Sunday, December 8, 2013

‘கூமுட்டை’யின் ‘கூரு’ கெட்ட எட்டு கேள்விகளுக்கு பதில்கள்...............

வணக்கம் மக்கள்ஸ்!!

நண்பர் காமக்கிழத்தன் அவர்கள்

ஒரு ‘கூமுட்டை’யின் ‘கூரு’ கெட்ட எட்டு கேள்விகள்!

என்ற தலைப்பில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.  தன்னை கூமுட்டை என்று சொல்லிக் கொண்டுள்ளார், அதை தன்னடக்கம் என்று தயவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டாம்.  நாம் இங்கு சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் தர இருக்கிறோம்,  நாம் தரும் பதில்களால் அவரோ அவரைப் போன்ற நாத்தீகர்களோ மனம்   மாறினால் நன்றாகத்தான் இருக்கும், ஆனாலும் அவ்வாறு நடக்கும் என்று நாம் அதிகம் நம்பவில்லை.  இந்தப் பதிவின் நோக்கம், இறை நம்பிக்கையாளர்கள் நாத்தீகர்களின் போலி வாதங்களை கண்டுகொள்ள மட்டுமே.  கேள்விகளை சுருக்கமாகத் தருகிறோம், விரிவாகப் படிக்க மேற்கண்ட பதிவிற்குச் செல்லலாம்.

கேள்வி 1: கடவுள் ஒருத்தர் தானா? அல்லது \\பல கடவுளர்கள் இருந்து, அவர்களுக்குள் ஏற்பட்ட ஆதிக்கப் போட்டியால்..... யுகயுகங்களாக நடந்த பெரும் போரால் ஏனையோர் அழிந்துவிட இவர் ஒருவர் மட்டுமே மிஞ்சினாரா?!\\

மனித மனம் பொதுவாக தன்னுடைய அனுபவத்தில் எதைப் பார்க்கிறதோ அதை வைத்தே மற்ற எல்லாவற்றையும் ஒப்பிட்டுத் தீர்மானிக்கும்.  அதைத் தாண்டி அதனால் யோசிக்க முடியாது.  இங்கே நாம் காணும் விஷயங்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்தவையாக இருக்கும்.  உதாரணத்திற்கு 'தந்தை'என்று சொன்னால் மகன்/மகள் என்று ஒன்றும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் தந்தை என்பதற்கே பொருள் இல்லாமல் போய் விடும்.  அதே போல மகன் என்று இருந்தால் தந்தை என்ற ஒன்றும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் மகன் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை.  இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை.   இதைப் போல நாம் இங்கே காணும் அனைத்தும் Relative Truth என்று ஆங்கிலத்தில் சொல்லப் படும் ஒன்றை ஒன்று சார்ந்த விடயங்கள். ஒரு உண்மை இன்னொரு உண்மையை சார்ந்து நிக்கிறது, ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றும் இல்லை. ஆனால் இறைவன் என்பவன் Absolute Truth, பரம்பொருள்.  அவனுடைய இருப்புக்கு வேறு எதையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.  அவன் இப்படித்தான் இருக்கவேண்டும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம்முடைய அனுபவத்தில் கண்ட விஷயங்களை வைத்து வரையறுக்க முடியாது.  ஏனெனில் நமது லாஜிக் அனைத்தும் நாம் காணும் ஜட வஸ்த்துக்களை வைத்து வருபவை, இறைவன் ஜடத்துக்கு அப்பாற்பட்டவன்.  உதாரணத்துக்கு பேருந்தில் செல்பவரின் கடிகாரம், சாலையோரத்தில் நின்று கொண்டிருப்பவரின் கடிகாரத்தை விட மெதுவாகச் செல்லும் என்றால் நம்புவதற்கு கடினமாக இருக்கும், காரணம் நமது அனுபவத்தில் அவ்வாறு நாம் எதையும் கண்டதில்லை, ஆனால் இது உண்மை என்று சோதனைப் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. இறைவன் அப்படின்னு ஒருத்தன் இருக்கின்றானா, அவன் ஒருவனா அல்லது பலரா, அவனுடைய குணாதிசயங்கள் என்ன? - இதற்கான  விடைகளை ஒருத்தர் தேடித்தான் கண்டறிய வேண்டும்.  சரியான விடை எங்கே கிடைக்கும் எனத் தேடிக் கண்டுபிடிப்பது ஒருவருடைய புத்திசாலித் தனத்தைப் பொருத்தது.


கேள்வி 2: [பெரிய கேள்வி கேட்க வருவது சுருக்கமாக இதைத்தான்] எல்லாத்தையும் கடவுள் படைச்சான் என்றால் கடவுளை படைச்சது யாரு ?

கடவுள் என்ற வார்த்தைக்கு விளக்கம் அகராதியில் உண்டு.  எல்லா காரணத்துக்கும் காரணமானவன், அவனுக்கென்று ஒரு காரணமுமில்லாதவன்.  அவனுக்கு ஒப்பனவர்களோ, மிக்கார்களோ யாரும் இருக்க இயலாது.  அவ்வாறு அவனை ஒருத்தர் படைக்கிறார் என்றால் அவர் கடவுளுக்கும் மேலே என்று அர்த்தம், அப்படிப் பார்த்தால் மேலே சொன்ன பொருள் படி அவர் கடவுளே அல்ல என்றாகிவிடும்.  எனவே, ஒரு வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல் கேள்வி எழுப்பிவிட்டு அதை தன்னுடைய புத்திசாலித்தனம் என்று எண்ணி புளகாங்கிதம் அடைவதில் நாத்திக அன்பர்களுக்கு ஈடு இனை யாரும் இல்லை.

கடவுள் என்ற ஒருத்தன் ஏன் இருக்க வேண்டும்?  ஒரு பொம்மலாட்டம் நடக்கிறது.  இரண்டு பொம்மைகள் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றன என வைத்துக் கொள்வோம்.  சிறு குழந்தைகள் அந்தப் பொம்மைகள் தானாக ஆடுகின்றன என நினைக்கலாம்.  ஆனால் கொஞ்சம் விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும் அதை யாரோ ஆட்டுவிக்கிறார்கள், தானாக ஆடாது என்று.  இங்கே நாம் ஜடப் பொருட்களைப் பார்க்கிறோம், அவற்றின் பண்புகளையும் பார்க்கிறோம்.  அவற்றில் முக்கியமான ஒன்று ஜடத்துக்கு சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் இல்லை.  சூரியனோ, சந்திரனோ, பூமியோ எதற்குமே சிந்திக்கத் தெரியாது. கல்லும் மண்ணும் கூட அப்படித்தான்.  அவை தானாக ஒன்று கூடி ஒரு கணினியாகவோ, புகைப் படக் கருவியாகவோ மாறாது, ஒரு ஜீவன் வந்து கைவைத்தால் தான் அவை அவ்வாறு மாறும்.  அவ்வளவு ஏன் மண்ணில் ஒரு காலடித் தடம் கூட தானாக உருவாகாது, காலடியைப் பார்த்தால் அங்கே யாரோ நடந்து போயிருக்கிறார்கள் என்றுதான் சொல்வோமே அன்றி தானாக உருவாயிற்று என்று யாரும் சொல்வது இல்லை.  அப்படியானால் நவீன கேமராக்கலையே மிஞ்சும் மனிதனின் கண், கம்பியூட்டரை விட அதிசயமான மூளை, நூறு வருடம் ஓயாமல் உழைக்கும் பம்பான இருதயம் இத்யாதி.......இத்யாதி போன்றவை தானாக உருவாகியிருக்குமா?  அவ்வாறு உருவாகியிருக்கும் என்ற சரக்கை நாம் வாங்கத் தயாராக இல்லை.  ஜடம் அவ்வாறு மாறும் பின்னணியில் ஒரு புத்திசாலி இருக்கிறான் என்று நாம் தீர்மானிக்கிறோம்.  நாத்தீகர்களும் ஒரு இடத்தில் போய் முடிக்கிறீர்கள், நாங்களும் முடிக்கிறோம் நீங்கள் முடிப்பது சிந்திக்கத் தெரியாத ஜடத்தில், நாங்கள் முடிப்பது சிந்திக்கத் தெரிந்த ஒருவனிடம் அவ்வளவுதான் வேறுபாடு.

\\கேள்வி: 3

‘கடவுள் இருக்கிறார்’ என்பது அனுமானம். எல்லாம் அவரே என்பதும் அனுமானம்தான். இதற்கு மாறாக..........

‘படைப்புக்கான அணுக்கள்; உயர் பண்புக்கான அணுக்கள்; பல்வகை உணர்ச்சிகளுக்கான அணுக்கள்; நல்ல எண்ணங்களைத்  தோற்றுவிக்கும் அணுக்கள்; தீய உணர்வுகளுக்குக் காரணமான அணுக்கள் என்றிப்படி வகை வகையான அணுக் கூட்டங்கள் வெளியில் நிறைந்து கிடக்கின்றன. அவையே அனைத்திற்கும் மூல காரணம். அவை மிகவும் மேம்பட்ட அறிவு படைத்தவை [அறிவியல் பூர்வமாக ஒரு நாள் நிரூபிக்கப்படலாம்]; எப்போதும் இருப்பவை; இவை ஓர் ஒழுங்குக்கு உட்பட்டுத் தத்தம் கடமையைச் செய்கின்றன. இது இயற்கை’ என்றுகூட நாம் அனுமானம் செய்யலாம்.


இப்படி அனுமானிப்பது எவ்வகையிலும் தவறல்லதானே?\\  முழுக்க முழுக்க கற்பனை!!  கற்பனைக்கு வானமே எல்லை.



 கேள்வி: 4

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள் என்பார்கள். படைப்புத் தொழிலை அவர் எப்போது தொடங்கினார் என்பது அவதாரங்களுக்கும் மகான்களுக்கும் தெரிந்திருக்கக்கூடும்! சொல்வார்களா?


 ஆரம்பம் என்ற ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் இருக்கும், இறைவனுக்கும் ஜீவனுக்கும் அவை இரண்டுமே இல்லை.  ஆரம்பமும் இல்லாம, முடிவும் இல்லாம எப்பவும் இருப்பதா?  அதெப்படி?  தற்போதைய அனுபவத்தை வைத்து இதை புரிந்து கொள்வது இயலாத காரியம்.

 கேள்வி: 5

தனிப் பெரும் சக்தியாக விளங்குபவர் கடவுள். இவர் படைத்தவற்றை வேறு எதுவும் எவரும் அழிக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது. அப்புறம் எதற்குக் காத்தல் தொழில்?

ஒரு வீட்டை நீங்கள் கட்டிவிட்டீர்கள், அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகும்?  கொஞ்சம் கொஞ்சமாக குட்டிச் சுவராகும்.  எனவே அதைப் பராமரிக்க வேண்டும்.

கேள்வி 6. கடவுளின் படைப்பில் அதர்மம் நுழைந்தது எவ்வாறு? 

இருட்டு என்று ஒன்று உள்ளதா?  குளிர் என்ற ஒன்று உள்ளதா?  இப்படியெல்லாம் எதுவும் இல்லை.  வெளிச்சம் என்ற ஒன்று தான் உண்மை, அது இல்லாவிட்டால் அது இருட்டு.   எது இருக்கிறது என்றால் வெளிச்சம் மட்டுமே, இருட்டு என்று தனியாக எதுவும் இல்லை.  அதே போல குளிர் என்று ஒன்று தனியாக இல்லை, வெப்பம் என்பது மட்டுமே இருக்கிறது,  வெப்பம் இல்லாவிட்டால் அது குளிர்.  குளிர் என்று தனியான ஒன்று இல்லை.  அதே மாதிரி, இறைவன் என்பவன் மட்டுமே நிஜம், அதர்மம் என்பது இறைவனை மறத்தல் மட்டுமே.


கேள்வி: 7

விழிப்புப் பெற்ற கடவுள், அதர்மத்தை மட்டும் அழித்துவிட்டு ஆனந்தத் தாண்டவம் ஆட வேண்டியதுதானே! ஒட்டு மொத்த உலகையும் ஏன் அழிக்க வேண்டும்?


 நீங்க சொல்லும் யோசனையைக் கேட்டு செயல்படும் துரதிர்ஷ்டவசமான நிலையில் கடவுள் இல்லை, எப்போ எதைச் செய்யனும்னு அவனுக்குத் தெரியும்.



100 comments:

  1. பாகவதரே,

    ஒரு கூமுட்டையே பதிவு போடுதே அடடே...!

    பதிவுல பொலம்பினதுலாம் இருக்கட்டும், உமக்கு உண்மையிலே கடவுள் நம்பிக்கை இருக்கா? எனக்கு என்னமோ உமக்கு கடவுள் நம்பிக்கையே இல்லைனு தான் தோனுது, கடவுள் நம்பிக்கை இருக்க உண்மையான இறை நம்பிக்கையாளர்கள், ஆடு ,மாடு,ஒட்டகம், போன்றவற்றை "குர்பானி" கொடுத்து ,பிரியாணி வச்சி சாப்பிடுறாங்க, நீர் என்னிக்காவது பீஃப் பிரியாணி சாப்பிட்டு இருக்கீரா?

    கடவுளுக்கு படைச்சிட்டு பீஃப் பிரியாணி சாப்பிடாதவங்க எல்லாம் எப்படி கடவுள் இருக்காருனு சொல்ல முடியும்?

    பீஃப் பிரியாணி சாப்பிடாதவங்க எல்லாம் கடவுள் நம்பிக்கையே இல்லாதவங்க, அவங்களுக்குலாம் கடவுளை பத்தி பேச தகுதியேயில்லை :-))

    இறை நம்பிகை கொண்டவர்களே, சிக்கன் ,பீஃப், மட்டன் சாப்பீடாத நாத்திகர்கள் சொல்வதை எல்லாம் நம்பாதீர்கள் :-))

    இறைவனுக்கு மிகவும் பிடித்தமான உணவு மாமிசம் ஆகும், யஜூர் வேதத்திலேயே , யாக குண்டம் வளர்த்து அதில் , மான், ஆடு என போட்டு வறுத்து முனிவர்கள் சாப்பிட்டதாக சொல்லப்பட்டுள்ளது, மேலும் அகத்தியர் வாதபி சென்ற போது மட்டன் வறுவல் சாப்பிட்டு "செரிக்க வைத்து" ஏப்பம் விட்ட புராணவரலாறும் உள்ளது,எனவே உண்மையான இறைநம்பிக்கையாளர்களே, சிக்கன் பிரியாணி,பீப் பிரியாணி சாப்பிட்டு "இறைவனை தொழவும்" :-))

    ReplyDelete
    Replies
    1. \\கடவுள் நம்பிக்கை இருக்க உண்மையான இறை நம்பிக்கையாளர்கள், ஆடு ,மாடு,ஒட்டகம், போன்றவற்றை "குர்பானி" கொடுத்து ,பிரியாணி வச்சி சாப்பிடுறாங்க, நீர் என்னிக்காவது பீஃப் பிரியாணி சாப்பிட்டு இருக்கீரா? \\ சிலர் மாமிசம் உண்கிறார்கள், அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அதுசரி, கடவுள் இல்லை என்பதற்கு இது ஆதாரமாகிவிடுமா? நாத்தீகர்கள் முட்டாள்கள் என்பதற்கு முதல் முன்னுதாரணம் நீராகத்தான் இருப்பீர். ஐயோ......... ஐயோ............[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .........மாதிரியே இதையும் வடிவேலு ஸ்டைலில் படியும்]
      அது ஒருபுறமிருக்கட்டும், ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்பது போல இவர்களை விமர்சனம் செய்யும் நீர் என்ன ஜீவ காருண்ய இயக்க்கத்தைச் சார்ந்தவரா? நடப்பது, பறப்பது, நீந்துவது என மனிதனின் பிணத்தைத் தவிர மற்ற எல்லாம் உள்ளே தள்ளும் நீர் அவர்களைப் பார்த்து குறை கூறுவதில் அர்த்தமேயில்லை.

      Delete
  2. கடவுள் இருக்கான்னு சொல்பவர்களே உங்களூக்கு ஒரு பொன்னான கேள்வி,

    கடவுள் சைவமா? அசைவமா?

    கடவுள் ஆணா,பெண்ணா?

    ஜோடியாத்தான் இருப்பாரா?

    கடவுளுக்கு ஆண்மை இருக்கா இல்லையா?

    ஏன் எனில் எந்தக்கடவுளும் நேரடியா புள்ளைக்குட்டிங்களை பெத்துக்கிட்டதா ,புராணங்களில் சொல்லப்படவேயில்லை அவ்வ்!

    லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்..கடவுளுக்கு தமிழ் தெரியுமா,தெரியாதா?

    ஒரு வேளை கடவுளுக்கு தமிழ் தெரியாதுனா, அப்படிப்பட்ட ஒருத்தரு எப்படி தமிழர்களுக்கு கடவுளாக இருக்க முடியும்?

    தமிழர்களுக்குனு ஒரு கடவுள் இருக்க முடியும்னா,அது தமிழ் தெரிஞ்ச கடவுளாத்தான் இருக்க முடியும், தமிழ்நாட்டில பெரும்பாலும் எல்லாரும் சிக்கன், மட்டன் ,பீப் சாப்பிடுறாங்க எனவே கடவுளும் அதெல்லாம் சாப்பிடுறவராத்தான் இருக்கனும் , அப்படிலாம் சாப்பிடாதவர் தான் கடவுள்னு எவனாச்சும் சொன்னால் அதை நம்பவேண்டாம்!!!

    ReplyDelete
    Replies
    1. \\கடவுள் இருக்கான்னு சொல்பவர்களே உங்களூக்கு ஒரு பொன்னான கேள்வி,

      கடவுள் சைவமா? அசைவமா?

      கடவுள் ஆணா,பெண்ணா?

      ஜோடியாத்தான் இருப்பாரா?\\ இதெல்லாம் கடவுள் இருக்கார் என்று ஒப்புக் கொண்டவர்கள் கேட்க வேண்டிய கேள்வி. நீர் அல்ல.

      \\கடவுளுக்கு ஆண்மை இருக்கா இல்லையா?\\ விதையை விதைப்பவன் நீர், உமது விதையில் விதையை வைத்தவன் இறைவன். இதிலிருந்து பதிலை நீரே முடிவு செய்துகொள்ளும்.

      \\ஏன் எனில் எந்தக்கடவுளும் நேரடியா புள்ளைக்குட்டிங்களை பெத்துக்கிட்டதா ,புராணங்களில் சொல்லப்படவேயில்லை அவ்வ்!\\ அறைகுறைய படிச்சா இதான் பிரச்சினை.

      \\லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்..கடவுளுக்கு தமிழ் தெரியுமா,தெரியாதா? \\ தமிழ் என்பது உம்மைப் போன்ற நாதாரிகளுக்கும் தெரியும். இறைவனுக்கு மனிதன் மட்டுமன்றி மற்ற ஜீவா ராசிகள் எழுப்பும் ஒழியிலும் என்ன விஷயம் உள்ளது எனத் தெரிந்துகொள்ள முடியும், அதுமட்டுமல்ல, சந்திரமுகி ரஜினி மாதிரி மனசில நினைப்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

      Delete
    2. பாகவதரே,

      சாம்பார் சட்டிய உருட்டுறவனுங்களுக்குலாம் மூளையே வேலை செய்யாதுனு கன்ஃபர்ம் செய்றீர் :-))

      நான் எங்கேய்யா , மாமிசம் சாப்பிடுறவங்கள தப்பா சொன்னேன், அவங்க தான் கடவுள் இருக்காருனு சொல்ல தகுதியானவங்கனு தான் சொல்லி இருக்கேன்.

      மாமிசம் சாப்பிடுறவங்க தான் மனிதர்கள், அவர்களில் இறை நம்பிக்கை கொண்டவர்கள் இல்லாதவர்கள்னு ரெண்டு பிரிவு, கடவுள் குறித்து விவாதம் செய்ய இவங்க ரெண்டு பிரிவுக்கு தான் உரிமை உண்டு.

      மாமிசம் சாப்பிடாம கடவுள் இருக்கு ,இல்லைனு பேச உரிமை இல்லை ,மாமிசம் சாப்பிடாம கடவுள பத்தி பேசுறவங்களுக்கு கடவுள் நம்பிக்கையும் இல்லை ,நாத்திக நம்பிக்கையும் இல்லை ,ஒரு ரெண்டுங்கெட்டான் குருப்பு :-))

      //இதெல்லாம் கடவுள் இருக்கார் என்று ஒப்புக் கொண்டவர்கள் கேட்க வேண்டிய கேள்வி. நீர் அல்ல.//

      இந்த கேள்விக்குலாம் பதில் தெரிஞ்சா தானே ஒப்புக்கவே முடியும் :-))

      //விதையை விதைப்பவன் நீர், உமது விதையில் விதையை வைத்தவன் இறைவன். இதிலிருந்து பதிலை நீரே முடிவு செய்துகொள்ளும்.//

      நானே முடிவு செய்துக்கவா அப்போ சரி , உமக்கு விதைய வச்சது சுடலைமாடன் சாமி, நீர் பீப் பிரியாணி சாப்பிடலாம் :-))

      ஏன்னா இறைவன் தான் விதைய வைக்கிறான்னா ,அது சுடலைமாடனா ஏன் இருக்க கூடாது, இப்போ சுடலைமாடன் விதைய உமக்கு வச்சானா, இல்லையா? இல்லைனு சொன்னால் நீர் கடவுள் இல்லைனு சொல்லுற நாத்திகந்தேன் :-))

      #//தமிழ் என்பது உம்மைப் போன்ற நாதாரிகளுக்கும் //

      இதுக்கே டெங்க்சன் ஆகிட்டீர் போல, நான் நினைச்சா உம்ம சொக்காய கிளிச்சிட்டு அலையிற அளவுக்கு டெங்க்சன் ஆக்குவேன் :-))

      # //இறைவனுக்கு மனிதன் மட்டுமன்றி மற்ற ஜீவா ராசிகள் எழுப்பும் ஒழியிலும் என்ன விஷயம் உள்ளது எனத் தெரிந்துகொள்ள முடியும்,//

      அப்பிடியா? அப்போ கோயில்ல என்ன கருமத்துக்கு ஓம் சுக்லாம்பரதம்னு என்னமோ சொல்லுறானுங்க, ஏதோ ஒரு பாஷையில சாமிய பாராட்டிட்டு போறது.

      நாராயணா வாழ்கனு சொன்னா கோயில விட்டு நாராயணன் ஓடிருவாரா இல்லை கோயில் இடிஞ்சிடுமா?

      //அதுமட்டுமல்ல, சந்திரமுகி ரஜினி மாதிரி மனசில நினைப்பதையும் அறிந்துகொள்ள முடியும்.//

      ஹி...ஹி அப்போ நயந்தாரா மனசுல யாரு இருக்கானு கேட்டு சொல்லுறது :-))

      # கடவுள் இருக்குனு நீர் நம்பினால்,நான் சொன்னாப்போல செஞ்சிக்காட்டும்

      ஒரு 10 மாடிக்கட்டடம் மேல ஏறி நின்னு ,கபால்னு கீழ குதிச்சிட்டு நாராயணானு கூப்பிடும், நாராயணன் வந்து காப்பாத்துறாரானு பார்ப்போம்.

      இல்லைனா முதலை வாயில கொண்டு போய் காலை விட்டுட்டு நாராயணானு கூப்பிடும் , என்ன நடக்குதுனு பார்ப்போம்.

      இப்படி பிராக்டிகலா செஞ்சிக்காட்டினால் நாங்க என்ன நம்ப மாட்டோம்னா சொல்லபோறோம் :-))

      Delete
  3. ஆணல்லன் பெண்ணல்லன் அல்லாது அலியுமல்லன்
    காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
    பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம
    கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே

    என்கிறாரே நம்மாழ்வார். உங்களை பொறுத்தவரையில் "இல்லையல்லன்" அவரை பொறுத்தவரை "உளனல்லன்"அவ்வளவுதான்!

    ReplyDelete
    Replies
    1. @ நந்தவனத்தான்

      Thanks for visiting!!

      Delete
  4. ***மனித மனம் பொதுவாக தன்னுடைய அனுபவத்தில் எதைப் பார்க்கிறதோ அதை வைத்தே மற்ற எல்லாவற்றையும் ஒப்பிட்டுத் தீர்மானிக்கும். அதைத் தாண்டி அதனால் யோசிக்க முடியாது. ***

    இறைவன் என்கிற மண்ணாங்கட்டியை யோசிச்சதும் மனித மனம்தான்! அதுகூடப் புரியாமல் ஒரே ஒளறலாயிருக்கு!

    உமக்கு இறைவன் என்கிற சிந்தனையை ஆட்டுக்குட்டி மனமா சொல்லுச்சு??

    சும்மா ஆத்திகச் சண்டியர்தனம் பண்ணுறதை விட்டுப்புட்டு நீர் மற்றவர்களுக்கு விளக்குவதை புரிந்துகொள்ளும்!

    மனிதமனம் கடவுளை உருவகிக்கவில்லைனா, யாரு உருவகிச்சா? பதில் சொல்றேன்னு மறுபடியும் ஏதாவது ஒளறும்!

    ReplyDelete
    Replies
    1. @வருண்

      \\மனிதமனம் கடவுளை உருவகிக்கவில்லைனா, யாரு உருவகிச்சா?\\ இறைவன் ஆரம்பமும் முடிவும் இல்லாதவன், அவன் எப்போதும் இருப்பவன், அவனை உருவாக்க யாருடைய மனமும் தேவையில்லை, பிணமும் தேவையில்லை.

      Delete
  5. கடவுள் நம் சிந்தைக்கு அப்பாற்பட்டவன் எனக் கூறிவிட்டு கடவுள் இப்படி இருப்பார் இந்த உருவில் இருப்பார் அவருக்கு இது உகந்தது இது கூடாதது, இதைச் சாப்பிடச் சொன்னார், இதைக் கூடாது என்றார் என வரையறை செய்யத் தொடங்கியதும் அனைவரும் நாத்திகராய் ஆகிவிடுகின்றோம். கடவுள் எண்ணத்துக்கு அப்பாற்பட்டவன் என கூறுவது உண்மை எனில் மதங்கள், கோவில்கள், பூசைகள், ஆச்சாரங்கள், சடங்குகள், புராணங்கள் இத்யாதி இன்ன பிறகள் ஒன்றுமே உண்மை இல்லை என்றாகிவிடும், உண்மை எனக் கூறினால் கடவுள் கட்டுப்பட்டவன், உருவாகி அழியும் ஜடப்பொருட்களுக்குள் வந்துவிடுவான். கடவுளைப் பற்றி சிந்திக்காமல் வாழும் நாத்திகர்கள் தான் உண்மையான கடவுளின் பக்தர்கள் ஆவார்கள், கடவுள் உண்மை என நிரூபிக்கும் பட்சத்தில், அக் கணத்தில் கடவுளுக்கு இலக்கணமும் வரையறையும் செய்த ஆத்திகர்கள் நரகத்துக்குள் புகக் கூடும்.

    "உளனல்லன் இல்லையல்லன்"..

    கடவுள் உண்டு எனில் உண்டு இல்லை எனில் இல்லை, தத்துவப் படி இதில் இரண்டு சாத்தியங்களே உண்டு. இல்லை என்பாருக்கு சிக்கல் இல்லை, இல்லாததுக்கு விளக்கமோ, சான்றோ வேண்டாம். இருக்கு என்பவருக்கு முழு விளக்கமும் சான்றும் தேட முடியாத நிலையில் தன் மனத்துக்கு ஏற்றார் போல கூறிவிட ஒவ்வொன்றும் ஒரு மதமாய் மாறிவிட, ஒருவேளை கடவுள் இருந்து வந்து தொலைத்தால் இவர்கள் கூறியவைகள் அனைத்தும் பொய்க்கும் பட்சத்தில் கடவுள் இவர்களை அழித்தே விடுவார்.. சரிதானே,

    --- விவரணம். ---

    ReplyDelete
    Replies
    1. @ விவரணன் நீலவண்ணன்

      \\கடவுள் நம் சிந்தைக்கு அப்பாற்பட்டவன் எனக் கூறிவிட்டு கடவுள் இப்படி இருப்பார் இந்த உருவில் இருப்பார் அவருக்கு இது உகந்தது இது கூடாதது, இதைச் சாப்பிடச் சொன்னார், இதைக் கூடாது என்றார் என வரையறை செய்யத் தொடங்கியதும் அனைவரும் நாத்திகராய் ஆகிவிடுகின்றோம்.\\ இதன் உண்மையான பொருளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய கண் முன்னே உள்ள உலகியல் அனுபவங்களை வைத்து இறைவனைப் புரிந்துகொள்ள முயன்றால் அது இயலாது என்பதே உண்மையான பொருளாகும். பௌதீக விதிகளுக்கு அப்பாற்பட்டு நிற்கும் பரம்பொருளை நாமாக அறிந்துகொள்ள முடியாது, அவ்வாறு அறியவேண்டுமானால் அதற்க்கு இறைவன் விரும்பினால் மட்டுமே முடியும்.

      எல்லா துறைகளிலும் உண்மையானவர்களும் உண்டு போலிகளும் உண்டு, இறை வழிபாடும் இதற்க்கு விதிவிலக்கல்ல. புத்திசாலி சரியான வெற்றியடைவான் .

      \\"உளனல்லன் இல்லையல்லன்"..

      கடவுள் உண்டு எனில் உண்டு இல்லை எனில் இல்லை, தத்துவப் படி இதில் இரண்டு சாத்தியங்களே உண்டு.\\ தத்துவம்னு சொல்லிட்டீங்க யார் சொன்னதுன்னு சொல்லவில்லையே? அதெப்படி உண்டு என்றால் உண்டு என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் ஆகும்? இந்தியாவுக்கு 1947 கிடைத்தது என்று நம்பினால் அது சுதந்திர நாடு, இல்லா விட்டால் இன்னும் வெள்ளைக்காரன் பிடியில் தான் இருக்கிறது என்று அர்த்தமா? என்ன கூத்து இது? நெருப்பு சுடும் என்பது நீர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை. உமது நம்பிக்கையை வைத்து அது மாறப் போவது அல்ல, இறைவன் என்பவன் உள்ளானா இல்லையா என்பது அதே போல ஒருவருடைய நம்பிக்கையை வைத்து மாறப் போவது இல்லை. குருடன் பார்க்காததால் சூரியன் உதிப்பதில்லை என்று ஆகிவிடாது. உண்மை உண்மையே, மாறப் போவதில்லை.


      \\இருக்கு என்பவருக்கு முழு விளக்கமும் சான்றும் தேட முடியாத நிலையில்\\ சான்று திரும்புமிடமெல்லாம் உள்ளது, கண்ணைத் திறந்து பார்க்க விரும்பாவதர்களுக்கு அது எங்கே தெரியும்?

      Delete
  6. ஆத்திக வாதங்களையும் சரி, நாத்திக வாதங்களையும் சரி நிறையவே படிச்சாச்சு. கடவுள் நம்பிக்கையும் சரி, நம்பிக்கை இன்மையும் சரி அவரவர்களின் மனப்போக்கு சம்பந்தபட்டது என்ற முடிவுக்கும் வந்தாச்சு. இப்போதெல்லாம் இம்மாதிரி விவாதங்களில் வெறும் வேடிக்கைப் பார்க்கும் மனநிலைதான் சரி என்ற முடிவுக்கும் வந்துவிட்டதால் உங்களின் வாதம் புரியும் சாமர்த்தியத்தை மட்டுமே கவனிக்கப்போகிறேன்.

    ReplyDelete
  7. எட்டு கேள்விகளுக்கு பதில் என்று தலைப்பில் போட்டிருக்கிறீர்கள்.
    ஏழுதானே இருக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. எட்டாவது கேள்வி அதர்மம் பற்றியது, அப்படி ஒன்று தனியாக இல்லை என்று முன்னரே சொல்லிவிட்டோம், எனவே it becomes redundant!!

      Delete
  8. ஆதித்திகர்களைவிட நாத்திகர்களே கடவுளைப் பற்றி அதிகம் எழுதுகின்றனர். ஒருவேளை கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருப்பாரோ என்ற மனக் குழப்பமே காரணம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்!
      ஊழலை லஞ்சந்தை ஒழிக்கணும் என்றும் சொல்கிறார்கள்; எழுதுகிறார்கள்: பாடுபடுகிறார்கள்?
      அது ஏன்?
      ____________
      இதில் எழுதாமல் தனியாக எழுதியதால் நீக்கி இதன் அடியிலே எழுதிவிட்டேன்!

      Delete
    2. @ நம்பள்கி

      \\ஊழலை லஞ்சந்தை ஒழிக்கணும் என்றும் சொல்கிறார்கள்; எழுதுகிறார்கள்: பாடுபடுகிறார்கள்?
      அது ஏன்?\\ஊழல், லஞ்சம் இவையெல்லாம் நிஜத்தில் இருக்கின்றன, அதே மாதிரி கடவுள் இருக்கிறார் அதனால் தான் எழுதுகிரீர்களா? So it is implied that the Lord is there.............!!

      Delete
    3. ஆமா ராபின் நீர் முழுநேரமும் இஸ்லாமியர்கள் பதிவை விமர்சிச்சுட்டே திரிகிறீர் இல்லையா?

      ஆமாவா? இல்லையா?

      சரி இப்போ நீர் சொன்ன வெளக்கெண்ணை வாதத்தைப் பாரும்.

      உமக்கு அல்லா மேலும், இஸ்லாமியர்கள் நம்பிக்கையிலும் அபார நம்பிக்கை! அதான் கெடைக்கிற நேரத்தில் ஜீசஸைப்போயி வழிபடாமல், இஸ்லாமியர்கள் பதிவுகளை வாசிச்சு, விமர்சிச்சு உம் நேரத்தை வீணடிக்கிறீர். அப்படித்தானே? ஆக இஸ்லாமியர்களை விட உமக்குத்தான் இஸ்லாம் மேலே நம்பிக்கை. அப்படித்தானே?

      எங்க இருந்துப்பா வர்ரீங்க? இந்தமாரி வெளக்கெண்ணை வியாக்யாணம் பேசு?

      Delete
    4. தாஸ்:
      ஒன்றை ஒழிக்க அதைப் பற்றி பேசாமல் எதைப் பற்றி பேசுவார்கள்? எழுதியது அந்த அர்த்தத்தில் தான்!

      Delete
    5. \\ஒன்றை ஒழிக்க அதைப் பற்றி பேசாமல் எதைப் பற்றி பேசுவார்கள்? எழுதியது அந்த அர்த்தத்தில் தான்! \\அழிக்கப் போறீங்க என்றால் அது இருக்கிறது என்று ஒப்புக் கொண்டுவிட்டீர்கள் என்று அர்த்தம், எனவே கடவுள் இருக்கிறார் என்று நீங்க ஒப்புக் கொண்டுவிட்டீர்கள், நன்றி..................

      Delete
    6. தாஸ்! நான் சொன்ன பதில் லஞ்சத்திற்கு! எது எல்லாம் தவறு என்று நினைகிறார்களோ அதைப் பற்றி பேசுவது தான் வழக்கம்.

      கடவுள் நம்பிக்கை தவறு-இல்லாத ஒன்றின் மீது ஏன் நம்பிக்கை வைக்கவேண்டும்.

      பேய் இல்லை என்ற சொன்னால் பேய் இருக்கு என்று அர்த்தமா?
      இல்லை பேய் மேல் வைக்கும் நம்பிக்கையை ஒழி என்று அர்த்தமா?
      இல்லாத ஒன்றின் மீது நம்பிக்கை வைக்காதே என்று தான் அர்த்தம் அதைப் பற்றித்தான் பேசியாகனும்-கடவுளுக்கும் அதே அதே சபாபதே!

      ராகு காலம் இல்லை என்றால் ராகு காலம் இருக்கு என்று அர்த்தமா?
      கையில் எல்லா விரலும் எல்லா கலரிலும் கல்லு வச்ச மோதிரம் போட்டாலும் ஒன்னும் உபயோகமில்லை என்றால் கல்கள் பவர் மீது நம்பிக்கை இருக்கு என்று அர்த்தமா?

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. உண்டு என்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை...............

    எதற்கு வீண் விவாதம்?

    கடவுள் இருக்காரா? இல்லையா? எனபது அவரவர் மனநிலையைப் பொருத்தது.

    ReplyDelete
    Replies
    1. @ கும்மாச்சி

      விவரணன் நீலவண்ணன் அவர்களுக்கு தந்த அதே பதில் தான் இதற்கும்.

      Delete
  11. சில வருடங்களுக்கு முன்பு, இது விஷயமாக பலப் பதிவர்கள் விவாதித்தப்போது, நானும் இரு பதிவுகளைப் போட்டேன்.

    1. அல்லாஹ்வின் "தோற்றம்", "தொடக்கம்", "இருப்பு" பற்றிய கேள்விக்கான என் பதில்: http://vilambi.blogspot.com/2009/12/blog-post.html

    2. கடவுளின் இருப்பிற்கான ஆதாரம்: http://vilambi.blogspot.com/2010/02/blog-post_04.html

    ReplyDelete
    Replies
    1. @ மு மாலிக்

      நீங்கள் தந்த பதிவுகளை படிக்கிறேன், நன்றி நண்பரே!!

      Delete
    2. ஆஹா பாகவதர் இனிமே அல்லா சாமிய கும்பிட்டு பீஃப் பிரியாணி சாப்பிடுவார்னு நம்புவோம்! அல்லாஹி அக்பர் கிருஸ்ணா!!!

      # மாலிக் பீப் பிரியாணி சாப்பிடுறது தப்பா, சரியா? இங்க ஒருத்தர் பீப் பிர்யாணிலாம் நாய் தான் சாப்பிடும்னு சொல்லுறார அவர என்ன செய்யலாம்னு ஒரு ஐடியா கொடுத்துட்டு போறது அவ்வ்!

      Delete
  12. ரோபின்,

    //ஆதித்திகர்களைவிட நாத்திகர்களே கடவுளைப் பற்றி அதிகம் எழுதுகின்றனர்.//

    நாத்திகர்களை விட ஆத்திகர்களே ,நாத்திகம் பத்தி அதிகம் பதிவு எழுதுகின்றனர், ஒரு வேளை நாத்திக நம்பிக்கை அவங்களுக்கு தான் அதிகமோ :-))

    நல்ல உதாரணம் அடியேனே ,நாம நாத்திகம் பத்திலாம் பதிவு எழுதுவதேயில்லை ஆனால் அதிகம் நாத்திகம் குறித்து கவலைப்பட்டு பதிவு எழுதுறது பாகவதர் :-))

    ReplyDelete
    Replies
    1. \\ஆனால் அதிகம் நாத்திகம் குறித்து கவலைப்பட்டு பதிவு எழுதுறது பாகவதர் :-))\\நாத்தீகர்கள் கூமுட்டைகள், அதுகள் விடுவது கப்சா. அதை நம்பி ஏமாற வேண்டாம் என ஆத்தீகர்களுக்கு விளக்குவது நமது கடமை, அதைப் பார்த்து நாத்தீகர்கள் திருந்தினால் அது போனஸ்.

      Delete
    2. பாகவதரே,

      //நாத்தீகர்கள் கூமுட்டைகள், அதுகள் விடுவது கப்சா. அதை நம்பி ஏமாற வேண்டாம் என ஆத்தீகர்களுக்கு விளக்குவது நமது கடமை, அதைப் பார்த்து நாத்தீகர்கள் திருந்தினால் அது போனஸ்./

      ராபினுக்கு இந்த பதிலை ரி டைரக்ட் செய்கிறோம், நாத்திகர்கள் பதிவெழுதவும் இப்படியான காரணமே :-))

      நீர் இப்படி எதாவது உளறுவீர்னு தெரிஞ்சு தான் அந்த கேள்விய போட்டேன் இப்போ உம்மை வச்சே ரோபினுக்கு பதில் சொல்லியாச்சு ,எதுக்கு வேலைமெனக்கெட்டு ரோபினுக்கு பதில் என்ன சொல்லலாம்னு யோசிக்கணும் :-))

      Delete
  13. பாகவதரே,

    ஏலியன் போட்ட பின்னூட்டங்களை காணோம்,தூக்கிட்டீரா? அவ்ளோ பயமிருந்தா எதுக்கு இந்த பதிவ எல்லாம் போட்டுக்கிட்டு அவ்வ்!

    ReplyDelete
    Replies
    1. @ வவ்வால்

      காக்கா உமது தலையில் எச்சமிட்டால் போய் குளிப்பீரா இல்லையா? அதற்காக காக்கையை பயந்து நடுங்குகிறீர் என்று அர்த்தமா? பதிவுக்கு சம்பந்தமில்லாமல், உளறுவதை அனுமதிக்க இயலாது.

      Delete
    2. அடடே இந்த பதிவே மாபெரும் உளறல், இதில ஏலியன் உளறலும் இருந்தா என்னா தப்பு அவ்வ்!

      Delete
    3. ஒய் ஏலியன் ,ஒய் டெங்க்சன்? காமெடி டிராக்ய்யா இதெல்லாம், கலாய்ச்சு ,சொக்காய கிளிக்க விடனும், டேக் இட் ஈசி!!!

      இப்ப எப்படி அடுப்பே பத்த வைக்காம வறுத்தெடுக்கிறேன்னு கொஞ்சம் வேடிக்கை பாரும் :-))

      Delete
  14. நீங்க கூட எல்லா சாமியார்களையும் கிழித்தீர்கள்;
    அப்ப எல்லா சாமியாரும் உண்மையா? சாமியார் என்றாலே போலி தானே!

    நீங்கள் சொல்வீர்கள் கடவுளைத் தவிர மீதி எல்லாம் டூப்பு என்கிறீர்கள்.
    நாத்திகர்கள் கடவுளே டூப்பு என்கிரர்கள். இவரகள் கடவுளைப் பற்றி பேசினால் கடவுள் இருக்கு என்று அர்த்தம் கொடுத்தால்...சாமியார்களை கிழித்த உங்களுக்கு?

    ReplyDelete
  15. Special to you : கடவுளை சொந்தம் கொண்டாடும் சாமானியரை என்ன செய்ய ?

    http://www.saraladevi.com/2013/12/blog-post_10.html

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் சார்,

      தயவு பண்ணி தமிழிலேயே பின்னூட்டம் போடுங்க, நமக்கு ஆங்கிலம் அவ்வளவா வராது. இங்கே விவாதப் பொருள் படைப்பின் பின்னணியில் பௌதீக சமாசாரம் [அதாவது கல்லு, மண்ணு போன்றவை] அல்லாத சிந்திக்கத் தெரிந்த ஒருத்தர் இருக்கிறாரா, இல்லை எல்லாம் தானாகவே வந்ததா என்பது தான்.

      நீங்கள் சொன்ன பதிவில் பெண்ணை ஏன் அந்த 7 நாட்களில் கோவிலுக்குள் விடுவதில்லை, பெண்ணுரிமை போன்ற சங்கதிகள் விவரிக்கப் பட்டுள்ளன. அது இப்போதைய தலைப்பு அல்ல. வேண்டுமானால் இன்னொரு பதிவில் அதை தனியாக விவாதிப்போம், பொறுத்திருங்கள்..............

      Delete
    2. உணர்ந்து விட்டதை உணர வைப்பது மிகவும் சிரமம்... அது தேவையுமில்லை... ஏனோ ம்... மற்றபடி உங்களின் விருப்பம்... இன்னும் நீங்கள் முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும்... நன்றி...

      Delete
    3. தனபாலன் சார்,

      அந்தப் பதிவு என்ன சொல்ல வருகிறது என்று நான் சொல்லிவிட்டேன், அது தவறு என்றால், அதிலிருந்து நான் என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை சற்று தெளிவாக்கினால் நலமாக இருக்கும்.

      உலகில் நாம்தான் புத்திசாலி, என்னோட புரிதல் தான் சரியானது, என் அளவுக்கு வேறு யாரால் புரிந்துகொள்ள முடியும் ........... இப்படியெல்லாம் சிந்தனை மனிதனுக்கு வருவது இயல்பே. ஆனால் அது உண்மையல்ல. அவரவற்க்கென்று ஒரு எல்லை உள்ளது, அதே சமயம் அவ்வளவாக விஷயம் தெரியாதவராக இருந்தாலும் நன்கு விஷயம் தெரிந்தவரின் வழிகாட்டுதல் இருந்தால் போதும் வாழ்க்கை வெற்றியடையும்.

      Delete
  16. //சரியான விடை எங்கே கிடைக்கும் எனத் தேடிக் கண்டுபிடிப்பது ஒருவருடைய புத்திசாலித் தனத்தைப் பொருத்தது. //
    அப்படிஎன்றால் கடவுள் புத்திசாலிகளுக்கு மட்டும் தான், பாமரர்களுக்கு கிடையாது? :) அந்தா புத்திசாலித்தனம் எந்த கடையில் கிடைக்கும்?

    //
    நீங்கள் முடிப்பது சிந்திக்கத் தெரியாத ஜடத்தில், நாங்கள் முடிப்பது சிந்திக்கத் தெரிந்த ஒருவனிடம் அவ்வளவுதான் வேறுபாடு.//

    நாங்கள் முடிப்பது தெரியாது என்ற வெற்றிடத்தில், நீங்கள் அந்த வெற்றிடம் தான் எங்களை படைச்ச கடவுள் என்கிறீர்கள்.

    //ஆரம்பமும் இல்லாம, முடிவும் இல்லாம எப்பவும் இருப்பதா? அதெப்படி? தற்போதைய அனுபவத்தை வைத்து இதை புரிந்து கொள்வது இயலாத காரியம்.//

    அவ்வளவு கஷ்டமான அந்த விஷயம் இருந்து யாருக்கு பயன்? அதை புரிய எங்க போய் அனுபவம் பெறுவது? தன்னை படைச்சது யாருன்னு தேடுவதே ஒவ்வொருத்தனுடைய வேலையா இருக்கனுமா?

    //ஒரு வீட்டை நீங்கள் கட்டிவிட்டீர்கள், அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகும்? கொஞ்சம் கொஞ்சமாக குட்டிச் சுவராகும். எனவே அதைப் பராமரிக்க வேண்டும். //

    அப்ப உங்க (சக்திவாய்ந்த) கடவுளும் நானும் ஒன்றுதானே?

    //அதே மாதிரி, இறைவன் என்பவன் மட்டுமே நிஜம், அதர்மம் என்பது இறைவனை மறத்தல் மட்டுமே.//
    இப்படி நீங்களே முடிவு பண்ணிட்டு ஏன் விவாதத்தை துவங்க வேண்டும்?


    //நீங்க சொல்லும் யோசனையைக் கேட்டு செயல்படும் துரதிர்ஷ்டவசமான நிலையில் கடவுள் இல்லை, எப்போ எதைச் செய்யனும்னு அவனுக்குத் தெரியும்.//

    பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு.


    ReplyDelete
  17. \\அப்படிஎன்றால் கடவுள் புத்திசாலிகளுக்கு மட்டும் தான், பாமரர்களுக்கு கிடையாது? :) அந்தா புத்திசாலித்தனம் எந்த கடையில் கிடைக்கும்?\\ வாங்க ஜீவா பரமசாமி!! பதிவை முழுதும் படித்து பின்னூட்டம் போட்டதற்கு மிக்க நன்றி!! நான் பதிவில் புத்திசாலி என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர, படித்தவன் என்றோ டாக்டர் பட்டம் வாங்கியவன் என்றோ சொல்லவில்லை. பாமரன் என்றால் பள்ளிக்குச் செல்லாதவர் என்று வைத்துக் கொள்ளலாம், உங்கள் கணக்குப் படி அப்படிப் பட்டவர்கள் புத்திசாலிகளாக இருக்க முடியாதா? எவ்வளவு கீழ்த் தரமான சிந்தனையில் உள்ளீர்கள் அன்பரே? பாமரர்களுக்கு வக்கீலாக நினைக்கும் நீங்கள் அவர்களை முட்டாள்கள் என்ற அர்த்தத்தில் எழுதியிருக்கிறீர்கள். உம்மைப் போன்ற நாத்தீகர்களுக்கு தெளிவான சிந்தனை கிடையாது என்பதற்கு இந்த மூன்றாம் தர சிந்தனையே சாட்சி. இந்தியாவின் எடிசன் என்று பெயர் பெற்ற திரு.GD நாயுடு அவர்கள் ஆரம்பக் கல்வியைக் கூடத் தாண்டாதவர், ஆனாலும் அவரை "கோடியில் ஒருத்தர் என்றாலும் மிகையாகாது" என்று நோபல் பரிசை வென்ற சர்.சி.வி. இராமன் அவர்களே புகழ்ந்துள்ளாரே? உங்க கணக்குப் படி அதிகம் கற்காத திரு.GD நாயுடு அவர்கள் புத்திசாலி இல்லை என்பீரா? படிப்பிற்கும் புத்திசாலித் தனத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, அதை முதலில் நீர் விளங்கிக் கொள்ளும். படித்தவன் மட்டுமே அறிவாளி, படிக்காதவன் ஒன்றும் விளங்கிக் கொள்ள மாட்டான் என்ற கீழ்த்தரமான சிந்தனையை தூக்கி எறியுங்கள் அன்பரே.


    \\நாங்கள் முடிப்பது தெரியாது என்ற வெற்றிடத்தில், நீங்கள் அந்த வெற்றிடம் தான் எங்களை படைச்ச கடவுள் என்கிறீர்கள்.\\ வெற்றிடம் தான் கடவுள் என்ற தத்துவத்தை சிலர் பின்பற்றலாம், ஆனால் நான் அதை ஆதரிப்பதாக எங்கும் கூறவில்லை. இவ்வளவு அழகான உலகைப் படைத்த இறைவன் இருப்பதிலேயே மிக அழகாக இருப்பான்.

    \\அவ்வளவு கஷ்டமான அந்த விஷயம் இருந்து யாருக்கு பயன்? \\ நீர் உண்ணும் ஒவ்வொரு பருக்கை உணவு, குடிக்கும் ஒவ்வொரு சொட்டு நீர், சுவாசிக்கும் ஒவ்வொரு மூலக்கூறு காற்று, அனுபவிக்கும் ஒவ்வொரு ஃபோட்டான் சூரிய ஒளி இவையனைத்தவும் கொடுத்த இறைவனைப் பயனற்றவன் என்று சொல்லலாமா? இறைவன் படைக்கவில்லை என்றால் எவன் செய்தான் அவனைக் கொண்டுவாரும் இல்லாவிட்டால் அதை செய்தவன் யாரோ/எதுவோ தெரியாவிட்டாலும் அவனுக்கு நன்றி சொல்லும்.

    \\அதை புரிய எங்க போய் அனுபவம் பெறுவது? \\பொறியியல், மருத்துவம், சட்டம் என அந்தந்த துறைகளுக்கும் வல்லுனர்கள் இருப்பதுபோல, இறைவனைப் பற்றிய விஞ்ஞானத்தைப் போதிக்கவும் வல்லுனர்கள் நிச்சயம் இருப்பார்கள், நீர் புத்திசாலியாக இருந்தால் தேடிக் கண்டுபிடியும்.


    \\தன்னை படைச்சது யாருன்னு தேடுவதே ஒவ்வொருத்தனுடைய வேலையா இருக்கனுமா?\\ சாப்பிடுவது, இனவிருத்தி செய்வது, உறக்கம், ஆபத்து வந்தால் தற்காத்துக் கொள்ளல் இவற்றை ஆடுமாடு கூட செய்யும். அதையே ஆறறிவு படைத்த மனிதனும் செய்தால் அவனுக்கும் ஆடு மாடுகளுக்கும் வித்தியாசம் இல்லை. பிறந்தேன், நிச்சயம் ஒருநாள் இறப்பேன், நடுவில் நான் வாழும் வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா என்று தேடினால் மனிதனாய்ப் பிறந்ததற்கு அர்த்தமுண்டு, இல்லாவிட்டால் ஆடு மாடுகளைப் போலவே வாழ்ந்து மடிய வேண்டி வரும், எப்படி வாழவேண்டும் என நீரே முடிவு செய்து கொள்ளும்.

    \\அப்ப உங்க (சக்திவாய்ந்த) கடவுளும் நானும் ஒன்றுதானே?\\ சிலந்தி கூட ஒரு கூட்டை கட்டி வாழும், அப்போ நீரும் சிலந்தியும் ஒன்றா? நீர் வீட்டை கட்டுவீர், அதற்கே கடன் அது இது என்று உசிர் போய்த் திரும்ப வரும், வாங்கிய கடனை அடைக்க விழி பிதுங்கும். ஆனால் இறைவன் இந்த பிரபஞ்சத்தையே லோன் எதுவும் வாங்காமல் அனாசயமாக கட்டுவான், காப்பான், அழிப்பான்.

    \\இப்படி நீங்களே முடிவு பண்ணிட்டு ஏன் விவாதத்தை துவங்க வேண்டும்?\\ அதை தாராளமாக மறுக்க, பதில் விவாதம் சுதந்திரமாக வைக்கவே பின்னூட்டப் பெட்டியை சாவியில்லாமல் திறந்து வைத்துள்ளேன். உங்கள் கருத்தை வையுங்கள், சரி தவறு எது என்று பார்ப்போம்.


    \\பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு.\\ அதை அவரு பார்த்துக்குவாறு, நீங்க ஃபியூஸ் ஆகாமப் பார்த்துக்கோங்க!!

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  18. என்னைப் பொருத்தவரையில் பாமரன் என்பவன் அறியாதவன். அந்த பாமரனுக்கு மழை எப்படி வருது, இந்த பூமி தட்டையா? உருளையா என்று சொல்லிக்கொடுத்தது மனிதனா? கடவுளா? பூமி உருளை என்று சொன்னவனை கடவுள்(பக்தர்கள்) என்ன செய்தார்கள்?

    வெற்றிடம் தான் பலரின் கடவுள் (உங்க கடவுள் இல்ல) என்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

    இறைவன் படைக்கவில்லை என்றால் எவன் செய்தான் அவனைக் கொண்டுவாரும் இல்லாவிட்டால் அதை செய்தவன் யாரோ/எதுவோ தெரியாவிட்டாலும் அவனுக்கு நன்றி சொல்லும்.// அது தான் வெற்றிடம் (தெரியாது) என்பது பதில். தெரியாத ஒன்றிற்கு எப்படி நன்றி சொல்வது? ஓ.. அதான் கண்களை மூடி கும்பிடச் சொல்கிறார்களோ...

    இறைவனைப் பற்றிய விஞ்ஞானத்தைப் போதிக்கவும் வல்லுனர்கள் நிச்சயம் இருப்பார்கள், நீர் புத்திசாலியாக இருந்தால் தேடிக் கண்டுபிடியும்.//அவர்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு அடியேனுக்கு புத்தி இல்லை.



    //ஆடு மாடுகளைப் போலவே வாழ்ந்து மடிய வேண்டி வரும், எப்படி வாழவேண்டும் என நீரே முடிவு செய்து கொள்ளும்.// நான் இவர்களை சாப்பிடும் இனம் (மாமிச உண்ணி). :)

    ஆனால் இறைவன் இந்த பிரபஞ்சத்தையே லோன் எதுவும் வாங்காமல் அனாசயமாக கட்டுவான், காப்பான், அழிப்பான்.// இறைவனுக்கு credit score பத்தாது போல அதான் கடன் கிடைக்கல :)

    அதை அவரு பார்த்துக்குவாறு, நீங்க ஃபியூஸ் ஆகாமப் பார்த்துக்கோங்க!! // எல்லா உயிருக்கும் ஓர் நான் ஃபியூஸ் போகும் நண்பரே (கடவுளின் அவதாரம், பிள்ளைகள் உள்பட).

    நன்றி,








    ReplyDelete
    Replies
    1. \\என்னைப் பொருத்தவரையில் பாமரன் என்பவன் அறியாதவன்.\\ அறியாதவன் என்பதை எந்த ஸ்கேலை வைத்துச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொருத்தருக்கும் ஏதே ஒரு திறமை இருக்கும். கம்பியூட்டரை நோண்டுவது மட்டுமே திறமை, அவன் ஒருத்தனே அறிந்தவன் என்று அர்த்தம் அல்ல, விவசாயம் பார்ப்பது , சமைப்பது எல்லாமே திறமை தான். பறவை ஐந்தறிவு கொண்டதுதான் என்றாலும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து சேரும் பறவைகளும் உண்டு, எனவே அறிந்தவன் அறியாவன் என்பது relative terms. நான் சொன்ன புத்திசாலித் தனம் இறைவன் இருக்கிறான் என்று அறிந்து கொள்ளும் புத்திசாலித் தனம். அது பாமரனுக்கும் இருக்கும் அல்லது நோபல் பரிசே வாங்கியவனுக்கும் இல்லாமலும் இருக்கும்.



      \\அந்த பாமரனுக்கு மழை எப்படி வருது, இந்த பூமி தட்டையா? உருளையா என்று சொல்லிக்கொடுத்தது மனிதனா? கடவுளா? பூமி உருளை என்று சொன்னவனை கடவுள்(பக்தர்கள்) என்ன செய்தார்கள்? \\ பூமி உருண்டை என்று சொல்லி எத்தனை நூறு வருடங்கள் ஆகின்றது? அதற்க்கு சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதப் பட்ட ஸ்ரீமத் பாகவதத்தில் வராக தேவர் பூமி உருண்டையை கொம்பில் எடுத்து வந்ததாக கதை உள்ளதே? பூகோளம் என்ற வார்த்தை புராணங்களில் கையாளப் பட்டுள்ளதே? கோலம் என்றால் உருண்டை அல்லவா? தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று கண்டுபிடிக்கப் பட்டது சில நூறு வருடங்களுக்கு முன்னர் தான். அனால் அவ்வுண்மை பல்லாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப் பட்ட வேதங்களில் சொல்லப் பட்டுள்ளதே எப்படி? அறிவியல் தான் எல்லாத்தையும் சொல்லிச்சு என்று நீர் நினைத்தால் திருத்துக் கொள்ளும்.

      \\வெற்றிடம் தான் பலரின் கடவுள் (உங்க கடவுள் இல்ல) என்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி.\\ அவரவர்க்கு எந்த அளவுக்கு உண்மையை பார்க்கும் சக்தி இருக்கிறதோ அதைப் பொறுத்தது.

      \\அது தான் வெற்றிடம் (தெரியாது) என்பது பதில். தெரியாத ஒன்றிற்கு எப்படி நன்றி சொல்வது? ஓ.. அதான் கண்களை மூடி கும்பிடச் சொல்கிறார்களோ...\\ நாத்தீகர்க்ளுக்கென்று ஒரு கொள்கைப் பிடிப்பும் கிடையாது என்பதை நீங்கள் நிரூபிக்கிறீர்கள் அன்பரே. பிரபஞ்சம் தோன்றும் முன்னர் காலமும் இல்லை, இடமும் இல்லை என்பதே இன்றைய அறிவியல் கூற்று, நீர் வெற்றிடம் இருந்ததாகச் சொல்கிறீர். அறிவியலும் தெரியாது, ஆன்மீகமும் தெரியாது, கள்ளச் சாமியார்களை மட்டுமே தெரியும். கோண புத்தியில் எது தோன்றுகிறதோ அதை உண்மை என்று உளருவதே நாத்தீகர்கள் தொழில்.

      \\அவர்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு அடியேனுக்கு புத்தி இல்லை.\\ விருப்பம் இருந்தால் புத்தி தானே வரும்.



      \\ நான் இவர்களை சாப்பிடும் இனம் (மாமிச உண்ணி). :) \\ மாமிசம் நாய், ஓநாய், நரி போன்றவை உண்ணத் தக்கவை, மனிதன் உண்ணத் தக்கது அல்ல.

      \\இறைவனுக்கு credit score பத்தாது போல அதான் கடன் கிடைக்கல :)\\ உலகைப் படைக்க அவனுக்கு லோன் தேவையில்லை, பக்தர்களின் அன்பை திருப்பியடைக்க அவனுக்கு கிரெடிட் score பத்தவில்லை.

      \\எல்லா உயிருக்கும் ஓர் நான் ஃபியூஸ் போகும் நண்பரே\\ அது நடப்பதற்கும் முன்னர் வாழ்வின் பயனை அடைய முயற்சி செய்யுங்கள் அன்பரே..................

      Delete
  19. பாகவதரே,

    // நான் பதிவில் புத்திசாலி என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர, படித்தவன் என்றோ டாக்டர் பட்டம் வாங்கியவன் என்றோ சொல்லவில்லை. பாமரன் என்றால் பள்ளிக்குச் செல்லாதவர் என்று வைத்துக் கொள்ளலாம், உங்கள் கணக்குப் படி அப்படிப் பட்டவர்கள் புத்திசாலிகளாக இருக்க முடியாதா? எவ்வளவு கீழ்த் தரமான சிந்தனையில் உள்ளீர்கள் //

    ஓஹோ , புத்திசாலியா படிக்காதவன் இருக்கமாட்டானா? என நியாயமா கேள்விக்கேட்டீரே , அப்போ , பகவத் கீதை புரிஞ்சிக்க ஏன் குருவை தேடனும்,படிக்க தெரிஞ்சவனே படிச்சு புரிஞ்சுக மாட்டானா? இல்லை யாராவது படிக்க சொல்லிக்கேட்டால் புரிஞ்சுக்க மாட்டானா?

    அப்போ சிலருக்குலாம் அவங்களா புரிஞ்சுக்க தகுதி இல்லைனு நினைக்கும் நீர் எவ்வளவு கீழ்த்தரமான ஆளூ?

    # அப்புறம் கோடான கோடி மக்கள் ஆடு ,கோழி,மாடு,ஒட்டகம்னு ,அவங்க சாமிக்கு படைச்சு ,சாராயம் கூட வச்சு கும்பிட்டு சாப்பிடுறாங்க,ஆனால் நீர் சிக்கன் பிரியாணி,பீப் பிரியாணி நாய் சாப்பிடுறதுனு சொன்னீர் ,அப்போ நீர் எந்த அளவு கீழ் தரமானவர்?

    என்னிக்காவது எந்த சாமியாவது , சைவ பொங்கல் வச்சா மட்டும் நேரா வந்து சாப்பிட்டு இருக்கா? இல்லையே! அப்போ கடவுளுக்கு சைவமாத்தான் சோறு போடனும்னு சொல்லி ஏமாத்தும் நீர் எந்த அளவுக்கு கீழ் தரமான ஆளு?

    சிக்கன்,பீப் சாப்பிடுறவங்கள நாய்னு சொன்ன உமக்கு , சரியான மூளை வளர்ச்சியே இல்லை, கீழ்தரமான ஒரு ஜந்துனு சொன்னால் என்ன தப்பு :-))

    இஸ்லாமியர்கள் எல்லாம் பீப் பிரியாணி சாப்பிடுறாங்க அப்போ அவங்கலாம் நாயா?

    இந்தியாவில மாமிசம் சாப்பிடுற பார்ப்பனர்கள் உட்பட நிறைய பேரு இருக்காங்க அவங்கலாம் நாயா?

    //இவ்வளவு அழகான உலகைப் படைத்த இறைவன் இருப்பதிலேயே மிக அழகாக இருப்பான்.//

    அந்த அழகான இறைவன் சுடலைமாடன் சாமி தானே!!!

    அந்த அழகான இறைவனுக்கு கடா வெட்டி,பொங்கல் வச்சு,சாராயம் வச்சு கும்பிடலாமே!!!

    #// இறைவன் படைக்கவில்லை என்றால் எவன் செய்தான் அவனைக் கொண்டுவாரும்//

    சுடலைமாடன் தான் செய்தாப்படி, வரீரா போய் கடவெட்டி ,பொங்க வச்சு ,சாராயம் குடிச்சு கும்பிட்டு வருவோம் :-))

    # //ஆனால் இறைவன் இந்த பிரபஞ்சத்தையே லோன் எதுவும் வாங்காமல் அனாசயமாக கட்டுவான், காப்பான், அழிப்பான்.//

    ஆமாம் சுடலைமாட்ட்டன் அநாயசமாக செய்வான் , ஒத்துக்கீறிரா?

    # // சுதந்திரமாக வைக்கவே பின்னூட்டப் பெட்டியை சாவியில்லாமல் திறந்து வைத்துள்ளேன். உங்கள் கருத்தை வையுங்கள், சரி தவறு எது என்று பார்ப்போம்.//

    ஓய் அதை எல்லாம் நீர் சொல்லப்படாது, இந்தப்பதிவுலவே ஏலியன் போட்ட பின்னூட்டங்களை வேலை மெனக்கெட்டு அழிச்ச ஆளு நீர் :-))

    ReplyDelete
    Replies
    1. \\அப்போ , பகவத் கீதை புரிஞ்சிக்க ஏன் குருவை தேடனும்,படிக்க தெரிஞ்சவனே படிச்சு புரிஞ்சுக மாட்டானா? இல்லை யாராவது படிக்க சொல்லிக்கேட்டால் புரிஞ்சுக்க மாட்டானா? \\வவ்வால்!! கூமுட்டைகளுக்கென்று ஒரு போட்டி வைத்தால் கோல்ட் மெடல் உமக்குத்தான்யா!! மருந்துக் கடைக்குப் போறீர், மருந்தை வாங்குகிறீர், அதன் அட்டையில் எவ்வளவு டோஸ் சாப்பிடனும், ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிடனும், சாப்பாட்டுக்கு முன்னாடிய பின்னாடியா என பல விவரங்கள் இருக்கும். அதன் படி சாப்பிடலாம் என ஒருத்தன் முடிவெடுத்தால் அவன் முட்டாளா? ஸ்ரீமத் பகத் கீதையை எவ்வாறு படிக்க வேண்டும் என்று கீதையிலே சொல்லப் பட்டுள்ளது.

      http://www.asitis.com/4/34.html


      கீதையை பின்பற்றத் தக்கது என்றால் முழுசாகப் பின்பற்ற வேண்டும், அப்படியானால் மேலே உள்ள சுலோகத்தில் சொன்னதையும் ஏற்க வேண்டும். அல்லது பின்பற்றத் தக்க நூல் அல்ல என்றால் கீதையை படிக்காமலேயே நிராகரித்துவிட வேண்டும். திருக்குறளை படித்து, வியாக்கினாம் எழுதிவிட்டு, அப்படியே நாயோட லெக் பீஸையும் தின்னுவது போன்ற வேலையை இங்கேயும் செய்ய வேண்டுமா? கள் உண்ணாமையப் பற்றி படித்த நீர் பாண்டிச் சேரி போய் சரக்கடித்துவிட்டு வீதியில் மல்லாந்த கதை தான் ஊருக்கே தெரியுமே? படிப்பது ஒன்று செய்வது வேறு இது உமது பாலிசி...........

      எமது பாலிசி என்ன தெரியுமா?

      கற்க கசடற கற்பவை கற்றபின்
      நிற்க அதற்குத் தக.


      \\அப்போ சிலருக்குலாம் அவங்களா புரிஞ்சுக்க தகுதி இல்லைனு நினைக்கும் நீர் எவ்வளவு கீழ்த்தரமான ஆளூ?\\ பதில் மேலே சொல்லியாச்சு.

      \\# அப்புறம் கோடான கோடி மக்கள் ஆடு ,கோழி,மாடு,ஒட்டகம்னு ,அவங்க சாமிக்கு படைச்சு ,சாராயம் கூட வச்சு கும்பிட்டு சாப்பிடுறாங்க,ஆனால் நீர் சிக்கன் பிரியாணி,பீப் பிரியாணி நாய் சாப்பிடுறதுனு சொன்னீர் ,அப்போ நீர் எந்த அளவு கீழ் தரமானவர்?

      என்னிக்காவது எந்த சாமியாவது , சைவ பொங்கல் வச்சா மட்டும் நேரா வந்து சாப்பிட்டு இருக்கா? இல்லையே! அப்போ கடவுளுக்கு சைவமாத்தான் சோறு போடனும்னு சொல்லி ஏமாத்தும் நீர் எந்த அளவுக்கு கீழ் தரமான ஆளு?

      சிக்கன்,பீப் சாப்பிடுறவங்கள நாய்னு சொன்ன உமக்கு , சரியான மூளை வளர்ச்சியே இல்லை, கீழ்தரமான ஒரு ஜந்துனு சொன்னால் என்ன தப்பு :-))

      இஸ்லாமியர்கள் எல்லாம் பீப் பிரியாணி சாப்பிடுறாங்க அப்போ அவங்கலாம் நாயா?

      இந்தியாவில மாமிசம் சாப்பிடுற பார்ப்பனர்கள் உட்பட நிறைய பேரு இருக்காங்க அவங்கலாம் நாயா?\\

      அந்த குறிப்பிட்ட உணவு அதன் உடலமைப்புக்கு ஏற்றது என்று சொன்னேன், அதிலென்ன தவறு? வாழைப் பழம் குரங்கின் உடல் தகவமைப்புக்கு ஏற்றது என்றால், உம்மை குரங்கு என்று சொன்னதாகிவிடுமா? கொஞ்சம் கூட நேர் சிந்தனையே வராதா உமக்கு? அதுசரி நீர் ஏன் எப்போ பார்த்தாலும் சமையல், அடுப்பே இல்லாம வருக்கிறேன் பாரு அப்படி இப்படின்னு சமைக்கிறதைப் பத்தியே பேசுறீரு? வீட்டில் நீரே சமைத்து உன்கிரீரா?

      \\அந்த அழகான இறைவனுக்கு கடா வெட்டி,பொங்கல் வச்சு,சாராயம் வச்சு கும்பிடலாமே!!!\\ அது நீர் இறைவனைப் பற்றி விளங்கிக் கொண்டதைப் பொறுத்தது.

      \\ஆமாம் சுடலைமாட்ட்டன் அநாயசமாக செய்வான் , ஒத்துக்கீறிரா?\\ சுடலை மாடனை -சுடலைமாட்ட்டன் என்று ஆக்கிவிட்டீறு, அடுத்து எப்ப பார்த்தாலும் மட்டன் மட்டன் அப்படின்னு பேசிப் பேசி, சுடலை மாடனை சுடலை மட்டன் ஆக்கிடாதீருமைய்யா!!

      \\ஓய் அதை எல்லாம் நீர் சொல்லப்படாது, இந்தப்பதிவுலவே ஏலியன் போட்ட பின்னூட்டங்களை வேலை மெனக்கெட்டு அழிச்ச ஆளு நீர் :-))\\ அதுக்காக மனநிலை குன்றியவர்களை எல்லாம் கடைக்குள்ள சேர்க்க முடியாது போமைய்யா...................

      Delete
    2. அதாவது, ஒரு மனநலம் குன்றியவனின் பதில் இன்னொரு மனநலம் குன்றியவனுக்குத்தான் புரியும் என்பதால், சாதாரமானவர்களுக்கு இதன் அர்த்தம் புரியாது. அதனால் நான் வவ்வாலுக்கு translate பண்றேன்.

      கீதையை மருந்து கூட compare பண்ணி ஜெயதேவ் பதிலளித்து இருப்பதால், கீழே உள்ள விளக்கம்.

      மருந்தை கண்டுபித்தவன் மனிதன்.
      மருந்து ஆரோக்கியமானவர்களுக்கு தேவை இல்லை. நோயாளிகளுக்குத்தான் தேவை.
      ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு expiry date இருக்கிறது. அதன் பிறகு அதை சாப்பிட்டால், அது விஷமாகி இன்னும் பெரிய வியாதியில் கொண்டு போய் விடும். அல்லது செத்து போகக்கூடும்.

      கீதையை கண்டுபிச்சவன் மனிதன்.
      அது ஜெயதேவ் மாதிரி மனநலம் பாதிக்க பட்டவர்களுக்குத்தான் தேவை. ஆரோக்கியமானவர்களுக்கு தேவையில்லை.
      இந்த கீதையின் expiry date க்கு (கீதையின் expiry date என்ன???) அப்புறம் அதை படித்தால், அது ஆளைக்கொல்லும் அல்லது இன்னும் பெரிய மனநல பாதிப்பை ஏற்படுத்தும்.

      Delete
    3. //அந்த குறிப்பிட்ட உணவு அதன் உடலமைப்புக்கு ஏற்றது என்று சொன்னேன், அதிலென்ன தவறு? வாழைப் பழம் குரங்கின் உடல் தகவமைப்புக்கு ஏற்றது என்றால், உம்மை குரங்கு என்று சொன்னதாகிவிடுமா? //

      வாழைப் பழம் குரங்கின் உடல் தகவமைப்புக்கு ஏற்றது தானே?. நீர் ஏன் தினமும் வாழைப்பழம் சாப்பிடுகிறீர்?

      Delete
    4. @ Alien A

      \\மருந்தை கண்டுபித்தவன் மனிதன்.
      மருந்து ஆரோக்கியமானவர்களுக்கு தேவை இல்லை. நோயாளிகளுக்குத்தான் தேவை.
      ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு expiry date இருக்கிறது. அதன் பிறகு அதை சாப்பிட்டால், அது விஷமாகி இன்னும் பெரிய வியாதியில் கொண்டு போய் விடும். அல்லது செத்து போகக்கூடும்.\\


      ஒரு உதாரணத்தைச் சொன்னால் அதிலிருந்து கொள்ள வேண்டுமோ அதை விட்டுவிட்டு அதை பிச்சு பிச்சு பார்த்துகிட்டா இருப்பீரு? "நாலு நீயும் போ" என்று ஒருத்தனிடம் அறிவுரை சொன்னால், அவன் அதை கொண்டு நாலு பேர் பிணம் தூக்குபவர்கள் பின்னல் போனானாம். உம்மிடம் maturity இல்லை.

      \\அது ஜெயதேவ் மாதிரி மனநலம் பாதிக்க பட்டவர்களுக்குத்தான் தேவை.\\ மன நல .பாதிப்பு எல்லோருக்குமே இருக்கும், சிலருக்கு யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்தாத வகையில் இருக்கும்,
      சிலருக்கு உம்மைப் கிழித்துக் கொன்று அலையும் அளவுக்கு இருக்கும்.

      \\
      வாழைப் பழம் குரங்கின் உடல் தகவமைப்புக்கு ஏற்றது தானே?. நீர் ஏன் தினமும் வாழைப்பழம் சாப்பிடுகிறீர்?\\ நீர் உண்ணுவது அனைத்துமே பண்ணியும் உண்ணும். அதுக்காக நீர் உண்ணும் அனைத்தையும் நிருத்திவிடுவீரா அல்லது பனியோடு சேர்ந்து பண்ணி உண்ணுவதை எல்லாம் நீரும் உண்பீரா?

      Delete
    5. //ஒரு உதாரணத்தைச் சொன்னால் அதிலிருந்து கொள்ள வேண்டுமோ அதை விட்டுவிட்டு அதை பிச்சு பிச்சு பார்த்துகிட்டா இருப்பீரு? "நாலு நீயும் போ" என்று ஒருத்தனிடம் அறிவுரை சொன்னால், அவன் அதை கொண்டு நாலு பேர் பிணம் தூக்குபவர்கள் பின்னல் போனானாம். //

      நீர் தந்த அதே உதாரணத்தைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன். உதாரணத்தில் உமக்கு சாதகமான பகுதி இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். உமக்கு எதிரான பகுதி இருந்தால் அதை எடுத்துக்கக்கூடாது. அதுதானே உமது நியாயம். நல்ல நியாயம் இது. இப்படியே follow பண்ணும்.

      //உம்மிடம் maturity இல்லை.//
      ஹி..ஹி..ஹி...இல்லை தான்...இந்த பதிவ படிச்சா, பின்ன, maturity எப்படி வரும்?
      (எனக்கு, என்னை பற்றி என்ன சொன்னாலும் கோபம் வராது. நாத்திகர்களையோ நாத்திகத்தைப் பற்றியோ கேவலமாகப் பேசினால் தான் கோபம் வரும்.)

      //வாழைப் பழம் குரங்கின் உடல் தகவமைப்புக்கு ஏற்றது தானே?. நீர் ஏன் தினமும் வாழைப்பழம் சாப்பிடுகிறீர்?\\ நீர் உண்ணுவது அனைத்துமே பண்ணியும் உண்ணும். அதுக்காக நீர் உண்ணும் அனைத்தையும் நிருத்திவிடுவீரா//

      இல்லை.
      இதே பதில் தான் உமக்கும்.
      குரங்கின் உடல் தகவமைப்புக்கு ஏற்ற வாழைப்பழத்தை நீர் சாப்பிடுவது போல, நாயின் உடல் தகவமைப்புக்கு ஏற்ற மாமிசத்தை / பிரியாணியை நாங்களும் சாப்பிடுகிறோம்.

      Delete
  20. குறள் சொன்னது மிகவும் சிறப்பு...

    இந்தக் குறளுக்கு அளவிட முடியாத பதிவுகள் இடலாம்... நன்றி... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. வேற்றுகிரவாசி,

    நீரும் நல்லாப்போட்டு வாங்குறீரே :-))

    நம்ம பாகவதரோட சிறப்பு என்னவெனில் ,அவருக்கு பதில் சொல்ல நாம கஷ்டப்படவே வேணாம், அவரோட பினாத்தலில் இருந்தே பதில் கொடுக்கலாம் :-))

    =====

    பாகவதரே,

    புக்க எழுதுனவன் ,அனைவரும் படிச்சு பயன்பெறமாறு எழுதனும்,அப்படி இல்லாம எழுதினால் அவன் முட்டாளே, எனவே கீதையை யாரும் புரிஞ்சுக்காம எழுதினவன் முட்டாளே!

    # நாத்திகம் பத்தி பேசனும்னாலும்,அதுக்குனும் புக்கு இருக்கு,அதையும் ஒரு குருகிட்ட சேர்ந்து கத்துக்கிட்டு தான் பேசனும் , எனவே நீரும் நாத்திகம் பத்தி வாய தொறக்காதீர் :-))

    # //கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.//

    இதை நீர் பின்ப்பற்றுறீரா?

    அப்போ ,

    "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்."

    பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லைனு வள்ளுவர் சொன்னதை ஏன் கீதை படிக்கிற நாதாரிகள் பின்ப்பற்றுவதில்லை, சிரி ரெங்கம் கோயிலில் யார் மணியாட்டி ,சூடம் கொளுத்தினால் என்னா? ஏன் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்னு சொன்னால் விட மாட்டேங்குது ஒரு உண்டக்கட்டி கோஷ்டி?

    நீர் கீதைய படி இல்லை சீதையை புடி ? எவன் கேட்கப்போறான், கடவுள் இருக்காருன்னா அவரு படைச்சவன் தான் மனுசன்னா ,அந்த கடவுள பார்க்க, வழிபட என ஏன் இத்தனை கட்டுப்பாடு? எல்லாம் கோயிலுக்குள்ள போயி கும்பிட்டுக்க வேண்டியது தான் ,எதுக்கு அவன் வரக்கூடாது, இவன் வர்ரலாம், இந்த மொழியில தான் மந்திரம் சொல்லணும்னு சொல்லிக்கிட்டு?

    # //கொஞ்சம் கூட நேர் சிந்தனையே வராதா உமக்கு? அதுசரி நீர் ஏன் எப்போ பார்த்தாலும் சமையல், அடுப்பே இல்லாம வருக்கிறேன் பாரு அப்படி இப்படின்னு சமைக்கிறதைப் பத்தியே பேசுறீரு? வீட்டில் நீரே சமைத்து உன்கிரீரா?//

    அப்போ எப்படி நாய் சிக்கன் பிரியாணி சாப்பிடுதுனு சொன்னீர் ,அது சமைச்சா சாப்பிடுது :-))

    குரங்கு வாழைப்பழம் ,சாப்பிடுது, நீரும் வாழைப்பழம் சாப்பிடுறீர் , குரங்கு அம்மணக்குண்டியா அலையுது , நீர் எப்படினு நான் சொல்லமாட்டேன், உம்மை குரங்குனு சொன்னதா நினைச்சுக்க மாட்டீர் ,ஏன்னா உதாரணம் காட்டினால் உம்மை சொன்னதாக ஆகாதுனு உமக்கே தெரியும் :-))

    //அது நீர் இறைவனைப் பற்றி விளங்கிக் கொண்டதைப் பொறுத்தது.//

    அப்போ இறைவனை நீர் இன்னும் விளங்கிக்கவே இல்லையா :-))

    இறைவனுக்கு மாமிசம், சுறாப்பானம், சோமப்பானம் படைச்சதா, யஜீர் வேதத்திலேயே இருக்கு. வேதத்தில உமக்கு தேவையானதை மட்டும் எடுத்து சொல்லி ஏன் மறைக்குறீர், கடவுள் இருக்குனு வேதம் எல்லாம் படிக்கிற மூதேவிங்க ஏன் சிக்கன்,பீப் சாப்பிட வேன்டியது தானே ப்ப்ர்ர்ர்..ட்ர்ர்ர்!

    # சுடலைமாடன் எல்லாம் அறிந்தவர் எப்படி எழுதினாலும் புரிஞ்சிப்பார், கிருஸ்ணா போல மங்குனி இல்லை.

    # கீதை .மகாபாரதத்தில இருக்க ஒரு உட்பிரிவு , அப்போ கீதைய எழுதினது வியாசர் தானே?

    தனது சகோதரன் இறந்தவுடன், அவனது இரு மனைவிகள் மற்றும் வேலைக்காரியுடன் "ஜல்சா" செய்து குழந்தைப்பாக்கியம், கொடுத்த கொடைவள்ளல் வியாசர், எனவே கீதை படிக்கிறவங்க எல்லாம் இந்த வேலைய தான் செய்றாங்களா?

    நீர் கூட கீதையை குருவெல்லாம் வச்சு படிச்சிருக்கீர், அப்போ அவனா நீயி அவ்வ்!(வடிவேல் பாணியில் படிக்கவும்) , அதாவது வியாசர் கொள்கையை பின்ப்பற்றுபவரானு கேட்டேன் , வேற ஒன்னியும் இல்லை அவ்வ்!

    ReplyDelete
  23. \\புக்க எழுதுனவன் ,அனைவரும் படிச்சு பயன்பெறமாறு எழுதனும்,அப்படி இல்லாம எழுதினால் அவன் முட்டாளே, எனவே கீதையை யாரும் புரிஞ்சுக்காம எழுதினவன் முட்டாளே!\\ தேனெடுத்தவன் அதைப் பாட்டிலில் அடைத்துக் கொடுத்து வேண்டும் பொது திறந்து உன்னு என்றால், இல்லையில்லை நான் பாட்டிலைத் தான் நக்குவேன் அப்போதும் இனிக்க வேண்டும் என்று அடம் பிடித்தால் முட்டாள் தேனைக் கொடுத்தவன் அல்ல நீர் தான்.

    \\# நாத்திகம் பத்தி பேசனும்னாலும்,அதுக்குனும் புக்கு இருக்கு,அதையும் ஒரு குருகிட்ட சேர்ந்து கத்துக்கிட்டு தான் பேசனும் , எனவே நீரும் நாத்திகம் பத்தி வாய தொறக்காதீர் :-)) \\ நாதாறித் தனத்துக்கு புக்கு இருக்கட்டும் எனக்கெதுக்கு?

    \\"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்."

    பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லைனு வள்ளுவர் சொன்னதை\\ எல்லாத்தையும் அடித்து தின்னும் நீர் உயர்வு தாழ்வு பற்றி பேசலாமா? நீர் அடித்துத் தின்னும் உயிர் படும் துன்பம் உமக்கு ஒரு போதாவது தெரிந்திருக்குமா? அப்புறம் என்னாத்துக்கு "எல்ல உயிர்க்கும்" ன்னு வியாக்யானம்?

    \\நீர் கீதைய படி இல்லை சீதையை புடி ? எவன் கேட்கப்போறான், கடவுள் இருக்காருன்னா அவரு படைச்சவன் தான் மனுசன்னா ,அந்த கடவுள பார்க்க, வழிபட என ஏன் இத்தனை கட்டுப்பாடு? எல்லாம் கோயிலுக்குள்ள போயி கும்பிட்டுக்க வேண்டியது தான் ,எதுக்கு அவன் வரக்கூடாது, இவன் வர்ரலாம், இந்த மொழியில தான் மந்திரம் சொல்லணும்னு சொல்லிக்கிட்டு?\\ இங்க அதைப் பத்தி நான் எழுதியுள்ளேனா? பிரபஞ்சத்தின் படைப்பின் பின்னணியில் படைப்பாளி இருக்கனா இல்லையா? யாதை உட்டுட்டு கண்ட கண்டதை எமைய்யா பினாத்துரீறு, கூறுகெட்ட குக்கரு?

    \\அப்போ எப்படி நாய் சிக்கன் பிரியாணி சாப்பிடுதுனு சொன்னீர் ,அது சமைச்சா சாப்பிடுது :-))\\ உட்டா அப்படியே சாப்பிடும், அதுக்கென்னா இப்போ?

    \\குரங்கு வாழைப்பழம் ,சாப்பிடுது, நீரும் வாழைப்பழம் சாப்பிடுறீர் , குரங்கு அம்மணக்குண்டியா அலையுது , நீர் எப்படினு நான் சொல்லமாட்டேன், உம்மை குரங்குனு சொன்னதா நினைச்சுக்க மாட்டீர் ,ஏன்னா உதாரணம் காட்டினால் உம்மை சொன்னதாக ஆகாதுனு உமக்கே தெரியும் :-))\\ குறுக்கு மாதிரி இருந்தாலும் பரவாயில்லை, நீர் நாய் துன்னுவதை பிடுங்கி தின்னுகிரீரே நியாயமா? பேன்ட் சட்டை போட்ட நாய் மாதிரி ஆகலாமா?


    \\இறைவனுக்கு மாமிசம், சுறாப்பானம், சோமப்பானம் படைச்சதா, யஜீர் வேதத்திலேயே இருக்கு. வேதத்தில உமக்கு தேவையானதை மட்டும் எடுத்து சொல்லி ஏன் மறைக்குறீர், கடவுள் இருக்குனு வேதம் எல்லாம் படிக்கிற மூதேவிங்க ஏன் சிக்கன்,பீப் சாப்பிட வேன்டியது தானே ப்ப்ர்ர்ர்..ட்ர்ர்ர்!\\ இது தலைப்பில் இல்லை லூசு மாதிரி கண்ட கண்டதை பினாதப் படாது............

    \\# கீதை .மகாபாரதத்தில இருக்க ஒரு உட்பிரிவு , அப்போ கீதைய எழுதினது வியாசர் தானே?\\ அப்படிப் பார்த்தா கண்ணதாசன் பாடல்கள் எல்லாம் அவருக்கு டீ வாங்கி வந்து குடுத்தவன் எழுதியது என்பீறு போலிருக்கே...........

    \\தனது சகோதரன் இறந்தவுடன், அவனது இரு மனைவிகள் மற்றும் வேலைக்காரியுடன் "ஜல்சா" செய்து குழந்தைப்பாக்கியம், கொடுத்த கொடைவள்ளல் வியாசர், எனவே கீதை படிக்கிறவங்க எல்லாம் இந்த வேலைய தான் செய்றாங்களா? \\ யோவ் நீ வெர்டினரி ஆசுபத்திரி பக்கம் போயிடாதீரும், அங்கே டாக்டர் எருமை மட்டோட சல்சா பண்ணிக்கிட்டு இருந்தார்னு சொல்லிடுவீறு. ஐயோ............ஐயோ..............

    ReplyDelete
  24. //தேனெடுத்தவன் அதைப் பாட்டிலில் அடைத்துக் கொடுத்து வேண்டும் பொது திறந்து உன்னு என்றால், இல்லையில்லை நான் பாட்டிலைத் தான் நக்குவேன் அப்போதும் இனிக்க வேண்டும் என்று அடம் பிடித்தால் முட்டாள் தேனைக் கொடுத்தவன் அல்ல நீர் தான்.//

    வலிய வந்து வாங்கி கட்டிகொள்கிறீர். நீர் ரொம்ப நல்லவர்....

    போன வாட்டியே இத எழுதணும் னு நினைச்சேன். சரி வேண்டாம்னு இருந்துட்டேன். நீர் இந்த தேன் உதாரணத்தை இன்னும் விடுராப்ல இல்ல.

    தேனை கொடுத்தவன் = கிருஷ்ணர்
    தேன்= கீதை
    தேன் பாட்டில் = கீதையை எப்படி படிக்க வேண்டுஎன்கிற Guide
    பாட்டிலை நக்குவது = Guide-ஐ படிக்காமல் கீதையை படிப்பது.
    பாட்டிலை திறந்து தேனை உண்பது = Guide-ஐ படித்து கீதையை படிப்பது.

    இது தான் ஜெயதேவ் சொன்னதின் அர்த்தம். சரியா? இப்போ நான் கேள்விக்கு வாரேன்.


    கேள்வி-1:-
    பாட்டிலை கவனக்குறைவாக கையாண்டால் பாட்டில் கீழே விழுந்து உடைந்து தேன் நாசமா போய்டும். அதே மாதிரி, Guide-ஐ கவனக்குறைவாக படித்தால் கீதை நாசமாகி கெட்டு போய்டுமா?

    கேள்வி-2:-
    தேனை அளவுக்கு அதிகமாக ஒரே நேரத்தில் உண்டால் உடம்பு கெட்டு போய்டும். அதேமாதிரி கீதையை ஒரே நேரத்தில் அதிகமா படிச்சிடன்னா மனது கெட்டு போய்டுமா?

    கேள்வி-3:-
    தேன் குடிக்க குடிக்க காலியாகிக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் முழுவதும் காலியாகிவிடும். அதே மாதிரி கீதையை படிக்க படிக்க காலியாகிடுமா? ஒரு கட்டத்தில் முழு கீதையே காலியா?

    கேள்வி-4:-
    பாட்டில்(container) இல்லாமல் தேனை சேகரித்து வைக்க முடியாது. அதே போல் Guide இல்லாமல் கீதையை எழுத முடியாதா?

    கேள்வி-5:-
    தேனை சேகரித்து வைக்க ஏதாவது ஒரு பாட்டில் (any container whether bottle, cup, bucket, vessel etc...) போதும். இதுதான் வேண்டும் என்று இல்லை. அதே போல் கீதையை படிக்க ஏதாவது ஒரு Guide போதுமா?

    கேள்வி-6:-
    தேனை எறும்பு சாப்பிட்டால் கூட அதுக்கு வயிறு நிறையும். அதே போல் கீதையை எறும்புகளுக்கு வாசித்து காட்டினால் அதுடைய மனதுக்கு நல்லதா?

    கேள்வி-7:-
    தேனை கொடுத்தவன் / எடுத்தவனுக்கும் தேன் தேவை தான். அவனும் சாப்பிடுவான். அதே போல் கீதையை எழுதிய கடவுளும் கீதையை படிப்பாரா?

    வவ்வால் இது போதுமா? இல்லை இன்னும் கேக்கவா? இப்போதைக்கு இது போதும். ஜெயதேவ் இதெல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டன்னா இன்னும் கேள்வி கேக்குறேன்.

    ReplyDelete
  25. ஏன் தேன் ஊற்றினால் வழிந்தோடும், புத்தகம் அப்படி ஓடுமா, புத்தகத்தை பூக்களில் இருந்து எடுத்தாங்களா இப்படி கேட்டுகிட்டே போவீரா? கூமுட்டை கூறு கெட்ட கூமுட்டை...........என்றால் அதற்க்கு முழு அர்த்தமே நீர்தான்யா............

    வழக்கம் போல உதாரணத்தை அதைச் சொல்ல வந்த காரணத்துக்கு வெளியில் இழுத்துப் போய் கிட்டு இருக்கீரு. நீர் என்ன சோப்பு போட்டாலும் வெளுக்கவே மாட்டீரைய்யா...........

    ReplyDelete
  26. பாகவதரே,

    //தேனெடுத்தவன் அதைப் பாட்டிலில் அடைத்துக் கொடுத்து வேண்டும் பொது திறந்து உன்னு என்றால், இல்லையில்லை நான் பாட்டிலைத் தான் நக்குவேன் அப்போதும் இனிக்க வேண்டும் என்று அடம் பிடித்தால் முட்டாள் தேனைக் கொடுத்தவன் அல்ல நீர் தான்.//

    நீ எம்மாம்பெரிய கூமுட்டைனு எல்லாருக்குமே தெரியும் ,ஆனால் அதுக்குனு இப்படியா அவ்வ்!

    பாட்டிலை திறந்து கொடுக்க இன்னொருத்தரையா கூப்பிடுவீர்? அப்படி கூப்பிட்டால் "உனக்கு கை நல்லா தானே ,நீயே திறந்துக்கடா மூதேவினு சொல்ல மாட்டாங்க' அவ்வ்!

    ஓய் அப்போ "பாட்டிலை தொறக்க" இன்னொருத்தர் உமக்கு வேணும், பாட்டிலுக்கு மட்டும் தானா அவ்வ்?

    # காமலீலை கடவுளின் நாதாரித்தனத்துக்கு மட்டும் புக்கு எதுக்கு ,அதை எல்லாம் எவன் படிப்பான்!!!

    # சகமனிதர்களையே பிறப்பால் இழிவுப்படுத்தும் நீர் மட்டும் என்ன எழவுக்கு "ஜீவகாருண்யம்" பேசிக்கிட்டு , மனிதனை மனிதனாக மதிக்காத எவன் சொல்றதையும் கேட்க தேவையேயில்லை,அவன் கடவுளா இருந்தாலும் சரி!

    #//பிரபஞ்சத்தின் படைப்பின் பின்னணியில் படைப்பாளி இருக்கனா இல்லையா?//

    அந்த படைப்பாளியின் பின்னணியில் ஒரு படைப்பாளி இருக்கானா இல்லையா? அவன் யாரு ? அதான் மனிதன்!!!

    அதை விட்டுட்டு கண்டதை ஏனய்யா பினாத்துறீர்?

    #// குறுக்கு மாதிரி இருந்தாலும் பரவாயில்லை, நீர் நாய் துன்னுவதை பிடுங்கி தின்னுகிரீரே நியாயமா? பேன்ட் சட்டை போட்ட நாய் மாதிரி ஆகலாமா?//

    குரங்கு தின்னுவதை பிடுங்கி தின்னுட்டு வியாக்கியானம் பேசுறீரே நியாயமா? பேண்ட்,சட்டை போட்ட குரங்கா நீர்?

    # //இது தலைப்பில் இல்லை லூசு மாதிரி கண்ட கண்டதை பினாதப் படாது............//

    உம்ம தலையில ஒன்னும் இல்லையா? உண்மைய ஒப்புக்கொண்டமைக்கு நன்றி!

    சைவம் தான் சாப்பிடுறமாதிரி மனிதன் படைக்கப்பட்டுள்ளான்னு ஒரு லூசு பதிவு போட்டுதே , எங்கே போச்சு இப்போ?

    # // பார்த்தா கண்ணதாசன் பாடல்கள் எல்லாம் அவருக்கு டீ வாங்கி வந்து குடுத்தவன் எழுதியது என்பீறு போலிருக்கே...........//

    கண்ணதாசனைப்பத்தி பதிவில் பேசலையே ,அப்புறம் ஏன் அதை பேசுறீர் :-))

    ஒருத்தர் பேருல ஒரு புக்கு வந்தால் அதில் இருப்பதை அவர் தான் எழுதினார் என சொல்வது மரபு, இது கூட தெரியாமல் என்னத்த படிச்சீர் கீதய அவ்வ்!

    # //யோவ் நீ வெர்டினரி ஆசுபத்திரி பக்கம் போயிடாதீரும், அங்கே டாக்டர் எருமை மட்டோட சல்சா பண்ணிக்கிட்டு இருந்தார்னு சொல்லிடுவீறு. ஐயோ............ஐயோ..............//

    நீர் ஒரு கூருகெட்ட கூமுட்டைனு மீண்டும் கன்ஃபர்ம் செய்றீர் :-))

    வெட்னரி டாக்டர் ,இன்னொரு மாட்டோட விந்தணுவை தான் உள் செலுத்துவார்,அவரே உள்ள விட்டால் ,அதுக்கு பேரு "அனிஃபிலிக்", சட்டப்படி குற்றம்!!!

    இப்போ வியாசர் செய்ததை வெட்னரி டாக்டர் செய்ததோட ஒப்பிடுறீரே, அப்போ ,அம்பிகா,அம்பாலிகா என்ன எருமை மாடா? பெண்களை எருமை மாட்டுடன் ஒப்பிடும் நீர் எவ்ளோ கீழ்த்தரமான ஆளு?

    அப்படியே மாடாக இருந்தாலும் இன்னொரு மாட்டோட விந்தணுவை தான் செலுத்தி இருக்கனும், வியாசர் ஏன் உள்ளவிட்டார்? வியாசர் என்ன எறுமை மாடா அப்போ? ஐயோ...ஐயோ!!!

    எனக்கு இப்போ ஒரு டவுட்டு வருது ,ஆனால் அதை என் வாயால எப்படி கேட்கிறதுனு தான் தெரியலை , ரொம்பக்கேவலமான டவுட்டு அது....அவ்வ்!

    ReplyDelete
  27. \\பாட்டிலை திறந்து கொடுக்க இன்னொருத்தரையா கூப்பிடுவீர்? அப்படி கூப்பிட்டால் "உனக்கு கை நல்லா தானே ,நீயே திறந்துக்கடா மூதேவினு சொல்ல மாட்டாங்க' அவ்வ்! \\ எதைச் செய்தாலும் ஒரு வரைமுறையோடு தான் செய்ய வேண்டும், இஷ்டத்துக்கும் எப்படி வேண்டுமானாலும் செய்து விட முடியாது. இப்போ நீர் சாப்பிடுகிறீர், எப்படி? வாயில் தானே? இல்லை உடலில் எத்தனையோ துளைகள் உள்ளன என்று வேறு எதிலாவது வைத்து திணிக்கிறீரா? அல்லது பன்னி உண்ணுவதை உண்கிறீரா ? இல்லைதானே? எதை உன்ன வேண்டும், எப்படி உன்ன வேண்டும் என்பதற்கும் ஒரு முறை இருக்கிறதல்லவா? அதே மாதிரிதான் இங்கும்.

    \\# காமலீலை கடவுளின் நாதாரித்தனத்துக்கு மட்டும் புக்கு எதுக்கு ,அதை எல்லாம் எவன் படிப்பான்!!!

    # சகமனிதர்களையே பிறப்பால் இழிவுப்படுத்தும் நீர் மட்டும் என்ன எழவுக்கு "ஜீவகாருண்யம்" பேசிக்கிட்டு , மனிதனை மனிதனாக மதிக்காத எவன் சொல்றதையும் கேட்க தேவையேயில்லை,அவன் கடவுளா இருந்தாலும் சரி!\\ இங்கே யார் கடவுள் என்றோ எது சரியான மத நூல் என்றோ தலைப்பு இல்லை, சரியான வாதம் வைக்க வக்கில்லாத நீர் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுவதை நிறுத்தும்.

    \\அந்த படைப்பாளியின் பின்னணியில் ஒரு படைப்பாளி இருக்கானா இல்லையா? அவன் யாரு ? அதான் மனிதன்!!! \\ நம்பிக்கொள்ளும், எனக்குக் கவலையில்லை.

    \\குரங்கு தின்னுவதை பிடுங்கி தின்னுட்டு வியாக்கியானம் பேசுறீரே நியாயமா? பேண்ட்,சட்டை போட்ட குரங்கா நீர்?\\ நீர் உண்ணும் நாய்க்கறியை விட வாழைப் பழம் பெட்டர் தான்.

    \\சைவம் தான் சாப்பிடுறமாதிரி மனிதன் படைக்கப்பட்டுள்ளான்னு ஒரு லூசு பதிவு போட்டுதே , எங்கே போச்சு இப்போ?\\ அந்தப் பதிவில் வந்து பின்னூட்டம் போடும், இங்கே அல்ல. இப்போதும் நமது convition அதுதான், மாற்றமில்லை.

    \\கண்ணதாசனைப்பத்தி பதிவில் பேசலையே ,அப்புறம் ஏன் அதை பேசுறீர் :-))\\ சொல்ல வந்த கருத்தை தெளிவாக்க உம்மைப் போன்ற மரமண்டைகளுக்காக தரும் உதாரணம், தலைப்பில் இருந்து விலகுவதாகாது.

    ஒருத்தர் பேருல ஒரு புக்கு வந்தால் அதில் இருப்பதை அவர் தான் எழுதினார் என சொல்வது மரபு, இது கூட தெரியாமல் என்னத்த படிச்சீர் கீதய அவ்வ்!
    \\எனக்கு இப்போ ஒரு டவுட்டு வருது ,ஆனால் அதை என் வாயால எப்படி கேட்கிறதுனு தான் தெரியலை , ரொம்பக்கேவலமான டவுட்டு அது....அவ்வ்!\\ நாட்டில் நூறு கோடியில ஐம்பது கோடி பேரு ஆம்பிளை, எல்லோருமே கிட்டத்தட்ட பிள்ளை பெத்துக்குவான், அதுல எத்தனை பேருக்கு விந்து செல் படம் போட்டு விளக்கம் தர முடியும்னு யோசியுமைய்யா. அந்த வகையில் ஒவ்வொருத்தனும் மாட்டு டாக்டர் மாதிரிதான், அவ்வளவு ஏன் அந்த காலை மாட்டின் உள்ளே இருந்த விதையை வச்சவனும் இறைவன்தான். இல்லையில்லை மனுஷன்தான் புடுங்கி என்றால் கல்யாணமான எல்லோருக்கும் குழந்தை பிறக்க வேண்டும். பிள்ளையில்லாதவன் எல்லாம் ஆம்பளையே இல்லையான்னு கேள்வி ஏழும். என்னை மடக்க நினைத்த நீர் 9 ஆயிடுவீர். எனவே உடலில் உள்ள துளைகளை பொத்திக் கொண்டு சும்மா இரும்..................

    @வவ்வால்: பதிவில் உள்ள கருத்துக்களுக்கு வெளியே விவாதம் வேண்டாம், எனக்கு வேறு வேலைகள் உள்ளன.

    ReplyDelete

  28. @வவ்வால்,

    கொஞ்சம் எல்லை மீறுகிறீர். தலைப்பில் சொல்ல வந்ததைப் பற்றி நீர் எதுவும் எழுதுவதில்லை, தலைப்புக்கு வெளியிலயே வேண்டாத விஷயங்களைப் பற்றியே எழுதுகிறீர், தலைப்பில் நின்று விவாதிக்கத் தெரியவில்லை. நாம் தான் தறி டிக்கட்டு மாதிரி பேசுவோம், அடுத்தவன் வாயைத் திறக்க மாட்டான் என்ற இறுமாப்பு வேண்டாம். உம்மைவிட கீழ்த்தரமாக பேச எம்மாலும் முடியும். ஆனால் சாக்கடையில் கல் ஏறிய விருப்பமில்லை. அடுத்த கமண்டு இங்கே அனுமதிக்கப் படும் என்று எதிர் பார்க்க வேண்டாம்.

    ReplyDelete
  29. //அடுத்த கமண்டு இங்கே அனுமதிக்கப் படும் என்று எதிர் பார்க்க வேண்டாம்.//

    எவன்யா அதெல்லாம் உன்னமாதிரி நாதாரிக்கிட்டே எதிர்ப்பார்க்க போறா? கிழிச்சு தொங்க விடனும்னா ஒரு பதிவ போட்டு செய்ய தெரியாதா?

    ஹி...ஹி நீரெல்லாம் தானா வந்து மாட்டும் காமெடி பீசு ,எனவே இப்படி கலாய்ச்சுக்கிட்டே இருப்போம் ,நானாப்பார்த்து போனாப்போவுதுனு விட்டால் தான் உண்டு.

    //உம்மைவிட கீழ்த்தரமாக பேச எம்மாலும்//

    பதிவே கீழ்தரமா போட்டுட்டு என்னமோ உத்தமன் மாரி பேசுதே அவ்வ்!

    நான் நினைச்சா கலாய்ச்சே உமது சட்டைய கிளிச்சுக்க வச்சுடுவேன், போனாப்போவுதுனு விடுறேன், பொழைச்சுபோகும்!

    ReplyDelete
    Replies
    1. \\கிழிச்சு தொங்க விடனும்னா ஒரு பதிவ போட்டு செய்ய தெரியாதா? \\ உம்மை கிழித்து இரண்டு முறை தொங்க விட்டவன் நான், உதாரு விட வேண்டாம். முடிந்தால் செய்து பார்.

      \\நானாப்பார்த்து போனாப்போவுதுனு விட்டால் தான் உண்டு.\\ சம்பந்தமில்லாமல் எழுதுவதற்கு எந்த கேனப் புண்ணாக்காலும் முடியும், நீ ஒரு அப்பனுக்கு பொறந்தவன் என்றால் தலைப்பில் நின்று விவாதம் செய். பர்ர்திடுவோம் நீயா நானான்னு.

      \\நான் நினைச்சா கலாய்ச்சே உமது சட்டைய கிளிச்சுக்க வச்சுடுவேன், போனாப்போவுதுனு விடுறேன், பொழைச்சுபோகும்!\\ என்னோட உடலில் உள்ள ஒரு மயிரு கூட உமக்கு பயப்படாது.

      Delete
  30. அது ... கமெண்ட் குளோஸ் செய்ய வச்சேன், இப்போ கமெண்ட் மாடரேஷன் செய்ய வச்சிருக்கேன் , எப்படியோ அந்த பயம் இருந்தால் சரி தான்!!!

    ReplyDelete
    Replies
    1. \\அது ... கமெண்ட் குளோஸ் செய்ய வச்சேன், இப்போ கமெண்ட் மாடரேஷன் செய்ய வச்சிருக்கேன் , எப்படியோ அந்த பயம் இருந்தால் சரி தான்!!!\\ அடுத்த பாரத ரத்னா உமக்குத்தான்யா. உம்மை மோகன் குமார் செருப்பால் அடித்து விரட்டியபோது உம்மை அந்த அளவுக்கு அவமானப் படுத்தியிருக்கக் கூடாது என்று நினைத்தேன், இப்போது புரிகிறது அவர் சரியான காரியத்தைத்தான் அப்போதே செய்திருக்கிறார். உமது பதில்களுக்கு சரி சமாமாக எழுதினால் கண்ணியம் தவறும், அதற்காக பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறேன். நீ ஒரு பொறம்போக்கு, குடும்பம் கிடையாது. நீ எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், நாம் அப்படியல்ல.

      சவால் விடும் மயிரு புடுங்கி நீ, ஒரு காமன்டாவது தலைப்பைப் பத்தி போட்டிருக்கேன்னு சொல்ல முடியுமா? அப்படி போட வக்கத்த நாயி உனக்கு வீண் டம்பம் எதுக்கு?

      Delete
  31. யோ டம்மி பீசு,

    ரொம்ப மண்டை காய விட்டேன் போல இருக்கு , கொதிச்சு போய் என்னனமோ பேசிட்டு கண்ணியம் எல்லாம் பேசுற, ஆமாம் எதுக்கு நீர் போட்ட பின்னூட்டத்தையே டெலிட் செய்தீர் ,அவ்ளோ கேவலமாவா நீர் பேசிட்டீர் :-))

    நாயி,மயிரு, ஒரு அப்பனுக்கு பொறந்தவனா? ,செருப்படி என பேசும் "அற்புதமான ஆன்மிக வியாதி" நீர் மட்டுமே :-))

    இன்னும் என்னென்ன பேசுவீர்னு பார்ப்போமே அவ்வ்!

    இப்பத்தானே ஆரம்பிச்சு இருக்கேன் போக போக உம்மோட சுயரூபத்தை எல்லாருக்கும் "வெளிச்சம் போட்டு காட்டுறேன்' :-))

    ஆனா ஒன்னு . எப்பவுமே கடைசி நாக் அவுட் பஞ்ச் என்னுதா தான் இருக்கும்....

    ஆட்டம் ஆரம்பம்....!!!

    ReplyDelete
    Replies
    1. \\நாயி,மயிரு, ஒரு அப்பனுக்கு பொறந்தவனா? ,செருப்படி என பேசும் "அற்புதமான ஆன்மிக வியாதி" நீர் மட்டுமே :-)) \\ ஆஹா, நான் அசிங்கம் அசிங்கமா எழுதுவதைப் பார்க்கனுமா? சொல்லியிருக்கலாமே!!

      படிக்கிறது சரோஜாதேவி புக்கு, அசின் படத்துக்கு முன்னாடி தினமும் நாலு வட்டி மணியாட்டி பிசினை வேஸ்டு பண்ணுவது, நீ மட்டும் உமது உள்ளங்கையை போட்டோ புடிச்சு போடுய்யா பார்த்திடுவோம், ஒரு ரேகையாவது இருக்கான்னு. குடும்பம் கிடையாது, புள்ளை குட்டி கிடையாதுன்னா எதை வேண்டுமானாலும் பேசுவியா நீ?

      ஆண்மையுடையவன் பெண்ணை முறைப் படி திருப்தி படுத்துவான். முடியாதவன், எடுபடாதவன் என்ன செய்வான்? விரலைப் பயன்படுத்துவான். தலைப்புக்கு ஏற்ற பதில் இல்லாமல், வேறு எதை எதையோ எழுதுவது எடுபடாதவன் விரலை பயன்படுத்துவதைப் போன்றதே. இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவையா? இதனால் நீர் சாதிக்கப் போவதென்ன?

      இப்பவும் சொல்றேன், வீரன் என்றால் நேர்மையாக விவாதத்துக்கு பதில் விவாதம் வை. பார்த்திடுவோம் நீயா நானான்னு. Kingfisher ஏர்லைன்ஸ் பணிப்பெண்ணிடம் Kingfisher பீர் சரியில்லைன்னு ஒரு படத்துல சந்தானம் கேட்பானே அது மாதிரி இங்க வந்து கண்ட கண்டதை பினாத்தப் படாது. என்னோட வீட்டுக்கு நான்தான் "பொறுப்பு", வேறு யாரும் இல்லை ஒப்புக் கொள்கிறேன், அதற்காக நீர் வெளியில் செல்லும் போது உம்முடைய வீட்டிற்கும் நானே வந்து "பொறுப்பாக" வேண்டும் என்று எதிர் பார்க்க வேண்டாம். இங்கே நான் விவாதிக்கும் தலைப்புக்கு பதில் தருவது என்னோட பொறுப்பு, நீர் வைக்கும் சம்பந்தமில்லாத விவாதங்களுக்கு நான் பதில் தர வேண்டிய அவசியமில்லை.

      \\ஆனா ஒன்னு . எப்பவுமே கடைசி நாக் அவுட் பஞ்ச் என்னுதா தான் இருக்கும்....\\ தமிழ்நாட்டிலேயே....... ஏன் உலகிலேயே பெரிய மயிருபுடுங்கி நீர் தான். சந்தேகமேயில்லை.

      மேலே நான் சொன்னதையெல்லாம் எங்கு வேண்டுமானாலும் போடு என்ன மயிராகுதுன்னு பார்க்கலாம்.

      Delete
  32. // உமது பதில்களுக்கு சரி சமாமாக எழுதினால் கண்ணியம் தவறும், அதற்காக பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறேன். நீ ஒரு பொறம்போக்கு, குடும்பம் கிடையாது. நீ எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், நாம் அப்படியல்ல.//

    அய்யா கண்ணியமானவரே,

    நீர் உம்முடைய பதிலையும், வவ்வாலுடைய பதிலையும் பெயரை மறைத்து உம் பையனிடம் கொடுத்து இந்த இரண்டில் யாருடைய பதில் ரொம்ப அசிங்கமா இருக்கு-ன்னு கேட்டா, அவன் சொல்லுவான், உம் பதில் தான் என்று (அவனுக்கு நீர் தான் எழுதியிருக்கிறீர் என்று தெரியாததால்).

    கண்ணியத்தை தவறி எழுத ஆரம்பித்ததே நீர் தான். நீர் நாத்திகர்ளை பார்த்து

    நாறவாயன்
    நாதாரி,
    கூமுட்டை,
    முட்டாள்,
    பொய்யன்,
    கேன,
    ஒரு அப்பனுக்கு பிறக்காதவன்

    என்று முதலில் கூறியவர் என்ற பெருமைக்குரியவர். நீரே யோசித்துக்கொள்ளும், ஒரு கண்ணியமான மனிதன் வாயிலிருந்து இவ்வார்த்தைகள் முதலில் வருமா என்று.

    சக மனிதனை மதிக்காமல், நாத்திகர்களை எவ்வளவு கேவலமா பேச முடியுமோ அவ்வளவும் பேசிய வக்கிர புத்தி கொண்டவர் நீர்.
    நாத்திகர்கள் யாரும் ஆத்திகர்களை இவ்வளவு கேவலமாக பேசியதே கிடையாது.

    BTW, இந்த உலகில் எல்லோரும் ஒரு அப்பனுக்கு பிறந்தவர்கள் தான். யாரும் இரண்டு அப்பாவுக்கு பிறக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. @ Alien A



      நீர் சொல்வதில் உண்மையில்லாமலில்லை, ஆனால் நடுவு நிலைமை இல்லை. நான் சொன்னது தவறு என்று சொன்ன நீர் உம்முடைய நண்பர் தரம் கேட்டு எழுதியதைக் கண்டித்தீரா? அப்படி விடுவதற்கு நீர் என்ன திருதராஷ்டிரனா?

      Delete
  33. \\BTW, இந்த உலகில் எல்லோரும் ஒரு அப்பனுக்கு பிறந்தவர்கள் தான். யாரும் இரண்டு அப்பாவுக்கு பிறக்க முடியாது.\\ ஒரு அப்பனுக்கு பிறந்தாயா என்று கேட்பதற்கு அர்த்தம் உண்டு. ஒருத்தனுடைய நடவடிக்கை மிகவும் கீழ்த்தரமாகப் போகும் போது அவனுடைய பிறப்பு கேள்விக்குரியதாகிறது. எல்லோருமே யாராவது ஒருத்தனுக்குத்தான் பிறந்திருப்பான், ஆனால் தரம்தாழ்ந்து போகும் ஒருத்தன் யாருக்கு பிறந்திருக்கக் கூடும் என்பதே பெரிய கேள்விக் குறியாக இருக்கும். ஜீன் டெஸ்டு பண்ணினால் தான் பதில் உண்டு.

    ReplyDelete
  34. ஒரு மனிதனுக்குள் எழும் அளவுக்கு அதிகமான கோபத்தின் வெளிப்பாடே கெட்ட வார்த்தைகள். நீர் பதிவின் தலைப்பை தொடங்கியவுடனே, ஆரம்பித்து விட்டீர். நாங்கள் கடவுள் இல்லை என்று சொல்லும் போது கோபப்படுகிற / வருத்தப்படுகிற நீர், நீர் கடவுள் இருக்கிறார் என்று சொல்லும் போதும், எங்களுக்கும் அதே கோபம் / வருத்தம் வருமல்லவா? நாத்திகர்களால் ஆத்திகர்களுக்கு ஒரு தொந்திரவும் ஏற்படுவதில்லை. ஆனால், காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை இந்த நாத்திகர்களுக்கு ஆத்திகர்களால் ஒரே தொல்லை தான். காலையில் சுப்ரபாதம், சர்ச்சில் மணி, மசூதியில் தொழுகை, திருவிழா ஒழிபெருக்கி சத்தம், சுவிசேஷ கூட்டம் இன்னும் etc...etc...இவையெல்லாம் எங்களுக்கு தொல்லையே. நீர் இருக்கிற மன நிலையில் நாங்கள் இருந்தால், நாங்கள் எவ்வளவு கோபப்பட வேண்டும் தினமும். நாங்கள் அப்படி செய்வதில்லை. ஆனால், எந்த தொல்லையும் ஏற்படுத்தாத, நாத்திகர்களின் மீது உமக்கு இருக்கிற கோபம் நியாயமே இல்லை.

    எனக்கு ஓன்று தான் தெரிய வேண்டும்? ஏன் கெட்ட வார்த்தைகள் பேசுகிற அளவுக்கு நாத்திகர்கள் மீது கோபம் உமக்கு?

    //நீர் உம்முடைய நண்பர் தரம் கேட்டு எழுதியதைக் கண்டித்தீரா? //

    நீர் தான் முதலில் ஆரம்பித்ததால், நான் உம்மைத்தான் கண்டிக்க முடியும். அடி பட்டவன் தற்காத்துக்கொள்ள திருப்பி அடிப்பது இயல்பான ஒன்று. அதனால் நான் என் நண்பரை கண்டிக்க முடியாது.

    ReplyDelete
    Replies

    1. \\நீர் தான் முதலில் ஆரம்பித்ததால், நான் உம்மைத்தான் கண்டிக்க முடியும். அடி பட்டவன் தற்காத்துக்கொள்ள திருப்பி அடிப்பது இயல்பான ஒன்று. அதனால் நான் என் நண்பரை கண்டிக்க முடியாது.\\ உம்மிடம் நடுவுநிலைமை இல்லை. தாக்கியது உமது நண்பர். அது உமது கண்ணை மறைக்கிறது. வக்கிரமான எண்ணங்களை, விஷத்தை தூவியவர் உமது நண்பர். சந்தேகமிருந்தால் மேலே போய் திரும்பப் படியும். திருந்துமையா திருந்து.

      Delete
  35. நானும் கெட்ட வார்த்தை சண்டையில் இறங்கிவிடலாம் என்று தான் முதலில் நினைத்தேன். பிறகு தான், தன் குழந்தையின் புகைப்படங்களை இணையத்தில் போடுகிற அளவுக்கு அப்பாவி தந்தையாக இருக்கிறீர். அதனால் தான் எனக்கு மனது வரவில்லை. உமது குழந்தைகளால் நீர் தப்பித்தீர்.

    ReplyDelete
  36. பாகவதரே,

    //ஆனால் நடுவு நிலைமை இல்லை. நான் சொன்னது தவறு என்று சொன்ன நீர் உம்முடைய நண்பர் தரம் கேட்டு எழுதியதைக் கண்டித்தீரா? அப்படி விடுவதற்கு நீர் என்ன திருதராஷ்டிரனா?//

    சுத்தமா மறை கழண்டுப்போச்சா?

    நீர் ஆரம்பிச்சதுக்கு தான் நான் பதிலடிக்கொடுக்கிறேன்,அப்புறம் எப்படி கண்டிப்பாங்கா?

    எப்படி போட்டு வாங்குறதுனு தெரியும், நீரே ஒளறி மாட்டிப்பீர் ,நான் எதுவுமே செய்ய வேண்டாம் :-))

    எனக்கு ஒரு டவுட்டு,அடிக்கடி மயிரு, மயிரு புடுங்குறதுனே பேசிட்டு இருக்கீறே அப்போ நிறைய மயிரு புடுங்கின அனுபவம் இருக்கா?

    ஹி...ஹி தலையில இருக்க மயிர மட்டும் புடுங்குவீரா ,இல்லை மத்த மயுரையுமா அவ்வ்!!!

    # //இப்பவும் சொல்றேன், வீரன் என்றால் நேர்மையாக விவாதத்துக்கு பதில் விவாதம் வை. பார்த்திடுவோம் நீயா நானான்னு//

    அடங்கொய்யாலே ,இன்னா அக்கிரமய்யா இது?

    மாமிசம் உண்பது, கடவுள் சைவம் தான் சாப்பிடுவார், பகவத்கீதைனுலாம் பேசுனது யாருய்யா? அதெல்லாம் பேசினது நாறவாயா அப்போ?

    எப்போ பேசினாலும் "கடவுள் "இருக்காருனா அவர் இப்படிலாமா செய்ய சொன்னார்னு கேட்கத்தான் செய்வாங்க?

    எனவே "கான்செப்ட்"க்குள்ள பேசாம தப்பிக்க பார்ப்பது நீர் தான் !!!

    வியாசர் டெக்னிக்ல பொறந்த தெய்வப்பிறவியா நீர் :-))

    # காமக்கிழத்தான் பதிவில நேரடியா பேசாம சுத்திவளைச்சு பேசுவது யார்னு சொல்லி இருக்கார் பாரும் ...

    இந்த நரித்தனத்துக்கு சொந்தக்காரர் யார்ர்?

    //எழுப்பப்படும் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் தராமல், சுற்றிவளைத்து மழுப்புவதிலும், அடாவடித்தனமாகத் தனிப்பட்ட தாக்குதலில் இறங்கி, எதிராளியை ‘டென்சனுக்கு’ உள்ளாக்கி, வாதத்தைத் திசை திருப்பித் தான் ஜெயித்துவிட்டது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குவதிலும் மகா கில்லாடி!//

    http://kaamakkizaththan.blogspot.in/2013/12/blog-post_10.html

    ReplyDelete
    Replies
    1. \\நீர் ஆரம்பிச்சதுக்கு தான் நான் பதிலடிக்கொடுக்கிறேன்,அப்புறம் எப்படி கண்டிப்பாங்கா? \\ ஆரம்பிச்சது நீர், எல்லை மீறியது நீர், நானல்ல.

      \\எனக்கு ஒரு டவுட்டு,அடிக்கடி மயிரு, மயிரு புடுங்குறதுனே பேசிட்டு இருக்கீறே அப்போ நிறைய மயிரு புடுங்கின அனுபவம் இருக்கா?\\ அதை விட நாகரீகமாக உம்மைத் திட்ட வார்த்தைகள் சிக்கவில்லை. அதான்.

      \\மாமிசம் உண்பது, கடவுள் சைவம் தான் சாப்பிடுவார், பகவத்கீதைனுலாம் பேசுனது யாருய்யா? அதெல்லாம் பேசினது நாறவாயா அப்போ?

      எப்போ பேசினாலும் "கடவுள் "இருக்காருனா அவர் இப்படிலாமா செய்ய சொன்னார்னு கேட்கத்தான் செய்வாங்க?

      எனவே "கான்செப்ட்"க்குள்ள பேசாம தப்பிக்க பார்ப்பது நீர் தான் !!! \\ நாறவாயன் நீர்தான். கடவுள் இருக்காரா இல்லையா என்பது தான் தலைப்பு, அவர் யார் எப்படி இருப்பார், அவர் சுடலை மாடனா, கடலை மாடனா, நீர் நாய்க்கரி துன்னுவது சரியா இதெல்லாம் நான் இந்தப் பதிவில் விவாதிக்கவே இல்லை. ஆனால் நீர் பேசியது எல்லாமே இதைப் பற்றித்தான். மீண்டும் மீண்டும் மறை கலந்த கேசு மாதிரி பதிவுக்கு அப்பாற்பட்ட சங்கதிகளையே பேசி பேசி நீர் கேனப்புண்ணாக்கு என்று நிரூபிக்க வேண்டாம்.

      \\# காமக்கிழத்தான் பதிவில நேரடியா பேசாம சுத்திவளைச்சு பேசுவது யார்னு சொல்லி இருக்கார் பாரும் ...

      இந்த நரித்தனத்துக்கு சொந்தக்காரர் யார்ர்?\\என்னை விடும், மோகன் குமார் கெட்ட வார்த்தை பேசுபவரா, வக்கிர புத்தியுள்ளவரா அல்லது கீழ்த்தரமாக எழுதுபவரா? நீர்தான் யோக்கியனாயிற்றே, அவரிடம் நீர் செருப்படி வாங்கியது ஏன்? கேபிள் ஷங்கர் உமக்கு சங்கு ஊத்தி அனுப்பியது ஏன்? இப்படி உமது யோக்யதை ஊர் பூராவும் கைகொட்டி சிரிக்கிறது, இங்கே வந்து கதையளக்க வேண்டாம்.

      Delete
  37. // அவர் சுடலை மாடனா, கடலை மாடனா, நீர் நாய்க்கரி துன்னுவது சரியா இதெல்லாம் நான் இந்தப் பதிவில் விவாதிக்கவே இல்லை. ஆனால் நீர் பேசியது எல்லாமே இதைப் பற்றித்தான். மீண்டும் மீண்டும் மறை கலந்த கேசு மாதிரி பதிவுக்கு அப்பாற்பட்ட சங்கதிகளையே பேசி பேசி நீர் கேனப்புண்ணாக்கு என்று நிரூபிக்க வேண்டாம்..//

    //கடவுள் இருக்காரா இல்லையா என்பது தான் தலைப்பு//

    ஐயா புத்திசாலி புண்ணாக்கு,
    பதிவுக்கு அப்பாற்பட்ட சங்கதிகளை பேசக்கூடாது அப்படித்தானே. ஓகே.

    கடவுள் இல்லை என்பது தான் எங்கள் விவாதம் (ஒரு வரியில் எங்கள் விவாதம் முடிந்தது.). விவாதம் முற்றும்.

    இதை நீர் ஒத்துக்கொள்வீரா? ஒத்துக்கொண்டால் இவ்வளவு விவாதம் தேவையே இல்லை. நீர் ஒத்துக்கொள்ளாததால் தான் நாங்கள் பதிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை சொல்லியாவது உமக்கு புரிய வைக்க முயற்ச்சிக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. \\கடவுள் இல்லை என்பது தான் எங்கள் விவாதம் (ஒரு வரியில் எங்கள் விவாதம் முடிந்தது.). விவாதம் முற்றும்.

      இதை நீர் ஒத்துக்கொள்வீரா? ஒத்துக்கொண்டால் இவ்வளவு விவாதம் தேவையே இல்லை. நீர் ஒத்துக்கொள்ளாததால் தான் நாங்கள் பதிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை சொல்லியாவது உமக்கு புரிய வைக்க முயற்ச்சிக்கிறோம்.\\ நான் கடவுள் இருக்கார் என்பதற்கு சில காரண காரியங்களைச் சொல்லி விவாதத்தை முன் வைத்திருக்கிறேன், அதை நீங்கள் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதை மறுக்க உங்கள் பக்கமிருந்து பதில் வாதத்தை வைத்து இன்னின்ன முறையில் கடவுள் இல்லை என்று சொல்லலாம், அதை மீண்டும் மறுத்து நான் மாற்றுக் கருத்தை வைக்கலாம் அல்லது சரி என்று ஒப்புக் கொள்ளலாம். அதை விடுத்து இப்படி மொட்டையாக கடவுள் இல்லை என்றால் அது எந்த அடிப்படையும் இல்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் ஒரு மூட நம்பிக்கை. அவ்வளவே. மேலும் ஒருபோதும் நீ ஒப்புக் கொண்டே தீர வேண்டும் என்று வற்ப்புறுத்த முடியாது. நீங்கள் சொல்வது சரி என்று எனக்குப் பட வேண்டும். சரியான முடிவை எட்டுவது அவரவரது புத்திசாலித் தனத்தைப் பொறுத்தது.

      Delete
  38. பாகவதரே,

    //நாறவாயன் நீர்தான். கடவுள் இருக்காரா இல்லையா என்பது தான் தலைப்பு, அவர் யார் எப்படி இருப்பார், அவர் சுடலை மாடனா, கடலை மாடனா, நீர் நாய்க்கரி துன்னுவது சரியா இதெல்லாம் நான் இந்தப் பதிவில் விவாதிக்கவே இல்லை. //

    மெய்யாலுமே உமக்கு மறை கழன்று தான் போச்சா? ஓவரா கலாய்ச்சுட்டமோ?

    "கடவுள் இருக்காரா? இல்லையா? தான் தலைப்புனா எதுக்கு எட்டுக்கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்னு அலையிறீர்?

    ஒரே கேள்வி, ஒரே பதில் என முடிக்க வேண்டியது தானே!!!

    அப்போ நீர் எதுக்கு தலைப்பை விட்டு எட்டுக்கேள்வினு பேசிட்டு அலையிறீர் அவ்வ்.

    கடவுள் இருக்கார்னு சொன்னால் , அதன் குணங்கள்,வடிவம், அதன் திறன், மொழி உணர்தல் என்னனு கேட்க மாட்டாங்களா?

    இப்போ இது ஒரு டீவீ என ஒருப்பொருளைக்காட்டி சொன்னால் ,ஆமாம்னு அப்படியே ஏத்துப்பீரா?

    அது கலர் டீவியா , கறுப்பு வெள்ளையா, ஸ்கிரின் சைஸ் என்ன?, எல்.சி.டி அல்லது எல்.இ.டி, அல்லது சி.ஆர்.டி வகையா, படம் தெரியுமா ,தெரியாதானு சொல்ல வேண்டாமா?

    எனவே கடவுள் இருக்காருனு சொல்றவன் தான் அவரு எப்படியாப்பட்டவருனு தெளிவா சொல்லணும், அது எப்படி பேசுப்பொருளை விட்டு விலகியதாகும்?

    உண்மையில ஏதேனும் ஒரு சப்ஜெக்ட்ல விவாதம் செய்றதுனா என்னானு தெரியுமா? ஒரு மண்ணும் தெரியாம பெரிய "ஞானப்பழம்" போல வந்துட்டீர்? பிழிஞ்சு எடுத்திடுவோம் சொல்லீட்டேன் :-))
    ---------------------------

    சரியான கூறுக்கெட்டக்குக்கரா இருக்கீரே,

    முதலில் நாதாரினு ஆரம்பிச்சது நீர் ,அப்பாலிக்கா என்ன வேடிக்கையா பார்ப்பாங்க. ஊசிப்போன சாம்பாருக்கே அம்புட்டுனா ,சில்லி சிக்கன் எல்லாம் சாப்பிட்டவங்க சும்மாவா!
    ----------------------

    // மோகன் குமார் கெட்ட வார்த்தை பேசுபவரா, வக்கிர புத்தியுள்ளவரா அல்லது கீழ்த்தரமாக எழுதுபவரா? நீர்தான் யோக்கியனாயிற்றே, அவரிடம் நீர் செருப்படி வாங்கியது ஏன்? கேபிள் ஷங்கர் //

    ஆமாம் நீர் ஏகப்பட்ட பேருக்கிட்ட செருப்படி வாங்கியிருப்பீர்ப்போல இருக்கே அவ்வ்!

    ரெண்டு லூசுங்க எதுனா சொன்னால் அதை ஏத்துப்பீரா?

    அவங்க ரெண்டு பேரும் சிக்கன்,பீப் எல்லாம் சாப்பிடுறது தப்பில்லைனு சொல்வாங்க, அப்போ நீரும் சாப்பிடுவீரா? அப்போ மட்டும் உமக்கு சொந்த புத்தி வேலை செய்யுமே அவ்வ்!

    நான் கலாய்ச்சுதனால காய்ச்சல் வந்து மிரண்டு போனதுங்களைப்பத்தி பேசிட்டு , உண்மையில உமக்கு அறிவு வளர்ச்சியே இன்னும் ஏற்படலையா ?சின்னப்புள்ளத்தனமாவே பேசிட்டு இருக்கீர் :-))

    இது வரைக்கும் என் கிட்டே "செம மாத்து வாங்கினதில" நீர் தான் முதலிடம், அதுக்கு அப்புறமாத்தான் நீர் சொன்ன ரெண்டுப்பேரும் , இப்போ ஹேப்பியா போய் எல்லாருக்கிட்டவும் சொல்லிக்கவும்.

    நம்ம கைராசிப்படி ,நம்ம கிட்டே உதை வாங்கினவங்க எல்லாம் பின்னாடி பெரிய ஆளா வருவாங்கய்யா :-))
    ------------------------------
    வேற்றுகிரவாசி,

    //கடவுள் இல்லை என்பது தான் எங்கள் விவாதம் (ஒரு வரியில் எங்கள் விவாதம் முடிந்தது.). விவாதம் முற்றும்.//

    அஃதே ,அஃதே!

    கதம்...கதம்!!!
    ------------------------------

    ReplyDelete
  39. வெண்ணை வெட்டிப்பாகவதரே,

    //அதை மறுக்க உங்கள் பக்கமிருந்து பதில் வாதத்தை வைத்து இன்னின்ன முறையில் கடவுள் இல்லை என்று சொல்லலாம், அதை மீண்டும் மறுத்து நான் மாற்றுக் கருத்தை வைக்கலாம் //

    முதலில் இருக்குனு சொல்லுன் ஒன்றின் பண்புகள் என்னனு தெரிய வேண்டா? அதை கேட்டால் சொல்லவே தெரியலைனா, இருக்குனு சொல்வதே பொய்னு சொல்லிடலாமே?

    இப்போ ஒருத்தன் பேயை பார்த்தேன்னு சொன்னால் , அவன் பார்த்தேன்னு சொன்னது உண்மைனு அப்படியே ஏத்துப்பீரா? இல்லை மினிமம் பேய் என்ன கலரில் இருந்துச்சுனு கூடவா கேட்க மாட்டீர்?

    இப்போ உமக்கு குரங்கு மாதிரி வாலு பின்னாடி இருக்குனு சொல்லுறேன் , உடனே ஏலியன் அதை நம்பனுமா? கூடாதா என சொல்லவும். :-))

    பார்க்க முடியாத ஆனால் உணரக்கூடிய விடயம் அதை தான் சொல்லனும் என சொன்னால் " உமக்கு மறை கழண்டுப்போச்சுனு" நான் சொன்னால் ஏலியன் நம்பலாமா? கூடாதா?

    உமது பாணியில் இன்னின்ன முறையில் இன்னும் உமக்கு மறை கழலவேயில்லை என மறுத்து விவாதம் செய்யவும் :-))

    ReplyDelete
  40. யோ பாகவதரே,

    நான் உம்மிடம் கடவுள் இல்லைனு கூட சொன்னதில்லையேம், சுடலை மாடன் தான் ஏக இறைவன் ,அவருக்கு கடா வெட்டி பொங்கல் வச்சு ,சாராயம் வச்சு கும்புட்டுக்கலாம்னு தான் கூப்பிடுதேன் , நீர் தான் "நாத்திகம்" பேசிக்கிட்டு அதை எல்லாம் செய்ய மாட்டேங்கிறீர்.

    இப்போ தலைப்புக்குள்ள பேசும்,

    # சுடலை மாடன் தானே ஏக இறைவன்?

    ஆம்னு தான் சொல்லணும் ,இல்லைனு சொன்னால் கடவுள் இல்லைனு "மூடத்தனமா" பேசுறீர்னு சொல்லுவோம்.

    # கடவெட்டி கும்பிட்டு சாப்பிடனும்.

    ஆம்னு தான் சொல்லனும் ,இல்லைனு சொன்னால் மூட நம்பிக்கை நாத்திகனகிடுவீர் :-))

    # சாராயம் வச்சு படைச்சுட்டு குடிக்கணும் ,

    ஆம்னு தான் சொல்லனும் ,இல்லைனு சொன்னால் நீர் நாத்திகன் :-))

    எப்புடி ...எப்புடி விவாதம் வையும் பார்ப்போம்!

    ReplyDelete
  41. @ வவ்வால்

    ஒரு பின்னூட்டத்தில் கடவுள் இல்லை என்று வாதம், அதற்கடுத்த பின்னூட்டத்தில் கடவுள் இருக்கார்னு இன்னொரு வாதம்....... முரண்பாடே உன் பெயர்தான் வவ்வாலா? [பெரியார் இந்த மாதிரி விடுதலையில் பத்திக்குப் பத்தி மாத்தி மாத்தி எழுதுவாராம். எல்லா நாத்திகரும் அப்படித்தான் போலிருக்கு.]

    கடவுள் இருக்காருன்னா, இந்த பதிவோட நீர் ஒத்துப் போகிறீர். அவர் யார், எப்படி இருப்பார் அவரை வணங்க வேண்டுமா, திட்ட வேண்டுமா, வாங்குவதென்றால் அவருக்கு என்ன வைத்து கும்பிட வேண்டும் இதையெல்லாம் நான் இங்கே விவாதத்தில் எடுத்துக் கொள்ள வில்லை. அது குறித்து நீரோ நானோ பதிவு போட்டால் விவாதிக்கலாம்.

    \\முதலில் இருக்குனு சொல்லுன் ஒன்றின் பண்புகள் என்னனு தெரிய வேண்டா? அதை கேட்டால் சொல்லவே தெரியலைனா, இருக்குனு சொல்வதே பொய்னு சொல்லிடலாமே?\\ மோனலிசா ஓவியத்தைப் பார்த்தவுடன் அதை யாரோ வரைந்திருக்கிறார்கள் என்று நான் முடிவுக்கு வருகிறேன் என வைத்துக் கொள்வோம். அந்த ஓவியம் ஏன் பெயிண்டுகள் தானாகவே கொட்டி ஓவியமாக மாறியிருக்கக் கூடாது என்ற பதில் கேள்வி எழலாம். That is not mathematically impossible, but practically highly improbable. பல வண்ண பெயிண்ட் ஊத்தி தானாகவே பெண் ஓவியமா மாறி நான் பார்த்ததில்லை. அதனால் நான் அந்த முடிவுக்கு வருகிறேன். இதைச் சொன்னவுடன், அந்த ஓவியன் பேர் என்ன, அவன் கருப்பா சிவப்பா, அவனுக்கு பெண்டாட்டி பேர் என்ன, பிள்ளைகள் எத்தனை என என்னைக் கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாமல் போகலாம், ஆனாலும் அந்த ஓவியத்தை யாரோ வரைந்திருக்கிறார்கள் என்ற என்னுடைய முடிவு அதனால் மாறப் போவதில்லை. இந்த படைப்பின் பின்னால் Conscious being இருக்கா இல்லையா என்றால் இருக்காரு. காரணம் என்ன? எண்ணற்ற காரணங்கள் சொல்லலாம். உமக்கு ஊருபட்ட அறிவு இருப்பது ஊருக்கே தெரியும். ஒரு நவீன கேமரா இயங்குவதையும், மனிதனின் கண்ணையும் [அல்லது ஆடு மாட்டின் கண்ணாகக் கூட இருக்கட்டும்] ஒப்பிட்டு ஒரு பதிவு போடும். மனிதனின் கண்கள் தானாகவே தோன்றியிருக்கும் என்று அதற்கும் மேல் உமது நெஞ்சில் கை வைத்துச் சொல்லும். பின்னர் பார்ப்பபோம்.

    ReplyDelete
  42. //ஒரு பின்னூட்டத்தில் கடவுள் இல்லை என்று வாதம், அதற்கடுத்த பின்னூட்டத்தில் கடவுள் இருக்கார்னு இன்னொரு வாதம்....... முரண்பாடே உன் பெயர்தான் வவ்வாலா? [பெரியார் இந்த மாதிரி விடுதலையில் பத்திக்குப் பத்தி மாத்தி மாத்தி எழுதுவாராம். எல்லா நாத்திகரும் அப்படித்தான் போலிருக்கு.]//

    ஜெயதேவ்,
    மனிதன் உருவாக்கின சுடைலைமாட சாமியாகிய கடவுள் இருக்கிறார். ஆனால் நீர் சொல்கிற உலகத்தை படைத்த கடவுள் தான் இல்லை என்கிறோம்.
    இது முரண்பாடு இல்லை.


    //மோனலிசா ஓவியத்தைப் பார்த்தவுடன் அதை யாரோ வரைந்திருக்கிறார்கள் என்று நான் முடிவுக்கு வருகிறேன் ........... அதனால் நான் அந்த முடிவுக்கு வருகிறேன். //

    ஓவியத்தை யாரோ ஒருவர் தான் வரைந்திருக்கிறார்கள். இன்னார் தான் வரைந்தார் என்று உம்மால் கூற முடியாது. அதே போல் தான், உலகத்தை கடவுள் தான் படைத்தார் என்று எப்படி கூறுகிறீர்? ஒருவேளை காற்று படித்திருக்கலாம், சூரியன் அல்லது வேறு நட்சத்திரங்கள் படைத்திருக்கலாம், வேற்றுகிரகவாசிகள் விளையாட்டுப்பொருளாக பூமியை செய்து விளையாடியிருக்கலாம். படைத்திருக்கலாம், etc...இன்னும் நிறைய possibilities இருக்கிறது. கடவுள் தான் படைத்தார் என்று கூறுவதைத்தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    ஒருவேளை பேய் இந்த உலகத்தை படித்திருக்கலாம்.
    நான் இப்போது உம்மிடம் ஒரு வாதத்தை முன் வைக்கிறேன். பேய் தான் இந்த உலகத்தை படைத்தது என்று. நீர் மறுத்துப்பாரும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. \\மனிதன் உருவாக்கின சுடைலைமாட சாமியாகிய கடவுள் இருக்கிறார். ஆனால் நீர் சொல்கிற உலகத்தை படைத்த கடவுள் தான் இல்லை என்கிறோம்.
      இது முரண்பாடு இல்லை.\\ வவ்வால் சுடலைமாடன் தான் டாப்பு என்கிறார், நீங்கள் டூப்பு என்கிறீர்கள். வவ்வாலுக்கு வக்காலத்து வாங்க வந்து இப்படி சேம் சைடு கோல் போடப் படாது.


      \\\ஓவியத்தை யாரோ ஒருவர் தான் வரைந்திருக்கிறார்கள். இன்னார் தான் வரைந்தார் என்று உம்மால் கூற முடியாது.\\ இன்னார் என்று சொல்ல முடியாது என்றாலும் நிச்சயமாக மனிதர் தான் வரைந்திருப்பார் என்று சொல்ல முடியும். நாய், பூனை, எருமைக்கிடா, பன்னி இவற்றால் வரைந்திருக்க முடியாது என்று சொல்ல முடியும். அதே மாதிரி படைத்தவனைப் பற்றியும் குறைந்த பட்ச தகுதிகள் சொல்ல முடியும், தொடர்ந்து பதிவுகளைப் படித்து வாரும்.


      அதே போல் தான், உலகத்தை கடவுள் தான் படைத்தார் என்று எப்படி கூறுகிறீர்? ஒருவேளை காற்று படித்திருக்கலாம், சூரியன் அல்லது வேறு நட்சத்திரங்கள் படைத்திருக்கலாம், வேற்றுகிரகவாசிகள் விளையாட்டுப்பொருளாக பூமியை செய்து விளையாடியிருக்கலாம். படைத்திருக்கலாம், etc...இன்னும் நிறைய possibilities இருக்கிறது. கடவுள் தான் படைத்தார் என்று கூறுவதைத்தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.\\ காற்றடித்தோ, வெயில் காய்ந்தோ, வேறு நட்சத்திரங்கள் இடித்தோ ஒரு காமிரா உருவாகி நான் கண்டதில்லை. வேற்றுக் கிரக வாசி நீர் ஒருத்தர் மட்டும் தான், வேறு யாரும் இருப்பதாக அறிவியல் பூர்வமான நிரூபணம் இல்லை. நீர் குறைந்த பட்சம் அறிவியல் பூர்வமான ஆதாரங்களையாவது வைக்க வேண்டும், இப்படி வெத்து வேட்டு வாதங்களைப் பிளக்கக் கூடாது.

      \\ஒருவேளை பேய் இந்த உலகத்தை படித்திருக்கலாம்.
      நான் இப்போது உம்மிடம் ஒரு வாதத்தை முன் வைக்கிறேன். பேய் தான் இந்த உலகத்தை படைத்தது என்று. நீர் மறுத்துப்பாரும்.\\ அப்படி நம்புவது உமது சுதந்திரம், அதில் நான் தலையிட விரும்பவில்லை.

      Delete
    3. //காற்றடித்தோ, வெயில் காய்ந்தோ, வேறு நட்சத்திரங்கள் இடித்தோ ஒரு காமிரா உருவாகி நான் கண்டதில்லை//

      அதே மாதிரி கடவுளும் காமிராவை உருவாக்கவில்லையே!

      Delete

    4. \\அதே மாதிரி கடவுளும் காமிராவை உருவாக்கவில்லையே! \\ஒவ்வொருத்தரோட கண்ணும் சிறந்த முறையில் இயங்குகிறது.

      Delete
  43. @ வவ்வால்

    இழிகுலப் பிறப்பே, உனது கமண்டை வெளியிட இயலாது. சாரி.........

    ReplyDelete

  44. \\அதே மாதிரி கடவுளும் காமிராவை உருவாக்கவில்லையே! \\மனிதனின் கண்ணுக்கு இணையான கேமரா உலகில் கிடையாது................

    ReplyDelete
  45. மதவெறி பன்னாடையே ,

    அந்தப்பின்னூட்டத்தில் அப்படி என்ன இழிவு கண்டாய்? வெளியிடாமல் என்னமோ ஆபாசமாக எழுதியது போல சீன் காட்டும் கேவலமான புத்தி ஏன்? அப்பின்னூட்டம் விரைவில் எனது பதிவில் வெளியாகி உமது வண்டவாளத்தை வெளிச்சம் போட்டுக்காட்டத்தான் போகிறது!!!

    ReplyDelete
  46. @ வவ்வால்

    விஷமத் தனமாக எழுதிவிட்டு ஒன்றுமே தெரியாத மாதிரி சீன் போட வேண்டாம். ஒழுக்கமா பேச போறேன்னு சொல்லிட்டு மீண்டும் மலம் தின்ற பன்றியைப் போல எழுத ஆரம்பித்து விட்டாய். நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய், உன்னைப் போல கேவலமாக கெட்ட வார்த்தைகளை உன் ஒருவனால் தான் உபயோகிக்க முடியும் என்று, கீ போர்டு நீ தட்டினால் வருவது போல நான் தட்டினாலும் வார்த்தைகள் வரும், மறக்க வேண்டாம். நீ எந்த பிளக்கில் எதை வேண்டுமானாலும் போடு என் மயிரைக் கூட அசைக்க முடியாது.

    ReplyDelete
  47. எலே விஷமத்தனமா எழுதுறதுனா என்னானு கூட தெரியாத என்னையப்பார்த்து இப்படி சொல்லுதே இந்த பன்னாடை அவ்வ்!


    அந்த பின்னூட்டத்தை நானே வெளியிடுறேன் அதில என்ன விஷமத்தனம்னு மகா சனங்க தெரிஞ்சிக்கட்டும் :-))

    அடிக்கடி மயிரு அசைக்க முடியாதுனு சொல்றதப்பார்த்தால் ....வேண்டாம் அதை என் வாயால நான் சொல்ல மாட்டேன் அவ்வ்!

    # இனிமே ஜென்மத்துக்கும் உமக்கு மறக்காதுடி .... இன்னும் ஒரு வாரத்துக்கு தூக்கம் வராம பாய பிறாண்ட போகிறாய் :-))

    ReplyDelete
    Replies
    1. \\அந்த பின்னூட்டத்தை நானே வெளியிடுறேன் அதில என்ன விஷமத்தனம்னு மகா சனங்க தெரிஞ்சிக்கட்டும் :-)) \\ உமக்கு நண்பர்கள் எந்த யோக்கியதையில் இருப்பாங்க? உம்மைப் போலத் தானே? சாக்கடையில குடியிருக்கிறவனுக்கு நாற்றம் எங்கே தெரியும்? அந்த மாதிரி நாறிப் போன மொழியை பிரயோக்கிக்கனும்னா நான் வேற பிளாக் ஆரம்பிக்கிறேன் அங்கே வாரும், இங்கே அல்ல.................

      Delete
  48. //நீ ஒரு கோடி கண்ணு நல்லா வேலை செய்யுதே, அதை எவன் செய்தான்னு சொல்லணும், அப்படி இல்லாட்டி அது தானா உருவாகும்னு நிரூபிக்கணும். முடியுமா?//

    கடவுள் எப்படி தானா உருவார்னு நிருபிக்கணும். முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. \\கடவுள் எப்படி தானா உருவார்னு நிருபிக்கணும். முடியுமா?\\ ஜடத்தை பார்க்கிறேன், அது தானா செயல்படாது, அதனால் அதன் பின்னாடி ஒருத்தர் இருக்கணும்னு முடிவுக்கு வந்தேன். இப்போ அதை இயக்குபவரை பற்றி கேட்டால், நான் அவரைப் பார்த்ததில்லை. அவரைப் பார்த்து அவரோட குண நலன்களை கண்டறிந்தால் மட்டுமே எதையும் முடிவு செய்ய முடியும்.

      Delete
    2. \\கடவுள் எப்படி தானா உருவார்னு நிருபிக்கணும். முடியுமா?\\ ஜடம் தன்னிச்சைய செயல்படும், சிந்திக்கும் இப்படியெல்லாம் நிரூபிச்சா கடவுளுக்கே வேலை இருக்காதே, அதை நீங்கள் செய்யவே முயல்வதில்லையே?

      Delete
  49. //காமிரா தானாகவே உருவானால் அன்றைக்கு நானும் நம்புகிறேன் படைத்தவன் இல்லை என்று. //

    கடவுள் தானாக உருவானார் என்று நீர் நம்பும்வரை, நாங்களும் இந்த உலகம் தானாக தான் உருவானது என்று நம்புவோம்.

    //.......நீ அசின் முன்னாடி தினமும் ஆட்டுறியே.....//

    நீர் அடிக்கடி பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது சம்பந்தம் இல்லாதது என்று பேசுவீரே, இது மட்டும் இந்த பதிவுக்கு சம்பந்தமானதா?

    //உமக்கு நண்பர்கள் எந்த யோக்கியதையில் இருப்பாங்க? உம்மைப் போலத் தானே? //

    உமது ஆத்திக நண்பர்களும், அடுத்தவன் யாரையோ பார்த்து ஆட்டுறத பத்தி தான் பேசுவாங்களா?

    ReplyDelete
    Replies
    1. \\கடவுள் தானாக உருவானார் என்று நீர் நம்பும்வரை, நாங்களும் இந்த உலகம் தானாக தான் உருவானது என்று நம்புவோம்.\\ கடவுளைப் பார்த்தால் தானே அவரைப் பற்றி எதையும் கூற முடியும்? ஜடம் தன்னிச்சைய செயல்படும், சிந்திக்கும் இப்படியெல்லாம் நிரூபிச்சா கடவுளுக்கே வேலை இருக்காதே, அதை நீங்கள் செய்யவே முயல்வதில்லையே?

      \\நீர் அடிக்கடி பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது சம்பந்தம் இல்லாதது என்று பேசுவீரே, இது மட்டும் இந்த பதிவுக்கு சம்பந்தமானதா?\\ அந்தாளு எழுதுவதெல்லாம் ரொம்ப யோக்கியம்....................அது உம்ம நொல்லை கண்ணுக்கு தெரியவே தெரியாது..............

      \\உமது ஆத்திக நண்பர்களும், அடுத்தவன் யாரையோ பார்த்து ஆட்டுறத பத்தி தான் பேசுவாங்களா?\\ அந்தாளு எழுதுவதைப் பார், தனியாளா சுத்துறான், குடும்பம் இருக்கிறவன் அப்படி எழுத மாட்டான்.

      Delete
  50. //அந்த மாதிரி நாறிப் போன மொழியை பிரயோக்கிக்கனும்னா நான் வேற பிளாக் ஆரம்பிக்கிறேன் அங்கே வாரும், இங்கே அல்ல//

    வவ்வால்,
    நமக்கென்று ஒரு exclusive comedy ப்ளாக்-ஐ ஆரம்பிக்கப்போகிறார். இன்னும் கொஞ்சம் நாளைக்கு நமக்கு ஜாலியா பொழுது போயிடும். நாம அங்கே போய் continue பண்ணலாம். இங்க விட்டுருவோம். பாவம் மனுஷன் ரொம்ப நொந்துட்டார்.

    ReplyDelete
  51. வேற்றுகிரகவாசி,

    இது செய்றது எல்லாமே காமெடி தான் ,எனவே தான் ரொம்ப சீரியசாக எடுத்துக்கிறதே இல்லை. இந்தாளு இருக்க வரைக்கும் நமக்கு ஜாலியா தான் பொழுது போகும் :-))

    ReplyDelete
  52. @ப. சிவக்குமார் 
    தங்களது பதிவிற்கு வந்தேன், மேலோட்டமாகப் படித்தேன்.  தங்களுக்கு எல்லா விவரமும் ஏற்கனவே தெரிந்து இருக்கிறது என்று நீங்களே முடிவு செய்து கொண்டு அடுத்தவனை நோக்கி எதற்கு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று தான் புரியவில்லை..  
    உதாரணத்திற்கு, தனியாக இருந்த குழந்தைக்கு பால் (அதுவும் முலைப் பால்..... ) கொடுக்க வந்த பார்வதி கும்பகோணம் பள்ளி பற்றி எரிந்து  93 குழந்தைகள் மாண்டபோது எங்கே சென்றார்கள் என்று கேட்டிருக்கிறீர்கள்.  சரி பார்வதி கற்பனை என்று வைத்துக் கொள்வோம்.  தற்போது அந்த 93 குழந்தைகளும் எழுந்து வந்து விடுவார்களா?!  அல்லது தீப்பிடித்ததற்கு பார்வதியை கும்பிடுகிறவன் தான் காரணமா?  யாரை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்??!! 
    எல்லாம் தெரிந்த அறிவாளி எதற்காக பிளாக்கரில் வந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றே தெரியவில்லை.  கெரகம்டா சாமி......

    ReplyDelete
  53. பதிவை போட்ட உமக்கு கருத்து சொல்ல பின்னூட்டப் பெட்டியை வைக்க விருப்பமில்லையா?!  எவனும் எதிர் கருத்து தெரிவிக்கக் கூடாதா?!  நீயே சொல்லி, தீர்ப்பு சொல்வதற்கு பொதுவெளிக்கு எதற்கு வரவேண்டும்.  ஒரு ரூமுக்குள் உட்கார்ந்து எழுதி உம் முதுகில் நீரே தட்டிக் கொள்ளவும்.

    ReplyDelete