Tuesday, April 23, 2013

[மொக்கை] வௌவாலுக்கு எந்த ஊர்.......!!

வௌவாலுக்கு எந்த ஊர்......??        பதில்: புனே, மகாராஷ்டிரா.

அன்புள்ள மக்கள்ஸ்!!

இந்தப் பதிவு மரண மொக்கை, [மத்த பதிவு மட்டும் என்ன வாழுதா....அப்படின்னு நீங்க கேக்குறீங்க, நியாயம்தான்!!]. இதன் நோக்கம் திருமதி தமிழ் படத்தை விட மொக்கையா ஒரு பதிவு போடணும் என்பதே.  மொக்கை வேண்டாம்னு நினைச்சா இதற்க்கு மேல் தயவு பண்ணி படிக்காதீங்க, மீறிப் படிச்சா ஏற்ப்படும் டேமேஜுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


கரகாட்டக்காரன் படத்தில் ஒரு சீன்.  கோவை சரளாவும், செந்திலும் கவுண்டமணிக்கு ஆப்பு வைப்பது எப்படி என்று பேசிக் கொண்டிருப்பார்கள், அதை கவுண்டர் ஒளிந்துகொண்டு கேட்டுக் கொண்டிருப்பார். கோவை சரளா செந்திலிடம் சொல்வார்,

"அந்தாளுகிட்ட ஜாக்கிரதையா இருங்க, உங்க மூஞ்சியில ஆசிட் ஊத்திடுவான்!"

இதைக் கேட்டதும், கவுண்டமணி மறைவிலிருந்து வெளியே வந்து இருவரையும் பிடித்துக் கொண்டு சொல்லுவார்,  "ஏன்டி இந்த மூஞ்சப் பாருடி, எவனாச்சும்  இந்த மூஞ்சி மேல ஆசிட் ஊத்துவானாடி.  இது ஏற்கனவே நாலு வாட்டி ஆசிட் ஊத்தினா மாதிரி இருக்கேடி, இதுல ஆசிட் ஊத்திடுவேன்னு சொல்லி ஆசிட்டுக்கான மரியாதையே கெடுத்துட்டியேடி..." என்று கலாய்த்துத் தள்ளுவார்.  தமாஷாக இருக்கும்.

நிஜ வாழ்க்கையிலும் நம் மூஞ்சி மேல ஆசிட் யாராச்சும் ஊத்த மாட்டானா, அதன் மூலமா  "தோ பார்டா.......இவர்தான் ஆசிட் ஊத்தின மூஞ்சிக்காரர்" அப்படின்னு நாலு பேரு பெருமையா பேச மாட்டாங்களா என்று ஏங்கும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அப்படி ஒருத்தர் தான் நம்ம வவ்வால்!!




அவர் ஏங்குவது எதற்காக?  அவரோட சமீபத்திய பதிவு ஒன்றில் தான் சொன்னதெல்லாம் நடக்கிறது என்று சொல்லி [பார்ப்பதற்கு] தன்னையே மட்டம் தட்டிகொண்டது  போல எழுதியிருக்கிறார், இது ஏன் என்று கேட்டால்,

"நம்மளை நக்கல் விடுறளவுக்கு வட்டாரத்திலே ஆளே லேது, அதான் நமக்கு நாமே திட்டம் :-))"

இது பார்ப்பதற்கு சவால் போலத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளாகப் பார்த்தால் என்னை யாரும் நக்கலடித்து பதிவு  போட மாட்டார்களா என்ற ஏக்கம் இதனூடாகத் தெரிகிறது!!  இந்த ஏக்கத்திற்க்குக் காரணம் என்ன?  பொதுவாக பதிவுகளை திரட்டிகளில் இணைக்கிறோம், நம்ம கடைக்கும் நாலு சனம் வருது.  அப்படி இவர் திரட்டிகள் எதிலும் இணைப்பதில்லை.   அப்புறம் கடை வியாபாரம் படுத்திடுமே?!  அதற்க்கு பல்வேறு வழிகளைக் கண்டுபிடித்தார்.  அவை, பிரபல பதிவர்கள் பதிவுகளுக்குப் போய் பின்னூட்டங்களில் அவர்களை வாருவது,  அல்லது இளிச்ச வாயன் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுவது என்று பல்வேறு திட்டங்கள் மூலம் தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்ள வேண்டிய நிலை.  இவரது பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் "ஆஹா அருமையா வாருறாரே", "ஓஹோ, அடுத்தவன் பிழைப்பில் சூப்பரா மண்ணை அள்ளிப் போடுறாரே" என்று நாலு சனம் இவரை நினைத்து பெருமிதப் பட்டு இவரோட கடைக்கு   வரமாட்டாங்களா என்ற எண்ணம் தான் இவரை இப்படிச் செய்ய வைக்கிறது.  அப்படியும் சிலர் எங்க கடைப் பக்கமே இனிமே வராதேன்னு விரட்டியடிசிட்டாங்க.  அப்போ விளம்பரத்துக்கு என்னதான் வழி?  தன்னை யாராச்சும் கலாய்த்துப் பதிவு போடனும்.   இதுதான் அவரது ஏக்கத்திற்க்கான காரணம்!!

நாம் அவருக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறோம்,  அண்ணன் கவுண்டமணி சொன்ன மாதிரி ஆசிட் ஊத்தரதுக்கும் மூஞ்சுக்கு ஒரு தகுதி வேண்டும்.  ஆசிட் ஊற்ற வருபவன் கூட அட சீ இந்த மூஞ்சி மேலேயாடா ஆசிட் ஊத்தணும்னு வெட்கப் பட்டு ஓடிவிடுவது போல மூஞ்சி இருந்தா என்ன பண்ணுவது?  அது மாதிரி, உம்மை யாரும் கலாய்க்க வில்லை, அதற்க்கு காரணம் தைரியம்  இல்லை என்பதல்ல அதற்க்கு நீர் ஒர்த் இல்லை என்பதாகக் கூட இருக்கக்கூடும்.


ஆனால் நாம் இவரையும் மதிக்கிறோம், இவரது ஏக்கத்தைத் தீர்க்கும் வண்ணம் முன்னரே நாம் ஒரு பதிவு போட்டிருக்கிறோம், சுட்டி.   முடிஞ்சா நீங்களும் ஒரு மொக்கை பதிவு போட்டு இவரது ஏக்கத்தைத் தீர்த்து வையுங்க!!  மீண்டும் இன்னொரு மொக்கை பதிவில் சந்திப்போம் வணக்கம் மக்கள்ஸ்!!




2 comments:

  1. Replies
    1. தற்போது சரி செய்து விட்டேன், பாருங்கள் தனபாலன்.

      Delete