Friday, January 11, 2013

ஜகன்னாதர் ரத யாத்திரை, சென்னையில் ஜனவரி 12 ஆம் தேதி-விபரங்கள்

சென்னையில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினரால் 12-01-2013 சனிக்கிழமை அன்று ஜகன்னாதர்-சுபத்திரை-பலதேவர்-சுதர்சனன் இரத யாத்திரை என்னும் தேர்த் திருவிழா நடை பெற இருக்கிறது.  20 அடி உயரத்திலான சிறிய தேரில் மூவரும் சென்னையை உலா வர இருக்கின்றனர்.

புறப்படும் இடம்/நேரம்:
மைலாப்பூர் சாரதா சில்க்ஸ் கடை முன்பாக,
2:30PM, 12   ஜனவரி 2013

சென்று சேரும் இடம்/நேரம்:
குசாலாம்பால் கலையான மண்டபம் சேத்துப் பட்டு,   
7:00 PM 12   ஜனவரி 2013 [அதே நாள் மாலை]

வழி:

மைலாப்பூர் சாரதா சில்க்ஸ் கடை முன்பாக
ராமகிருஷ்ண மடம் சாலை -RK Mutt rd.
ராயப்பேட்டை நெடுஞ்சாலை  -Royapettah high rd.
டாக்டர். இராதாகிருஷ்ணன் சாலை -Dr, Radha Krishnan Salai.
கதீட்ரல் சாலை -Cathedral Rd.
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை.-Nungam Bhakam High rd.
வில்லேஜ் சாலை -Village rd.

சேத்துப் பட்டு குசலாம்பாள் திருமண மண்டபம்.

வழி நெடுகிலும் பக்தர்களின் நாம சந்கீர்த்தனம், பிரசாத விநியோகம் ஆகியவற்றுடன் ஜன்கன்னாதரின் தரிசனம் கிடைக்கும்.  இவ்வழிகளுக்கு அருகில் அலுவலகம் உள்ளோர் சற்று நேரம் ஒத்துக்கி கலந்து கொள்ளுங்கள்  குடும்பத்தோட மாலை கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு உணவருந்தி வீடு திரும்பலாம்.

இந்த இரத யாத்திரையின் பின்னணி:

ஜகன்னாதர் ஆலயம் ஓடிசாவில் உள்ள பூரியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஜகன்னாதருடன், அவரது மூத்த சகோதரர் பலதேவரும், தங்கை சுபத்திரையும் சுதர்சனரும் இணைந்து அருள் பாலிக்கிறார்கள்.


பூரி ஜகன்னாதர் ஆலயம்.


ஒவ்வொரு ஆண்டும் ஜூன்-ஜூலை மாதங்களில் இங்கு உலகப் புகழ் பெற்ற  தேர்த் திருவிழா நடைபெறும்.  ஜன்கன்னத் [சுதர்ஷனருடன்]-பலதேவ்-சுபத்ரா மூவரையும் மூன்று பிரமாண்ட தேர்களில் இக்கோவிலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குண்டிச்சா மந்திர் என்னும் இடத்திற்கு பக்தர்கள் அழைத்துச் செல்வார்கள்.  அங்கே ஒருவாரம் இருந்த பின்னர் மீண்டும் ஆலயத்திற்க்கே தேர்கள் மூலம் திரும்ப அழைத்து வருவது மரபு.  இந்தத் திருவிழாவிற்கு பத்துலட்சத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் உலகெங்கிலும் இருந்து வந்து கலந்து கொள்கிறார்கள்.  ஆங்கில அகராதிகளில்  Juggernaut என்னும் வார்த்தை ஜகன்னாத் என்பதில் இருந்து வந்ததாகும். 


பூரி ஜகன்னாதருக்கு அடிக்கடி அபிஷேகம் நடத்தப் படுவதில்லை  இவ் விக்ரகங்கள் மரத்தால் ஆனவர்கள்.  அரிதாக நடத்தப் படும் அபிஷேகத்திற்கான ஏற்ப்பாடுகள் மேலே. பூரிக்கு நாம் மூன்று முறை இரத யாத்திரையின் போது சென்று வந்துள்ளோம், அப்போது இந்த மூவரையும் தேரின் மீதேறி தழுவியிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்!!
இதற்க்கான தேர்களைச் செய்ய வேலைகள் ரத யாத்திரைக்கு சில மாதங்கள் முன்னரே துவங்கும்.  ஜகன்னாதரின் தேர் 45 அடி உயரம், 35 சதுர அடி பரப்பளவில் 7 அடி விட்டமுள்ள 16 சக்கரங்களுடன் செய்யப் படும்.







தேர்களின் பெயர்கள்:

ஜன்கன்னாதர்-  நந்திகோஷா ,
பலதேவர்-தாலத்விஜா [14 சக்கரங்களைக் கொண்டது]
சுபத்திரை-தேவதலனா.  [சிறியது 12 சக்கரங்கள்].

இந்த ரதங்கள் ஜகன்னாதர் கோவில் வடிவிலேயே இருக்கும்.  இதற்கென தனிப்பட்ட மரங்கள் உபயோகிப்பார்கள், பரம்பரை பரம்பரையாக தேர் செய்வதில் கைதேர்ந்த தட்சர்கள் இதில் ஈடுபடுவார்கள்.

ரதங்கள் குறித்த   மேலதிகத் தகவல்கள்

 ஒவ்வொரு தேரையும் 4500 பக்தர்கள் இழுப்பார்கள். தேர்களுக்கு முன்னர் பக்தர்கள் இறைவனின் திருநாமத்தை சங்கீர்த்தனம் செய்த வண்ணம் ஆடிப் பாடிச் செல்வர்.  பல்வேறு புராண கால பாத்திரங்களின் வேடம் அணிந்தோரும் கலந்து கொள்வர்.

பலராமர் [பலதேவ்] அழைத்து வரப்படுகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் [ஜகன்னாத்] அழைத்து வரப் படுகிறார்.

வலதுபுறம் ஜகன்னாதரின் தேர், நடுவில் சுபத்திரையின் தேர், இடது புறம் பலதேவரின் தேர்.  பலதேவர்-சுபத்திரை, ஜகன்னாதர் என்ற வரிசையில் புறப்படுவார்கள்.


பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஜகன்னாதர் ஆலயத்தின் முன்னர் கிராண்ட் டிரன்க் ரோட்டில் தேரிழுக்கக் காத்திருக்கின்றனர்.



No comments:

Post a Comment