tag:blogger.com,1999:blog-86882305394326913812024-03-08T17:04:22.993+05:30ஜெயதேவ்அறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு.Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger213125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-502392158993451532019-03-11T16:03:00.000+05:302019-03-11T16:15:17.789+05:30இளையராஜா 75: சில லாஜிக்கல் கேள்விகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
# இளையராஜா 75<br />
<br />
இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு ஞாயிறாக மாலை 3 மணிக்கு சன் டிவியில காமிச்சானுங்க.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisjkpAz1qLYfn6HQEvW3wt_4pdWXqh3fbW6MgG7N_BBHw3a0qcZsHttGVkhnl6QwiROW5voBG8JDlmX1CABo53wyAbbnWXObwQdbUdnORzjifE6Q52nfS37oYJswREW4Mr9Q6VZ5v28aM/s1600/Ilaiyaraja+75.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="310" data-original-width="551" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisjkpAz1qLYfn6HQEvW3wt_4pdWXqh3fbW6MgG7N_BBHw3a0qcZsHttGVkhnl6QwiROW5voBG8JDlmX1CABo53wyAbbnWXObwQdbUdnORzjifE6Q52nfS37oYJswREW4Mr9Q6VZ5v28aM/s320/Ilaiyaraja+75.PNG" width="320" /></a></div>
<br />
அடுத்த ஞாயிறன்று மூன்றாம் பாகம் வரும், அதில் ரஹ்மான்-இளையராஜா சந்திப்பு இருக்கும். இந்த சுவராஸ்யமான பகுதியை கிட்டத்தட்ட முழுசாவே நம்மாளுங்க வீடியோ எடுத்துப்போட்டு காமிச்சிட்டாங்க. பார்த்ததில் நமக்கு குழப்பமும் தீராத சந்தேகங்களுமே மிஞ்சியது. நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் ரஹ்மான் 500 படங்களுக்கும் மேல் தன்னிடம் பணியாற்றியிருக்கிறார்னு ராஜா சொல்றார். அதை ரஹ்மான் ஆமாம்னு ஒப்புக்கொள்ளாமல், உங்களுடன் ஒரு படத்தில் வேலை செய்வதே 500 படங்களுக்கு வேலை செய்ததற்கு சமம்னு வேற மாதிரி பதிலைச்சொல்லி மழுப்புகிறார்.<br />
<br />
"நீ எப்போ என்கிட்டே முதலில் வேலைக்கு சேர்ந்தே" ன்னு ராஜா கேட்கிறார்.<br />
<br />
அதுக்கு, "மூன்றாம் பிறையில்"ன்னு சொல்லி பத்து பதினஞ்சு செகண்டு ஓடும் ஒரு இசையை ரஹ்மான் போட்டு காண்பித்து இதுதான் ராஜா சார் முதலில் தனக்கு குடுத்த வேலைன்னும், அதுக்கப்புறம் "நீ ஸ்கூலுக்குப் போயி படி"ன்னு விரட்டி விட்டுட்டார்ன்னும் சொல்றார்.<br />
<br />
அதுக்கடுத்து, புன்னகை மன்னன் படத்துக்குத்தான் திரும்ப வந்ததாக ரஹ்மான் சொல்றார். அந்த படத்தில் சில இசைக்குறிப்புகளை கம்ப்யூட்டரில் ஃபீடு செய்யும் வேலையை தன்னிடம் தந்ததாக ரஹ்மான் சொல்கிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4OpxeGecugJLs7zAsS5gj8n11RwnwbDMmnxtFHVvmbGbiSHEFfcXy3uzhw6h2AQ2PREdU33jayBZPaL6PtK7IjjZc4VHZKzM0YDmU2fQ5gv3Lk8gIkH9pMuJsSTtQidKEAUBln6QEcIc/s1600/hqdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="480" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4OpxeGecugJLs7zAsS5gj8n11RwnwbDMmnxtFHVvmbGbiSHEFfcXy3uzhw6h2AQ2PREdU33jayBZPaL6PtK7IjjZc4VHZKzM0YDmU2fQ5gv3Lk8gIkH9pMuJsSTtQidKEAUBln6QEcIc/s320/hqdefault.jpg" width="320" /></a></div>
<br />
<br />
புன்னகை மன்னன் படம் வந்தது 1986, ரோஜா வெளியானது 1992. அப்படின்னா ராஜா சொன்ன அந்த 500க்கும் மேற்பட்ட படங்கள் இந்த காலகட்டத்தில் வந்த படங்களாகத்தான் இருக்க வேண்டும். வாரத்துக்கு ஒரு படம்ன்னாலும் 6 வருஷத்துக்கு 500 படங்கள் வராதே?!<br />
<br />
சமீபத்தில் ரஹ்மான் பத்தி சின்னக்குயில் சித்ரா வோட இன்டர்வியு ஒன்னு சமீபத்தில் பார்த்தேன். இளையராஜாகிட்ட ஒரு சின்னப்பையன் வேலை பார்த்தார், அவர்கிட்ட "திலீப், அந்த கீ போர்டை எடு, இதை அங்கே வை" ன்னு ராஜா சார் வேலை சொல்லிக்கிட்டு இருப்பார். ரோஜா படத்துக்கு பாடப்போகும்போது தான் , அந்தச் சின்னப்பையன் தான் ரோஜாவின் இசையமைப்பாளர் ரஹ்மான் அப்படின்னு தெரியும்னு சித்ரா சொல்றாங்க.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHgEatNTVec80b94P79Mp-lSbAHuz4oZWyD71qf47N-dgOiNx_CcMr6J8A7ELTklV2hgvVhpohXxIqSoq0N-CFvrpV7VesZbpFivGeKHnCqA4neVdMiruGKy8Wb_o5m2izf1pmBnpBHfw/s1600/k-s-chithra-759.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="422" data-original-width="759" height="177" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHgEatNTVec80b94P79Mp-lSbAHuz4oZWyD71qf47N-dgOiNx_CcMr6J8A7ELTklV2hgvVhpohXxIqSoq0N-CFvrpV7VesZbpFivGeKHnCqA4neVdMiruGKy8Wb_o5m2izf1pmBnpBHfw/s320/k-s-chithra-759.jpg" width="320" /></a></div>
<br />
<br />
சித்ரா ராஜாவோட ஆஸ்தான பாடகி, 50 % பாட்டை அவங்க தான் பாடுறங்க. 500 படத்துக்கு வேலை செஞ்ச ஒரு இசைக்கலைஞரை எங்கியோ பார்த்த மாதிரி இருக்குங்கிற அளவுக்குத்தான் ஞாபகம் இருக்குமா?!<br />
<br />
உண்மையில் ரஹ்மான் ராஜாவுக்கு எத்தனை படங்கள் பணியாற்றினார், அது எந்த காலகட்டம்?! மேலும் வைரமுத்துவுக்கு செய்த அதே கொடுமையை ரஹ்மானுக்கும் இளையராஜா செய்தார் என்றும், அவர் சில வருடங்கள் யாரிடமும் பணியாற்ற முடியாமல் தவித்தார் என்றும் அரசல் புரசலாக வதந்திகளும் இல்லாமலில்லை.<br />
<br />
இது அத்தனைக்கும் ரஹ்மான் வாயை திறக்காமல் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்த்து விட்டுச் செல்கிறார். மொத்தத்தில் இளையராஜாவுக்கு ரஹ்மான் மீது மனதளவில் நல்லபிப்பிராயம் கிடையாது, ரஹ்மானுக்கோ அது ஒரு பொருட்டே கிடையாது, நான் என் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு செல்கிறேன், எல்லா புகழும் இறைவனுக்கே என்று எளிமையாக கடந்து செல்கிறார்.<br />
<br />
உண்மை தான் என்ன?! அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-75941368472002760642018-06-10T12:02:00.000+05:302018-11-21T21:29:22.311+05:30மனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
தேதி: 14 நவம்பர் 2013<br />
பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து
வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ராஜேஷ்
குமாரிடம் தனது SBI ATM கார்டை கொடுத்து பணம் எடுத்து வர அனுப்புகிறார்.
கணவர் ரூ.25 ஆயிரம் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது இயந்திரத்தில்
இருந்து பணம் வழங்கப்பட்டுவிட்டதாக ரசீது மட்டும் வந்துள்ளது, ஆனால் பணம்
வரவில்லை!! <br />
<div class="text_exposed_show">
உடனே ராஜேஷ் குமார் 24
மணி நேர கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டுள்ளார், அவர்கள், 'பணம் வராதது ATM
ஃபால்ட், அதனால் உங்கள் பணம் உங்கள் வாங்கிக் கணக்குக்கே திரும்பி வழங்கப்
படும்" என்று சொல்லி வைத்து விட்டனர். ஆனால் ரெண்டு நாளாகியும் பணம்
வராததால் சம்பந்தப் பட்ட வங்கிக்கே ராஜேஷ் குமார் சென்று புகார் கொடுக்க,
வங்கியினரோ, தவறேதும் நடக்கவில்லை பணம் வழங்கப் பட்டுவிட்டது என்று
தெரிவிக்க, கணவனும் மனைவியும் ஷாக்காகிப் போயினர்.<br />
பின்னர்,
எங்கெங்கோ அலைந்து திரிந்து அந்த ATM மில் இருந்த கேமராவில் ராஜேஷ் குமார்
பணமெடுத்த CCTV FOOTAGE ஐப் பெற்றனர். அதில் பணம் வராதது தெளிவாகப்
பதிவாகியிருந்தது. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அன்றைய
தேதியில் 25000 ரூபாய் கணக்கை விட அதிகமாக இருந்ததாக தகவலையும் அவர்கள்
பெற்றனர்.<br />
அதைப் பார்த்த வங்கியினரோ, "வந்தனாவோட கார்டில் பணம்
எடுத்ததாகச் சொல்லறீங்க ஆனால் இதில் வந்தானா ஆளே இல்லையேய்யா" என்று
கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.<br />
"நானே குழந்தை பிரந்ததால் வெளியே
போகமுடியாமத்தானே ஏன் வீட்டுக்காரை அனுப்பி பணம் எடுத்துக்கிட்டு வராச்
சொன்னேன் அப்புறம் அந்த ATM கேமராவில் நான் எப்படி இருப்பேன்?" என்று
வந்தனா கேட்டிருக்கிறார். <br />
அதற்கு "அம்மணி, நாங்க இந்த கார்டும்,
PIN நம்பரும் உங்களுக்கு கொடுத்தது நீங்க பயன்படுத்த மட்டும் தான், அவற்றை
இன்னொருத்தர்கிட்ட (அது உங்க கணவராவே இருந்தாலும்) குடுத்தது தப்பு, தப்பை
உங்க மேல வச்சிக்கிட்டு நீங்க எங்க மேல எந்த கேசும் போட முடியாது" என்று
திருப்பி அடித்திருக்கின்றனர்.<br />
"அப்போ எனக்கு உடம்புக்கு முடியலைன்னா என்ன பண்றது?"ன்னு வந்தனா கேட்க அதுக்கு<br />
"நீங்க ஒரு SELF Signed செக் கொடுத்தனுப்பி வங்கியில் பணம்
எடுத்திருக்கலாம், அல்லது உங்களால் வர இயலாமையையும், உங்கள் கணவர் உங்கள்
கணக்கை இயக்க நீங்க அனுமதிக்கிறீர்கள் என்பதையம் கடிதம் மூலம் வங்கிக்கு
தெரிவித்து உங்கள் கணவரை வங்கிக்கு அனுப்பி பணம் பெற்றிருக்கலாம், அதை
விடுத்து PIN நம்பரை கணவரிடம் தெரிவித்தது விதி மீறல்" என்று SBI
ஆணித்தரமாகத் தெரிவித்து விட்டது. அது மட்டுமில்லாமல், அன்றைய தேதியில்
அந்த ATM மில் 25000 எக்ஸஸ் ஆக ஒன்னும் இல்லைன்னும் கணக்கு
காண்பித்திருக்கின்றனர்.<br />
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம்
கணக்கு வைத்திருப்பவரின் அனுமதிக் கடிதம் இன்றி ஒருவரது ஏடிஎம் அட்டையை
மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி
செய்துள்ளது.<br />
நீதி: கணவன் மட்டுமல்ல வேறு யாரும் இன்னொருத்தர் ATM
கார்டை உபயோகித்து பணம் பெறக்கூடாது,உங்களால் வெளியில் செல்ல இயலாது என்ற
நிலையில் Self signed செக் அல்லது அனுமதி கடிதம் மூலமே உங்கள் கணக்கை இயக்க
வேண்டும். இதை மீறி நடக்கும்போது, தவறு ஏதேனும் நேர்ந்தால் சல்லி பைசா
திரும்ப கிடைக்காது.</div>
</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-6468455589056020532018-01-31T06:46:00.000+05:302018-01-31T06:46:01.330+05:30முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="_5pbx userContent _22jv _3576" data-ft="{"tn":"K"}" id="js_o">
ஒரு
ஊரில் பணக்காரன் இருந்தான். அவன் பெயர் சந்துரு. அவனிடம் ஏராளமான
சொத்துக்கள் இருந்தன. எல்லா வாழ்க்கை வசதிகளும் அவனுக்கு இருந்தன.
எவரிடமும் கைநீட்ட வேண்டிய அவசியம் அவனுக்கு கிடையாது. ஆனாலும், அவனிடம்
ஒரு கெட்ட குணம் இருந்தது. ஏதாவது ஒரு பொருளைப் பார்த்தால் அதை தான்
அடைந்து விட வேண்டும் என்பதுதான் அது.<br />
<br />
ஒரு நாள் தன் காடு கழனிகளை
காணச் சென்று கொண்டிருந்தான். பயிர் பச்சைகள் செழிப்பாக வளர்ந்திருப்பதை
பார்த்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டு அவன் வீடு திரும்ப
ஆரம்பித்தான். அப்பொழுது ராமு என்பவனின் தோட்டத்து வேலி ஓரம் நிறைய
பூசணிக்காய்கள் காய்த்திருப்பதை பார்த்தான். தான்ஒரு பூசணிக்காயை எடுத்துச்
சென்றால் என்ன என்று எண்ணினான். பூசணிக்காயில் பொரியல், கூட்டு எல்லாம்
செய்யலாம் சுவையாக இருக்கும்.<br />
<br />
நன்கு விளைந்த ஒரு பூசணிக்காயை
பறித்தான் சந்துரு. அது சற்று கனமாக இருந்தது. அதை தோளின் மீது தூக்கி
வைத்துக் கொண்டு விடுவிடுவென வீட்டை நோக்கி நடந்தான் அவன். அதை ராமு
பார்த்து விட்டான். பணக்காரன் ஒருவன் திருடுகிறானே எவ்வளவு பாடுபட்டு
வளர்த்த பூசணிக்காயை அது சந்தைக்கு கொண்டு போய் விற்கலாம் என்று அவன்
எண்ணிக் கொண்டிருந்தானே. அக்கம் பக்கத்தாரிடம் எல்லாம் பணக்காரனான சந்துரு.
தன் தோட்டத்திலிருந்து ஒரு பூசணிக்காயை திருடிக் கொண்டு போய்
விட்டானென்றும், அவனை விசாரித்து பூசணிக்காயை தனக்கு மீட்டுத்தர வேண்டும்
என்று அவர்களை கேட்டுக் கொண்டான். ராமுவும், பணக்காரன் வீட்டிற்குச் சென்று
அவனை விசாரிக்க தயாராயினர்.<br />
அவர்கள் வரப்போகிற செய்தி
சந்துருவுக்கு எட்டியது. ஊர்க்காரர்கள் வந்து தன்னை விசாரித்து தன்
திருட்டு வெளிப்பட்டு விட்டால் என்ன செய்வது? திருட்டுப்பட்டம் கொடுத்து
விடுவார்களே... "அதோ பூசணிக்காய். திருடன் போகிறான்! என்று சொல்லி
சிரிப்பார்களே?' ஊர்க்காரர்களை எப்படி வசியப்படுத்துவது? சந்துரு யோசித்து
அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தான். தவசுப்பிள்ளையை அழைத்து ஆட்டுக்கறி,
கோழிக்குருமா, ரசம், பொரியல், பாயாசம் எல்லாம் உடனே தயாரிக்கச் சொன்னான்.
பெரிய பெரிய நுனி வாழை இலைகளை அறுக்கச் சொன்னான். எல்லாம் "மடமட'வென
தயாராகிவிட்டன.<br />
ஊர்க்காரர்கள் ராமுவுடன் வந்தனர். அவர்கள் விசாரணையை
தொடங்குவதற்கு முன், ""வாங்க! வாங்க! நீங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து என்
வீட்டுக்கு வந்திருப்பது என் பாக்கியம். உங்களை எல்லாம் என் வீட்டில் ஒரு
நாள் சாப்பிடச் சொல்ல வேண்டுமென்று வெகுநாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன்.
இன்று விருந்தும் தயாராகிவிட்டது. முதலில் நீங்கள் எல்லாரும்
சாப்பிடுங்கள்,'' என்று சொல்லி எல்லாரையும் சாப்பிட உட்கார வைத்துவிட்டான்.
சமையல்காரரும், வேலைக்காரர்களும் ஒன்றின்மேல் ஒன்றாக உணவு வகைகளை கொண்டு
வந்து இவைகள் நிறைய பறிமாறி அவர்களை பேச முடியாமல் திக்கு முக்காடச் செய்து
விட்டனர். இவ்வளவு வகையான உணவுப் பொருள்களை சாப்பிட்டிராத அவர்கள்
மூக்குபிடிக்க சாப்பிட்டனர். அப்பொழுது அவர்களுக்கு இவ்வளவு செலவழித்து
பிரமாதமாக சமையல் செய்து இவ்வளவு பேர்களுக்கு சாப்பாடு போடுகிற தயாளமனம்
படைத்த சந்துரு நாலணா பெறாத பூசணிக்காயை திருடி விட்டதாக சொல்கிறான். அவன்
பேச்சை நம்பிக் கொண்டு நாம் விசாரித்து கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள கூடாது
என்று எண்ணினர். அதனால் பணக்காரனை விசாரிக்காமலேயே சாப்பிட்ட சந்தோஷத்தில்
போய்விட்டனர்.<br />
<br />
அவர்களுக்கு சோற்றைப் போட்டு பூசணிக்காய் திருட்டை
எப்படி சந்துரு மறைத்தார். அன்றிலிருந்துதான் முழு பூசணிக்காயை சோற்றில்
மறைத்த மாதிரி என்ற பழமொழி உருவானது.<br />
<br />
ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு அஞ்சு லட்சம் வழங்கினார் வைரமுத்து.-செய்தி. <br />
(இந்த செய்திக்கும் மேலே சொன்ன கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!!)</div>
</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-88617790286559643342017-03-20T17:23:00.002+05:302017-03-20T17:23:58.018+05:30இளையராஜா-எஸ்.பி.பி: அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இளையராஜா எஸ்.பி.பி மேடைக் கச்சேரிகளுக்கு தான் இசையமைத்த பாடல்களை
அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்றதும் சிலர் இதுதான் சாக்கு என்று
இளையராஜாவின் ஆணவத்தைப்<span class="text_exposed_show"> பார்த்தீர்களா
என்று தங்கள் வன்மத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டனர். சிலர்
புத்திசாலித்தனமாக இளையராஜா சம்பளம் வாங்கிக் கொண்டுதானே இசையமைத்தார்,
அதற்கு மேல் அவருக்கு என்ன உரிமை என்கின்றனர். இவற்றைப் பற்றிப் புரிந்து
கொள்வதற்கு அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன என்ற புரிதல் வேண்டும்.</span><br />
<br />
<span class="text_exposed_show"><br /></span>
<div class="text_exposed_show">
பொதுவாக அறிவுசார் சொத்துரிமை மூன்று வகைப்படும். முதல் வகை
பேடண்ட்(காப்புரிமை). இது அறிவியல், பொறியியல், தொழில்நுட்பக்
கண்டுபிடிப்புகளுக்கான பயன்படுத்தும் உரிமை. இரண்டாவது காப்பிரைட்
(பதிவுரிமை ). இது கலைப்படைப்புகளுக்கான பயன்படுத்தும் உரிமை. மூன்றாவது
டிரேட்மார்க் (வணிக முத்திரை ).இது வணிகரீதியாக வெற்றிபெற்ற பொருட்களின்
முத்திரை, பெயரைப் பாதுகாப்பதற்கற்காக.<br />
இளையராஜா சம்பளம் வாங்கியது
படைப்பை உருவாக்க அவர் செலவிட்ட நேரத்திற்கான கூலி.ஆனால் அவரின்
படைப்புத்திறனுக்கான பொருளாதார அங்கீகாரம்தான் காப்பிரைட் உரிமையின் கீழ்
அவர் கேட்கும் ராயல்டி.பொதுவாக அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களின்படி
இசைக்கான காப்பிரைட்டில் முதல் போட்ட தயாரிப்பாளர், படைப்புத் திறனைக்
காட்டிய இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஆகியோருக்கே உரிமையுண்டு. பாடகர்கள்
தங்கள் குரல்வளத்தைப் பயன்படுத்துகிறார்களே தவிர கற்பனையிலிருந்து புதிதாக
ஒன்றை உருவாக்குவதில்லை. ஆகவே அவர்களுக்குச் சம்பளம் மட்டும்தான்.<br />
<br />
சில இசையமைப்பாளர்கள் தங்கள் காப்பிரைட் <br />
உரிமையைத் தயாரிப்பாளரிடமே விற்று விடுவார்கள். இளையராஜா சில
வருடங்களுக்கு முன்பு தன் பெரும்பாலான பாடல்களின் காப்பிரைட்டில் தனக்கும்
பங்கு உள்ளது என்று அறிவித்தார். ஆகவே வணிகரீதியாக தன் பாடல்களை யார்
பயன்படுத்தினாலும் அதற்குத் தனக்கான ராயல்டியை கொடுக்க வேண்டும் என்று
அறிவித்தார். மேலும் வரும் ராயல்டியில் தயாரிப்பாளருக்கும்,
பாடலாசிரியருக்கும் உரிய பங்கை அளிப்பேன் என்றார். ரஹ்மான் ஒருமுறை
இளையராஜா தன் காப்பிரைட் உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் சில
தீவுகளை வாங்கியிருப்பார் என்றார்.<br />
<br />
உடனே சிலர் ராஜா கூட மற்ற
இசையமைப்பாளர்கள் சிலரின் மெட்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.
அவர்களுக்கு ராயல்டி கொடுத்தாரா என்கிறார்கள். அது வேறு வழக்கு. அது போன்ற
பாடல்களின் இசையமைப்பாளர்கள் தங்கள் பாடலுக்கும், பிரதி எடுக்கப்பட்டதாகச்
சொல்லப்பட்ட பாடலுக்கும் குறைந்தபட்சம் 50% ஒற்றுமை இருக்கிறது என்பதை
நிரூபிக்க வேண்டும்.<br />
<br />
சிலர் புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு இளையராஜா
பாரதியார் பாடல்கள், தியாகராஜ கீர்த்தனைகள், திருவாசகம் பயன்படுத்தியதற்கு
ராயல்டி கொடுத்தாரா<span class="text_exposed_show"> என்று உளறுகிறார்கள்.
பாரதியார் படைப்புகள்தான் உலகத்திலேயே நாட்டுடமை ஆக்கப்பட்ட முதல்
படைப்பாக இருக்கவேண்டும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர் வேங்கடாசலபதி
கூறுகிறார். 1949 ஆம் ஆண்டு பாரதியாரின் உறவினர்களுக்கு மதராஸ் மாகாண அரசு
சன்மானம் வழங்கி இதைச் செய்தது. பதிவுரிமை வைத்திருந்த ஏ.வி.மெய்யப்ப
செட்டியார் அதை அப்போதைய மாகாண பிரதமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
கேட்டுக் கொண்டதால் பல போராட்டங்களுக்குப் பிறகு உரிமைத்தொகை ஏதும் கோராமல்
விட்டுக் கொடுத்தார். சில உரிமைகள் பாரதியாரின் சகோதர விஸ்வநாத ஐயரிடம்
இருந்தது. நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகளை யார் வேண்டுமானாலும்
உரிமைத்தொகை கொடுக்காமல் பயன்படுத்தலாம்.</span><br />
<br />
<div class="text_exposed_show">
அடுத்தது நூல்கள், இசை, பாடல்கள் போன்றவற்றுக்கான பதிவுரிமை அதன்
ஆசிரியர், இசையமைப்பாளர் போன்றோரின் காலத்திற்குப்பின் அறுபது ஆண்டுகள் வரை
மட்டுமே. அதன் பின் அது தானாகவே நாட்டுடைமையாகி விடும். வாரிசுகள் யாராவது
உரிமை கோரினால் அரசாங்கம் அதற்கான சன்மானம் அளிக்க வேண்டும். இதன்படிப்
பார்த்தால் தியாகராஜர், மாணிக்கவாசகர் போன்றவர்களின் படைப்புகள்
அறிவிக்கப்படாமலே நாட்டுடைமையாகி விட்டது. அவர்கள் வாரிசு என்று யாராவது
உரிமை கோரினால் அரசாங்கத்திடம்தான் உரிமை கோர வேண்டும்.</div>
<div class="text_exposed_show">
</div>
<div class="text_exposed_show">
நன்றி: </div>
<div class="text_exposed_show">
<div class="_3x-2">
<div>
<div class="_5r69">
<div class="clearfix mtm">
<a class="lfloat _ohe" data-hovercard-prefer-more-content-show="1" data-hovercard="/ajax/hovercard/user.php?id=885365376" href="https://www.facebook.com/jagannath.srinivasan/posts/10159072250855377"><img alt="" class="_s0 _54ru img" src="https://fb-s-a-a.akamaihd.net/h-ak-xat1/v/t1.0-1/c4.2.32.32/p40x40/12074997_10156770833175377_2115585355265696709_n.jpg?oh=984802d1bead0406cd94161161e2c7de&oe=59549197&__gda__=1500387224_e12cf89006d666c5aa1fcfb462be9e2b" /></a><div class="plm _42ef">
<span class="mbs fwn fcg" data-ft="{"tn":"C"}"><span class="fwb" data-ft="{"tn":";"}"><a data-hovercard-prefer-more-content-show="1" data-hovercard="/ajax/hovercard/user.php?id=885365376&extragetparams=%7B%22fref%22%3A%22nf%22%7D" href="https://www.facebook.com/jagannath.srinivasan?fref=nf" id="js_15e">Jagannath Srinivasan</a></span></span></div>
</div>
</div>
</div>
</div>
</div>
<br />
<br />
</div>
</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-15430522661243518092016-08-11T16:41:00.003+05:302016-08-11T16:44:29.014+05:30ஒலிம்பிக் தங்கப் பதக்கம், வியப்பான தகவல்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ரியோ ஒலிம்பிக் ஆரம்பிச்சிடுச்சு, அமெரிக்காவும் சைனாவும் பதக்கப் பட்டியலில் யார் முதலில் வருவது என்று போட்டி போட்டுக் கொண்டிருக்க, இந்தியா காரன் ஒரு தங்க மெடலாச்சும் வராதான்னு ஏக்கத்தோடு பார்த்துகிட்டு இருக்கான். வருஷம் முழுக்க கிரிக்கெட்டே கதின்னு டிவி முன்னாடி உட்கார்ந்தே இருந்தா எங்கிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் கிடைக்கும், நாச்சியப்பன் கடையில வாங்கினாத்தான் உண்டு!!<br />
<br />
பள்ளியில் படிக்கும் போது நான் லண்டன் பிபிசி தமிழ் சேவையை தவறாமல் கேட்பதுண்டு. ஒருநாள் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பற்றி சொன்னார்கள். எனக்கு அது வியப்பாகவும் விந்தையாகவும் இருந்தது!! அப்படி என்ன சொன்னார்கள்....??? நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல ஒலிம்பிக்கில் வழங்கப் படும் தங்கப் பதக்கம் என்பது தங்கத்தால் செய்யப் பட்டது இல்லையாம், வெறும் தங்க முலாம் பூசப் பட்டதாம்!! (இதை நண்பர்களிடம் சொல்லப் போய் அவர்கள் யாரும் நம்பாமல் என்னை உதைக்க வந்தது வேறு கதை!!).<br />
<br />
2016 ஆம் கனக்குப் படி ஒரு தங்க மெடலின் மொத்த எடை 500 கிராம், ஒரு ஆளுக்கு அரை கிலோ தங்கமாகவே கொடுக்க வேண்டுமானால் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் தங்க மெடல்களுக்கே சரியாகி விடும்!! இது தாங்காதுடான்னு யோசிச்ச ஒலிம்பிக் கமிட்டீ 1912-ம் ஆண்டுடன் தங்கப் பதக்கத்தை தங்கமாகவே கொடுப்பதை நிறுத்திவிட்டு, தங்க முலாம் பூசிய மெடல்களையே பரிசளிக்க பயன்படுத்தி வருகிறதாம். இதில் தங்கம் வெறும் 6 கிராம் மட்டுமே, மீதம் 494 கிராம் தூய வெள்ளி !! <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrJQAGn_qZ9c_25IgTHQz3wi1TGRWRtH_5Up3qIKy6aiZZJvhO-T1-PvS4sWCnExec28qPEFtcdOK8HbApx_NVFUJ42Fr_d6fVxmbvzFEb4z9zE0y4biZQVbP_SzS_Xr3fe8xeQpBtbR8/s1600/gold_medal.jpg%253Ds1300x1600.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="168" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrJQAGn_qZ9c_25IgTHQz3wi1TGRWRtH_5Up3qIKy6aiZZJvhO-T1-PvS4sWCnExec28qPEFtcdOK8HbApx_NVFUJ42Fr_d6fVxmbvzFEb4z9zE0y4biZQVbP_SzS_Xr3fe8xeQpBtbR8/s320/gold_medal.jpg%253Ds1300x1600.jpg" width="320" /></a></div>
<br />
<br />
அப்போ முலாம் பூசிய பதக்கத்துக்கா மனுஷன் இந்த அடி அடிச்சிக்கிறான்? பதக்கத்தின் மதிப்பு அதை செய்யப் பட்ட பொருளால் அல்ல, சொல்லப் போனால் அதன் மதிப்பு கண்ணால் தெரியும் பொருளாக இல்லை, அது அதற்கும் மேலே........!! <br />
<br />
</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-10037096198840532232016-02-23T21:33:00.000+05:302016-02-23T22:01:08.408+05:30அடுத்து ஆட்சி யாருடையது? ஒரு கணிப்பு.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அ.தி.மு.க ஆட்சி முடிய போகிறது.<br />
அடுத்து என்ன தி.மு.க தானே ???...<br />
ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து " உனக்கு ஒரு தண்டனை.<br />
அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை திங்க வேண்டும் அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள வேண்டும்" <br />
எது வேண்டும்? என்றான்.<span class="text_exposed_show"><br /> அந்த மனிதன், செருப்படி வாங்கினால் கேவலம் என்று எண்ணி, வெங்காயம் திண்பதாக ஒத்துக் கொண்ட்டான்.<br /> அதன்படி வெங்காயம் திங்க தொடங்கினான். 30-35 வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை. <br /> எனவே அவன் "மன்னா...என்னால் வெங்காயம் திங்க முடியவில்லை எனவே நான் செருப்பு அடியே வாங்கிக் கொள்கிறேன்" என்றான்.<br />
அதன்படி செருப்பால் அடி வாங்க தொடங்கினான். 40-50 செருப்படி வாங்கியவன்
வலி தாங்க முடியாமல் அலறியபடி தன்னால் செருப்படி வாங்க முடியவில்லை. <br /> எனவே வெங்காயமே தின்பதாக கூறினான்.<br /> மீண்டும் சில வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை.<br /> எனவே செருப்படி வாங்க தொடங்கினான், வலி தாங்க முடியவில்லை, மீண்டும்<br /> வெங்காயம்- <br /> எரிச்சல் தாங்கவே முடியவில்லை,<br /> மீண்டும் செருப்படி என மாற்றி மாற்றி வாங்கி கொண்டிருந்தான். <br /> அவன் யாரென்று தெரியுமா? முகம் காட்டும் கண்ணாடியை பாருங்கள்..!!!<br /> நாமேதான்.<br />
வேறு வழியே கிடையாது என அறிவிலி போல் சிந்திக்கவும் தெரியாமல்,செயல்படவும்
தெரியாமல் 5 ஆண்டு தி.மு.க, எரிச்சல் தாங்க முடியாமல், 5 ஆண்டு அ.தி.மு.க,
வலி தாங்கவும் முடியாமல் மீண்டும் தி.மு.க இருவரிடமும் வாங்கிக்
கொண்டிருப்பது யார்..? நாம் தானே..?</span><br />
<br />
<span class="text_exposed_show">[ஃபேஸ் புக்கில் படித்தது] </span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhxO6O-aoZc4dFtoY3mbkK2gw_W6TBkjgETQ4K5oJdCSDpM_SzVZXGaoLLmDlO3LY1M-sRsYa0kceWX9W6gUb9ungjpc_iuBi6cqovAhd1bc-hUJFtJ9cYvHU6enwkjVKtFZn2aO9WZUU/s1600/12764763_744483205687059_7141355139193166407_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="282" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhxO6O-aoZc4dFtoY3mbkK2gw_W6TBkjgETQ4K5oJdCSDpM_SzVZXGaoLLmDlO3LY1M-sRsYa0kceWX9W6gUb9ungjpc_iuBi6cqovAhd1bc-hUJFtJ9cYvHU6enwkjVKtFZn2aO9WZUU/s400/12764763_744483205687059_7141355139193166407_o.jpg" width="400" /></a></div>
<br />
<br />
கீழே உள்ள படம் உங்களில் பலருக்குப் பரிச்சயமானது தான். ஆனால் ஒரு
சின்ன வித்தியாசம் செய்திருக்கிறேன். இந்த படங்கள் சொல்ல வருவது என்ன?
அதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmjJ-swx2sKaV7nrhpPgmbjcwAZ4BD0mu4LCqxFizElOKhdBu8_Xjkghs3Oeiy8eYXY0ivHHvQgtwUwhUzfyEHC74jtsw3zQENQyg8VJWAG9l6ZmYKUihRdHgCOkGc5wCf53xy1UhGP3w/s1600/donkey.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmjJ-swx2sKaV7nrhpPgmbjcwAZ4BD0mu4LCqxFizElOKhdBu8_Xjkghs3Oeiy8eYXY0ivHHvQgtwUwhUzfyEHC74jtsw3zQENQyg8VJWAG9l6ZmYKUihRdHgCOkGc5wCf53xy1UhGP3w/s640/donkey.jpg" width="452" /></a></div>
</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-8632772638865631432016-02-04T13:33:00.003+05:302016-02-04T13:37:23.655+05:30கெயில் - இளிச்சவாயன் தமிழன் மட்டுமே............<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கெயில் எரிவாயு குழாய் கேரளாவிலும், கர்நாடகாவிலும் விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் சாலை ஓரங்களின் வழியாக கொண்டு செல்லப் படும். தமிழகத்தில் மட்டும் அது ஆயிரக்கணக்கான் விவசாய நிலங்கள் வழியாகச் செல்லும்.<br />
<br />
இதற்காக நிலங்கள் கையகப் படுத்தப் படும், அங்கிருக்கும் மரங்கள் பிடுங்கி வீசப் படும், நஷ்ட ஈடு அடிமாட்டு விலைக்கு தரப் படும், இருபுறம் 6 மீட்டருக்கு எந்த விவசாயமும் செய்யக் கூடாது, எக்காரணத்தைக் கொண்டு குழாய் வெடித்தாலும் அந்த விவசாயியே [ஒரு வேலை உயிர் தப்பியிருந்தால்] குற்றவாளியாக்கப் படுவார்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAcJliHizWFeH4ca3k7w2mTT0ewIadKsePnLY-bSlW5jIPgaSCJuK27ouVmd_no44JHgxdAGNHm_94U_lgawxeUtjxiM4x0yAZOVxl_736lvpfV2Ej7SPMtqESza9Z_rypNv5fxyxgjpY/s1600/wolderbeast.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="315" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAcJliHizWFeH4ca3k7w2mTT0ewIadKsePnLY-bSlW5jIPgaSCJuK27ouVmd_no44JHgxdAGNHm_94U_lgawxeUtjxiM4x0yAZOVxl_736lvpfV2Ej7SPMtqESza9Z_rypNv5fxyxgjpY/s640/wolderbeast.jpg" width="640" /></a></div>
<br />
<br />
தமிழக அரசு இதை எதிர்த்து வழக்கு போட்டது, ஆனால் உப்பு சப்பில்லாத வழக்கறிஞர்கள் செயல்பாடு யாருக்கு சாதகமாக இருந்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம். வரைவுத் திட்டம் போடும்போது தமிழக அரசு சும்மா இருந்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்ற சுப்ரீம் கோர்ட்டின் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அப்பாவி மக்களை நம்ப வைத்து முதுகில் குத்தியிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinEpUE7iCx996s-brNbe-ZMihJrJzR1ChEOWaUnzX0Vn3WyHYAJUvcsEbZm5Mrk3ZZlBe2HS5O__AZm9YoByoGgrMinYva-uX5IDUvYw2TV3n2xnoYEbEoX8K8h2q-DueCPjWr2rhFaow/s1600/lion-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinEpUE7iCx996s-brNbe-ZMihJrJzR1ChEOWaUnzX0Vn3WyHYAJUvcsEbZm5Mrk3ZZlBe2HS5O__AZm9YoByoGgrMinYva-uX5IDUvYw2TV3n2xnoYEbEoX8K8h2q-DueCPjWr2rhFaow/s400/lion-1.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0BpRKQq1OePZB6bNvRpdWLl3EoBOfXgtN3Gna08yRhPfTYn3Qf8P9WSPwMDi2KcnmYmXFhYBG9Jp-OrGQjA1Emo1ZC4TBEY4wb6hC7hait8tNSb8YzLizqc7OqOejanpN3ejO2R8bIYM/s1600/lion-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<br />
விவாசாயிகளுக்கு ஆதரவாக எந்த கட்சியும் இல்லை. காரணம் அதனால் எத்தனை வாக்குகளை இழந்து விடப் போகிறோம் என்பதே. தமிழக மக்கள் அனாதையாக சாக வேண்டியது தான், யாரும் காக்கப் போவதில்லை.</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-31725310999983271902016-01-25T22:44:00.002+05:302016-01-25T22:51:12.256+05:30 பத்மா புருஷன் அவார்டு.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;">சார் உங்களை பத்மா புருஷன் அவார்டு குடுக்க செலக்ட் பண்ணியிருக்கோம்!!</span><br />
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;">அப்படியா, ரொம்ப சந்தோசம். விருது கிடைச்ச சந்தோஷத்துல கையும் ஓடலை காலும் ஓடலை. அதுசரி விருது குடுத்ததும், என் பேருக்கு முன்னாடி "பத்மா புருஷன்" அப்படின்னு போட்டுக்கலாமா?</span><br />
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;">ஏன் சார் அப்படி போட்டா ஒரிஜினல் பத்மாவோட புருஷன் அடிக்க வந்துட மாட்டானா, அதெல்லாம் முடியாது. மீறி எங்கேயாச்சும் போட்டிங்கன்னு கண்டு பிடிச்சோம்னா விருதை திரும்ப பிடுங்கிக்குவோம்.</span><br />
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;">என்னைய்யா இது, உங்ககிட்டா பேஜாரா போச்சு. சரி பேருக்கு முன்னாடி தான் போட முடியாது, போனா போகட்டும். விருதுன்னா எதாச்சும் பணமுடிப்பு தருவாங்களே அதாவது இருக்குமா?</span><br />
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;">ஒரு ம..ரும் கிடையாது.</span><br />
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;">அட நாரப் பசங்களா, அதை காமிச்சு ஒரு இரயில் டிக்கெட்டாச்சும் புக் பண்ண முடியுமாடா??</span><br />
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;">அதுவும் முடியாது.</span><br />
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;">அப்புறம் என்ன பீப்புக்குடா இந்த அவார்டு, நீங்களே வச்சிக்குங்கடா.......................எனக்கு அவார்டு வேணும்னா நான் நாச்சியப்பன் பாத்திரக் கடையிலேயே வாங்கிக்கிறேன்டா...........</span></div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-59398092881299070882016-01-12T13:53:00.001+05:302016-01-12T13:56:54.824+05:30ராமன் வளர்த்த குதிரை-தெரிஞ்ச கதை தான் ஆனாலும்.............<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2>
ராமன் வளர்த்த குதிரை</h2>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuGjsvO0VlqCr6WoyUBSytgQdNLtoDFThVhOfsPzF5g8Gk0Bbeg5JJ9N0hvSC_uWaDIZZFoGSK4Qm4_8grIfhGEwsr0y8GTZXOZsJNJPbNs_J9kvz38Qx2lYyfL9bffkDetbxWQCl1Z7U/s1600/horse.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuGjsvO0VlqCr6WoyUBSytgQdNLtoDFThVhOfsPzF5g8Gk0Bbeg5JJ9N0hvSC_uWaDIZZFoGSK4Qm4_8grIfhGEwsr0y8GTZXOZsJNJPbNs_J9kvz38Qx2lYyfL9bffkDetbxWQCl1Z7U/s320/horse.jpg" width="320" /></a></div>
<h2>
</h2>
<span style="font-size: medium;"><i><span style="font-size: large;">கி</span></i>ருஷ்ண
தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படை வலிமையுள்ளதாக
இருந்தது. சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில்
ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதன்படி , ஒரு வீட்டிற்கு ஒரு </span><span style="font-size: medium;">குதி</span><span style="font-size: medium;">ரையையும்
அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு அளவு பணமும் கொடுக்கப்பட்டு வந்தது.
அத்தொகையைப் பெற்றுக்கொண்டு, குதிரையை நன்கு உணவளித்து வளர்த்து வந்தார்கள்
மக்கள். </span><br />
<br />
<br />
தெனாலிராமனும், வளர்ப்பதற்கென்று ஒரு குதிரையை வாங்கிக்கொண்டு பராமரிப்புத்
தொகையையும் பெற்றுக் கொண்டார்.<br />
<br />
குதிரையை கொண்டுபோய் ஒரு குடிசைக்குள் அடைத்து வைத்து சுவரின் வாசலில் சுவர் ஒன்றை
எழுப்பி அந்தச் சுவரின் ஒரு பக்கத்தில் துவாரம் அமைத்தார். அந்தத் துவாரத்தின்
வழியாக அன்றாடம் ஒரு கைப்பிடி புல்லை எடுத்து நீட்டுவார். பசி மிகுந்த குதிரையும்
வெடுக்கென்று அதைப் பற்றி கொள்ளும். குதிரை சரியான தீனி கிடைக்காததால் எலும்பும்
தோலுமாய் ஆகிவிட்டிருந்தது.<br />
<br />
மன்னர் விதித்த நிபந்தனையின்படி மக்கள் அனைவரும் தாங்கள் வளர்க்கும் குதிரைகளை
அரண்மனையில் கொண்டு காட்டும் நாள் வந்தது.<br />
தெனாலிராமன் மட்டும் குதிரையின்றி தான் மட்டும் வந்திருந்தார். மன்னர் ராமனை
நோக்கி, “தெனாலிராமா உன் குதிரை எங்கே” என்றார்.<br />
<br />
ராமன் “அரசர் பெருந்தகையே, குதிரை மிகவும் முரட்டுத்தனமும் வலிமையும் கொண்டதாக
உள்ளது. அதனால் இங்கே கொண்டு வரவில்லை. எனவே தயைகூர்ந்து நமது குதிரைலாயத் தலைவரை
எனது குதிரையைப் பார்வையிட அனுப்புங்கள்” என்றார்.<br />
<br />
அரசாங்க குதிரைலாயத் தலைவருக்கு நீண்ட தாடி இருந்தது. அவர் மன்னரின் உத்தரவுப்படி
தெனாலி ராமனுடன் சென்றார். “அதோ அந்தத் துவாரத்தின் வழியாகக் குதிரையைப் பாருங்கள்.
முரட்டுக் குதிரை, ஜாக்கிரதை” என்று சொன்னான் ராமன்.<br />
<br />
அதிகாரி துவாரத்தின் வழியாக கழுத்தை உள்ளே நீட்டி பார்த்தார். குதிரையோ,
அதிகாரியின் நீண்ட தாடியை, தெனாலிராமன் தனக்கு வழக்கமாகக் கொடுக்கும் புல்தான் என
எண்ணி வெடுக்கென்று வாயால் பற்றி இழுத்தது. “ஐயோ ஐயோ என்று அலறி குதிரையிடமிருந்து
தாடியை விடுவித்துக்கொள்ள அதிகாரி படாத பாடுபட்டார். ஆனால் முடியவில்லை.
அதிகாரியின் இந்த பிராணவதையைக் கேள்விப்பட்ட மன்னர் அதிகாரிகளுடனும்
அமைச்சர்களுடனும் தெனாலிராமன் வீட்டிற்கு வந்தார்.<br />
<br />
உடனே காவலர்களிடம் கூறி அதிகாரியை மீட்க நடவடிக்கை எடுத்தார். கடைசியில்
அதிகாரியின் தாடியைக் கத்தரித்து அதிகாரியை மீட்டனர். மன்னர் உத்தரவுப்படி
குடிசையின் சுவர் இடித்துத் தள்ளப்பட்டது. உள்ளே பார்த்தால் நிற்கக் கூட
சக்தியில்லாமல் குதிரை எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தது.<br />
<br />
தெனாலிராமனைப் பார்த்த அரசர், “ராமா, குதிரையை வளர்க்கக் கொடுத்த நிதியை நீ
தின்றுவிட்டு குதிரையை இப்படி பட்டினிபோட்டு விட்டாயே” என்று கோபித்தார்.<br />
<br />
உடனே ராமனும், “அரசே ஒருவாய்ப் புல்லுக்கே அதிகாரியின் தாடியை குதிரையிடமிருந்து
மீட்பது பெரும்பாடாகிவிட்டது. இன்னும் வயிறு நிறையத் தீனி கொடுத்திருந்தால்
அதிகாரியை விழுங்கி ஏப்பம் விட்டிருக்காதா” என்றான்.<br />
<br />
மன்னர் தன்னை மறந்து சிரித்துவிட்டார். “ராமா, இனி இதுபோல் பிராணிகளை வதை செய்யாதே”
என்று எச்சரித்தார்.<br />
<br />
குறிப்பு: இந்த கதைக்கும், தமிழக மக்கள் ரேஷன் கடையில் 100 ரூபாய் பணம், ஒன்னேமுக்கால் அடி நீள கரும்பு, ஒரு கிலோ பச்சரிசியை கூட்டமாய் நின்று அடித்துப் பிடித்து வாங்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களை இந்த கதையில் வரும் பஞ்சத்தில் கிடந்த குதிரையாகவும், குதிரையை கேவலமான நிலையில் வைத்திருந்த தெனாலிராமனை ஆட்சியாளர்களாகவும் நான் சித்தரிக்கவில்லை. </div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-43013752288003545242015-12-26T22:39:00.000+05:302015-12-26T22:45:40.810+05:30பீப்........ வந்தது வெள்ளச் சேதம் போச்சு.......டும்......டும்......டும்......<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
நம்ம வீட்டு சுவற்றில் திரியும் பல்லிகளின் வாலுக்கு ஒரு சிறப்பு குணம் உண்டு. வேணும் போது பல்லியே கட் பண்ணி போட்டுடும், கொஞ்ச நாளில் திரும்பவும் அது வளர்ந்திடும்!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyMvTbafGRg2qdhUsmMHFGZtAMQrCf_LdJASNthYvQBAXR3QVwba9Rt9KT454KZe4HolVzFpwfAuWgpHrFUSPWc9fwjq2i-roUyN2nwtWIauxjp1wuvVeO9f2eIuc4WL_L7Kx6e6brQMY/s1600/Lizard.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyMvTbafGRg2qdhUsmMHFGZtAMQrCf_LdJASNthYvQBAXR3QVwba9Rt9KT454KZe4HolVzFpwfAuWgpHrFUSPWc9fwjq2i-roUyN2nwtWIauxjp1wuvVeO9f2eIuc4WL_L7Kx6e6brQMY/s400/Lizard.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
அது சரி, அந்த மாதிரி கட் பண்ணி போடும்அவசியம் பல்லிக்கு எப்போது வரும்? பூனை மாதிரி அதை பிடிச்சு சாப்பிடும் பிராணிகள் மூலமா வரும். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1m05j9i9wiNJYAOGTPryClML2yXLg7kiUHH_qjTmIEpOee2xl5BtmGk0sfajaD1f-8i68DJUJ_hr3WbuG-VAskIiw2Q27k4Uerh5JpUgYWDl85hWNdtWW3YAPEC8yb7UB0cKOiCNh86Y/s1600/cat.jpg" imageanchor="1"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1m05j9i9wiNJYAOGTPryClML2yXLg7kiUHH_qjTmIEpOee2xl5BtmGk0sfajaD1f-8i68DJUJ_hr3WbuG-VAskIiw2Q27k4Uerh5JpUgYWDl85hWNdtWW3YAPEC8yb7UB0cKOiCNh86Y/s400/cat.jpg" /></a></div>
<br />
<br />
பூனைகள் அவற்றை துரத்தினால், அந்த நேரத்தில தன்னோட வாலை பல்லி கட் பண்ணி போட்டுட்டு ஓடிடும். அந்த வால் கொஞ்ச நேரம் துள்ளிக்கிட்டு கிடக்கும். அங்க வரும் பூனை அந்த வாலை காலால் சீண்டி விளையாடிப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பல்லி எஸ்கேப்!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXQw5MN6MIP-cN6DPBCNgT3o3WBddgXlSI_OF4BAlsG1ZVQ7ry749CXVkFFbHthCpheuMTwkOfSXmsDZTGIgl7G7ocjvkYNlEElN3BG3FEAPStsN_sjsiaTT2md0fBSDNoBh3c0cNJn1k/s1600/tail.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="257" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXQw5MN6MIP-cN6DPBCNgT3o3WBddgXlSI_OF4BAlsG1ZVQ7ry749CXVkFFbHthCpheuMTwkOfSXmsDZTGIgl7G7ocjvkYNlEElN3BG3FEAPStsN_sjsiaTT2md0fBSDNoBh3c0cNJn1k/s320/tail.jpg" width="320" /></a></div>
<br />
<br />
இந்த பதிவுக்கும், ஊடகங்களும், மக்களும் மழையால் வந்த பிரச்சினைகள் அத்தனையும் மறந்துவிட்டு பீப் சாங் பற்றியே பேசிக் கொண்டிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!! ஜெயலலிதா பல்லி என்றும், பீப் சாங் பல்லி வால் என்றும், அரசு மழைப் பிரச்சினையை கையாண்ட விதத்தால் மக்களின் கோபம் பூனை என்றும் சம்பந்தப் படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1EO2PGvrd2X1_b_ptY27BmTneARIT3V4tzlWXcm3Yjid7AE95G-KVeEyRUKJRCutAENkCzO3bwRa_a05ReFmocGNaFBrGKJSSnPMgyYZM7dAHaskx-kr4QbGKWv3oILB4_aRZO77AVmo/s1600/12313650_774586629312394_8271202755811453928_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1EO2PGvrd2X1_b_ptY27BmTneARIT3V4tzlWXcm3Yjid7AE95G-KVeEyRUKJRCutAENkCzO3bwRa_a05ReFmocGNaFBrGKJSSnPMgyYZM7dAHaskx-kr4QbGKWv3oILB4_aRZO77AVmo/s320/12313650_774586629312394_8271202755811453928_n.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<div>
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 15.456px;"><br /></span></span></div>
<div>
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 15.456px;"><br /></span></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV5QLZlm06-pFq5w3XV82kQlkwgJN_aVMQ_JFEDJQWdwbRoajt6UN1OqEw12XBf6Kqs_X4jjuEs4jjXhWL6w-QPXpYQrC7x1vpzEUEHyu9exqvVSZLALD_jpymv9jzgo-4TZQWWGSSFzw/s1600/tail.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><br /></a></div>
</div>
</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-31536006128759627942015-12-23T15:13:00.000+05:302015-12-23T15:13:17.900+05:30அப்ப 15 வயசுல பண்ணா தப்பு இல்லயா...................??<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
\\சிறார்களின் தண்டனை வயது 18 வயதிலிருந்து 16 வயதாக குறைப்பு<br />
<a class="" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA?source=feed_text&story_id=1631032707117395"><span class="">#</span><span class="">அப்ப</span></a> 15 வயசுல பண்ணா தப்பு இல்லயா....\\ ன்னு நண்பர்கள் கேட்கிறார்கள்.<br /></div>
தப்பு
செய்பவர்கள் ஒருபுறம், மறுபுறம் குற்றம் சுமத்துபவர்கள். டெல்லியில் அந்த
பெண்ணை கொலை செய்தவனை நினைத்தால் இன்னமும் வயதை குறைத்து விடலாம் என்று
தோன்றினாலும் நம்ம போலீஸை நினைத்தால் கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கிறது.
ஐந்து வயது குழந்தை மீது கஞ்சா வழக்கு பதிந்தனராம். இன்னொரு வழக்கில் ஒரு
வயது குழந்தை மீது ஏதோ குற்றச் சாட்டு, கைது செய்து வழக்கு பதிவு செய்ததாக செய்தித் தாட்களில் படித்தேன். இந்த மாதிரி செய்திகளைப் படித்த
போது பல நாட்கள் மன நிம்மதியின்றி தவித்தேன். ஒரு வயது, ஐந்து வயது குழந்தைகளுக்கெல்லாம் என்ன
தெரியும், அவர்களை அவ்வாறு செய்ய ஒருத்தருக்கு எப்படிப் பட்ட கல் நெஞ்சமாக இருக்கும்? <br />
<br />
எனவே எதற்கும் ஒரு எல்லை கோடு அல்லது
வரையறை உண்டு. அவ்வாறு வரையறுத்த பின்னர் அதை மீற முடியாது, அது தான்
சட்டம். மன்னர்கள் காலத்தில் சட்டங்கள் இருந்தாலும் ஒவ்வொரு வழக்கையும்
மன்னனே விசாரித்து காலம், இடம், குற்றவாளி என பல கோணங்களில் ஆராய்ந்து
தீர்ப்பு வழங்கினான். தற்போது அது சாத்தியமில்லை. 16 வயதுக்கு ஒரு நாள்
முன்னாடி அவன் கற்பழித்தாலும் தையல் மெஷீனும், 10 000 ரூபாயும்
கிடைக்கும்!!<br />
<div>
<br /></div>
</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-36591880582248275792015-11-19T13:06:00.001+05:302015-11-19T15:22:03.510+05:30நாங்கள் நிறைய அணைகள் கட்டியுள்ளோம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நாங்கள் நிறைய அணைகள் கட்டியுள்ளோம் அப்படின்னு யாரோ சொல்றாங்க, ஆனாலும் ஒன்னு கூட நம்ம கண்ணுக்குத் தெரியலையே? என்ன காரணம்?<br />
<br />
<br />
இந்த நேரத்தில் சம்பந்தேமேயில்லாமல் எல்லோரும் அறிந்த ஒரு சின்ன கதை, ஞாபகத்திற்கு வருகிறது. <br />
<br />
ஒருமுறை இந்திய அமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டு அமைச்சருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அந்த வெளிநாட்டு மந்திரி சொன்னார் “சார் அதோ தெரியுது பாருங்க அணை அந்த அணையை நான் தான் டெண்டர் எடுத்து கட்டினேன். அதில் வந்த வருமானத்தை வைத்து தான் இந்த வீட்டை கட்டினேன்”<br />
<br />
“ஓ அப்படியா மகிழ்ச்சி. அணையும் வீடும் அழகாக உள்ளது ”பாராட்டினார்.<br />
<br />
பின்னர் ஒருமுறை அந்த வெளிநாட்டு அமைச்சர் இந்தியா வந்து அமைச்சரை சந்தித்தார்.<br />
<br />
பில்கேட்ஸ் பங்களாவைவிட மிகப்பெரிய பங்களாவில் சந்திப்பு. பங்களாவின் அழகில் மயங்கியே போனார் அமைச்சர்.<br />
<br />
எங்க நாட்டு பங்களாவைவிட மிக அழகாக கட்டியுள்ளார்கள் என பாராட்டினார்.<br />
<br />
“இது யாருடையது?”<br />
<br />
“என் பங்களாதான் “<br />
<br />
“வாவ் வெரி நைஸ். எப்படி கட்டினீங்க?”<br />
<br />
“அதோ தெரியுது பாருங்க அந்த அணையை நான் தான் கட்டினேன். அதில் கிடைத்த தொகையை கொண்டுதான் இதை கட்டினேன்”<br />
<br />
வெளி நாட்டு அமைச்சர்”- “அங்க எந்த பாலமும் தெரியலையே?”<br />
நம்ம அமைச்சர் கூலாக பதில் சொன்னார்....<br />
<br />
“நீங்க அணையை கட்டிவிட்டுதான் அதில் வரும் வருமானத்தை எடுப்பீங்க....நாங்க அணை கட்டாமலே முழுசா சுட்டிடுவோம் இல்ல.....”</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-56892234386995875092015-11-19T00:18:00.002+05:302015-11-19T19:52:35.840+05:30மகாபாரதத்தில் அபிமன்யு ஏன் போரில் கொல்லப் பட்டான்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்கள் மிகவும் மோசமாக தோற்கடிக்கப் பட்டனர். மீண்டும் மீண்டும் போர் நடந்தது, ஆயினும் அனைத்துப் போர்களிலும் தேவர்கள் கையே ஓங்கியது, அசுரர்கள் அவர்களது லோகத்தில் இருந்தே விரட்டியடிக்கப் பட அவர்கள் பூமியில் தஞ்சம் புகுந்து அங்கே தோன்ற ஆரம்பித்தனர். அசுரர்களின் பாரத்தை [பாரம் அவர்கள் உடல் எடையால் அல்ல, அவர்கள் செய்யும் அட்டூழியங்களால் !!] தாங்க முடியாத பூமிதேவி பிரம்ம தேவனிடம் முறையிட, அவர் சிவன் உட்பட தேவர்களை அழைத்துக் கொண்டு பாற்கடலின் கரையில் அமர்ந்து அதில் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீமன் நாராயனனை எண்ணித் தவம் செய்கிறார். அதற்கு இசைந்த ஸ்ரீமன் நாராயணன் தான் பூமியில் அவதரித்து லீலைகள் புரிய இருப்பதாகவும், அப்போது அசுரர்கள் அழிக்கப் பட்டு பூமி பாரம் குறைக்கப் படும், அவதாரத்தின் போது தன்னுடன் தேவர்களும் உடன் வர வேண்டும், ஆகையால் அவர்கள் அனைவரும் பூமியில் சென்று பிறக்கவும் வேண்டும் என்ற செய்தியை பிரம்மனின் ஹிருதயத்திற்கு அனுப்புகிறார். [வாட்சப்பா, எஸ் எம் எஸ்ஸான்னு மட்டும் தெரியலை].<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8XGtVZSRhj_aJwSuNousuke7xoBtwsUx6NRMrzPNz8pXtSmCmgXgvRt4NNfqcQv6X-a_LR4XG15DNM_GmXfpitcdimwc5xLlRz_Tw3Ckt31-VcTtxJOE6SMnni_gp80fshqCO_cAI_zg/s1600/abhimanyu.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8XGtVZSRhj_aJwSuNousuke7xoBtwsUx6NRMrzPNz8pXtSmCmgXgvRt4NNfqcQv6X-a_LR4XG15DNM_GmXfpitcdimwc5xLlRz_Tw3Ckt31-VcTtxJOE6SMnni_gp80fshqCO_cAI_zg/s320/abhimanyu.png" width="264" /></a></div>
<br />
<br />
இதை மற்ற தேவர்களுக்கும், பூமாதேவிக்கும் பிரம்மா தெரிவிக்கிறார். மகிழ்ச்சியோடு பூமாதேவி திரும்பிச் செல்ல, தேவர்கள் ஒன்றுகூடி கலந்தாலோசித்து யார் எங்கே பிறக்க வேண்டும் என்றுமுடிவெடுக்கின்றனர். அதன்படி சோமனின் [Moon god] மகன் வர்சாஸ் அர்ஜுனனின் மகன் அபிமன்யூவாகப் பிறக்க வேண்டுமென்று முடிவெடுக்கப் படுகிறது. ஆனால் சோமனோ தன்னால் மகனைப் பிரிந்திருக்க இயலாது, ஆகையால் தனது மகனுக்கு பூமிக்குச் சென்று பிறப்பதில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறான்.<br />
<br />
இதை மறுத்த மற்ற தேவர்கள், இது பரம புருஷோத்தமனின் உத்தரவு என்பதால் அதை மீறுவது, மறுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவிக்கின்றனர். மகனை அதிக காலம் பிரிந்திருக்க விரும்பாத சோமன் நிபந்தனையோடு தனது மகனை அர்ஜுனனின் மகனாகப் பிறக்க ஒப்புக் கொள்கிறான். அதன்படி அவன் இளம் வயதிலேயே தேர் படை செலுத்துவதில் வல்லவனாகத் தேர்வான். 16 வயது நிரம்பியதும் மகாபாரதப் போரில் வீரதீர பராக்கிரமத்தோடு போரிட்டு, வரலாற்றில் தனி இடம் பிடிக்கும் வண்ணம் பெயர் பெற்று பின்னர் தன்னிடம் திரும்ப வேண்டும். அப்போரில் தனது உயிரை விடும் முன்னர் எதிரியின் படையில் கால் பங்கை அரை நாளிலேயே கொன்று குவிப்பான். அத்தோடு, பரத வம்சத்தின் அடுத்த வாரிசும் அபிமன்யூ மூலமாகவே உருவாக வேண்டும். அதன் படி பாரதப் போரின்போது கற்பமாக இருந்த அபிமன்யூவின் மனைவி உத்தராவின் வயிற்றில் பரிஷித்து மகாராஜா பிறக்கிறார். அப்போது போர் முடிந்த சமயம் அபிமன்யு உயிருடன் இல்லை. பின்னர் பாண்டவர்கள் ராஜ்ஜியத்தை மகாராஜா பரீக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு மேலுலகம் சென்றனர். பாண்டவர்கள் சென்ற பின்னர் நீதி நெறி தவறாது இப்புவியை பரிஷித்து மகாராஜா சீரும் சிறப்புமாக வெகு காலம் ஆட்சி புரிந்தார்.</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-45586052515501402152015-11-17T22:00:00.000+05:302015-11-17T22:00:25.070+05:30கூந்தல் கருப்பு....... ஆஹா........ குங்குமம் சிவப்பு ஓஹோ....... பாடலின் உள்ளர்த்தம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கூந்தல் கருப்பு ஆஹா<br />குங்குமம் சிவப்பு ஓஹோ<br />கொண்டவள் முகமோ ரோஜாப்பூ <br />கூந்தல் கருப்பு ஆஹா<br />குங்குமம் சிவப்பு ஓஹோ<br />கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ ...........<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpaYzeslnGpetsUz7qtNmTirY8IWjUsuzHQCdG2KqD7GRQB1VUTLZmBZbdvB5olbUFmavOV21e_kWZWN3eyhHRur2JP3aWYNjND694Hghfm4BPvB3pHhbaTNmjybvfhHFkYJDpr7MPOOk/s1600/parisu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpaYzeslnGpetsUz7qtNmTirY8IWjUsuzHQCdG2KqD7GRQB1VUTLZmBZbdvB5olbUFmavOV21e_kWZWN3eyhHRur2JP3aWYNjND694Hghfm4BPvB3pHhbaTNmjybvfhHFkYJDpr7MPOOk/s320/parisu.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<br />
பரிசு படத்தில் வரும் இப்பாடலுக்கு எம்ஜிஆரும் சாவித்திரியும் வாயசைத்திருப்பார்கள்.<br />
<br />
கூந்தல் கருப்பு என்று எம்ஜிஆர் ஆரம்பிக்கும் போதே, அடேயப்பா உலகமகா கண்டுபிடிப்புடா என்று அன்றைய இரசிகர்கள் நக்கலடித்திருக்கிறார்கள். மேலோட்டாமாகப் பார்த்தால் அதுவும் சரிதானே என்று தோன்றும். <br />
<br />யாருக்கைய்யா கூந்தல் கருப்புன்னும், குங்குமம் சிவப்புன்னும் தெரியாது? ஆனாலும் இதற்கு என்ன முக்கியத்துவம் அதை ஏன் எம்ஜிஆர் பாட வேண்டும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? விடை தெரியாவிட்டால் மேற்கொண்டு படியுங்கள்.<br />
<br />
<br />
<span class="st">இன்னொரு பாடல், படம் : <em>விவசாயி</em></span><br />
<br />
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்<br />கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்<br />பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி<br />உழைத்தால் பெறுகாதோ சாகுபடி<br />விவசாயி .... விவசாயி ....<br /><br />
சரி இந்தப் பாடலிலும் " கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்" என்ற வரியை இருமுறை அழுத்தமாக டிஎம்எஸ் பாடுவார். இதில் வரும் கருப்பு சிவப்பு எதற்கு?<br />
<br />
இன்னமும் புரியவில்லையா? ஹி ...........ஹி ...........ஹி ...........<br />
<br />
சரி அடுத்த பத்திக்கு போவோமா?<br />
<br />
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி<br />எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி<br />பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி<br />
[மீண்டும்] பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி<br />
.....................<br />
இங்கே அப்படியே பாட்டு வேகம் குறைஞ்சு நின்றே போய்விடும். அப்புறம் மெதுவாக ஆரம்பிப்பார்.<br />அது....................<br />
<br />
[இங்கே ஒரு சிறிய இடைவெளிவிட்டு பின்னர் அதே பழைய ஜோரில்!!]<br />
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி<br />பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி<br />விவசாயி .... விவசாயி ....<br />
<br />
இப்பவாச்சும் புரிஞ்சதா?!! புரிஞ்சவங்க புரிஞ்சிக்குங்க, புரியாதவங்க விட்டிடுங்க.<br />
<br />
நன்றி: திண்டுக்கல் ஐ. லியோனி. </div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-53859197383243437772015-11-13T12:23:00.004+05:302015-11-14T15:25:31.676+05:30காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட மாட்டோம்- விஷால் முடிவு சரியா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடிகர் சங்கம் போராடாது - விஷால்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGEni_do7IqBOrflRcVg6_wpXp2DckRXtCZDj3IzhJT2iSBQfymfsE78TW7q-q5ycRWFNCYr-F-BKK3SmVf23R9aqk3Cw6-NCwjoKjpxSwfW3CyIL1bTqBcJqqptrUCrFEUYtIe1nZi6U/s1600/294161-vishal-krishna700.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="182" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGEni_do7IqBOrflRcVg6_wpXp2DckRXtCZDj3IzhJT2iSBQfymfsE78TW7q-q5ycRWFNCYr-F-BKK3SmVf23R9aqk3Cw6-NCwjoKjpxSwfW3CyIL1bTqBcJqqptrUCrFEUYtIe1nZi6U/s320/294161-vishal-krishna700.jpg" width="320" /></a></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAWiH4FOe9EbXZUoRfIxFnR2T1mQgtWtK9yj48EkFF4ZJdjclVK16BCFlVm3i7FayealtGb9dPhoDgUyIsSLqqu0jXoYFX8Vpxm3B-PSrZ678oatm9YoICi6ryIl-obFOOD2509hsEek8/s1600/SATHYARAJ.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<div style="text-align: left;">
முதல் முறையாக சினிமாக் காரர் ஒருத்தர் தெளிவா பேசியிருக்கார்!! இதைப் பார்த்துவிட்டு அவரை தமிழன் மேல் அக்கறையில்லாத தெலுங்கன் என்று சிலர் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்கள் போராட்டத்தால் எதாவது பலன் இருக்கிறதா எனக் கேட்டால், "அந்த ஆட்டோ கண்ணாடிய திருப்பினா இந்த
ஆட்டோ எப்படி ஓடும்?" என்ற கதை தான். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இலங்கை பிரச்சினையை இந்திய-இலங்கை அரசுகள் ராஜீய
ரீதியாகவும், காவிரிப் பிரச்சினை தமிழக-கர்நாடக அரசுகளால்
சட்ட ரீதியாகவும் தீர்க்கப் பட வேண்டியவையாகும். பின்னர் நடிகர் சங்கம் ஏன் போராடுகிறது? "
இத்தனை பிரச்சினைகள் வெட்டு குத்துன்னு நடக்குது இவனுங்க சினிமா எடுக்கிறதிலேயே குறியா இருக்கானுங்களே, எதையாச்சும் கண்டுகிறானுங்களா?"
என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றக் கூடும், அந்த மாதிரி கொதிக்கும் மன நிலையில் மக்கள் இருந்தால் அது இவர்களது படங்களின் வசூலைப் பாதிக்கும். அதை சமாதானம் செய்யவே
நடிகர்களின் அறப் போராட்டம், அதாவது எந்த விளைவும் இல்லாத போராட்டம்!! </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAWiH4FOe9EbXZUoRfIxFnR2T1mQgtWtK9yj48EkFF4ZJdjclVK16BCFlVm3i7FayealtGb9dPhoDgUyIsSLqqu0jXoYFX8Vpxm3B-PSrZ678oatm9YoICi6ryIl-obFOOD2509hsEek8/s1600/SATHYARAJ.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAWiH4FOe9EbXZUoRfIxFnR2T1mQgtWtK9yj48EkFF4ZJdjclVK16BCFlVm3i7FayealtGb9dPhoDgUyIsSLqqu0jXoYFX8Vpxm3B-PSrZ678oatm9YoICi6ryIl-obFOOD2509hsEek8/s320/SATHYARAJ.jpg" width="320" /></a></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இவர்கள் போராட்டங்கள் எதுவும் ஆளும் கட்சிக்கு எதிராக ஒரு போதும் இருக்காது
என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது சாராயக் கடையை
எதிர்த்து இவர்கள் ஒரு போதும் போராட்டத்தில் இறங்க மாட்டார்கள். தற்போது அரசே தாமிரபரணி ஆற்று நீரை பெப்சிக்கு 100 வருடத்துக்கு அடிமாட்டு விலைக்கு கொடுத்து அங்குள்ள விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் செய்தி பற்றி இவர்களுக்கு தெரியவே தெரியாது. மாநிலம் முழுவது நடந்து வரும் ஆற்று மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை பற்றி மூச். அவ்வளவு
ஏன் முல்லை பெரியார் அணை விஷயத்தில் கூட நடிகர்கள் ஒருத்தரும் வாயையே
திறக்கவில்லை, காரணம் அவர்கள் படம் கேரளத்தில் கணிசமான தொகையை
வசூலிக்கிறது, அவர்களுக்கெதிராக எதையாது பேசினால் அது பாதிப்புக்குள்ளாகும், அதனால் ஒருத்தனும் வாயைத் திறக்கவே மாட்டான். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
சரி நடிகர்கள் போராட்டத்தால் பிரயோஜனம் தான் இல்லை, அது பிரச்சினைகளையாவது கிளப்பாமல் இருக்க வேண்டுமல்லவா? அதுவும் இல்லை. காவிரிப் பிரச்சினைக்கு இவர்கள் கூட்டம் போட்டு கன்னாபின்னாவென்று கோபத்தில் பேச அவை தொலைக் காட்சியிலும் செய்தித் தாட்களிலும் வெளிவர, அது ஒரு மானப் பிரச்சினையாகி, தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் விட்டாலும் அடுத்த தேர்தலில் ஆட்சி போய்விடும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளி விடப் பட, பிரச்சினை தீர்க்கவே முடியாது என்ற கட்டத்திற்குப் போய் விட்டது தான் இவர்கள் போராட்டத்தால் நாம் கண்ட பலன்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
எனவே இந்த மாதிரி தேவையில்லாத ஆணிகளை பிடுங்குவதை விட்டுவிட்டு நடிப்பதில் மட்டுமே இவர்கள் கவனம் செலுத்துவது இவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. அத்தகைய முடிவை விஷால் எடுத்திருக்கிறார், அதை வரவேற்போம். </div>
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: left;">
</div>
</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-27653760493408208642015-08-28T22:20:00.000+05:302015-08-28T22:25:36.121+05:30இந்த பாடல் குமாரசாமி ஐயாவுக்கு சமர்ப்பணம்..............<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN1IWxsaypauFQSQUca9Pcy_FUSBoQtH3Iqy4oP0kDeKzKnH7KtSfz4POVgPYd-Z2Ee-XM0lAIYalO7Zk7r8caRvgg5D5orVINKd2ZimpGCUWa6_6roNYftFJtB32TMTWP14CGYsCIuaA/s1600/kumarasami.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="255" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN1IWxsaypauFQSQUca9Pcy_FUSBoQtH3Iqy4oP0kDeKzKnH7KtSfz4POVgPYd-Z2Ee-XM0lAIYalO7Zk7r8caRvgg5D5orVINKd2ZimpGCUWa6_6roNYftFJtB32TMTWP14CGYsCIuaA/s320/kumarasami.png" width="320" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..........</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4F5jRTCTlogA7FVn60LPioO4K7U4W-KbrO4y-e_SPm2mt4QI6t6T9vpLK-G40h42o2Riyi7J1n1azToHP2GxVQ9tf-MZstsgZSwe0HpqZPD6PW_reHbHTlc8OxrumvjQVqQByvxsmkF8/s1600/niththi.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBTyhDgErwoD9m3S1nGzjZHra5tWgYGiLu-e1nUM5nAbTRY9I8FOV3ksJL_N3TtCYPdhQlkiLjnnjGR4RRUfh-pfwvwy8Eu18junhcB91knoPhorFxG4EbDhNIHad2Ve33Vqnr4DlWRdY/s200/jaya.png" width="172" /><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4F5jRTCTlogA7FVn60LPioO4K7U4W-KbrO4y-e_SPm2mt4QI6t6T9vpLK-G40h42o2Riyi7J1n1azToHP2GxVQ9tf-MZstsgZSwe0HpqZPD6PW_reHbHTlc8OxrumvjQVqQByvxsmkF8/s200/niththi.png" width="195" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
<div style="text-align: center;">
நான் வாழ யார் பாடுவார்...........?? <br />
<br />
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjwodn8WZGs9ebx-fq3oWY8RIgf8a4YcfqLww0D5yk5mx-yIQURY0XYx0fEUcrqrGmJGgSp7IZITgHjAtGz0G4WRGujAN7F8QbtcBhWKhwCIlI3m8FodrmX1aXcCam_si0-1VR_DAKzhU/s1600/smiley.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjwodn8WZGs9ebx-fq3oWY8RIgf8a4YcfqLww0D5yk5mx-yIQURY0XYx0fEUcrqrGmJGgSp7IZITgHjAtGz0G4WRGujAN7F8QbtcBhWKhwCIlI3m8FodrmX1aXcCam_si0-1VR_DAKzhU/s1600/smiley.jpg" /></a></div>
<br /></div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-80341837111546268962015-08-21T13:07:00.001+05:302015-08-21T13:18:12.283+05:30காபி செய்ய அனுமதிக்காத இணைய பக்கங்கள்- உடைப்பது எப்படி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சில இணைய பக்கங்களில் ஒரு சங்கதி வெகுநாட்களாகவே எரிச்சலூட்டவதாக இருந்து வந்தது. உதாரணத்துக்கு தினமலர் இணைய பக்கங்களைப் படிக்கும் போது சுவராஷ்யமான விஷயங்கள் இருந்தால் அதில் ஓரிரு வரிகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து காபி செய்ய முயன்றால் அது அனுமதிக்காது. ரைட் கிளிக், லெஃப்ட் கிளிக் என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கோ வேலைக்கே ஆகாது என்று சொல்லும்.<br />
<br />
நேற்று எதுயெதுக்கோ தீர்வு தரும் கூகுளாண்டவர் இதுக்கு ஒரு வழி சொல்ல மாட்டாரா என்று முயன்றேன், தேடலுக்குப் பின்னர் தெரிந்தது...... ஆம்....... "தீர்வு இருக்கிறது"!!<br />
<br />
பொதுவாக தற்போதுள்ள இணைய உலவிகள் [Web Browsers] அனைத்தும் ஜாவா ஸ்க்ரிப்ட் என்னும் செயலிகளை அவற்றினுள்ளேயே இருந்து செயல்பட அனுமதிக்கின்றன. அதிலுள்ள கோட்கள் மூலம் இணைய உளவிகள் பல்வேறு செயல்களை மேற்கொள்கின்றன. இந்த ரைட் கிளிக், லெஃப்ட் கிளிக் செய்தால் செலக்சன்/காபி செய்யாதே என்ற கட்டளையை மேற்கொள்வதும் இதே ஜாவா ஸ்கிரிப்டுகள் தான்.<br />
<br />
எனவே காபி செய்வது தடுக்கப் பட்டுள்ள ஒரு இணைய பக்கத்தில் உள்ள வாக்கியங்களையோ, படங்களையோ காபி செய்ய வேண்டுமானால் முதலில் இந்த ஜாவா ஸ்கிரிப்டு பயலை "செத்த சும்மா இருடா......" என்று ஓரங்கட்ட வேண்டும். காபி செய்து முடிந்த பின்னர் மீண்டும் அவனை செயல் பட அனுமதிக்க வேண்டும், இல்லா விட்டால் இணைய பக்கத்தில் நடக்க வேண்டிய மற்ற மாமூல் செயல்பாடுகள் பாதிக்கப் பட்டுவிடும். இதற்கான வழி முறைகள் ஒவ்வொரு பிரவுசருக்கும் மாறுபடும். இதை எளிய முறையில் விளக்கமாக கீழுள்ள இணைய பக்கத்தில் கொடுத்துள்ளார்கள். படித்து உங்கள் உலவிக்கு எது தேவையோ அந்த முறையை செயல் படுத்திக் கொள்ளலாம்.<br />
<br />
<a href="http://www.gohacking.com/bypass-right-click-block-on-any-website/" target="_blank">How to Bypass Right Click Block on Any Website</a><br />
<br />
இதில் ஒவ்வொரு முறையும் ஜாவா செயலிகளை நிறுத்துவதும், பின்னர் செயல்படுத்துவதும் அசவுகரியமாக இருக்கலாம். இதைவிட எளிதான வழி உள்ளதா என்றால், இருக்கிறது ஆனால் அது Firefox Browser க்கு மட்டும் உள்ளது.<br />
<span style="font-size: small;"><span itemprop="name"> </span></span><br />
<span style="font-size: small;"><span itemprop="name">"RightToClick" என்ற ADD-ON ஐ </span></span><span style="font-size: small;"><span itemprop="name"> Firefox Browse-ல் நிறுவ வேண்டும். எப்படி? அதற்கு Firefox பிரவுசரைத் திறந்து இந்த <a href="https://addons.mozilla.org/en-us/firefox/addon/righttoclick/" target="_blank">இணைய பக்கதிற்குச் </a>சென்று Add to Firefox ஐச் சொடுக்கவும்.</span></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyLh95jTQsdxfnB69_a0TnrK6G2y5dBVa2Fqycwd666yC1KsLcCMgj5SCQJm598Ng10CYVnpwaRxnYuWRKRUZrBwSHX0idVFHg3WScIe-wK-vs4JVchIEQXGz_DImnq-zo6vcgi8oXWmU/s1600/add+on.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="220" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyLh95jTQsdxfnB69_a0TnrK6G2y5dBVa2Fqycwd666yC1KsLcCMgj5SCQJm598Ng10CYVnpwaRxnYuWRKRUZrBwSHX0idVFHg3WScIe-wK-vs4JVchIEQXGz_DImnq-zo6vcgi8oXWmU/s640/add+on.png" width="640" /></a></div>
<br />
சில நொடிகளில் உங்கள் பிரவுசர் தரவிறக்கம் செய்து, <span style="font-size: small;"><span itemprop="name">"RightToClick" -ஐ </span></span>நிறுவலாமா என்று அனுமதி கேட்கும், ஆமாம் என்று சொல்லுங்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcyNKTozEJRew2RmD5Uc6X5BjvyV9xPoI84K_1m5C97LCpC7iFQf0ttqKr_3zYluVpd3WbZFw_QqfE_CS6W5Y28USRFTMlDrN_UY6Tcoj8IAno3r7j8dAkMlqtYQtaFkzi9mWa9ukLy_0/s1600/add+on+2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="271" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcyNKTozEJRew2RmD5Uc6X5BjvyV9xPoI84K_1m5C97LCpC7iFQf0ttqKr_3zYluVpd3WbZFw_QqfE_CS6W5Y28USRFTMlDrN_UY6Tcoj8IAno3r7j8dAkMlqtYQtaFkzi9mWa9ukLy_0/s320/add+on+2.png" width="320" /></a></div>
<br />
நிறுவியதும் உங்கள் உலவியை மூடி பின்னர் மீண்டும் திறக்க வேண்டும். உலவியில் மேலே வலது மூலையில் ஒரு அம்புக் குறி தென்படும். காபி செய்ய அனுமதியில்லாத இணைய பக்கத்தை திறந்து, இந்த அம்புக் குறியின் மேல் சொடுக்கினால் போதும், வழக்கம் போல செலக்ட், காபி, வேண்டிய இடத்தில் பேஸ்ட் அனைத்தும் செய்யலாம். இம்முறையில் படங்கள், வார்த்தைகள் [Text] அனைத்தும் காபி செய்ய முடியும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA5ptRkMpSox_MTYkEkX0vIz9V3zV5MaJAqe3RjEH0JL7lWqbRl1oVE0SQ0YfsexotEb5E2RJa8g0IuYnSZlBkyRes14MqrFCFa3_3nQDHUoMc95SJ79QFKEB0js3Y37Wy6kviQaWTfgk/s1600/add+on+3.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="205" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA5ptRkMpSox_MTYkEkX0vIz9V3zV5MaJAqe3RjEH0JL7lWqbRl1oVE0SQ0YfsexotEb5E2RJa8g0IuYnSZlBkyRes14MqrFCFa3_3nQDHUoMc95SJ79QFKEB0js3Y37Wy6kviQaWTfgk/s320/add+on+3.png" width="320" /></a></div>
<br />
இதை தங்களது சொந்த பயன்பாட்டுக்கு மட்டும் உபயோக்கிக்கவும், வேறோரோவர் படைப்பை மொத்தத்தையும் அனுமதியின்றி காபி செய்து தங்களது இணைய பக்கத்தில் போடுபவர்கள் தயவுசெய்து தவிர்க்கவும். நன்றி.............!! </div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-14433201488895226302015-07-03T14:04:00.000+05:302015-07-03T14:04:12.057+05:30பாபநாசம்-பெரிய லாஜிக் ஓட்டை..........<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
த்ரிஷ்யம் மோகன்லால், மீனா நடித்து சக்கை போடு போட்ட மலையாளப் படம். தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ன்னு ரீமேக் ஆகியிருக்கு, இப்போ தமிழில் பாபநாசம்.<br />
<br />
ஒரிஜினல் படத்தில் மோகன்லால், படத்தோட கேரக்டருக்கு மிகவும் பொருந்தியிருந்தார், கூடவே ஜோடி மீனா பிரமாதமான நடிப்பு. தற்போதைய தமிழ் படத்தின் டீசர் பார்க்க நேர்ந்தது. அதைப் பார்த்தால், மலையாளப் படத்தின் ஜெராக்சை எடுத்து கேரக்டர்களின் தலையை வெட்டிப் போட்டு விட்டு தமிழ் காரர்களின் தலையை ஒட்டிய மாதிரி இருக்கிறது. இதுக்கு பேசாமல் படத்தை டப்பிங் செய்தே போட்டிருக்கலாம். இதெல்லாம் பார்க்கும் போது படத்தை மலையாளத்தில் முன்னரே பார்த்திருந்தால் தமிழில் பார்க்கவே தேவையில்லை, ஒரு சுவராஸ்யமும் இருக்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjejfzsnVS3GjLfROUQwDCwZksquaZftmqpEoloTGSeTtzSFQrNjIDAF7In0PqZDCADHbVZXbNPRH6k3Ed0DWPviLKAcbbfqbiO4efXFR9H3r6XbXjk3K1ApJ61k_xk5s8qqsahOPQw8zk/s1600/pooja.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="201" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjejfzsnVS3GjLfROUQwDCwZksquaZftmqpEoloTGSeTtzSFQrNjIDAF7In0PqZDCADHbVZXbNPRH6k3Ed0DWPviLKAcbbfqbiO4efXFR9H3r6XbXjk3K1ApJ61k_xk5s8qqsahOPQw8zk/s640/pooja.png" width="640" /></a></div>
<br />
<br />
போன மூன்று படங்களாக எதுக்குன்னே தெரியாம பூஜா குமாரையும், ஆன்ட்ரியாவையும் கூடவே இழுத்துக்கொண்டு திரிஞ்ச மனுஷன் இந்த படத்தில் இன்னொரு குளறுபடியும் பண்ணியிருக்காரு. மீனாவுக்குப் பதில் தன்னுடன் வசித்து வரும் கௌதமியைப் போட்டிருக்காரு. படம் மற்ற அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றுவிட்டதால், எந்த கழுதையைப் போட்டாலும் ஓடிடும் என்ற எண்ணம் ஒரு மனுஷனுக்கு வருவது நியாயம் தான் என்றாலும் மீனா அளவுக்கு இவர் ஜொலிப்பாரா என்பது சந்தேகமே.<br />
<br />
படத்தின் கதையில் பெரிய லாஜிக் விரிசல் என்று ஒரு விஷயம் எனக்குப் பட்டது. ஒரு குற்றம் நடந்து விட்டால், காவல் துறை மயிலே மயிலே இறகு போடு என்ற முறையில் அணுகாது, சந்தேகப் படும்படி எவனும் கிடைக்கவில்லையென்றாலும் அப்பாவி, இளிச்சவாயன் எவனையாவது ஜீப்பில் அள்ளிப் போட்டு ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து நோண்டி நொங்கெடுடுத்துவிடுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகன் தான் தன்னுடைய மகனுடைய சாவுக்குக் காரணம் என்று வழுவாக சந்தேகிக்கும் உயர்நிலை அதிகாரி வெறும் கேள்வி பதில் லெவலிலேயே வீட்டிற்கு திருப்பி அனுப்புவதாக காட்டுவது நடைமுறைக்கு ஒவ்வாத லாஜிக் மீறல் என்பது நமது கருத்து. கொடுமைப் படுத்துவது பின்னால் வருகிறது என்பது வேறு விஷயம்!!<br />
<br />
படம் பார்க்கலாமா? மலையாளத்தில் பார்க்கவில்லை என்றால் பார்க்கலாம், அப்புறம் உங்க இஷ்டம்!!<br />
<br />
<br /></div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-50980320279763215022015-07-01T23:12:00.001+05:302015-07-01T23:30:12.595+05:30ஹெல்மெட்: வாழ்க்கை ஒரு வட்டம்............!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<div>
<div>
<div>
<div>
</div>
<div>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxqIByzPmfFudkCgA35WPhtrOtYB423NB_CEBP-6tA6g0gbq7-yBP3jKIWaQhwCJY8QneimfAyhPFX0x0PZ2IGcydiaJVzLU8Cj7cWva08mwk6k_rnbo0_9DV_SpOeeP1HtDK6FVw4F3c/s1600/helmet.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="154" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxqIByzPmfFudkCgA35WPhtrOtYB423NB_CEBP-6tA6g0gbq7-yBP3jKIWaQhwCJY8QneimfAyhPFX0x0PZ2IGcydiaJVzLU8Cj7cWva08mwk6k_rnbo0_9DV_SpOeeP1HtDK6FVw4F3c/s320/helmet.png" width="320" /></a></div>
<div>
</div>
<div>
</div>
<div>
</div>
<div>
<br /></div>
ஹெல்மெட் பிசினஸ் டல்லடிக்குது, விற்பனை அவ்வளவா இல்லை. என்ன செய்யலாம்னு
ஹெல்மெட் கம்பனிக்காரன் யோசிக்கிறான். அவனுக்கு ஒரு ஐடியா வருது. நேரா
போய் கவனிக்க வேண்டியவங்களை கவனிக்கிறான், ஹெல்மெட் சேல்ஸ் ஆவதற்கு கொஞ்சம்
உதவும் படி கேட்டுக் கொள்கிறான்.<br />
<br />
கள்ளச்
சாராயம் குடிச்சா செத்துப் போறாங்களே, அதனால சாகா வரம் தரக்கூடிய டாஸ்மாக்
சாராயத்தை குடிக்க வச்ச மக்கள் நலனுக்காகவே செயல்படும் அரசு, வண்டி
ஒட்டிகிட்டு போய் சாவட்டும்னு விட்டுடுவாங்களா என்ன? <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtL9t5DLNMstr-iCFQWvtR4O1Y7ddm6isJhdKXdIv0I6HWZ1zBdsZ8kXrQ3IRpeP_JgbEI7NXLKeM64UJYqF8Re9ncHEX5FokkRPnb9DQRCetjXC55zMIFIcvOI_xqmC967Y2ejQkuanc/s1600/TASMAC.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="234" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtL9t5DLNMstr-iCFQWvtR4O1Y7ddm6isJhdKXdIv0I6HWZ1zBdsZ8kXrQ3IRpeP_JgbEI7NXLKeM64UJYqF8Re9ncHEX5FokkRPnb9DQRCetjXC55zMIFIcvOI_xqmC967Y2ejQkuanc/s320/TASMAC.jpg" width="320" /></a></div>
<br />
டூ வீலர் ஓட்டுறவனும், பின்னாடி உட்கார்ந்துகிட்டு போறவனும், பெண்களோ 7 கிளாஸ் மேல்
படிப்பவனாகவோ இருந்தாலும் ஆளுக்கொரு ஹெல்மெட் போடணும்னு சட்டம் போடுது.<br />
<br /></div>
சென்னையில
30 லட்சம் ரெண்டு சக்கர வாகனம் ஓடுதாம். [சத்தியமா சைக்கிளைஎல்லாம்
சேர்க்கலீங்க!!]. 60 லட்சம் ஹெல்மெட் வித்து தீர்க்கும். 500 ரூபாய்
வித்த ஹெல்மெட் 1500 ரூபாய் ஆக்கினாலும், நைட்டு பன்னிரண்டு மணி வரைக்கும்
ஹெல்மெட் கடையில கூட்டம் அலை மோதுது, கடைக்காரன் பணத்தை அள்ளுறான். ஏன்னா போடாட்டி அடுத்த நாள் பைக் வண்டியில ஆபீஸ் கூட போக முடியாதே!!<br />
<br /></div>
இப்போதைக்கு
அஞ்சு லட்சம் ஹெல்மெட் வித்திருக்காம், இன்னும் இருக்கிற பயலுக எப்ப
வாங்குவானுங்களோ தெரியல. இப்போதைக்கு போடாதவங்களை முட்டு சந்துக்கு முட்டு சந்து நின்னுகிட்டு விரட்டி விரட்டி பிடிப்பாங்க. ஒருவழியா இன்னும் ரெண்டு மாசத்துல எல்லா
பயலுங்களும் ஒன்னுக்கு ரெண்டா ஹெல்மெட் வாங்கிருவானுங்க. அப்புறம் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆனா கணக்கா கதை ஆகும், கேள்வி கேட்க நாதியிருக்காது. <br />
<br />
<br />
ஹெல்மெட்
கம்பனிக்காரன், கடைக்காரன் ஓரளவுக்கு பணத்தை தேத்தியிருப்பான். சரி
போதும்னு சிக்னல் குடுப்பான். சனங்க ஹெல்மெட்டால ரொம்ப சிரமப்
படுறாங்கன்னு மக்கள் நலனுக்கே போராடும் அரசாங்கத்துக்கு திரும்பவும் தோணும். சரி, சரி,
இனிமே போடத் தெவையில்லைம்பாங்க.<br />
<br />
</div>
அப்போ ஒன்னுக்கு ரெண்டா வாங்கின ஹெல்மெட்டு? அதை வீட்டுக்கு வெளியே கட்டி தொங்க விடுங்க, காக்க முட்டை போடும்!!
அப்படியே மழையில நனைஞ்சு, வெயிலில காய்ஞ்சு அது மக்கி துருப்பிடிச்சு
ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாம போகும். அப்படியே ரெண்டு வருஷம் போனதுக்கு
பின்னாடி................<br />
<br /></div>
ஹெல்மெட் சேல்ஸ் படுத்திருக்கும், ஹெல்மெட் கம்பனி காரன் கவனிக்க வேண்டியவங்களை கவனிப்பான்............. அப்புறம் .............?? அப்படியே பதிவோட முதல் வரிக்கு போங்க...........!!</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-26016989664881626342015-06-06T12:05:00.000+05:302015-06-06T12:05:26.491+05:30இரண்டு கொள்ளையர்கள், ஒரு அப்பாவி கதை.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு சலவைத் தொழிலாளி விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன்
மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில்
மாட்டிவிட்டான். <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfCxbnQ39M_W33bpQs6Epn5crJS91ZRsOt9WMKRE79EBbDau8wctVF0jkJDr59grH-wlX145uYvV5kEfTly5gytc-sWY_ZXdF9xy_O-M3Ft6U_8ZQlBrrB7hsvoQoPCBl27dzTAQ_9sEU/s1600/miniature-donkey-21.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="292" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfCxbnQ39M_W33bpQs6Epn5crJS91ZRsOt9WMKRE79EBbDau8wctVF0jkJDr59grH-wlX145uYvV5kEfTly5gytc-sWY_ZXdF9xy_O-M3Ft6U_8ZQlBrrB7hsvoQoPCBl27dzTAQ_9sEU/s320/miniature-donkey-21.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<br />
<br />
அதை கண்கானித்துக் கொண்டிருந்த தக்ஷிணாமூர்த்தி என்ற ஒரு வைர வியாபாரி அவனிடம்
சென்று<br />
<br />
<br />
“இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன்,
எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.<br />
<br />
உடனே சலவைத் தொழிலாளி “ அப்படியானால் ஒரு
ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.<br />
<br />
அதற்க்கு தக்ஷிணாமூர்த்தி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் “ஒரு ரூபாய் அதிகம்! நா<span class="text_exposed_show">ன் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம்</span><span class="text_exposed_show"><span class="text_exposed_show"></span>” என்றான்.</span><br />
<br />
சலவைத் தொழிலாளி “ அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.<br />
<br /> தக்ஷிணாமூர்த்தி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.<br />
<br />
அதற்குள் அங்கு வந்த இன்னொரு பெண் வைர வியாபாரி கோமளவல்லி அந்த சலவைத் தொழிலாளியிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டாள் .<br />
<br />
இதை சற்றும் எதிர்பாராத தக்ஷிணாமூர்த்தி அதிர்ச்சியுடன் “ அட
அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு
கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய்” என்றான்.<br />
<br />
அதைகேட்ட சலவைத் தொழிலாளி பலத்த சிரிப்புடன் “ யார்
முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு
விற்றுவிட்டேன் , மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த
மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50
பைசாவிற்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்” என்றவாறே தனது கழுதையை அழைத்துக் கொண்டு நடக்கலானான்.<br />
<br />
பின்குறிப்பு: இது அரசியல் பதிவு அல்ல. </div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-84886400615997033182015-05-22T18:13:00.000+05:302015-05-22T18:21:56.959+05:30கழகங்களின் பரிணாமம்..............<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<div>
<div>
<div>
<div>
பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரில் தனது இயக்கத்தை உருவாக்கினார், அவருக்கு பதவி ஆசை இல்லை, ஆனாலும் மக்களிடத்தில் ஊடுருவி இருந்த மூடநம்பிக்கைகளை அகற்ற வேண்டும், குறிப்பிட்ட சாதியினரின் பித்தலாட்டத்தை வேரறுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.<br />
<br />
அவரின் கீழ் இருந்த அண்ணாதுரைக்கு கொஞ்ச நாள் சென்ற பின்னர் பதவி ஆசை வந்தது. பெரியாரை கொள்கை அளவில் எதிர்க்காமல் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை காரணம் காட்டி தி.மு.கவை ஆரம்பித்தார். <br />
<br /></div>
<div>
அண்ணாதுரை
காலத்தில் கட்சியில் உள்ள உப தலைவர்கள் ஊக்குவிக்கப் பட்டனர், பூரண
சுதந்திரம் இருந்தது. எனவேதான், கருணாநிதி, எம்ஜிஆர் போன்றோர் உருவாயினர்.</div>
அதன்
பின்னர் கருணாநிதி, தனக்கு நிகராக [ஏன் மேலாக என்று கூடச் சொல்லலாம்]
இருந்த தலைவர்களை , குழியில் தள்ளிவிட்டு திமுக வை தனதாக்கிக் கொண்டார்.
பின்னர் அதை தன்னுடைய குடும்பச் சொத்தாக்கியும் விட்டார்.<br />
<br />
இருந்த போதிலும்
அவருடைய அமைச்சரவையில் இருந்தவர்கள் திறமைசாலிகளாகவே இருந்தனர்.
துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் போன்றோர் கட்சித் தலைமையை எதிர்த்து
கேள்வியெழுப்பும் அளவுக்கு சுதந்திரம் இருந்தது. <br />
<br />
பல முறை ஆட்சியை இழந்த
போதிலும் பழையவர்களே அமைச்சர்கள் ஆனார்கள். குண்டக்க மண்டக்க என்று
தூக்கியடிப்பது குறைவாகவே இருந்தது.<br />
<br /></div>
அதே போலவே, எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம் பெற்றோரும் பண்ரூட்டி, நெடுஞ்செழியன், ஆர் எம் வீரப்பன் என ஜாம்பவான்களாகவே இருந்தனர். </div>
கருணாநிதி,
எம்ஜிஆர் இருவருக்கும் இருந்த ஒற்றுமை இவர்கள் கட்சிக்கு விழுந்த
ஓட்டுக்கள் அத்தனையும் இவர்கள் இருவருக்காக மட்டுமே விழுந்தவை.<br />
<br /></div>
இவர்களிடத்தில்
இருந்த இன்னொரு ஒற்றுமை, இவர்களுக்குப் பின்னர் யார் கட்சியை
நடத்துவதற்காக ஒரு வழுவான தலைமையை உருவாக்காமல் போனதுதான்.<br />
<br />
<br />
உதாரணத்துக்கு அண்ணாதுரை காலத்தில் இருந்து கருணாநிதி, எம்ஜிஆர் என அனைவரது
மந்திரி சபைகளிலும் நம்பர் இரண்டு இடத்தில் இருந்த நெடுஞ்செழியன்,
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் சென்னையில் வேளச்சேரியில் தனித்து நின்று
அவருடன் போட்டியிட்ட எஸ்.வி. சேகரை விட குறைந்த வாக்குகள் பெற்று
டெபாசிட்டையும் இழந்திருந்தார். </div>
<div>
<br />
<br />
என்னதான் இருந்தாலும்,
கருணாநிதி,
எம்ஜிஆர் இருவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களும் சாமர்த்தியசாலிகள், திறம்பட
செயல்படுபவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.<br />
<br /></div>
<div>
இருவருமே தங்களது அமைச்சர்களை யாரையும் நாயைப் போலவோ, தலையில் உள்ள கேசத்திற்கு இணையாகவோ நினைக்காமல் மனிதர்களாகவே மதித்தார்கள்,அமைச்சர்கள் வெறும் தஞ்சாவூர் பொம்மைகளாக இருக்கவில்லை, கருத்து சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தார்கள்,
காலில் விழுந்தால் தான் வாழமுடியும் என்ற நிலை அப்போது இல்லை, இப்போதும்
திமுகாவில் இல்லை.<br />
<br />
மொத்தத்தில் தாங்கள் தனித்து பெரிய தலைவர்கள் ஆக
முடியாவிட்டாலும் தன்மானத்துடன் அவர்களால் அமைச்சர்களாக இருக்க முடிந்தது. ம்ம்............ அது ஒரு கனாக்காலம்.</div>
</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-35856863006526301472015-04-11T20:58:00.000+05:302015-04-11T20:58:22.167+05:30உண்ட கட்டி வாங்கி தின்ன- வேணும் ஆதார்கார்ட்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நல்லாக் கேட்டுக்குங்க,<br />
<br />
முதல்ல ஆதார் கார்டையும் வோட்டர் ஐடி கார்டையும் தாசில்தார் ஆஃபிஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!<br />
<br />
அப்புறம்?<br />
<br />
ஒட்டர் ஐடி கார்டையும் ரேஷன் கார்டையும் சிவில் சப்ளை ஆஃபீசுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!<br />
<br />
சரி, அப்புறம்?<br />
<br />
ரேஷன் கார்டையும் பான் கார்டையும் இன்கம் டாக்ஸ் ஆஃபீஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!<br />
<br />
ஓ அப்புறம்?<br />
<br />
ஆதார் கார்டையும் பாஸ்புக்கையும் பேங்குல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!<br />
அதுவும் சரிதான், அப்புறம்?<br />
<br />
பாங்க் பாஸ்புக்கையும் கேஸ் புக்கையும் கேஸ் ஆஃபீஸுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!<br />
ம்ம்ம்ம்ம்ம், அப்ப்ப்புறம்?<br />
<br />
மேப் இன் கார்டையும் பான் கார்டையும் ஆதார் கார்டையும் ஸ்டாக் புரோக்கர்ட்ட குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!<br />
<br />
ஓஓஓஓஓ அப்புறம்?<br />
<br />
மேப் இன் கார்டு, பான் கார்டு, கிரிடிட் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன்
கார்டு, வோட்டர் ஐடி கார்டு, பேங்க் பாஸ் புக்கு, கேஸ் புக்கு
எல்லாத்தையும் பாஸ்ப்போர்ட் ஆஃபீஸுக்கு எடுத்துட்டு போயி லிங்க்
பண்ணிக்குங்க!<br />
<br />
ஐயையோ அப்புறம்?<br />
<br />
இதெல்லாம் லிங்க்
பண்ணியாச்சுண்ணு கலெக்டர்கிட்ட லெட்டர் வாங்கிட்டு வந்து மாநகராட்சி
ஆஃபீஸுல குடுத்தா அவங்க ஒரு கார்டு இஷ்யு பண்ணுவாங்க!<br />
<br />
ஐயையோ இன்னொரு கார்டா, அப்புறம்?<br />
<br />
அந்த கார்டை எடுத்துகிட்டு பத்துக் கிலோமீட்டர் தள்ளி இருக்கிற பாடிகார்ட்
முனீஸ்வரன் கோவில்ல டெய்லி காமிச்சியினாக்க ஒரு உண்ட கட்டி தருவானுங்க,
அதை வாங்கி உங்க குடும்பம் முழுவதும் பங்கு போட்டு சாப்பிட்டுட்டு சந்தோஷமா
வாழ்க்கையை அனுபவி!,<br />
<br />
<br />
ஹோ........... ஆஹாஹாஹாஹாஹா!<br />
<br />
<br /></div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-58579855199221096262015-04-01T09:34:00.001+05:302015-04-01T09:34:45.413+05:30காப்பியை "பிளான்" பண்ணி செஞ்சிருங்கிங்களேடா - (லொசக் -மொசக்-பஜக்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dwRSu5v12NPfgfnbRyx9MfFcHNFlX-kuMTicOdRjeCUIzeJlLnKWqG0mOmCUsPH6qiqX_5BlnyThjLTL3QV2w' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
<br /></div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-27078030650857158982015-02-14T15:16:00.000+05:302015-02-15T10:31:02.459+05:301992 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து செய்த மொள்ளமாறித் தனம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னர் பல உலகக் கோப்பை போட்டிகள் நடந்திருந்தாலும், இன்று நாம் பார்க்கப் போவது 1992 போட்டிகளைப் பற்றித்தான். ஏன்? காரணம் அந்த போட்டிகளை தற்போது போலவே நியூசிலாந்தும்-ஆஸ்திரேலியாவும் இணைந்து நடத்தின என்பதேயாகும்.<br />
<br />
போட்டி துவங்கும் முன்னர் கோப்பையை யார் வெல்லுவார்கள் என்று பலரும் ஆருடம் சொன்னார்கள். நம் கவாஸ்கர், "பாகிஸ்தான் கோப்பையை வெல்லும்" என்று எதையோ வைத்து சொல்லிவிட்டார். ஆனால் ஆரம்ப ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி ஆடிய விதம் நம்பிக்கையூட்டும் விதமாக இல்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2HzpML8Bf-5ZbSYtlklbnUQML_7X5cub3CO0sNG9L6QNNLrpmdIESzaP4zavFiC6UZtCtXKZuQdm3rP1LeIs4V5vTgzfsRrsIaRPAEEu0pRGPv4TyRysKNdCbjWEnjreFlAxZAHyyBRM/s1600/round+robin+1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2HzpML8Bf-5ZbSYtlklbnUQML_7X5cub3CO0sNG9L6QNNLrpmdIESzaP4zavFiC6UZtCtXKZuQdm3rP1LeIs4V5vTgzfsRrsIaRPAEEu0pRGPv4TyRysKNdCbjWEnjreFlAxZAHyyBRM/s1600/round+robin+1.png" height="267" width="400" /></a></div>
முதல் ஐந்து மேட்சுகள் நடந்த பின்னரும் ஒரே ஒரு மேட்சில் மட்டுமே பாகிஸ்தான் வென்றிருந்தது, அதன் மூலம் கிடைத்த 2 பாயிண்டுகள் மற்றும் மழை வந்ததால் இங்கிலாந்துடன் தோற்கவிருந்த ஒரு மேட்சில், பாடாவதி கிரிக்கெட் விதிகள் மூலம் கிடைத்த ஒரு பாயிண்டுடனும் சேர்த்து வெறும் மூன்று பாயிண்டுகளுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. "தப்பா ஆருடம் சொல்லிட்டோமோ?" என்ற உறுத்தல் கவாஸ்கருக்கே உள்ளுக்குள் அவ்வப் போது எட்டிப் பார்த்திருக்கலாம்!! ஆனாலும் தன்னுடைய ஆருடம் குறித்து அவர் வேறு எதுவும் சொல்லவில்லை.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUKjdjMqPzpHHxMQ2J8xBpNNCenwyCaNqeeb5E4hgu5mfn_IMKTHCKazM1ktdi7IrFds55c9VDMQfz8NMuO49srW9zea23KOR3uDtLHq0ZWEQHqmlPRZs1W7ZVBG42MqbR8W2AfNAifCk/s1600/rain+pakistan.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUKjdjMqPzpHHxMQ2J8xBpNNCenwyCaNqeeb5E4hgu5mfn_IMKTHCKazM1ktdi7IrFds55c9VDMQfz8NMuO49srW9zea23KOR3uDtLHq0ZWEQHqmlPRZs1W7ZVBG42MqbR8W2AfNAifCk/s1600/rain+pakistan.png" height="81" width="640" /></a></div>
<br />
லீக்கில் கடைசி ஆட்டம் நியூசிலாந்துடன் பாகிஸ்தான் மோத வேண்டும். அதுவரை நியூசிலாந்து ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் என பெரிய பெரிய ஜாம்பவான்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தது. நியூசிலாந்து சொந்த மண்ணில் விளையாடியதே இதற்குக் கரணம். முதலைக்கு நீரிலும், யானைக்கு நிலத்திலும் பலம் அல்லவா!! பாகிஸ்தானுடனான எட்டாவது ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் அடுத்து நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்குச் சென்று சிட்னி மைதானத்தில் நியூசிலாந்து விளையாட வேண்டும். அதைத் தவிர்க்க ஒரு குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தது. அது, பாகிஸ்தானுடன் எட்டாவது லீக் ஆட்டத்தில் தோற்பது!! இதை நியூசிலாந்து செய்யும் என்பதை கிரிக்கெட் நோக்கர்கள் யூகித்தே இருந்தனர். அந்த ஆட்டத்தில் தோற்கும்படி ஆடி மேட்சை கோட்டை விடுவீர்களா என்று நியூசிலாந்து கேப்டனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது, அவ்வாறு செய்ய மாட்டோம் என்றே அவர் சொல்லி வைத்தார். ஆனால் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. மகா மட்டமான ஸ்கோருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJL85DjSSdAzU1c4LUxSTY3OSZRWk5WzJZ9vTd_mSVj6VqxjVUGQK3sckyWCpTaPTRXs3-s336fUMwylQH3Tse7G3-QwupoeBREb2lyblAGzi-QUtj7zxwWrHEsb7nni6q2Px4NM2sVFU/s1600/newzealand+loss.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJL85DjSSdAzU1c4LUxSTY3OSZRWk5WzJZ9vTd_mSVj6VqxjVUGQK3sckyWCpTaPTRXs3-s336fUMwylQH3Tse7G3-QwupoeBREb2lyblAGzi-QUtj7zxwWrHEsb7nni6q2Px4NM2sVFU/s1600/newzealand+loss.png" height="96" width="640" /></a></div>
<br />
பாகிஸ்தான் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது. இந்த மேட்சை வென்றதன் மூலம் அதன் பாயிண்டுகள் 7-லில் இருந்து 9 ஆக உயர்ந்ததால், நான்காம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குத் அது தகுதி பெற்றது. ஒரு வேளை நியூசிலாந்து இந்த மேட்சில் வெற்றி பெற்றிருந்தால் மேற்கிந்தியத் தீவுகள் அணியோ, இங்கிலாந்து அணியோ அரையிறுதிக்கு வந்திருக்கக் கூடும்!! பாகிஸ்தான் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு நாடு திரும்பியிருக்கும்!! <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwb-0fW_Xq06wu3Y8mTucTR7ScRXCqz7i6-QYWATbqQDtLiMWtOUG5rDqwIvfzek3-2C2gVUXyaehHtHR3_A6oFqmAYfsVNpfsFO2Zfdonpuur3HVlNQNleS3JDyEhmvl6lT_izfwAhZg/s1600/round+robin.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwb-0fW_Xq06wu3Y8mTucTR7ScRXCqz7i6-QYWATbqQDtLiMWtOUG5rDqwIvfzek3-2C2gVUXyaehHtHR3_A6oFqmAYfsVNpfsFO2Zfdonpuur3HVlNQNleS3JDyEhmvl6lT_izfwAhZg/s1600/round+robin.png" height="300" width="400" /></a></div>
<br />
நியூசிலாந்து நினைத்த படியே அரையிறுதி ஆட்டத்தை சொந்த மண்ணிலேயே பாகிஸ்தானுடன் ஆட வாய்ப்பு கிட்டியது. மூன்று நாட்களுக்கு முன்னர் இதே பாகிஸ்தானுடன் நடந்த ஆட்டத்தில் 166 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட் ஆயிருந்த போதும், இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற 263 ரன்கள் இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. இம்முறை பாகிஸ்தான் வீரர்கள் மிக நன்றாக ஆடி சவாலில் ஜெயித்து இறுதியாட்டத்துக்குச் சென்றனர், கேப்டன் உட்பட நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் தேம்பித் தேம்பி அழுத வண்ணம் ஆடுகளத்தை விட்டு வெளியேறினர். அவர்களது கோணல் புத்தி அங்கே தோற்றது!!<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEija9PFnaRS2BArHBVziIlmhcAO-4kIKsNPWPwFqzYXzOjKkFEOmyJQZ0-G7TDoVga-BPtYoEFr5L85cE8otWIOTPpL3DJAbFQscX84u2FbbEv9jtuNJH0_W8Ot6Uh7hydyGA_v_RM5pqY/s1600/semi+final+final.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEija9PFnaRS2BArHBVziIlmhcAO-4kIKsNPWPwFqzYXzOjKkFEOmyJQZ0-G7TDoVga-BPtYoEFr5L85cE8otWIOTPpL3DJAbFQscX84u2FbbEv9jtuNJH0_W8Ot6Uh7hydyGA_v_RM5pqY/s1600/semi+final+final.png" height="446" width="640" /></a></div>
<br />
இன்னொரு அரையிறுதியில் இங்கிலாந்துடன் தென்னாப்பிரிக்கா அணி மோதியது. இனவெறிக் கொள்கையால், உலகக் கோப்பையில் இருந்து விலக்கப் பட்டிருந்த அந்த அணிக்கு இது முதல் பெரிய போட்டியாக இருந்தது. ஆனாலும், அவர்கள் ஆட்டம் மற்ற அணிகளுக்குச் சவாலாகவே இருந்தது, நன்றாக ஆடி அரையிறுதி வரை வந்திருந்தனர். மழையின் காரணமாக அரையிறுதி ஆட்டம் 50 லிருந்து 45 ஓவர்களாகக் குறைக்கப் பட்டது. இந்த உலகக் கோப்பையின் போது முன்னரே நாம் சொன்ன சில பாடாவதி விதிகளை கண்டுபிடித்து அமல் படுத்தியிருந்தனர். ஏன் இவை பாடாவதி என்றால், இவ்விதிகளை மடையன் கூட இவற்றுக்கு ஒப்புக் கொள்ள மாட்டான் என்பதற்கு இந்த போட்டியே சாட்சி. ஆட்டம் நடக்கும் போதே எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை மாற்றிக் கொண்டே இருக்கலாம் என்பதை கழுதை கூட ஒப்புக் கொள்ளாது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 252 ரன்களைக் குவித்திருந்தது. தென்னாப்பிரிக்கா 253 ரன்கள் பெற்றால் வெற்றி!! ஆனால் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடும் போது மழை காரணமாக 45 ஓவர்கள் 43 ஆகக் குறைக்கப் பட்டது, ஆனாலும் இலக்கு அதே 253 ரன்கள் தான் என்ற அறிவிப்பு கடைசி ஒரு பந்து இருக்கும் போது ஸ்கோர் போர்டில் வெளியானது. எனவே வெற்றி பெற தென்னாப்பிரிக்கா ஒரே பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்று அறிவிக்கப் பட்டது. பைத்தியக் காரன் கூட இதை சரி என்று சொல்ல மாட்டான். ஆனாலும் அறிவாளிகள் அதேசரி என்று சாதித்தனர். தென்னாப்பிரிக்க அணியின் மட்டையாளரால் கடைசிப் பந்தில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போயினர். இந்த அயோக்யத் தனம் மூலம் இங்கிலாந்து அணியினர் வெற்றி பெற்றாலும் இறுதி ஆட்டத்தில் அதற்கான தண்டத்தை கட்ட வேண்டியிருந்தது.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh711C4VIDkGeMo8mvQFhAONEyOL1QnmZMa1dE8bSxQd123G7Cj2qJKfkGZTzd90pytJlIf3jpdn8INCUzhMn3An0FnNLSMZMn6pVGywSjTZweeBQFdk63DQBxAKpT3SF4HM0MqpSXAwQA/s1600/semi+final2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh711C4VIDkGeMo8mvQFhAONEyOL1QnmZMa1dE8bSxQd123G7Cj2qJKfkGZTzd90pytJlIf3jpdn8INCUzhMn3An0FnNLSMZMn6pVGywSjTZweeBQFdk63DQBxAKpT3SF4HM0MqpSXAwQA/s1600/semi+final2.png" height="148" width="640" /></a></div>
<br />
இறுதியாட்டத்தில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதினர். பாகிஸ்தான் மட்டையாளர்கள், பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக ஆடி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றனர். பாகிஸ்தானின் இந்த வெற்றிக்கு இங்கிலாந்துடன் ஆடிய லீக் ஆட்டத்தில் மழையால் கிடைத்த ஒரு பாயிண்டும், நியூசிலாந்து விட்டு கொடுத்த மேட்சும் தவிர்க்க முடியாத இரண்டு அடிப்படைக் காரணங்களாகும். மொத்தத்தில், கவாஸ்கர் சொன்ன ஆருடம் எப்படியோ மெய்யானது!! பின்னர் அவரை பாகிஸ்தானுக்கு அழைத்து சிறப்பு விருந்து கொடுத்து கவுரவித்தனர் பாகிஸ்தானியர்!! <br />
<br />
கடைசியாக: இந்த ஆட்டத்தில் நடந்த இந்திய பாகிஸ்தான் அணிகளின் மோதலில், இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, விக்கட் கீப்பர் கிரண் மோரேவுக்கும்- பாகிஸ்தானின் மியாண்டாடுக்கும் வாய்த் தகராறும் இந்த மேட்சில் நடந்தேறியது. மியாண்டாட் இவர்களை நக்கல் செய்யும் வண்ணம் குதிக்க, அம்பயர்கள் வந்து நடத்தை மீற வேண்டாமென்று அறிவுருத்திச் சென்றனர்!! <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjF26R72kvILIfoFMHvvV_QQ1OkHg6uQyEnR9WHLscwIVJlihd-GDLtvlGhi_QM4b4zD0w5t9lrfmOuptdqo_tkX68_3XILd9lktG8zaOQOfRTrQNAiFtPnyXXEHl1CwETw2rh1hup23Ns/s1600/miandad.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjF26R72kvILIfoFMHvvV_QQ1OkHg6uQyEnR9WHLscwIVJlihd-GDLtvlGhi_QM4b4zD0w5t9lrfmOuptdqo_tkX68_3XILd9lktG8zaOQOfRTrQNAiFtPnyXXEHl1CwETw2rh1hup23Ns/s1600/miandad.jpeg" height="423" width="640" /></a></div>
<br /></div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-39166001298918593202015-02-12T13:25:00.004+05:302015-02-12T20:27:19.658+05:30இசட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம்: கேஜ்ரிவால் முடிவு சரிதானா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
டெல்லியில் 67/70 என இடங்களை வென்று கேஜ்ரிவால் பதவியிழந்த பின்னர் சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் முதல்வராகிறார். சென்ற முறை வென்ற பின்னர், சாமான்யனின் கட்சி என்ற பெயருக்கேற்ப, அரசு வழங்கவிருந்த சவுகர்யங்களைப் புறக்கணித்து விட்டு பதவியேற்பு விழாவுக்கு மக்கள் பயணிக்கும் மெட்ரோ இரயிலில் பயணித்தும், மக்கள் தங்கும் சாதாரண அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தங்கியும் தன்னை மற்ற அரசியல் வாதிகளில் இருந்து வேறுபட்டவராகக் காண்பித்துக் கொண்டார். அதே பாணியில் தற்போதும் தனக்கு வழங்கவிருந்த இசட் பிளஸ் பாதுகாப்பையும் வேண்டாம் என மறுத்திருக்கிறார்.<br />
<br />
<br />
இதையெல்லாம் மேலோட்டமாகப் பார்க்கும் போது, "அடேங்கப்பா கேஜ்ரிவால் என்ன ஒரு எளிமையான மனிதர், பதவி அந்தஸ்து வந்தும் மக்களோடு மக்களாகவே இருக்க விரும்புகிறாரே!" என்று அவர் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் நமக்கு ஏற்படுவது நிஜம் தான்.<br />
<br />
நம்மூரில் தன்னுடைய காருக்கு முன்னும் பின்னும் நூறு கார்கள் தொடர, எந்திரத் துப்பாக்கி தாங்கிய கறுப்புப் பூனைகளின் பாதுகாப்போடு திரியும் அரசியல்வாதிகளைப் பார்த்துப் பார்த்து சலித்த நமக்கு இது ஒரு வரவேற்கத் தக்க மாற்றமாகத் தெரியக் கூடும். ஆனாலும், அவரது முடிவு சரிதானா? சரியல்ல என்றே நான் சொல்லுவேன். மேலும் அலசுவோம்.<br />
<br />
நம்மூர் மேலாண்மை பாடங்களில் எளிமைக்கு ஒரு உதாரணத்தை அடிக்கடி சொல்வார்கள். அதற்கு அவர்கள் எடுத்துக் கொள்வது ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் யாரையாவது தான். [கவுண்டமணியின் "பஞ்சுமிட்டாய் விற்கிறவன், கூடை பின்னுறவன் எல்லாம் தொழிலதிபர்னு சொல்லிக்கிறான்" என்ற டயலாக் நினைவுக்கு வரக் கூடும், ஆனால் இவர்கள் நிஜ தொழிலதிபர்கள்!!]. அவ்வளவு பணமிருந்தாலும், அவர் அலுவலக கேண்டீன் வந்தால் அவரது தருணம் வரும்வரை மற்றவர்களோடு வரிசையில் காத்திருந்து, அவரது உணவைப் பெற்று கொண்டு மற்ற ஊழியர்கள் போலவே உண்டு செல்வாராம். சிலர் தங்களது உடைகளைக் கூட தாங்களே துவைத்து, சலவையும் செய்து கொள்வார்களாம். [முடிவெட்டிக் கொள்வதை மட்டும் வேறு யாருக்காவது விட்டுக் கொடுப்பார்கள் போல!!]. இவர்கள் எளிமையானவர்களாம். என்னைக் கேட்டால் இது மடத்தனம் என்பேன்.<br />
<br />
சாதாரண தொழிலார்கள் ஆயிரம் பேர் கிடைக்கலாம், ஆனால் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் புத்திசாலி கிடைப்பது அபூர்வம். அவருடைய பொறுப்புகள் அதிகம், ஆகையால் அவரது நேரம் முக்கியம். எனவே, இவர் உணவுக்காகக் காத்திருக்காமல், தனது அறைக்கே உணவை வரவழைத்து உண்ணலாம், உடைகளை அயர்ன் செய்வதை வேறொருவருக்கு கொடுத்துவிட்டு, அந்த நேரத்தில் தனது வியாபாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாம். அதைவிடுத்து எளிமை என்ற பெயரில் இந்த மாதிரி நேரத்தை வீணடிப்பது கூமுட்டைத் தனம் என்பதே நிஜம். <br />
<br />
<br />
<br />
எனவே, தவிர்க்க வேண்டியது தேவையில்லாத ஆடம்பரத்தை, அடிப்படை அத்தியாவசியங்களை அல்ல. டெல்லியின் முதல்வரும் ஒரு மனிதர் தான். ஆனால் சாமான்ய மனிதர் அல்ல, இரண்டரை கோடி மக்களின் பிரதிநிதி. அவருக்கு வேண்டியவர்களும் இருக்கலாம், எதிரிகளும் இருக்கலாம். யார் எங்கே இருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்? முதல்வர் மக்கள் அணுகும் வகையில் இருக்க வேண்டியது நியாயம்தான் என்றாலும், எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தானே அவர் கனவு காணும் அரசியல் மாற்றத்தைச் செயல்படுத்த முடியும்? எனவே முறைப்படி அவருக்கு வழங்கப் பட்ட பாதுகாப்பை ஏற்பதே சரியாக இருக்கும் என்பது எமது கருத்து.<br />
<br />
எனவே கேஜ்ரிவால் அவர்களே, ஆடம்பரம் வேண்டாம் என்ற உங்கள் நோக்கம் உள்ளுக்குள் நிச்சயம் இருக்கட்டும், அதற்காக இந்த மெட்ரோ இரயிலில் பிரயாணம், குடிசையில் வாழ்க்கை, முட்டு சந்தில் மக்களோடு சந்திப்பு போன்ற ஷோ காட்டும் கோமாளி வேலைகளை விடுத்து, இன்னொரு ஆட்டோக்காரர் பளார் என்று உங்களை அறைவதற்கு முன்னர் மக்கள் உங்கள் மீது வைத்துள்ள, "ஊழலுக்கு ஒரு மாற்று" என்ற இமேஜை காப்பாற்ற முயலுங்கள்.</div>
Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com7