Thursday, November 19, 2015

நாங்கள் நிறைய அணைகள் கட்டியுள்ளோம்

 நாங்கள் நிறைய அணைகள் கட்டியுள்ளோம் அப்படின்னு யாரோ சொல்றாங்க, ஆனாலும் ஒன்னு கூட நம்ம கண்ணுக்குத் தெரியலையே?  என்ன காரணம்?


இந்த நேரத்தில் சம்பந்தேமேயில்லாமல் எல்லோரும் அறிந்த ஒரு சின்ன கதை, ஞாபகத்திற்கு வருகிறது. 

ஒருமுறை இந்திய அமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டு அமைச்சருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அந்த வெளிநாட்டு மந்திரி சொன்னார் “சார் அதோ தெரியுது பாருங்க அணை அந்த அணையை  நான் தான் டெண்டர் எடுத்து கட்டினேன். அதில் வந்த வருமானத்தை வைத்து தான் இந்த வீட்டை கட்டினேன்”

“ஓ அப்படியா மகிழ்ச்சி. அணையும் வீடும் அழகாக உள்ளது ”பாராட்டினார்.

பின்னர் ஒருமுறை அந்த வெளிநாட்டு அமைச்சர் இந்தியா வந்து அமைச்சரை சந்தித்தார்.

பில்கேட்ஸ் பங்களாவைவிட மிகப்பெரிய பங்களாவில் சந்திப்பு. பங்களாவின் அழகில் மயங்கியே போனார் அமைச்சர்.

எங்க நாட்டு பங்களாவைவிட மிக அழகாக கட்டியுள்ளார்கள் என பாராட்டினார்.

“இது யாருடையது?”

“என் பங்களாதான் “

 “வாவ் வெரி நைஸ். எப்படி கட்டினீங்க?”

“அதோ தெரியுது பாருங்க அந்த அணையை  நான் தான் கட்டினேன். அதில் கிடைத்த தொகையை கொண்டுதான் இதை கட்டினேன்”

வெளி நாட்டு அமைச்சர்”- “அங்க எந்த பாலமும் தெரியலையே?”
நம்ம அமைச்சர் கூலாக பதில் சொன்னார்....

“நீங்க அணையை  கட்டிவிட்டுதான் அதில் வரும் வருமானத்தை எடுப்பீங்க....நாங்க அணை கட்டாமலே முழுசா சுட்டிடுவோம் இல்ல.....”

4 comments:

  1. படித்த நகைச்சுவைதான் என்றாலும் பொருத்தமான சமயத்தில் எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. ஹாஹாஹா பலமுறை கேட்ட கதைதான் நண்பரே இருப்பினும் இப்பொழுது பொருத்தமாக சொல்லும் போது கூடுதல் சிறப்பு சிரிப்பு
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. அங்கதான் இந்தியன் நிக்குறான்.

    ReplyDelete