Monday, February 25, 2013

Evolution: பரிணாமம் அறிவியல்தானா?

நாம் வாழும் இவ்வுலகில் நம்மைச் சுற்றிலும் அழகிய வடிவமைப்பைக் கொண்ட விதம் விதமான தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளன.  இவை எப்படி உருவாயின?  இறைவன் ஒருவன் இருக்கிறான் அவன் படைத்தான் என்றே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக  மக்கள் எண்ணி வந்தனர்.  1859 ஆம் ஆண்டு ஒரு ட்விஸ்டாக சார்லஸ் டார்வின் இந்த நம்பிக்கை மேல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.  உயிர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக மிக மெதுவாக நடைபெறும் இயல்பான பரிணாம வளர்ச்சி மூலம் உருவாயின என்றார்.  அதாவது, கடவுள் ஒன்றும் மனிதனைப் படைக்கவில்லை, மாறாக மனிதக் குரங்கு போன்ற மற்ற சிறிய விலங்கினங்களில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து உருவானான் என்றார்.  150 ஆண்டுகள் கடந்தபின்னர், இன்றைக்கும் உலகின் முக்கிய கல்வி நிறுவனங்களிலும், ஆராய்ச்சியாளர்களிடமும் டார்வினின் பரிணாமக் கொள்கை பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்ற தேடலில் ஒரு முக்கிய கொள்கையாக விளங்கி வருகிறது.

இங்கே நாம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.  பரிணாமக் கொள்கை வெறும் உயிரற்ற கல்லும் மண்ணுமாக இருந்த உலகில் முதல் உயிருள்ள செல் எவ்வாறு தோன்றியது என்பதை பற்றி எதுவும் கூறவில்லை.  மாறாக, ஒருசெல் உயிரி முதலில் இருந்தது, பின்னர் பலசெல் உயிரிகள் தோன்றின அவைற்றில் இருந்து பல்வேறு உயிரினங்கள் பரிணமித்துத் தோன்றின என்பதே பரிணாமக் கொள்கை.  முதன் முதலாக ஒன்று அல்லது சில உயிர்களுக்கு கடவுள் மூச்சைக் கொடுத்து உயிரை உண்டு பண்ணியிருக்கலாம் என்று டார்வின் சொன்னார்.   டார்வின் கடவுள் இருப்பதை இதன் மூலம் ஒப்புக் கொண்டாலும், பின்னர் வந்த பரிணாம வாதிகள் அதையும் நிராகரித்து படைப்பில் இருந்து கடவுளை மொத்தமாகவே நீக்கிவிட்டனர்.

இவ்வாறு 150 வருஷமா குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் இந்த பரிணாமக் கொள்கை  அறிவியல்பூர்வமானதுதானா என்று நாம் இங்கே அலசப் போகிறோம்.   இதற்கு காரணமும் இருக்கிறது.  மேற்கத்திய நாடுகள் பலவற்றில்  பொதுமக்களிடையே "பரிணாமக் கொள்கையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா?" என்று வாக்கெடுப்பு நடத்தி முடிவுகள் வெளியிடப் படுவதை நீங்கள் பலமுறை செய்திகளில் படித்திருக்கலாம்.   நாய் போன்ற விலங்கொன்று தான் தண்ணீருக்குள் சென்று திமிங்கலமா மாறியது, டைனோசர்கள் தான் பறவைகளாக மாறியது என ஒரு அறிவியல் கொள்கை விநோதமாக இருக்கிறதே என்று மக்கள் நம்ப மறுப்பதால் தான் இவ்வாறு வாக்கெடுப்பு எடுக்கப் படுவதாக நீங்கள் நினைத்தால் அங்கே தான் தப்பு செய்கிறீர்கள்!!  வினோதம் என்று பார்த்தால், குவாண்டம் கொள்கையும், ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையும் பரிணாமக் கொள்கையை விட பலமடங்கு விநோதமானவை.  நம் நடைமுறை வாழ்க்கையை வைத்துப் பார்த்தால் மண்டையை பீய்த்துக் கொள்ள வைக்கக் கூடிய கொள்கைகள் அவை. ஆனாலும், அவற்றில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்று யாரும் வாக்கெடுப்பு நடத்தியதாகத் தெரியவில்லை.  ஆனால் பரிணாமக் கொள்கைக்கு அது நடக்கிறது.  காரணம் என்ன?  வேறொன்றுமில்லை, முன்னவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டவை, பரிணாமக் கொள்கை கற்பனையாகத் திரிக்கப் பட்டது, சல்லி ஆதாரம் கூட இதுவரையிலும் காட்டப் படாதது, கட்டுக் கதைகளையும், பொய்யையும் புனைசுருட்டுகளையும் வைத்தே 150 வருடங்களாக ஓட்டப் படும் ஒரே கற்பனை சினிமா இந்த பரிணாமக் கொள்கை.    இதனால் தான், பெரும்பாலான மக்களுக்கு  டார்வினின் கொள்கையில் நம்பிக்கை இல்லை, அதில் நம்பிக்கை உள்ளதா என்று வாக்கெடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது.

பரிணாமத்தில் பல வகை உண்டு.  அவையாவன:

Chemical Evolution:  [வேதிப் பொருட்கள் இணைந்து உயிர் உருவானதாக கருதுதல்].  இதன்படி முதலில் தனிமங்கள் [ஹைட்ரஜென், கார்பன் போன்றவை] இருந்தன, அவை சேர்ந்து மூலக்கூறுகளாயின, பின்னர் DNA, புரோட்டீன் தோன்றி ஒரு செல் உயிர் தோன்றின என்று சொல்கின்றனர்.

Biological Evolution:  [உயிரியல் ரீதியான பரிணாம வளர்ச்சி] இதன் பொருள், முதலில் தோன்றிய ஒரு செல் உயிர்களில் இருந்து பலசெல் உயிர்கள் என படிப்படியாக பரிணாமம் அடைந்து மீன்கள்,  தவளை, ஆமை, குரங்குகள் இறுதியாக மனிதன் என இன்றைக்கு நாம் காணும் அனைத்து உயிரினங்களும் தோன்றின என்பதாகும்.

Biological Evolution-னிலும் இரண்டு வகைகள் உண்டு அவை:
1. Micro Evolution & 2.Macro Evolution


Micro Evolution:  மைக்ரோ பரிணாமம் என்றால் ஒரு இனத்திற்குள்ளாக நடைபெறும் பரிணாமம்.  உதாரணத்திற்கு, நாய்களை எடுத்துக் கொண்டால் வெவ்வேறு இனங்கள் காணப்படுகின்றன.  சிலது மிகச் சிறியதாக உள்ளது, சிலது கன்றுகுட்டி சைசுக்கு வளர்கின்றன.  இது ஒரு இனத்தினுள் காணப்படும் மாறுபாடு.

 

Macro Evolution:  ஒரு உயிரினம் பரிணாமமடைந்து வேறொன்றாக மாறுவதாகச் சொல்வது.  இதில் மிகவும் பிரபலமானது மனிதக் குரங்கு மனிதனாக மாறியதாகச் சொல்லப்படும் கதை.   இதோடு நில்லாமல், நிலத்தில் திரிந்து கொண்டிருந்த கரடியைப் போல மாமிச உண்ணி ஏதோ ஒன்றுதான் திமிங்கலமாக மாறியது என்பது போன்ற அதிரடியான பல கோட்பாடுகளும் இதனுள் அடக்கம்!!

இத்தனை விதமான பரிணாமக் கோட்பாடுகள் இருந்தாலும், இவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் ப ட்டு பின்னர் ஏற்கப் பட்டவைதானா என்பதே அலசுவதே நமது இந்தப் பதிவின் நோக்கமாகும்.   

விஞ்ஞான ரீதியான பரிசோதனை அப்படின்னா என்ன?

ஒரு நிகழ்வை கவனித்தல், அதுகுறித்த கோட்பாடு, பரிசோதனை, சோதனை முடிவுகளில் இருந்து அனுமானம் [Observation, Theory, Experiment & Conclusion] என்ற வரிசைக் கிராமமாக அணுகுவது விஞ்ஞான முறையாகும்.  

முதலில் Observation:  முதலில் கல்லும் மண்ணும் தான் இருந்தது, அதிலிருந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உயிர்கள் தோன்றின.  இதற்க்கு ஏதாவது சான்றாக உள்ளதா என நாம்  தற்போது வாழும் உலகைப் பார்க்கவேண்டும்.  எங்காவது பாதி மனிதனாகவும், பாதி குரங்காகவும் வாழும் உயிரினத்தைப் பார்த்திருக்கிறோமா?  பாதி தவளை-பாதி மீன்?  பாதி பறவை-பாதி ஊர்ந்து செல்லும் இனம்?   இந்த மாதிரியெல்லாம் இடைப்பட்ட உயிரினம் என்று எதுவும் இல்லை!!  எந்த உயிரினத்தை எடுத்தாலும் முற்றிலும் பூரண வளர்ச்சியடைந்த உயிர்களாக உள்ளனவே தவிர பாதி வளர்ச்சியடைந்த உயிரினங்கள் என்று எதுவும் இல்லை.

அப்படியானால் பரிணாமம் எப்போது நிகழ்ந்திருக்க வேண்டும்?  முன்னொருகாலத்தில்!!  அப்போ அதற்க்கு ஆதாரம் என்ன?  கற்படிவம் எனப்படும் Fossils.   பல்லாயிரம்/மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினங்களின் உடல்கள்   Fossil களாக பூமிக்கடியில் பாதுக்காக்கப் பட்டுள்ளன.  இதைக் குறித்த படிப்பிற்கு பெயர் Paleontology எனப்படும்.

உலகில் இவ்வகையான கற்ப்படிவங்கள் [Fossils] 20 கோடி சேகரிக்கப் பட்டுள்ளன.  இவற்றில் பாக்டீரியாக்கள், புழுக்கள், பூக்கள் எல்லாமும் அடங்கும்.

10 கோடி முதுகெலும்பற்ற உயிரினங்கள். நத்தை, நட்சத்திர மீன் போன்றவை.

10 லட்சம் பூச்சியினங்கள்.
5 லட்சம் மீன்கள்

2 லட்சம் பறவைகள்.
1 லட்சம் டைனசோர்கள்

4000 திமிங்கலம்.
1000 வவ்வால்கள்.

இந்த எண்ணிக்கைகளில் சேகரிக்கப் பட்ட இத்தனை கற்படிவங்களை ஆராய்ந்த பின்னரும் கிடைத்த முடிவுகள் ஒன்று கூட பரிணாமத்துக்கு ஆதரவாக இல்லை.  எந்த உயிரினத்தை எடுத்தாலும் அவை முழுமையாக வளர்ச்சியடைந்த வடிவமைப்பையே  பெற்றுள்ளன, இரண்டுங் கெட்டான் நிலையில் [Intermediary] எந்த கற்படிவமும் இல்லை. மீன், குரங்கு, மனிதன் போன்ற இன்றைக்கு இருக்கும் உயிரினமாயினும், டைனோசர் போன்ற பூமியில் மறைந்த உயிரினமாயினும் முழு வளர்ச்சியடைந்த நிலையிலான படிவங்களே உள்ளன, அவை எவற்றுக்கும் முன்னோர் இருந்ததாகவோ அல்லது  ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறியதாகவோ எந்த Fossil ஆதாரமும் இல்லை.   மேலும், அவை ஒரு காலகட்டத்தில் திடீரெனத் தோன்றுகின்றன, திடீரென மறைகின்றவே தவிர ஒருபோதும் பாதி பரிணாமம் அடைந்த நிலையில் ஒரு படிவம் கூட இதுவரை கிடைக்கவில்லை.

எதை வச்சு டார்வின் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் எனச் சொன்னார்? இதுக்கு அவர் பெரிய ஆராய்ச்சிகள் எதையும் செய்திருக்கவில்லை. மனிதனையும், மனிதக் குரங்கையும் பார்த்தார் தோற்றம் கிட்டத் தட்ட மனிதளைப் போலவே ஒரே மாதிரியாக இருந்ததால் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என அடிச்சு விட்டார்.  மேலும், இதைப் போல ஒரு உயிரினம் இன்னொன்றாக பரிணாமம் அடைந்தது என்பதில் பெரிய லாஜிக்கல் ஓட்டை உள்ளது.   உதாரணத்திற்க்கு, மனிதக் குரங்கு மனிதனாக மாறியதை எடுத்துக் கொள்வோம்.

Ape [ஆரம்பம் குரங்கு] ------  Ape-Man [மனிதனுக்கும், குரங்குக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள உயிரினம்] ------------- Man [இறுதியாக மனிதன்].

டார்வின் ஏன் பரிணாம வளர்ச்சி யடைகிறது என்பதற்கு Survival of the Fittest என்ற ஒரு விளக்கத்தைச் சொன்னார்.  அதாவது கால சூழ்நிலைகளில் ஏற்ப்படும் மாற்றத்தை  தாங்கி நிற்கும் வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் உயிரினம் மட்டுமே வாழும்.  அப்படிப் பார்த்தால் மேலே Ape  என்ற இனம் Ape -man என்ற நிலைக்கு மாறக் காரணமே, மாறிவரும் சூழ்நிலை மாற்றத்தை தாங்கிக் கொள்ள Ape வடிவம் லாயக்கற்றது, அதனால்தானே?!  அப்படியானால் Ape -man என்ற இரண்டுங் கெட்டன் நிலை Ape ஐ விடச் சிறந்ததாகவே இருக்க வேண்டும்.  ஆனால் இன்றைக்கு வாழத் தகுதி குறைந்த Ape இருக்கிறது, முழுமையாக மாறிய மனிதனும் இருக்கிறான், ஆனால்  Ape ஐ விட அதிக வாழும் தகுதி படைத்த Ape -Man மட்டும் ஏன் இல்லை??!!  என்ன கொடுமை டார்வின் இது?

இப்படியெல்லாம் கிடுக்கிப் பிடி போட்டு கேள்வி கேட்டதும், பரிணாமவாதிகள் உட்கார்ந்து ரூம்போட்டு யோசித்தனர்.  நல்லா கவனிங்க, இவனுங்க எந்த அறிவியல் ஆராய்ச்சியும் இன்னமும் செய்யவில்லை, கதை எப்படி கட்டுவது என்று தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்!!   ஒரு வழியா முடிவு பண்ணி, இன்னொரு கப்சாவை அவிழ்த்து விட்டனர்.  குரங்கு மனிதனாக ஆகவில்லை, குரங்கும், மனிதனும் ஒரே பொது முன்னோரில் இருந்து தோன்றினர் என்று தோசையை திருப்பிப் போட்டனர்!!  அது யாரப்பா இருவருக்கும் பொதுவான முன்னோர் உயிரினம் எனக்கேட்டால், "அதான் அழிந்து போன இனத்தில ஒன்னு" என்றனர்.  அதற்க்கும் எந்த ஆதாரமும் எதிலும் கிடையாது!! 

மேலும் கிடைத்த கற்படிவங்களில் தோன்றும் வடிவங்கள், கொசு, தலை பிரட்டை தவளை என எதைஎடுத்தாலும்  இன்றைக்கு அவை எவ்வாறு உள்ளனவோ அதே மாதிரிதான் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும்  இருக்கின்றனவே அன்றி பரிணாமம் அடைந்து மாறுபட்டதாக இல்லை. 
ஆக மொத்தத்தில்,  எவ்வளவு ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த கற்படிவங்களை பார்த்தாலும் அவற்றுக்கு முன்னோர்கள் இவைதான் என்பது போல எவையும் இதுவரை இல்லை, எனவே எந்த உயிரினமும் படிப்படியாக பரிணாமம் அடைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை, அதற்குப் பின்னரும் இன்று வரை எந்த மாற்றமும் அடைந்ததாகவும் சான்றுகள் இல்லை.   பரிணாமம் நிகழ்ந்தது என நிரூபிக்க இவையிரண்டும் முக்கியம், ஆனால் எந்த சான்றுகளும் இவற்றுக்கு ஆதரவாக இல்லை.

ஆனாலும் பரிணாம வாதிகள் அசரவில்லை.  ஒவ்வொரு பித்தலாட்டமாக அரங்கேற்ற ஆரம்பித்தனர்.  அதிலில் முதலில் வருவதுதான் பாதி குரங்கு, பாதி மனிதன் மண்டையோடு கதை.  [The Piltdown Man Hoax சுட்டி]  1912 ஆண்டு ஹிண்டன் மற்றும் சார்லஸ் டாசன் என்று இரண்டு பேர் இங்கிலாந்தில் பில்ட்டவுன் என்னுமிடத்தில் 5 லட்சம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மண்டையோட்டு படிவம் கிடைத்ததாகவும் அதன் தாடை குரங்கைப் போலவும், கடைவாய்ப் பற்கள், மண்டையோடு மனிதனைப் போல இருப்பதாகவும் கதைகட்டி நம்பவைத்தனர்.   இது குரங்குக்கும் மனிதனுக்கும் சேர்த்த பொதுவான மூதாதையர் இனம் என்றும், பரிணாமம் நடந்தது என்பதற்கான சான்று என்றும் கூறி, இப்படிவம் உலகின் பல முன்னணி அருங்காட்சியகங்களில் வைக்கப் பட்டது.   இதைப் பார்வையிட்ட பெரிய பெரிய விஞ்ஞானிகள் கண்களுக்கும் எதுவும் தவறாகப் புலப்படவில்லை, கோடிக் கணக்கான அப்பாவி மக்களும் உண்மை என்றே நம்பினார்.  அடுத்த 40 ஆண்டுகளில் கிட்டத் தட்ட 500 Ph.D ஆய்வுக்கட்டுரைகள் இதை வைத்தே கயிறு திரிக்கப் பட்டன.  இறுதியாக பிரிட்டிஷ் அருங் காட்சியகம் ஒன்றில் இப்படிவம் வைக்கப் பட்டது.  1949 ஆண்டு, கென்னத் ஓக்லி என்ற படிவ ஆய்வாளர், படிவங்களின் வயதைக் கண்டுபிடிக்கும் ஃபுளோரைடு பரிசோதனை என்னும் புதிய முறையை உருவாக்கியிருந்தார், அவர் தனது முறையை இதற்க்கு பயன்படுத்த எண்ணி இப்படிவத்தை ஆராய்ந்த போதுதான் இது போலி என்று தெரிய வந்தது.  இதன் தாடை சமீபத்திய உராங்குட்டான் குரங்கினுடையது என்றும், மண்டையோடு சில நூறு வருடங்களுக்கு முன்னர் வந்த மனிதனுடையதே என்றும் தெரியவந்ததது.  மேலும், இதன் தாடையை ரம்பம் போட்டு அறுத்த கோடுகள் கூட தெரிந்தது. இரண்டையும் ஒட்டி இத்தனை வருடங்களும் ஏமாற்றி இருக்கிறார்கள் அந்தப் புண்ணியவான்கள். [Popular Science சுட்டி]


 இவர்கள் செய்த அடுத்த பித்தலாட்டம், ஆப்பிரிக்க காங்கோ காடுகளில் பிள்ளைகுட்டிகளுடன் வாழ்ந்த ஒடா பெங்கா [OTA BENGA] என்ற ஒரு மனிதனை பிடித்து வற்புறுத்தி கை கால்களுக்கு விலங்கிட்டு கூண்டில்  ஒரு மிருகத்தை அடைப்பது போல அடைத்து அமரிக்காவுக்குக் கொண்டு சென்று பல வருடங்கள் Zoo வில் மற்ற மிருகங்களைப் போலவே வைத்து கொடுமைப் படுத்தியதாகும்.  அங்கே ஒரு உறங்குட்டான் குரங்கை தன்னோடு வைத்துக் கொண்டு வருபவர்களுக்கு போஸ் குடுக்க வேண்டுமென்று துன்புறுத்தப் பட்டிருக்கிறார்.  பின்னர் அவர் விடுவிக்கப் பட்டாலும் தனது கூட்டத்தோடு சேர்க்கப் படமாட்டார் என்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.  [சுட்டி]   தாங்கள் எடுத்துக் கொண்ட போலிக் கொள்கையை உண்மையாக்க எல்லா அயோக்கியத் தனகளையும் செய்யத் துணிந்தவர்கள் இந்த பரிணாம வாதிகள் எனபதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

 



 

 இதற்க்கடுத்தார் போல வருவது பித்தாலாடத்துக்கே பெயர் பெற்ற நம்ம சீனாக் காரனுங்க செய்த வேலை.  இவனுங்க ஒரு டைனோசரின் படிவத்தை எடுத்து அதை பறவை போல செய்து பார்த்துக்கோங்க டைனோசர்தான்  பறவைகளாக மாறியது என்று ஏமாற்றினார்.  இந்தப் படிவம் ஆராயப் பட்டு போலி என்று  அறிவிக்கப் பட்டது.  ஆனாலும், இதற்க்கு செவிசாய்க்காத நேஷனல் ஜியோகிராபிக் சேனல் இதை உண்மை என்றே ஒளிபரப்பியது.

 


 


அரிஸ்டாட்டில் வாழ்ந்த காலத்தில் இன்னொரு கொள்கையும் வலம் வந்து கொண்டிருந்தது.  உறுப்பை பயன்படுத்தும் விதத்தில் அது எவ்வாறு பரிணாமம் அடையும் என்பது குறித்த கொள்கை இது.   உதாரணத்திற்க்கு ஒட்டகச் சிவிங்கி, அது மான் மாதிரி ஒரு இனம், அதன் கழுத்து முதலில் குட்டையாத்தான் இருந்துச்சு.  இலைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, கீழே இருந்த இலைகள் தீர்ந்து போச்சு, அதனால மரத்தின் மேலேயுள்ள இலைகளைப் பறிக்க எம்பி எம்பி கழுத்து நீண்டு பல தலைமுறைகளுக்குப் பின்னர் இப்போது உள்ள நிலையை அடைந்தன என்று ஒரு கதையுண்டு.  இது ஒரு உறுப்பை அதிகமாக உபயோகிப்பதால் வந்த வினை.  ஆனால், இது உண்மையா?  ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து மிகவும் நீளம், அவ்வளவு உயரத்துக்கு இரத்தத்தை ஏற்றுவதற்கு இதயம் அதீத அழுத்தத்தை செலுத்தும்.  [280/180mm Hg].  ஆனால் அது தண்ணீர் குடிக்க குனிய வேண்டியிருக்கும்.  அப்போது இதே அழுத்தத்தோடு இரத்தம் போனால் இரத்தக் குழாய்கள் வெடித்துச் சிதறிவிடும்.  அப்போது குறைந்த அழுத்தமே இருக்க வேண்டும், இதை இரத்தக் குழாய்கள் விரிவடைதல், இரத்தம் தலைக்குச் செல்லாமல் திசை திருப்புதல் போன்ற அமைப்புகள் மூலம் சரி செய்யப் படுகிறது. குனிந்திருக்கும் தலை மேலே எழும்பும் பொது அதே குறைந்த அழுத்தம் இருக்குமானால் மயக்கம் போட்டு விழுந்து சாக வேண்டி வரும், அப்போது இரத்தத்தை தடுத்த அதே தகவமைப்பு இரத்தத்தை வழங்கி காக்கிறது.  இந்த மாதிரி ஒரு தகவமைப்பு குட்டையாக உள்ள மான்கள் போன்ற என்ற ஒரு உயிரினத்துக்கும் இல்லை.  அப்புறம் எப்படி ஒட்டகச் சிவிங்கிக்கு மட்டும் அது வந்தது?  ஒரு வேலை கழுத்து நீளும் பரிணாமம் நிகழும்  போது அத்தகவமைப்பு இல்லாமல் இருந்து, பின்னர் உருவாக வேண்டுமென்றால் உருவாகும் காலம் வரை அது கீழே குனியவே முடியாதே?!!   தண்ணீரே குடிக்காமல் செத்திருக்குமே?




அதே மாதிரி ஒரு உறுப்பை உபயோகப் படுத்தாவிட்டாலும் அது வீக் ஆகி காலப் போக்கில் காணாமல் போய்விடும்.  இதற்க்கு உதராணமாக அவர்கள் காட்டுவது மனிதனுக்கு உள்ள குடல் வால்!! முதலில் மனிதனும் வாலோடதான் சுத்திகிட்டு இருந்தான், அப்புறம் காலப் போக்கில் அவன் அதை சரியாப் பயன்படுத்தவில்லை, அதனால் அது அது காணமல் போய் உடம்புக்குள் இன்றைக்கு இருக்கும் குடல்வாலாக மாறிவிட்டது என்றும் கதை  சொல்கிறார்கள்.  [ நாங்க சொல்லுவோம், நீங்க தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையை ஆட்ட மட்டும்தான் வேண்டும்!! அதற்கும் படிவம், அது இதுன்னு ஆதாரமெல்லாம் கேட்கப் படாது!! ஆதாரம் கேட்க இதென்ன அறிவியலா?].

அதுசரி, முதலில் வால் வரவேண்டியதற்க்கான அவசியம் என்ன என்று ஒரு கேள்வி எழுகிறது.  ஏதோ தேவை இருப்பதால் தானே வால் பரிணாமத்தில் [அவங்க கணக்குப் படி] உருவானது, பின்னர் அது எப்படி தேவையில்லாமல் போகும்?  உண்மையில் குடல்வால் பச்சைக் காய்கறிகள் பழங்களை செரிப்பதில் உடலுக்கு உதவி புரிகிறது, இப்போது நாம் அவற்றை அவ்வளவாக உண்ணாததால் அது பயனற்றது, நீக்கினாலும் பிரச்சினையில்லை என நினைத்தார்கள். உண்மையில் குடல்வால் நீக்கப் படுபவர்கள் பல உடல்நலக் கோளாறுக்கு ஆளாவது தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  எனவே உடலுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பயன் இருக்கிறது ஆனால் நமக்கு அது தெரியவில்லை. அவ்வாறு தெரியாமல் போவதால் அது தேவையே இல்லாதது என்று அர்த்தமாகாது.


மேலே சொன்ன, இது மாதிரியான உதாரணங்களில் பெரிய ஓட்டை இருக்கிறது.  இனபெருக்க செல்களில் உள்ள ஜீன்கள் தான் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கடத்தும் வேலையைச் செய்கின்றன.  ஆனால், அவற்றில் உங்கள் உடல் உறுப்புகளை எதை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் எதை குறைவாகப் பயன்படுத்துகிறீர்கள் என்ற விவரம் பதியப் படுவதில்லை, எனவே அத்தகவல்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப் பட வாய்ப்பேயில்லை.  டார்வினும் உபயோகம் குறைந்த உடலுறுப்பு அந்த உயிரினத்திடம் இருந்து காலப் போக்கில் காணமல் போய்விடும் என்ற சிந்தனையைத்தான் கொண்டிருந்தார்.  ஆனால் இது ஜெனட்டிகலாக சாத்தியமே இல்லை.  உதாரணத்திற்கு நடிகை ஸ்ரீதேவி ஜப்பானுக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து மூக்கை வெட்டியிருக்கலாம், ஆனாலும் அவருடைய மகள் 16 வயதினிலே ஸ்ரீதேவியை அச்சில் வார்த்த  மாதிரியே தான் பிறந்துள்ளார்.

பெரிய மூக்கு வச்சிருந்த ஸ்ரீதேவி...........

ஜப்பானுக்குப் போயி ஆபரே ஷன் பண்ணிய விஷயம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் படவில்லை.






அவங்க பொண்ணு எங்கம்மா மூக்கு இப்படித்தான் இருந்துச்சுன்னு நிரூபிச்சுட்டாங்க!!   இது எப்படி இருக்கு!!

ஒரு உடலுறுப்பு பயன்படுத்தப் படவில்லை என்பது அடுத்த தலைமுறையை எந்தவிதத்திலும் பாதிப்பதேயில்லை.  இதை நிரூபிக்க, 19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் ஆகஸ்ட் வைஸ்மன் August Weismann என்ற விஞ்ஞானி, வெள்ளை எலிகள் மீது சில பரிசோதனைகளைச் செய்தார்.  ஏனெனில் இவற்றின் இனப்பெருக்க வேகம் அதிகம், ஆகையால் குறுகிய காலத்திலேயே பல தலைமுறைகளைக் காணமுடியும்.  வெள்ளை  எலிகளைப் பிடித்து கிட்டத்தட்ட 20 தலைமுறைகளுக்கு அவற்றின் வால்களை வெட்டித் தள்ளினார்.  ஆனாலும், இவ்வாறு உருவான எலிகளில் வால் இல்லாமலோ அல்லது சிறிய வாலுடனோ ஒரு எலி கூட பிறக்கவில்லை.  முதல் தலைமுறை எலிகளைப் போலவே நீண்ட வாலுடனேயே அனைத்தும் பிறந்தன!!  எனவே உறுப்புகளை பயன்படுத்தாமல் விடுவது/மூலி செய்வது [mutation] பின்வரும் தலைமுறைகளில் உறுப்புகளை இழக்கச் செய்யும் என்ற கொள்கை தோற்கடிக்கப் பட்டது.  உடலில் உள்ள செல்களில் ஏற்ப்படும் மாற்றம் பற்றிய தகவல் இனப்பெருக்க செல்களில் உள்ள DNA வை எவ்விதத்திலும் பாதிக்காது, எனவே அடுத்த தலைமுறைக்கு அத்தகவல் கடத்தப் படாது!!  எனவே இந்த முறையில் எந்த பரிணாமமும் நடக்காது.

அதை அடுத்து Survival of the Fittest [வலியவனே வாழ்வான்] என்ற ஒரு கொள்கையை தனது பரிணாமத்திற்கு ஆதரவாக டார்வின் கொண்டுவந்தார்.  பெண்ணினத்துடன் யார் இணைவது என்பதை மான் முதல், சிங்கம், புலி, காண்டாமிருகம், யானை வரை, சண்டையிட்டு யார் ஜெயிகிறார்கள் என்பதை வைத்தே அவை தீர்மானிக்கின்றன.  இதை பல இயற்கைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த முறையில் பரிணாமம் நடக்குமா?  ஒரு புதிய இனம் உருவாகுமா?  நடக்காது.  ரெண்டு ஆண் யானைகள் ஒரு பெண் யானைக்கு அடித்துக் கொண்டாலும் இறுதியில் ஜெயிக்கப் போவது ஒரு யானைதானே!!  எனவே பிறக்கப் போகும் குட்டி சிறந்த குணங்களுடன் இருக்கலாம் ஆனால் அதுவே பரிணாமம் ஆகி புதுசா வேற ஒரு ஜீவன் உருவாகாது!!

ஒருவகை உயிரினத்தில் சைசில் சிறியது பெரியதாக இருந்தாலும் இனம் அதே இனம்தான், அதை பரிணாமம் என்று சொல்ல முடியாது.

புலி + சிங்கம் 

கழுதை + வரிக்குதிரை 



சிங்கம் + புலி 

குதிரை + வரிக்குதிரை.

மேற்கண்ட கலப்பினத் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளை பரிணாமம் எனக் கூற முடியாது.  ஏனெனில் பெற்றோருக்கு இல்லாத ஒரு பண்பு அடுத்த தலை முறையில் தோன்றாது.  சிங்கமும் புலியும் இணையலாம் அதே சிங்கமும் வரிக்குதிரையும் இணைய முடியுமா?  முடியாது.

தொடரும்......................


109 comments:

  1. நல்லதொரு கட்டுரை...

    சிந்திக்க வேண்டிய விசயங்கள் : குணங்களும் பண்புகளும்...

    நன்றி...

    ReplyDelete
  2. மாப்ளே தாசு,
    மறுப்பு பதிவு இட்டுவிட்டோம்!!.

    http://aatralarasau.blogspot.com/2013/02/blog-post_26.html

    நன்றி!!

    ReplyDelete
  3. நான் நினைச்சது நடக்குது. புதிய விஷயங்களை வெளிக்கொண்டுவரும்னு நம்பலாம்

    ReplyDelete
  4. May we know your qualification? Means in which field are u in?

    ReplyDelete
  5. Super Article .Must read for all students and everyone.

    ReplyDelete
  6. Is not it a wonderful coincidence that a blog with the title written today? See yourself.

    http://www.amsenthil.com/2013/02/blog-post_26.html?m=1

    Same annony of comment no. 4

    ReplyDelete
  7. ஜெயதேவ்!நலமா? உங்க மாமு கொடுத்த சுட்டிகளைப் படிச்சு சிரிச்சிட்டுத்தான் உங்களை ”தேடி” வந்தேன்:)
    நிறைய சொல்ல முயற்சித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்களோடு இன்னும் ஆழம் போதவில்லையென உணர்கிறேன்.காரணம் உங்களைப் போலவே ஆசிக் அகமது என்பவர் மாமுவுக்கும்,பரிணாமத்திற்கும் எதிராக சிலவற்றை ஆழ்ந்து சொல்ல முயற்சி செய்து மாமு பாக்ஸிங்கால் பின்வாங்கிட்ட மாதிரி தெரிகிறது.உங்களை விட இறை நம்பிக்கை சார்ந்துசிறப்பாக விவாதித்த நினைவு.

    டார்வின் பற்றி மேம்போக்காக சொல்ல முயற்சி செய்திருக்கிறீர்கள்.டார்வின் உலகம் முழுதும் கப்பல் பயணம் செய்து பல விதமான ஊர்வன,பறப்பன,நீந்துவன என Specimen களை சேகரித்து நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்பே பரிணாமக் கொள்கையை வெளியிட்டார்.அப்படியிருந்த போதும் அப்போதைய மத அடக்குமுறைகளுக்குப் பயந்தும்,தன் மகளின் இழப்பில் துயரம் கொண்டும் முடிவை எதிர்கால சந்ததிக்கு விட்டு விட்டார்.

    Fossil ஆராய்ச்சிகள் மேற்கத்திய நாடுகளில் இன்னும் தொடர்ந்து நிகழ்கின்றன.Human Tree ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்க கூடுமென நீங்க சொன்ன அப்சர்வேசன்,தியரி,நிரூபணங்கள் தெரிவிக்கின்றன.

    பரிணாமத்தில் குரங்கு நிலையிலிருந்து நிமிர்ந்து நடக்கும் மனித நிலைக்கு நடக்கும் நிலையின் தொடர்பில் சில பக்கங்களைக் காணோமென கண்டேன்.இந்த தொடர்பு கிடைத்தால் பரிணாம வட்டம் உறுதிப்படுத்தப் படும்.மேற்கத்திய நாடுகளில் பரிணாமம் கல்விப்பாடத்தின் ஒரு பகுதியாக உள்ளது.இந்தியாவும் பின் தங்கிப் போகாமல் தியரி என்ற அளவிலாவது பரிணாமத்தை சொல்லித் தருவது அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. \\காரணம் உங்களைப் போலவே ஆசிக் அகமது என்பவர் மாமுவுக்கும்,பரிணாமத்திற்கும் எதிராக சிலவற்றை ஆழ்ந்து சொல்ல முயற்சி செய்து மாமு பாக்ஸிங்கால் பின்வாங்கிட்ட மாதிரி தெரிகிறது.\\ இப்படி ஆளாளுக்கு உசுப்பேத்தி உசுப்பேத்தியே எங்க மாமு உடம்ப ரணகளமாக்கிட்ட்டீங்களே சார்!!

      Delete
    2. சகோ ராஜ நடராஜன்,

      உங்கள் மீதும் உங்களின் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..

      //காரணம் உங்களைப் போலவே ஆசிக் அகமது என்பவர் மாமுவுக்கும்,பரிணாமத்திற்கும் எதிராக சிலவற்றை ஆழ்ந்து சொல்ல முயற்சி செய்து மாமு பாக்ஸிங்கால் பின்வாங்கிட்ட மாதிரி தெரிகிறது//

      Fine. பொதுவாகவே என்னுடைய இணைய செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்து விட்டன. கிடைக்கும் நேரத்திலும் இறைநம்பிக்கையை சார்ந்து வெவ்வேறு விதமான பதிவுகளை எழுதவே விரும்புகின்றேன். மேலும், என்னுடைய எதிர்க்குரல் தளம் தொடங்கிய காலத்தில் இருந்தே பரிணாம விமர்சன பதிவுகளை தொடர்ச்சியாக எழுதியதில்லை, அவ்வப்போது மட்டுமே எழுதிவந்துல்லேன். இன்ஷா அல்லாஹ், தொடர்ந்து வழக்கம் போல பரிணாம எதிர்ப்பு பதிவுகள் அவ்வப்போது வெளிவரும் என்ற உறுதிமொழியை உங்களுக்கு தருகின்றேன்.

      //மாமு பாக்ஸிங்கால் பின்வாங்கிட்ட மாதிரி தெரிகிறது//

      தமிழ் பதிவுலகை பொருத்தவரை என்னுடைய கட்டுரைகளை யாருக்கும் பதிலாகவோ அல்லது தனிநபர் சார்ந்தோ நான் எழுதுவதில்லை. என்னுடைய நோக்கமெல்லாம் பரிமாண கோட்பாடு என்ற கொள்கையை விமர்சிப்பதில் மட்டுமே உள்ளது. அது போல, இங்கே யார் வென்றார்கள் பின்வாங்கினார்கள் என்பது குறித்தும் நான் சட்டை செய்வதில்லை. சொல்ல வரும் கருத்துக்களை ஆதாரங்கள் அடிப்படையில் தெளிவாக சொல்ல முயற்சிக்கின்றேன். மீதியை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகின்றேன். ஆதாரங்களை சரிபார்த்து விரும்புபவர்கள் ஏற்கட்டும், விரும்பாதவர்கள் நிராகரிக்கட்டும். As Simple as that.

      இருப்பினும், நான் பின்வாங்கி விட்டதாக நீங்கள் நினைப்பதால் இந்த லின்க்கில் (உள்ள கமெண்ட் பகுதிக்கு) சென்று யார் பின்வாங்கியது? யார் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடியது என்பதை பார்க்கலாம்.

      எதிர்க்குரல் தளத்தின் பரிணாமத்தின் மீதான சவால் தொடர்ந்து நீடிக்கின்றது. என்னுடைய ஒரு பதிவுக்கேனும் பதில் வரும் அந்த நாளை எதிர்நோக்கியே காத்திருக்கின்றேன்.

      நன்றி..

      Delete
  8. ***ஆனாலும் பரிணாம வாதிகள் அசரவில்லை. ஒவ்வொரு பித்தலாட்டமாக அரங்கேற்ற ஆரம்பித்தனர். ***

    நீங்க இப்போ என்ன பண்ணுறீங்க? உங்க கிருஷ்ண பரமாதமாதான் உலகை படைச்சாருனு எந்தவித ஆதாரமும் இல்லாமல் பித்தலாட்டம் சொல்லி பண்ணிக்கிட்டு இருக்கீங்க.

    முதல் உயிரி இருக்கட்டும்.

    உங்க கடவுள் எதால் ஆனவர் தாஸ்? 110 தனிமங்களில் ஆனவரா?

    இல்லையா? அவருக்கு மூளை இருக்கா? அது எதால் ஆனது?

    இதுக்கெல்லாம் பதில் சொல்ல நாதியில்லை. சும்மா பரிணாமம் பேசுறவன் எல்லாம் பித்தலாட்டக்காரன்னு வாய் கூசாமல் சொல்றீங்க!

    நீங்க இப்படி இஷ்டத்துக்கு பரிணாமத்தை கற்பழிக்கிறதுக்கு உங்களைப் பிடிச்சு உள்ளே போடணும்.

    I thought scientific articles of Darwin was published in scientific journals. Whatever nonsense you write here will never get into scientific journals. Give it a try! You will know. So, your title itself NONSENSE!

    ReplyDelete
  9. You are making LOTS of baseless statements about science and scientists. Most of them are LIES and your half-baked knowledge. You might run into serious trouble as you LIE (without showing proper citation) everywhere in order to prove your God created everything but himself!

    Who created your God?

    He came from nowhere??

    ReplyDelete
  10. Proving evolution as NONSENSE would not help you describe where the hell God come from? Does he have a brain? What is it made of? Just like yours with the existing chemical elements? Or God's brain is made of special element which is not discovered yet?

    The concept of God is the most nonsensical thing. Evolution is not that bad!

    ReplyDelete


  11. \\Who created your God?
    He came from nowhere??
    உங்க கடவுள் எதால் ஆனவர் தாஸ்? 110 தனிமங்களில் ஆனவரா?
    இல்லையா? அவருக்கு மூளை இருக்கா? அது எதால் ஆனது?
    இதுக்கெல்லாம் பதில் சொல்ல நாதியில்லை.\\

    வருண், இந்த கேள்விகள் எல்லாத்துக்கும் விரிவா பதில் தர முடியும், தற்போது அது குறித்து எழுத ஆரம்பித்தால் தலைப்பை விட்டு விலகி விட நேரிடும் எனவே அதை இன்னொரு சமயத்தில் வைத்துக் கொள்வோம்.

    சரி ஒரு பேச்சுக்கு எனக்கு இந்த பத்தி தெரியலைண்ணே வச்சுக்குவோம். என்னுடுடைய அறியாமை டார்வின் கொள்கை, பரிணாமக் கொள்கைகள் சரி தான் என்பதற்கு ஆதாரமாகுமா? என்ன பிக்காலித்தனம் இது வருண்? பரிணாமக் கொள்கைகள் சரி என்றால் அதற்க்கான ஆதாரத்தைப் பத்தி சொல்லுவீங்களா, இல்லை நீ மட்டும் என்ன யோக்கியமா என்று கேட்பீங்களா?

    \\I thought scientific articles of Darwin was published in scientific journals. Whatever nonsense you write here will never get into scientific journals.\\ Piltdown man பத்தி கூடத்தான் 500 PhD பேப்பர் போட்டானுங்க, எதுக்கு பிரயோஜனம்?

    \\You are making LOTS of baseless statements about science and scientists. \\ Evolutionist எல்லாம் scientist- ன்னு உங்களுக்கு எவன் சொன்னான் சொன்னான்? scientist என்றால் ஆதாரத்தோடு பேச வேண்டும். ஒரு உயிர் இன்னொன்றாக மாறியது என்கிறாய், ஆதாரம் என்ன? பல உயிர்களுக்கு பொது முன்னோர்கள் உள்ளது என்கிறாய், ஆதாரம் என்ன? குறைந்த பட்சம் ஒரு common forefather ஐயாவது காட்டுங்களேன் பார்ப்போம்? இதெல்லாம் செய்ய முடியாதவன் என்ன scientist- என்று சொல்கிறீர்கள்? நான் இங்கே எழுதிய அத்தனைக்கும் சுட்டிகளைக் கொடுத்துள்ளேன், காணோளிகளையும் கொடுத்துள்ளேன், முடிந்தால் அவற்றைக் குறிப்பிட்டு தவறு என்று காண்பிக்கவும்.

    உங்கள் எல்லோருக்கும் ஒரே கேள்வி: ஒரு இனம் பரிணாம வளர்ச்சியடைந்து இன்னொன்றாக மாறியதற்கு ஒரு காட்ட முடியுமா? Show me at least on ancestor with evidence from which other varieties evolved.

    ReplyDelete
  12. ***சரி ஒரு பேச்சுக்கு எனக்கு இந்த பத்தி தெரியலைண்ணே வச்சுக்குவோம். என்னுடுடைய அறியாமை டார்வின் கொள்கை, பரிணாமக் கொள்கைகள் சரி தான் என்பதற்கு ஆதாரமாகுமா? ***

    உங்களுக்கு என்ன புரியலைனா, டார்வின் கடவுளை ஒழிக்கணும்னு பரிணாமத்தை கண்டு பிடிக்கவில்லை!

    எப்படி கார்பன், ஹைட்ரஜன்,டி என் ஏவிலிருந்து, அணுகுண்டு, வயாகரா வரை கண்டு பிடிச்சாங்களோ அதே போல்தான் பரிணாமத்தை கண்டு பிடிச்சார்.

    நீங்க என்ன பண்ணுறீங்கனா, பரிணாமம் என்கிற தியரி சரி ஆனால், கடவுள் இல்லைனு ஆயிடுமேனு மெனக்கெட்டு, பரிணாமனம் கண்டுபிடிச்ச டார்வினையும், அதற்கு ஆதரவாக வரும் விஞானக் கூறுகளையும் தவறு என்று ஆக்க குதற்கமா யோசிக்கிறீங்க.

    நீங்க பரிணாமம் தப்புனு ஆக்கினால், கடவுள் இருக்காருனு ஆகப்போவதில்லை!

    ReplyDelete
  13. \\நீங்க என்ன பண்ணுறீங்கனா, பரிணாமம் என்கிற தியரி சரி ஆனால், கடவுள் இல்லைனு ஆயிடுமேனு மெனக்கெட்டு, பரிணாமனம் கண்டுபிடிச்ச டார்வினையும், அதற்கு ஆதரவாக வரும் விஞானக் கூறுகளையும் தவறு என்று ஆக்க குதற்கமா யோசிக்கிறீங்க.

    நீங்க பரிணாமம் தப்புனு ஆக்கினால், கடவுள் இருக்காருனு ஆகப்போவதில்லை!\\

    பரிணாமம் நிகழ்தர்க்கு எந்த ஆதாரமும் இல்லை. இது தான் டாபிக். அதற்க்கு மாற்று என்ன, அல்லது இதனால் கடவுள் இருக்கிறார் என நம்புங்கள் என இந்தப் பதிவில் நான் எதையும் குறிப்பிடவில்லை. குழப்பிக் கொள்ளாதீர்கள் வருண்!!

    Let us call a spade as a spade.

    ReplyDelete
  14. ***You are making LOTS of baseless statements about science and scientists. ***

    ///அதாவது, கடவுள் ஒன்றும் மனிதனைப் படைக்கவில்லை, மாறாக மனிதக் குரங்கு போன்ற மற்ற சிறிய விலங்கினங்களில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து உருவானான் என்றார். ///

    கடவுளை பத்தி டார்வின் அவர் கட்டுரையில் பேசினார், கடவுள் படைக்கவில்லை, குரங்கில் இருந்து உருவாகி இருக்கான் என்றெல்லாம் சொன்னதாக, டார்வின் ஒரிஜினல் ஆர்ட்டிகிள் படிச்சீங்களா?

    என்னைக்காவது டார்வின் தன் கைப்பட எழுதி வெளியிட்ட விஞ்ஞான ஆர்ட்டிக்கிள் படிச்சு இருக்கீங்களா?

    அப்படி இல்லை எனில் டார்வின் இதைச் சொன்னாருனு எப்படி சொல்றீங்க??

    ReplyDelete
  15. ***பரிணாமம் நிகழ்தர்க்கு எந்த ஆதாரமும் இல்லை. இது தான் டாபிக். அதற்க்கு மாற்று என்ன, அல்லது இதனால் கடவுள் இருக்கிறார் என நம்புங்கள் என இந்தப் பதிவில் நான் எதையும் குறிப்பிடவில்லை. குழப்பிக் கொள்ளாதீர்கள் வருண்!!***

    நீங்க பரிணாமம் பத்திதான் பேசுறீங்க என்றால் என்ன மண்ணாங்கட்டிக்கு கடவுளை இழுத்து வர்ரீங்க??

    *** அதாவது, கடவுள் ஒன்றும் மனிதனைப் படைக்கவில்லை, ***

    டார்வின் எவொலூஷன் பத்தி பேசும்போது கடவுளை பத்தி பேசினார்னு எவன் சொன்னான் உங்களுக்கு???

    ReplyDelete
  16. அவர் அவ்வாறு சொல்லவில்லையா?

    ReplyDelete

  17. \\டார்வின் எவொலூஷன் பத்தி பேசும்போது கடவுளை பத்தி பேசினார்னு எவன் சொன்னான் உங்களுக்கு???\\ நான் இங்கே எழுதியிருக்கும் அத்தனையும் காப்பி தான், காப்பியைத் தவிர வேறொன்றுமில்லை. நான் ஏதோ சொந்தமாக எழுதியாக நினைத்து, அதில் தவறு இருக்கலாம் என நினைக்க வேண்டாம். நம்பகமான சோர்சில் இருந்து தான் எடுத்திருக்கிறேன். இது சப்பை மேட்டர். நான் மேலே கேட்ட கேள்விகள் தான் முக்கியமானவை அதுக்கு பதிலையே காணோமே?!!

    ReplyDelete
  18. அறிவியல் என்பது அவர் என்ன தன் "பேப்பர்"ல எழுதி பிரசுரிக்கிறார் என்பது.

    அதுபோக, தனிப்பட்ட முறையில் அவர் ஏதாவது சொல்லி இருக்கலாம். ஐண்ஸ்டைன் சொன்னதாக நீங்க சொல்லிக்கொண்டு இருப்பது போல. அது டார்வினுடைய தனிப்பட்ட கருத்து, நம்பிக்கை. அதை நீங்க விஞ்ஞான ஆர்ட்டிக்கிளோட இணைக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. \\அதுபோக, தனிப்பட்ட முறையில் அவர் ஏதாவது சொல்லி இருக்கலாம். ஐண்ஸ்டைன் சொன்னதாக நீங்க சொல்லிக்கொண்டு இருப்பது போல. அது டார்வினுடைய தனிப்பட்ட கருத்து, நம்பிக்கை. அதை நீங்க விஞ்ஞான ஆர்ட்டிக்கிளோட இணைக்க முடியாது.\\இதை Charcoal Wagon [சார்வாகன்] மாமு, கேட்ட துடி துடிச்சு உசிரை விட்டிடுவார்!! எதுக்கும் அவரை ஒரு தடவை கன்சல்டு பண்ணிக்கோங்க!! Anyway இப்படி உண்மையை பட்டவர்த்தனமா ஒத்துகிட்டதுக்கு நன்றி!!

      Delete
    2. சயண்டிஸ்ட் சொல்ற கருத்தெல்லாம் சயண்ஸ் இல்லைங்க. சயண்டிஸ்ட் என்பவன் சயன்ஸ் பத்திரிக்கையில், எழுதியிருக்கும் சயண்டிஃபிக் ஆர்ட்டிக்கிள்ல சொல்லியிருக்காரா?? என்பதுதான் முக்கியம். அதுதான் சயண்ஸ்!

      Delete
    3. \\சயண்டிஸ்ட் சொல்ற கருத்தெல்லாம் சயண்ஸ் இல்லைங்க. சயண்டிஸ்ட் என்பவன் சயன்ஸ் பத்திரிக்கையில், எழுதியிருக்கும் சயண்டிஃபிக் ஆர்ட்டிக்கிள்ல சொல்லியிருக்காரா?? என்பதுதான் முக்கியம். அதுதான் சயண்ஸ்!\\ பரிணாம வாதிகள் சொன்னதற்கு Physical Evidence எதுவும் இல்லை. அறிவியலில் ஆதாரம் மிகவும் முக்கியம், ஆதாரமில்லை என்றால் அது குறி சொல்றவன்கிட்ட கிட்ட போய் கேட்பது மாதிரிதான்!!

      Delete
    4. அப்படிப் பார்த்தால் ஐண்ஸ்டயினுடைய ரிலேட்டிவிட்டி தியரியும் குறி சொல்றது போலனு சொல்லலாம். அப்படியே எல்லா தியரியையும் சொன்னால், நீங்க கணிணி முன்னால உக்காந்து இருக்க மாட்டீங்க. எழுத்தாணியும் கையுமா கோவவணத்தோட உக்காந்து இருப்பிங்க! :)

      Delete
  19. ***Jayadev DasFebruary 27, 2013 at 1:02 AM

    அவர் அவ்வாறு சொல்லவில்லையா?***

    எனக்கென்ன தெரியும். நீங்கதான் அவர் அப்படி சொன்னதா சொல்லியிருக்கீங்க.

    அப்படி அவருடைய எவொலுஷன் பேப்பர்ல சொன்னாரா?? என்ற கேள்விக்கு

    ஆம் என்பதா உங்க பதில்???

    ReplyDelete
  20. டார்வினுடைய ஒரிஜினல் பேப்பர் பார்க்கணும்னா இங்கே போயி பாருங்க!

    http://darwin-online.org.uk/converted/pdf/1839_QuestionsBreeding_F262.pdf

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. சகோ தாஸ்,

    உங்கள் மீதும் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்

    உங்களின் இந்த கட்டுரையை முழுமையாக வாசிக்கவில்லை. இருப்பினும் தாங்கள் சொல்லவரும் கருத்தை உள்வாங்க முடிகின்றது. இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது முழுமையாக படித்து விட்டு தேவை இருந்தால் கருத்தை பகிர்கின்றேன்.

    பரிணாமம் தொடர்பாக உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் இன்ஷா அல்லாஹ் உதவ தயாராக இருக்கின்றேன். நீங்கள் இந்தியாவில் இருந்தால் என்னை தொலைப்பேசி வாயிலாக தொடர்புக்கொள்ளலாம். தொடர்பு எண்ணுக்கு சிரமம் பாராமல் என்னை மெயில் மூலமாக அணுகவும் (aashiq.ahamed.14@gmail.com).

    @ வாசகர்களுக்கு,

    உண்மையை அறிய விரும்பும் உங்கள் ஒவ்வொருவருக்கும் கீழ்காணும் லிங்க்குகள் பயன்படலாம்.

    எதிர்க்குரல் தளத்தின் பரிணாம கட்டுரைகள் ஒருங்கிணைந்த பக்கம்
    விக்கிப்பீடியாவின் எதிர்க்குரல் பக்கம்

    நன்றி..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  23. மாப்ளே தாசு,

    1. பரிணாம கொள்கை டாட்வினுக்கு முந்தையது. டார்வினின் கொள்கை பரிணாமம் நிகழ்வது இயற்கைத் தேர்வினால் என்பதுதான். அதிலும் வால்ல்ஸ்க்கும் பங்கு உண்டு.

    2.சிறுபரிணாமத்தை ஏற்கிறீர்கள் அல்லவா?. அத்வாது ஒரு உயிரியின் உடலில் அளவு சார்ந்து மாற்றம் வரலாம். இதன் காரணம் ஜீனோம் மாற்றமே. இந்த பல்வகை நாய்கள் அனைத்துக்குமே மூலம் ஒரு வகை ஓநாய். ஏற்கிறீர்களா? ஆம்/இல்லை.

    3. பெரும்பரிமாணம் என்பது இப்படி உருமாற்றம் பிறகு ,ஒரு உயிரினம் ,சில சிற்றினங்களாக பிரிகிறது. இந்த சிற்றின‌ங்கள் தங்களுக்குள் இணைந்து இனவிருத்தி செய்ய இயலாதவை.

    ஏன் புலி ,சிங்கம் இணைந்து இனவிருத்தி செய்ய முடிகிறது என்றால், அவை இன்னும் சிற்றினப் பிரிதல் நிலை அடையவில்லை.

    காலப்போகில் குதிரை ,கழுதை இணைந்து கோவேறு கழுதை என்னும் மல்ட்டு விலங்கை பெறுவது போல் செய்யும்.

    பிறகு பிரிவு நிரந்தரம் ஆகும். இந்த சிற்றினமாதல் என்பது ஆயவங்களில் பரிசோதிக்கப்பட்ட உண்மை.
    இந்த விக்கிபிடியா பாருங்கள்!!

    http://en.wikipedia.org/wiki/Speciation

    ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறுமா? சான்று உண்டா!!!!!!!!!!!!
    http://aatralarasau.blogspot.com/2012/04/blog-post_04.html

    4. இரு உயிரிகள் எப்படி ஒரே இனம் அல்லது வெவ்வேறு இனம் என் சொல்கிறோம்? என்பதைப் புரிந்தால் பரிணாமம் பிடிபட்டு விடும்.

    ***

    உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நம்ம ம(னி)தாபிமானி ஆஸி(ட்)க் அகமது பதிவில் இருந்து ஒவ்வொரு பதிவாக உம்ம கைவண்ணம் காட்டி பதிவிடுங்கள்!!

    முதல் மனிதர் ஆதம்(அலை) ஒரு ஹோமோ எரக்டஸ் என்னும் உண்மையை கண்டறிந்தவர் ஆஸி(ட்)க்தான்!!

    நாம் ஏற்கெனவே அவரின் பெரும்பான்மை பதிவுகளுக்கு பதில் சொல்லி ஆயிற்று. நான் பதில்களை மீள் பதிவு செய்கிறேன்.

    ஏதேனும் மிச்சம் மீதி இருந்தால் பார்க்கிறேன்.

    அப்புறம் கேள்விகளைக் கேளுங்கள் பதில் சொல்கிறேன்!!

    நன்றி!!

    ReplyDelete

  24. சகோ ஆஸி(ட்) அகமது,
    ஸலாம்,
    நீங்கள் நம்பதிவில் இந்த பின்னூட்டம் இட்டு 6 மாதம் ஆகிறது !!! இதற்கான பதிவு இட வேண்டுகிறேன்.!! நன்றி!!!
    http://aatralarasau.blogspot.com/2012/09/blog-post_13.html


    Aashiq AhamedSeptember 14, 2012 at 1:11 PM
    சகோதரர் சார்வாகன் அவர்களுக்கு, .....

    //****படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் இவை குறித்தும், மேலும் சிலவற்றை (like Laetoli footprints etc) குறித்தும் எதிர்க்கால பதிவுகளில் விரிவாக பார்ப்போம்*****

    இதில் laetoli footprints என்றால் என்னவென்று நினைத்தீர்கள் (இனிமே இதனை படித்து விட்டு அடிக்க போகின்றீர்கள், போகட்டும்)? என்னை பொருத்தவரை, ""மனிதன் என்பவன் இந்த ஹோமோ எறேக்டஸ், austrolopithecus போன்றவற்றிற்கு எல்லாம் முன்பாக தோன்றியதாகவே எண்ணுகின்றேன்.""

    இது குறித்த பிரபல தொல்லுயிரியலாலர்களின் பார்வையோடு எதிர்காலத்தில் நீங்கள் பதிவை எதிர்ப்பார்க்கலாம். ஆகையால் ஹோமோ எறேக்டஸ்சை ஆதாம் என்று நான் கூறியதாக நீங்கள் புரிந்துகொண்டது என் பதிவை சரியாக புரியாமல் நீங்கள் அடித்துவிட்டது (வழக்கம் போல). //

    ReplyDelete
    Replies
    1. சார்வாகன் ஐயா,

      வ அலைக்கும் சலாம்,

      //சகோ ஆஸி(ட்) அகமது,
      ஸலாம்,
      நீங்கள் நம்பதிவில் இந்த பின்னூட்டம் இட்டு 6 மாதம் ஆகிறது !!! இதற்கான பதிவு இட வேண்டுகிறேன்.!! நன்றி!!!
      http://aatralarasau.blogspot.com/2012/09/blog-post_13.html//

      இதற்கான பதிலை நீங்கள் முதல் முறை கேட்ட போதே என் தளத்திலேயே நான் கொடுத்துல்லேனே? இப்படியாக

      //எதிர்க்குரல் தளத்தில் பரிணாமம் ஆதரவாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டே வந்திருக்கின்றன. அந்த வகையில் lateoli குறித்தும் இன்ஷா அல்லாஹ் நிறைவேற்றப்படும்.

      அந்த கேப்பில் இந்த தளத்தில் உள்ள பரிணாம எதிர்ப்பு பதிவு ஒன்றுக்காவது முடிந்தால் மறுப்பு வெளியிட்டு காட்டுங்கள். :-)//

      இதனை பார்க்கவில்லை என்றால் பார்க்க http://www.ethirkkural.com/2012/12/blog-post.html

      நன்றி,

      Delete
  25. //உதாரணத்திற்கு நடிகை ஸ்ரீதேவி ஜப்பானுக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து மூக்கை வெட்டியிருக்கலாம், ஆனாலும் அவருடைய மகள் 16 வயதினிலே ஸ்ரீதேவியை அச்சில் வார்த்த மாதிரியே தான் பிறந்துள்ளார்.//

    தாஸ்: உங்க பரிணாம அஞ்ஞானத்தை இப்படி வெளிச்சம் போட்டு காடியிருக்கவேண்டாம்..இந்த வெண்டைக்கா விளக்கம் விசலடிச்சான் குஞ்சுகள் மட்டும் ரசிப்பார்கள்...

    ஸ்ரீ தேவி மூக்குக்கும் அவர் குழந்தை மூக்கையும் வைத்து நீங்கள் கொடுத்த பரிணாம விளக்கம் பிரமாதம்...பேஷ்! பேஷ்!!

    நீங்கள் பரினாமத்தை ஆதியில் இருந்து படியுங்கள். பரிணாமம் அவ்வளவு எளிதான மூக்கு சமாசாரம் இல்லிங்கோவ்...!

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி, நீங்க இன்னைக்கு ஏதோ நாலு மருத்துவ புத்தகங்களைப் படித்து விட்டு விஷயம் கற்றுக் கொண்டு விட்டீர்கள். ஆனால் போன நூற்றாண்டுகளில் எலியின் வாலை கட் பண்ணி பரிசோதனை செய்தவன் எல்லாம் முட்டாள்கள் என்பீர்களா? பரிணாமம் என்னமோ பெரிய விஞ்ஞானம் என்பது போல பேசுகிறீர்கள். நாய் எங்கேயாவது திமிங்கலமாக மாறுமா இல்லை டைனோசர் குருவியாக மாறுமா? இதெல்லாம் எதில் சேர்த்தி?

      Delete
    2. எலியின் வாலை வெட்டினால் மீண்டும் நன்றாகத்தான் வளரும் என்பது தான் பரிணாமம். பல்லியைப் பார்த்திருக்கிறீர்களா அது வாலை எளிதாக இழந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதால் வாலின் அவசியம் ஏற்பட்டு அது விரைவாக முளைக்கிறது.ஆகவே தப்புத்தப்பாக விளக்கம் கொடுத்து இக்கட்டில் நிற்காதீர்கள்.

      Delete
  26. @ Aashiq Ahamed

    தாங்கள் வருகை புரிந்திருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களது முதல் பின்னூட்டம் நன்றாகத்தான் இருந்தது, ஏன் நீக்கிவிட்டீர்கள் என்பதுதான் புரியவில்லை. எனினும் அது தங்கள் விருப்பமே!!

    தங்களை முன்னரே ஒரு முறை மெயிலில் தொடர்பு கொண்டேன், தங்களிடமிருந்து பதில் வராததால் மேலும் தொடர்பு கொள்ளவில்லை. இந்த பதிவில் ஏன் மாமு சார்கோல் வேகன் ஏகத்துக்கும் பித்தலாட்டங்களை அவிழ்த்து விட்டிருக்கலாம். அந்த விஷயத்தில் அவர் எதற்கும் அஞ்சுபவர் இல்லை. அடிச்சு விடுவாரு. அவர்

    \\ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறுமா? சான்று உண்டா!!!!!!!!!!!!\\ என்ற கேள்விக்கு இந்த சுட்டியைக் கொடுத்துள்ளார்.

    http://aatralarasau.blogspot.com/2012/04/blog-post_04.html

    கமலஹாசனின் ஆங்கிலத்தைக் கூட புரிந்துகொள்ளலாம் எங்கள் மாமூல் மாமுவின் தமிழ் ஒருத்தனுக்கும் புரியாது. இந்த மாதிரி குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பதில் மாமோல் மாமு ரொம்ப கை தேர்ந்தவர். எனவே தாங்கள் தயவு செய்து இது குறித்து சுருக்கமான விளக்கத்தை பின்னூட்டத்தில் தெரியப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  27. @ Aashiq Ahamed

    இந்தப் பதிவில் தவறுகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப் படுத்துங்கள், திருத்திக் கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
  28. @ Aashiq Ahamed

    சகோ, சிங்கம்+புலி, வரிக்குதிரை+கழுதை போன்றவை இணைவது அந்த இனங்கள் கிளைத்து வந்தவை, தொடர்புடையவை என்பதால்தான் என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது? இதற்க்கு தக்க பதில் என்ன?

    ReplyDelete
  29. பரிணாமம் என்று ஒன்று உண்டா, பரிணாமவியல் என்று சொல்வதே சரி. நீங்க சொன்ன எதற்கும் ஆதாரச் சுட்டி தரவில்லையே, எந்த ஆய்வின் அடிப்படையில் பரிணாமவியலை மறுத்துள்ளீர்கள், இந்த ஹாருன் யாக்யா யாரு! அவரது தகுதி என்ன? மனித குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என பரிணாமவியல் கூறவில்லை. பரிணாமவியலுக்கும் கடவுள் இருப்பு, மறுப்புக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. தாஸ் நீங்க தமிழ்நாட்டுல இருந்தா முதலில் 9,10,11,12 வகுப்பு உயிரியல் பாடநூலை வாசித்து அடிப்படை அறிவை பெற்ற பின் பதிவெழுவதே சுபம், இல்லையெனில் காமெசி பீஸ் என பெயர் வாங்கிடக்கூடும், வாழ்த்துக்கள். இக்கட்டுரையில் சுமார் 36 பிழைகள் உள்ளன, மேலும் இருக்கலாம் . பின்னே வராம் !

    ReplyDelete
    Replies
    1. @ இக்பால் செல்வன்


      \\நீங்க சொன்ன எதற்கும் ஆதாரச் சுட்டி தரவில்லையே, எந்த ஆய்வின் அடிப்படையில் பரிணாமவியலை மறுத்துள்ளீர்கள்\\ முதலில் பரிணாமவியலுக்கு ஆதரவா என்ன ஆதாரத்தை பரிணாம வாதிகள் வச்சிருக்கானுங்க, அதுக்கு எதிராக நான் ஆதாரம் கொடுப்பதற்கு!!

      என்னுடைய இந்தப் பதிவில் நான் சொன்ன அத்தனையுமே நிராகரிக்கட்டும், கொடுத்துள்ள லிங்குகளை பார்த்தே வாசகர்கள் முடிவு செய்யட்டும்.


      \\இந்த ஹாருன் யாக்யா யாரு! அவரது தகுதி என்ன?\\ அவரோட தனிப்பட்ட தகுதிகளை பத்தி இங்கே விவாதிக்கத் தேவையில்லை. இங்கே கொடுக்கப் பட்ட கானொளியில் சொல்லியுள்ள விஷயங்களில் ஏதாவது தவறாக தெரிவித்திருக்கிறாரா, இருந்தால் சொல்லவும்.

      \\மனித குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என பரிணாமவியல் கூறவில்லை. \\ பதிவை நீங்க முழுசா கூட படிக்க வில்லை. டார்வின் இப்படித்தான் உளறிகிட்டு இருந்தான், நாலு பேரு லாஜிக்கலாக கேள்வி கேட்டதும் பின்னாடி வந்த அயோக்கியனுங்க பிளாட்டை மாத்தி போட்டுட்டானுங்க. இதை பதிவிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.


      \\பரிணாமவியலுக்கும் கடவுள் இருப்பு, மறுப்புக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.\\ மீண்டும் பதிவை படிக்காமலே எழுதக் கூடாது. கடவுள் இருப்பு, மறுப்பு பத்தி நான் இந்தப் பதிவில் எங்கே சொல்லியிருக்கேன்னுதான் விளங்கவில்லை. இல்லாததை இருப்பதாக புளுகுவதே பரிணாமவாதிகளுக்கு பொழப்பாப் போச்சு.

      \\தாஸ் நீங்க தமிழ்நாட்டுல இருந்தா முதலில் 9,10,11,12 வகுப்பு உயிரியல் பாடநூலை வாசித்து அடிப்படை அறிவை பெற்ற பின் பதிவெழுவதே சுபம், இல்லையெனில் காமெசி பீஸ் என பெயர் வாங்கிடக்கூடும், வாழ்த்துக்கள். இக்கட்டுரையில் சுமார் 36 பிழைகள் உள்ளன, மேலும் இருக்கலாம் . பின்னே வராம் !\\ பரிணாமம் என்பதே பித்தலாட்டம், அதைப் போய் படிக்க வேறு வேண்டுமா? உம்மைப் போல படித்தவர்கள் தானே 50 ஆண்டு காலம் Piltdown man என்ற ஏமாற்று படிவத்தை வைத்து 500 PhD thesis களை எழுதினானுங்க? அப்போ எங்கே போச்சு உங்கள் புத்தி?

      பரிணாமம், உயிரியல் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்பதென்னவோ உண்மை தான், ஆனால் இந்தப் பதிவில் நான் எழுதியுள்ள எதுவும் என்னுடைய சொந்தக் கருத்து இல்லை. எங்கேயிருந்து எடுத்தேனோ அதனுடைய சுட்டியையும், காணொளி லிங்கையும் எல்லா இடத்திலும் கொடுத்துள்ளேன். உங்களுக்கு இது குறித்து விஷயம் தெரியும், ஆனால், உங்கள் அறிவை பொய்யை விதைக்கத்தான் பயன்படுத்துகிறீர்களே தவிர உண்மையை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் உங்களுக்குத் துளியும் இல்லை. இவ்வளவு பேசும் நீர், பரிணாமம் பற்றி என்னை போன்றவர்களுக்கும் புரியும் வண்ணம் எளிய பதிவுகளை எப்போதாவது எழுத நினைத்திருக்கிரீரா? மாட்டீர், காரணம் அது புரிய ஆரம்பித்தாலே போதும் அது பித்தலாட்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்து விடும். எனவே, நீர் கிடைக்கும் நேரத்தை இஸ்லாமியர்களைத் தாக்குவதிலேயே செலவழித்துக் கொண்டிருப்பீரே தவிர இந்த மாதிரி நல்ல காரியங்களை ஒரு போதும் செய்ய மாட்டீர்.

      நான் ரெண்டே கேள்விதான் கேட்டேன்,

      1. எந்த ஒரு இனத்துக்காவது மூதாதையர் என்று சான்று ஒன்றாவது இருக்கிறதா?

      2. ஒரு இனம் இன்னொரு இனமாக மாறியதற்கு ஒரு சான்றாவது இருக்கிறதா?

      இதப் பத்தி ஒருத்தர் கூட வாயையே திறக்க மாட்டீங்கறீங்களே?


      பரிணாம வாதிகள் என்னென்ன புருடா எல்லாம் விட்டானுங்க என்பது பத்தி ஒன்னொன்னா இனியும் எழுதத்தான் போகிறோம், உங்க வண்டவாளம் தண்டவாளத்தில் ஓடத்தான் போகுது, பொறுத்திரும்.

      Delete
    2. 1 &2 பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருவதுக்கு சான்று னு ஒண்ணு காட்டுவது கடினம்.

      நீங்க பரிணாமவியலை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு போவதில் யாருக்கும் பிரச்சினை இல்லை.

      ------------------
      பரிணாமவியலை தூக்கி வைத்துவிட்டு உங்க பாதையில் போவோம்..

      1) எல்லா உயிரினங்களும் எப்படி தோன்றியது, மனிதன் எப்படி தோன்றினான் னு சொல்லுங்களேன்!

      கடவுள் படைச்சாருனு சொல்லுவீங்க.

      கடவுளை யார் படைச்சானு கேட்டால்..

      முருகனை சிவன் படச்சாருனு சொல்லுவீங்க..

      சிவனை யாரு படச்சா?

      அவரு அப்பா "சிவனப்பன்"னு சொல்லுவீங்க..

      சிவனப்பனை யாரு படச்சா?

      அவன் அப்பன்னு சொல்லுவீங்க..

      ஆக, கடைசியிலே எல்லாக் கடவுளுக்கு அப்பன் இருப்பானுக..

      இந்த அப்பனுகளுகெல்லாம் அப்பன் யாருடானு கேட்டால்?

      அவன் தகப்பன் பெயர் தெரியாதுனு வந்து முடியும்..

      இதே எழவைத்தான நீங்களும் சொல்லிக்கிட்டு திரிகிறீங்க, "நம்மூர் டார்வன்" நீங்களும்??? :)))

      Delete
    3. வருண்,

      பரிணாமம் பித்தலாட்டம். ஆதாரமற்றது. ஊரை ஏமாற்றுகிறார்கள். எதையெதைப் பத்திஎல்லாமோ எழுத்தும் நாம இதைப் பத்தியும் எழுதுறோம். அவ்வளவுதான். பரிணாமக் கொள்கைக்கு மாற்று என்னவென்று தெரியாது என்பதற்காக அது உண்மையாகிவிடாது.

      Delete
  30. Are you guys going to achieve anything by these? Can your change any of these things present in nature? Kill your curiosity about unwanted theories or inventions don't waste time. Use your time to reach Almighty God and Heavenly Abode.

    ReplyDelete
  31. பாகவதரே,

    தெரியாத,புரியாத விஷயத்தை எல்லாம் தொட்டு ஏன் காமெடி செய்றீர் :-))

    பேக்ட்டீரியா,வைரஸ் போன்றவற்றில் பரிணாம மாற்றம் நடைப்பெறுகிறது என்பதை உயிர் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வகத்தில் நிறுவியுள்ளார்கள்.

    ஹெச்.ஐவி வைரசில் நடைப்பெறும் பரிணாம மாற்றம் குறித்த எனது பதிவு,

    http://vovalpaarvai.blogspot.in/2013/02/blog-post_27.html

    எனவே பரிணாம மாற்றம் ஆதியில் ஒரு செல் உயிரியில் நடந்திருக்க முடியும் என்பது எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

    நான் சுட்டிக்காட்டியதை இல்லை என முடிந்தால் நீரும் உம்ம கூட்டாளி மார்க்கபொந்துக்களும் நிருபிக்கவும் :-))

    ReplyDelete
  32. சகோ தாஸ்,

    ***தங்களது முதல் பின்னூட்டம் நன்றாகத்தான் இருந்தது, ஏன் நீக்கிவிட்டீர்கள்
    என்பதுதான் புரியவில்லை.***

    ஒரே பின்னூட்டத்தை இரண்டு முறை பதிந்ததால் ஒன்றை நீக்கிவிட்டேன்.

    ***தங்களை முன்னரே ஒரு முறை மெயிலில் தொடர்பு கொண்டேன், தங்களிடமிருந்து பதில்
    வராததால் மேலும் தொடர்பு கொள்ளவில்லை.***

    எப்படி மிஸ் செய்தேன் என்று நினைவில்லை சகோ. பதில் அளிக்காததற்கு
    மன்னிக்கவும்.

    ***\\ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறுமா? சான்று உண்டா!!!!!!!!!!!!\\ என்ற கேள்விக்கு இந்த சுட்டியைக் கொடுத்துள்ளார்.

    http://aatralarasau.blogspot.com/2012/04/blog-post_04.html

    கமலஹாசனின் ஆங்கிலத்தைக் கூட புரிந்துகொள்ளலாம் எங்கள் மாமூல் மாமுவின் தமிழ் ஒருத்தனுக்கும் புரியாது. இந்த மாதிரி குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பதில் மாமோல் மாமு ரொம்ப கை தேர்ந்தவர். எனவே தாங்கள் தயவு செய்து இது குறித்து சுருக்கமான விளக்கத்தை பின்னூட்டத்தில் தெரியப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்****

    Fine Fine. முதலில் சார்வாகன் என்ற அந்த பதிவர் கொடுத்துள்ள தகவல்களிலேயே குழப்பம் உள்ளது. பழப்பூச்சி குறித்த அவர் கொடுத்துள்ள படமும், விக்கிபீடியா இந்த ஆய்வு குறித்து கூறும் படமும் வெவ்வேறாக உள்ளன. பார்க்க http://en.wikipedia.org/wiki/Speciation

    பழப்பூச்சிகளை இரண்டு பிரிவாக பிரித்து வெவ்வேறு மீடியம்களில் வளர்க்கப்பட்டது (maltose and starch). பின்னர் பல தலைமுறைகளுக்கு பிறகு இப்படியாக பிரிக்கப்பட்ட இரண்டு பழப்பூச்சிகளும் ஒன்றோடு ஒன்று சேர்வதை விரும்பாமல் தாங்கள் இருந்த மீடியம்களில் வளர்ந்த பூச்சிகளுடனேயே உறவுக்கொள்ள விரும்பின. கவனிக்கவும், இந்த இரண்டு பூச்சிகளும் ஒன்றாக சேர முடியாது என்று அர்த்தமில்லை. ஆனால் அவை தங்களுடன் வளர்ந்த பூச்சிகலேயே உறவிற்கு prefer செய்தன. இது தான் விக்கிப்பீடியா படம் கூறுவது.

    ஆனால் சார்வாகன் என்ற அந்த பதிவர் போட்டிருக்கும் படத்தை பார்த்தால், இவை இரண்டுமே ஒன்றோடு ஒன்று சேர முடியாது என்பதாக உள்ளது. இது குறித்து அவரும் அவர் படத்தை எடுத்த பெர்கிலி தளமும் தான் பதில் கூற வேண்டும். இந்த ஆய்வை மேற்கொண்ட diane-ன்னுடைய ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தால் நாம் எளிதாக பார்த்து புரிந்துக்கொள்ளலாம். இந்த ஆய்வை பொருத்தமட்டில் வேறு விதமான தகவல்கள் எல்லாம் வந்துவிட்டன என்றாலும் கூட diane அவர்களின் முழு கட்டுரையை காண ஆவலுடன் உள்ளேன்.

    பழப்பூச்சிகளை பொருத்தமட்டில், அவற்றில் மிக அதிகமான ஆய்வுகள் நடத்தப்பட்டு விட்டன. ஆனால் அவற்றில் எதுவும் அவை வேறு உயிரினமாக மாறியதாக ஆதாரத்தை தரவில்லை.

    நமக்கு முன்னே சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகள் உருண்டோடி விட்டன என்கின்றனர் ஆய்வாளர்கள். சிக்கலான உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்து சுமார் 600 மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன. speciation உண்மையென்றால் வரலாற்றில் அதற்கான ஆதாரத்தை நாம் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அப்படியாக எதுவும் இல்லை. பரிணாமவியலாளர்களின் கற்பனை மட்டும் தான் விதவிதமாக பரிணாம அடைந்துக்கொண்டிருக்கின்றது.

    நன்றி..


    ReplyDelete
    Replies
    1. சகோ ஆசிக்!!

      தங்களது விளக்கத்துக்கு மிக்க நன்றி!! அருள் கூர்ந்து இந்தப் பதிவின் தொடர்பில் இருங்கள் மாமூல் மாமு மீண்டும் இன்னொரு புருடாவுடன் வரலாம், அவருக்கு தக்க பதில்களைத் தருமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

      தங்கள் பதிவுகளை முன்னரே தேடித் பிடித்து லிஸ்டு போட்டு படித்திருந்தேன், தற்போது தாங்கள் கொடுத்த சுட்டியில் மேலும் பல பதிவுகள் உள்ளன. அவற்றையும் ஆழ்ந்து பயில இருக்கிறேன். அந்தச் சுட்டியை இந்தத் தளத்தில் நிரந்தரமாக வைக்க இருக்கிறேன். தங்கள் எழுத்து நடை, சொற்களைக் கையாளும் விதம், கலைச் சொற்கள் பயன்பாடு அத்தனையும் பிரமிக்கத் தக்கதாக இருக்கிறது, மேலும் எவ்வளவு கடினமான தலைப்பாக இருந்தாலும் எழிதில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதுகிறீர்கள். இது இறைவன் தங்களுக்கு கொடுத்த வரம். இதே போல தொடர்ந்து இறை நம்பிக்கையாளர்களுக்கு தாங்கள் ஒரு முக்கிய வழிகாட்டியாக வளர என் பிரார்த்தனைகள்!! நன்றி!!

      Delete
    2. சகோ ஆஸிக்,

      இதுவரை நீங்கள் சொல்லாத விடயங்களையும் சொல்ல வைத்தேன்.

      1.இதுவரை இரு உயிரிகள் ஒரே இனமா, வெவேறு இனமா என் எப்படி வரையறை செய்வது என்ற கேள்விக்கு பதில் சொன்னதே இல்லை. இனிமேலாவது சொல்வீர்களா?

      2. ஸ்ஃபீசியேச்ன் எனப்ப்டும் ஒரு உயிரிக் குழு இணைந்து இனவிருத்தி செய்ய இயலா உயிரிக் குழுக்களாக பிரிதலை பற்றி எதுவுமே பதிவு இட்டது இல்லை.ஆனால் பரிணாமம் பற்றி எழுதித் தள்ளியதாக பிதற்றல்.

      . 3.// இந்த ஆய்வை மேற்கொண்ட diane-ன்னுடைய ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தால் நாம் எளிதாக பார்த்து புரிந்துக்கொள்ளலாம். இந்த ஆய்வை பொருத்தமட்டில் வேறு விதமான தகவல்கள் எல்லாம் வந்துவிட்டன என்றாலும் கூட diane அவர்களின் முழு கட்டுரையை காண ஆவலுடன் உள்ளேன். //
      இதையும் என்பதிவில் கொடுத்து இருக்கிறேன் என்பதை மறைப்பது ஏன்?

      Diane Dodd’s fruit fly experiment suggests that isolating populations in different environments (e.g., with different food sources) can lead to the beginning of reproductive isolation.

      http://eebweb.arizona.edu/Courses/Ecol525/Readings/Dodd_1989.pdf


      4.சரி இருவேறு சூழலில் வளர்ந்த ,பல தலைமுறை கடந்த பழ ஈக்கள் இனவிருத்திக்கான உறவு கொள்ள விரும்பவில்லை என்பதை ஏற்கிறீர்கள். சரியா? இது ஏன்?

      இனவிருத்தி செய்ய இயலுமா.இயலாதா என டையேன் அந்த கட்டுரையில் குறிப்பிடவில்லை, என்றாலும் பழ ஈக்களில் பல் வேறு வகைகள் உண்டு.
      http://genome.cshlp.org/content/22/8/1499.full
      Genome sequencing reveals complex speciation in the Drosophila simulans clade

      he three species of the Drosophila simulans clade—the cosmopolitan species, D. simulans, and the two island endemic species, D. mauritiana and D. sechellia—are important models in speciation genetics.

      சரி இந்த பழ ஈ பற்றியாவது இதுவரை ஏன் எழுதவில்லை?

      5. ரிங் ஸ்ஃபீசிஸ் ல் ஏற்பட்ட ஸ்ஃபீசியேசனை ஏற்பீர்களா இல்லை ஹி ஹி

      http://en.wikipedia.org/wiki/Ring_species

      A classic example of ring species is the Larus gulls' circumpolar species "ring". The range of these gulls forms a ring around the North Pole, which is not normally transited by individual gulls

      எப்ப பார்த்‍தாலும் அன்றே கூறின்னேன்,அப்போதே கூறின்னேன் என்கிறீர்.
      நம்ம ஏக இறைவன் அல்லாஹ் ஒரே வசனத்தை திருப்பி திருப்பி குரானில் கூற வெட்கப் படாத போது நீங்கள் ஏன் கூச்சப்பட வேண்டும்?

      பதிலை மீண்டும்,மீண்டும் சொல்லுங்கள்!! சரியா??

      அப்புறம் நம்ம மாப்ளே தாசுக்கு உங்கள் கட்டுரைகளை, மீள் பதிவு செய்ய அனுமதி கொடுங்கள். நானும் பதில்களை வரிசையாக இடுகிறேன். டீலா நோ டீல?

      Thank you!!

      Delete
    3. மாப்ளே தாசு,

      நீர் ஆஸிக்கை மெச்சுவது பற்றி நமக்கு கவலை இல்லை. நீர் அப்படி வியக்கும் கட்டுரைகளை வெடி ஒட்டி பதிவிடவே கூறுகிறேன். பார்ப்போம்.
      ஆஸிக்கின் கட்டுரைகள் ஒவ்வொன்றின் மூலமும் கிரியேசன் மினிஸ்ட்ரி என்ப்படும் கிறித்தவ‌ பரிணாம் எதிர்ப்பு தளத்தில் இருந்து சுடுஒவை. மொழியாக்கம் மட்டுமே அவருடையது.ஆனால் அதை சுட்டவே மாட்டார்!!. ஏன் எனில் அதுவே மார்க்கம் காட்டும் வழி!!!

      எப்படி குரானை பைபிள்,தோராவில் இருந்து சுட்டார்களோ அதே போல்.

      ஆகவே அவரின் கட்டுரைகளை உம்ம பாணியில் விளக்கி மீள்பதிவு செய்யுங்கள்,அனைவருக்கும் விளக்க ஏதுவாக இருக்கும்!!

      நன்றி!!

      Delete
    4. மாமு, ஆசிக்கின் பதிவுகள் எளிதில் புரிகின்றன. 36 தவறுகள் [குறைந்தபட்சம்] இந்தப் பதிவில் இருப்பதாகச் சொன்ன மக்குபால் கள்வன் கூட அங்கே சென்று தவறு என்று எதையும் குறிப்பிடவில்லை, மாறாக ஒரு உயிரியல் மாணவன் என்ற முறையில் இதை எதிர்க்கிறேன் என்று மட்டுமே கூறியுள்ளார். நீங்கள் போடும் கணிதம் இயற்பியல் பதிவுகள், கஷ்டப் பட்டு விளங்கிக் கொள்வேன், ஏனெனில் அதற்க்கான பின்புலம் எனக்கு இருக்கிறது. ஆனால் உயிரியல் பற்றி நீங்கள் எழுதுவது சுத்தமாக ஒன்று கூட விளங்கவில்லை. இந்தப் பதிவுக்கு நீங்கள் போட்ட எதிர் பதிவிலும் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்னைப் போல எளியவர்களை மனதில் வைத்து நீங்கள் எழுத வேண்டும். அதை எப்போது செய்யப் போகிறீர்கள்?

      Delete
    5. சார்வாகன் அய்யா,

      ****இதையும் என்பதிவில் கொடுத்து இருக்கிறேன் என்பதை மறைப்பது ஏன்?****

      கவனிக்காமல் விட்டது என் தவறு தான். மன்னிக்கவும்.

      மற்றப்படி, As usual, My question stands. உங்கள் (பெர்கிலி தள) படம் சரியா? அல்லது விக்கி படம் சரியா? இரண்டில் யார் தவறென்றாலும் அதன் நம்பகத்தன்மை குறித்த கேள்வி வந்துவிடுகின்றது. //இனவிருத்தி செய்ய இயலுமா.இயலாதா என டையேன் அந்த கட்டுரையில் குறிப்பிடவில்லை// என்று முந்தைய கமெண்ட்டில் சொல்லும் தாங்கள், உங்கள் கட்டுரையிலோ இதற்கு நேர்மாறாக //சில தலைமுறைகளுக்குபிறகு இரு குழுக்களும் இனவிருத்தி செய்ய இயலாமல்// என்று குறிப்பிடுகின்றீர்கள்.

      உங்களை நான் சட்டை செய்வதில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளேன். ஏன் என்பதற்கு விளக்கமும் அளித்துள்ளேன். நான் எதிர்பார்ப்பதெல்லாம் குறைந்தபட்ச நேர்மை மட்டுமே. இதோ நான் உங்களை சட்டை செய்யாததற்கு இன்னொரு தெளிவான உதாரணத்தை இங்கேயே தந்துள்ளீர்கள். தவறான தகவலை வாசகர்களுக்கு தந்துள்ளீர்கள். சுட்டி காட்டிய பின்பும் திருத்திக்கொள்ள மனம் வரவில்லை.

      சாரி சார்வாகன், என்னை விட்டுவிடுங்கள். பரிணாம கோட்பாடு மீதான உங்களின் அறியாமையை சுட்டிக்காட்டி கொண்டே இருப்பது என்னுடைய வேலை இல்லை. இங்கேயும் கூட, சகோ தாஸ் கேட்டதால் மட்டுமே பதில் அளிக்க முன்வந்தேன். அவசியம் ஏற்பட்டாலே ஒழிய இனியும் உங்களை நோக்கி என்னுடைய கருத்துக்கள் வராது.

      அதுபோல யாருடைய புகழ்ச்சியும் இகழ்ச்சியும் என்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. எனக்கான உண்மையான அங்கீகாரம் என்பது இறைவனிடம் மட்டுமே உள்ளது.

      நன்றி..

      Delete
    6. சகோ தாஸ்,

      தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி..

      Delete
    7. சகோ ஆஸிக்,

      நான் உங்களை விடுவதாக இல்லை!!

      1.இரு உயிரிகள், ஒரே இனம் அல்லது வெவ்வேறு இனம் என எப்படி வரையறை செய்கிறார்கள்?

      இந்த கேள்விக்கு பதிலே சொல்லாமல் தப்பிக்கிறீர்கள்.

      2. ஸ்பீசியேசன் என்பது சாத்தியமில்லை என ஏதேனும் ஆய்வுக் கட்டுரை கண்டது உண்டா? ஏன் இதுவரை இதுபற்றி எழுதவே இல்லை!!

      3. கால்தடம், மனிதன்(ஹோமோ சேஃபியன்) தோற்றம் ஆஸ்ட்லோ பித்கசுக்கு [ 40 இலட்சம் ஆண்டுகளுக்கு]முந்தியது என்னும் கூற்றினை உண்மைப் படுத்தும் படிம சான்றுடன் பதிவு எப்போது?

      4. உங்களின் பதிவுகளை நம்ம மாப்ளே தாசுக்கு மீள்பதிவு செய்ய உரிமை கொடுக்கவும்.

      ஃப்ரூட் ஃப்ளை பத்தியே இதுவரை நடந்த ஆய்வு பற்றி பதிவிடுவேன்.

      நன்றி!!

      Delete
    8. ஆஷிக்,

      மாமிசம் உண்ணும் வகையில் மனிதன் படைக்கப்படவில்லை,அதற்கு ஏற்ற பல்லே மனிதனுக்கு இல்லை, அவன் உணவு சைவமே, எனவே மாமிசம் உண்பது மனித படைப்பின் இயற்கைக்கு முரண் ஆனது என ஒருவர் சொன்னால் ஏற்பீர்களா இல்லையா?

      எனக்கு ஆம்/இல்லை என்ற பதில் வேண்டும்.

      இதற்கு விடைத்தெரிந்தும் பதில் கூறாவிட்டால் மாமிசம் சாப்பிட்டால் உமக்கு பேதியாகும் :-))

      Delete
    9. எனக்கு சில டவுட்ஸ்.

      மாமிசம் சாப்பிட கோரை பற்கள் மட்டும்தான் முக்கியமா..?
      கோரை பற்கள் சைவத்தை கடிக்க அரைக்க தேவை இல்லையா..?
      ஒரு பேச்சுக்கு, மாமிசத்தை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து அப்படியே லபக் லபக் என்று விழுங்கினால் செரிக்குமா, செரிக்காதா..?
      பற்களே தேவைப்படாமல் மிளகு ரசத்தை மடக் மடக் என குடிக்கும் நாம் அதேபோல பாதரசத்தை குடிக்க முடியுமா..? குடித்தால் என்னாகும்..?

      எனில், மாமிசம் சாப்பிட அதற்குரிய பற்கள் மட்டும் இருந்தால் போதுமா..? உள்ளுக்குள் உணவு செரிமான மண்டலம் பற்றிய அறிவு எல்லாம் தேவை அற்றதா..?

      அதே கேள்வியை என்னை கேட்டால்,

      மாமிசம் உண்பது மனித படைப்பின் இயற்கைக்கு முரண் ஆனது இல்லை என்பேன்..! Because, we secrete fatty acids and glycerol..!

      Delete
    10. சிட்டிசன்,

      //மாமிசம் உண்பது மனித படைப்பின் இயற்கைக்கு முரண் ஆனது இல்லை என்பேன்..! Because, we secrete fatty acids and glycerol..!//

      ரொம்ப நன்றி!

      மாமிசம் சாப்பிடுவது போல மனிதன் படைக்கப்படவில்லை, மாமிசம் உண்பது இயற்கைக்கு முரண் ஆனதுனு ஒருத்தர் சொன்னார், நீங்க இல்லைனு சொல்லிட்டிங்க , அது போதும் :-))

      ------------

      பாகவதரே நீர் சொல்வது எல்லாம் மாமிசம் சாப்பிடுவது தப்புனு சொல்வது போல உட்டாலக்கடி கதை தானே :-))

      மாமிசம் சாப்பிடுவது மனித படைப்பு படி சரியில்லைனு புழுகினது போல பரிணாமம் அறிவியல் இல்லைனு புழுகி இருப்பது தெரிகிறது :-))

      உம்ம கண்டுப்பிடிப்பு படி ரெண்டுல ஒன்னு தான் சரியா வரும், பரிணாமம் இல்லை மாமிசம் சாப்பிடுவது சரியா?


      பரிணாமம் தப்புனா ,மாமிசம் சாப்பிடுவதும் தப்புன்னு சொல்லலாம்.

      நீர் மார்க்கப்பந்துக்களின் மாமிசம் சாப்பிடும் பழக்கம் தப்புன்னு சொல்லிட்டு எப்படி பரிணாமம் தப்புனு சொல்ல முடியும்?

      மாமிசம் சாப்பிடுவது சரினு சிட்டிசன் சொல்லிட்டார்,அப்புறம் ஆஷிக்கிடம் நீங்க சொல்றது தான் சரினு பரிணாமத்துக்கு சாட்சிக்கு இழுக்கிறீர் :-))

      இப்போ என்ன செய்யப்போறீர் :-))

      மார்க்கப்பந்துக்களின் பதிவை காப்பியடிச்சு நீர் பேசுவதால் ,மாமிசம் சாப்பிடுவது சரினு ஒத்துக்கொண்டு பின்னர் பரிணாமம் தப்புன்னு பேசலாமே :-))

      Delete
    11. @ வவ்வால்

      மாமிசம் தின்னுவதர்க்கும் இந்தப் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று தான் தெரியவில்லை. ஒரு பேச்சுக்கு நீர் மாமிசம் உண்பவர் என்பதால், மாமிசம் உண்ணாதவர்கள் சொல்வது எதையும் நீர் ஏற்க மாட்டீர், அது சரியோ, தப்போ கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பீர். இது தான் உமது கொள்கையா? 100% எல்லா விதத்திலும் நமது கருத்துக்களுடன் ஒத்து போகிறவர்களுடன் மட்டுமே உறவாடுவேன் என்றால் தனியாக உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். மாமிசம் உண்ணுவது சரி என்பது அவரது தனிப்பட்ட புரிதலாக இருக்கலாம். என்னுடைய புரிதல் அதனோடு ஒத்துப் போகாமல் இருக்கலாம். அதற்காக அவர் சொல்வது அத்தனையும் நிராகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உண்மையை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

      சம்பந்தமேயில்லாமல், முரணான கருத்துக்களை இங்கே எழுப்பி குளிர் காய நினைக்க வேண்டாம்.

      மாமிசம் உனக்கான உணவுன்னா, நீ கோழி, ஆடு, பண்ணி, நாய் எல்லாம் பிடிச்சிகிட்டு வா, நான் வாழைப் பழம், தேங்காய் என கொண்டு வருகிறேன், ஒரு மாசத்துக்கு நெருப்பில்லாமல், உப்பு சேர்க்காமல் யார் அப்படியே சாப்பிட்டு வாழ்கிறார்கள் என்று பார்த்துவிடுவோம். அப்பத்தான் நீ மாமிச உன்னி, இல்லாட்டி நீ பொறாமை பிடிச்ச வெறும் பண்ணி.

      Delete
    12. மாப்ளே தாசு,

      நீங்க ஏற்கெனெவே கரி துண்ணு ,வெஜிடேரியன் ஆனவரா!! இல்லை சாப்பிட்டதே இல்லையா!!

      நான் சொல்வது கரி தின்ன மாட்டேன் என்றால் ,உம்போல் எதுவும் சப்பிடாமல் இருக்கணும்.

      தின்பது என்றால் என்போல் கிடைக்கும் எந்த கரியும் தின்ன வேண்டும்..

      இதில் சில பசுமாமிசம் மட்டும் மாட்டேன்,பன்னிக் கரிமட்டும் மாட்டேன் சாமி கோபிக்கும் என்பவர்களே ஏமாற்றுக்காரன் என்கிறேன்.

      என்ன நான் சொல்ரது!!

      நாம மாடுக்கரியும்,பன்னிக் கரியும் கல்ந்து சப்பிடும் ஆசாமி என்பதால் ஆச்சாரம்,ஹலால் கூட்டம் நம்மைக் கண்டால் ஓடும்!!

      மருத்துவர் இனிமேல் உண்ணக்கூடாது என்னும் நிலை வரை நாம் மாமிச உண்ணியே!!

      நன்றி!!

      Delete


    13. பாகவதரே,

      மனிதன் தாவ்ர உணவையே உண்ணுமாறு படைக்கப்ப்ட்டான் என நீர் தானே சொன்னீர் இப்போ என்ன அவரவ்ர் புரிதல்னு பல்டி அடிக்கீர் :-))

      இது உமது முதந்தைய கூற்று,

      //ஆக, சைவம்/அசைவம் எதை சாப்பிட்டாலும் ஒன்னும் பிரச்சினை இல்லையா? அதுதான் இல்லை. நம் உடல் எந்த மாதிரி உணவை உண்ண தகுதியானது என்று பார்க்கவேண்டும். அதை உண்ண வேண்டும். நம் உடல் தாவர உணவுகளை உண்ணவே தகுதியானது, எனவே வேண்டாத அசைவ உணவை ஒதுக்குவோம், //

      http://jayadevdas.blogspot.com/2012/11/blog-post_5945.html

      அப்போ நம்ம உடலுக்கு மாமிசம் உண்ண தகுதியே இல்லைனு அறிவியல்னு சொன்னீர் , அந்த அறிவியல் சரியா ,தப்பானு இன்னொருக்கா சொல்லிடும் :-))


      கொள்கை அடிப்படையில் மாமிசம் உண்ன வேண்டாம் என்பது வேறு அதனை ஒத்துக்கலாம், ஆனால் மனிதனே சைவம் உண்ணுமாறு தான் படைக்கப்பட்டுள்ளான் என அறிவியலை சாக்கு வைத்து பேசுவது எப்படி என்பது தான் எனது கேள்வி. அது அறிவியல் பூர்வமாக பொய்யான வாதம்.

      நீர் அப்போ அப்போ மாற்றி பேச அறிவியல் ஒன்னும் புராணம் இல்லை, எனவே உம்மோட அறிவியல் தகுதி எந்த அளவுக்கு இருக்குனு தெரியாம பேசிட்டு இருக்கப்படாது :-))

      அசைவ உணவு பற்றி நீர் சொன்னது அறிவியல் பூர்வமாக உண்மையா இல்லையா ? அது உண்மை என நீர் சொன்னால் ,சிட்டிசன் அப்போ பொய் சொல்லிட்டாரா :-))

      ஆள் ஆளுக்கு அறிவியலை மாத்தி பேச என்ன அது உம்ம பகவத் கீதையா :-))

      நான் அறிவியல் பூர்வமாக அனைத்தையும் அணுகுவேன் ,மாமிசம் உண்பது அறிவியல் பூர்வமாக சரி,அதே போல பரிணாமமும் அறிவியல் பூர்வமாக சரி எனவே எனது கொள்கையில் முரண்பாடில்லை :-))

      சிக்கிரமாக நீங்கலாம் ஒன்னுக்கூடி மாமிசம் சாப்பிடுவது அறிவியல்பூர்வமாக சரியா இல்லையானு கண்டுப்பிடிச்சுட்டு அப்புரமா பரிணாமம் அறிவியலா இல்லையானு முடிவுக்கு வரலாம் :-))


      மேலும் எயிட்ஸ் வைரசில் பரிணாமம் நடைப்பெறுவதை ஆதாரத்துடன் பதிவும் இட்டுள்ளேன், அதனை இல்லை என முடிந்தால் நிருபிக்கவும், நோபெல் பரிசு கூட கிடைக்கலாம், சீக்கிரம் நோபெல் பரிசு வாங்க வாழ்த்துக்கள் :-))
      ----------

      அது என்ன வாழைப்பழம்,தேங்கானு , ஏன் புதுசா அறுவடை செய்த நெற்கதிர்கள் ஒரு கட்டு கொண்டு வரேன் ,சைவம் தான் சாப்பிட்டு உயிர்வாழ்ந்து காட்டும்,நான் மீன் ,முட்டைனு பச்சையாகவும் சாப்பிட்டு உயிர்வாழ்ந்து காட்டுறேன்.

      ஓய் தேங்கா மட்டையோட கொடுத்தா உம்மால உறிக்க முடியுமா :-))

      Delete
    14. \\அப்போ நம்ம உடலுக்கு மாமிசம் உண்ண தகுதியே இல்லைனு அறிவியல்னு சொன்னீர் , அந்த அறிவியல் சரியா ,தப்பானு இன்னொருக்கா சொல்லிடும் :-)) \\ மாமிசம் உண்ணலாம் என்று இன்னொருத்தர் சொல்கிறார் என்றால் அது தவறான புரிதல் என்பது எனது கருத்து. இதில் பல்டி அடிக்க என்ன இருக்கு?


      \\கொள்கை அடிப்படையில் மாமிசம் உண்ன வேண்டாம் என்பது வேறு அதனை ஒத்துக்கலாம், ஆனால் மனிதனே சைவம் உண்ணுமாறு தான் படைக்கப்பட்டுள்ளான் என அறிவியலை சாக்கு வைத்து பேசுவது எப்படி என்பது தான் எனது கேள்வி. அது அறிவியல் பூர்வமாக பொய்யான வாதம். \\ படைக்கப் பட்டுள்ளான் என்ற வார்த்தையே இப்போதைக்கு இங்கே உபயோகிக்கத் தேவையில்லை. மனிதனின் உடற்க்கூறுகள்,Ex: வாயில் ஊரும் உமிழ்நீர், கீழ்த் தாடை அரைக்கும் வண்ணம் பக்கவாட்டில் நகரும் விதம், இரைப்பையில் சுரக்கும் அமிலத்தின் அளவு, குடலின் நீளம் தோலிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் என எத்தனையோ அமைப்பை வைத்து மனிதன் தாவரத்தில் இருந்து பெறப்படும் உணவையே உனைத் தக்கவன் என்று அறிந்து கொள்ள முடியும். இதற்க்கு பல முறை சுட்டியையும் கொடுத்துள்ளேன், ஆனால் நீர் அது குறித்து ஒன்றும் படிக்க வில்லை என்றால் உமக்கு ஆங்கிலம் தெரியாது என்பதைத் தவிர வேறு காரணம் இருக்கவே முடியாது. முடிந்தால் இன்னொரு முறை உமது சோடாபாட்டில் கண்ணாடியை சரியாக துடைத்து படியும்.

      http://michaelbluejay.com/veg/natural.html

      \\நீர் அப்போ அப்போ மாற்றி பேச அறிவியல் ஒன்னும் புராணம் இல்லை, எனவே உம்மோட அறிவியல் தகுதி எந்த அளவுக்கு இருக்குனு தெரியாம பேசிட்டு இருக்கப்படாது :-))

      அசைவ உணவு பற்றி நீர் சொன்னது அறிவியல் பூர்வமாக உண்மையா இல்லையா ? அது உண்மை என நீர் சொன்னால் ,சிட்டிசன் அப்போ பொய் சொல்லிட்டாரா :-))\\ மேலே கொடுத்துள்ள சுட்டியும் பாருமைய்யா...........

      \\ஆள் ஆளுக்கு அறிவியலை மாத்தி பேச என்ன அது உம்ம பகவத் கீதையா :-)) \\ மாத்திப் பேசுவது உமது பண்பாடு எமதல்ல.

      \\நான் அறிவியல் பூர்வமாக அனைத்தையும் அணுகுவேன் ,மாமிசம் உண்பது அறிவியல் பூர்வமாக சரி,அதே போல பரிணாமமும் அறிவியல் பூர்வமாக சரி எனவே எனது கொள்கையில் முரண்பாடில்லை :-))\\ நீரே மெச்சிக் கொள்ள வேண்டியதுதான்.

      \\சிக்கிரமாக நீங்கலாம் ஒன்னுக்கூடி மாமிசம் சாப்பிடுவது அறிவியல்பூர்வமாக சரியா இல்லையானு கண்டுப்பிடிச்சுட்டு அப்புரமா பரிணாமம் அறிவியலா இல்லையானு முடிவுக்கு வரலாம் :-))\\ ஆடு நனையுதேன்னு ஓநாய் அழக் கூடாது.


      \\மேலும் எயிட்ஸ் வைரசில் பரிணாமம் நடைப்பெறுவதை ஆதாரத்துடன் பதிவும் இட்டுள்ளேன், அதனை இல்லை என முடிந்தால் நிருபிக்கவும், நோபெல் பரிசு கூட கிடைக்கலாம், சீக்கிரம் நோபெல் பரிசு வாங்க வாழ்த்துக்கள் :-))\\ நீர் தமிழைப் பத்தி எழுதினாலே படிக்கிறது கஷ்டம் பரிணாமம் வேறைய.??!! ஐயோ..... ஐயோ............

      \\அது என்ன வாழைப்பழம்,தேங்கானு , ஏன் புதுசா அறுவடை செய்த நெற்கதிர்கள் ஒரு கட்டு கொண்டு வரேன் ,சைவம் தான் சாப்பிட்டு உயிர்வாழ்ந்து காட்டும்,நான் மீன் ,முட்டைனு பச்சையாகவும் சாப்பிட்டு உயிர்வாழ்ந்து காட்டுறேன்.

      ஓய் தேங்கா மட்டையோட கொடுத்தா உம்மால உறிக்க முடியுமா :-))\\ நீர் ஒரு கூமுட்டை இராமசாமி என்பது வெட்ட வெளிச்சமாகிறது. நான் கல்லைத் தூக்கிப் போட்டு உடைப்பேன், இதென்ன பெரிய சமாச்சாரமா? சில ஆமைகளை பறவைகள் தூக்கிச் சென்று உயரத்தில் இருந்து போட்டு ஆமையின் ஓட்டை உடைத்து உண்ணுவது உண்டு. இந்த வீடியோவைப் பாரும், ஒரு குரங்கு என்ன பண்ணுதுன்னு. ஆனாலும் ஒருபோதும் எந்த விலங்கும் உணவை உப்பு சேர்த்தோ, தீயிளிட்டோ உண்ணாது.

      https://www.youtube.com/watch?v=U_msCiJXjp0
      https://www.youtube.com/watch?v=q2CbBSu8X6Q

      மனிதனின் உடல் கூறுகள் மாமிசத்தை உண்பதற்கு ஏதுவானதல்ல. இதை மறுப்பதானால் நான் சொன்ன போட்டிக்கு வாரும் பார்த்து விடலாம்.

      Delete
    15. பாகவதரே,

      // ஒருபோதும் எந்த விலங்கும் உணவை உப்பு சேர்த்தோ, தீயிளிட்டோ உண்ணாது.//

      அப்போ மனிதன் என்பவன் சாதாரணமான விலங்கு போல வாழ வேண்டும் என்கிறீர்கள்,நன்று!

      அப்படியே இதனையும் பின்ப்பற்றவும்,

      # விலங்குகள் பூநூல் போட்டுக்கொள்வதில்லை

      #பகவத் கீதை படிப்பதில்லை.

      #உடை உடுத்துவதில்லை

      #ஒருவனுக்கு ஒருத்தி என ஒரே பெண் விலங்க்குடன் வாழ்வதில்லை(நீரும் அப்படித்தானே :-))}

      #கான்கிரீட் வீடு கட்டுவதில்லை

      #இயற்கையில் விளையும் உணவை உண்கின்றன, உற்பத்தி செய்து உண்பதில்லை

      #அமெரிக்க மாடும்,இந்திய மாடும் தனிப்பாஷை பேசுவதில்லை

      #இணையம்,கைப்பேசி பயன்ப்படுத்துவதில்லை

      இன்னும் பல இருக்கு ,நீர் எப்படி விலங்குகள் போல இதெல்லாம் செய்யத்தயாரா?

      //மனிதனின் உடல் கூறுகள் மாமிசத்தை உண்பதற்கு ஏதுவானதல்ல. இதை மறுப்பதானால் நான் சொன்ன போட்டிக்கு வாரும் பார்த்து விடலாம்.//

      ஓகே போட்டிக்கு வரலாம், புதிதாத அறுவடை செய்த நெற்கதிர்கள் ஒரு கட்டு, ஒரு கிலோ சேப்பங்கிழங்கு, ஒருகிலோ பாகற்காய்,போன்ற தாவர உணவுகளை நீர் சமைக்காமல்,உப்பு இடாமல் சாப்பிட தயார் தானே :-))

      # நீர் சொன்ன மனித உடல் மாமிசம் உண்பதற்கு ஏற்றபடி இல்லை என்பதை பொய் என சிட்டிசனே நிறுவியுள்ளார்,

      ////Because, we secrete enzymes capable of digesting fats into fatty acids and glycerol//

      அதனால் மனிதன் மாமிசம் சாபிடுபவனாகவே படைக்கப்பட்டுள்ளான் என்று சொல்ல வந்தேன்.//

      பதிலை சொல்லும் இதுக்கு :-))

      அறிவியல் தெரியாமல் பரிணாமம் பேசுற அதிசயமெல்லாம் தமிழ்நாட்டில தான் நடக்கும் :-))




      Delete
    16. \\அப்போ மனிதன் என்பவன் சாதாரணமான விலங்கு போல வாழ வேண்டும் என்கிறீர்கள்,நன்று!\\ நீர் பேசுவதைப் பார்த்தால் என்னமோ மனிதன் விலங்குகளை விட மேன்மையான வாழ்க்கை வாழ்வது போல இருக்கிறது. எந்த ஒரு இனமும் தன் இனத்தையே இலட்சக் கணக்கில் கொன்று குவிக்காது. விலங்குகள் பசிக்காமல் உணவைத் தொடாது. பசியில்லாமல் இருக்கும் சிங்கத்தின் மிக அருகில் ஒரு மான் சென்றாலும் அதற்கு எந்த ஆபத்தும் இல்லை. தன்னுடைய தேவைக்கும் மேல் ஒருபோதும் அவை சேர்த்து வைக்காது. இயற்கையை ஒருபோதும் பாழ்படுத்தாது. கருவுற்றிருக்கும் பசுவின் மேல் காளை ஒருபோதும் தாவாது. ஆனால் மனிதனைப் பாரும் இத்தனை அயோக்யத் தனங்களையும் செய்வான். நல்லது எங்கேயிருந்தாலும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீர் விலங்குகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நல்லது எத்தனையோ இருக்கிறது.

      அவற்றில் ஒன்றுதான் உனக்கான உணவை எடுத்துக் கொண்டு மற்றவற்றை வாழவிடு என்பதாகும். மான் மாமிசம் உண்ணாது, புலி புல் உண்ணாது. பன்றி மலத்தை அற்புதமாக உண்ணும். ஆனால் மனிதனான நீர் எதையாவது விட்டு வைத்திருக்கிறீரா? கொஞ்சம் ஆழ்ந்து யோசியும்.

      \\ஓகே போட்டிக்கு வரலாம், புதிதாத அறுவடை செய்த நெற்கதிர்கள் ஒரு கட்டு, ஒரு கிலோ சேப்பங்கிழங்கு, ஒருகிலோ பாகற்காய்,போன்ற தாவர உணவுகளை நீர் சமைக்காமல்,உப்பு இடாமல் சாப்பிட தயார் தானே :-)) \\ உன்னை மாதிரி கேனையை காண்பது அரிது ஐயா ........ நீர் உமது கல்லூரிக்கு பக்கத்தில் இருக்கும் வண்டலூர் பூங்காவுக்குச் செல்லும், அங்கே இன்னின்ன விலங்குகள் எந்த மாதிரியான உணவு பழக்கங்கள் இருக்கின்றன எனப் போட்டிருப்பான். தாவரம் மாமிச உன்னி எதுவானாலும் அவற்றுக்கென்று விருப்பமான உணவு என்று ஒன்று இருக்கும். வவ்வால் பழங்களை உண்ணும், மான் புல் உண்ணும், சிங்கம் விலங்குகளை அடித்து உண்ணும், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். உனக்கான உணவு இயற்கையில் உண்டு. அது உன்னுடைய உணவு என்று நிரூபிக்கவேண்டுமானால் உப்பு சேர்க்காமல், சமைக்காமல் உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து காண்பி. அப்படி வாழும் ஒரு கிராமம் திருநெல்வேலி சிவசைலத்தில் உள்ளது. முடிந்தால் போய்ப் பாரும்.

      \\# நீர் சொன்ன மனித உடல் மாமிசம் உண்பதற்கு ஏற்றபடி இல்லை என்பதை பொய் என சிட்டிசனே நிறுவியுள்ளார்,\\ யாரு இவரு, இவரைப் பத்தி நீர் வேண்டுமானால் பின்பற்றும், நான் ஏன் கவலைப் பட வேண்டும்.

      \\பதிலை சொல்லும் இதுக்கு :-))\\ அதைச் சொன்ன ஆள் கிட்ட போயி கேளுமையா, என்கிட்ட ஏன் லூசு மாதிரி கேட்டுகிட்டு இருக்கீரு?

      \\ அறிவியல் தெரியாமல் பரிணாமம் பேசுற அதிசயமெல்லாம் தமிழ்நாட்டில தான் நடக்கும் :-)) \\ முதலில் பரிணாமம் என்பது அறிவியலே இல்லை, மேலும் உமக்கு அறிவியலும் தெரியாது, எதற்கு வெட்டி வீராப்பு?

      Delete
    17. விளக்கெண்னெய் பாகவதரே,

      அப்போ விலங்குகள் வாழும் மற்ற முறை குறித்து சொன்னேனே அதுக்குலாம் பதில சொல்லாமல் நழுவதேன்?

      மனிதன் "omnivore" என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பரிணாமம் பற்றி பேசும் கூமுட்டையாக இருக்கீரே :-))

      நீர் தாவரம் உண்னுவது அந்த தாவரத்துக்கு பிடிக்குமா?

      நெல்லை தோலுடன் சாப்பிடுவீரா?

      இல்லை கையால் உறிச்சு சாப்பிடுவீரா?

      அப்போ மட்டும் ரைஸ் மில்லில் அரைச்சு, குக்கரில் வேகவச்சு தின்னுவீர், அது போல எந்த விலங்கு சாப்பிடுது?

      நீர் நெல்லை அப்படியே சாப்பிட்டு காட்டும் அப்புறமா ,பேசலாம், நான் வெறும் முட்டை,மீன் அப்படியே உப்பு,காரம் இல்லாமல், வேக வைக்காமல் சாப்பிட்டு ஒரு மாதம் வாழ முடியும் :-))

      ------------

      அப்போ சைவம் தான் மனிதனுக்குனு அறிவியல் சொல்லுதுனு மார்க்கப்பந்துக்களிடமும் சொல்லிப்பாரும் :-))

      ரெண்டாம் வாய்ப்பாடே தெரியாதாம் இன்டெகிரல் கால்குலஸ் கணக்கு போடுவேன்னு கிளம்பிடுறாங்கய்யா :-))

      Delete
    18. \\அப்போ விலங்குகள் வாழும் மற்ற முறை குறித்து சொன்னேனே அதுக்குலாம் பதில சொல்லாமல் நழுவதேன்?\\

      நீர் தொங்குவது தான் தலைகீழாக என்றால், கொள்கையிலும் அப்படித்தானா? விலங்குகளை விட ஆறறிவு கொண்ட நீர் இன்னமும் Gentleman ஆக நடந்து கொள்ள வேண்டும். விலங்குகள் உடை உடுத்துவதில்லை நீர் உடுத்துகிரீர், இது மேம்பட்ட நிலை. ஆனால், விலங்குகள் தங்களுடைய உணவைத் தவிர மற்றதை தொடுவதில்லை ஆனால் நீர் நாய்க்கு, பன்னிக்கு உண்டானதையும் சேர்த்து உண்ணுவேன் என்கிறீர். ஆகையால் விலங்கை விட கீழே போகிறீர். அதைத் தவிர்க்க வேண்டும் என்கிறேன்.

      \\மனிதன் "omnivore" என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பரிணாமம் பற்றி பேசும் கூமுட்டையாக இருக்கீரே :-))\\ உம்ம மூஞ்சியில ஏன் பீச்சாங்கையை வைக்க, அதைத்தான் ஆயிரம் பேரை கூட்டியாந்து நிரூபியும்னு முன்னரே சொன்னாரே, திரும்ப விளங்காமட்டை மாதிரி உளறினா எப்படி?

      \\நீர் தாவரம் உண்னுவது அந்த தாவரத்துக்கு பிடிக்குமா?\\ நீர் தாவரம் உண்ணுவதே இல்லையா? முதலில் அவை உமக்கான உணவுன்னு நிரூபியும், அப்புறம் அதுக்கு பிடிக்குதோ இல்லையோ நீர் அவற்றை எப்படி வேண்டுமானாலும் உண்ணலாம்.

      \\நெல்லை தோலுடன் சாப்பிடுவீரா?

      இல்லை கையால் உறிச்சு சாப்பிடுவீரா?

      அப்போ மட்டும் ரைஸ் மில்லில் அரைச்சு, குக்கரில் வேகவச்சு தின்னுவீர், அது போல எந்த விலங்கு சாப்பிடுது?

      நீர் நெல்லை அப்படியே சாப்பிட்டு காட்டும் அப்புறமா ,பேசலாம், நான் வெறும் முட்டை,மீன் அப்படியே உப்பு,காரம் இல்லாமல், வேக வைக்காமல் சாப்பிட்டு ஒரு மாதம் வாழ முடியும் :-)) \\ எனக்கு தேங்காயும் பழமுமே போதும் முழு ஆரோக்கியத்துடன் வாழ முடியும். தானியங்கள் தேவையே இல்லை.

      \\அப்போ சைவம் தான் மனிதனுக்குனு அறிவியல் சொல்லுதுனு மார்க்கப்பந்துக்களிடமும் சொல்லிப்பாரும் :-)) \\ எனது புரிதல் எனக்கு, அதை ஏற்பதும் நிராகரிப்பதும் அவரவர் விருப்பம். நான் யாரையும் வற்ப்புறுத்தி எனது கருத்துகளை திணிக்க முடியாது.

      \\ரெண்டாம் வாய்ப்பாடே தெரியாதாம் இன்டெகிரல் கால்குலஸ் கணக்கு போடுவேன்னு கிளம்பிடுறாங்கய்யா :-)) \\ திருக்குறளே தெரியாதவனெல்லாம் ரிக் வேதம் குரான், பைபிள் எல்லாம் தெரியுமுன்னு திரியரானுன்களே, அவனுங்களை என்ன செய்வது?

      மிஸ்டர்.வவ்வால், சம்பந்தமே இல்லாமல் இங்கு வந்து மாமிசத்தை இழுக்க வேண்டாம். உமக்கு வேண்டிய பதில் பலமுறை சொல்லிட்டேன் உமது மரமண்டைக்கு ஏறவில்லை நீர் முடாலகப் பிறந்ததற்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பல்ல. இம்மாதிரி வீண் வேலைகளில் என்னை இழுத்து நேரத்தை பாழாக்க வேண்டாம். தலைபிற்க்குச் சம்பந்தமுள்ளதை மட்டும் விவாதிக்கவும்.

      Delete
  33. சகோ.தாஸ்

    பதிவுலகில் மீண்டும் பரிணாமமா...??? :-)) பரிணாமத்தை தோலுரிக்க சகோ.ஆசிக் அஹமத் உடன் இணைந்து சிறப்பாக பணியாற்ற எனது மகிழ்ச்சியினை தெரிவித்து கொள்கிறேன்..!

    ReplyDelete
    Replies
    1. மீரான் ,

      என்ன ஓய் தோலுரிச்சாங்க,வாழப்பழம் உரிச்சாங்கன்னு பக்க வாத்தியம் வாசிச்சிட்டு, அதான் எயிட்ஸ் ஹெச்.ஐ.வி கிருமியில பரிணாமம் நடக்குது ,பல வைரஸ் உருவாகி இருக்குனு ஆதாரத்தோட பதிவே போட்டாச்சுல்ல, அதற்கு மறுப்பு கொடுக்க இங்கே யாருக்கு திராணி இருக்கு?

      பரிணாம மாற்றம் இப்பவும் நுண்ணியிரில நடக்குது,அதை உயிர் தொழில்நுட்ப வல்லுனர்களே நிருபிச்சு இருக்காங்க, உலகமே ஏற்றுக்கிட்டாச்சு, அதை இல்லைனு யாராவது சொன்னால் அவங்களுக்கு நோபெல் பரிசே காத்திருக்கு,எனவே உம்ம ஆஷிக்,பாகவதரை எல்லாம் நோபெல் பரிசு வாங்க வைக்க மறுப்பு கொடுத்து நிருபிக்க சொல்லும் :-))

      Delete
  34. மாப்ளே தாசு,
    //மாமு, ஆசிக்கின் பதிவுகள் எளிதில் புரிகின்றன. 36 தவறுகள் [குறைந்தபட்சம்] இந்தப் பதிவில் இருப்பதாகச் சொன்ன மக்குபால் கள்வன் கூட அங்கே சென்று தவறு என்று எதையும் குறிப்பிடவில்லை, மாறாக ஒரு உயிரியல் மாணவன் என்ற முறையில் இதை எதிர்க்கிறேன் என்று மட்டுமே கூறியுள்ளார்.//

    ஆஸிக்கின் பதிவுகள் 100% தவறு. ஆகையால்தான் அப்படி. அவருடைய பதிவுகளில் எதிலும் விடயம் இல்லை. நீர் விரும்பும் 3 கட்டுரை காட்டும். ஒருவேளை எழுதாமல் இருந்தால் நான் மறுப்பு எழுதிகிறேன்.

    **
    //ஆனால் உயிரியல் பற்றி நீங்கள் எழுதுவது சுத்தமாக ஒன்று கூட விளங்கவில்லை. இந்தப் பதிவுக்கு நீங்கள் போட்ட எதிர் பதிவிலும் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்னைப் போல எளியவர்களை மனதில் வைத்து நீங்கள் எழுத வேண்டும். அதை எப்போது செய்யப் போகிறீர்கள்?//

    அப்படியா வருந்துகிறேன்.

    நான் பரிணாமம் பற்றி கடந்த சில் வருடங்களாக தொடர் கற்றலும்,எழுதலும் செய்கிறேன்.

    அடுத்த பதிவு கொஞ்சம் எளிதாக எழுதுகிறேன். கேள்வி நிறைய கேளுங்கள்!!


    நன்றி!!

    ReplyDelete
  35. கடவுள் ஏன் பூமியில் மட்டும் உயிரினங்களை படைத்தார். நம் சூரிய குடும்பத்தில் ஏன் மற்ற கோள்கள் பிடிக்காமல் போனது? அவருகிட்ட தான் கேக்கோனும்னு சொல்லாதீங்க !

    ReplyDelete
  36. சலாம் சகோ.ஜெயதேவ் தாஸ்,
    தாங்களும் பரிணாமத்தின் முகத்திரையை அகற்ற வந்தமைக்கு நன்றிகள். பல விஷயங்களை கோர்த்து எழுதி உள்ளீர்கள். நன்றி.

    எனது தந்தை விலங்கியல் பேராசிரியர் என்பதால், பரிணாமம் என்பது ஓர் அறிவியல் ஆதாரங்கள் கொண்டு நிரூபிக்கப்படாத தியரி என்றும், அது அறிவியல் பாட புத்தகத்தில் வருவதை விட, சின்றெல்லா... டான் குவிக்ஷாட்... போன்ற கதைகளுடன் அது ஆங்கில நாண்டீடைல் புத்தகத்தில் வருவதே சிறப்பானது என்றும் பள்ளி காலங்களிலேயே புரிந்து கொண்டேன்.

    இதை இன்னும் சிலர் 'அறிவியல்' என்று சொல்ல ஒரே காரணம், கடவுளை மறுக்க நாத்திக வெள்ளத்தில் நீச்சல் தெரியாமல் மூச்சு காற்றுக்காக தத்தளிக்கும் சமயம், 'பிடிக்க, ஓர் கொழு கொம்பு' ஏதேனும் மாட்டுகிறதா என்று தேடுவதால்தான்..!

    அந்த இக்கட்டான நேரத்தில் 'அது என்ன கொம்பு', 'நாம் எடையை தாங்குமா', 'பிடிக்கலாமா வேண்டாமா', 'கிரிப் இருக்குமா', 'காப்பாற்றுமா' என்று எதையும் அவர்கள் யோசிப்பதில்லை. அதாவது, 'அது அறிவியலா' என்று யோசிப்பதில்லை. அவர்கள் நிலை பரிதாபம்தான்..!

    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோ ஆஸிக்(ட்) ,
      உங்கள் தந்தை விலங்கியல் பேராசிரியராக இருந்தாரா!!!. வெள்ளைக் குரங்கில் இருந்து வெள்ளையன், கருப்புக் குரங்கில் இருந்து கருப்பன் என பரிணாமம் குறித்து அன்று ஒரு விவாதத்தில் நீங்கள் கூறியபோதே நினைத்தேன். இப்படி மட்டும் அவர் பரிணாமம் விளக்கினால் அது தவறான ,நிரூபிக்கப்பட முடியா கொள்கைதான்.

      நான் இரு கேள்விகள் கேட்கிறேன்.

      ஒரு விடயம், சுட்டப்படும் ஆதாரங்கள் தவறு என் சொல்பவர்கள், அது சரியாக இருக்க எப்படி ஆதாரம் இருந்தாக வேண்டும் என அறிய வேண்டும்.

      1.பரிணாமம் 380 கோடி ஆண்டுகளாக நிகழும் செயல் என்றால், எந்த மாதிரி அறிவியல் ஆதாரம் இருந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்?

      2. பரிணாமம் என்பது குரான் சொல்லும் படைப்புக் கொள்கைக்கு நேர் எதிரானது. வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்பது குரானுக்கு முரண் ஆனது. பரிணாமம் உண்மை என்றால் இஸ்லாம் 100% தவறு.

      இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆம்/இல்லை

      நன்றி!!!

      Delete
    2. \\1.பரிணாமம் 380 கோடி ஆண்டுகளாக நிகழும் செயல் என்றால், எந்த மாதிரி அறிவியல் ஆதாரம் இருந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்?\\

      நீங்க எத்தனையோ உயிரினம் பரிணாம வளர்ச்சியடைந்து இன்னொரு உயிரினமா மாறியது என்கிறீர்கள். இடைப்பட்ட உயிரினம் ஒன்றாவது இருந்ததாக படிம ஆதாரம் காட்டுங்கள் அது போதும்.

      Delete
    3. மொக்கை பாகவதரே,

      // இடைப்பட்ட உயிரினம் ஒன்றாவது இருந்ததாக படிம ஆதாரம் காட்டுங்கள் அது போதும்.//

      நீர் ஆண் ,உமது மனைவி பெண் ,இருவருக்கும் இடைப்பட்ட நிலையில் ஒரு அரவாணியாக உமக்கு குழந்தை பிறந்தால் மகிழ்வீரா?

      ஆனால் அப்படி பொதுவான பால் நிலையில் குழந்தைகள் பிறக்கின்றன,ஆனால் அவர்களுக்கு பின் வாரிசு உருவாகாது,அதே நிலை பரிணாமத்திலும் உண்டு, இடை நிலை பிறப்புகள் அடுத்த தலைமுறையை உருவாக்க இயலாது எனில் சந்ததி தொடறாது. எனவே அவர்களுக்கு படிமம் உருவாக வாய்ப்பு கூறைவு.

      படிமம் என்பது தோன்றிய எல்லா உயிரிகளுக்கும் உருவாகாது,படிமவியல் பற்றி படித்து பாரும்.

      சரி கேமிரா இல்லாத காலத்தில் பிறந்த உமது கொள்ளு தாத்தா படம் இப்பொழுது இருக்காது எனவே அவரெல்லாம் பொறக்கவே இல்லைனு சொல்லிடுவீரா?

      Delete
    4. \\
      ஆனால் அப்படி பொதுவான பால் நிலையில் குழந்தைகள் பிறக்கின்றன,ஆனால் அவர்களுக்கு பின் வாரிசு உருவாகாது,அதே நிலை பரிணாமத்திலும் உண்டு, இடை நிலை பிறப்புகள் அடுத்த தலைமுறையை உருவாக்க இயலாது எனில் சந்ததி தொடறாது. எனவே அவர்களுக்கு படிமம் உருவாக வாய்ப்பு கூறைவு.\\

      அகக் கருமாந்திரம் புடிச்ச மனுஷா இடைப்பட்ட என்றால் அந்த அர்த்ததி எடுத்துகிடீரா? இந்த லட்சணத்தில் நீர் பரிணாமத்தைப் பத்தி பேசுகிறீரா? போய்யா எங்கேயாச்சும்...........

      Delete
    5. List of intermediate fossils
      http://en.wikipedia.org/wiki/List_of_transitional_fossils

      This is a tentative list of transitional fossils (fossil remains of a creature that exhibits primitive traits in comparison with more derived organisms to which it is related). The fossils are listed in series, showing the transition from one group to another, representing significant steps in the evolution of major features in various lines. These changes often represent major changes in anatomy, related to mode of life, like the acquisition of feathered wings for an aerial lifestyle in birds, or legs in the fish/tetrapod transition.

      Delete
  37. அருமையான பதிவு ....

    அது எப்படிங்கா எல்லோரும் மாமுவோட மூக்கையே தாக்கினா எப்படி அவரும் எத்தனை தடவத்தான் சர்ஜரி செய்துக்கொண்டுடே இருப்பாரு :)

    ReplyDelete
    Replies
    1. சகோ நிஜாம்,

      நீங்கள் [இப்போதைக்கு] பெயர்தாங்கி அல்லாத ,உண்மையான மூமினாக தெரிகிறது. ஸலாம்!!


      தாசை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள்!!!

      நன்றி!!

      Delete
  38. //Because, we secrete fatty acids and glycerol..!//---ooops... sorry, அவசரத்தில் பப்ளிஷ் தந்துட்டேன். டைப் அடிச்சது அரைகுறையா போயிருச்சு.

    அது இப்படி இருந்திருக்கணும்...

    //Because, we secrete enzymes capable of digesting fats into fatty acids and glycerol//

    அதனால் மனிதன் மாமிசம் சாபிடுபவனாகவே படைக்கப்பட்டுள்ளான் என்று சொல்ல வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோ முகமது ஆஸிக்(ட்),
      ஸலாம்!!,
      மீண்டும் நீங்கள் ஒரு பெயர் தாங்கி மூமின் என்பதை நிரூபிக்கிறீர்களே. இபோது தமிழ்மணத்தில் இஸ்லாம், இஸ்க்கான் பாய் பாய் என்பதாலும், இஸ்க்கான் தாசு முட்டை கூட சாப்பிடாத சாக பட்சிணி என்பதாலும், தாசு இசுலாமிய பதிவர்களின் தாக்கியாக்களை கண்டு கொள்ளாமையாலும், மூமின்களும் தாசின் வெஜெடேரிய பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும்.

      தாசு ஒரு காஃபிர் என்பதால் அவர்களுடன் எந்த ஒப்பந்தமும் கடைப்பிடிக்கத் தக்கது இல்லை என் உலகின் அருட்கொடை இறுதி தூதர் நபி(சல்) கூறினாலும், அதை இப்போது வெளிக் காட்டக் கூடாது.

      மூமின்களுக்கு அறிவியல்,மார்க்கம் இல்லாமல் தாக்கியாவும் நாம் கற்றுத்த்ர வேண்டி உள்ளது.

      ஆகவே தாசு மனித உடல் மாமிசம் செரிக்காது என்றால் கண்டு கொள்ளாமல் செல்வதே உண்மையான மூமின்களுக்கு அழகு!!!. தாசின் கருத்தை மறுத்ததால் பெயர்தாங்கி ஆகிவிட்டீர்கள்!!


      இன்னொரு விடயம் தாசு , திரு மோடி இரசிகர் என்பதால் அவரையும் ,தாசின் பதிவில் திட்டாதீர்கள்.அகமதியா மூமின்கள் கிருஷ்ரும் இறைத்தூதர், கீதையும் இறை வேதம் என்கிறார்கள்.நீங்களும் இந்த தாக்கியா செய்தால் தாசு மன மகிழ்வார், நாத்திகர்களை இன்னும் விமர்சிப்பார்.இது வஹாபியியத்துக்கு விரோதம் என்றாலும் [நாத்திக] காஃபிர்களை எதிர்க்க எதுவும் செய்யலாம் அல்லவா? அதுதானே நபி(சல்) காட்டிய வழி!!!


      திட்ட வேண்டும் எனில் ,நாத்திகர்களை எப்படி வேண்டுமானாலும் திட்டலாம்.
      **

      இதுவே தாசுடன் சேர்ந்த மூமின் ஆதர்வாளர்கள் தாக்கியா செய்ய வேண்டிய விதம் ஆகும்!!

      டிஸ்கி: இது எல்லாம் சிறுபான்மையாக இருப்பதால் மட்டுமே!!. பெரும்பானமை ஆகிவிட்டால் எல்லாக் காஃபிர்களையும் ஒரு வழி பண்ணி விடலாம்]

      [ஆகவே இப்போது வேறு வழியில்லாமல்] இஸ்லாம் ,இஸ்க்கான் ஜிந்தாபாத்!!
      வெஜெடேரியனிசம் வாழ்க என் கூவுங்கள்!!

      நன்றி!!

      Delete
    2. சிட்டிசன்,

      பரவாயில்லை,நான் புரிந்து கொண்டேன்,மனித உடல் மாமிசம் செரிக்கவல்லது,அவ்வளவே,இதனை நான் ஆரம்பத்தில் இருந்தே பாகவதரிடம் சொல்லி வந்தேன்.

      பாகவதர் தான் அறிவியல் பூர்வமாக மனிதன் சைவ பட்சிணி ,ஆதாரம்னு ஒரு பதிவு போட்டிருந்தார் :-))

      இப்பொழுது என்னுடைய சந்தேகம் எல்லாம் அவரோட அறிவியல் அறிவு எத்தகையது என்பதே :-))

      Delete
    3. மாமூல் மாமு,

      குஜராத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தல்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலும் மோடியின் கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது என்று நீங்களே பதிவு போட்டிருக்கிறீர்கள், அப்படியானால் அவர்களும் மோடியின் ரசிகர்களா?

      Delete
    4. மாப்ளே,
      அப்படிப் பதிவு எழுதினால், மூமின்களை ஓட்டுப் போட விடாமல் மோடி தடுத்தார் என நம்ம சகோ இப்பூ சொல்லிவிட்டார்!! ஹி ஹி
      மூமின்கள் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே!!

      நன்றி!!

      Delete
  39. Salaam das,

    Read about the migration of monarch butterflies and the questions it raises towards evolution.

    http://viralnuni.blogspot.com/2012/11/monarch-butterfly-questions-evolution.html

    ReplyDelete
  40. பரிணாமவாதிகளிடம் ஒரு கேள்வி :

    பொதுவாக பரிணாமவாதிகளிடம் அல்லது நாத்திகர்களிடம் கேள்வி என்பது நமக்கு மிகவும் பிடித்து போகிறது..அந்த வகையில் ஒரு கேள்வியை கேட்போம்...!

    அமெரிக்காவின் தாமஸ் ஆல்வா எடிசன் பல்பை கண்டறிந்தார் என்றால் அது அவருக்கு மட்டுமே வந்த சிந்தனை இல்லையா..? அவரை போன்ற மனிதர் உலகெங்கிலும் இருந்தனர் தானே ஆனாலும் மற்றவர்களுக்கு வரவில்லை..!! ஆனால் இங்கு பாருங்கள் தனக்கு மேல் கடவுள் உண்டு என்று ஒரு நாட்டவரின் கற்பனை என்று வைத்து கொண்டாலும் உலகின் பல்வேறு பகுதியிலும் இன்னும் சொல்ல போனால் உலகம் முழுவதும் தனக்கு மேல் கடவுள் என்று ஒருவர் உண்டு என்றும் அவரை வழிபட வேண்டும் என்றும் வேதம் கொண்டும் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனரே ?? அந்தந்த பகுதிக்கு தகுந்தவாறு கடவுளின் பெயர் மற்றும் வழிபாடும் முறை மட்டுமே மாறுகிறது...! இங்கு ஒரு தரப்பின் கற்பனை என்றால் ஒரு பகுதியோடு முடிந்து இருக்கும் அதாவது தாமஸ் ஆல்வா எடிசனின் சிந்தனை போல..ஆனால் கடவுள் சிந்தனையோ உலகம் முழுவதும் பண்டைய காலம் தொட்டு இருந்து வந்துள்ளதே..!!

    ஆக, இது அனைத்து தரப்பு மக்களிடத்திலும் பொதுவான யாராலோ சொல்லப்பட்டதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை தானே !!!

    சிந்திக்க மாட்டீர்களா..??????

    ReplyDelete
    Replies
    1. @நாகூர் மீரான்

      வருகைக்கு மிக்க நன்றி சகோ!! நீங்க எழுதுவதை தினமும் படிச்சுகிட்டே இருக்கணும் போலத் தோணுது. இவ்வளவு அழகாக எழுத்தும் நீங்க என்னைக்கு வலைப்பூ ஆரம்பிச்சு என்னைப் போன்ற உங்கள் வாசகர்களின் ஏக்கத்தை தீர்த்து வைப்பீர்கள்? தொடர்ந்து கருத்திட்டு அடித்து ஆடுங்கள்!!

      Delete
    2. வேதாந்தி மீரான் அவர்களே,

      //இங்கு ஒரு தரப்பின் கற்பனை என்றால் ஒரு பகுதியோடு முடிந்து இருக்கும் அதாவது தாமஸ் ஆல்வா எடிசனின் சிந்தனை போல..ஆனால் கடவுள் சிந்தனையோ உலகம் முழுவதும் பண்டைய காலம் தொட்டு இருந்து வந்துள்ளதே..!! //

      மிகவும் நல்லக்கருத்து,

      ஆடு,மாடு,பன்றி இறைச்சி உண்டு,சாராயம் குடித்து சிலையை வணங்குவது என்பது தனிப்பட்ட ஒருவரின் சிந்தனை என்றால் அவரோடு முடிந்திருக்கும், உலகம் முழுக்க ஏற்கப்பட்டுள்ளது,அப்படியானால் அத்தகைய சிந்தனை உலகம் முழுவதும் பண்டைய காலம் தொட்டு இருந்திருக்கிறது,எனவே அதனை மறுக்கலாமா, வாரும் பன்றி வறுவலும்,சாராயமும் குடித்து சிலையை வணங்குவோம், கூட பாகவதரையும் அழைத்து வாரும் :-))

      ஏக இறைவன் சுடலை மாடன் வாழ்க :-))

      மாமிசம் உண்பது தவறு தாவர உணவு தான் சரி என்பவர்கள் இச்சுட்டியை பார்க்கவும்,

      http://en.wikipedia.org/wiki/Carnivorous_plant

      ஹி...ஹி தாவரங்களும் அசைவம் சாப்பிடுகிறது,இதுல மனிதனை அசைவம் சாப்பிடுற மாதிரி படைக்கலைனு சொல்லும் முட்டாள்களை என்ன செய்ய?

      Delete
    3. \\ஹி...ஹி தாவரங்களும் அசைவம் சாப்பிடுகிறது,இதுல மனிதனை அசைவம் சாப்பிடுற மாதிரி படைக்கலைனு சொல்லும் முட்டாள்களை என்ன செய்ய?\\ திரும்பத் திரும்ப கேனை மாதிரி உளரக் கூடாது. மாமிசம் மனிதனுக்கானது அல்ல. அதை மறுக்க வேண்டுமானால் நீ ஒரு ஆயிரம் பேரோடு வா, நாங்க ஆயிரம் பேரோடு வருகிறோம். நீங்க எல்லோரும் ஆட்டை, மாட்டை, நாயை உங்க கையாலேயே பிடித்து, கழுத்து குரல்வளையை கடித்து அப்படியே இரத்தத்தைக் குடித்து, பச்சையா உங்க பல்லாலே மாமிசத்தை தின்று ஆரோக்கியமா வாழ்ந்து காண்பியும். ஏன்னா சிங்கம் புலி அப்படித்தான் சாப்பிடுது. உம்மிடம் வரும் வியதி காரர்களுக்கும் அப்படியே செய்து அவர்கள் நோய்களையும் குணப்படுத்தி காண்பியும்.

      நாங்கள் எங்கள் கைகளாலேயே பழங்களைப் கடித்து சாப்பிட்டு ஆயிரம் பேரும் ஆரோக்கியமா வாழ்ந்து, எங்ககிட்ட வரும் நோயாளிகளுக்கும் சமைக்காத உணவு கொடுத்து நாள்பட்ட பல நோய்களையும் சரிப் படுத்தி காட்டுகிறோம்.

      அப்புறம் பார்ப்போம் எது உமக்கு ஏற்ற உணவுன்னு.

      உன்னோட உணவுன்னா சாகும் வரை உண்ணனும் வெண்ணைகளா... மாரடைப்பு வரும் வரை தின்பானாம், அப்புறமா விட்டு விடுவானாம். என்ன வெங்காயக் கதைடா இது பித்தலாட்டக் காரப் பசங்களா?

      Delete
    4. பாகவதரே ,

      //மாமிசம் மனிதனுக்கானது அல்ல. //

      இதுக்கு என்ன அறிவியல் பூர்வமான ஆதாரம் இருக்கு?

      உலகில் பலகோடி பேர் அதுவும் சைவம் உண்பவர்களை விட அசைவம் உண்பவர்கள் அதிகம் ,ஆகாத உணவுனா சாப்பிட்டு செத்து இருக்க மாட்டாங்களா?

      ஓய் காமென் சென்ஸ் கிலோ என்ன விலை தெரியுமா?

      மனிதனுக்கு தாவர உணவுனு கூமுட்டைத்தனமா நீர் சொல்லுரீர் ,ஆனால் தாவரமே அசைவம் உண்ணுதேனு சொன்னேன் அதுக்கு என்னய்யா பதில்?

      இப்போ நாகூர் மீரானை பீஃப் பிரியாணி துண்ணக்கூடாதுனு சொல்லிப்பாரும் :-))

      Delete

    5. \\இதுக்கு என்ன அறிவியல் பூர்வமான ஆதாரம் இருக்கு?\\ க்ர்ர்ர்ர்ர்ர்ர்........ தூ.......... என்ன எழவெடுத்த மனுஷன்யா நீரு? முன்னரே மனிதனின் உடல்கூருகளை ஒப்பிடும் சுட்டியைக் குடுத்தேனே பார்க்கவில்லையா? அடக் கன்றாவிய, உனக்கு இங்கிலீஸ் வேற தெரியாதுல்ல. என்ன பண்ணி தொலையறது. கொஞ்சம் வெயிட் பண்ணு அதை தமிழில் ஒரு பதிவா போடுறேன். கர்மமையா........

      \\உலகில் பலகோடி பேர் அதுவும் சைவம் உண்பவர்களை விட அசைவம் உண்பவர்கள் அதிகம் ,ஆகாத உணவுனா சாப்பிட்டு செத்து இருக்க மாட்டாங்களா?\\ ஏன் பலகோடி பேரு இஸ்லாமியரா கூடத்தான் இருக்காங்க, நீர் எதற்காக அவர்களை எதிர்ப்பதே தொழிலா வச்சிருக்கீரு? கூட்டம் போனா அது சரிதான் என்றால் நீரும் ஒரு குல்லாயை வாங்கி மாட்டிகொண்டு தொழுமைய்யா.........

      \\ஓய் காமென் சென்ஸ் கிலோ என்ன விலை தெரியுமா? \\ இருவது ரூவா சொன்ன ஆளுதனேய்யா நீரு?

      \\மனிதனுக்கு தாவர உணவுனு கூமுட்டைத்தனமா நீர் சொல்லுரீர் ,ஆனால் தாவரமே அசைவம் உண்ணுதேனு சொன்னேன் அதுக்கு என்னய்யா பதில்?\\ சைவம் அசைவம் என்று ஒரு மசிரும் இல்லை சமைக்காம உப்பு போடாம நீர் பண்ணி சாப்பிடுவதை வேண்டுமானாலும் தின்னும்.

      \\இப்போ நாகூர் மீரானை பீஃப் பிரியாணி துண்ணக்கூடாதுனு சொல்லிப்பாரும் :-))\\ நான் ஏன் கருத்தைச் சொல்றேன் அதுக்கு ஏனய்யா அவரை இவரை இழுக்கிரீறு.

      Delete
    6. பாகவதரே,

      அடத்தூ உம்ம அறிவு அம்புட்டு தானா, தாவரமே அசைவம் உண்ணுதுனு சுட்டிப்போட்டேனே படிக்கலையா, இல்லை புரியலையா?

      நான் மனிதனய்யா சமைக்காம,உப்பு போடாம சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை,அப்படி சாபிட்டாலும் வாழ முடியும்.

      விலங்குகளையே உதாரணம் காட்டுறீர்,அப்போ விலங்கு போல ஆடை உடுத்தாமல்,இன்ன பிறவும் செய்வீரானு கேட்டேன் பதிலே சொல்லவில்லையே ஏன்?

      ஒரு பசு மாடு கன்று போடுது ,அக்கன்று வளர்ந்து,பெரிய காளை மாடு ஆனவுடன்,ஈன்ற அதே பசு மாட்டுடன் உறவு கொண்டு குட்டியை மீண்டும் உருவாக்கும், அப்போ உம்ம வாழ்க்கை அப்படித்தானா ,என்ன கர்மம் புடிச்ச வாழ்க்கையா :-))


      நானெல்லாம் அறிவியல் பூர்வமா மனிதன்னு நம்புகிறேன்,எனவே மனிதன் போல வாழ்கிறேன்,நீரும் விலங்கின வாழ்க்கை வாழாமல் மனிதனாக வாழ முயற்சி செய்யவும் :-))

      அசைவ உணவு குறித்த அறிவியல் பற்றியே தெரியவில்லை, இதில் நீர் பேசும் பரிணாமவியல் எப்படி சரியால இருக்கும் :-))

      Delete
  41. சகோ.தாஸ்

    ஊக்கத்திற்கு மிக்க நன்றி சகோ. !!! எல்லா புகழும் இறைவனுக்கே.!! இங்கு ஒன்றை கவனிக்கலாம் , கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கற்பனையில் வாழ்கிறார்கள் என்று பரிணாம வாதிகள் சொல்வார்கள்..! ஆனால் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் இப்படி நடந்தது என்று இவர்கள் மட்டும் ஆதாரப்பூர்வமாக (!!) பேசுவார்கள்..கேசரி அல்வாவாக மாறியது என்கிறார்கள்....ஆனால் கேசரி வேறு சுவை உடையது அல்வா வேறு சுவை உடையது...! இவர்கள் கேசரியையும் காண்பிப்பார்கள் அல்வாவையும் காண்பிப்பார்கள்..இடையில் மாறியதாக சொல்லப்படும் ...

    90 சதவிதம் கேசரி 10 சதவிதம் அல்வா..

    80 சதவிதம் கேசரி 20 சதவிதம் அல்வா ... இப்படியே போய்

    10 சதவிதம் கேசரி 90 சதவிதம் அல்வா .. இவ்வாறு மாறிய " புதுவகையான சுவை " உடைய பலகாரத்தை இவர்கள் காட்ட மாட்டார்கள்...! காட்டவும் முடியாது..இருந்தால் தானே காட்டுவதற்கு ....ஆனால் பேச்சு மட்டும் நல்லா வக்கனையா இருக்கும்..!!

    ReplyDelete
    Replies
    1. \\கேசரி அல்வாவாக மாறியது என்கிறார்கள்.\\ இந்தப் பதிவின் மெயின் கருத்தும் இதுதான். இதுவாவது பரவாயில்லை ஸ்கூட்டர் ஒன்று கொஞ்சம் கொஞ்சமா விமானமா மாறியது என்கிறார்களே, அதை என்ன செய்வது!!

      Delete
    2. //அமெரிக்காவின் தாமஸ் ஆல்வா எடிசன் பல்பை கண்டறிந்தார் என்றால் அது அவருக்கு மட்டுமே வந்த சிந்தனை இல்லையா..? அவரை போன்ற மனிதர் உலகெங்கிலும் இருந்தனர் தானே ஆனாலும் மற்றவர்களுக்கு வரவில்லை..!!//

      http://en.wikipedia.org/wiki/Incandescent_light_bulb

      In addressing the question of who invented the incandescent lamp, historians Robert Friedel and Paul Israel[3] list 22 inventors of incandescent lamps prior to Joseph Swan and Thomas Edison. They conclude that Edison's version was able to outstrip the others because of a combination of three factors: an effective incandescent material, a higher vacuum than others were able to achieve (by use of the Sprengel pump) and a high resistance that made power distribution from a centralized source economically viable.

      ***
      சகோ மீரான் கொஞ்சம் த்கவல் அறிய விக்கிபிடியா படியுங்கள்.

      எந்த செயலுக்கும் முந்தைய நிகழ்வுகளில் இருந்துபலர் முயற்சித்து, சிலர் வெற்றியடைவதே வரலாறு.
      6ஆம் நூற்றாண்டு அரேபியாவில் பல் இறைத்தூதர்கள் இருந்தார்[ எ.கா முசலைமா இரகுமான் என்னும் ஏக இறைவனை முன் நிறுத்தினார்] அதில் முகமது வெற்றி பெற்றார். எப்படி என்றால் ஹி ஹி!!

      Musaylimah shared verses purporting them to have been revelations from God and told the crowd that Muhammad had shared power with him.[2] Musaylimah even referred to himself as Rahman,[1] which suggests that he may have attributed some divinity to himself. Thereafter, some of the people accepted him as a prophet alongside Muhammad.

      ..

      http://en.wikipedia.org/wiki/Musaylimah

      Delete
    3. சகோ.சார்வாகன்

      //எந்த செயலுக்கும் முந்தைய நிகழ்வுகளில் இருந்துபலர் முயற்சித்து, சிலர் வெற்றியடைவதே வரலாறு.
      6ஆம் நூற்றாண்டு அரேபியாவில் பல் இறைத்தூதர்கள் இருந்தார்[ எ.கா முசலைமா இரகுமான் என்னும் ஏக இறைவனை முன் நிறுத்தினார்] அதில் முகமது வெற்றி பெற்றார். எப்படி என்றால் ஹி ஹி!!//

      பாருங்கள் ...நீங்கள் வரலாற்று பிழை செய்கிறீர்கள்...ஆறாம் நூற்றாண்டில் தன்னை இறை தூதர் என்று பிரகடனப்படுத்திய முதல் மனிதர் நபிகள் நாயகம்..! பின்பு நபிக்கு கிடைத்த மரியாதையை கண்டு நப்பாசை கொண்டவர்கள் நபிகளின் காலத்திலேயே இருவர் இருந்தனர்..!

      3620. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
      பெரும் பொய்யனான முஸைலிமா, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் (யமாமாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தான். 'முஹம்மது தமக்குப் பின் (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்குக் கொடுத்தால் தான் நான் அவரைப் பின்பற்றுவேன் (இல்லையென்றால் அவரை ஏற்க மாட்டேன்)" என்று கூறத் தொடங்கினான். அவன் தன் குலத்தார் நிறையப் பேருடன் மதீனாவிற்கு வந்திருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ்(ரலி) அவர்களுடன் அவனிடம் சென்றார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டையின் துண்டு ஒன்று இருந்தது. அவர்கள் முஸைலிமா தன் சகாக்களுடன் இருக்க, அவனருகே சென்று நின்று கொண்டு, 'இந்த (பேரீச்ச மட்டையின்) துண்டைக் கூட நீ என்னிடம் கேட்டாலும் உனக்கு நான் இதைத் தரமாட்டேன். அல்லாஹ் உன் விஷயத்தில் எடுத்துள்ள முடிவை (- உன் நோக்கத்தில் நீ வெல்ல முடியாது என்பதை -) நீ மீறிச் சென்றுவிட முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்துப் புறங்காட்டிச் சென்றால் அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான். உன் விஷயம் தொடர்பாக எனக்கு எவன் (கனவில்) காட்டப்பட்டானோ அவன்தான் நீ என்று கருதுகிறேன்" என்று கூறினார்கள்.
      Volume :4 Book :61

      3621. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை என்னைக் கவலையில் ஆழ்த்தின. உடனே, 'அதை ஊதி விடுவீராக!" என்று கனவில் எனக்கு (இறைக் கட்டளை) அறிவிக்கப்பட்டது. அவ்வாறே, நான் அவற்றை ஊதி விட, அவையிரண்டும் பறந்து போய்விட்டன. நான் அவ்விரண்டும் எனக்குப் பின் தோன்றவிருக்கிற (தம்மை இறைத்தூதர்கள் என்று வாதிக்கப் போகும்) இரண்டு பொய்யர்கள் என்று (அவற்றுக்கு) விளக்கம் கண்டேன். அவ்வாறே அவ்விருவரில் ஒருவன் (அஸ்வத்) அல்அன்ஸிய்யாகவும் மற்றொருவன் யமாமா வாசியான பெரும் பொய்யன் முஸைலிமாவாகவும் அமைந்தார்கள்.
      என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
      Volume :4 Book :61

      இன்னும் பாருங்கள்....வரும் காலத்தில் முப்பது பொய்யர்கள் தன்னை இறைதூதர் என்பார்கள் என்றும் முன்னறிவிப்பு...!

      7121. ' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
      ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.
      Volume :7 Book :92

      சிந்தியுங்கள் சார்வாகன் !அப்பறம் இஸ்லாமை இல்லாமல் ஆக்குவது முடிகின்ற காரியம் அல்லவே..!!

      Delete
    4. சகோ மீரான்,
      பரிணாமம்,எடிசனைக் கைவிட்டு, நபி(சல்) ஐ காப்பாற்ற கிளம்பி விட்டீர்களா!!.

      யூத மதத்தில் மேசியா வருவார் என ஒரு நம்பிக்கை எதிர்பார்ப்பு உண்டு, ஈசா(அலை) என்னும் இயேசுவை அவர்கள் ஏற்கவில்லை, முகம்து(சல்)ம் அதுபோன்றவர் என்னும் கூற்றையும் யூதர்கள் ஏற்கவில்லை.

      இந்த இருவரும் பிறரால் ஏற்கப்பட்டு வெற்றி பெற்றவர்கள், வரலாற்றில் நின்றவர்கள். ஆனால் இந்த விக்கிபிடியா பாருங்கள் எத்தனைப் பேர் இறைத்தூதர் ஆக முயற்சித்தார்கள் என!!

      http://en.wikipedia.org/wiki/Jewish_Messiah_claimants

      http://en.wikipedia.org/wiki/Messiah
      The Qur'an states that Jesus, the Son of Mary (Arabic: Isa ibn Maryam), is the Messiah and Prophet sent to the Children of Israel.[Quran 3:45] Muslims believe Jesus is alive in Heaven and will return to Earth to defeat the Masih ad-Dajjal (false Messiah),[5] a figure similar to the Antichrist in Christianity, who will emerge shortly before him before Yawm al-Qiyāmah ("the Day of Resurrection"). After he has destroyed al-Dajjal, his final task will be to become leader of the Muslims. Isa will unify the Muslim Ummah (the followers of Islam) under the common purpose of worshipping Allah alone in pure Islam, thereby ending divisions and deviations by adherents. Mainstream Muslims believe that at that time Isa will dispel Christian and Jewish claims about him

      பல்வேறு வகைகளில் ,சூழலுக்கு பொருந்துபவை வெற்றி பெறுவதே இயற்கைத் தேர்வு.

      இந்தக் கோட்பாடு இறைத்தூதர்களுக்கும் பொருந்துகிறதா!!

      **

      பரிணாமம் ஒருவேளை உண்மை என்றால் இஸ்லாம் என்பது 100% தவறு சொல்லுங்கள் ஆம்/இல்லை

      இதற்கு பதில் அளிக்க மறுத்தால் பரிணாம எதிர்ப்பில் உண்மை இல்லை என்பதே பொருள்.

      நன்றி!!!

      Delete
  42. மாப்ளே தாசு, சகோ மீரான்,

    நாங்கள் கேசரி, அல்வாவாக மாறியது என் சொல்வது இல்லை. இரண்டுக்கும் மூலம் சர்க்கரை என்கிறோம்.மூல சர்க்கரையுடன் வெவ்வேறு பொருள்கள் கலந்து வெவ்வேறுசூழலில், வெவ்வேறு கால அளவுகளில் சமைக்கப்பட்டு வெவ்வேறு பொருள்கள் ஆகின்றன என்பதே சரியான புரிதல்.

    இப்படிப் தவறான புரிதல் வைத்துக் கொண்டு பரிணாமம் புரியாது.
    இங்கு கேசரி,அல்வா சரியாக வரையறுக்கப்பட்டவை. மூலப்பொருள்களும் அறிவோம்.

    ஒரு உணவகத்தில் மொத்த்மாக இருக்கும் இருக்கும் மூலப் பொருள்கள் கொண்டு ஒரே சமயத்தில் , பல உணவு வகைகள் தயாராவதே இல்லையா???

    அதுமட்டும் அல்ல, அல்வா,கேசரி உண்ட பின் பயணிக்கும் பாதையும் எடுக்க வேண்டும்.பரிணாமம் என்பது நீண்ட கால,சான்றுகளின் மீது அமைக்கப்பட்ட‌ வரலாற்றுப் பார்வை!!
    **
    பெரும் பரிணாமம்[ ஒரு மூல உயிரி ,சில உயிரிகளாக பிரிதல்] நிகழ ஆகும் காலம்[ மில்லியன் ஆண்டுகள்] அதிகம்.

    இப்படிப்பட்ட சூழலில் எந்த மாதிரியான ஆதாரம் இருக்க முடியும்? எப்படி பரிசோதித்து ஏற்க முடியும் என்பதே சரியான கேள்வி.

    ஒரு உயிரியின், வெவ்வேறு உயிரிகளின் வரையறை என்பதன் கேள்விக்கு ஆஸிக் அகமது பதில் அளிக்காமல் ஏன் நழுவுகிறார் என்பதை சிந்திக்க மாட்டீர்களா?

    அறிவியலின் 380 கோடி வரலாற்றுக்கு படிமம், ஒப்பீட்டின் அடிப்படை பரிணாம மரம் உண்டு. இதனை த்வறு என் ஆய்வுரீதியாக நிரூபிக்க முயற்சிக்கலாம். சொல்லும் தகவல்களை சரிபார்க்கலாம்.

    ஜீனோம் மாற்றம் உரு அமைப்பை மாற்றுவது பல் பரிசோத்னைகளில் ஆய்வகங்களில் நிரூபிக்கப் பட்ட ஒன்று.

    ஒரு உயிரி சில உயிரிகளாக பிரிவதையும் ஆய்வகத்தில் செய்ய முயற்சித்து ,சில பலன் அளிக்கும் முடிவுகளும் உண்டு.[ பெரும் பரிணாமம் நீண்ட காலம் நீண்ட காலம் நடக்கும் செயல்..]


    ஆகவே எப்படி ஒரு நீண்ட கால நிகழ்வுக்கு[ பெருவிரிவாக்கம் போல்] பரிணாமத்திற்கு உள்ள ஆதாரங்கள் போதுமானவை. இன்னும் ஆய்வுகள் [நிரூபிக்க அல்ல!!, வாழ்வின் இரக்சியங்களை அவிழ்க்க‌]தொடர்கிறது.

    சகோ மீரான்,

    நீங்க சரியா தக்கிய பண்ரீங்க!!ஐ லவ் யு!!

    வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்பதும் குரானின் படி தவறு. ஆகவே பரிணாமம் என்பது நிரூபிக்கப்பட்டால் இஸ்லாம் என்பது 100% தவறாகி விடும், அதன் பிறகு இஸ்லாம் உலகில் இருக்கவே கூடாது என் ஒத்துக் கொள்வீர்களா?

    நன்றி!!!

    ReplyDelete
  43. சலாம்,

    மிக நீண்டதாய் இருந்தாலும் நல்லதொரு பதிவு.
    வாய்ப்புக்கிடைத்தால் தொடர்கிறேன்

    வாழ்த்துகள் சகோ தாஸ்!

    ReplyDelete
    Replies
    1. சகோ குலாம்,
      ஸலாம் உங்களுக்கு மூன்று கேள்விகள்.

      1. சகோ ஆஸிக், சுவனப் பிரியன் பதிவில் இல்லாத,இப்பதிவில் மட்டும் இருக்கும் புது விடயம் என்ன?

      2.பிற மதப் புத்தகங்களில் இல்லாத,குரானில் மட்டும் இருக்கும் புது [நல்ல ஹி ஹி!!]விடயம் என்ன?

      3. வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்பது குரானின் படி தவறா? ஆம்/இல்லை

      பதில் சொல்லலாம் இல்லையேல் வழக்கம் போல் ஹி ஹி

      ஏக இறைவன் மிகப் பெரியவன்!!

      நன்றி!!!

      Delete
  44. பரிணாமத்தை முஸ்லிம்கள் ஏன் நிராகரிக்கின்றனர் :

    //பரிணாமம் ஒருவேளை உண்மை என்றால் இஸ்லாம் என்பது 100% தவறு சொல்லுங்கள் ஆம்/இல்லை

    இதற்கு பதில் அளிக்க மறுத்தால் பரிணாம எதிர்ப்பில் உண்மை இல்லை என்பதே பொருள்.//

    பரிணாமத்தை முஸ்லிம்கள் ஏன் நிராகரிக்கின்றனர்.? சுருக்கமாக மட்டும் இங்கு தருகிறேன்...!

    பரிணாமம் என்பது கடவுளை நிராகரிக்கும் கூட்டத்தால் சொல்லப்படும் ஒரு வாதம்..எப்படி என்றால் பண்டைய காலத்தில் ஒரு வேலையை செய்ய ஆட்களின் தேவை இருந்தது ..ஆனால் தற்போது ஆட்டோமேடிக் இயந்திரங்கள் மூலம் மனிதர்களின் தேவை வெகுவாக குறைந்து விட்டது...அந்த வேலையை செய்ய மனிதர்கள் தேவை இல்லை..அது போன்றே ஆட்டோமெடிக்காக உயிரினம் தோன்றியது என்று சொன்னால் அங்கு கடவுளின் தேவை இருக்காது.! இதை இறை நம்பிக்கையாளர்கள் ஏற்க முடியாது ...இது பொதுவான எல்லா மத இறை நம்பிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும்.

    இங்கு முஸ்லிம்கள் ஏன் நிராகரிக்கிறோம்..? முஸ்லிம்கள் ஒன்றை நம்ப முதலில் இஸ்லாம் சொல்லி இருக்க வேண்டும்.. ! குர்ஆனோ , ஹதீஸ்களோ ஒன்றிலிருந்து மாறி ஒன்று வந்தது என்று சொல்லவில்லை..! மாறாக இது இறைவனின் தன்மையை கேவலப்படுத்துவதாக உள்ளது ...இறைவன் கூறுகிறான்..!

    6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும்.

    ஒரு உயிரினம் வருவதற்கு 350 கோடி ஆண்டுகள் உக்காந்து பார்த்து கொண்டு இருந்தால் அவர் எப்படி குறைகளற்ற கடவுளாக இருப்பார்..! ஆகு என்றால் உடனடியாக ஆகிவிடும் தன்மை உள்ளவர்தான் நாம் கேட்டால் நமக்கு தேவையானதை உடனே தரமுடியும்..ஒவ்வொன்றுக்கும் 350 கோடி ஆண்டுகள் காத்திருக்க முடியுமா..? சுருக்கமாக இது இறையை நிராகரிக்கும் ஒரு தத்துவமே..! அதனால் இஸ்லாம் ஒரு போதும் இதனுடன் ஒத்து போகாது...! பரிணாமம் உண்மை என்றும் உங்களால் கடைசி வரை நிரூபிக்கவும் இயலாது..! காரணம் முதல் உயிரி எப்படி வந்தது என்பதற்கு பதில் வரும் வரை முடிவும் வராது..!

    ஆனால் இஸ்லாம் தெளிவாக உள்ளது...அதனால் இதில் பரிணாமம் உண்மை என்று நிரூபிக்கப்படுவதற்கோ, இஸ்லாம் 100 % இல்லை என்று நிரூபிப்பதற்கோ வாய்ப்பே இல்லை..! ஐ ஆம் சாரி !

    ReplyDelete
    Replies
    1. சகோ மீரான்,
      கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்ல வேண்டும் நபி(சல்) காட்டிய வழியில் தாக்கியா செய்யக் கூடாது!!

      இஸ்லாம் சரி எனதற்கு எந்த அகழ்வாய்வு,மொழியியல் ஆதாரம் கிடையாது!!.
      அது வேறு பிரச்சினை!! அப்பாலிக்கா பார்ப்போம்!! பரிணாமத்தின் உண்மைத் தனமை மீது சார்ந்து உங்கள் இறை நம்பிக்கையா என்பதே கேள்வி
      **
      நான் தெளிவாக சொல்கிறேன்.
      ஒருவேளை குரான் இறைவேதம் என்றால் பரிணாமம் 100% தவறு!!
      இதை ஒத்துக் கொள்வதில் எனக்கு பிரச்சினை இல்லை!!

      அதே போல்
      பரிணாமம் உண்மை என்றால் குரான் 100% தவறு என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்!!!

      வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்பது குரானுக்கு முரண் ஆனது!! ஆம்/இல்லை

      அகமதியா மூமின்கள் இக்கொள்கை கொண்டு இருக்கிறார்.
      http://en.wikipedia.org/wiki/Ahmadiyya_views_on_evolution

      The Ahmadiyya Movement is an offshoot of Islam that universally accept in principle the process of evolution, albeit divinely guided, and actively promotes it.[1] Over the course of several decades the movement has issued various publications in support of the scientific concepts behind the process of evolution, and frequently engages in promoting how religious scripture supports the concept.
      **
      ஆகவே பரிணாமம் உண்மை என்றால் குரான் தவறு,அகமதியாக்கள் செய்வது தக்கியா மட்டுமே என சொல்லவும்!!

      குரானும்,ப‌ரிணாமமும் ஒன்றுக் கொன்று நேர் எதிரானது!!ஆம்/இல்லை

      அதாவது ஆதம்(அலை) 90 அடி உயரத்தில் இப்போதைய மனித உருவில் மட்டுமே ____ [நீங்க சொல்லனும்] வருடம் முன்பு படைக்கப் பட்டார்!!

      ஒவ்வொரு விலங்கும் எதுவும் மாறுவதே இல்லை!!

      விளக்கவும்!!

      நன்றி!!


      Delete
  45. சகோ.சார்வாகன் !

    உலகில் எத்தனையோ நம்பிக்கைகள் உண்டு..அதில் பரிணாமமும் ஒன்று ..எப்படி என்றால் பேய் உண்டு என்று நம்புபவர்கள் இரவில் பார்ப்பதை எல்லாம் ஆதாரமாக கொள்வார்கள்...வெள்ளை துணி அசைந்தது..வவ்வால் சத்தம் போட்டது..தூரத்துல ஒரு உருவம் போவது போல தோன்றுகிறது...இவ்வாறு சாதரணமாக நடப்பது எல்லாத்தையுமே பேய் இருக்கிறது என்று ஆதாரப்படுதுவார்கள்.. அது போல அறிவியல் சான்றுகளை எல்லாம் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளவே பரிணாமவாதிகள் முயல்கின்றனர்..!

    ஆரம்பம் ஒன்று இருந்தால்தான் முடிவு என்று ஒன்று இருக்கும்..! முதல் உயிரி பற்றிய தெள்வு இல்லாத பரிணாம பாடம் முடிவுக்கே வராது... இது தெரிந்திருந்தும் நீங்கள் தான் தாக்கியா செய்கிறீர்கள்..பரிணாமம் இருந்தால் இஸ்லாம் இல்லை என்றோ இஸ்லாம் இருந்தால் பரிணாமம் இல்லை என்று ஒத்துக்கொள்கிறேன் என்று நீங்கள் சொல்லும் அளவுக்கு இஸ்லாம் பரிணாம எதிர்ப்பு பேசி வளரவேண்டிய அவசியம் எங்கேனும் உண்டா.? இஸ்லாத்தை உண்மை படுத்த எத்தனையோ விசயங்கள் உண்டு..பரிணாமத்தை வீழ்த்தி வெற்றி பெற ஒன்றும் இல்லை..பரிணாமம் இடையில் தோன்றிய ஒரு தத்துவம் அவ்வளவே.! இஸ்லாமும் பரிணாமமும் சரி சமமானது அல்ல.! அதனால் இரண்டையும் போட்டு குழப்பவேண்டாம்..!

    இப்போது சற்று போரடிக்கிறது...இன்னொரு பதிவில் மற்றதை பார்ப்போம்..இறைவன் நாடினால் !


    ReplyDelete
    Replies
    1. பேய் நம்பிக்கை-அதற்க்கு ஆதாரம் வெள்ளைத் துணி அசைதல்- அதே மாதிரி பரிணாமம் மீது நம்பிக்கை............அதற்க்கு இயல்பான நிகழ்வுகளை ஆதாரமாக்கல்!! ஆஹா ஆபாரம், சகோ!!

      Delete
    2. சகோ மீரான்& உலகில் உள்ள பரிணாம எதிர்ப்பு மூமின்களே,

      உங்கள் யாருக்குமே பரிணாமம் உண்மை எனில் குரான் என்பது 100% இறைவேதம் அல்ல, வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்பது குரானுக்கு முரண் ஆனது ,அதுதாக்கியா மட்டுமே என கொள்கை அளவில் ஒத்துக் கொள்ள தைரியம் இல்லை!!

      இதுவே நம் சவால்!!

      உலக மூமின்கள் அனைவரும் பரிணாமம் உண்மை என ஒவ்வொருவருக்கும் தோன்றும் நாளில் இஸ்லாமை விட்டு விலகிவிடுவோம் என்றால் எங்களுக்கு பணி எளிதாகிவிடும் !!!

      சரியா!!! ஹி ஹி

      எனக்கு ஒருவேளை பரிணாமம் தவறு என பட்டால் மாற்றுக் அறிவியல் கொள்கையை சான்றுகள் அடிப்படையில் பரிசீலித்து ஏற்பதில் தயக்கம் இல்லை!!

      அது என்னவோ ஏக இறைவன், இறுதிதூதர், பின்பற்றும் மந்தைகள் யாருக்கும் ஆம்/இல்லை என பதில் சொல்ல நழுவுவதே மார்க்கம் ஆகிவிட்டது!!


      நன்றி!!

      Delete
    3. சகோ.சார்வாகன் !

      அடடா...மறுப்பு எழுதுவதே நமக்கு வேலை என்றாகி விட்டது போல..இதில் எங்கிருந்து நமது கருத்தை சொல்ல..! எத்துனை வாட்டிதான் சொல்வது பரிணாமம் உண்மை என்று நிரூபிக்கவே இயலாது..எப்படி என்றால் கடவுளை கண்டால்தான் ஒப்புக்கொள்வேன் என்று கூறுவது எவ்வாறு நடக்க இயலாத நிகழ்வோ ( பாருங்கள் ..இதற்க்கு நிகழ்தகவு பூஜ்ஜியம் ) அதே போல் நடக்காத நிகழ்வுதான் முதல் உயிரி தோன்றியதை அறிவியல் துணை கொண்டு அறிவது ..! முதல் உயிர் ஒன்று எப்படியோ தோன்றி இருக்கும் என்று முடிவுக்கு வந்தாலும் அதே போல தான் அனைத்து உயிர்களும் வந்திருக்கும் என்று முடிவுக்கு வரலாம்..! மிக மிக முக்கியமான விஷயத்திலேயே கோட்டை விட்டு விட்டு பரிணாமம் தான் உண்மை என்ற முடிவுக்கு வர முடியும் என்று நம்பினால் என்னத்த சொல்ல.!

      அடிப்படையே சரி இல்லாத பரிணாமமும் அஸ்திவாரத்தை பலமாக கொண்டுள்ள இஸ்லாமும் சரி சமமாகாது ..!

      *********************************************

      சகோ.தாஸ்

      இப்படியே இன்னும் பரிணாமம் பற்றிய தகவல்களை மெருகேற்றுங்கள்..இறைவன் நாடினால் தொடர்வோம் ..!!

      நன்றி !!

      Delete
    4. சகோ மீரான்,

      பரிணாமம் என்பது அறிவியல்,வஹாபி இஸ்லாம் என்பது மனித விரோதக் கொள்கை,இரண்டும் சமம் ஆகாது. அதுவும் தெரியும் என்றாலும், இரண்டும் ஒரே சமயம் ஏற்கும் நிலை கூடாது என்கிறேன்.

      பரிணாமம் உங்களைப் பொறுத்தவரை 100% பொய்யான, உண்மை ஆக முடியாத கொள்கைதானே!!.

      ஆனால் என்னைப் பொறுத்தவரை 100% உண்மை. நிரூபணங்களை அனைவரும் புரிய வைக்க‌ முயற்சிக்கிறோம்.அப்படி பாமர மக்களும் எளிதில் புரியும் போது [இபோதும் சில மூமின்கள் செய்வது போல்] வழிநடத்த‌ப்பட்ட பரிணாமம் என இத்துப் போன மதத்தை காப்பாற்ற முயற்சிக்க கூடாது எனவே சொல்கிறோம்

      நாம் கேள்வி கேட்ப்பது உங்களின் பரிணாம எதிர்ப்பின் உண்மைத் தன்மையை!!

      சரி இப்படிக் கேட்கிறேன்.

      வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்ற கொள்கைக்கு இஸ்லாம் என்றுமே வரக்கூடாது. அப்படி வந்தால் அது ஏமாற்றும் வேலை ஆகும்.

      ஆம்/இல்லை

      இந்தக் கேள்விக்கு ஆம்/இல்லை என் பதில் சொல்ல முடியுமா ?ஆம்/இல்லை ஹி ஹி

      நாம் ஏக இறைவனின் விசிலடிச்சான் குஞ்சுகளை விடுவதாக இல்லை!!

      நன்றி!!

      Delete
    5. சகோ மீரான்,
      //கடவுளை கண்டால்தான் ஒப்புக்கொள்வேன் என்று கூறுவது எவ்வாறு நடக்க இயலாத நிகழ்வோ ( பாருங்கள் ..இதற்க்கு நிகழ்தகவு பூஜ்ஜியம் ) //

      ஆதம்(ஆலை) அலாஹ் வை பார்க்கவில்லை என்கிறீர்களா?? ஹி ஹி

      மூசா(அலை) யுடன் அல்லாஹ் பேசவில்லை என குரானை பொய் ஆக்கு கிறீர்களா!!!

      4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.

      முகமது(சல்) மிராஜின் போது அல்லாவைப் பார்த்து பேசவில்லை என நாத்திகம் பேசுகிறீர்களா??

      53:12. ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?

      http://www.answering-islam.org/Shamoun/allah_seen.htm

      அப்புறம் பிரபஞ்சம் படைக்கும் முன்னால் அல்லாஹ் நபி(சல்) அவர்களைப் படைத்தான் என்றும் சிலர் கூறுகின்றார். ஹி ஹி .
      அண்னன் பீ.சே குரான் 3. 81ன் விள்க்கமாக இதுபோல் கூறுகிறார். குரான் 3.81 விளக்கத்தில் "நபிமார்களிடம் எடுத்த உறுதி மொழி"யில் அப்படித் தெரியுதே!!!
      http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/95-nabimarkalidam-sduththauruthi-mozi/

      விளக்கவும்!!
      இன்னேரம் மூமின் நாடாக இருந்தால் உங்கள் கதி அதோகதிதான்.

      Thank you

      Delete
  46. ///நான் ரெண்டே கேள்விதான் கேட்டேன்,

    1. எந்த ஒரு இனத்துக்காவது மூதாதையர் என்று சான்று ஒன்றாவது இருக்கிறதா?

    2. ஒரு இனம் இன்னொரு இனமாக மாறியதற்கு ஒரு சான்றாவது இருக்கிறதா?

    இதப் பத்தி ஒருத்தர் கூட வாயையே திறக்க மாட்டீங்கறீங்களே?///

    --------
    தாஸ் நீங்க கெட்ட ஒரு கேள்விக்கு பதில் இருக்கு. ஐயர்களிலே கோத்திரங்கள் பெயர கொண்டவர் தான் அவர்கள் மூதாதையர்.

    உதாரணங்கள்:
    பாரத்வாஜ கோத்திரம் : பாரத்வாஜ ரிஷி!
    கௌண்டின்ய கோத்திரம் : கௌண்டின்ய ரிஷி!
    மார்க்கண்டேய கோத்திரம் : மார்க்கண்டேய ரிஷி!

    ஏகப்பட்ட ஆதாரங்கள் இருக்குன்னு அவர்கள் சொல்லுகிறார்கள். அந்த குறிப்பிட்ட ரிஷி தான் அந்த அந்த கோத்திரத்தின் one and only solo மூதாதையர் என்று அடித்து சொல்கிறறர்கள். அவர்களை வேண்டுமானால் கேட்டுப் பாருங்களேன்..!

    ReplyDelete
  47. விழிப்புணர்வூட்டும் பதிவு..
    நிறைய எழுதுங்கள்.but பரிணாமம் may be right, may not be
    no one knows clearly.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி சமுத்திரா !! எனக்கு பரிணாமம் குறித்து தெரியாது. இணையத்தில் தெரிந்தவர்கள் பேசுவதன் அடிப்படையில் எழுதுகிறேன். சிலர் பொது முன்னோரில் [common forefathers] இருந்து உயிரினங்கள் கிளைத்து வருவதற்கு சான்றுகள் இருப்பதாக கூறுகிறார்கள். அது இல்லை என பல இடங்களில் படித்துள்ளேன். இந்த மாதிரி ஆசாமிகளை எதிர்கொள்வதுதான் பிரச்சினையாக உள்ளது!!

      Delete
  48. ஒரு நல்ல பதிவு, தொடர்ந்து எழுதவும், நாம் அதிகம் எழுதும் பொழுது தான் அதிகம் கற்று கொள்கிறோம், தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete
  49. நிச்சயம் தொடர்ந்து எழுத முயல்கிறேன், முதல் வருகைக்கும் ஊக்கப் படுத்தியமைக்கும் நன்றி நண்பரே!!

    ReplyDelete