பூசுவீர்களா?  உயர்சாதியில் பிறக்காத எனக்கு சைவ உணவு முறையைப் பின்பற்றவும், அதன் பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் உரிமை இல்லையா?

எதிர் தரப்பு: என்னோட குடலில்  Hydrochloric Acid சுரக்குது, மனிதனுக்கு  செல்லுலாக்  இல்லை, [இது என்ன புலாசுலாக்கியோ தெரியலை!!], மனிதன் ஒரு பல்லுணவு உண்ணி தான்.  [நாட்டமை தீர்ப்பை வாசிச்சிட்டாரு.]

நமது பதில்:  புலிக்கு உண்டான உணவு மாமிசம் மட்டுமே, அதனால் புல்லை தின்று வாழ முடியாது, பசுவுக்கு உண்டான உணவு புல், இலை தலைகள் தான், அதால் இறைச்சியை உண்டு வாழ முடியாது.   இரண்டும் உண்ணும் ஜீவன்களும் இருக்கு.  கரடிகள் அந்த வகையைச் சார்ந்தவை.  அவை மீனையும் சாப்பிடும், பழங்கள் கொட்டைப் பருப்புகளையும் சாப்பிடும். இப்போ நீர் சொல்ல வருவது, மனிதன் மூன்றாவதாகச் சொன்னது போல ரெண்டும் உண்ணத் தகுந்தவன் என்பதே.  

 

புலி, பசு, கரடி உண்பது என்ன உணவாக இருந்தாலும் சரி அதைத் தயாரிக்க வேண்டிய தகவமைப்பும் அதன் உடலிலேயே இருக்கும், இது மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவன்களும் இன்றைக்கும் பின்பற்றுகின்றன.  புலி கசாப்புக் கடைக்குப் போய் எவனாச்சும்  ஆட்டை வெட்டி சுத்தம் பண்ணி  வச்சிருப்பான் அதை வாங்கி வந்து உண்ணலாம்னு  நினைக்காது.  அதற்க்கு நகங்கள் இருக்கு, பதுங்கியிருந்து பாஞ்சு மானைப் பிடிக்கும் அதன் பற்களாலேயே கொன்று அப்படியே இரத்தத்தைக் குடிக்கும், மாமிசத்தையும் சாப்பிடும். அதை அதன் ஜீரண உறுப்புகள் ஜீரணிக்கும், ஆரோக்கியமாகவே வாழும்.  மாடும் அப்படித்தான் புல்லை உண்ணும்.  ஒரு கரடி மீனை கடையில் வாங்கி உண்ணாது, ஆற்றுக்குப் போகும், ஓடும் தண்ணீரில் குதிக்கும் மீன்களை லாவகமாகப் பிடிக்கும், அப்படியே கடித்து சுவைத்து உண்ணும்.  அப்புறம் பழங்கள் கொட்டை பருப்புகளையும் தேடிப்  பிடித்து உண்ணும். ஒரு வேலை பழங்கள்   நாலு நாளைக்கு இல்லாவிட்டால் அது மாண்டுவிடாது, மீனைக் கொண்டே அது போஷாக்கைப் பெற முடியும் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள முடியும்.  பழங்களை உண்டே பல நாட்களையும் கழிக்க முடியும்.  இதுதான் கரடி பல்லுணவு உண்ணி ( Omnivore ) என்பதற்கான நிரூபணம்.  மேற்கண்ட எதுவும் தமக்கு கிடைக்கும் உணவை நெருப்பிலிட்டோ, உப்பு சேர்த்தோ உணவை mutilate செய்வதில்லை, உணவை சேகரிக்க தமது உடலில் உள்ள உறுப்புகளைத் தவிர வேறு ஆயுதங்களைப் பிரயோகிப்பதில்லை.  அவை எதுவும் பல் டாக்டரிடம் செல்வதில்லை ஆனாலும் வாய் நாறுவதில்லை கண்ணாடி போடுவதில்லை பிரசவ ஆஸ்பத்திரிக்குப் போவதில்லை.  ஆகையால் அவை உண்ண வேண்டியதை உண்கின்றன எனபது இதிலிருந்து தெரிகிறது.

மனிதன் உடல் புலால் உணவை உண்ணும் வகையில் வடிவமைக்கப் பட்டது என்பது உமது வாதம், அப்படி இல்லை என்பது எமது வாதம்.  யார் சொல்வது சரி, உண்மை என்பதற்கு ஒரு பந்தயம் வைத்துக் கொள்ளலாம்.  இருவரையும் தனித்தனி அறையில் வைத்து ஒரு மாதத்திற்கு எமக்கு எம் நாட்டில் விளையும் வாழை, கொய்யா போன்ற பழங்களையும், தேங்காய் போன்ற nuts களையும் தினமும் வழங்கட்டும்.  உமக்கு  உயிருடன் உள்ள முழு கோழி, ஆடு, மீன் எல்லாம் அப்படியே வழங்கப் படும்.  இருவரும் சமைக்காம, உப்பு சேர்க்காம, நமது உடலில் உள்ள உறுப்புகளை மட்டுமே பயன்படுத்தி அவற்றை கொண்டு உணவை தயாரித்து உண்ண வேண்டும்.  ஏனெனில் புலி, பசு, கரடி மட்டுமல்ல மற்ற எல்லா ஜீவன்களும் தங்கள் உணவை அவ்வண்ணமே தயாரித்து உண்கின்றன. மாமிசமும் உமது உணவு என்றால் நீரும் அதே முறையில் உண்டு நிரூபிக்க வேண்டும். பார்த்து விடுவோமா ஒரு மாதத்திற்கு?  இதில் நீர் தாக்குப் பிடித்துவிட்டால்  மனிதன் தாவரம் + மாமிசம் இரண்டும் உண்ணத் தகுதியானவன், அவன் ஒரு  பல்லுணவு உண்ணி ( Omnivore ) என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.

லண்டனில் பன்றியின் குடலை வறுத்து பதப் படுத்தி மாட்டுக்கு காட்டயமாக்கி உண்ண  வைத்தார்கள், அவை உண்டான, [பின்னர் Mad Cow disease வந்தது.]
அதற்காக பசுவை பல்லுணவு உண்ணி ( Omnivore ) என்று சொல்லிவிட முடியுமா?  எவனாச்சும் ஆட்டை/கோழியை வெட்டி சுத்தப் படுத்தி வைத்திருப்பான், நோகாமல் நொங்கு சாப்பிடுவது போல காசை கொடுத்து வாங்கி வந்து,  நன்றாக வேக வைத்து,  நாற்றம் போவதற்கு மசாலாவைத் தூவி, சுவையே இல்லாத அதற்க்கு உப்பைப் போட்டு தின்று விட்டு அது எனக்கான உணவு என்பது சுத்த பேத்தல்.  

என் குடலில் ஆசிட் இருக்கு, புலாசுலாக்கி இல்லை என்பதெல்லாம் படித்தவன் என்ற முறையில் செய்யும் மாய்மாலம்.  அதில் துளியும் உண்மையில்லை. என்னோட உடல் உறுப்புகள், ஜீரண உறுப்புகள்  மாமிசத்தையும் deal பண்ணும் என்பதை நீர் நிரூபிக்க வேண்டுமானால் எல்லா ஜீவன்களும் மாமிசத்தை உண்பது போலவே நீரும் உன்ன வேண்டும். அது உம்மால் முடியுமா?  முடியாவிட்டால் உமக்கு மாமிசம் தின்னும் ஆசையை, மற்றவர்கள் மேல் திணிக்கலாமா?   அதற்க்கு உம்முடைய படித்த அறிவை துஷ் பிரயோகம் செய்யலாமா?  அதற்க்கு சாதிச் சாயம் பூசும் தார் டப்பாவை கையில் எடுக்கலாமா?  புலால் மறுப்பு பற்றி ஒரு அதிகாரத்தில் பத்து குறள்களை எழுதிய திருவள்ளுவர் என்ன முட்டாளா?  நீர் ஒருத்தர் மட்டுமே அறிவாளியா?

எதிர் தரப்பு:  எஸ்கிமோக்கள் வாழும் சூழ்நிலையில் அசைவம் தின்னாம வாழ முடியாது.  அதனால நானும் தின்பேன்.

நமது பதில்:  ஏன் ஆப்பிரிக்காவில் பழங்குடியினர் சிலர் பிணத்தை வேகவச்சி சுத்தியும் உட்கார்ந்துகிட்டு பிச்சு பிச்சு தின்றாங்க, ஆகையால் நீரும் தின்னலாமே?  எஸ்கிமோக்கள் வாழும் சூழ் நிலையிலா நீர் இருக்கிறீர்?  அவர்கள் மாமிசம் உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக எல்லோரும் தின்ன வேண்டுமென்று சட்டமா?   அப்படியே எஸ்கிமோக்கள் தின்னுவதால் அது மனித உடலுக்கு ஏற்றதாகிவிடுமா?  எஸ்கிமோக்கள் உண்ணுகிறார்கள் என்றாலும் அவர்கள் மனிதன்  உடலுக்கு ஒவ்வாத ஒன்றை உண்ணுகிறார்கள் என்று அர்த்தமே தவிர அது மனிதன் உடலமைப்புக்கு ஏற்றதென்று ஆகிவிடாது.



[இந்தக் காணொளியை ஒரு முறை எங்கோ பார்த்தேன், இன்னொரு முறை பார்க்க வில்லை மெல்லிய மனதுள்ளவர்கள் பார்க்க வேண்டாம். ]

எதிர் தரப்பு: என்னோட உடம்பில B 12 விட்டமின் குறைச்சு போச்சு, மினரல் காலி,  உடல் ஆரோக்கியப் பிரச்சினை பல வருது. எங்க பரம்பரை மாமிசம் சாப்பிடாததால் தான் இத்தனை பிரச்சினையும்.  அதனால நான் இப்போ மாமிசம் சாப்பிட்டு தெம்பா இருக்கேன்.

நமது பதில்:  உம்மோட உடம்பில எங்கோ ஒரு மினாராலும், விட்டமினும் காணாம போனதுக்கே இப்படி பதருகிறாயே, அவற்றை ஈடுகட்ட நீர்  போட்டுத்தள்ளிய மீனு, ஆடு, கோழி , நாயி இன்னும் என்னன்னவோ யாருக்குத் தெரியும், அத்தனையும் தங்கள் வாழ்நாளை பாதியில் முடித்துக் கொண்டனவே அது குறித்து நீர் கொஞ்சமாவது நினைத்துப்  பார்த்தீரா?  உலகில் நீர் ஒருத்தர் மட்டும்தான் வாழ வேண்டும் மற்றவை உமக்காகச் சாக வேண்டுமா?  என்ன சுய நலம் இது...........??  அதாவது மனுஷன் எல்லோரும் ஆரோக்கியமா வாழ்ந்தா போதும்னு நீராக ஒரு வட்டம் போட்டு முடிவுகட்டிவிட்டீர்.  இன்னொரு உயிர் வாழ வேண்டுமா சாக வேண்டுமா எனத் தீர்மானிக்க நீர் யார்?  உம்மைப்போலவே அவையும் வாழ்ந்து இயற்கையாக மடியக் கூடாதா?


 உமக்கு எந்தெந்த ஜீவன்களையெல்லாம் கட்டுப் படுத்த முடியுமோ, எதிர்த்து கேள்வி கேட்காதோ, கையாலாகாத நிலையில் உள்ளனவோ அவை அத்தனையையும் உம்மோட சுகத்துக்காக, நலனுக்காக கொல்லலாம் என்று அர்த்தமாகிறது.  இதை நானும் தாவரங்களைக் கொல்வதால் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.  நீர் மனிதன் எல்லோரும் நலமுடன் வாழ்ந்தால் போதும், மற்ற உயிர்கள் உம்  நலனுக்காக செத்தாலும் பரவாயில்லை என்று ஒரு வட்டம் போட்டு  நினைக்கும்போது, ஒருத்தன் தன்னுடைய சாதி என்ற வட்டம் போட்டு அது மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்தால் அதை நீர் ஏற்றுக் கொள்வீரா?  ஒரு நாட்டில் ஒரு இனத்தை அரசே கொன்று தீர்த்தது, அவர்கள் செத்தால் தான் என்னுடைய இனம் வாழும் என வட்டம் போட்டு நினைத்தது சரியா?  அமரிக்கா தான் நலமாக இருந்தால் போதும் என அமரிக்க மக்கள் என்ற வட்டத்தைப் போட்டு மற்ற நாடுகளை அடிக்கிறதே அதை எற்ப்பீரா?  அப்படியானால் நீர் போட்ட வட்டம் சரி, மற்றவர்கள் போடும் வட்டம் தவறு என்று நீர் எப்படி சொல்கிறீர்? மனிதனுடைய உயிர் மாத்திரமே முக்கியம் மற்றவை வாழவே தேவையில்லையா?  இன்பம், துன்பம் என்பது உமக்கு இருப்பது போலவே அவற்றுக்கும் இருக்காதா?  உணவுக்காக இன்னொரு உயிரை கொல்லுவது என்பது  தவிர்க்க முடியாதது, ஒரு ஜீவன்தான் இன்னொரு ஜீவனுக்கு உணவு என்பது இயற்க்கை நியதி, என்னுடைய உடலுக்கு தாவர உணவு மட்டுமே பொருந்துவதால், அதைக்  கொல்வதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்கிறேன்.  மாமிசத்தை உண்டு ஜீரணிக்கும் தகுதி வாய்ந்த ஜீவன்கள் அவற்றைக் கொன்று உண்ணட்டும் வேண்டாமென்று சொல்லப் போவதில்லை, இதிலென்ன தவறு?


வெள்ளை  பேக் கிரவுண்டில், கருப்பு எழுத்துகளில் கண்ணை உறுத்தாமல் பதிவு எழுதினால் மட்டும் போதாது, அதில் விஷத்தையும், விஷமத்தையும் கலக்காமல் எழுதவு ம் வேண்டும்.  பொய்யை, இல்லாதததை, சொல்லாததை சொன்னதாக பித்தலாட்டம் செய்ய உன்னை போல படித்தவன் தேவை இல்லை.  பஸ்ஸில் பிக் பாக்கெட் அடிப்பவன் செய்வான்.  நீர்  படித்தவர் அதற்கேற்ற தரத்தோடு நடந்து கொள்ளும்.  

 எதிர் தரப்பு:  தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரனாயிட்டான்.

நமது பதில்:  உன் உடலுக்கு ஏற்றதை உண்ணுங்க, மற்ற ஜீவன்களை அனாவசியமா கொல்லாதீங்க என்று சொல்பவன் தடிஎடுத்தவனாக ஆயிட்டானா? என்ன கொடுமை சார் இது?  மனிதன் வாயில் சுரக்கும் உமிழ்நீர், குடலில் சுரக்கும் அமிலம், குடலின் நீளம் அரைக்கும் வகையில் இயங்கும் தாடைகள், தோலில் உள்ள ஆயிரமாயிரம் வியர்வைத் துளைகள் என்று இத்தனை ஆதாரத்தோடு, இவை அத்தனையும் மனிதன் தாவர உணவை உண்ணுபவன் என்று சொல்லும்போது, இல்லை இல்லை மாமிசத்தையும் தின்னலாம் என்ற பித்தலாட்டம் செய்யும் நீர்  தான் தடியை கையில் எடுத்த தண்டல் காரன், கருத்தை திணித்தவன், படித்த கல்வியை துஷ்பிரயோகம் செய்தவன்.  நாம் இல்லை.

 எதிர் தரப்பு:   யாரோ ஒருவர் எமக்கு அறிவியல் தெரியாது என்று எல்லாம் உளறி வருகின்றார்.

 நமது பதில்: \\அரைவேற்காடுகள் எல்லாம் இணையத்தில் அறிவியல் ( உயிரியல் ) பேச வந்துவிட்டன .. !\\  இது நமக்கு வந்த ஒரு நண்பரது பின்னூட்டம்.  ஆனாலும் நாம் யாரையும் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை.  ஒருவேளை அப்படிச் சொன்னவர்கள் இருந்தால் அவர்கள் பதிலளிக்கட்டும்.  மேலும், ஒரு விஷயம் தெரியவில்லை என்பதை இழிநிலையாக நாம் கருதவில்லை.

சைவ உணவு சிறந்ததா, அசைவ உணவு சிறந்ததா என்பதை தீர்மானிக்க நீர் ஒன்றும் நாட்டமை இல்லை, உன்னால் கொல்லப் படும் உயிர்களுக்கும் வாழும்  உரிமை இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

மொத்தத்தில், ஒரு உயிர் இன்னொரு உயிருக்கு உணவு என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.  உம்முடைய உடலுக்கு ஏற்ற உணவை எடுத்துக் கொண்டு மற்ற உயிர்களை வாழ விடு என்பது நமது பாலிசி.  ஜீவகாருண்யம் என்ற பெயரில் புலிகளை பிஸ்கட் தின்னச் சொல்லப் போவதில்லை.  மானை புலி அடித்துத் தின்னட்டும் ஆட்டை ஓநாய் அடித்துத் தின்னட்டும், அவற்றின் உடல் அதற்க்கு ஏற்றது.  நீ மனிதன் ஆறறிவு படைத்தவன் நாகரீகம் தெரிந்தவன், அப்படி இருந்தும் நாய், ஓநாய் இவற்றுக்கு தகுதியான உணவை நீ பிடுங்கித் தின்னலாமா?

இறுதியாக நாம் சொல்ல வருவது:  மாமிச  உணவு மனித உடலுக்கு ஏற்றது இல்லை.  இதையேதான் திருவள்ளுவரும் பத்து குறள்களில் சொல்லுகிறார்.  எனவே அதைத் தவிர்ப்பது நல்லது.  இது கட்டாயம் இல்லை.  முடிவு செய்ய வேண்டியது வாசகர்களாகிய நீங்கள் மட்டுமே.

82 comments:

  1. திருவள்ளுவர் ஒரு அசைவப்பிரியர் என்று சொல்லாமல் இருந்தால் சரி...

    மற்றபடி குறள் எண் : 34

    ReplyDelete
  2. ஹி....ஹி.....................
    ரொம்ப பாவமாக இருக்கு சார் .

    இந்த கானோளிக்கு ஏதாவது பதில் சொல்லவும் .
    http://www.youtube.com/watch?v=oXhElaGCZVU

    ReplyDelete
    Replies
    1. புல்லையே கண்ணில் காட்டாத தெனாலிராமன் குதிரையை மாதிரி இதை வளர்த்திருப்பான் போல. அதுசரி உரிச்சு, மசாலா தடவி எண்ணெயில் வறுக்காம நீங்களும் சிக்கனை அதே மாதிரி பிடிச்சு விழுங்குங்களேன் என்று தான் நானும் கேட்கிறேன். Exceptions cannot be made as laws. நான் கூட டியூப் லைட்டை உடைச்சு ஏதோ கரும்பைத் தின்னுவது போல தின்னுப்வனை காட்ட முடியும் அதுக்காகக அடுத்த பதிவர் சந்திப்புக்கு மதிய உணவுக்கு முன்னூறு ஃ பியூஸ் போன டியூப் லைட்டை ஆர்டர் பண்ணப் போறீங்களா என்ன?

      Delete
    2. அப்படியே நீங்களும் இந்த காணொளியை பார்த்திட்டு பதில் முடிஞ்சா சொல்லுங்க.

      http://www.youtube.com/watch?v=586ZOQDfZKU

      Delete

    3. இந்த காணொளியை கூட பார்த்து ரசிக்கலாம்.

      http://www.youtube.com/watch?v=VCdQTJIQ5lc&feature=related

      Delete
  3. மனிதன் என்பவன் பல்லுணவு உண்ணி இல்லை என நீங்கள் கூறியதன் எதிர்வு அப்பதிவு. நீங்கள் விரும்பியதை உண்ணுங்கள், அது தனிப்பட்ட விடயமாய் இருக்கட்டும். தாவர உணவு சாதிய அடையாளமாய் மாறும் போதும், அல்லது சான்றுகளின் அடிப்படையிலான உலக அறிவியலுக்கு முரணாக பிரச்சாரப்படுத்தும் போதும் எதிர்வு கூற கடமைப்பட்டுள்ளோம். ஜீவகாருண்யம் நல்லதே, ஆனால் உயிர்பிழைப்பு ஓட்டத்தில் தனக்குப் பின்னே தானமும், தருமமும் என்பது உலக நியதி. தடுத்த சொற்கள் தனிப்பட்ட ரீதியாக உம் மனதை புண்படுத்தி இருந்தால் வருந்துகின்றேன்.

    ReplyDelete
  4. கிருஷ்ணரு வெண்ணெய்யைத் திருடித் தின்பாராம். நான் மாட்டுக்கறியை காசு கொடுத்தே வாங்கி சாப்பிடுவேன்.மாட்டுக்கறி மட்டுமல்ல பன்னிக்கறியும் மிகவும் சுவையாக இருக்கும்.

    நன்றாக சமைப்பேன்.

    அடுத்த ஏகாதசிக்கு மாட்டுக்கறியுடன் உங்களுக்கு விருந்து வைக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. @ராவணன்

      இவ்வளவு அன்பா வாங்க சாப்பாடு போடுறேன்னு கூப்பிட்டிருக்கீங்களே, அதிலே நீங்க உயர்ந்திருக்கீங்க!! அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும், மிக்க நன்றி நண்பரே!!

      Delete
  5. சைவ உணவை தேர்ந்தெடுப்பதும் அசைவ உணவை தேர்ந்தெடுப்பதும் அவரவர் விருப்பத்தை பொருத்தது. சைவ உணவை உண்பவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், புனிதர்கள் அசைவ உணவை உண்பவர்கள் புனித மற்றவர்கள் என்ற நிலைப்பாடு தவறானது. இதனாலேயே மாட்டுக் கறியை பிரியமாக சாப்பிடும் தலித்துகளை திண்டத்தகாதவர்கள் என்று சமூகத்தில் இந்து மதத்தினரால் ஒதுக்கப்பட்டனர். இந்த நிலைப்பாடு தவறு.

    ஒரு மனிதன் உடல் உழைப்பில் அதிகம் கவனம் செலுததுபவனுக்கு புரதச் சத்து அதிகம தேவைப்படும். அந்த நேரம் அவனுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் ஆட்டையோ மாட்டையோ சாப்பிடுவது அவனது உடலைப் பொருத்த வரை நல்லது. வியர்வை சிந்தாத அலுவலக வேலை பார்ப்பவர்களுக்கு காய் கறி உணவே போதுமானதாக இருக்கலாம்.

    ReplyDelete
  6. சீனர்களின் புராதன உணவு பன்றி, எங்கூரு சுவனப்பிரியன் அந்தக்கறியையும் சேர்த்திருக்கலாம்.

    ReplyDelete
  7. இந்த விவாதம் சரியான திசையில் செல்லவேண்டும் என்பது என் கருத்து.

    ReplyDelete
  8. நண்பர்,
    சைவ உணவுகள் தான் சிறந்தது (சைவம் என்று சொல்வது திராவிட ஆதரவாளருக்கு பிடிக்காதது என்பதால் இறைச்சி வகை தவிர்ந்த உணவு என்று வைத்து கொள்வோம்) மனிதனுக்கு ஏற்றது என்று வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு ஆரோக்கிய பத்திரிக்கைகள் சொல்வது உண்மை.
    //சுவனப் பிரியன்November 24, 2012 6:54 PM
    சைவ உணவை தேர்ந்தெடுப்பதும் அசைவ உணவை தேர்ந்தெடுப்பதும் அவரவர் விருப்பத்தை பொருத்தது//
    எனக்கு தலை சுத்துது. எனது கருத்தை அப்படியே சுவர்ன சுவாமிகள் எப்படி சொன்னார்?
    சைவ உணவை தேர்ந்தெடுப்பதில் கூட கத்தரிக்காயா பருப்பா?
    அசைவ உணவை தேர்ந்தெடுப்பதில் பன்றி இறைச்சியா, மாட்டு இறைச்சியா? என்பது
    அவரவர் விருப்பத்தை பொருத்தது.

    ReplyDelete
  9. அவரவர் விரும்புவதை சிறு வயதில் சாப்பிடுங்கள் வயதானதும் உடலுக்கு ஏற்றதை சாப்பிடுங்கள்.

    ReplyDelete
  10. அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. கட்டாயம் இல்லை. உயர் ஜாதி உணவு என்பதால் சைவத்தை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னைப்போன்று அசைவதத்தை விடுவதற்கு முயற்சி செய்பவர்களுக்கு (ஜீவகாருண்யம்)இக்பால் பதிவு ஒரு hurdle.
    Since we have option, ethically I want to be a vegetarian.

    "குறைந்த விலையில் கிடைக்கும் ஆட்டையோ மாட்டையோ" Good joke even in Gulf.

    ReplyDelete
    Replies


    1. \\"குறைந்த விலையில் கிடைக்கும் ஆட்டையோ மாட்டையோ" Good joke even in Gulf. \\ Good punch, thanks.

      Delete
  11. //குடுகுடுப்பைNovember 24, 2012 7:37 PM
    சீனர்களின் புராதன உணவு பன்றி எங்கூரு சுவனப்பிரியன் அந்தக்கறியையும் சேர்த்திருக்கலாம்.//
    புரதச் சத்து அதிகம தேவைப்படும் என்கின்ற போது அசைவ கறிகள் பற்றி குறிப்பீடும் போது பன்றி கறி பற்றி அவசியம் சொல்லபடவேண்டும். அப்படி சொல்லபடாவிட்டால் அது அரபு ஆக்கிரமிக்காகான மத பிரசாரம் மட்டுமே

    ReplyDelete
  12. ஜடாயு on November 21, 2012 at 9:10 pm in Tamil hindu

    வால்மீகி ராமாயணத்தில் பல இடங்களில் ராம லட்சுமணர்கள் மாமிச உணவு உண்டது குறித்து வருகிற,து. சித்திரகூட பர்ணசாலை கட்டி முடித்ததும், கருப்பு மானை லட்சுமணன் வேட்டையாடி வர, அதைக் கொண்டு ஸ்ரீராமன் பலிச்சடங்கு செய்வதாகவே வருகிறது. சொல் விளையாட்டுக்கள் மூலம் இவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது பொருளற்றது. சமீபத்தில் சிறந்த ராமாயண அறிஞரும் யோக ஆசாரியருமான டாக்டர் ரங்கன் ஜி (கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் குமாரர்) அவர்கள் செய்த வால்மீகி ராமாயணத்தின் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் ஒரு விரிவான முன்னுரையும் எழுதியிருக்கிறார். அந்த முன்னுரையிலும் இதைச் சுட்டியிருக்கிறார். அக்காலத்திய உணவுப் பழக்கத்தின் படி ராமன் உணவுண்டதாக வால்மீகி எழுதியிருக்கிறார்; இதனால் “அறத்தின் திருவுருவம் ராமன்” என்ற கருத்தாக்கம் சிறிதும் குறைபடாது என்றும் விளக்கியிருக்கிறார்.

    கம்பனது காலத்தில் புலால் மறுத்தல் என்பது கட்டாயமான தவ நெறியாக ஆகி விட்டிருந்ததால், அதற்கேற்றவாறு குகன் கொணர்ந்த தேனையும் மீனையும் ராமன் “யாமும் உண்டனம் அன்றே” என்று அருள் செய்வதாக கம்பன் எழுதியிருக்கிறான்.

    சம்பிரதாயவாதிகளுக்கு இக்கருத்து ஏற்க முடியாதிருக்கலாம். ஆனால் இதை இவ்வாறு நாம் புரிந்து கொண்டு விளக்குவதே நீண்ட கால நோக்கில் சரியான அணுகுமுறை என்று நான் கருதுகிறேன். காரணம்? சில பத்தாண்டுகள் முன்பு கூட, வால்மீகி ராமாயண மொழிபெயர்ப்பை நேரடியாக படிக்கும் வாய்ப்பு என்பது மிக அரிதாகவே இருந்தது. பெரும்பாலான மக்கள் கதாகாலட்சேபம், உபன்யாசங்கள் மூலமே அதை அறிந்தனர். எனவே, சொற்பொழிவாளரது கருத்துக்களால் வடிகட்டப் பட்டே அது மக்களை வந்தடைந்தது. ஆனால், இன்று அப்படியல்ல, வால்மீகி ராமாயணம் அதன் அனைத்து பாஷ்யங்களுடன், ஆங்கில மொழிபெயர்ப்புடன் முழுமையாக இணையத்தில் கிடைக்கிறது. தேடல் உள்ள ஒருவர் உடனடியாக அதை எடுத்துப் படித்து விட முடியும். காலங்காலமாக பூட்டி வைக்கப் பட்டிருந்த அறிவுத் துறைகளின் கதவுகளை இணையமும் தொழில்நுட்பமும் தகர்த்து விட்டன என்பதையாவது இங்கு வந்து நீட்டி முழக்கும் ஆசாரவாதிகள் (orthodox people) புரிந்து கொள்ளட்டும்.

    ReplyDelete
    Replies
    1. @ சுவனப் பிரியன்

      By the by, whose view is this?

      Delete
  13. திரு குடுகுடுப்பை!

    //சீனர்களின் புராதன உணவு பன்றி, எங்கூரு சுவனப்பிரியன் அந்தக்கறியையும் சேர்த்திருக்கலாம்.//

    பன்றிக் கறி சாப்பிட ஒருவர் விருப்பப் பட்டால் அதை நான் தடுக்க மாட்டேன். அது அவரது விருப்பம். எனக்கு பிடிக்காது அவ்வளவுதான்.

    ReplyDelete
  14. நான் சைவம்! உயிருள்ள, உணர்வுள்ள ஜீவன்களை கொன்று தின்பது பாவமாக இருக்கிறது. ஜாதி, மத ரீதியாக இல்லாமல் மனிதத்தோடு ஆராய்ந்து பாருங்கள். விலங்குகள் துடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அசைவம் சாப்பிடுபவர்களே கூட ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரும் போது சைவத்தைதான் பின் பற்றுகிறார்கள்.
    நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் கோபத்துடன் விவாதம் வேண்டாம். மிக்க நன்றி! சைவம்தான் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. அநியாய பழி சுமத்தும் போது இப்படி ஆயிடுது, what can I do Usha!!

      Delete
  15. மத சண்டை விட்டுட்டு தேவையானதை விவாதிக்கலாம். :)

    ReplyDelete
    Replies
    1. @Annaraj
      மதச் சண்டையா? எந்தந்த மதத்துக்கு நடுவில நடக்குது, எங்கே நடக்குது? எனக்கு எதுவும் தெரியாதுகளே!!

      Delete
  16. சைவம் தான் ரொம்ப நல்லது என சொல்லுபவர்கள் எத்தனைப்பேர் சைவ உணவு உற்பத்தியில் தங்கள் உடல் உழைப்பை கொடுத்திருப்பார்கள்?

    வேறு யாரோ உழைத்து நாற்று நட்டு, அறுவடை செய்து,அரிசியாக அரைத்து ,அதுவும் சன்ன ரகமாக கடையில் விற்றால் வாங்கி சாப்பிடுபவர்கள் , அந்த சைவ உணவை உற்பத்தி செய்பவனுக்கு தெரியாத உண்மையை எப்படி கண்டறிந்தார்கள்.

    விவசாயிகளில் எத்தனை சதவீதம் சைவம் சாப்பிடுகிறார்கள்?

    பணம் என்ற காகிதத்திற்கு மதிப்பில்லை என ஆகிவிட்டால் நீங்கள் எல்லாம் வாங்கி சாப்பிட சைவ உணவு என மார்க்கெட்டில் கிடைக்காது :-))

    சும்மா கொட்டையை சாப்பிடுவேன் ,பட்டையை சாப்பிடுவேன் என சொல்பவர்களுக்கு அதை எல்லாம் யாரோ உற்பத்தி செய்தால் தான் கிடைக்கும், உற்பத்தி செய்பவனே அசைவம் உண்கிறானே ஏன் என யோசிக்க மாட்டீர்களா?

    உணவை உற்பத்தி செய்பவன் விலைக்கு விற்க மாட்டேன் என சொல்லிவிட்டால் அத்தனை பேரின் கதையும் நாறிடும். ரொம்ப நாறுவது சைவம் மட்டுமே என பீற்றிக்கொள்பவர்களுக்கே :-))

    ReplyDelete
    Replies
    1. உண்மை. உண்மை .. காகிதத்திற்கு மதிப்பு கொடுப்பதால் உழைப்பின் உயர்வு தெரியாது. நாலு எழுத்து படித்து விட்டால் எதோ சாதித்ததாக நினைப்பு. தண்ணீர் இல்லாமை, வெப்பம், பூச்சிகள் , உரம் , பிறந்த குழந்தையை பார்த்து கொள்வது போல அவ்வளவு உழைப்பு, அறுவடை சமயம் மழை இன்னும் எவ்வளவோ பிரச்னை உள்ள விவசாயம் மிக மிக சிரமமானது . ஒரு மாதமாவது நிலத்தில் உழைத்து பயிர் பண்ணி பார்த்திருந்தால் படிப்பை துச்சமாக எண்ணி விடுவார் உண்மை மனிதன் என்பார் .
      இதை பிடுங்கி கொண்டு வாயில் எதையோ முனுமுனுத்து செல்பவர் கொள்ளை கூட்டம் சேர்ந்தவர் .

      Delete
  17. \\விவசாயிகளில் எத்தனை சதவீதம் சைவம் சாப்பிடுகிறார்கள்?\\ Why that should matter to me?

    \\பணம் என்ற காகிதத்திற்கு மதிப்பில்லை என ஆகிவிட்டால் நீங்கள் எல்லாம் வாங்கி சாப்பிட சைவ உணவு என மார்க்கெட்டில் கிடைக்காது :-))\\ பணம் என்ற காகிதத்திற்கு மதிப்பில்லை என ஆகிவிட்டால் அசைவ உணவு மட்டும் தான் கிடைக்குமா?

    \\சும்மா கொட்டையை சாப்பிடுவேன் ,பட்டையை சாப்பிடுவேன் என சொல்பவர்களுக்கு அதை எல்லாம் யாரோ உற்பத்தி செய்தால் தான் கிடைக்கும், உற்பத்தி செய்பவனே அசைவம் உண்கிறானே ஏன் என யோசிக்க மாட்டீர்களா?\\ அதனால் நான் ஏன் அசைவம் உண்ண வேண்டும்?

    \\உணவை உற்பத்தி செய்பவன் விலைக்கு விற்க மாட்டேன் என சொல்லிவிட்டால் அத்தனை பேரின் கதையும் நாறிடும். ரொம்ப நாறுவது சைவம் மட்டுமே என பீற்றிக்கொள்பவர்களுக்கே :-)) \\ அதுசரி உணவை உற்பத்தி செய்பவன் விலைக்கு விற்க மாட்டேன் என ஏன் சொல்ல வேண்டும்? முல்லை பெரியாறு பிரச்சினையின் பொது தமிழகத்தில் இருந்து காய்கறிகள், கீரைகளை கேரளா கொண்டு செல்லும் வண்டிகள் செல்லாததால், எக்கச் சக்கமான விலை பொருட்கள் அழுகி சேதமாகின, உற்பத்தியாளர்களுக்கு பெருத்த அடி. அவன், ஆந்திராவில் இருந்து வாங்கிப் பயன் படுத்திக் கொண்டான்.

    கேரளாவிற்குச் செல்லும் கோழிகள் பறவைக் காய்ச்சலால் தாக்கப் பட்டிருக்கலாம்னு சந்தேகத்தின் பேரில் அவற்றை உள்ளே கொண்டு வரவேண்டாம் என்று அவர்கள் தடை செய்த போது எல்லா கோழிப் பண்ணை உரிமையாளர்களின் பொழப்பு ரொம்ப நாறியது என்பதை அறியவும்.

    நார வேண்டுமானால் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் நாரலாம். அதுசரி what is the relevance of your point in this context?

    ReplyDelete
    Replies
    1. // what is the relevance of your point in this context?//

      உழைப்பை பொறுத்தது உணவு என்பதால் தொடர்புள்ளது.

      சைவ உணவாளர்களுக்கு உழைத்து உணவை உற்பத்தி செய்யும் தன்மை இல்லை, ஆனால் அசைவ உணவாளர்கள் அதிகம் பேர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார்கள்.

      அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு வியாபாரத்திற்கு அனுப்பி கொண்டு இருக்கும் நிலையில், கேரளாவிற்கு திடீர் என அனுப்ப முடியாவிட்டால் பொருளாதார ரீதியா நட்டம் என்பதால் கவலைப்படுகிறார்கள்.

      நாளைக்கே தண்ணீர் பஞ்சம், ஆட்கள் சம்பளம் உயர்வு ,கிடைக்கவில்லை என்றால் கேரளாவிற்கு அன்னுப என உற்பத்தியில் ஈடுபட மாட்டார்கள்.

      அதே போல விவசாயி ஒவ்வொருவரும் அவர்கள் தேவைக்கு உற்பத்தி செய்தால் அனைவர் நிலையும் நாரும், குறிப்பாக சைவமே உண்பேன் என்பவர்கள் நிலை.

      நீங்கள் ஒரு அறையில் சைவம், அசைவம் என பூட்டி வைத்து உண்டு வாழ முடியுமா என்கிறீர்களே, ஏன் அறையில் அந்த சவால், வாருங்கள் ஒரு காட்டில் தனியாக சைவ ,அசைவ உணவாளர்களை விட்டு அவர்களே கிடைக்கும் உணவை கொண்டு ஒரு மாதம் உயிர் வாழ வேண்டும் என போட்டி வைப்ப்போம், அசைவ உணவாளர் எளிதில் சமாளித்து வாழ்வார், சைவ உணவாளர் எப்படி கொட்டையும், கனியும் கண்டுப்பிடிக்கிறார் எனப்பார்ப்போம் :-))

      எவனாவது பாடுபட்டு உழைத்து உணவு உற்பத்தி செய்து கொடுத்தால் நோகாம சாப்பிடும் மக்கள் செய்யும் பிரசங்கமே சைவ உணவு தான் மனிதனுக்கு என்பது.

      மனிதனுக்கு "canine tooth" என இரண்டு சிங்கப்பல்லும் உண்டு,அது மாமிசம் சாப்பிடவே.

      மாட்டு பாலை கூட மனிதனின் உடல் இயற்கையா செரிக்காது, நிறைய பேருக்கு லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என ஒரு குறைபாடு கூட உண்டு.

      அதே போல பீநட் அலர்ஜி என எல்லாம் உண்டு.

      ஏன் சைவ உணவு எனப்படைத்த மனிதனுக்கு இப்படில்லாம் ஆகிறது?

      பரிணாமவியல் படி மனிதன் அனைத்துண்ணி என்பதை மறுக்க சரியான ஆதாரம் இருந்தால் காட்டவும்.

      Delete
    2. \\அதே போல விவசாயி ஒவ்வொருவரும் அவர்கள் தேவைக்கு உற்பத்தி செய்தால் அனைவர் நிலையும் நாரும், குறிப்பாக சைவமே உண்பேன் என்பவர்கள் நிலை.\\ விவசாயியும் மற்ற பொருட்களை வாங்க பணம் தேவைப் படுகிறதே? அவர் வீட்டிலும் தொலைகாட்சி இருக்கலாம் அவர் மகளுக்கு நகை வாங்க நினைக்கலாம். குடும்பத்துக்கு உடைகள் வாங்கலாம். இதற்க்கெல்லாம் பொருள் தேவைப் படுகிறதே? Therefore, இந்த நிலை ஏற்படாது. மேலும் சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு இருக்கிறதல்லவா? எல்லோரும் விவசாயி ஆக முடியாதே?

      \\நீங்கள் ஒரு அறையில் சைவம், அசைவம் என பூட்டி வைத்து உண்டு வாழ முடியுமா என்கிறீர்களே, ஏன் அறையில் அந்த சவால், வாருங்கள் ஒரு காட்டில் தனியாக சைவ ,அசைவ உணவாளர்களை விட்டு அவர்களே கிடைக்கும் உணவை கொண்டு ஒரு மாதம் உயிர் வாழ வேண்டும் என போட்டி வைப்ப்போம், அசைவ உணவாளர் எளிதில் சமாளித்து வாழ்வார், சைவ உணவாளர் எப்படி கொட்டையும், கனியும் கண்டுப்பிடிக்கிறார் எனப்பார்ப்போம் :-))\\

      எங்கள் தந்தை ஒரு விவசாயி. அவர் குடுபத்தில் ஒருமுறை ஒரு காட்டினருகே உள்ள நிலத்தை வாங்கி பண்படுத்தி விவசாயம் செய்ய முயன்றார்கள். வயலைத் திருத்தும் சமயங்களில் பல சமயம் அவர்களுக்கு சரியான உணவு இருக்காது. பசிக்கும். அப்படியே அருகில் உள்ள காட்டிர்க்குச் செல்வார்களாம். ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு வித பழங்கள் அங்கே கிடைக்குமாம். அது முடிந்ததும் அடுத்து வேறு பழ சீசன் வந்து விடுமாம். இந்தப் பழங்களை பறித்து சாப்பிட்டால் பசியாறிவிடும் களைப்பு வராது, தாகமும் எடுக்காது. இது எங்கள் அப்பா அனுபவத்தில் நாங்கள் கேட்டது. ஆக படைப்பு முட்டாள் இல்லை அன்பரே. நீங்கள் காடுகளை அழித்துவிட்டு கண்ட கண்ட கருமாந்திரங்களைத் தின்று இன்னொரு ஜீவனுக்கான உணவையும் நீங்களே சாப்பிட்டு, உங்கள் உடல் நலத்தையும் கெடுத்து இயற்க்கை உணவுச் சங்கிலியையும் நாசமாக்குகிரீர்கள்.

      \\எவனாவது பாடுபட்டு உழைத்து உணவு உற்பத்தி செய்து கொடுத்தால் நோகாம சாப்பிடும் மக்கள் செய்யும் பிரசங்கமே சைவ உணவு தான் மனிதனுக்கு என்பது.\\ இயற்கையில் மனிதனைத் தவிர எந்த ஒரு ஜீவனும் உணவு உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. ஆப்பிரிக்க காடுகளில் தினமும் டன் கணக்கில் தாவரங்களை உண்ணும் யானைகள் ஒருபோதும் விவசாயம் பார்ப்பதில்லை. மனிதன் கோழிப் பண்ணைகளை பராமரிப்பதுபோல, புலிகள் மான் பண்ணைகளைப் பராமரிப்பதில்லை. ஒவ்வொரு ஜீவனுக்கும் வேண்டிய உணவு இயற்கையை தயாராக உள்ளது. மனிதனுக்கும் அவ்வண்ணமே அவனது உணவும் தயாராக இருந்திருக்க வேண்டும், அவனது குறுக்கு புத்தியால் இன்றைக்கு நதிகள், காடுகள, காற்று மண்டலத்தை நாசப் படுத்தியது போல அவனுக்கு உணவு தரும் மூலங்கள் எல்லாவற்றையும் நாசமாக்கிவிட்டன என்றுதான் சொல்லவேண்டும்.

      \\மனிதனுக்கு "canine tooth" என இரண்டு சிங்கப்பல்லும் உண்டு,அது மாமிசம் சாப்பிடவே.\\ வெறும் பல்லு இருந்தால் மட்டும் போதாது. அந்தப் பல்லு கொஞ்சம் கடினமான காய்கள் பழங்களைக் கடிக்கத்தான் உள்ளதே தவிர மாமிசத்தை அல்ல. இல்லையில்லை மாமிசத்தைக் கடிக்கத்தான் என்றால் அதை வச்சு அப்படியே ஆட்டைக் கடித்து கொன்று அதன் தோலை நீக்கி இரத்தத்தைக் குடித்து, மாமிசத்தை தின்று காண்பிக்கவும்.

      \\மாட்டு பாலை கூட மனிதனின் உடல் இயற்கையா செரிக்காது, நிறைய பேருக்கு லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என ஒரு குறைபாடு கூட உண்டு.\\ மட்டுப் பாலைப் பற்றி நான் எதுவும் இந்தப் பதிவுகளில் சொல்லவில்லை.

      \\அதே போல பீநட் அலர்ஜி என எல்லாம் உண்டு.

      ஏன் சைவ உணவு எனப்படைத்த மனிதனுக்கு இப்படில்லாம் ஆகிறது?\\ சமைக்காமல் உப்பு போடாமல் உண்டால் ஒரு அலர்ஜியும் வராது.

      \\பரிணாமவியல் படி மனிதன் அனைத்துண்ணி என்பதை மறுக்க சரியான ஆதாரம் இருந்தால் காட்டவும்.\\ [பரிணாமவியல் என்பதே பித்தலாடமாச்சே, அதன்படி நான் எதற்கு ஆதாரம் கொடுக்க வேண்டும்?] இதை நூறு முறை சொல்லிவிட்டேன். இந்தப் பதிவிலும் இதுதான் மையைக் கருத்தே. படிக்கவில்லையா? கரடி அனைத்துண்ணி என்றால் அது மீனையும் தானே பிடித்து அப்படியே சாப்பிடும் பழங்களையும் அப்படியே சாப்பிடும். ஒரு மாதத்துக்கு பச்சை மீன் என்றாலும் அப்படியே உண்டு வாழும் செத்துப் போவிடாது. ஆடு, கோழி, நாய் இன்னும் என்னென்ன நீர் உன்பீரோ, அவை அத்தனையும் உயிரோடு உம்மிடம் தந்தால் அதை உமது உடல் உறுப்புகளைக் கொண்டே கொன்று, பச்சையாக உண்டு ஒரு மாதத்திற்கு வாழ்ந்து காண்பிக்க முடியுமா? ஆம் என்றால் நீரும் ஒரு அனைத்துண்ணி தான். இல்லாவிட்டால் இயற்கையின் உணவு சுழற்சியில் மற்ற ஜீவனுக்கான உணவைத் திருடி நீர் உள்ளே தள்ளுகிறீர் என்று அர்த்தம்.

      Delete
    3. // இயற்கையின் உணவு சுழற்சியில் மற்ற ஜீவனுக்கான உணவைத் திருடி நீர் உள்ளே தள்ளுகிறீர் என்று அர்த்தம்.//

      அப்படியா தாவர உணவுகளை மனிதனுக்காகவா படைத்து இருக்கார் உங்க இறைவன், ஆடு,மாடு,யானை, மான் ,அணில்,குரங்கு போன்றவை உண்னவே, அவற்றின் தாவர உணவஇ ஏன் பறித்து உண்கிறீர்கள்?

      இயற்கையில் எந்த விலங்கும் விவசாயம் செய்வதில்லை என நீரே சொல்லிவிட்டீர், ஆனால் விவசாயம் செய்யாமல் இயற்கையில் உள்ள தாவர உணவுகள் எல்லாம் தாவர உண்ணிகளான விலங்குக்கு எனில் நீர் உண்ணும் பழம்,கொட்டை எல்லாம் பிடுங்கி திண்பதே :-))

      மனிதன் ஏன் பச்சையாக உண்ண வேண்டும் விலங்கை விட அறிவும்,சிந்திக்கும் திறனும் உள்ளதால் சமைத்து உண்ண முடிகிறது.

      தாவர உண்ணிகளானா ஆடு,மாடு உடை உடுப்பதில்லை, இன்னொருவர் உழைக்க ஏமாற்றி உண்பதில்லை, இணையம் எல்லாம் பயன்ப்படுத்துவதில்லை, எனவே ஆடு,மாடு போன்று நீர் வாழ்ந்து காட்டினால் மட்டுமே தாவர உண்ணி இல்லை எனில் அவற்றின் உணவை பிடுங்கி திண்ணும் சுயநல மிருகமே :-))

      Delete
    4. //மட்டுப் பாலைப் பற்றி நான் எதுவும் இந்தப் பதிவுகளில் சொல்லவில்லை.//

      பாலையும் சைவர்கள் அதிகம் பேர் குடிக்கிறார்களே, அவர்களுக்கு இயல்பாக செரிக்க முடியாத பாலை மாட்டிடம் இருந்து திருடி குடிப்பது ஏன்?

      மனிதன் என்ன மானையா புடிச்சு தின்னுறான் எப்போ பார்த்தாலும் நீர் ஏன் மானை உதாரணம் காட்டுகிறீர், மானை கொன்றால் ஜாமீனில் வெளிவர முடியாத செக்‌ஷனில் உள்ள தள்ளிவிடுவார்கள்.

      மனிதன் உண்ணும் அசைவ உணவுகள் எல்லாம் அவனாலே உணவுக்காக வளர்க்கப்பட்டு ,பெருக்கப்பட்டு உண்ணப்படுகிறது, எந்த வன விலங்கின் உணவையும் தட்டிப்பறித்து உண்ணவில்லை என்பதை மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.

      உங்கப்பா விவசாயம் செய்தார் என சொன்னீர்கள், ஆனால் அப்போ வயலில் ஆடு,மாடு மேய்ந்தால் தாவர உண்ணிகளுக்காக படைக்கப்பட்ட தாவரம் , மேய்ந்துவிட்டு போகட்டுமே என வேடிக்கை பார்த்தாரா என சொல்லவும்?

      ஆனால் காட்டில் போய் பழங்களை பறித்து உண்டார் என சொல்கிறீர்களே,அவை எல்லாம் காட்டில் வாழும் குரங்கு,அணீல்,பறவைகள், கரடிக்காக உண்டானது ,ஏன் அவற்றின் உணவை திருடி சாப்பிட்டார் :-))

      Delete
    5. நெல்,கோதுமை,மக்கா சோளம்,கம்பு,கேழ்வரகு,எள்,நிலக்கடலை, தேங்காய்,கரும்பு,தேயிலை, காப்பி கொட்டை ,முந்திரி,பாதாம்,பிஸ்தா,பால்,(தயிர்,வெண்ணை,நெய் இயற்கையில் இல்லை) ஆகியவை சைவ உணவு உண்ணும் மனிதர்களின் உணவுக்காக படைக்கப்பட்டதா என்பதை சொல்லவும்.

      Delete
    6. \\அப்படியா தாவர உணவுகளை மனிதனுக்காகவா படைத்து இருக்கார் உங்க இறைவன், ஆடு,மாடு,யானை, மான் ,அணில்,குரங்கு போன்றவை உண்னவே, அவற்றின் தாவர உணவஇ ஏன் பறித்து உண்கிறீர்கள்?

      இயற்கையில் எந்த விலங்கும் விவசாயம் செய்வதில்லை என நீரே சொல்லிவிட்டீர், ஆனால் விவசாயம் செய்யாமல் இயற்கையில் உள்ள தாவர உணவுகள் எல்லாம் தாவர உண்ணிகளான விலங்குக்கு எனில் நீர் உண்ணும் பழம்,கொட்டை எல்லாம் பிடுங்கி திண்பதே :-))\\ வாத்தியார் ஐயா, மாணவர்களை படிச்சிட்டு பரீட்சைக்கு போக அறிவுறுத்தும் நீங்க, பதிவை படிக்காமலேயே பின்னூட்டம் போட்டுத் தள்ளலாமா? ஆடு,மாடு,யானை, மான் ,அணில்,குரங்கு இத்தனையும் சொன்னீங்களே, அதுல மனுஷனும் ஒரு உசிருதான் அவனும் மற்ற உயிர்களைப் போல வாழ இடமிருக்கு என்பதை மறந்திட்டீங்களா ஐயா? வச்சா குடிமி சிறைச்சா மொட்டை என்பதே உங்கள் கொள்கையா? ஒன்னு நாய், நரி என எல்லாத்துக்கும் உள்ளதை நான் பிடுங்கித் தின்பேன் என்று சொல்றீங்க, இல்லாட்டி பட்டினி கிடந்தது சாவுங்கிறீங்க? எனக்குன்னு பல்லு, உமிழ்நீர், குடல், இரைப்பை அமிலம், கை கால்களில் உள்ள நக அமைப்புகள் இதை வச்சு என்னுடைய உணவு என்னன்னு தீர்மானிக்க முடியாதுங்களா ஐயா? மனிதனுக்குன்னு உள்ள இடத்தில் அவன் இருக்கனும்கிறது உங்களுக்கு தோணவே தோணாதா?

      Delete
    7. \\மனிதன் ஏன் பச்சையாக உண்ண வேண்டும் விலங்கை விட அறிவும்,சிந்திக்கும் திறனும் உள்ளதால் சமைத்து உண்ண முடிகிறது.\\ எதையுமே இயல்பா செய்யனுமுங்கையா!! உங்களுக்கு அறிவு இருந்தாலும் வாயால் தாள் சாப்பிடனும், அதை விட்டுட்டு உடலில் நிறைய துளைகள் இருக்கு எதுல வேண்டுமானாலும் உணவைத் திணிப்பேன், ஏன்னா எனக்கு அறிவு இருக்கு என்று சொல்வது பிதற்றல் அல்லவா? அதே மாதிரி அறிவு இருக்கிறவன் கட்டுப் பாட்டோட தன உடலுக்கு ஏற்ற உணவை மட்டுமே ஏற்றுக் கொண்டு மற்றவற்றை அதற்குண்ட ஜீவன்களுக்கு விட்டு விட வேண்டும். ஐந்தறிவு மிருகங்கள் கூட இந்த நியதியைப் பின் பற்றுகின்றன. ஆறாம் அறிவு ஏழாம் அறிவு இருபதாகச் சொல்லிக் கொண்டு ஐந்தறிவுள்ள ஜந்துக்களை விட கேவலமா நடக்கக் கூடாது.

      \\தாவர உண்ணிகளானா ஆடு,மாடு உடை உடுப்பதில்லை, இன்னொருவர் உழைக்க ஏமாற்றி உண்பதில்லை, இணையம் எல்லாம் பயன்ப்படுத்துவதில்லை, எனவே ஆடு,மாடு போன்று நீர் வாழ்ந்து காட்டினால் மட்டுமே தாவர உண்ணி இல்லை எனில் அவற்றின் உணவை பிடுங்கி திண்ணும் சுயநல மிருகமே :-))\\இப்போதும் நான் "இன்னொருவர் உழைக்க ஏமாற்றி உண்பதில்லை". இணையம் எல்லாம் இல்லாட்டியும் என்னால் வாழ முடியும். எத்தனை விதமாக வாழும் சூழ்நிலை மாறினாலும் தாவர உணவுதான் எனக்கானது என்னும் நியதியை நான் மீறவில்லையே?

      Delete
    8. \\பாலையும் சைவர்கள் அதிகம் பேர் குடிக்கிறார்களே, அவர்களுக்கு இயல்பாக செரிக்க முடியாத பாலை மாட்டிடம் இருந்து திருடி குடிப்பது ஏன்?\\ பால குடிப்பது பற்றி பதிவு போட்டால் அங்கு இந்த பின்னூட்டத்தைப் பதியவும்.

      \\மனிதன் என்ன மானையா புடிச்சு தின்னுறான் எப்போ பார்த்தாலும் நீர் ஏன் மானை உதாரணம் காட்டுகிறீர், மானை கொன்றால் ஜாமீனில் வெளிவர முடியாத செக்‌ஷனில் உள்ள தள்ளிவிடுவார்கள்.\\ வாத்தியார் ஐயா, இப்படி நேர்மை தவறி அபாண்டமா பழி போடலாமா? எந்த வித மாமிசமும் மனிதனுக்காது என்று சொல்பவனிடம் மானைப் பற்றி பேசலாமா? நான் புலி மானைக் கொன்று உண்ணுவது தப்பில்லை என்றுதான் சொன்னேன், உண்மையில் மிச்ச சொச்சம் உள்ள புலிகள் காடுகளில் மானை அடித்து உண்டுதான் வாழ்கின்றன, அவற்றை யாரும் அரஸ்டு பண்ண மாட்டார்கள் கவலையே படாதீர்கள்.

      \\மனிதன் உண்ணும் அசைவ உணவுகள் எல்லாம் அவனாலே உணவுக்காக வளர்க்கப்பட்டு ,பெருக்கப்பட்டு உண்ணப்படுகிறது, எந்த வன விலங்கின் உணவையும் தட்டிப்பறித்து உண்ணவில்லை என்பதை மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.\\ நீங்க உங்க வீட்டில் வேலைக்காரனுக்கு சோறு போடுகிறீர்கள் என்பதற்காக அவனை வேண்டும்போது போட்டுத் தள்ளலாம் என்று ஆயுடுமுங்களா ஐயா? அப்புறம், ஆடு, மாடு கோழி மீன் இதுங்களை வளர்ப்பதால் அவற்றின் உயிரைப் பறிக்க மட்டும் உங்களுக்கு எப்படி உரிமை வருமுங்க ஐயா?

      \\உங்கப்பா விவசாயம் செய்தார் என சொன்னீர்கள், ஆனால் அப்போ வயலில் ஆடு,மாடு மேய்ந்தால் தாவர உண்ணிகளுக்காக படைக்கப்பட்ட தாவரம் , மேய்ந்துவிட்டு போகட்டுமே என வேடிக்கை பார்த்தாரா என சொல்லவும்?\\ நெல் பயிர் விளைந்த பின்னர், வைக்கோலை மாடுதான் உண்ணுமுங்கையா, விளைந்த பயிரை பறவைகள், எலிகள் நிறைய உண்ணுமுங்கைய்யா ஒன்னும் பண்ண முடியாது.

      \\ஆனால் காட்டில் போய் பழங்களை பறித்து உண்டார் என சொல்கிறீர்களே,அவை எல்லாம் காட்டில் வாழும் குரங்கு,அணீல்,பறவைகள், கரடிக்காக உண்டானது ,ஏன் அவற்றின் உணவை திருடி சாப்பிட்டார் :-))\\
      இந்த கண்டுபிடிப்புக்கெல்லாம் உங்களுக்கு நோபல் பரிசுதானுங்கையா குடுக்கணும். குரங்கு,அணீல்,பறவைகள், கரடி இவற்றைப் போலவே நாங்களும் பூமியில் வாழம் உசிருதானுங்களே ஐயா? என்னுடைய உடல் தகவமைப்புக்கு ஏற்றது பழங்கள் கொட்டை பருப்புகள் சாப்பிடறேனுங்கைய்யா.

      Delete
    9. \\நெல்,கோதுமை,மக்கா சோளம்,கம்பு,கேழ்வரகு,எள்,நிலக்கடலை, தேங்காய்,கரும்பு,தேயிலை, காப்பி கொட்டை ,முந்திரி,பாதாம்,பிஸ்தா,பால்,(தயிர்,வெண்ணை,நெய் இயற்கையில் இல்லை) ஆகியவை சைவ உணவு உண்ணும் மனிதர்களின் உணவுக்காக படைக்கப்பட்டதா என்பதை சொல்லவும்.\\ இவை தாவர உணவுகள், உண்ணலாம் தப்பில்லை. பாலை பற்றி நான் இந்தப் பதிவில் சொல்லவில்லை.

      Delete
    10. ஜெயதேவரே,

      //எனக்குன்னு பல்லு, உமிழ்நீர், குடல், இரைப்பை அமிலம், கை கால்களில் உள்ள நக அமைப்புகள் இதை வச்சு என்னுடைய உணவு என்னன்னு தீர்மானிக்க முடியாதுங்களா ஐயா? //

      அப்போ நெல்லு,கோதுமையை எப்படி உண்ணுறிங்க?

      எதுக்கு நெல்லை மெஷினில் அரைத்து அரிசியாக்கி ,வேக வைத்து திங்கணும்?

      கோதுமையை மாவாக ஆக்கி சப்பாத்தி,பூரி சுட்டு சாப்பிடணும்?

      சைவமா சாப்பிடலாம் ஆனால் பிற சைவ விலங்குகளின் உணவை ஏன் பறித்து சாபிடுறிங்க?

      //நீங்க உங்க வீட்டில் வேலைக்காரனுக்கு சோறு போடுகிறீர்கள் என்பதற்காக அவனை வேண்டும்போது போட்டுத் தள்ளலாம் என்று ஆயுடுமுங்களா ஐயா? அப்புறம், ஆடு, மாடு கோழி மீன் இதுங்களை வளர்ப்பதால் அவற்றின் உயிரைப் பறிக்க மட்டும் உங்களுக்கு எப்படி உரிமை வருமுங்க ஐயா?//

      இந்த கண்டுப்பிடிப்புக்கு கொடுக்க தகுதியான விருதை இனிமே தான் உருவாக்கணும் :-))

      வேலை செய்பவர் ஒரு சேவையை தருகிறார், பதிலுக்கு பிரதிபலனை செய்கிறோம்.

      கோழி வளர்க்கிறேன் அது என்ன சேவை செய்கிறது, அது செய்யும் சேவை முட்டை , அப்புறம் அதுவே எனக்கு உணவாவது மட்டுமே.

      //நெல் பயிர் விளைந்த பின்னர், வைக்கோலை மாடுதான் உண்ணுமுங்கையா, விளைந்த பயிரை பறவைகள், எலிகள் நிறைய உண்ணுமுங்கைய்யா ஒன்னும் பண்ண முடியாது.//

      மாடு வைக்கோலை மட்டுமா திண்ணும், நல்லா விளைஞ்ச நெற்பயிரையுமே மேயும், ஏன் வைகோலை மட்டும் அதுக்கு கொடுத்து ஏமாத்துறிங்க.

      எலி, பறவைகள், உண்ணலாம்,மாடு மேய்ந்தா அடித்து விரட்டுவதா?

      சரி நீங்கள் சொல்வது போல சைவ உணவு இயற்கையாக கிடைப்பதை மட்டும் உண்ணலாம் என்றால் இந்தியாவில்120 கோடி மக்களுக்கும் உணவு கிடைக்க வழி செய்வீரா?

      அரிசி,கோதுமை இல்லைனா கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் சாக நேரிடும், நீர் ஒருவர் பழம்,கொட்டைனு சாப்பிட்டு உயிர் வாழ்ந்தால் அனைவருக்கும் பழம் ,கொட்டை கிடைக்க என்ன வழி?

      மாமிசம் சாப்பிடுபவனை மட்டுமே அப்படியே கடிச்சு ,பிச்சி சாப்பிடு என சொல்வது போல சைவம் சாப்பிடுபவரை அப்படியே சாப்பிட சொன்னால் எத்தனை பேர் உயிர் வாழ முடியும் என கொஞ்சம் பகுத்தறிவை பயன்ப்படுத்தி சிந்திக்க மாட்டீர்களா?

      சும்மா அடிச்சா மொட்டை, வச்சா குட்மி போல சாப்பிட்டா பழம் ,கொட்டை இல்லைனா பட்டினி கிட என எப்படி சொல்ல முடிகிறது :-))


      Delete
    11. வாத்தியாரைய்யா!!

      \\அப்போ நெல்லு,கோதுமையை எப்படி உண்ணுறிங்க?

      எதுக்கு நெல்லை மெஷினில் அரைத்து அரிசியாக்கி ,வேக வைத்து திங்கணும்?

      கோதுமையை மாவாக ஆக்கி சப்பாத்தி,பூரி சுட்டு சாப்பிடணும்?

      சைவமா சாப்பிடலாம் ஆனால் பிற சைவ விலங்குகளின் உணவை ஏன் பறித்து சாபிடுறிங்க?\\ நம்ம உடம்புக்கு ஏற்றது சைவ உணவுன்னு ஆனதுக்கப்புறம் எப்படி சாப்பிட்டத்தான் என்னங்கைய்யா? பழங்கள், தேங்காய் மட்டும் உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து காண்பிக்க முடியும். சரி ஜனங்களால அவ்வளவு கட்டுப்பாடா இருக்க முடியாது. தானியம், கோதுமை மாவுன்னாலும், ஆதி பூரியாக்கினாலும் என்னுடைய quota தாவர உணவுதானே ஐயா, அதை நான் மீறவில்லையே?


      \\கோழி வளர்க்கிறேன் அது என்ன சேவை செய்கிறது, அது செய்யும் சேவை முட்டை , அப்புறம் அதுவே எனக்கு உணவாவது மட்டுமே.\\ கோழிக்கு நீர் தீவனம் போடலாம், பாம்புகளுக்கு நீரா உணவு கொடுக்கிறீர்? பருந்துகள், சிட்டுக் குருவிகளுக்கு நீரா உணவு கொடுக்கிறீர்? உமது கோழிகளை காட்டில் கொண்டுபோய் விடும் அவை பிழைத்துக் கொள்ளும். மனிதந்தனைத் தவிர மற்ற எந்த ஜீவனையும் தனியே விட்டுவிட்டால் அது எங்காவது எப்படியாவது பிழைத்துக் கொள்ளும்.

      \\மாடு வைக்கோலை மட்டுமா திண்ணும், நல்லா விளைஞ்ச நெற்பயிரையுமே மேயும், ஏன் வைகோலை மட்டும் அதுக்கு கொடுத்து ஏமாத்துறிங்க.\\ வைக்கோலை சாப்பிட்டு விட்டு உமக்கு நெல்லைக் கொடுக்கும் ஜீவனை நீர் அடித்துத் தின்னலாமா?

      \\எலி, பறவைகள், உண்ணலாம்,மாடு மேய்ந்தா அடித்து விரட்டுவதா?\\ அடடடா!! மாட்டைத் தின்னுவேன் என்று சொல்லிவிட்டு இப்போது அதனுடைய வக்கீலா ஆயிட்டீரே!!

      \\சரி நீங்கள் சொல்வது போல சைவ உணவு இயற்கையாக கிடைப்பதை மட்டும் உண்ணலாம் என்றால் இந்தியாவில்120 கோடி மக்களுக்கும் உணவு கிடைக்க வழி செய்வீரா?\\ உண்மையில் இறைச்சிக்காக வளர்க்கப் படும் மிருகனகளுக்கு வழங்கப் படும் விலை பொருட்களையும் தண்ணீரையும் மனிதனின் உணவுக்கு திருப்பிவிட்டால் எல்லா உணவுப் பஞ்சமும் தீரும்!! வாத்தியாரையா இது உலகத்துக்கே தெரிஞ்ச அரிச்சுவடி, பசங்களுக்கு சொல்லித் தர்ரதொட நீங்களும் கொஞ்சம் உட்கார்ந்து படிங்க. ஐயோ...... ஐயோ......

      \\அரிசி,கோதுமை இல்லைனா கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் சாக நேரிடும், நீர் ஒருவர் பழம்,கொட்டைனு சாப்பிட்டு உயிர் வாழ்ந்தால் அனைவருக்கும் பழம் ,கொட்டை கிடைக்க என்ன வழி?\\ தாவர உணவு எதையும் எப்படியும் உண்ணட்டும், no objection.

      Delete
    12. // முடியாது. தானியம், கோதுமை மாவுன்னாலும், ஆதி பூரியாக்கினாலும் என்னுடைய quota தாவர உணவுதானே ஐயா, அதை நான் மீறவில்லையே?
      //

      //தாவர உணவு எதையும் எப்படியும் உண்ணட்டும், no objection.//

      அப்போ பல்லு இருக்கா, நகம் இருக்கான்னு கேட்டது எல்லாம் சும்மா உலுலாயிக்குன்னு நீரே ஏற்றுக்கொள்கிறீர் :-))

      மனிதனின் உணவு பழக்கம் அனைத்துண்ணி வகை, அவனோட நியதிப்படி , இறைச்சி ,அதுவும் அவனே வளர்த்து , உருவாக்கி உண்கிறான், காட்டு மிருகங்களின் உணவை தட்டிப்பறிக்கவில்லை ,அதுவே எனக்கு போதும்.

      ரொம்ப ஜீவ காருண்யம் எல்லாம் பேசுறிங்க , பார்ப்பனர்கள் அல்லது சைவ உண்ணிகள் ,பாலுக்காக மாடு வளர்க்கிறார்கள், பால் இனிமேல் கொடுக்காது வயசாச்சின்னு தெரிஞ்சா அவர்களே அடிமாடாக தான் விற்கிறார்கள் , அதெல்லாம் கேட்க மாட்டிகளா :-))

      உலகில் சுமார் 70% மக்கள் அசைவம் உண்பவர்கள் , அவர்கள் எல்லாம் சைவமாக மாறினால் கடும் உணவு பஞ்சம் வரும், உணவு உற்பத்தியை பெருக்க ,காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலம் ஆக்கப்படனும். எப்படி வசதி?

      இப்போவே இந்தியாவின் மக்கள் தொகை இதே விகிதத்தில் வளர்ந்தால் இன்னும் 20-30 ஆண்டுகளில் இந்தியாவில் உணவு பஞ்சம் வரும் என்கிறார்கள்.

      வெள்ளைக்காரன் காலத்தில் இந்தியாவில் உணவு பஞ்சம் வந்து பலர் மடிந்த கதை எல்லாம் தெரியாதா?

      நாட்டில் விவசாயம் செய்யக்கூடிய நிலம் இருப்பது குறைவு அதிலும் பல விளை நிலங்கள் ஃப்ளாட் போட்டு வீடாக மாறிவிட்டது, உம்மை போன்ற சைவர்கள் கூட ஒன்றுக்கு இரண்டாக வீட்டு மனை வாங்கிப்போட்டு ,இடத்தினை ஆக்ரமிப்பதை எல்லாம் அறியமாட்டீர்கள் போல.

      கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தர மாட்டேங்கிறான் இதில் இருக்கும் நிலம் ,நீரையெல்லாம் பயன்ப்படுத்தி விவசாயம் செய்தால் உற்பத்தி பெருகும் என கதை அளந்தால் எப்பூடி?

      உள்ள விவசாயத்துக்கே தண்ணீரைக்காணோம். இந்த செய்தியை படியும்,

      http://www.dinamalar.com/News_Detail.asp?Id=589732

      பெங்களூரில் இருக்கும் நீர் அப்படியே ஒரு எட்டு விதான் சவுதா வரைக்கும் போய் ஷெட்டர்க்கிட்டே கே.ஆர்.எஸ் அணையில ஷட்டரை தொறந்து தண்ணி விட சொல்லும் ஓய் , உமக்கு கோடி புண்ணியம் :-))

      Delete
    13. \\உலகில் சுமார் 70% மக்கள் அசைவம் உண்பவர்கள் , அவர்கள் எல்லாம் சைவமாக மாறினால் கடும் உணவு பஞ்சம் வரும், உணவு உற்பத்தியை பெருக்க ,காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலம் ஆக்கப்படனும். எப்படி வசதி?\\

      http://www.all4naturalhealth.com/advantages-of-vegetarian-diet.html

      More people can be fed, and world hunger issues can be alleviated; less strain is also placed on the Earth's resources

      Many people believe that going vegetarian can help alleviate world hunger issues - it is propagated that it takes a lot of grains, water and resources to raise livestock to provide meat and other animal food products for human consumption. These food and water can actually be used directly for human benefit, especially for those living in third world countries.

      One key point is that commercially raised animals are fed, and not grazed. They thus consume a lot of food which could otherwise have been used to feed humans.

      If the above argument is correct, then there are significant social and economic advantages of vegetarian diet choices which can be reaped.

      The numbers certainly support it.

      The United States Department of Agriculture said that, to grow the food (crops, grains) needed to feed farmed animals raised for meat, the following had to be used:

      * Almost 50% of the US's water supply

      * About 80% of its agricultural land

      Further, farmed animals in the US consumed:

      * 90% of its soy crops

      * 80% of its corn crops

      * 70% of its total grains, including wheat and corn

      In addition, it is estimated that about one-third of irrigation water in California is used to produce food for cattle used to yield dairy products.

      Alan Durning, director of Northwest Environment Watch in Seattle, adds that nearly 40% of the world's grains are fed to livestock.

      These numbers tally with a study carried out by Gussow in 1994, which stated that 38% of total grain production worldwide is fed to livestock, while the corresponding figure in the US is 70%.

      In addition, The Vegetarian Times Complete Cookbook (1995) stated that it takes more than 4,000 gallons of water to produce just one day's worth of food for the average meat-eater. This is more than 3 times the amount for ovo-lacto-vegetarians, and more than 13 times the amount for vegans.

      These are staggering numbers!!

      The potential advantages of vegetarian diet choices are clear - better food distribution, lower food prices, less hungry people.

      Delete
    14. \\ரொம்ப ஜீவ காருண்யம் எல்லாம் பேசுறிங்க , பார்ப்பனர்கள் அல்லது சைவ உண்ணிகள் ,பாலுக்காக மாடு வளர்க்கிறார்கள், பால் இனிமேல் கொடுக்காது வயசாச்சின்னு தெரிஞ்சா அவர்களே அடிமாடாக தான் விற்கிறார்கள் , அதெல்லாம் கேட்க மாட்டிகளா :-))\\ இது தவறுதான்.

      Delete
    15. \\கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தர மாட்டேங்கிறான் இதில் இருக்கும் நிலம் ,நீரையெல்லாம் பயன்ப்படுத்தி விவசாயம் செய்தால் உற்பத்தி பெருகும் என கதை அளந்தால் எப்பூடி?\\ நாட்டை பசுமையாக்கவும் மழை பெறவும்.

      Delete
    16. \\பெங்களூரில் இருக்கும் நீர் அப்படியே ஒரு எட்டு விதான் சவுதா வரைக்கும் போய் ஷெட்டர்க்கிட்டே கே.ஆர்.எஸ் அணையில ஷட்டரை தொறந்து தண்ணி விட சொல்லும் ஓய் , உமக்கு கோடி புண்ணியம் :-))\\ போன பதிவில உங்க தகப்பன் கடவுள்ன்னு சொன்னீரே மறந்து போச்சா? கிடா வெட்டுவதும் நல்லதுன்னு சொல்றேளே, அப்புறமென்ன உங்க வீட்டிலேயே பேசி தண்ணீர் பஞ்சத்தை தீர்த்துக் கொள்ளலாமே? பதிவுக்கு பதிவு புளுகு மூட்டைகளைச் சுமந்து செல்கிறீர், உமது நம்பிக்கையெல்லாம் மத்தவன் கொண்டிருக்கும் மறதி மட்டுமே!! வாத்தியாருக்கு நேர்மையும் வேண்டும்!!

      Delete
    17. ஜெயதேவரெ,

      //The United States Department of Agriculture said that, to grow the food (crops, grains) needed to feed farmed animals raised for meat, the following had to be used:

      * Almost 50% of the US's water supply

      * About 80% of its agricultural land

      Further, farmed animals in the US consumed:

      * 90% of its soy crops

      * 80% of its corn crops

      * 70% of its total grains, including wheat and corn
      //

      பாகவதரா இருந்துக்கிட்டு இப்படி பச்சையாக பொய் சொல்லலாமா, பாவமில்லையோ?

      அமெரிக்காவில் தானியங்கள் எவ்வளவு உற்பத்தியாகின்றன,எவ்வளவு எதற்கு பயன்ப்படுகின்றன என உண்மையாக அமெரிக்க விவசாய தளத்தில் இருக்கு , இங்கே பார்க்கவும் ...

      http://www.epa.gov/oecaagct/ag101/cropmajor.html

      நீர் சும்மா அமெரிக்க விவசாயத்துறையின் தகவல்னு பேரை போட்டாலே அப்படியே நம்பி ஏமாற நான் ஒன்னும் குடுமி வச்ச ஆசாமியில்லிங்கண்ணா :-))

      மேலும் அமெரிக்காவில் கால்நடைகள் ரேஞ்சஸ் எனப்படும் விவசாயம் நடக்காத புல்வெளிகளில் வளர்க்கப்படுகின்றன, உபரியான தானியமே தீவனமாக கொடுக்கப்படுகிறது.

      மொத்த கார்ன் உற்பத்தியில் 40% எத்தனால் ஆக மாற்றப்பட்டு வாகனம் ஓட்டப்பயன்ப்படுகிறது.

      அப்போ அங்கே எவ்வளவு தானியம் உற்பத்தி ஆகும்னு நினைத்து பார்க்கவும், உலகில் மிக அதிகமாக கார்ன், சோய் பீன், கோதுமை என உற்பத்தி செய்கிறது அமெரிக்கா, இதெல்லாம் போக தானியங்களும் ஏற்றுமதியாகிறது.

      அமெரிக்காவில் 80% விவசாய நிலத்தினை கால்நடைகள் ஆக்ரமித்துக்கொண்டால் வேற என்ன அங்கே செய்ய முடியும் , பொய் சொன்னாலும் பொறுத்தமாக சொல்ல வேண்டாமோ?

      அமெரிக்காவில் 9.6 கோடி கால்நடைகள் தான் இருக்கு இந்தியாவில் 28 கோடி கால்நடைகள் அப்போ இந்தியாவில் எவ்வளவு இடம் தேவைப்படும் , இதுக்கே இந்தியா அமெரிக்கா விட சின்ன நாடு, அப்போ 120 கோடி மக்கள் எங்கே வசிக்கிறாங்க ,கடலிலா?

      நீர் சொன்ன அளவில் எல்லாம் கால்நடைகளுக்கு நில பரப்பு தேவை இல்லை என்பதை விவசாயம் அறிந்த அனைவரும் அறிவர்.

      அது என்ன ஓய் எஸ்கிமோவ சொன்னா அந்த பகுதியை ஏன் உதாரணமாக சொல்றிங்க இந்தியா பாரு என்பது ஆனால் நீர் எப்போவும் அமெரிக்காவையே சொல்லிண்டு இருக்கேள், ஆனால் அமெரிக்காவில் எல்லாம் அதிகமா உற்பத்தி ஆவதால் மிஞ்சியதை கால்நடைக்கும், எரிபொருள் தயாரிக்கவும் பயன்ப்படுத்துறான் என்ற உண்மையை மறந்துடுறேள் :-))

      ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை உணவு உற்பத்திக்கும் ,மக்கள் தொகைக்கும் நெருக்கமான பிணைப்பு இருக்கு, ஒரு வருடம் தானிய உற்பத்தி படுத்தாலும் உணவுப்பற்றாக்குறை தான்.

      ஏற்கனவே உங்கள போல தாவர உண்ணிகள் பெரும்பாலான இடத்தை ஃபிளாட் போட்டு ஆக்ரமிச்சுட்டா , இருக்க கொஞ்ச இடத்தில் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை இதுல எப்படி இன்னும் விவசாயம் செய்ய?

      எங்க அப்பன் கடவுள் தான் , ஆனால் கெடா வெட்டி , சாராயம் படைக்க வர மாட்டேன்றீர், இப்பவும் ஒன்னும் லேட்டாகவில்லை நீர் ஒரு கெட்டா வெட்டி, சாராயம் வச்சு கும்பிட்டு கேட்டால் கொடுப்பாரு மழை, அவரோட சக்திவாய்ந்த எங்க கொள்ளு பாட்டன் சுடலை மாடன் இருக்கார் அவரு மனசு வச்சா எல்லாம் நடக்கும், எனவே எல்லாம் வல்ல சுடலை மாடன் மனம் குளிர வையும் நீர் கேட்டது ,கேட்காதது எல்லாமே கொடுப்பாரு.

      பாகவதராக இருந்துக்கிட்டு பொய் சொன்னால் வைணவ மார்க்கத்தில் என்ன தண்டனை கொடுப்பாங்கண்ணா?

      Delete
    18. இப்படி மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு இருப்பதில் பிரயோஜனமில்லை, அமெரிக்க காரன் தன்னை நல்லவன் என்று காட்டிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வான் உலக மக்கள் பட்டினியால் சாகும் பொது நீங்கள் மாமிசம் உண்டு பண்ண வீணாக்குகிறீர்களே என்பதற்காக அவன் இப்படி கணக்கு காண்பிப்பான். உண்மையில் அமரிக்கர்கள் மாம்சத்துக்கு போடும் நிலத்தையும் தண்ணீரையும் மனித தானிய உற்பத்திக்குப் பயன்படுத்தினால் 130 கோடி மக்களுக்கு உணவு கிடைக்கும். இது எக்கச் சக்கமான இணையப் பக்கங்களில் பதிவாகியுள்ளது படித்துக் கொள்ளவும்.

      அதுசரி வாத்தியாரே இந்தியாவில உம்மைப் போல நாய்க்கரி சாப்பிடுபவர்கள் ஊருபட்டவர்கள் இருந்தும் ஏன் எக்கச் சக்கமான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேலை உணவுதான் உண்ணுறாங்க? பட்டினிச் சாவுகள், ஊட்டச் சத்தில்லாத குழந்தைகள், ஏன்........

      Delete
    19. ஜெயதேவரே,

      //. உண்மையில் அமரிக்கர்கள் மாம்சத்துக்கு போடும் நிலத்தையும் தண்ணீரையும் மனித தானிய உற்பத்திக்குப் பயன்படுத்தினால் 130 கோடி மக்களுக்கு உணவு கிடைக்கும். இது எக்கச் சக்கமான இணையப் பக்கங்களில் பதிவாகியுள்ளது படித்துக் கொள்ளவும்.//

      இலை தழைன்னு மேய்ஞ்சு சிந்திக்கும் திறனும் போயிடுச்சா?

      அமெரிக்காவில் நிறைய தானியம் உற்பத்தி ஆனாலும் அதை எப்படி இந்தியாவில் இருக்கும் 120 கோடி மக்களுக்கு இலவசமாக கொடுப்பான்?

      இப்போவே ஏகப்பட்ட தானியம் உற்பத்தி ஆகுது ஒரு 1000 டன்னை ஓசியில அனுப்ப சொல்லுறது :-))

      சோமாலியா,சூடான், எத்தியோப்பா,ருவாண்டா இன்ன பிற ஆப்பிரிக்க நாடுகளில் ஏகப்பட்ட இடம் சும்மாவே கிடக்கு ஆனாலும் விவசாயம் செய்ய முடியலை, மக்கள் பட்டினி சாவுன்னு படிக்கலையா?

      இல்லை அமெரிக்காவில் விளைவதை இலவசாம கொடுக்கிறாங்களா< அவன் நாட்டுல விளைவது அவனுக்கு தான்.

      எனவே இந்தியாவில் முழுக்க சைவ உணவை கொடுக்க விவசாயம் செய்ய வழி என்ன?

      இப்போவும் சைவமா சாப்பிட நினைச்சா அந்த ஒரு வேளைக்கும் ஆப்பு வரும், தஞ்சையில பஞ்சம் வந்த போ மக்கள் எல்லாம் எலிக்கறி சாப்பிட்டாங்கன்னு செய்தி படிக்கவே இல்லையா?

      நீர் முதலில் காவிரில தண்ணீர வாங்கி கொடும் அப்பாலிக்கா உங்க சைவ பாகவதம் பாடலாம் :-))

      Delete
  18. சகோ தாசு,

    நிரூபிப்பது இப்படியா?

    மனிதன் இப்போது புலால்(சமைத்து) உண்பது பெரும்பான்மையோருக்கு செரிக்கிறது. ஏன் பச்சையாக உண்ண வேண்டும்??.நாகரிகம் முன்பு பச்சையாக்வும் உண்டான் என சில ஆய்வுகள் கூறுகின்றன்.
    http://en.wikipedia.org/wiki/Control_of_fire_by_early_humans
    The control of fire by early humans was a turning point in the cultural aspect of human evolution that allowed humans to cook food and obtain warmth and protection. Making fire also allowed the expansion of human activity into the colder hours of the night, and provided protection from predators and insects.[1]
    Evidence of widespread control of fire dates to approximately 125,000 years ago and later.[2] Evidence for the controlled use of fire by Homo erectus beginning some 400,000 years ago has wide scholarly support, while claims regarding earlier evidence are mostly dismissed as inconclusive or sketchy.[3]
    Claims for the earliest definitive evidence of control of fire by a member of Homo range from 0.2 to 1.7 million years ago (Mya).[4]


    ஆகவே மருத்துவரீதியாக முடிவெடுப்பதே சரி. நீர் விதண்டாவாதம் பேசுவதால் நானும் பேசுகிறேன்.

    *******
    நாம் சொல்வது எந்த விலங்கின்( பசு உட்பட) மூத்திரமும் குடிப்பதற்கு ஏற்றது அல்ல.அது தீமையே தரும்.

    நீங்கள் சொல்வது மாட்டு மூதிரம் குடிப்பது பாகவத்தில் சொல்லி இருப்பதால் சரி ஆனால் நான் குடிக்க மாட்டேன்.

    //மனிதன் உடல் புலால் உணவை உண்ணும் வகையில் வடிவமைக்கப் பட்டது என்பது உமது வாதம், அப்படி இல்லை என்பது எமது வாதம். யார் சொல்வது சரி, உண்மை என்பதற்கு ஒரு பந்தயம் வைத்துக் கொள்ளலாம். இருவரையும் தனித்தனி அறையில் வைத்து ஒரு மாதத்திற்கு எமக்கு எம் நாட்டில் விளையும் வாழை, கொய்யா போன்ற பழங்களையும், தேங்காய் போன்ற nuts களையும் தினமும் வழங்கட்டும். உமக்கு உயிருடன் உள்ள முழு கோழி, ஆடு, மீன் எல்லாம் அப்படியே வழங்கப் படும். இருவரும் சமைக்காம, உப்பு சேர்க்காம, நமது உடலில் உள்ள உறுப்புகளை மட்டுமே பயன்படுத்தி அவற்றை கொண்டு உணவை தயாரித்து உண்ண வேண்டும். ஏனெனில் புலி, பசு, கரடி மட்டுமல்ல மற்ற எல்லா ஜீவன்களும் தங்கள் உணவை அவ்வண்ணமே தயாரித்து உண்கின்றன. மாமிசமும் உமது உணவு என்றால் நீரும் அதே முறையில் உண்டு நிரூபிக்க வேண்டும். பார்த்து விடுவோமா ஒரு மாதத்திற்கு? இதில் நீர் தாக்குப் பிடித்துவிட்டால் மனிதன் தாவரம் + மாமிசம் இரண்டும் உண்ணத் தகுதியானவன், அவன் ஒரு பல்லுணவு உண்ணி ( Omnivore ) என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.
    //
    இப்போது ஜெயதேவு தாசுக்கு இதே வகையில் கேள்வி கேட்கிறோம்.

    நான் ஒரு மாதம் த்ண்ணீர் மட்டும் குடிப்பேன்.நீங்கள் பசு மூத்திரம் மட்டும் குடிக்க வேண்டும்.

    யார் ஆரோக்கியமாக இருக்கிறார்களோ அதுவே சரி.

    ரெடியா????

    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. \\நான் ஒரு மாதம் த்ண்ணீர் மட்டும் குடிப்பேன்.நீங்கள் பசு மூத்திரம் மட்டும் குடிக்க வேண்டும்.\\ சார்வாகன், உம்மகிட்ட பேசுறவன் எல்லாத்தையும் சீக்கிரம் லூசாக்கி விட்டிட்டு நீங்க மட்டும் ஜாலியா உலாத்திக்கிட்டு திரியரீரு !! இந்த post-டிலோ, இதற்க்கு முந்தைய post-லோ மாட்டு மூந்திரம் குடிப்பதைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கேனா? சம்பந்தம் இல்லாம உளறக் கூடாது. வேற எதாச்சும் உருப்படியா பேசும்.

      Delete
    2. \\மனிதன் இப்போது புலால்(சமைத்து) உண்பது பெரும்பான்மையோருக்கு செரிக்கிறது. ஏன் பச்சையாக உண்ண வேண்டும்??.\\ வேக வச்சு போட்டா மாடு கூட பண்ணி குடலைத் தின்னும் அது மேட்டரே இல்லை. If mutilate you can push anything inside and get digested unnaturally. That is not the proof that it is your prescribed food for your system.


      \\நாகரிகம் முன்பு பச்சையாக்வும் உண்டான் என சில ஆய்வுகள் கூறுகின்றன்.\\ என்னமோ நீங்களோ ஆதி மனிதன் கூட இலலை தலைகளை இடுப்பில் சுற்றி கட்டிக்கொண்டு திரிந்து பார்த்த மாதிரி கதை விடுகிறீர்கள். அவன் எதை தின்றான் என்பது இங்கே பிரச்சினை இல்லை, மனிதனின் தகவமைப்பு எவ்வாறு உள்ளது என்பதுதான் இங்கு கேள்வியே. இன்றைக்கு சமைக்காமல் உப்பு சேர்க்காமல் உண்ணும் ஒரு முழு கிராமமே திருநெல்வேலியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. [சத்தியமா அவங்க யாரும் பிராமனனுங்க இல்லை, எனவே தார் டப்பாவை கீழே வைத்து விட்டு படிக்கவும்.]

      திருநெல்வேலி ஆழ்வார் குறிச்சியில் நல்வாழ்வு [பெயரே அதான்!!] என்பவர் பிறந்ததில் இருந்தே சமைக்கப் பட்ட உணவுகள் உண்ணாமல் தான் வாழ்ந்து வருகிறார், பெரிய விவசாய நிலம், மரங்கள் நிறைந்த இடத்தில் இயற்கை வைத்தியம் செய்து வருகிறார். மருந்துகள் மாத்திரைகள் இல்லை, சமைக்கப் பட்டாத உணவைக் கொடுத்து நிறைய நோய்களைக் குணப் படுத்துகிறார். அவர் பின்னால் ஒரு பெரிய கிராமமே அவ்வாறு வாழ்ந்து வருகிறது.

      http://universalgoodlife.webs.com/

      அது மட்டுமல்ல பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து தீர்க்கவே முடியாத நோய்கள் உள்ளவர்கள் பலர் இங்கே வந்து இவர்களது உணவு முறையில் சரி செய்து ஆரோக்கியத்துடன் செல்கிறார்கள். இதுதான் நமக்கேற்ற உணவு எது என்பதற்கான நிரூபணம். நீங்கள் உலகத்தில் எங்காவது சமைக்காத மாமிசத்தை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து மற்றவர்கள் நோயையும் தீர்த்து வருவதாக சான்று இருக்கிறதா? காண்பிக்கவும்.

      Delete
  19. http://www.youtube.com/watch?v=sQOQdBLHrLk&feature=related
    நம்ப முடியவில்லை, காட்டு மானொன்று குருவிக்குஞ்சை உயிருடன் உண்கிறது.
    http://www.youtube.com/watch?v=ftyQLTEepU0
    மாடுகள் மீனை உண்கின்றன.
    தாவர பட்சணி என்றே ஏதுமில்லையோ?

    அதனால் நான் வரவில்லை, இந்த விளையாட்டுக்கு!

    ReplyDelete
    Replies
    1. Exceptions cannot be generalized. சைக்கோக்களோட சேர்ந்து அந்த மாடு சைககோவாயிடிச்சு போல அதெல்லாம் சாப்பிடுது. அப்படியே சாப்பிட்டாலும் அது சமைக்காம உப்பு போடாம இயற்கையில் கிடைத்ததை அப்படியே உண்கிறது. உனது உடலில் உள்ள நகங்கள் பற்களை etc., கொண்டே உணவை சேகரித்து உண்டு ஜீரணித்து ஆரோக்கியமாக வாழ முடிந்தால் மட்டுமே அது உனக்கான உணவு. அவ்வாறு அல்லாத பட்சத்தில் மற்ற ஜீவனுக்கான உணவில் நீங்கள் கை வைக்கிரீர்கள் என்று அர்த்தம். பாவம் அதுங்க வயித்தில அடிக்கலாமா?

      Delete
  20. சைவமோ அசைவமோ உண்பது அவரவர் விருப்பம். கோபத்தை குறைத்துகொள்ளுங்கள் அதுவும் ஒரு வகையில் ஆபத்தானது . நல்லதொரு பதிவு ! வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. @Madasamy Rajamani

      அநியாயம் நடக்கும்போது பொறுத்துக்க முடியவில்லை, நன்றி நண்பரே...........!!

      Delete
  21. *** இதையேதான் திருவள்ளுவரும் பத்து குறள்களில் சொல்லுகிறார்.*****

    Nobody follows everything thiruvaLluvar told us NOT TO DO!

    Are you following EVERYTHING thiruvaLluvar said NOT to do, Jeyadev??!

    Answer PLEASE!

    YES or NO, would be fine! Thanks.

    ReplyDelete
    Replies
    1. என்னால் திருக்குறளை பின்பற்ற முடியவில்லை என வைத்துக் கொள்வோம், நான் செய்வது அயோக்கியத் தனம் என ஒப்புக் கொள்கிறேன். உன் ஊனுக்காக இன்னொரு ஜீவனின் ஊனை உண்ணும் நீர் செய்வது அயோக்கியத் தனம் என ஒப்புக் கொள்ளத் தயாரா?

      Delete
    2. உங்களுக்கு என்ன புரியலைனா, விலங்குகளை பல வகையில் மனிதன் பயன்படுத்தி தன் குலத்தை காப்பாத்துகிறான். இன்னைக்கு வெளிவரும் ஒவ்வொரு ஆராய்ச்சிக் குறிப்பும் பல விலங்குகளை பலி கொடுத்துத்தான் வெளிவருது.

      அதன் பயனை, வெஜிடேரியன் சாப்பிடும் நீங்களும்தான் அனுபவிக்கிறீங்க. நீங்க மட்டும் யோக்கியர்னு நினைத்துக் கொண்டு இருப்பது, உங்களுடைய தவறான புரிதல்.

      அப்படி நீங்க வாழனும்னா, ஒரு போதி மரத்தடிக்குப் போயி வாழ வேண்டியதுதான். பங்களூளில் வாழ முடியாது.

      Delete
  22. ****அசைவம் சாப்பிடுபவர்களே கூட ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரும் போது சைவத்தைதான் பின் பற்றுகிறார்கள். ****

    திருமதி அன்பரசு: சைவம் சாப்பிடுறவாளுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் எல்லாம் குறைவாக வருவதாக எதுவும் ஆதாரமிருந்தால் தரவும்.

    பிறந்ததிலிருந்து அசைவம் சாப்பிடும் பலர், சர்க்கரை நோய், ரத்தம் அழுத்தம் பிரச்சினை இல்லாமல் இருக்காங்க. நானே கண்கூடாக பார்க்கிறேன்( 60+ அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள், சைனாக்காரர்கள்). அதே சமயம் சைவம் சாப்பிடுபவர்கள் (இதியர்கள்) பலர் இந்த நோய்வாய்ப்பட்டு அவதிப்படுறாங்க. இதுதான் நிதர்சனம்!

    இதையெல்லாம் அனுபவித்த மற்றும் பாதிக்கப்பட்ட டயபட்டிக், ஹைப்பர் டென்சிவ் சைவம் சாப்பிடுறவங்க எல்லாம் திருந்திட்டாங்க.

    நீங்க, ஜெயதேவ் போல "உலகம் அறியாத" ஒரு சிலர் இப்படி எதையாவது சொல்லிண்டு இருக்கேள்.

    ReplyDelete
    Replies
    1. உங்க உடம்பில சின்ன ஊசி குத்தினாலோ, லைட்டா பிளேடால் கீரினாலோ துடி துடிச்சுப் போயிடுவேள், ஆட்டை மட்டும் உசிரோட துடிக்கத் துடிக்க அருப்பேள் என்னன்னா நியாயம் பேசுறேள்? உங்கள் நலனுக்கு ஆட்டின் மேல் வன்முறையை ஏவுவது சரி என்றால் இலங்கையில் நடந்த கொலைகள், அமேரிக்கா செய்துவரும் கொலைகள், இந்தியாவில் ஆதிக்க ஜாதிகள் தங்கள் நலனுக்காக மற்றவர்களை எய்த்து வருவது எல்லாமே சரிதான், ஒத்துக் கொள்வீர்களா?

      Delete
    2. ஜெயதேவ்:

      இங்கே எதுக்கு செண்ட்டிமெண்ட்ஸ்? அதைத் தூக்கி மொதல்ல ஓரமா வைங்க.

      நீங்க சாப்பிடுகிற ஒவ்வொரு மாத்திரையும் பல கோடி விலங்குகளை பலி கொடுத்து உருவாக்கியவைதான். அதனால் ப்ரிஸ்க்ரிப்ஸன் மாத்திரை எல்லாம் சாப்பிடாமல் இருக்கப் போறீங்களா??

      Dont talk like a child, Jeyadev. Open your eyes and see what you are doing in everyday life!

      இன்னைக்கு ஆராய்ச்சிபடி, உங்க காலரிகள்தான் கணக்கு! எவ்ளோ காலரிகள் உள்ளெடுக்குறீங்க, எவ்வளவு செல்வழிக்கிறீங்க. அது வெஜ்ஜா, நான் வெஜா என்பது முக்கியமல்ல!

      சோறு, சர்க்கரை, ஸ்டார்ச் எல்லாம் வெஜிடேரியன் டயட்லயே கெடைக்கிது. நீங்க இவைகளை அதிகமா சாப்பிட்டு, சரியா உடல்பயிற்சி செய்யலைனா இந்த சுகர், ப்ரஸ்ஸெர், கொலெஸ்டிரால் எல்லாம் வரத்தான் செய்யும்

      Delete
    3. வருண், மாமிசம் உண்பவர்களால் மற்ற மனிதர்களுக்கு வரும் பாதிப்புகள் பற்றி அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். கிட்டத் தட்ட பத்து வருஷமா நான் ஆங்கில மருந்துகளை சாப்பிடுவதை விட்டுவிட்டேன், அதன் சைடு விளைவுகளால் பயம். ஹோமியோபதி, ஆயுர்வேதம் மருந்துகளை அதிகம் நம்பியுள்ளேன்.

      Delete
    4. Well, even people like saibaba was treated by allopathy medicine only.

      If you meet with an accident or have a heart attack, you will be treated in a Hospital. certainly not in a homeopathy or ayurvedi clinic.

      அரைக்கிணறுதான் தாண்டப்போறீங்க! :)))

      Delete
  23. நீர்,நில,வான் கோழிகள் மூன்றும் சாப்பிட்டிருக்கிறேன், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை.

    ReplyDelete
    Replies
    1. \\நீர்,நில,வான் கோழிகள் மூன்றும் சாப்பிட்டிருக்கிறேன், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை.\\ கொஞ்சம் காக்கைகளையாவது மிச்சம் வைக்க சாமியோவ்............

      Delete
  24. என்னய்யா இந்த தாவர உண்ணி மனிதர்களின் வாதம், ஒரே காமெடியா இருக்கு.

    புலி கசாப்பு கடைல பொய் மாமிசம் வாங்கி சாப்பிடுறது இல்லை, தானே அடிச்சி சாப்பிடுன்றது உண்மைதான்.
    அதே மாதிரி மாடு கீரை கடைல பொய் கீரை வங்கி சாப்பிடுறது இல்லை, குரங்கு பழ கடைல பொய் பழம் வாங்கி
    சாப்பிடுறது இல்லை.

    நாளைக்கே புலிக்கு ஆறாவது அறிவு வந்து, அதுல ஒரு புலி கசப்பு கடை நடத்தினா, புலியும் கசாப்பு கடைல தான்
    வாங்கி சாப்பிடும். பரிணாம வளர்ச்சி கோட்பாட்டுப்படி, பல வருடங்கள் கழிச்சி அதுக்கு பெரிய நகமும் இல்லாம போய்டும்.

    ReplyDelete
  25. \\நாளைக்கே புலிக்கு ஆறாவது அறிவு வந்து, அதுல ஒரு புலி கசப்பு கடை நடத்தினா, புலியும் கசாப்பு கடைல தான்
    வாங்கி சாப்பிடும். \\ ஒருவேளை அந்த சமயத்துல ஆடுங்க அறிவு சாஸ்தியாகி மனிதனை கட்டுப் படுத்தும் சக்தி வந்து, மனிதனை கசாப்பு போட்டு கடைக்கு கடை அவனது தோலை உரித்து தலைகீழாய் தொங்க வைத்து விற்றுக் கொண்டிருக்கும். புலி அங்க வந்து மனிதன் கரி வாங்கிச் செல்லும். ஹா..............ஹா..............ஹா..............

    ReplyDelete
  26. பால், தேன் சைவமா?, அசைவமா? உண்மையான சைவத்தை பின்பற்றுபவர்கள் பால், தேன் சாப்பிட மாட்டார்கள் இப்படி நூறு சதவிதம் சைவத்தை பின்பற்றுபவர்கள் அமெரிக்காவில் வாழ்கிறார்கள், உங்கள் கருத்து என்ன?

    ReplyDelete
    Replies
    1. பால், தேன் பற்றி பதிவில் நான் எதுவும் கூற வில்லை. மேலும் நம் உடல் எந்த மாதிரி உணவை ஏற்கும் வகையில் தகவமைப்பு உள்ளது என்பது மட்டுமே கேள்வியே தவிர, "சைவமா? அசைவமா? எது சிறந்தது" என்பது இல்லை.

      Delete
  27. நீங்கள் பதிவிடாவிட்டலும், என் கேள்வி பதிவோடு சம்மந்த பட்டிருக்கு, இறைச்சியை மணிதன் சாப்பிடுவதால் மற்ற விளங்கினுடைய உணவை மனிதன் சாப்பிடுகிறான் என்று குற்றம் சுமத்தி இருந்தீர்கள், அது போலவே விலங்குகள் தன் குட்டிக்காக கொடுக்கும் பாலை மனிதன் எப்படி அருந்தலாம்? இரண்டாவது அந்த பாலை பச்சையாக குடிப்பதில்லை, அதை சுட வைத்து குடிக்கிறோம் தேநீரோடு கலந்து குடிக்கிறோம் இன்னும் அதிலிருந்து தயிர் மோர் வெண்ணை நெய் விதம் விதமாக சமைக்கிறோம், சுத்த சைவம் என்று சொல்பவர்கள் தான் இதை அதிகமாக பயன்படுத்துகிறார்கள், இதற்க்கு உங்களின் விளக்கம் அவசியம் தேவை.
    தேனிக்கள் தங்களுக்காக சேமித்து வைக்கும் உணவைத்தானே மனிதன் பிடுங்கி சாப்பிடுகிறான் இது பற்றியும் விளக்கினால் நலம்

    ReplyDelete
    Replies
    1. \\மற்ற விளங்கினுடைய உணவை மனிதன் சாப்பிடுகிறான் என்று குற்றம் சுமத்தி இருந்தீர்கள்.\\இது பாதிதான். மீதியும் இருக்கு. இன்னொரு உயிரை எடுக்க உங்களுக்கு உரிமையில்லை என்று கிரிமினல்களுக்காக வாதிடும் சமுதாயம் இது. அப்படியிருக்கும்போது ஆடு, கோழி இதெல்லாம் கூட உயிர்தானே இவற்றை எடுக்கும் உரிமை உங்களுக்கு எப்படி வந்தது? நீங்கள் உணவுக்காக என்று சொல்வீர்கள் அப்படியானால், ஒரு திருடன் தன்னுடைய உணவுக்காக ஏதோ ஒரு வீட்டில் புகுந்து கொலை செய்வதை ஒப்புக் கொள்ள இயலுமா? இயலாது. அப்படியானால், மனித உயிர் முக்கியம், ஆடு மாடுகள், கோழி இதெல்லாம் கொள்ளும்போது படும் துன்பம் உங்களுக்கு கணக்கிலேயே இல்லையா? உங்களுடைய வாழ்நாளை நீங்கள் வாழ்ந்து முடிப்பதைப் போல அவை வாழ்ந்து முடிக்கக் கூடாதா?

      தேன், பால், milk products வேண்டாமென்றால் விட்டு விடுங்கள் எனக்கு ஆட்சேபனை இல்லை.

      Delete
    2. //அப்படியிருக்கும்போது ஆடு, கோழி இதெல்லாம் கூட உயிர்தானே இவற்றை எடுக்கும் உரிமை உங்களுக்கு எப்படி வந்தது? //

      ஓய் பாகவதரே,

      பகவான் கிருஸ்ணா தான்யா அந்த உரிமையை கொடுத்தாரு, பகவத் கீதையை படிக்கலையா, இல்லை மகாபாரத போரில் எல்லாரையும் கொல்லு உனக்கு பாவமில்லைனு அர்ஜுனருக்கு சொன்னதை படிக்கலையா?

      ஆடு,மாடு,கோழி எல்லாம் அவை உணவுக்காக படைக்கப்பட்டவை அதன் கர்மா பூர்த்தி ஆவதால் நேராக வைகுண்டம் போய் பகவானை சேவிக்கும், அவற்றுக்கு வைகுண்ட மோட்சம் கிடைக்க மாமிச உணவாளர்கள் உதவுகின்றார்கள்,எனவே உம்ம பகவான் மாமிச உணவாளர்களின் சேவையை பாராட்டுவார் :-))

      பகவான் கிருஸ்ணரே கொலை செய்ய சொல்லுரார் எனவே அவரு உமக்கு கடவுளாக இருக்க தகுதியில்லை எனவே கடவுளை மாத்திடும் :-))

      சமண மதத்தில் போய் சேரும் அங்கே தான் கொல்லக்கூடாதுன்னு சொல்லுற கடவுள் இருக்கு!!!

      Delete
    3. \\ஆடு,மாடு,கோழி எல்லாம் அவை உணவுக்காக படைக்கப்பட்டவை அதன் கர்மா பூர்த்தி ஆவதால் நேராக வைகுண்டம் போய் பகவானை சேவிக்கும், அவற்றுக்கு வைகுண்ட மோட்சம் கிடைக்க மாமிச உணவாளர்கள் உதவுகின்றார்கள்,எனவே உம்ம பகவான் மாமிச உணவாளர்களின் சேவையை பாராட்டுவார் :-))\\ நம்புவதென்றால் முழுசா நம்பனும், அதில பாதி, இதில பாதி இருக்கப் படாது. மம்ஸா என்ற வார்த்தைக்கு அர்த்தம் [தமிழ் வாத்திக்கு தெரிந்திருப்பது கஷ்டம்தான்], நீர் தெரிந்து கொள்ள வேண்டும் மாம் என்றான் நான், ஸா என்றால் நீ. இன்னைக்கு உன்னை நான் தின்னுகிறேன் அடுத்து நான் கிடா கோழி, மீன் எனப் பிறப்பேன் அப்போ நீ என்னை போட்டுத் தள்ளலாம், இது தான் மாமிசம். கொன்றால் பாவம் தின்றால் போச்சு. நீர் இப்போது கொன்றது நீர் கொன்ற ஜீவன் திரும்ப வந்து உம்மை வெட்டித் தின்றால் மட்டுமே போகும் இதுதான் மாமிசம் என்பதற்கு அர்த்தம். நீர் இதை நம்பப் போவதில்லை அது வேறு விஷயம், ஒருவேளை நம்புவதென்றால் நீர் இதைத்தான் நம்ப வேண்டும், உம் இஷ்டத்துக்கும் அர்த்தம் கற்ப்பிக்கக் கூடாது.

      Delete
    4. நான் விட்டு விடுவது பிரச்னை இல்லை, நீங்கள் மற்றும் உங்கள் ஜீவகாருண்ய கருத்து உடையவர்கள், ஏன் பாலையும் தேனையும் சாபிடுகிறார்கள்? அதுதான் கேள்வி, அதுவும் தவறு என்று ஒரு பதிவு எழுத முடியுமா உங்களால்?

      Delete
    5. நீங்க பதிவைச் சரியாகப் படிக்காமலேயே பின்னூட்டமிடுகிறீர்கள் அனபரே.

      \\ ஜீவகாருண்யம் என்ற பெயரில் புலிகளை பிஸ்கட் தின்னச் சொல்லப் போவதில்லை. மானை புலி அடித்துத் தின்னட்டும் ஆட்டை ஓநாய் அடித்துத் தின்னட்டும், அவற்றின் உடல் அதற்க்கு ஏற்றது. \\ என்று பதிவிலேயே குறிப்பிட்டுள்ளோம். இருந்தும், ஜீவகாருண்யம் என்று நான் பேசுவதாகக் கூறலாமா?

      இந்த மாமிசம் உன்போரிடம் ஒரு வியத்தகு குணம் என்னவென்றால், உயிர்க்களைத் துடிக்கத் துடிக்க அவற்றின் கழுத்தை அறுத்து, அவை வழியால் துடிப்பது பற்றி கொஞ்சமும் நினைக்காமல் உண்டாலும், Veg உண்ணுபவர்கள் கத்திரிக்கா செடியில் காயைப் பறித்தாளே அந்த செடிக்கு வலிக்காதா என்று வள்ளலார் ரேஞ்சுக்கு பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. பாலைக் கரப்பதர்க்கே துடிக்கும் நீர் அந்த மட்டை கொள்வதற்கு கவலையே படுவதில்லையே!! தேனீக்கள் பாதிக்காமல் தேனெடுக்கும் முறைகள் உள்ளன. ஆக உயிர்கள் எதுவும் கொல்லப் படுவதில்லை. துன்புருத்தப் படுவதில்லை. இதெல்லாம் கூடத் தவறு என்று நீங்கள் துடி துடிக்கத் தேவையே இல்லை.

      Delete
    6. ஜெயதேவரே,

      மாமிச உணவுக்கு விளக்கம் எல்லாம் பிரமாதம் :-))

      சொந்தக்காரங்களை எல்லாம் கொல்லு பாவமில்லைனு ஒருத்தர் சொன்னார் அதைக்கேட்டு அம்புவிட்டு கொலைப்பண்ணார் ஒருத்தர், அப்போ யாருக்கும் வலிச்சே இருக்காது :-))

      மனிதரை கொலை செய்ய சொன்னவரை பகவான்னு பெருமையாக கும்பிட்டுக்கிட்டு சைவ உணவுன்னு பேசும் பாகவதர் :-))

      மாமிச உணவு சாப்பிடும் பழக்கம் இருப்பதால் உணவு சங்கிலியில் சம நிலை நிறுத்தப்படுகிறது , தாவரங்கள் அதிகரித்தால் கூட பரவாயில்லை தாவர உண்ணிகள் பெருகினால் அங்கு சுற்றுசூழல் சம நிலைப்பாதிக்கப்படும்.

      இம்புட்டு பேசுறீர் , தாவர உணவு உற்பத்திக்காக எத்தனை தாவர உண்ணி விலங்குகள் கொல்லப்படுகின்றன தெரியுமா? அவை எல்லாம் உயிர் இல்லையா ,துடிக்காதா?

      எலி,முயல்,பறவைகள், கால்நடைகள் எல்லாம் பொறி,விஷம்,மின்வேலி வைத்து கொல்லப்படுகின்றன ,ஏன் யானைகள் கூட மின் வேலி வைத்து கொல்லப்படுகின்றன ,ஏன் இதெல்லாம் தாவர உணவை அதிகம் உற்பத்தி செய்யவே.

      ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் முயல்கள் காலம் காலமாக கொல்லப்படுகின்றன , முயல்கள் எண்ணிக்கை 10 பில்லியன் அளவுக்கு பெருகியதே காரணம் இதனால் தாவர உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறதாம்,

      மேற்கொண்டு இக்கட சூடும் ...

      http://www.abc.net.au/science/articles/2009/04/08/2538860.htm

      Delete
  28. இறைச்சி சாப்பிடுபவர்கள் முதலில் உங்களை குற்றம் சுமதி இருந்தால் நீங்கள் இந்த வாதத்தை வைக்கலாம், நீங்கள் எங்களை குற்றம் சுமதியதால்தான் நாங்கள் கதிர்க்கை செடிக்கும் வலிக்கும் என்று சொன்னோம்,
    பாலை கறப்பதை பற்றி நாங்கள் துடிக்க வில்லை, உங்கள் வாதத்திற்கு மறுப்பு வாதம் செய்யும் பொழுது நீங்கள் செய்கின்ற குற்றத்தையும் சொல்கிறோம்,
    ஆட்டையும் மாட்டையும் அறுத்து சாப்பிடும் எங்களுக்கு பால் கறப்பது ஒரு பிரச்னை இல்லை,
    மற்ற விலங்குகளின் உணவை மனிதன் அபகரிக்கிறான் என்று நீங்கள் குற்றம் சொல்லும் போது உங்கள் குற்றங்களையும் பார்க்க சொல்கிறோம், மாட்டின் பால் அதன் கன்றுக்குதான் சொந்தம், அதை எப்படி நீங்கள் குடிக்கலாம் என்று எதிர் கேள்வி கேட்கிறோம்,
    பாலும் எல்லாம் மனிதர்களுக்கும் ஒத்து கொள்வதில்லை, பாலில் நல்ல குணங்கள் இருப்பது போல தீய குணங்களும் இருக்கு, இது இறைச்சிக்கும் பொருந்தும்
    //தேனீக்கள் பாதிக்காமல் தேனெடுக்கும் முறைகள் உள்ளன// உங்களுக்கு பாதிக்காமல் உங்கள் வீட்டு சாப்படை திருடி கொண்டு போனால் குற்றம் இல்லையா

    ReplyDelete
    Replies
    1. \\மற்ற விலங்குகளின் உணவை மனிதன் அபகரிக்கிறான் என்று நீங்கள் குற்றம் சொல்லும் போது உங்கள் குற்றங்களையும் பார்க்க சொல்கிறோம்\\ ஒரு உயிரை எடுப்பதை நாம் வேண்டாமென்று சொல்லப் போவதில்லை, காரணமில்லாமல் எடுப்பதைத்தான் வேண்டாமென்கின்றோம். நீங்கள் இறைச்சி உண்ணாவிட்டால் உயிர் போய்விடும் என்ற நிலை வந்தால் உண்ணலாம். ஆனால் அந்த நிலை இல்லை. அனாவசியமாக இன்னொரு உயிரைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. புலி மானை பசிக்காக கொன்று உண்பதை நாம் தடுக்கப் போவதில்லை, ஏனெனில் அது உங்கள் ஆப்பிளையோ, ஆரஞ்சையோ தட்டிப் பறிக்காது. உங்களுக்கென்று இயற்க்கை கொடுத்த உணவை உண்ணுங்கள். எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன் என்பதற்கு ஆறறிவு தேவையில்லையே, மிருகங்கள் காட்டும் கட்டுப் பாடுகள் கூட மனிதன் காட்டுவதில்லையே, அது தானே வேதனை.

      மனிதன் மற்ற விலங்குகள் போல அம்மணமாகத் திரியவில்லை உடை உடுத்துகிறான் மற்ற விலங்குகளை தனக்கு உதவ பழக்கிக் கொண்டான். அந்த வகையில் பால், தேன் போன்றவற்றை எடுக்கக் கற்றுக் கொண்டான். அதனால் அவை உயிரை விட்டுவிடப் போவதில்லை. முப்பது லிட்டர் பாலை கன்றுகுட்டி குடிக்கப் போவதில்லை, எல்லா தேனையும் தேனீக்கள் குடித்துவிடப் போவதில்லை. அப்படிப் பார்த்தால் தேங்காய் கூட அதன் இனவிருத்திக்குத்தான் காய்க்கிறதேயன்றி நமக்காக காய்க்கவில்லை எனவும் சொல்லலாம். இயற்கையில் ஒரு உயிர் தான் இன்னொரு உயிருக்கு உணவு, மனிதனுக்கும் அது பொருந்தும். மனிதனுக்கு அது தாவரமா இறைச்சியா? என்றால் தாவரம் மட்டுமே.

      Delete
  29. [[மனிதன் உடல் புலால் உணவை உண்ணும் வகையில் வடிவமைக்கப் பட்டது என்பது உமது வாதம், அப்படி இல்லை என்பது எமது வாதம். யார் சொல்வது சரி, உண்மை என்பதற்கு ஒரு பந்தயம் வைத்துக் கொள்ளலாம்...]

    என்று துவங்கி திருவள்ளுவர் புலால் உண்ணாமை அதிகாரம் நீங்கள் எழுதியிருக்கும் பதில், மொத்தமான இந்த விவாதப் பொருளுக்கான சரியான விளக்கம்.

    நன்றி..

    சைவ உணவுக் கொள்கையை சாதியம், முதலாளி தொழிலாளி போன்ற வட்டங்களுக்குள் கொண்டு செல்வது (பிடி)வாதம் செய்வதற்கு மட்டுமே..

    இந்தக் கேள்வி பதில் வடிவம் முதல் வடிவத்தை விட இன்னும் நச்சென்று இருக்கிறது..

    இன்னொரு நன்றி.

    அசைவ உணவை வெங்காயம்,பூண்டு, பல்வேறு மசாலாப் பொருள்களைச் கொட்டி அதன் நாற்றத்தைப் போக்கி, மணத்தைக் கூட்டி உண்டு விட்டு அசைவம் போல் ருசி சைவத்தில் இல்லை என்று பிதற்றுபவர்கள் பலரும் இருக்கிறார்கள்;ருசி எதிலிருந்து வருகிறது என்பதை உணராத அவர்களைப் பசித்த புலி தின்னட்டும் என்று கருதி விட்டு பிழைப்பைப் பார்க்க வேண்டியதுதான் !

    ReplyDelete
  30. //மனிதன் மற்ற விலங்குகள் போல அம்மணமாகத் திரியவில்லை உடை உடுத்துகிறான் மற்ற விலங்குகளை தனக்கு உதவ பழக்கிக் கொண்டான். அந்த வகையில் பால், தேன் போன்றவற்றை எடுக்கக் கற்றுக் கொண்டான்//
    உங்களுக்கு பாலும் தேனும் வேண்டும் என்றால் சட்டத்தை மாற்றி கொள்வீர்கள் போல!
    //முப்பது லிட்டர் பாலை கன்றுகுட்டி குடிக்கப் போவதில்லை//
    சாதரணமாக எந்த மாடும் முப்பது லிட்டர் பால் கொடுக்காது, மனிதன் தனக்கு பால் வேண்டும் என்பதற்காக அதற்க்கு சில மருந்துகளை கொடுத்து பால் எடுத்து கொள்கிறான் steriods கூட கொடுக்கிறார்கள் இது மாட்டுக்கு எந்த அளவுக்கு பக்க விளைவுகளை உண்டாக்கும் தெரியுமா? ஒரு சாதரணமான மாடு அதன் கன்று குடிக்கும் அளவுதான் பால் வரும்
    //எல்லா தேனையும் தேனீக்கள் குடித்துவிடப் போவதில்லை//
    நீங்கள் என்ன தேனீ கூட்டுக்குள் நுழைந்தா பார்த்தீர்கள்? அமாவாசைக்கு ஒரு நாள் முன்பே தேன் எடுப்பவர்கள் தேனை எடுத்து விடுவார்கள் ஏனென்றால் அமாவாசை அன்றுதான் தேனிக்கள் தேனை குடிக்கும் என்று தேனெடுக்கும் தொழில் செய்வோர் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறேன்
    //மற்ற விலங்குகளை தனக்கு உதவ பழக்கிக் கொண்டான்//

    அந்த பழக்கத்தில் வந்ததுதான் அதை அறுத்து, முறயாக வறுத்து சாப்பிடவும்

    //தேங்காய் கூட அதன் இனவிருத்திக்குத்தான் காய்க்கிறதேயன்றி நமக்காக காய்க்கவில்லை எனவும் சொல்லலாம்//

    அப்படி எல்லாம் நாங்கள் விதண்டாவாதம் பண்ணமாட்டோம், எப்படி தாவரங்கள் மறு உற்பத்தி போக மீதமுள்ளதை பயன்படுதிகிரோமோ, ஆடுகள் மாடுகள் ஆண் இனத்தைதான் முதலில் அறுத்து சாப்பிடுவோம், பெண் இனம் இனிமேல் குட்டி போடா முடியாது என்று ஆனதும் அதையும் அறுப்போம்


    //இயற்கையில் ஒரு உயிர் தான் இன்னொரு உயிருக்கு உணவு, மனிதனுக்கும் அது பொருந்தும்//
    செரியாதான் சொல்றீங்க! நல்லது! வரவேற்கிறோம்! அதான் உணமையும் கூட.

    //மனிதனுக்கு அது தாவரமா இறைச்சியா? என்றால் தாவரம் மட்டுமே//
    மறுபடியும் முதல்ல இருந்தா ஆ!

    ReplyDelete
  31. @mubarak kuwait

    \\உங்களுக்கு பாலும் தேனும் வேண்டும் என்றால் சட்டத்தை மாற்றி கொள்வீர்கள் போல!\\ இந்த மேட்டரை பற்றி பதிவில் எதுவும் குறிப்பிடவேயில்லை. என்னை வழுக்கட்டாயப் படுத்தி இழுத்துச் சென்று குற்றம் சுமத்துகிறீர்கள். தேனும் பாலும் தேவையே இல்லை போதுமா?


    \\சாதரணமாக எந்த மாடும் முப்பது லிட்டர் பால் கொடுக்காது, மனிதன் தனக்கு பால் வேண்டும் என்பதற்காக அதற்க்கு சில மருந்துகளை கொடுத்து பால் எடுத்து கொள்கிறான் steriods கூட கொடுக்கிறார்கள் இது மாட்டுக்கு எந்த அளவுக்கு பக்க விளைவுகளை உண்டாக்கும் தெரியுமா? ஒரு சாதரணமான மாடு அதன் கன்று குடிக்கும் அளவுதான் பால் வரும் .\\ நீங்க சொல்வது எப்படி இருக்கிறதென்றால் ஒரு விந்தனுதானே குழந்தையை உண்டாக்குறது, எனவே மில்லியன் கணக்கில் மனிதனுக்கு விந்தனு சுரக்காது ஒன்றே ஒன்றுதான் ஒவ்வொரு முறையும் உருவாகும் என்பது போல இருக்கிறது. steriods இல்லாமல் சாதாரணமாக நாள் ஒன்றுக்கு நாற்பது லிட்டர் பால் கறக்கும் மாடுகள் எங்கள் ஊரில் உண்டு. கன்றுக்கு அவ்வளவு பால் குடிக்க விட்டால் வைத்தியரிடம் தான் கொண்டுபோக வேண்டும்.

    \\அப்படி எல்லாம் நாங்கள் விதண்டாவாதம் பண்ணமாட்டோம், எப்படி தாவரங்கள் மறு உற்பத்தி போக மீதமுள்ளதை பயன்படுதிகிரோமோ, ஆடுகள் மாடுகள் ஆண் இனத்தைதான் முதலில் அறுத்து சாப்பிடுவோம், பெண் இனம் இனிமேல் குட்டி போடா முடியாது என்று ஆனதும் அதையும் அறுப்போம் \\ பால், தென் எடுக்கும் பொது உயிர் மடிவதில்லை உங்கள் ஒப்பீடு is misleading.

    மறுபடியும் முதல்ல இருந்தா ஆ!\\ andraikkum, indraikkum yendraikkum ithuthaan muthalum, kadaisiyum.

    ReplyDelete