Thursday, April 10, 2014

மக்களை பரதேசிகளாக்கும் விஞ்ஞான வளர்ச்சி

வணக்கம் மக்கள்ஸ்!!

"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம்"- இது தமிழகத்தின் சில அறிவாளி கட்சிகளின் பஞ்ச் டயலாக் என்பது பலருக்கும் தெரிந்ததே. அவன் முன்னேற்றத்துக்கு இவர்கள் ஏதாவது செய்திருப்பார்களா என்று பார்த்தால் ஒன்றும் இருக்காது.  மக்களை தெனாலி இராமன் குதிரை மாதிரியே வைத்திருப்பது தான் இவர்களது இராஜ தந்திரமே!!  ஏனெனில் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தாலோ பொருளாதார தன்னிறைவு பெற்றாலோ இவர்களால் அரசியல் நடத்த முடியாது.

ஒரு உதாரணத்துக்கு காக்கா கூட்டத்தைப் பார்த்தோம்னா அது எல்லாத்துக்கும் உணவு, இருப்பிடம், துணை, வாரிசுகள் என அனைத்தும் கிடைக்கும்.  நாலு பணக்கார காக்கா, பத்து ஏழை கக்கா,  ரெண்டு பட்டினி கிடக்கும் கக்கா, துணை இல்லாமல் தவிக்கும் காக்கா அதற்குக் காரணம் வசதியின்மை என்றெல்லாம் பார்க்கவே முடியாது.  இத்தனைக்கும் காக்காவுக்கு ஐந்தறிவுதான். ஆனால் மனிதன்  சிந்திக்கத் தெரிந்தவன், ஆறறிவு படைத்தவன், பகுத்தறிவு படைத்தவன் அது.... இது......... என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறான்.  இத்தனை அறிவு இருப்பவன் கஷ்டப் படாமல் சவுகரியாமாக அல்லவா இருக்க வேண்டும்?    ஆனாலும் பிழைப்புக்காக இவன் படும் பாடு காக்கையை விட மோசமாக இருக்கிறதே?  காரணம் என்ன? 

அறிவு இருந்தால் மட்டும் போதாது, அதை சரியாகப் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். மனிதன் அதைச் செய்தானா?

 இன்றைக்கு உலகப் பொருளாதாரம் குறித்து ஒரு காணொளியைப் பார்த்தேன்.  அதில் சில பாயிண்டுகள் நம்மை கிறுகிறுக்க வைத்து விட்டன.  இதோ அவை உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும் வைக்கிறேன்.


உலகில் கிடைக்கும் பணம் தோராயமாக 223 ட்ரில்லியன் டாலர்கள்.  [ட்ரில்லியன்அப்படின்னா என்ன?  அப்படின்னெல்லாம் கேள்வி கேட்டு நம்மளை ஆந்தை மாதிரி முழிக்க விடப் படாது, அது எதுவோ இருந்துட்டு போகட்டும், இப்போ அது முக்கியமில்லை!!]

மொத்த உலகச் சொத்தில் 43% பணம்,  மக்கள் தொகையில் வெறும் 1% மட்டுமேயுள்ள பண முதலைகள் கைவசத்தில்  உள்ளதாம்.

பாதிப் பணம் [50%] எனக் கணக்கிட்டால் அது 2% பேரிடமும், அப்படியே அதிகரித்து 94% பணம் யாரிடம் என்று கணக்கிட்டால் அது 20% பேரிடம் உள்ளதாம்.

அப்படின்னா, உலக மக்கள் தொகையில் 80% பேரிடம் உள்ள பணம் 6% மட்டுமே.


இதில் இன்னொரு கணக்கு:  உலகின் கடைசி முன்னூறு கோடி எழைகளிடமுள்ள மொத்த பணத்திற்குச் சமமான பணத்தை டாப் முன்னூறு பணக்காரர்கள் வைத்திருக்கிறார்களாம்!!



அதுசரி, நாம சொத்து சேர்த்திட்டோம், கஷ்டப்படுற ஏழைகளைப் பார்த்து சும்மா இருக்கலாமா?  மனுஷன்னா அடுத்தவங்களுக்கு உதவனும்யா.  இப்படி யோசித்த பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு ஒவ்வொரு வருடமும் 130 பில்லியன் அமரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கி வருகின்றன.

[1 பில்லியன் அமரிக்க டாலர் இன்றைய மதிப்பில் 6000 கோடி ரூபாய்.
1000 பில்லியன் =1 டிரில்லியன்].

அப்படிப் பார்த்தால் 130 பில்லியன் அமரிக்க டாலர் [ஏழு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய்!!] இது நல்ல தொகைதான் அல்லவா?  ஆனாலும் ஏழை நாடுகளுக்கும் பணக்கார நாடுகளுக்குமான மேற்சொன்ன பாகுபாடு விகிதம் என்னவோ அதிரிக்கிறதே தவிர இறங்கி சமமாவதாகத் தெரியவே இல்லை!!   என்னதான் நடக்கிறது?



நம்மூரில், ஒருபுறம் இலவசம் குடுத்து இன்னொரு பக்கம் அதற்கும் பல மடங்கு மேலாக சாராய கடைகள் மூலம் திரும்பப் பிடுங்கிக் கொள்வதைப் போல, ஒரு பக்கம் நிதியுதவின்னு குடுத்தாலும் குடுத்த காசுக்கு வட்டி அது இதுன்னு வெவ்வேறு வழிகளில் ஏழை நாடுகளிடம் இருந்து பணக்கார நாடுகள் பலமடங்கு அதிகமாக கறந்து விடுகின்றன.

கொடுத்தது 130 பில்லியன், திரும்பப் பிடுங்குவது 2 டிரில்லியன் [2000 பில்லியன்!!].


உலக வரலாற்றின் கடந்த சில நூற்றாண்டுகள் வரையிலும் கூட ஏழை- பணக்கார நாடுகளுக்கிடையேயான ஏற்றத் தாழ்வு அவ்வளவு அதிகமாக இருந்ததில்லை.

 200 வருடங்களுக்கு முன்னர்,

பணக்கார நாடுகள் சொத்து =  ஏழை நாடுகள் போல மூன்று மடங்கு மட்டுமே. 


1960 வாக்கில் இது 35 மடங்காக ஆகியிருக்கிறது, ஆனால் இன்றைக்கு அது 80 மடங்காகிவிட்டது.

இந்த காலகட்டத்தை அப்படியே அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் தொடர்பு படுத்திப் பாருங்க.  அது வளர வளர பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைப் போல பல மடங்கு பெருப்பதும் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது.  இந்த மாதிரி இயலாதவனை கட்டி வச்சு பிடுங்குவது அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியே காரணம் என்பது எனது கருத்து.


73 comments:

  1. அருமையான பகிர்வு நாம் எங்கே போய்க்கொண்டு இருக்கின்றோம் !!
    விஞ்ஞான வளர்ச்சி வெறுமனே வாழ்வைக் கேள்விக்குறியாக்கி
    உள்ளது என்பது தான் மறுக்க முடியாத உண்மை .இன்றைய வாழ்க்கை
    முறையைச் சிந்தித்துப் பார்க்கும் போது மிகுந்த அச்சம் தான் எழுகின்றது .
    சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தங்களுக்கு .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. @ அம்பாளடியாள் வலைத்தளம்

      தங்கள் வரவு மகிழ்ச்சியளிக்கிறது, தொடர்ந்து வாருங்கள்.

      Delete
  2. அதிகாலை அசிடிட்டி! :)))

    ReplyDelete
    Replies
    1. @ ஸ்ரீராம்

      \\அதிகாலை அசிடிட்டி! :)))\\

      ஏதோ சொல்ல வரீங்கன்னு தெரியுது, ஆனால் என்னன்னு தான் விளங்கலை !! உங்க வலைப்பூ ஒன்னை பார்த்தேன், சங்கீதத்தில் ஆர்வம், ஈடுபாடு இருக்கும் போலிருக்கே!!

      Delete
    2. காலையிலேயே வருமானக் கணக்கைப் படித்து வயிற்றெரிச்சல் வந்து விட்டது என்று சொல்ல வந்தேன்! :)))

      //உங்கள் வலைப்பூ ஒன்றைப் பார்த்தேன் சங்கீதத்தில்.....//

      சங்கீதத்தில் அபார ஆர்வம் உண்டு - கேட்பதில்! நீங்கள் பார்த்தது 'நம்ம ஏரியா' வலைப் பூவாக இருந்தால் அது வாசகர்களுக்கானது! எங்கள் ப்ளாக் வாசகர்கள் தங்கள் திறமைகளை அனுப்ப, நாங்கள் வெளியிடும் வலைப்பக்கம்! எங்களைப் படிக்க 'எங்கள் ப்ளாக்' வந்து பாருங்கள்! :))))))

      Delete
  3. ஆயிரம் இருந்தும்... வசதிகள் குவிந்தும்... No peace of mind...!

    ReplyDelete
  4. பாகவதரே,

    //காக்கா கூட்டத்தைப் பார்த்தோம்னா அது எல்லாத்துக்கும் உணவு, இருப்பிடம், துணை, வாரிசுகள் என அனைத்தும் கிடைக்கும். நாலு பணக்கார காக்கா, பத்து ஏழை கக்கா, ரெண்டு பட்டினி கிடக்கும் கக்கா, துணை இல்லாமல் தவிக்கும் காக்கா அதற்குக் காரணம் வசதியின்மை என்றெல்லாம் பார்க்கவே முடியாது. இத்தனைக்கும் காக்காவுக்கு ஐந்தறிவுதான். ஆனால் மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன், ஆறறிவு படைத்தவன், பகுத்தறிவு படைத்தவன் அது.... இது......... என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறான். இத்தனை அறிவு இருப்பவன் கஷ்டப் படாமல் சவுகரியாமாக அல்லவா இருக்க வேண்டும்? ஆனாலும் பிழைப்புக்காக இவன் படும் பாடு காக்கையை விட மோசமாக இருக்கிறதே? காரணம் என்ன? //

    ஆத்திக அசட்டுப்பிண்டங்கள் அறிவதில்லை,எந்த காக்காவும் ஒரு கோயிலை கட்டி அதுல ஒரு "பொம்மைய" வச்சு கும்பிட சொல்வதில்லை, மணியாட்டியே ஓசியில் உண்டு வயிற்றை வளர்ப்பதில்லை, இன்னொருக்காக்காவை சூத்திரக்காக்கா என்பதில்லை, குலம் கோத்திரம் என சன்டையிடமால், ஒரே குளத்தில் குளிச்சு,குடிச்சு ,ஒண்ணா உண்டு , விருப்பப்பட்ட காக்காவுடன் இணைசேர்ந்து குடும்பம் நடத்துகின்றன அதனால் தான் அவற்றின் பிழைப்பு ஆத்திக பிண்டங்களின் பிழைப்பை விட உயர்வாக இருக்கு!

    காக்காப்போல சமத்துவமாக கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

    #//இந்த காலகட்டத்தை அப்படியே அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் தொடர்பு படுத்திப் பாருங்க. அது வளர வளர பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைப் போல பல மடங்கு பெருப்பதும் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. இந்த மாதிரி இயலாதவனை கட்டி வச்சு பிடுங்குவது அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியே காரணம் என்பது எனது கருத்து.//

    இதை சொல்லவும் இணையம் தான் தேவை அது அறிவியலின் பங்களிப்பு.

    நீர் ஒன்னு செய்யும் ,இதை எல்லாம் ஓலைச்சுவடில எழுதி ஊர் ஊராப்போய் கூட்டம் இருக்க இடத்தில எல்லாம் படிச்சு காட்டும் :-))

    இயலாதவனிடம் ஏமாற்றிப்பிடுங்குவது மணியாட்டும் அரைமண்டைகளின் வேலை.

    ஆத்திகம் மக்களை அடிமைகளாக்கி விலங்குகளாக்குகிறது!!!

    # எந்தக்கடவுளும் உலகை ஆக்கவும் இல்லை காக்கவும் இல்லை,கடவுளை காக்கவே ஒரு செக்கியூரிட்டி தேவை,

    "கடவுளின் வீட்டுக்கும் பூட்டு தேவை இல்லை எனில் சிலைக்கு வேட்டு!"

    வவ்வால் திருமொழி-2014.V.2.2

    ReplyDelete
    Replies
    1. \\ஆத்திக அசட்டுப்பிண்டங்கள் அறிவதில்லை,எந்த காக்காவும் ஒரு கோயிலை கட்டி அதுல ஒரு "பொம்மைய" வச்சு கும்பிட சொல்வதில்லை, மணியாட்டியே ஓசியில் உண்டு வயிற்றை வளர்ப்பதில்லை, இன்னொருக்காக்காவை சூத்திரக்காக்கா என்பதில்லை, குலம் கோத்திரம் என சன்டையிடமால், ஒரே குளத்தில் குளிச்சு,குடிச்சு ,ஒண்ணா உண்டு , விருப்பப்பட்ட காக்காவுடன் இணைசேர்ந்து குடும்பம் நடத்துகின்றன அதனால் தான் அவற்றின் பிழைப்பு ஆத்திக பிண்டங்களின் பிழைப்பை விட உயர்வாக இருக்கு! \\

      உலக பணக்கார நாடுகள் ஏழை நாடுகளை ஏய்ப்பது மணியாட்டித்தானா? சாதிகள், சிலை வழிபாடு இதனால் தான் ஏழை பணக்கார நாடுகளுக்கிடையேயான இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறதா? வவ்வால்!! உம்மோட புத்தி கூர்மை மெய்சிலிர்க்க வைக்கிறது!! நீர் ஒரு பொருளாதார மேதை, கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா அமர்த்தியா சென்னுக்கு பதிலா உமக்கு நோபல் பரிசு விழுந்திருக்கும். அதுசரி, சிலைவழிபாடு, சாதி இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தானே நடக்குது, மற்ற ஏழை நாடுகள் எதனால் ஏய்க்கப் படுகின்றன? அவங்க எல்லாம் சுபிட்சமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா? ஏன் அது நடக்கவில்லை? அசட்டுப்பிண்டம் யார் அப்படின்னு தெரியணும்னா சோடா புட்டி கண்ணாடியை துடைச்சு மாட்டிகிட்டு கண்ணாடி முன்னாடி நில்லும். [அது பாக்க சகிக்காது தான் என்ன பண்ணி தொலைக்கிறது!!] கொஞ்சம் தலையில் உள்ள களிமண்ணை இப்போதாவது பயன்படுத்தி யோசியுமே?!!

      \\இதை சொல்லவும் இணையம் தான் தேவை அது அறிவியலின் பங்களிப்பு.\\ "ராஜீவ் காந்தி உயிரோடு இருந்திருந்தா அவரைக் கொன்றவர்களை மன்னித்திருப்பார்" அப்படின்னு ஒரு அறிவாளி சொன்னானே அது மாதிரி இருக்கு உமது தத்துவம். அறிவியல் வளர்ச்சி வந்திருக்கா விட்டால் நான் இதையெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காதே, அதுசரி உலகம் தோன்றியதில் இருந்து 1990 வரைக்குமே கம்பியூட்டர் கருமாந்திரம் இல்லாம தானே வாழ்ந்தோம்?

      \\நீர் ஒன்னு செய்யும் ,இதை எல்லாம் ஓலைச்சுவடில எழுதி ஊர் ஊராப்போய் கூட்டம் இருக்க இடத்தில எல்லாம் படிச்சு காட்டும் :-)) \\ அதுசரி, கம்பியூட்டர் கண்டுபிடிச்சது உன் மச்சான், ராக்கெட் விட்டவன் உன் மாமானா? அதென்னது ஆன்னா , ஊன்னா கம்பியூட்டரை யூஸ் பண்ணாதே அத தொடாதே, இதை தீண்டாதே என்பது? நீரும் வெந்ததை தின்னுட்டு மார்க்கெட்டில் கிடைப்பதை வாங்கிப் பயன்படுத்தும் சாதா தெரு நாய் தானே? என்னமோ தமாஸ் ஆல்வா எடிசன் ரேஞ்சுக்கு கதை வுட்டுகினு இருக்கீரு? அறிவியல் வளர்ச்சி நாத்தீகர்களால் மட்டும் உண்டானது அல்ல. நியூட்டனும், ஐன்ஸ்டீனும் ஆத்தீகர்கள் தான்.

      \\ஆத்திகம் மக்களை அடிமைகளாக்கி விலங்குகளாக்குகிறது!!! \\

      \\# எந்தக்கடவுளும் உலகை ஆக்கவும் இல்லை காக்கவும் இல்லை,கடவுளை காக்கவே ஒரு செக்கியூரிட்டி தேவை,

      "கடவுளின் வீட்டுக்கும் பூட்டு தேவை இல்லை எனில் சிலைக்கு வேட்டு!"

      வவ்வால் திருமொழி-2014.V.2.2\\ தஞ்சாவூர் கல்வெட்டில் பதித்து விட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளும். நாளை சரித்திரம் அசின் படத்துக்கு மணியாட்டிய மாவீரன் என்று உமது புகழ் பாடும். நீர் பேசுவது இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும், பதிவில் சொல்வது உலக நாடுகள் அனைத்துக்கும். அந்த வேறுபாடு கூட மக்கு பிளாஸ்திரியா நீர்? குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை விட்டுட்டு வெளியில் வாரும். [தலையெழுதுய்யா உமக்கு தமிழ் பழமொழியெல்லாம் நான் போய் ஞாபகப் படுத்த வேண்டியிருக்குது!!]

      Delete
    2. பாகவதரே,

      //நீரும் வெந்ததை தின்னுட்டு மார்க்கெட்டில் கிடைப்பதை வாங்கிப் பயன்படுத்தும் சாதா தெரு நாய் தானே? //

      '//வவ்வால் மாதிரி ஒரு நாய்க்கு வால் புடிச்சா அது மகா கேவலம்.//

      மகா சனங்களே பார்த்துக்கோங்க இவரு ஆத்தீகராம் :-))

      நீர் என்ன தான் கோயில் கோயிலா போய் உருண்டு புரண்டு கும்பிட்டாலும் அதால் ஒரு பயனும் இல்லை மனம் முழுக்க சாக்கடையை ஓடவிட்டுக்கொண்டு , பஜனைப்பாடினால் "பருப்பு" வேகுமா?

      இதை விட அழகா செந்தமிழில் பொளந்து கட்டுவேன் ,பாவம் உமக்கு பிஞ்சு மூஞ்சு ,பஞ்சு உடம்பு தாங்காது, பொட்டுனு ஹார்ட் அட்டாக்கில் போய் சேர்ந்துடுவீர்,இப்பவே உமக்கு பி.ப்பி ,கொலஸ்ட்ரால் எல்லாம் ஏகத்துக்கும் ஏறிக்கிடக்கு இதில நான் வேற கலாய்ச்சால் 'சங்கு' தான்!

      # காக்கா செத்த எலி, நாய் என கொத்தி சுவைச்சு சாப்பிடுது ,நீரும் காக்கா போல வாழலாம் :-))

      காக்கா கொடல் கறி சாப்பிடுறதப்பார்த்துட்டு 'என்னமா சாப்பிடுது ஆனால் மனுசனா பொறந்துட்டு அப்படிலாம் சாப்பிட முடியலையேனு ஏக்கத்தில் தானே 'காக்காவ பார்த்து பொறாமையில அப்படி சொல்லி இருக்கீர் :-))

      #//உலக பணக்கார நாடுகள் ஏழை நாடுகளை ஏய்ப்பது மணியாட்டித்தானா? சாதிகள், சிலை வழிபாடு இதனால் தான் ஏழை பணக்கார நாடுகளுக்கிடையேயான இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறதா? //

      உலக பணக்கார நாடுகளின் பட்டியலை எடுத்துப்பாரும் அங்கெல்லாம் அறிவியலின் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும், மக்களுக்கு எல்லா அறிவியல் வளர்ச்சியின் பலன்களும் நன்கு கிடைக்கும்.

      அதே சமயம் ஏழை நாடுகளின் பட்டியலை எடுத்துப்ப்பாரும் ,அந்நாடுகளில் எல்லாம் அறிவியல் வளர்ச்சி இருக்காது, இருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவியல் வளர்ச்சியின் பலன்களும் அனைவருக்கும் சமமாக கிடைக்காது.

      இதிலிருந்து என்ன தெரிகிறது? உமக்கு செக்ஸ் சாமியார்களின் புராணம் தவிர வேரெதுவும் தெரியாது எனவே நானே சொல்லிவிடுகிறேன்,

      எந்த நாடுகள் அறியல் வளர்ச்சியை நன்கு பயன்ப்படுத்திக்கொள்கிறதோ ,அவை எல்லாம் வளமாக இருக்கின்றன, மக்களும் சுபிட்சமாக இருக்கிறார்கள், எந்த நாடுகள் அறிவியல் வளர்ச்சியில் பின் தங்கியுள்ளனவோ அவை எல்லாம் வறுமையில் உள்ளன ,மக்களும் துன்புறுகிறார்கள்.

      எனவே அறிவியல் வளர்ச்சி மற்றும் பயன்ப்பாடு மக்களை பரதேசி ஆக்கவில்லை, அறிவியல் புறக்கணிப்பே பரதேசி ஆக்குகிறது என்ற உண்மை 'கிருஸ்ணாவின் காமலீலை" போல எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.

      # மனித வளக்குறியீட்டில் இந்தியாவுக்கு 102 வது இடம் தான் , நமக்கு மேலே உள்ள நாடுகளின் பட்டியலைப்பார்க்கவும் ,அங்கெல்லாம் அறிவியலின் பயன்ப்பாடு உச்சத்தில் இருப்பதை அறியலாம்.

      //India ranks 102nd among the 132 countries on the Social Progress Index, a measure of human wellbeing that goes beyond traditional economic measures such as GDP or per capita income.
      Of the BRICS countries Brazil, Russia, India, China and South Africa, only India ranked lower than the 100th position on the list of the Social Progress Index 2014 compiled by US-based non-profit group Social Progress Imperative.
      China was next lowest of the five, in the 90th position, and Brazil was the highest, at 46th.//

      http://businesstoday.intoday.in/story/india-ranks-102-out-of-132-nations-on-social-development-index/1/204909.html
      http://www.nationsonline.org/oneworld/human_development.htm

      தொடரும்...

      Delete
    3. தொடர்ச்சி...

      # இந்தியா மட்டும் ஏன் பின் தங்கியிருக்கு எனில்,இங்கு உம்மை போன்ற ஆத்திக அசட்டு பிண்டங்கள் அதிகம் ,அறிவியலை எதிர்ப்பது மட்டுமில்லாமல் இருக்கும் அறிவியலின் பயன்ப்பாடு " சாமனியனுக்கு" கிடைக்க விடாமல் செய்து விடுகிறார்கள்.

      வைக்கப்போரில் படுத்திருக்கும் நாய்ப்போல, ஆன்மீக அசட்டு பிண்டங்கள் அவங்களும் வாழ மாட்டாங்க ,அடுத்தவனையும் நிம்மதியா வாழ விடமாட்டாங்க அவ்வ்!

      # ஜப்பான் ,தைவான் போன்ற நாடுகளில் இயற்கை வளம் வெகு குறைவு ,ஆனால் அறிவியல் வளர்ச்சியால் தொழில்நுட்ப உபகரண தயாரிப்பில் அதிகம் பொருளீட்டி ,மக்களை வளமாக வாழ வைக்கிறார்கள்.

      # சுரண்டல் என்பது அறிவியல் இல்லாத காலம் தொட்டே இருப்பது, அப்படி சுரண்டி வாழ்ந்தவர்கள் யார் எனப்பார்த்தால் " மணியாட்டும் கோஷ்டியே" முன்னணியில் இருக்கும் :-))

      இந்தியாவை பேசலை ,உலகப்பார்வையில் சொல்கிறேன் என சொல்கிறீரே,

      //"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம்"- இது தமிழகத்தின் சில அறிவாளி கட்சிகளின் பஞ்ச் டயலாக் என்பது பலருக்கும் தெரிந்ததே. அவன் முன்னேற்றத்துக்கு இவர்கள் ஏதாவது செய்திருப்பார்களா என்று பார்த்தால் ஒன்றும் இருக்காது. மக்களை தெனாலி இராமன் குதிரை மாதிரியே வைத்திருப்பது தான் இவர்களது இராஜ தந்திரமே!! ஏனெனில் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தாலோ பொருளாதார தன்னிறைவு பெற்றாலோ இவர்களால் அரசியல் நடத்த முடியாது.//

      தமிழ்நாட்டை உதாரணமாக காட்டித்தான் பதிவையே ஆரம்பிச்சு இருக்கீர் ,அது எதுக்கு?

      அதே போல நானும் இந்தியாவை உதாரணமாக காட்டியுள்ளேன்.

      ஆத்திக கூமுட்டையிலேயே அழுகின கூமுட்டைய்யா அவ்வ்!

      Delete
  5. //உமது தத்துவம். அறிவியல் வளர்ச்சி வந்திருக்கா விட்டால் நான் இதையெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காதே, அதுசரி உலகம் தோன்றியதில் இருந்து 1990 வரைக்குமே கம்பியூட்டர் கருமாந்திரம் இல்லாம தானே வாழ்ந்தோம்?//

    விஞ்ஞானத்தை பிடிக்காத, 1990 வரைக்கும் கம்ப்யூட்டர் கருமாந்திரம் இல்லாம வாழ்ந்த நீர், எதற்க்காக கம்ப்யூட்டர் மற்றும் digital camera வை உபயோகிக்கிறீர்?

    ஏன் காஷ்மீருக்கு மாட்டு வண்டியில் போக வேண்டியது தானே. ஏன் flight ல போனீர்?

    ReplyDelete
    Replies
    1. \\விஞ்ஞானத்தை பிடிக்காத, 1990 வரைக்கும் கம்ப்யூட்டர் கருமாந்திரம் இல்லாம வாழ்ந்த நீர், எதற்க்காக கம்ப்யூட்டர் மற்றும் digital camera வை உபயோகிக்கிறீர்? \\ கம்ப்யூட்டர் மற்றும் digital camera வை திருப்பி குடுத்துடறேன் எனக்கு 1960-க்கு முன்னர் இருந்த மாதிரி சுற்றுப் புறச் சூழலை திரும்பத் தரத் தயாரா?

      \\ஏன் காஷ்மீருக்கு மாட்டு வண்டியில் போக வேண்டியது தானே. ஏன் flight ல போனீர்?\\ யோவ் முன்னாடி தமிழ் நாடே காஷ்மீரை விட பசுமையா தானே இருந்தது? மரத்தையெல்லாம் வெட்டி போட்டுட்டே நான் வெளியே சுத்த வேண்டியதாச்சு. காஷ்மீரைப் பாக்காட்டி என்ன உசிரா போயிடும்?

      Delete
  6. வவ்வால்,
    இன்னைக்கு மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், சுதந்தரமா இருக்காங்க. ஆனா, 60 வருஷத்துக்கு முன்னாடி விஞ்ஞான வளர்ச்சி இவ்வளவு இல்லாத காலத்தில், ஆத்திக கூமுட்டைகள் தன் சக மனிதனை (சூத்திரனை) ஆற்றில் ஓடுகிற தண்ணியை கூட குடிக்க முடியாமல் தடுத்து வைத்திருந்தனர்.

    ReplyDelete
    Replies
    1. ஆற்றில் ஓடும் தண்ணீரை அள்ளிக் குடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று பழமொழி உண்டு. அப்படியே ஆனாலும் அவர் எப்படியோ ஒருவழியில் தண்ணீரைப் பெற்று வாழ்ந்து தான் வந்திருக்கிறார். அதே சமயம் நிலையை யோசியும். ஆற்றில் தண்ணீரே கிடையாது, ஒரு வேலை இருந்தால் அது நொய்யல் ஆறு போல முற்றிலும் விஷம் அல்லது கூவம் போல சாக்கடை.

      ஓம் விஞ்ஞானமஹாய நமஹா...........
      ஓம் மரவெட்டாஹாய நமஹா...........
      ஓம் பிளாட்டுபோடாஹாய நமஹா...........
      ஓம் கார்பன்மோனாக்சைடாஹாய நமஹா...........
      ஓம் மீத்தேன் வாயுவாஹாய நமஹா...........
      ஓம் கூடங்குளமாஹாய நமஹா...........

      ஓம் வவ்வால் & அதன் செம்பு தூக்கி ஏலியன் அவங்க அவங்களே ஆப்பு மேல உட்கார்ந்தாய ப்ராப்தம் அஸ்து...............

      Delete
    2. //கம்ப்யூட்டர் மற்றும் digital camera வை திருப்பி குடுத்துடறேன் எனக்கு 1960-க்கு முன்னர் இருந்த மாதிரி சுற்றுப் புறச் சூழலை திரும்பத் தரத் தயாரா?//
      //காஷ்மீரைப் பாக்காட்டி என்ன உசிரா போயிடும்? //

      விஞ்ஞானத்தை வெறுக்கிற நீர், ஏன் விஞ்ஞான பொருளை உபயோகித்தீர் / உபயோகிக்கிறீர்?

      கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தாருங்கள். சம்பந்தம் இல்லாமல் எழுதி குழப்ப வேண்டாம்.

      எதற்க்காக கம்ப்யூட்டர் மற்றும் digital camera வை உபயோகிக்கிறீர்?
      ஏன் flight ல போனீர்?
      Who do you use electronic goods, when you hate them?

      Delete
    3. \\எதற்க்காக கம்ப்யூட்டர் மற்றும் digital camera வை உபயோகிக்கிறீர்? \\ தனிப்பட்ட முறையில் அறிவியலால் கிடைக்கும் சுகம் வேண்டுமா அல்லது இயற்கை உனக்குத் தரும் மாசு படாத காற்று, நிலம், நீர் வேண்டுமா என்று கேட்டால் நான் பின்னதையே தேர்ந்தெடுப்பேன்.

      அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனை மனிதன் அடித்துச் சாப்பிடுவதற்கு உடந்தையாக உள்ளது என்பது எனது கருத்து.

      இந்தக் கருத்தை தெரிவிக்கும் சுதந்திரம் கூட எனக்கில்லையா? சரி நான் கேமராவும், கம்பியூட்டரும் தொடவில்லை, உலகின் பணக்கார நாடுகள் ஏழை நாடுகளிடம் அடித்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவார்களா?

      நான் தெரிவிக்கும் கருத்து சரியா தவறா? தவறு என்றால் அதற்க்கு நீர் தரும் சரியான காரணம் என்ன, விளக்கம் என்ன?

      Delete
    4. Because of lack of time, I am writing in English. Sorry

      //இந்தக் கருத்தை தெரிவிக்கும் சுதந்திரம் கூட எனக்கில்லையா?//
      you have all rights to express your comments. I am not obstructing you from using electronic goods.

      My question is very simple. Just give me straightforward answer.

      எதற்க்காக கம்ப்யூட்டர் மற்றும் digital camera வை உபயோகிக்கிறீர்?
      ஏன் flight ல போனீர்?
      Who do you use electronic goods, when you hate them?

      Delete
    5. @Alien

      My using computer, electronic goods, flights won't change the fact that the development in Science and Technology has lead to exploitation of poor countries by rich countries.

      The disparity which was 3 times a couple of centuries ago has now become 35 times in 1960 and 80 times now.

      My conclusion is that Technological development and widening of gap between poor and rich countries are positively correlated. [means the former is the cause for the later.]

      If you wish to deny this give your explanation.

      Delete
    6. பாகவதரே,

      //The disparity which was 3 times a couple of centuries ago has now become 35 times in 1960 and 80 times now.//

      அதே காலக்கட்டத்தில் இந்தியாவில் என்ன நிலைனு யோசியும்?

      கோயிலில் நுழைய தடை,

      பொதுக்கிணற்றில் நீர் எடுக்க தடை.

      கல்விக்கற்க தடை.

      குறிப்பிட்ட சமூகப்பெண்கள் மேலாடை அணியத்தடை,

      தெருவில் நடக்க தடை,

      செருப்பு அணிய தடைனு.

      இன்னும் பல இதெல்லாம் செயல்ப்படுத்தியது அறிவியலா? ஆன்மீகமா?

      ஏழை நாடு ஏன் ஏழையாகவே இருக்கு? அவங்க அறிவியலைப்பயன்ப்படுத்தி முன்னேறலை.

      இந்தியாவில் எவ்ளோ தான் பருத்தி விளைஞ்சாளும் பணம் கிடைக்கலை,ஆனால் பருத்தி குறைவாக விளையும் இங்கிலாந்து விசைத்தறி, ஜின்னிங் எந்திரம் என கண்டுப்பிடிச்சதாலேயே முன்னேறிச்சு.

      அந்த கண்டுப்பிடிப்பை இந்தியா செய்திருந்தால் அப்போவே முன்னேறியிருக்க மாட்டோமா?

      எனவே அறிவியல் வளர்ச்சியில் இந்தியா ஈடுபடவில்லை, வாய்ப்பு வரும் போதும் வேகமாக பயன்ப்படுத்தவில்லை அதனால் தான் ஏழை நாடாக இருக்கு.

      அக்கால ஆதிக முண்டங்கள் அறிவியலைப்புறக்கணிச்சுட்டு ஓம் சுக்லாம்பரதம்னு பஜனைப்பாடியே இந்தியாவை வளரவிடாமல் செய்துவிட்டார்கள்.நீர் மீண்டும் அதே போல ஆக்க முயற்சிக்கலாம்னு பார்க்கிறீர் ,அதுக்கு முதலில் ஒரு தீப்பெட்டிக்கூட பயன்ப்படுத்தாமல் வாழ்ந்து காட்டிவிட்டு சொல்லும் :-))

      Delete
  7. //ஓம் வவ்வால் & அதன் செம்பு தூக்கி ஏலியன்//

    ஹி..ஹி..ஹி..
    நீர் கடவுளுக்கு சொம்பு தூக்கும் இழிவான செயலை விட, நான் என் சக மனிதனுக்கு சொம்பு தூக்குவது பரவாயில்லை.

    ReplyDelete
    Replies
    1. வால் புடிச்சா கூட ஒரு சிங்கத்துக்கோ புலிக்கோ புடிக்கனும், அதுல ஒரு கவுரவமாச்சும் மிஞ்சும். போயும் போயும் வவ்வால் மாதிரி ஒரு நாய்க்கு வால் புடிச்சா அது மகா கேவலம்.

      Delete
    2. According to me, catching a dogs tail is more adorable than worshiping God.

      Delete
    3. நாய் வாலைப் பிடித்தால் கேவலத்தோட போகும். சிங்கம், புலியோட வாலைப் பிடித்தால் உயிரல்லவா போகும்.

      Delete
  8. // இத்தனைக்கும் காக்காவுக்கு ஐந்தறிவுதான். ஆனால் மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன், ஆறறிவு படைத்தவன், //

    லாஜிக் இல்லாம எப்படி ஒப்பிடுரிங்க. காக்கை நாளைய தேவைக்கு சேமிக்காது. காக்கைக்கு வாரிசு இல்லை. ஒரு குறிப்பிட்ட வயதில் தன் குஞ்சுகளை விட்டு பிரிந்துவிடும். காக்கைக்கு நம்மைப் போன்று விதவிதமான மொழிகள் இல்லை. மதங்கள் இல்லை. கடவுள்கள் இல்லை. கொள்கைகள் இல்லை. கிடைப்பதை சாப்பிடுகிறது. கிடைக்கிற துணையோடு கூடிவாழ்கிறது. எந்த மனிதனும் நாகரீகம் வளர்ந்த காலங்களில் இப்படி வாழ இயலாது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்வு சேகரித்தல் வேட்டையாடுதல் கூட கண்டுபிடிக்காத காலத்தில் மனிதன் இப்படி இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

    //இந்த காலகட்டத்தை அப்படியே அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் தொடர்பு படுத்திப் பாருங்க. அது வளர வளர பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைப் போல பல மடங்கு பெருப்பதும் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. இந்த மாதிரி இயலாதவனை கட்டி வச்சு பிடுங்குவது அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியே காரணம் என்பது எனது கருத்து.//

    ஒரு நாடு ஏழ்மையில் இருப்பதற்கு எவ்வளவோ முக்கிய காரணங்கள் இருக்க, அறிவியல் வளர்ச்சியும் தொழிற்நுட்பமும் தான் காரணம் என்பது சரியான வாதமாக படவில்லை. உதாரணமாக நம்ம நாடு இருக்கிற நிலைமைக்கு காரணம், நமது மக்களா? நாம் தேர்ந்தெடுத்த கூமுட்டைகளா? நமது சட்டதிட்டமா? வெளிநாட்டுக்காரனா? இல்லை நீங்கள் சொல்லும் அறிவியலா?

    ReplyDelete
    Replies
    1. //லாஜிக் இல்லாம எப்படி ஒப்பிடுரிங்க...//

      குட்டி பிசாசு,
      எப்படி ஆடு மாடுகள், தன்னை பெற்ற தாயிடம் உறவு கொண்டு இனப்பெருக்கம் செய்கிறதோ, அதே மாதிரி மனிதனும் இயற்கையாக செய்ய வேண்டும் என்கிற கொள்கை உடையவர் இந்த தாஸ்.
      (இந்த உரையாடலை கோவி. கண்ணனுடைய தளத்தில் பார்க்கலாம்)

      அவர் லாஜிக் இப்படித்தான் இருக்கும். மிருகங்கள் கூடவும் பறவைகள் கூடவும் மனிதனை compare செய்வார் இந்த அறிவாளி (ஆத்திக கூமுட்டை).

      Delete
    2. @ குட்டிபிசாசு

      அதாவது காக்கா செய்வது அத்தனையும் நாமும் செய்ய வேண்டும் என்பதில்லை, அப்புறம் நமக்கும் அதுக்கும் வித்தியாசமில்லாமல் போயிடும். ஆனால் நமக்கு அறிவு அதிகமாக இருக்கிறது. அதைப் பயன்படுத்தி எல்லோரும் சுகமாக வாழ வழிவகை செய்யலாம் அல்லவா? ஆனால் அது நடக்கவில்லை, மனிதனுக்கு உள்ள அறிவை எப்படி அடுத்தவனை ஏய்ப்பது என்பதிலேயே செலவிடுகிறான், தேவைக்கு அதிகமாக சேர்க்கிறான், கடைசியில் அது அவனுக்கும் பயன்படுவதில்லை, அவனால் கொள்ளையடிக்கப் பட்டவர்களும் வாழ்நாள் முழுவதும் கஷ்டப் பட்டு சாக வேண்டியிருக்கிறது.

      விஞ்ஞானம் வளராத காலத்தில் அந்தந்த ஊர்களில் ஏதாவது பயிர்களை, மரங்களை வைத்தே வாழ்வை நடத்தியிருக்க முடியும், விவசாய பொருட்களை தனிப்பட்ட முறையில் கொள்ளையடித்துச் செல்ல முடியாது.

      தற்போது விஞ்ஞான ரீதியான கொள்ளை நடக்கிறது.

      விஞ்ஞாம் வளர வளர் பாகுபாடும் பன்மடங்கு பெரிதாவதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, இது உண்மை.

      Delete
    3. \\எப்படி ஆடு மாடுகள், தன்னை பெற்ற தாயிடம் உறவு கொண்டு இனப்பெருக்கம் செய்கிறதோ, அதே மாதிரி மனிதனும் இயற்கையாக செய்ய வேண்டும் என்கிற கொள்கை உடையவர் இந்த தாஸ்.
      (இந்த உரையாடலை கோவி. கண்ணனுடைய தளத்தில் பார்க்கலாம்)\\ தவறான புரிதலாக இருக்கக் கூடும், முடிந்தால் தொடுப்பு குடுக்கவும்.

      \\அவர் லாஜிக் இப்படித்தான் இருக்கும். மிருகங்கள் கூடவும் பறவைகள் கூடவும் மனிதனை compare செய்வார் இந்த அறிவாளி (ஆத்திக கூமுட்டை).\\ ஆறறிவு கொண்ட உன் வாழ்வு ஐந்தறிவு கொண்ட விலங்கை விட கீழ்த்தரமாக இருக்கிறது ஏன்? இது தான் கேள்வி.

      Delete
    4. @ Alien

      I went through the feed backs, I have not said anything like what you have just mentioned.

      Delete
    5. //விஞ்ஞானம் வளராத காலத்தில் அந்தந்த ஊர்களில் ஏதாவது பயிர்களை, மரங்களை வைத்தே வாழ்வை நடத்தியிருக்க முடியும், விவசாய பொருட்களை தனிப்பட்ட முறையில் கொள்ளையடித்துச் செல்ல முடியாது.//

      விஞ்ஞானம் அதிகம் வளராத காலத்தில் படையெடுப்புகள், அடிமை வியாபாரம், கட்டாய மதமாற்றங்கள், கட்டாய வரி வசூல் என பலக்கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருந்தன. ஏய்ப்புமுறைகள் மட்டுமே மாறியுள்ளன.

      Delete
  9. விஞ்ஞானம் நம்மை சொம்பேரிகளாக்குது என எண்ணி இருந்தேன். நம்மை எவ்வாறு ஏழைகள் ஆக்கியது என அறிய கஷ்டமாக உள்ளது. நாமும், அறிவியலில் உயர்ந்தால் இதனை சமன் செய்ய முயற்சிக்க ஏது உண்டா?

    ReplyDelete
    Replies
    1. நாம் மேலே வந்தால் [அதற்க்கு வாய்ப்பே இல்லை!!] கீழே இருக்கும் இன்னொருத்தனை எய்ப்போம், வேறுபாடு இருக்காது. விஞ்ஞானம் இருக்கும் வரை இது இப்படியேதான் போகும் சார்........

      Delete
  10. பணக்கார எழை நாடுகள் ஒப்பிடு கண்ணைக் கட்டுகிறது! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. @ ‘தளிர்’ சுரேஷ்

      Thanks for coming!!

      Delete
  11. I shall come after two days to continue this conversation as i am going out of station.

    ReplyDelete
    Replies
    1. எலியன்,

      உன் கடமை உணர்ச்சி ஒரு அளவே இல்லையா? ஜெயதேவ் இன்னுமொரு பதிவு இதேபோல போடாமலா போயிடுவாரு.

      Delete
  12. //நாம் மேலே வந்தால் [அதற்க்கு வாய்ப்பே இல்லை!!] //
    You are already having more money than at least 80% (or 90%?) of the people in the world.
    [having computer, digital camera etc]

    //கீழே இருக்கும் இன்னொருத்தனை எய்ப்போம்//
    You are already doing that.
    World economy is a zero sum game.
    You are depriving somebody of something in someway.

    ReplyDelete
    Replies
    1. @ Sabareesan

      பாஸ் நான் ஒரு சூழ்நிலைக் கைதி. நான் என்ன செய்கிறேன் என்பதை வைத்து உண்மை மாறப் போவதில்லை.

      Delete
  13. @ வவ்வால்


    நீர் அந்த காணொளியை சரியாகப் பார்க்கவில்லை. இந்த ஏற்றத் தாழ்வு அமரிக்கா என ஒன்று நாட்டை எடுத்துக் கொண்டாலும் இருக்கிறது என்று தான் அது ஆரம்பிக்கிறது. அங்கேயும் மொத்த பணம் எவ்வளவு பணக்காரர்களிடம் மாட்டிக் கொண்டது, மற்றவர்களிடம் உள்ளது எனப் பார்க்கப் போனால் இதே மாதிரி ஏற்றத் தாழ்வு வருகிறதாம். அதே மாதிரி உலக அளவில் நாடுகள் மத்தியிலும் பணக்கார நாடுகள், எழி நடுகல் என்று பார்த்தால் முன்னவர்கள் பின்னவர்களிடமிருந்து பிடுங்கி வைத்திருப்பது ஊருபட்டது என்று தெரிய வருகிறது.

    நீர் இந்தியாவில் உள்ள மத நம்பிக்கை/சாதி சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்துகிறீர், உலகில் இந்தியா மட்டும் தான் ஒரே ஏழை நாடல்ல, இதற்கும் கீழே எக்கச் சக்கமான நாடுகள் உள்ளன, அவை ஏன் பின் தங்கியுள்ளன?

    பணக்கார நாடுகள் எல்லாம் தொழில் நுட்பத்தில் தலை சிறந்த நாடுகளே என்கிறீர், இதுவும் நான் சொன்னதையே தான் தெரிவிக்கிறது. தோழி நுட்பத்தை உபயோகப் படுத்தி ஏய்க்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாகவதரே,

      //இந்த ஏற்றத் தாழ்வு அமரிக்கா என ஒன்று நாட்டை எடுத்துக் கொண்டாலும் இருக்கிறது என்று தான் அது ஆரம்பிக்கிறது. அங்கேயும் மொத்த பணம் எவ்வளவு பணக்காரர்களிடம் மாட்டிக் கொண்டது, மற்றவர்களிடம் உள்ளது எனப் பார்க்கப் போனால் இதே மாதிரி ஏற்றத் தாழ்வு வருகிறதாம். //

      படிக்கிற காலத்துல கடம் கோஷ்டியா இருந்திருப்பீர் போல அதான் இப்பவும் எதையாவது "புரியாமலே" வாசிச்சிட்டு உளறிட்டு இருக்கீர் :-))

      முன்னேறிய நாடான அமெரிக்காவிலும் ஏற்றத்தாழ்வு இருக்கும் ,எல்லா நாட்டிலும் இருக்கும், ஆனால் முன்னேறிய நாடுகளில் பொருளாதார நிலையில் கீழ் இருப்பவனும் அடிப்படைத்தேவைகளை நிவர்த்தி செய்துக்கொள்ள தக்க சூழல் தான் நிலவும்.

      எனவே ஏற்றத்தாழ்வு என்பது ஆடம்பரத்தில் தான் வித்தியாசம் காட்டும்.

      மாச சம்பளக்காரன் விமானத்தில் டிக்கெட் வாங்கி போவான் , பெரிய பணக்காரன் விமானத்தையே வாங்கிட்டு போவான் , அவ்ளோ தான் , மூனு வேலை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்களின் சதவீதம் குறைவு.

      அமெரிக்க நிலைக்கு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கல் சுமார் 8% நம்ம நாட்டில் 33 சதம்.

      இந்திய மிடில் கிளாஸிம் கிட்டத்தட்ட வறுமைக்கோடு தான். ஆனால் அமெரிக்க மிடில் கிளாசே கார் ,வீடு என வசதியாக இருக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.

      ஏன் அங்கே மட்டும் அப்படி? காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியை முழு அளவில் பயன்ப்படுத்திக்கிட்டாங்க. இந்தியாவோ ,ஆப்ரிக்க நாடுகளோ அப்படி பயன்ப்படுத்திக்கவில்லை, இது யார் குற்றம்?

      #//பணக்கார நாடுகள் எல்லாம் தொழில் நுட்பத்தில் தலை சிறந்த நாடுகளே என்கிறீர், இதுவும் நான் சொன்னதையே தான் தெரிவிக்கிறது. தோழி நுட்பத்தை உபயோகப் படுத்தி ஏய்க்கிறார்கள்.//

      அவன் ஏய்ச்சா நீர் ஏன் ஏமாறனும்? நீர் ஒத்துக்காம அவனா உள்ள வந்து கத்திய காட்டியா புடுங்கிட்டு போறான்?

      அமெரிக்கன் ஐபோன்,ஐபேட்னு தயாரிச்சா ஏன் அவ்ளோ காசுக்கொடுத்து வாங்கணும், நாம வாங்குவதால் அவன் விக்குறான்?

      நம்ம நாட்டுக்காசு நம்மிடமே இருக்கணும்னா இந்தியாவிலே தயாரிக்க வேண்டியது தானே ,ஆனால் நமக்கு தொழில்நுட்பம் தெரியாது அவ்வ்!

      stop buying ,he will stop selling!

      அவனுக்கு வித்தை தெரியுது காட்டுறான் , நாம காச கொடுக்கிறோம், அந்த வித்தையை நாமலே ஏன் செய்யக்கூடாதுனு கேட்கிறேன்,ஆனால் அதை செய்யாம பஜனைக்கோஷ்டில சேர்ந்துக்கிட்டு சப்ளாக்கட்டை அடிப்பீர் :-))

      உலகில் பல நாடுகளில் பணக்காரர்களை பார்த்தால் அவங்கலாம் சாதாரணமாக இருந்தே பெரிய பணக்காரன் ஆகி இருப்பான் , இந்தியாவில மட்டுமே பரம்பரை சொத்துனு " அந்தக்காலத்துல' மக்களிடம் புடுங்கியதை வச்சு பணக்காரனாக ஒருக்கூட்டம் இருக்கு.

      அறிவியலே வளராதக்காலத்தில் இந்தியாவில் எல்லா நிலமும் ஜமிந்தார்கள் கையில் எப்படி போச்சு? அப்போ அவன் எதை வச்சு ஏய்ச்சு சம்பாதிச்சான்?

      நில உச்சவரம்பு சட்டம் வருமுன்னர் இந்தியாவில் 90 சத நிலம் 10 சதம் ஜமீந்தார்கள் கையில் தான் இருந்தது , 90 சதவீத மக்கள் நிலமற்றவர்கள் என்பதாவது தெரியுமா?

      அறிவியல் இல்லாத அக்காலத்தில் நிலமே மூலதனம் ,அது முழுக்க ஜமீந்தார்களிடம் ,அதுக்கு காரணம் அறிவியலா?

      ஏழை நாடுகள் ஏழையாக இருக்க காரணம் அரசியல் கொள்(ளை)களும், பிற்போக்குத்தனமும் தான் காரணமே ஒழிய அறிவியல் அல்ல!

      Delete
    2. @ வவ்வால்
      அமரிக்காவில் புறம்போக்கு நிலத்தில் வசிப்பவன் கூட இந்தியாவில் உள்ள கோடீஸ்வரனை விட நன்றாக தின்பான்- இதை நீர் சொல்லித்தான் தெரியணுமாக்கும். உமக்கு இங்கிலீஸ் சுத்தமா வராதா? விக்கிபீடியாவில இப்படி சொல்லியிருக்கான் பாரு.

      Just prior to President Obama's 2014 State of the Union Address, media[3] reported that the top wealthiest 1% possess 40% of the nation’s wealth; the bottom 80% own 7%.

      http://en.wikipedia.org/wiki/Wealth_inequality_in_the_United_States

      அமெரிக்காவில் கடைக்கோடி குடிமகனும் நம் கணக்குப் படி சொகுசு வாழ்வை வாழ்வான் என்பது வேறு விஷயம் ஆனாலும் கணக்குன்னு பார்த்தா அங்கேயும் 80% மக்கள் நாட்டின் மொத்த வளத்தில் வெறும் வெறும் 7% மட்டுமேவைத்து பிழைப்பை நடத்துகிறார்கள்.

      \\ஏன் அங்கே மட்டும் அப்படி? காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியை முழு அளவில் பயன்ப்படுத்திக்கிட்டாங்க. இந்தியாவோ ,ஆப்ரிக்க நாடுகளோ அப்படி பயன்ப்படுத்திக்கவில்லை, இது யார் குற்றம்?\\ வவ்வால் நீர் புள்ளிவிவரப் புலின்னு பேர் எடுத்துட்டு இப்படியா பேக்கு மாதிரி பேசிகிட்டு இருப்பீரு? அதுசரி அமரிக்காவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா? அவங்க எப்படி வருஷா வருஷம் பிழைப்பை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியுமா? போய் கண்டுபிடியும். [வடிவேலு ஸ்டைலில்] ஐயோ............ஐயோ............

      \\அவன் ஏய்ச்சா நீர் ஏன் ஏமாறனும்? நீர் ஒத்துக்காம அவனா உள்ள வந்து கத்திய காட்டியா புடுங்கிட்டு போறான்?\\ ஹி .......ஹி .......ஹி ....... இதைத்தானே இங்கே பிராமணனும் சொல்றான்? உங்களுக்கு வந்தா இரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா?

      \\அமெரிக்கன் ஐபோன்,ஐபேட்னு தயாரிச்சா ஏன் அவ்ளோ காசுக்கொடுத்து வாங்கணும், நாம வாங்குவதால் அவன் விக்குறான்?\\ அமேரிக்கா காசு புடுங்குவது இராணுவ தளவாடங்கள் விற்பனையில். ஐபோன்,ஐபேட்னு எல்லாம் குப்பனும் சுப்பனுமா வாங்கறான்? அதில் இலாபம் குறைவு. இலாபம் சம்பாதிப்பது அதிக எண்ணிக்கையில் விற்ப்பனையாகும் குறைந்த விலை போன்களில். அதுகுத்தானே சீனாக்காரன் இருக்கான்.

      \\அறிவியலே வளராதக்காலத்தில் இந்தியாவில் எல்லா நிலமும் ஜமிந்தார்கள் கையில் எப்படி போச்சு? அப்போ அவன் எதை வச்சு ஏய்ச்சு சம்பாதிச்சான்?

      நில உச்சவரம்பு சட்டம் வருமுன்னர் இந்தியாவில் 90 சத நிலம் 10 சதம் ஜமீந்தார்கள் கையில் தான் இருந்தது , 90 சதவீத மக்கள் நிலமற்றவர்கள் என்பதாவது தெரியுமா?

      அறிவியல் இல்லாத அக்காலத்தில் நிலமே மூலதனம் ,அது முழுக்க ஜமீந்தார்களிடம் ,அதுக்கு காரணம் அறிவியலா?\\ இது இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் உலக அளவில் 200 வருடங்களுக்கு முன்னர்வரை கூட,

      பணக்கார நாடுகள் சொத்து = ஏழை நாடுகள் போல மூன்று மடங்கு மட்டுமே.


      1960 வாக்கில் இது 35 மடங்காக ஆகியிருக்கிறது, ஆனால் இன்றைக்கு அது 80 மடங்காகிவிட்டது.
      1960-2014 என்ற இந்த கட்டத்தில் 35 என்பது 80 ஆனது ஏன்?

      ரூம் போட்டு யோசி, தலைகீழா தொங்கிகிட்டு யோசி, அசின் படத்துக்கு முன்னாடி நின்னுகிட்டு மணியாட்டிகிட்டே யோசி. எதாச்சும் விளங்குதா பாரு.

      Delete
    3. பாகவதரே,

      விக்கிப்பீடியாவில் இருக்குனு எனக்கேவா அவ்வ்!

      #//அமெரிக்காவில் கடைக்கோடி குடிமகனும் நம் கணக்குப் படி சொகுசு வாழ்வை வாழ்வான் என்பது வேறு விஷயம் ஆனாலும் கணக்குன்னு பார்த்தா அங்கேயும் 80% மக்கள் நாட்டின் மொத்த வளத்தில் வெறும் வெறும் 7% மட்டுமேவைத்து பிழைப்பை நடத்துகிறார்கள். //

      வளத்தின் மீதான பங்கீடு எப்படியோ இருக்கட்டும் , அங்கே இந்தியாவைப்போல் பட்டினி சாவு இல்லையல்லவா?

      புடிச்ச பொண்ணை காதலிச்சா ஊரையே எரிக்க மாட்டாங்களல்லவா?

      சர்ச்சுக்குள் போக தடை இல்லையல்லவா?

      இந்த தெரு வழியே நடக்க கூடாதுனு சொல்லமாட்டார்களல்லவா?

      டீக்கடையில் தேங்காய் சிரட்டையில் ஊத்தி டீ தர மாட்டார்களல்லவா?

      அப்போ அங்கே வளத்தின் மீதான பங்கீட்டில் ஏற்ற தாழ்வு இருந்தாலும் தனி மனிதன் தலைநிமிர்ந்து வாழலாம் எனில் என்ன பிரச்சினை உமக்கு?

      இந்தியாவில் அடிப்படை வாழ்வுக்கே அல்லாடும் மக்களை பாரும்யா ,அப்பாலிக்கா அமெரிக்காவில் நல்லா வாழ்றவங்களுக்கு வளத்தின் மீது பங்கு போட்டுக்கொடுக்கலாம்.

      மைக்ரோசாஃப்ட், கூகிள், ஃபேஸ்புக் ,துவித்தர் என உருவாக்கி, யார் வேண்டுமானாலும் தொழிட்நுட்பத்தினை வைத்து பணம் செய்துக்கொள்ள முடியும், அனைவருக்குமே வாய்ப்பு இருக்கு.

      இந்தியாவில் யாருமே மென்பொருள் படிக்கலையா ஏன் ஒரு சமூக வலைத்தளம் கூட வடிவமைச்சு முன்னுக்கு வரக்கூடாதா? ஏன்னா ஆரம்பத்துல இருந்தே தொழில்நுட்பத்தினை பயன்ப்படுத்திக்கொள்வதில் தயக்கம் , அதான் மெதுவான வளர்ச்சி.

      #//அதுசரி அமரிக்காவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா? அவங்க எப்படி வருஷா வருஷம் பிழைப்பை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியுமா? போய் கண்டுபிடியும். //

      அதெல்லாம் எப்பவோ அலசியாச்சு, அவனுக்கு எவ்வளவு கடன் இருந்தால் என்ன ,அவன் நாட்டில் பட்டினிச்சாவு இல்லை ,இத்தனைக்கும் அங்கேயும் "இலவச உணவு" திட்டமும் இருக்கு. அதைப்பயன்ப்படுத்துவோர் எண்ணிக்கை குறைவு.

      இந்தியாவில் ஏன் பட்டினிச்சாவு? அதை தடுக்க முடியாமல் போனதன் காரணம் என்ன?

      தொழில் நுட்பத்தினை கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சேர்க்க தவறியதே முதல் காரணம்.

      நம்நாட்டில் இருக்கும் சட்டங்கள் பணக்காரனுக்கு சாதகமாக இருப்பது அடுத்தக்காரணம்.

      கம்மோடிட்டி மார்க்கெட் இந்தியாவிலும் இருக்கு ,அமெரிக்காவிலும் இருக்கு ஆனால் அமெரிக்க விவசாயிகள் அவங்க விளைச்சலை ஃபார்வர்ட் காண்ட்ராக்டில் ஃபியூச்சர் டிரேட் மூலம் கம்மோடிட்டியில் விற்க இயலும், இதனால் அவர்களுக்கு நட்டம் வருவது தடுக்கப்படும்,நம்ம ஊரில் வியாபாரிகள் மட்டுமே செய்ய இயலும் ஏன் அப்படி?

      நம்ம ஊரில் தொழில்நுட்பத்தினை எளிய மக்களுக்கும் கிடைக்க வழி செய்யலை, காசு இருக்கவனுக்கு மட்டுமே கிடைக்கிறாப்போல செய்துட்டாங்க.

      தொடரும்...

      Delete
    4. தொடர்ச்சி...

      #//ஹி .......ஹி .......ஹி ....... இதைத்தானே இங்கே பிராமணனும் சொல்றான்? உங்களுக்கு வந்தா இரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா?//

      நல்லவே சொம்பு தூக்குறீர் :-))

      அமெரிக்கா காரன் , என்ன தண்ணிப்பிடிக்காதே ,கோயிலில் உள்ள வராதேனு ஊருக்கே பொதுவானவற்றையா தடுக்கிறான்.

      பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் ஒருக்கோயிலை கட்டி அதன் பேருக்கு 1000 எக்கர் நிலத்தினை வாங்கிக்கொண்டு அதன் மூலம் வரும் வருமானத்தினை உட்கார்ந்தே சாப்பிட்டார்கள், கோயிலுக்குள் மற்றவர்கள் வந்தால் வருமானம் போயிடும் என அவங்க மட்டுமே மணியாட்டிக்க முடியும்னு அவங்களே ரூல்ஸ் போட்டாங்க , அதுக்கு ராஜாக்களும், ஜமீந்தார்களும் உடந்தை சாமானியன் வஞ்சிக்கப்பட்டான்.

      #//1960 வாக்கில் இது 35 மடங்காக ஆகியிருக்கிறது, ஆனால் இன்றைக்கு அது 80 மடங்காகிவிட்டது.
      1960-2014 என்ற இந்த கட்டத்தில் 35 என்பது 80 ஆனது ஏன்?//

      அந்தக்காலத்தில் பொருள் வியாபாரம் மட்டுமே அதுவும் விவசாய உற்பத்திப்பொருட்களே, இப்போ மின்னணு, கணினி, மற்றும் சேவை என அனைத்தும் வியாபாரப்பொருட்கள் அதனை மேலை நாட்டினர் தான் உற்பத்தி செய்றாங்க ,நாம சும்மா வெட்டிக்கதை பேசிட்டு அதை வாங்குறோம்,எனவே அவனுக்கு அதிக வரவு ,நமக்கு அதிக செலவு.

      கணினி பிராசசர் என எடுத்துக்கொண்டால் இன்டெல்,ஏ.எம்டி என ரெண்டே பேரு தான் முன்னணி, உலகம் முழுக்க வாங்கியாக வேண்டிய நிலையில் லாபம் பார்க்கிறான் , இந்தியாவில் எவனுக்கும் பிராசசர் செய்ய தெரியலையே என்ன செய்ய?

      நாம பருத்தி, பாசுமதி, இரும்புத்தாது ,மற்ற மினரல்ஸ்னு ரா மெட்டிரியலாவே வித்துக்கிட்டிருக்கோம் ,அவனோ ஃபினிஷ்ட் குட்ஸ் ஆக விக்குறான் எனவே அவனுக்கு நிறைய காசு ,நமக்கு கொஞ்சம் காசு ,இதெல்லாம் புரிய பொருளாதாரம் கொஞ்சமாச்சும் தெரியனும்ய்யா.

      ஜப்பான் காரன் கார் தயாரிச்சு வித்தால் அது முன்னாடி எலுமிச்சம் பழம் கட்டி ஓட்ட மட்டும் தான்யா உம்மை போன்ற ஆத்திக அசடுகளுக்கு தெரியும் அவ்வ்.

      நாட்டுல ஏகப்பட்ட தேங்கா விளையுது அதை சட்னி அரைச்சு நக்குனது போக மீதிய எண்ணையாக்கி வித்தா காசு நல்லா வரும் ,ஆனால் இந்த ஆத்திக மங்கூஸ் மண்டையன்கள் செவ்வாக்கிழமை ,வெள்ளிக்கிழையானா போதும் ,கூடையில தேங்காவ தூக்கிட்டு போய் கோயிலில் உடைச்சு வீணாக்குதுங்க , இது பத்தாதுனு பூசணிக்காய நடுரோட்டில ஒடைச்சு பைக்கில போறவன சறுக்க விட்டு மூட்டு சில்ல சிதற வைக்குதுங்க ஆத்திக கூமுட்டைகள் அவ்வ்.

      இது போல விவசாய உற்பத்தி பொருளை மண்ணுல சிதறடிச்சு வீணாக்கினா எங்கே இருந்து பொருளாதாரம் உயரும்?

      நான் சொன்னதெல்லாம் கேட்டு தலை கிர்ருனு சுத்தினா , பசு மாட்டு மூத்திரம் புடிச்சு குடிச்சு பாரும் சரியாவுதானு பார்ப்போம் அவ்வ்!

      Delete
  14. இரண்டு கோஷ்டிகளும் சட்டுபுட்டுனு ஒரு புள்ளிக்கு வந்து சரியான முடிவைச் சொல்லுங்கப்பா. இரண்டு பேரும் கடவுள் விஷயத்தை மட்டுமே உடும்புப் பிடியாய்ப் பிடித்துக்கொண்டு அடித்துக்கொள்வதை மட்டுமே பார்க்க நேர்கிறது.
    ரெண்டுபக்கமும் ஏகப்பட்ட தகவல்களுடன் நுணுக்கமாக விவாதம் செய்வது ஒரு பக்கம் சுவாரஸ்யமாக இருக்க விவாதங்களைப் படிக்கும்போதே சிரிப்பை அடக்கமுடிவதில்லை என்பது அதிகபட்ச போனஸ்.

    ReplyDelete
    Replies
    1. மணி அடிக்கும் கோஷ்டியில் மட்டும் இருந்தால் போதும்; மூன்று வேளை சோறு! மேலும், எல்லோரும் பணத்தை இவர்களிடம் தானே கொட்டுகிரார்கள்!

      Delete
    2. @ Amudhavan

      என்ன சார் பண்றது. ஒரு ஆள் அவ் ...........அவ் ........... அப்படின்னு பின்னூட்டம்தான் போடுறாருன்னு பார்த்தா, வடிவேல் மாதிரியே "எங்க தலைவர் நல்லவரு, வல்லவரு, இதோ வரப்போறாரு" அப்படின்னு சொல்றதுக்கெல்லாம் காசு குடுத்து ஆளுங்களை செட் பண்ணி, எல்லா பிளாக்குக்கும் கூடவே இழுத்துகிட்டு திரியறாரு சார். [வடிவேலு ஸ்டைலில்] இந்த கொடுமையை எங்க போயி சொல்வேன் சார்...............அவ் வ் வ் வ் வ் .............

      Delete
    3. நானா சேர்த்த கூட்டம் இல்லை எல்லாம் தானா அன்பால் சேர்ந்த கூட்டம்,

      நண்பன் போட்ட பின்னூட்டம் ,தினமும் படிப்பேன் நானு

      நட்பைக்கூட கற்பை போல எண்ணுவேன்!!!

      எங்க சங்கத்து சிங்கம் வேற்றுகிரகவாசி 2 நாள் லீவில் போய்ட்ட தைரியத்தில் இப்படிலாம் பேசிட்டு திரியப்படாது,வரட்டும் கட்சேரி வச்சிடுவோம்.

      Delete
  15. //பணக்கார நாடுகள் சொத்து = ஏழை நாடுகள் போல மூன்று மடங்கு மட்டுமே.


    1960 வாக்கில் இது 35 மடங்காக ஆகியிருக்கிறது, ஆனால் இன்றைக்கு அது 80 மடங்காகிவிட்டது.
    1960-2014 என்ற இந்த கட்டத்தில் 35 என்பது 80 ஆனது ஏன்?//

    ஜெயதேவ்,

    இந்தப் புள்ளி விவரம் சரியானதா? 200 வருடங்களுக்கு முன் தற்போது இருக்கும் பல நாடுகள் அப்போது இல்லை. ஏன் இந்தியா கூட இல்லை. 200 வருடங்களுக்கு முன் ஏழை நாடு பணக்கார நாடு என்று எதை வைத்து சொல்லப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. @குட்டிபிசாசு

      \\இந்தப் புள்ளி விவரம் சரியானதா? 200 வருடங்களுக்கு முன் தற்போது இருக்கும் பல நாடுகள் அப்போது இல்லை. ஏன் இந்தியா கூட இல்லை. 200 வருடங்களுக்கு முன் ஏழை நாடு பணக்கார நாடு என்று எதை வைத்து சொல்லப்படுகிறது.\\ வெள்ளையர்கள் இந்தியாவின் வளம் குறித்து கேள்விப் பட்டு இங்கே எப்படியாவது நுழைய வழி கண்டுபிடிக்கப் போய் தானே அமரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்தார்?
      கஜினி முஹம்மது 17 முறை படையெடுத்து இங்கிருந்த வளங்களை அள்ளிச் சென்றிருக்கிறானே?

      இன்றைக்கு ஒரு விதமாக கணக்குப் போடுகிறார்கள் அதே மாதிரி முற்காலத்துக்கும் போட முடியாதா என்ன?

      Delete
  16. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

    வலைச்சர தள இணைப்பு : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் !

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி தனபாலன் சார்..............

      Delete
  17. இந்தியா சிறந்த பொருளாதார நிபுனர்களை கொண்டது. அப்படின்னா ஏன் ஏழை நாடுன்னே சொல்லிக்கிட்டு இருக்கராங்க ? உலக வங்கியிடம் கடன் வாங்க பிறக்கும் கொழந்தயின் மேலும் கடன் சுமையை வெச்சிருக்காங்க. பாட்டியின் சுருக்கு பையிலும் இன்றைக்கு செல் அடிக்கிறது. சாதாரண மானவனும் உலக நடப்ப தெரிஞ்சிக்கனும்னா அது முடியும் இல்லியா. அறிவியல் இயற்கையை பாழ் படுத்திடுச்சு என்பதென்னவோ சரிதான். அதே சமயத்தில அவன் மூள கூர் தீட்டப் படாம மழுங்கி போச்சே. அறிவியல் மட்டும் தான் பொருளாதாரத்த தாங்கி பிடிக்கனும் என்கிற கான்சப்ட் பிடிபடல. சுரண்டுபவன் சுரண்டிகிட்டேதான் இருக்கான் இந்த லிஸ்ட்ல அம்பானியும் உண்டு அரசியல் வாதியும் உண்டு. ஏழையை ஏழையாகவே வெச்சிருக்கவே கேடு கெட்ட அரசியல் வாதியும் அரசாங்கமும் விரும்புது.

    ReplyDelete
  18. வலைச்சரம் மூலமாகத் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  19. Nice comment Sabareesan.

    //பாஸ் நான் ஒரு சூழ்நிலைக் கைதி. நான் என்ன செய்கிறேன் என்பதை வைத்து உண்மை மாறப் போவதில்லை. //

    தாஸ்,
    இப்படி சொல்ல உமக்கு வெட்கமாயில்லை?

    நீர் ஒரு ஆத்திக கூமுட்டை என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்ப தான் தெரிகிறது நீர் எல்லாவற்றிலும் கூமுட்டை என்று.

    சாராயம் குடிக்கிரவனும் இப்படித்தான் சொல்லுவான்.
    நான் ஒருத்தன் குடிக்காமல் இருந்தால், Tasmac ஐ மூடிடுவாங்களா என்ன? இல்ல மற்றவர்களெல்லாம் குடிக்காமல் இருக்கப்போகிரார்களா?
    நீர் சாராயத்தை குடித்துக்கொண்டே டாஸ்மாக் ஐ குறை சொல்லுவது போல் உள்ளது உம்முடைய கமெண்ட்.

    அந்நியன் படத்தில் வருமே ஒரு டயலாக்,
    நான் அஞ்சு பைசா தானே திருடுகிறேன் இது என்ன பெரிய தப்பா?
    இப்படித்தான்யா ஐம்பது கோடி பெரும் நினைத்து ஐந்தைந்து பைசாவாக திருடுகிறார்கள்.

    நான் ஒருத்தன் லஞ்சம் கொடுக்கலன்னா, லஞ்சம் ஒழிந்துவிடவா போகிறது என்று எல்லோருமே லஞ்சம் கொடுக்கிறார்கள்.

    நான் சூழ்நிலை கைதி என்று ஆடு மாடு சாப்பிடுகிறீரா? இல்லையல்லவா? பின்ன ஏன் elctronic goods ஐ உபயோகிக்கிறீர்? இதில் மட்டும் ஏன் சூழ்நிலை கைதி?

    //எனக்கு 1960-க்கு முன்னர் இருந்த மாதிரி சுற்றுப் புறச் சூழலை திரும்பத் தரத் தயாரா?//

    உம் வீட்டில் மின்சாரம் இருக்கிறது. அதை இணைக்க wire வேண்டும். அதை தயாரிக்க ஒரு factory வேண்டும்.
    Switch ஐ தயாரிக்க ஒரு factory வேண்டும். Bulb / Tubelight ஐ தயாரிக்க ஒரு factory வேண்டும்.
    நீர் 2 wheeler / car உபயோகிக்கிறீர். அதை தயாரிக்க ஹயுண்டாய் போன்ற கம்பனிகளும், அதன் துணை கம்பெனிகளாக அதை சுற்றி 100 கம்பெனிகளும் இயங்குகிறது.

    இதெல்லாமே நீர் பொருள்களை உபயோக்கிரதினால் தான் இந்த factory களும் கம்பெனிகளும் தேவை படுகிறது. நீர் எல்லா பொருள்களையும் வசதிகளையும் உபயோகித்துக்கொண்டு இந்த factories எல்லாம் மாசு படுத்துகிறது, இதெல்லாம் தேவையில்லை என்கிறீர். இது முட்டாள் தனமாக தெரியவில்லையா உமக்கு?

    நீர் இதெல்லாம் உபயோக்கிகாமல் இருந்தால் உமக்கு சொல்ல உரிமை இருக்கிறது. இப்போது நீர் வாயையே திறக்கக்கூடாது.

    அப்படியே factories எல்லாம் சுற்றுப்புற சூழலை மாசு படுத்திகிறது என்றாலும், அதையும் control பண்ணுவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்று ஓன்று இருக்கிறது. பொது மக்களுக்கு எந்தவித தீமையும் இல்லாதவாறு தான் factory க்கு approval கொடுக்க வேண்டும். அங்கேயும் உம்மைப்போல் ஒரு கூமுட்டை இருக்கும். அவர், நான் மட்டும் லஞ்சம் வாங்காமல் இருந்தால், இந்த என்ன சுத்தமாகவா ஆகிவிடப் போகிறது என்று லஞ்சம் வாங்கி approval கொடுப்பார்.


    //மக்களை பரதேசிகளாக்கும் விஞ்ஞான வளர்ச்சி//

    உழைப்பிற்கேற்ற ஊதியத்தை கொடுத்தால் மக்கள் ஏன்யா பரதேசிகளா இருக்கான்? சரியான ஊதியம் இல்லாததினால் தான். சரியான ஊதியத்தை கொடுக்காத பெரும்பான்மை முதலாளிகள் ஆத்திகர்கள் தான். so, தப்பு விஞ்ஞானத்தின் மீது அல்ல, சரியான ஊதியம் கொடுக்காதா ஆத்திக கூமுட்டைகள் தான்.

    மக்களை பரதேசிகளாக்கும் விஞ்ஞான வளர்ச்சி என்கிறீரே, நம் நாட்டில் 95% மக்கள் ஆத்திகர்கள் தான். உழைப்பிற்கேற்ற ஊதியத்தை கொடுக்காத பெரும்பான்மை முதலாளிகளும் ஆத்திகர்கள் தான்.

    இன்னும் நான் கேட்ட கேள்விக்கு நீர் பதிலை தரவே இல்லை. பதில் தந்தால், விவாதம் சுலபமாக முடிந்து விடும்.

    Give me the answer.

    1). எதற்க்காக கம்ப்யூட்டர் உபயோகிக்கிறீர்?
    2). எதற்க்காக digital camera வை உபயோகிக்கிறீர்?
    3). ஏன் flight ல போனீர்?
    4). Who do you use electronic goods, when you hate them?

    உமக்கு பதில் தெரியாவிட்டால் சொல்லும், எனக்கு பதில் தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. @ Alien

      நீங்க அளந்து விட்ட கதையிலிருந்து ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது. அறிவியல் தொழில் நுட்பத்தை வைத்துதான் பணக்கார நாடுகள் ஏழை நாடுகளை கொள்ளையடிக்கின்றன என்பதை மறுக்க இயலவில்லை.

      அதுசரி, நான் சில அறிவியல் சாதனங்களை உபயோகிப்பதால் எனக்கு கேள்வி கேட்க உரிமையில்லை என்கிறீர்கள். சரி எங்கள் ஊர்ல பாட்டிகள் நாலஞ்சு பேர், கம்பியூட்டர்ணா என்னன்னே தெரியாது, டிஜிடல் கேமராவை பயன்படுத்தியதில்லை, எரோபிலேனிலும் சென்றதில்லை, அவங்க சார்பா கேட்கிறேன் ஏன் அறிவியல் தொழில் நுட்பத்தை வச்சு கொள்ளையடிக்கிறீங்க?

      Delete
  20. //எங்க சங்கத்து சிங்கம் வேற்றுகிரகவாசி 2 நாள் லீவில் போய்ட்ட தைரியத்தில் இப்படிலாம் பேசிட்டு திரியப்படாது,வரட்டும் கட்சேரி வச்சிடுவோம்.//



    தலைவா,
    நான் வந்துட்டேன்.

    //காசு குடுத்து ஆளுங்களை செட் பண்ணி// ஹி..ஹி..ஹி..ஹா..ஹா...ஹா..(எனக்கு சிரிப்ப அடக்க முடியல..)
    நம்ம இயற்கை தாஸ் / காமெடி தாஸ் (இந்த இரண்டில எது இவருக்கு பொருத்தமா இருக்கு?)-க்கு அப்படி ஒரு நண்பரும் கிடைக்கல. அந்த கடுப்புலதான் இப்படி பினாத்திகிட்டு திரியிறாரு. பொறாமை வேறொன்னும் இல்ல.

    இப்படி இயற்க்கை இயற்க்கை ன்னு உளறிகிட்டு இருந்தன்னா, யாரு இவர்கிட்ட friendship வைப்பாங்க?

    ReplyDelete
    Replies
    1. வேற்றுகிரகவாசி வாரும்,

      என்ற தளபதி வந்துட்டார்யா ,இனிமே பாக"வத(தை) மேளா" தான்!

      வீக் எண்ட் ஜமாய் எல்லாம் ஓவரா, இங்கே தான் மஹாவீர் ஜயந்தினு கடையடைச்சுட்டாங்க,நானும் கவனிக்கலை "வறண்டுப்போய்கிடக்கு" அவ்வ்!

      # ரெண்டு நாளா நான் வச்ச ஆப்புல ,பேதி நிக்காம போயிட்டிருக்காம்,அதான் சத்தமே காணோம் ,இதுல நீர் வேற என் கேள்விக்கென்ன பதில்னு விடாம கேட்டிட்டு இருக்கீரே அவ்வ்!

      # கூமுட்டையிலும் அழுகின கூமுட்டை, பழம் பஞ்சாங்க அபிஷ்டு நம்ம பாகவதர் :-))

      அறிவியல் தொழில்நுட்பமெல்லாம் இல்லாத காலத்தில் ,பண்ணையார்கள் வசதியாக இருப்பார்கள்,அவர் காலத்துக்கு பிறகு அவங்க பசங்கனு போகும்.

      ஒரு செருப்புத்தைப்பவர் , மலம் அள்ளுபவர், விவசாயக்கூலி எல்லாம் வறுமையில் வாடுவார்கள், அவங்க காலத்துக்கு பிறகு அவங்க பசங்களும் அதே தொழிலை செய்து வறுமையில் வாடுவார்கள், காலம் காலமாக வறுமைக்கே வாழ்க்கைப்பட்டிருக்கணும் ,என்ன தான் தலைமுறை தலைமுறையா கடுமையா உழைச்சாலும் பாதிப்பட்டிணி என வாயுக்கும் வயுத்துக்குமே வருமானம் காணாது, முன்னுகே வர முடியாது.

      ஆனால் இன்று அறிவியல் தொழில்நுட்பமெல்லாம் வளர்ந்த உலகில், செருப்பு தைப்பவர், மலம் அள்ளியவர், விவசாயக்கூலியின் பிள்ளைகள் சரியாக படித்தால் , ஐபிஎம், மைக்ரோசாப்ட் என எங்கு வேண்டுமானாலும் வேலை கிடைக்கிறது , நல்ல சம்பளம் ,நல்ல வாழ்க்கை என பல தலைமுறை துயர்கள் ஒரே தலைமுறையில் மாறிவிடுகிறது.

      அப்படி இருக்கும் போது அறிவியல் எப்படி பரதேசிகளாக மக்களை மாற்றுகிறது என சொல்ல முடியும்? உண்மையில் அனைவருக்கும் "சம வாய்ப்பு" முன்னேற கிடைப்பதால் பரதேசிகளும் பணக்காரர்கள் ஆகிறார்கள்.

      உண்மைக்கு புறம்பான கருத்துக்களை ஆத்திக அபிஷ்டு கூற காரணம் என்னவெனில் " கடைநிலை மனிதனும்" முன்னுக்கு வந்துட்டானே என்ற வயித்தெரிச்சல் மட்டுமே.

      அந்தக்காலம் போலவே இப்பவும் இருந்தால் ,நமக்கு மலம் அள்ளவும் ,குப்பை அள்ளவும் ,செருப்பு தைக்கவும் அடிமைகள் கிடைச்சிருப்பாங்க ,அப்படி கிடைக்கலையேனு கடுப்பு தான்.

      # இயற்கை மேல எல்லாம் ஆர்வம் அவருக்கில்லை, போலி வேடதாரி, எங்கே ஒரு நாள் விறகு அடுப்பில் சமைக்க சொல்லுங்க பார்ப்போம் , விஞ்ஞானம் இல்லைனா தீப்பெட்டிக்கூட கிடையாது ,சிக்கி முக்கி கல்லு வச்சு தான் பத்த வைக்கணும், அதே போல நெருப்பு பத்த வச்சு ,சோறாக்கி சாப்பிட முடியுமா பாகவதரால் :-))

      # நொய்யல் ஆறு வீணாப்போச்சுனு சொல்லுறார் ,கோவணம் கட்டின பயலுக எல்லாம் ஏன் ஜட்டி போட ஆரம்பிச்சாங்க ,அதுவும் கலர் ஜட்டி , பச்சக்கலர் பேன்ட்டுக்கு பச்சக்கலர் ஜட்டியே தான் வேண்டும்னு வாங்குவாரு, இப்படி கலர் கலராக எதுக்கு ஜட்டிப்போடனும் , அதுவும் பேண்டுக்குள்ள போடுறதுக்கு எதுக்குய்யா கலரு, சூப்பர் மேன் போல பேண்ட் மேல ஜட்டிப்போட்டா கலர் ஜட்டி போட்டுக்கலாம் :-))

      ஜட்டிப்போடுறத நிப்பாட்டினால் , ஜட்டி தயாரிப்பு நிக்கும், அதுக்கு சாயம் அடிப்பது நிக்கும் அதனால் நொய்யல் ஆத்துல சாயத்தண்ணி கலக்கிறது நின்னுடும் , பாகவதரு முதலில் கோவணம் கட்டி அந்த மாற்றத்தினை ஆரம்பிக்கட்டுமே :-))

      Delete
    2. @ வவ்வால்

      மலம் அள்ளுபவன் மகன் மைக்ரோசாப்ட் வேலைக்குபோவது இருக்கட்டும், உமக்கு உணவு அளித்து வந்த விவசாயிகள் லட்சக் கணக்கில் விஷம் குடித்து மாண்ட கதையையும் அப்படியே சொல்லியிருக்கலாமே?

      மற்றபடி பிற்படுத்தப் பட்ட மக்கள் முன்னுக்கு வர தமிழகத்தை ஐந்து முறை ஆண்ட பகுத்தறிவு சிங்கம் எதையாவது செய்திருக்கலாமே? அரியலூரில் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து விவசாய நிலத்தை அடிமாட்டு விலைக்குப் பிடுங்கி MRF க்கு விற்றவர் பிராமணரா என்ன?

      வவ்வால், செட்டியார் உப்பு இருக்கிறதா என்றால் பருப்பு இருக்கிறது என்பாராம். இங்கே சொல்லப்பட்டுள்ளது உலக பணக்கார நாடுகள் ஏழை நாடுகளை எவ்வாறு கொள்ளையடிக்கிறது என்பதை, நீரோ இந்தியாவில் உள்ள பிரச்சனைகளை மட்டும் அலசோ அலசு என்று அலசி காயப் போட்டுக் கொண்டிருக்கிறீர், அதற்க்கு ஒரு அதற்க்கு ஜால்ரா அடிக்க ஒரு செம்பு தூக்கி வேற.......... ஒரே ........குஷ்டமப்பா.......சீ ............கஷ்டமப்பா..................

      Delete
    3. பாகவதரே,

      //உமக்கு உணவு அளித்து வந்த விவசாயிகள் லட்சக் கணக்கில் விஷம் குடித்து மாண்ட கதையையும் அப்படியே சொல்லியிருக்கலாமே?//

      அதைப்பற்றியெல்லாம் விரிவாக பதிவுகள் பல எழுதியாச்சு ,நீர் பஜனைப்பாடிக்கொண்டிருந்தால் எங்கே தெரியும்?

      உமக்கு விவசாயம், பொருளாதாரம் குறித்தெல்லாம் சுட்டுப்போட்டாலும் புரியாது.

      விவசாயிகள் கஷ்டத்திற்கு முதல் காரணம் விளைச்சலுக்கு உரிய விலை இல்லாமையே, குறைவான விலையை வெள்ளைக்காரனா வச்சான் , எல்லாம் இங்கே ஆளும் வர்க்கமும் ,இந்திய வியாபாரிகளும் தான்.

      நீர் என்னமோ அப்போ பணக்கார நாடு சொத்து அவ்ளோ, இப்போ இவ்ளோனு சொல்லுறீரே, அதே போல நெல் விலை அப்போ என்ன இப்ப என்னனு ஒப்பிடுவது?

      1960 காலக்கட்டத்தில் ஒரு மூட்டை நெல்(100கிலோ) விலையும் ஒரு சவரன்ன் தங்கத்தின் விலையும் ஏறத்தாழ சமம்.

      இன்று என்ன விலை, 100 கிலோ நெல் 1180 ரூ தான் , தங்கம் அந்த விலைக்கா விக்குது?

      இப்படி விவசாயியின் உழைப்புக்கும் ,முதலீட்டுக்கும் ஏற்ப விலை வைக்காம தடுப்பது அறிவியலா இல்லை அரசியலா?

      #//மற்றபடி பிற்படுத்தப் பட்ட மக்கள் முன்னுக்கு வர தமிழகத்தை ஐந்து முறை ஆண்ட பகுத்தறிவு சிங்கம் எதையாவது செய்திருக்கலாமே? அரியலூரில் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து விவசாய நிலத்தை அடிமாட்டு விலைக்குப் பிடுங்கி MRF க்கு விற்றவர் பிராமணரா என்ன?//

      நீரே மாட்டினீர் ,அப்படி செய்தது அறிவியலா? இல்லை அரசியல் கொள்ளையா?

      ஏழை நாடுகளில் ஏழை ஏழையாகவே இருக்க காரணம் இத்தகைய அரசியல் கொள்ளையால் தான், இப்போவாது புரியுதா?

      #//உலக பணக்கார நாடுகள் ஏழை நாடுகளை எவ்வாறு கொள்ளையடிக்கிறது என்பதை, நீரோ இந்தியாவில் உள்ள பிரச்சனைகளை மட்டும் அலசோ அலசு என்று அலசி காயப் போட்டுக் கொண்டிருக்கிறீர்,//

      நீர் உலக நாடுகளை ஒப்பிட்டு பதிவில் எழுத வேண்டியது தானே ஏன் இந்தியா ,தமிழ்நாடு என உதாரணம் காட்டி வச்சீர்?

      இந்தியாவில் ஏழ்மைக்கு என்னக்காரணமோ அவற்றை ஒத்த காரணங்களே ஆப்ரிக்க நாட்டிலும் ,அங்கும் அரசியல் ஊழல், சர்வாதிகாரமே அடிப்படைக்காரணம்,உமக்கு எங்கே இருந்து உலக அரசியல் எல்லாம் தெரியப்போவுது.

      பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகளில் குடிமகன்களுக்கு நில உரிமையே கிடையாது ,அனைத்து நிலமும் அரசு சொத்து , பணக்காரர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் இடங்களை கொடுத்துவிடுவார்கள், அப்பண்ணைகளில் கூலியாகத்தான் மக்கள் வேலை செய்யனும்.

      இது அரசியல் கொள்ளையே ஒழிய அறிவியல் கொள்ளை அல்ல.

      # அறிவியல் தொழில்நுட்பம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது ,எனவே அவற்றினைக்கற்றுக்கொண்டு வேலைப்பெற்றால் வாழ்வில் பஞ்சம் நீங்கும், எனவே தான் இந்தியாவில் படிச்சால் பொழைச்சுக்கலாம் என எல்லாரும் "மதிப்பெண் " அதிகம் வாங்க முயல்கிறார்கள்.

      கல்வியும் அறிவியல் தொழில்நுட்பம் மட்டுமே சாமானியர்களுக்கான நல்வாழ்வுக்கான ஒரே வழி.

      நீரும் படிச்சு வேலைக்கு போயிருக்கலைனா ,ஏதாவது கோயிலில் பஜனைப்பாடித்தான் பொழச்சிட்டு இருக்கணும் என்பதை மறந்துட்டு பேசக்கூடாது.

      உமக்கு சொகுசு வாழ்வை வழங்கியதே அறிவியல் தொழில்நுட்பம் தான்:-))

      Delete
    4. பாகவதரே,

      உமக்கு விவசாயம் குறித்தான அடிப்படையும் தெரியலை அதன் பிரச்சினை என்னனும் புரியலை, எனவே

      எனது சில விவசாயப்பதிவுகள்( விளம்பரம் என நினைத்தாலும் பரவாயில்லை,விவசாயம் குறித்து என்பதால் சுட்டிகளை கொடுக்கிறேன்)

      இவற்றைப்படித்து தெளிவடையும், நம்மை போன்ற மூன்றாம் உலக நாடுகளின் ஏழ்மைக்கு காரணம் அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் கொள்ளைக்கொள்கையும் பெரு முதலாளிகள் மற்றும் வியாபரிகளின் சுரண்டலுமே.

      ஒருங்கிணைந்த விவசாயம்:
      http://vovalpaarvai.blogspot.in/2007/08/blog-post_20.html

      மேலும் சில விவசாயப்பதிவுகள் மற்றும் காலநடைகள் பற்றியவை.

      http://vovalpaarvai.blogspot.in/2007/08/blog-post_12.html

      # http://vovalpaarvai.blogspot.in/2007/08/blog-post_13.html

      # http://vovalpaarvai.blogspot.in/2007/08/blog-post_14.html

      கால்நடைகள் பற்றிய பதிவு:

      # http://vovalpaarvai.blogspot.in/2013/01/blog-post.html

      # http://vovalpaarvai.blogspot.in/2007/08/blog-post_25.html

      # விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள்,மற்றும் நிலை:

      http://vovalpaarvai.blogspot.in/2012/12/fdi-in-retail-market-2_30.html

      http://vovalpaarvai.blogspot.in/2011/12/blog-post_16.html

      http://vovalpaarvai.blogspot.in/2011/12/2.html

      http://vovalpaarvai.blogspot.in/2012/07/blog-post.html

      Delete
    5. \\அதைப்பற்றியெல்லாம் விரிவாக பதிவுகள் பல எழுதியாச்சு ,நீர் பஜனைப்பாடிக்கொண்டிருந்தால் எங்கே தெரியும்?\\அதுசரி சாதி, மலம் அள்ளுதல் இதெல்லாம் மட்டும் புது டாபிக்கா?

      \\நீரே மாட்டினீர் ,அப்படி செய்தது அறிவியலா? இல்லை அரசியல் கொள்ளையா?\\ நீர் தேஞ்ச ரெகார்ட் மாதிரி உயர் சாதிக்காரன் ஏமாத்தினான் .....ஏமாத்தினான் ..... என்று புலம்பியதால் இதைக் கேட்டேன்.

      \\நீர் உலக நாடுகளை ஒப்பிட்டு பதிவில் எழுத வேண்டியது தானே ஏன் இந்தியா ,தமிழ்நாடு என உதாரணம் காட்டி வச்சீர்?\\ தெரிஞ்சதில் இருந்து தெரியாத ஒரு விஷயத்துக்கு கொண்டு போனேன். ஆனால் நீர் இந்தியாவை விட்டு வெளியிலேயே வரமாட்டேன்கிறீரே?

      \\இந்தியாவில் ஏழ்மைக்கு என்னக்காரணமோ அவற்றை ஒத்த காரணங்களே ஆப்ரிக்க நாட்டிலும் ,அங்கும் அரசியல் ஊழல், சர்வாதிகாரமே அடிப்படைக்காரணம்,உமக்கு எங்கே இருந்து உலக அரசியல் எல்லாம் தெரியப்போவுது.

      பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகளில் குடிமகன்களுக்கு நில உரிமையே கிடையாது ,அனைத்து நிலமும் அரசு சொத்து , பணக்காரர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் இடங்களை கொடுத்துவிடுவார்கள், அப்பண்ணைகளில் கூலியாகத்தான் மக்கள் வேலை செய்யனும்.

      இது அரசியல் கொள்ளையே ஒழிய அறிவியல் கொள்ளை அல்ல.\\ எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமே, இது எல்லா காலத்திலும் இருந்து வந்தது தானே? ஆனால் 1960 -ல் 35 மடங்காக இருந்த பணக்கார/ஏழை நாடுகளின் பாகுபாடு தற்போது 85 மடங்காக ஆனது எப்படி?

      \\# அறிவியல் தொழில்நுட்பம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது ,எனவே அவற்றினைக்கற்றுக்கொண்டு வேலைப்பெற்றால் வாழ்வில் பஞ்சம் நீங்கும், எனவே தான் இந்தியாவில் படிச்சால் பொழைச்சுக்கலாம் என எல்லாரும் "மதிப்பெண் " அதிகம் வாங்க முயல்கிறார்கள்.

      கல்வியும் அறிவியல் தொழில்நுட்பம் மட்டுமே சாமானியர்களுக்கான நல்வாழ்வுக்கான ஒரே வழி.

      நீரும் படிச்சு வேலைக்கு போயிருக்கலைனா ,ஏதாவது கோயிலில் பஜனைப்பாடித்தான் பொழச்சிட்டு இருக்கணும் என்பதை மறந்துட்டு பேசக்கூடாது.

      உமக்கு சொகுசு வாழ்வை வழங்கியதே அறிவியல் தொழில்நுட்பம் தான்:-))\\ இது உமது கண்டுபிடிப்பு. நான் சொல்ல ஒன்றுமில்லை. நீர் இந்தியாவில் உள்ளீரா நாட்டு நடப்புகள் தெரியுமா என்றும் புரியவில்லை. தமிழகத்தில் எங்கு சென்றாலும் திரும்பிய புறமெல்லாம் வீட்டுமனை விற்பனை ஜோராக நடக்கிறது. மென்பொருளில் வரும் பணமெல்லாம் முதலீடு செய்ய கிடைத்து வீட்டு மனைகள் தனா? காஞ்சிபுரத்தில் 30 லட்சம் பனை மரங்கள் காலி. காரணம் விவசாய நிலங்களுக்கு கிடைக்கும் அபரீதமான தொகை, விவசாய நிலங்கள் வீடாக மாறுகின்றன. இலட்சக் கணக்கில் விவசாயிகள் நிலங்களை பிளாட்டுபோட்டு விற்று விட்டு நகரை நோக்கி கட்டுமான கூலிவேலைக்கு இடம்பெயர்தல். சிட்டுக் குருவிகள்,பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் நத்தைகள், தவளைகள்.......... பார்த்தால் தகவல் தெரிவிக்குமாறு இப்போதான் ஒர்த்தர் பதிவு போட்டிருக்கார். இது தான் தொழில்நுட்பம் தந்த பரிசு.

      தொழில்நுட்பம் வச்சு நான் வாழ்கிறேன், ஆனாலும் என்னால் அதன் அயோக்கியத்தனத்தை போட்டு உடைக்காமல் முடியாது.

      Delete
    6. பாகவதரே,

      //அதுசரி சாதி, மலம் அள்ளுதல் இதெல்லாம் மட்டும் புது டாபிக்கா?//

      அவங்கலாம் முன்னேறக்கூடாது என நினைக்கும் கூட்டத்தின் பேச்சு மட்டும் எப்பவும் "புது டாபிக்" தான்!

      #//உயர் சாதிக்காரன் ஏமாத்தினான் .....ஏமாத்தினான் ..... என்று புலம்பியதால் இதைக் கேட்டேன்//

      ஓ அப்படியா?

      கர்நாடக ரெட்டி பிரதர்ஸ்,ஹர்ஷத் மேதா,கேதன் பரேக், லக்குபாய் பதக், ராமலிங்க ராஜு, சுப்ரதோ ராய் இன்னும் பலரின் பேரெல்லாம் உமக்கு தெரியாமல் போனதன் ரகசியம் என்ன?

      நான் பொதுவாக அரசியல் கொள்ளையே பரதேசிகள் ஆக்குகிறதென முதலில் சொல்லிவிட்டேன் அதில் சாதியெல்லாம் இல்லை , அரசியல் தான். அவங்களுக்குள்ள அப்படி ஒரு ஒற்றுமை அவ்வ்!

      #//தெரிஞ்சதில் இருந்து தெரியாத ஒரு விஷயத்துக்கு கொண்டு போனேன்//

      வெண்ணை நானும் தெரிஞ்சதில் இருந்து சொல்லி புரிய வச்சேன் ,நீர் ஏன் ஆப்ரிக்க நாடுகளின் சூழல் பத்தி எழுதி இருக்க கூடாது? ஏன்னா அது உமக்கு தெரியாது , படிச்சாலும் சாம்பிராணி மண்டைக்கு புரியாது அதானே :-))

      #//எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமே, இது எல்லா காலத்திலும் இருந்து வந்தது தானே? ஆனால் 1960 -ல் 35 மடங்காக இருந்த பணக்கார/ஏழை நாடுகளின் பாகுபாடு தற்போது 85 மடங்காக ஆனது எப்படி?//

      எதுவும் தெரியாத கனகாம்பரமே , 1960 இல் ஒரு சவரன் நகை ஒரு மூட்டை நெல் (100கிலோ) விலைக்கு சற்றேழத்தாழ சமம், இப்போ ஏன் இந்த பாகுபாடு , ஒரு சவரன் ஏன் விலை ஏறிச்சு ,நெல் விலை ஏன் ஏறலை?

      அதுக்கு பதிலை சொன்னால் நானும் பதில் சொல்கிறேன் ,எனக்கு விடை தெரியும் கேள்வி கேட்கிறேன் ,ஆனால் ஒன்னுமே தெரியாமல் நீர் கேட்பதை என்னவென்பது அய்யகோ அவ்வ்!

      #//காரணம் விவசாய நிலங்களுக்கு கிடைக்கும் அபரீதமான தொகை, விவசாய நிலங்கள் வீடாக மாறுகின்றன. இலட்சக் கணக்கில் விவசாயிகள் நிலங்களை பிளாட்டுபோட்டு விற்று விட்டு நகரை நோக்கி கட்டுமான கூலிவேலைக்கு இடம்பெயர்தல்.//

      ஆமாம்யா ஒரு ஏக்கரில் விவசாயம் செய்ய செலவு 20,000 ரூ ஆகிறது வரவு 25,000 தான் எனவே நிகர வருவாய் 5000 ரூ, ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு போதுமா அது?

      எனவே ஃபிளாட்டுக்கு விக்குறான் ஒரு மூட்டை நெல்லுக்கு 5000 கொடுத்தால் ஏன் விக்கப்போறான்?

      ஒரு ஐபோனின் விலை ரெண்டு ஏக்கர் விளைச்சல் விலை , ஏன் நெல்லுக்கு உம்மை போன்றோர் நல்ல விலை கொடுத்து விவசாயிகளை காப்பாற்ற கூடாது இல்லை என்னிக்காவது நெல்லுக்கு விலை உயர்த்தனும்னு ஒரு பதிவாச்சும் எழுதினீரா?

      விவசாயி என்ன தான் விளைவிச்சாலும் ,அடிமாட்டு விலைக்கு தான் கேட்பீங்க ஆனால் இணையத்தில வந்து "விஞ்ஞானமே" காரணம்னு புளுத்துவீங்க அவ்வ்!

      ஒரு கீரைக்கட்டு 5 ரூனு சொன்னால் ஐப்போனில் பேசியபடியே 4 ரூவாக்கு கொடுனு கேட்கும் மக்கள் தான் எல்லாத்துக்கும் காரணம், விஞ்ஞானமா பேரம் பேசுது அவ்வ்.

      # விவசாயி நெல்லை விக்கப்போனால் அதை எடைப்போட என காசு பிடுங்கும் அரசாங்கம் இங்கே இருக்கு உமக்கு தெரியுமா?

      அப்போ ஒரு மூட்டை நெல் எடைப்போட 5 ரூ இன்னிக்கு 50 ரூ கொடுத்தால் தான் ,நெல் மூட்டை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக்கழகத்தில் விலை போகும்.

      அந்த 5 ரூபாக்காக அப்பவே சண்டைப்போட்டவன்(10 ஆம் வகுப்பு படிச்சப்போ), தம்பி உங்க அப்பாவ கூப்டுவா இல்லைனா ஓரமா போப்பா ,அடுத்தவங்க எடைப்போட நேரம் ஆகுதுல்லனு என்னை தான் ஓரம் கட்டினாங்க ,இதான் நம்ம நாடு!

      இதே போல ஒவ்வொரு நாட்டுலவும் 1000 கதை இருக்கு, ஆனால் எல்லாத்தையும் வேற பேரால மறைச்சிடுவாங்க ,உம்மை போன்ற கேணைகளும் அதை நம்புங்க.

      # தீப்பெட்டி விஞ்ஞானத்தின் உருவாக்கம், அதனை வைத்து அடுப்பு பற்ற வைத்து அருசுவை சோறாக்கி உண்ணலாம் இல்லை அடுத்தவர் வீட்டு கூறையை பற்ற வைக்கலாம், அது தீப்பெட்டியின் குற்றமன்று அதை வைத்து " வேலை செய்பவன்" குற்றம்!

      எனவே விஞ்ஞானத்தினை எப்படி பயன்ப்படுத்துவது என்பதில் தான் பலன் இருக்கு!

      விஞ்ஞானத்தின் பலனை அனுபவித்துக்கொண்டு அதை விட்டு வெளியில் வராமல் ,அடுத்தவர்களுக்கு அது மோசமானது என சொல்பவன் " சுயநலமி' ஆவான்.

      Delete
    7. @ வவ்வால்

      \\எனவே விஞ்ஞானத்தினை எப்படி பயன்ப்படுத்துவது என்பதில் தான் பலன் இருக்கு!\\
      நீர் நல்ல வக்கீலாகப் போகலாம். கொலைகாரனுக்கே கொலை செய்தது நாம்தானா என்ற சந்தேகம் வந்துவிடும்.

      விஞ்ஞானத்தை சரியா பயன்படுத்தினா ஒண்ணுமே ஆவாதுன்னு சொன்ன ஒரே ஆசாமி நீராகத்தான் இருப்பீர். விஞ்ஞானி ஒரு பய கூட அப்படிச் சொல்ல மாட்டான். அதெப்படிய்யா அறிவியலைப் பாதுகாப்பா பயன்படுத்த முடியும்? பெட்ரோல் எரியும்போது கார்பன் மோனாக்சைடு ஆக்சிஜனா மாறினாத்தான் உண்டு. விஞ்ஞானத்தை ஒரு போதும் எல்லோருக்கும் நன்மை பயக்கும்படி பயன்படுத்தவே முடியாது. மருத்துவம்-மருத்துவ குப்பைகள், மின்னணு-கணினி குப்பைகள், வாகனங்கள்-ஓசோன் ஓட்டை இப்படி கிடைக்கும் சொற்ப சவுகரியத்துக்காக கொடுத்த விலை கொஞ்சம் ஓவர். அது மனுசனுக்கே ஆப்பாகிப் போச்சு, அந்த ஆப்பு மேலேயே உட்கார்ந்துகிட்டு நீர் விஞ்ஞானத்துக்கு வக்காலத்து வாங்கிகிட்டு இருக்கீரு.

      மத்தபடி நீர் சொன்னது எதற்கும் ஆதாரம் கொடுக்கவில்லை, புள்ளி ராஜாவா இருந்தும் 35 நம்பர் 85 ஆனதுக்கு அடிப்படை எதையும் கூறவில்லை, சும்மா எதையோ அடிச்சு விட்டிருக்கீரு. நீரும் இப்படியே எமாத்தியே எத்தனை நாள் தான் பிழைப்பை ஒட்டுவீரோ.............

      Delete
    8. பாகவதரே,

      //மத்தபடி நீர் சொன்னது எதற்கும் ஆதாரம் கொடுக்கவில்லை, புள்ளி ராஜாவா இருந்தும் 35 நம்பர் 85 ஆனதுக்கு அடிப்படை எதையும் கூறவில்லை, சும்மா எதையோ அடிச்சு விட்டிருக்கீரு. நீரும் இப்படியே எமாத்தியே எத்தனை நாள் தான் பிழைப்பை ஒட்டுவீரோ.............//

      நீர் சரியான அரைமண்டைனு தெரியும் ,ஆனால் ரெண்டு கண்ணும் ஃபியூஸ் போன பார்ட்டினு இப்போ தான் தெரியுது, நீர் கேட்டதற்கு அப்பவே பதில் கொடுத்தாச்சு ,அதைக்கூட பார்க்காமல் பொலம்பிட்டு இருக்கீரே அவ்வ்.

      உமக்காக மீண்டும் காப்பி& பேஸ்ட் செய்துப்போட்டுள்ளேன் ,இப்பவாது கண்ணாடிய தொடைச்சு போட்டுக்கிட்டு படியும்,

      //#//1960 வாக்கில் இது 35 மடங்காக ஆகியிருக்கிறது, ஆனால் இன்றைக்கு அது 80 மடங்காகிவிட்டது.
      1960-2014 என்ற இந்த கட்டத்தில் 35 என்பது 80 ஆனது ஏன்?//

      அந்தக்காலத்தில் பொருள் வியாபாரம் மட்டுமே அதுவும் விவசாய உற்பத்திப்பொருட்களே, இப்போ மின்னணு, கணினி, மற்றும் சேவை என அனைத்தும் வியாபாரப்பொருட்கள் அதனை மேலை நாட்டினர் தான் உற்பத்தி செய்றாங்க ,நாம சும்மா வெட்டிக்கதை பேசிட்டு அதை வாங்குறோம்,எனவே அவனுக்கு அதிக வரவு ,நமக்கு அதிக செலவு.

      கணினி பிராசசர் என எடுத்துக்கொண்டால் இன்டெல்,ஏ.எம்டி என ரெண்டே பேரு தான் முன்னணி, உலகம் முழுக்க வாங்கியாக வேண்டிய நிலையில் லாபம் பார்க்கிறான் , இந்தியாவில் எவனுக்கும் பிராசசர் செய்ய தெரியலையே என்ன செய்ய?

      நாம பருத்தி, பாசுமதி, இரும்புத்தாது ,மற்ற மினரல்ஸ்னு ரா மெட்டிரியலாவே வித்துக்கிட்டிருக்கோம் ,அவனோ ஃபினிஷ்ட் குட்ஸ் ஆக விக்குறான் எனவே அவனுக்கு நிறைய காசு ,நமக்கு கொஞ்சம் காசு ,இதெல்லாம் புரிய பொருளாதாரம் கொஞ்சமாச்சும் தெரியனும்ய்யா.

      ஜப்பான் காரன் கார் தயாரிச்சு வித்தால் அது முன்னாடி எலுமிச்சம் பழம் கட்டி ஓட்ட மட்டும் தான்யா உம்மை போன்ற ஆத்திக அசடுகளுக்கு தெரியும் அவ்வ்.

      நாட்டுல ஏகப்பட்ட தேங்கா விளையுது அதை சட்னி அரைச்சு நக்குனது போக மீதிய எண்ணையாக்கி வித்தா காசு நல்லா வரும் ,ஆனால் இந்த ஆத்திக மங்கூஸ் மண்டையன்கள் செவ்வாக்கிழமை ,வெள்ளிக்கிழையானா போதும் ,கூடையில தேங்காவ தூக்கிட்டு போய் கோயிலில் உடைச்சு வீணாக்குதுங்க , இது பத்தாதுனு பூசணிக்காய நடுரோட்டில ஒடைச்சு பைக்கில போறவன சறுக்க விட்டு மூட்டு சில்ல சிதற வைக்குதுங்க ஆத்திக கூமுட்டைகள் அவ்வ்.

      இது போல விவசாய உற்பத்தி பொருளை மண்ணுல சிதறடிச்சு வீணாக்கினா எங்கே இருந்து பொருளாதாரம் உயரும்?

      நான் சொன்னதெல்லாம் கேட்டு தலை கிர்ருனு சுத்தினா , பசு மாட்டு மூத்திரம் புடிச்சு குடிச்சு பாரும் சரியாவுதானு பார்ப்போம் அவ்வ்!//

      இன்னும் விரிவாக வேண்டுமானாலும் பதில் கொடுப்பேன் ஆனால் அதெல்லாம் உம்ம கொரங்கு மூளைக்கு புரியாதேனு பார்க்கேன் :-))

      கணினி கண்டுப்புடிச்ச காலத்தில இருந்து அமெரிக்கன் தான் உற்பத்தி செய்யுறான் ,நாம அதை வாங்கிட்டு இருக்கோம், இந்தியாவில் மக்கள் தொகையில் சுமார் 20% கணினி உபயோகிக்கிறாங்க அதாவது சுமார் 30 கோடி கணியாவது இந்தியாவில் இருக்கு, ஆனால் எல்லாமே அமெரிக்க இன்டெல் சிப்ஸ் பிராசசர் (ஏ.எம்.டி சிறிதளவு),அவன் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யுறான் ,விக்குறான் ,காசு சம்பாதிக்கிறான்.

      நாம வாங்கிப்பயன்ப்படுத்த மட்டுமே செய்யுறோம், அதாவது நாம தொழில்நுட்பத்தினை உற்பத்திக்கு பயன்ப்படுத்தவில்லை ,எனவே நம்ம பணம் வெளியில் போகுது ,அதனால் நமது செல்வம் குறையுது, விக்குறவனுக்கு காசு சேருது, இப்படித்தான் அறிவியல் வளர்ச்சியடைந்த நாடுகள் மேலும் பணக்கார நாடாகுது.

      நாமும் பணக்கார நாடாக ஆகணும் என்றால் ,அறிவியல் நுட்பத்தினை பயன்ப்படுத்தி கணினி பிராசசர் உற்பத்தி செய்ய வேண்டும் ,ஆனால் அதை செய்ய துப்பு இல்லாமல் வக்கணையாக அமெரிக்க தயாரிப்பினை வாங்கி பயன்படுத்தி .பிலாக் எழுதிக்கிட்டு ,அவன் கத்திய காமிச்சு கொள்ளையடிச்சான் என்பது போல பினாத்த வேண்டியது.

      ஏழை நாடுகள் எல்லாம் அறிவியல் நுட்ப உற்பத்தியில் ஈடுபடாதவரையில் ஏழைகளாக தான் இருக்க வேண்டும் ,அல்லது அவற்றை பயன்ப்படுத்தாமல் பணத்தினை மிச்சம் செய்ய வேண்டும்.

      நீர் என்ன செய்றிர்னா , இந்தியாவில் சொந்தமாக கணினி பிராசசர் தயாரிக்கும் வரையில் அமெரிக்க இன்டெல் பொருளை பயன்ப்படுத்த மாட்டேன் , என சபதம் போட்டு ,வீட்டில் இருக்கும் கணினியை தூக்கி குப்பையில் போடும் ,அப்புறம் எப்படி அறிவியல் நுட்ப நாடுகள் பணக்காரனாக முடியும் பார்க்கலாம்:-))

      இதுக்கும் மேலவும் புரியாத மாதிரி நடிச்சு ஊரை ஏமாத்தினா , ஊரே உம்மை பார்த்து க்க்ர் தூ என துப்பும்யா :-))

      தொடரும்...

      Delete
    9. #//பெட்ரோல் எரியும்போது கார்பன் மோனாக்சைடு ஆக்சிஜனா மாறினாத்தான் உண்டு. விஞ்ஞானத்தை ஒரு போதும் எல்லோருக்கும் நன்மை பயக்கும்படி பயன்படுத்தவே முடியாது.//

      சோலார் காரினையும் அறிவியல் தான் கண்டுப்பிடித்துள்ளது அதனை வாங்கி ஓட்டுறது? ஆனால் அதனை செய்யாம பெட்ரோலில் ஓடும் காரை ஏன் வாங்கினீர்?

      பயோ டீசல் , எத்தனால் கலந்த பெட்ரோல் என பல வகையிலும் காற்று மாசுப்படுவதை குறைக்கலாம் அதை செய்றது.

      மாற்று எரிப்பொருள் மற்றும் பெட்ரோலிய விலை அரசியல் பற்றிய எனது சிலப்பதிவுகளின் சுட்டி.

      மாற்று எரிபொருள்:

      #வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மாற்று எரிபொருள்-பயோ டீசல்(bio diesel)

      #வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பயோடீசல்-2: புங்க எண்ணை(Pongamia pinnatta oil)

      #வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: குப்பைக்கு குட்பை- மாற்று எரிபொருள் பயோமாஸ் எத்தனால்( cellulose ethanol)

      #வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மாற்று எரிபொருள்: GOBAR GAS PLANT CONSTRUCTION.

      #வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பெட்ரோல் விலை ரகசியம்!

      #வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: FALLING RUPEE:IMPACT ON INDIAN ECONOMY

      #வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: ஏற்றிய பெட்ரோல் விலையை குறைக்குமா அரசு?

      #வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: ஜம்பிங்க்,பம்பிங்க்,பெட்ரோல் பங்க்!

      #வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பெட்ரோல் விலை குறைப்பெனும் நாடகம்!


      மாற்று எரிப்பொருளைப்பயன்ப்படுத்தினால் காற்று மாசடைவது குறையும், அம்மாசும் இயற்கையாக எளிதில் நீக்கப்படும். எனவே புவி வெப்பமாதலும் குறையும்.

      உலகத்தில் உற்பத்தி செய்யப்படுபவை எல்லாமே ஏற்கனவே உலகில் உள்ள மூலப்பொருட்கள் கொண்டே செய்யப்படுகின்றன,எனவே அவற்றை இயற்கையே மறுசுழற்சி செய்ய வல்லது. ஆனால் அதற்கு என கால அவகாசம் தேவை அதனை உம்மை போன்ற அசட்டு மனிதர்கள் கொடுக்காமல் ,விரைவாக ஆற்றலை எரித்து மாசு உண்டாக்குகிறார்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள். எனவே மாசு என்பது மறுசுழற்சி அடையாமல் தேங்கி விடுகிறது.

      #கோவணம் கட்டிய மனிதன் ஏன் கலர் ஜட்டிப்போடணூம் ,கோவணம் கட்டி வாழ்வது தானே, நீர் நாளையில் இருந்து கோவணம் கட்டி பழகவும், இதனால் சாய கழிவு உற்பத்தி குறைந்து , நீர் மாசடைவது குறையும் :-))

      மனிதனின் அன்றாட தேவைகளையும் மீறி ஆடம்பரத்திற்காக அறிவியலின் கண்டுப்பிடிப்புகளை பயன்ப்படுத்தி மாசடையும் வேகத்தினை மனிதன் அதிகமாக்குவதால் தான் புவி மாசடைகிறது, தேவைக்கு மட்டும் பயன்ப்படுத்தினால் உருவாகும் மாசு இயல்பாகவே நீக்கப்படும் ,எனவே அறிவியல் தான் மாசடைய காரணம் என்பது மனிதன் செய்யும் தவறை மறைக்க சொல்லப்படும் "சப்பைக்கட்டு" அதனையே நீர் செய்கிறீர்.

      Delete
    10. Vavvaal,
      Accidently I have also written the same comment in brief without noticing your comments.
      Lets see, at least now, whether, DAS can understand or not.

      Delete
  21. ///ஒரு கீரைக்கட்டு 5 ரூனு சொன்னால் ஐப்போனில் பேசியபடியே 4 ரூவாக்கு கொடுனு கேட்கும் மக்கள் தான் எல்லாத்துக்கும் காரணம்,//

    சூப்பர் வவ்வால். நச்ச்.....

    ஏன்யா தாசு,
    விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம். அது மாதிரியில்ல இருக்கு உம் கதை. கடந்த 4 நாளா, இத தான சொல்லிக்கிட்டு இருக்கோம். இப்ப கூட புரியலையா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீரா?

    //அதெப்படிய்யா அறிவியலைப் பாதுகாப்பா பயன்படுத்த முடியும்? பெட்ரோல் எரியும்போது கார்பன் மோனாக்சைடு ஆக்சிஜனா மாறினாத்தான் உண்டு. விஞ்ஞானத்தை ஒரு போதும் எல்லோருக்கும் நன்மை பயக்கும்படி பயன்படுத்தவே முடியாது. //

    அறிவியலைப் பாதுகாப்பா பயன்படுத்த முடியாதுன்னு தெரிகிறதல்லவா? பின் ஏன்யா flight ல, bus ல, car ல, மற்றும் two wheeler ல போகுரீர்? மாட்டு வண்டியில போக வேண்டியது தானே? இல்ல நடந்து போக வேண்டியது தானே காஷ்மீருக்கு?

    இதுபற்றி பேச உமக்கு உரிமை இல்லவென்று ஏற்கனவே சொல்லியாச்சில்ல.

    பாட்டி தாத்தா கதைய எடுத்து விடுவீர் என்று எனக்கு தெரியும். இப்போ உள்ள எல்லா பாட்டி தாத்தாவும் அவங்களால முடிஞ்சவரைக்கும் அறிவியலை உபயோகப் படுத்தவே செய்கிறார்கள். தீப்பட்டி, ரேடியோ, டிவி, Bus, Clock etc...

    எங்க தலையின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது தானே!!

    //1960 இல் ஒரு சவரன் நகை ஒரு மூட்டை நெல் (100கிலோ) விலைக்கு சற்றேழத்தாழ சமம், இப்போ ஏன் இந்த பாகுபாடு , ஒரு சவரன் ஏன் விலை ஏறிச்சு ,நெல் விலை ஏன் ஏறலை?//

    நெல் விலையை நிர்ணயிக்கிறது அறிவியலா? இல்லை ஆத்திக கூமுட்டைகளா?

    ReplyDelete
    Replies
    1. \\சூப்பர் வவ்வால். நச்ச்.....\\ இப்படி உசுபேத்தி உசுபேத்தியே உடம்பெல்லாம் ரணகளமா பண்ணிட்டாய்ங்களே......அவ் .....வ்வ்வ்....

      \\இதுபற்றி பேச உமக்கு உரிமை இல்லவென்று ஏற்கனவே சொல்லியாச்சில்ல.\\ எங்க ஊர்ல ஒரு கிழவி கண்ணும் தெரியாது, காதும் கேட்காது. மேற்சொன்ன எதையும் வாழ்வில் பயன்படுத்தியதில்லை, இளம் வயதில் ஒரு தலைச்சுமை+குழந்தை எல்லாம் தூக்கிக் கொண்டு 30 மைல் கூட நடந்தே போகும், வாழ்நாள் முழுக்க நடந்தே தான் போச்சு, கடிகாரம் பார்க்கவே தெரியாது. அது சார்பா கேட்கிறேன் பதில் சொல்லு..........!!

      \\எங்க தலையின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது தானே!!\\

      தலையா அது? முண்டம்......முண்டம்...... நீர் இன்னொரு முண்டம். விவாதம் பணக்கார நாடுகள் ஏழை நாடுகளை கொள்ளையடிப்பது குறித்து. ரெண்டு முண்டங்களும் மாத்தி மாத்தி உள்நாட்டுப் பிரச்சினையிலேயே "குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கிட்டு" இருக்கீங்க. சாதிப் பிரச்சினை, மதப் பிரச்சினை, இந்த இழவெல்லாம் இந்தியாவில் தானே? வெளியில் எங்கே? அதுவும் புரிஞ்சு தொலைக்க மாட்டேன்கிறது. என்னத்த சொல்ல.....??!!

      Delete
    2. //எங்க ஊர்ல ஒரு கிழவி .........அது சார்பா கேட்கிறேன் பதில் சொல்லு..........!! //
      //விவாதம் பணக்கார நாடுகள் ஏழை நாடுகளை கொள்ளையடிப்பது குறித்து. ரெண்டு முண்டங்களும் மாத்தி மாத்தி உள்நாட்டுப் பிரச்சினையிலேயே "குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கிட்டு" இருக்கீங்க. //

      யோவ் ஆத்திக முண்டம்,
      உமக்கு பதில் சொல்லி சொல்லி எனக்கு தலை வலிக்குது. நீர் ஏன்யா இவ்வளவு கூமுட்டையா இருக்கீர்? உங்க வீட்ல எப்படிய்யா உம்மை வச்சி சமாளிக்கிறாங்க. வீட்டுக்கார அக்காவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் போலிருக்கே...

      விவாதம் பணக்கார நாடுகள் ஏழை நாடுகளை கொள்ளையடிப்பது குறித்து என்றால், நீர் ஏன், உங்க ஊர் கிழவியை இங்கு கொண்டு வறீர்?

      இதற்கும் ஏற்கனவே சொன்ன பதில் தான்.
      நீர் computer, digital camera, flight ஐ உபயோகிக்கிறீர் / வாங்குகிறீர்? computer உம் digital camera உம் உங்க தாத்தாவா கண்டுபிடிச்சாங்க. அமெரிக்காவும் ஜப்பானும் தான். அதனால தான் அவன் நம்மை விட பணக்காரனா இருக்கான். நீர் ஒரு பொருளை கண்டுபிடித்து ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் வில்லும். அப்போது நீரும் பணக்காரனாவீர்.

      வவ்வால்,
      என்னால முடியல, ஒரு சின்ன பிள்ளைக்கு சொல்றது மாதிரி சொல்லிகுடுத்தாலும் பாகவதருக்கு புரிய மாட்டேங்குது..அவ்வ்...

      Delete
    3. வேற்றுகிரகம்,

      ஹி...ஹி சின்ன தம்பி பிரபு போல பாகவதரு ,அவருக்கு வேற எதுவும் தெரியாது ஆனால் "அது மட்டும்" நல்லா தெரியும் :-))

      ஏன் ஏழை நாடுகள் ஏழையா இருக்கு என விரிவாக முன்னரே சொல்லிட்டேன் அது கண்ணுல தெரியாம போச்சுனு இப்ப மீண்டும் காப்பி& பேஸ்ட் போட்டு நல்லா வெளக்கி வச்சிருக்கேன் இன்னும் புரியாத போல நடிச்சா பேசாம ஒரு ஆஸ்கார் அவார்டு கொடுத்து அனுப்பிட வேண்டியது தான் அவ்வ்.

      # அந்த கிழவி அப்படி இருக்கில்ல அதே போல பாகவதரும் இருந்தால் ,பூலோகம் மாசடையாது, நம்ம நாட்டு காசும் வெளிநாட்டுக்கு போகாது ,அவனும் பணக்காரனாக மாட்டான் :-))

      Delete
    4. @ வவ்வால்
      @ Alien

      கடைசியா ரெண்டு பேருமே ஒரு விஷயத்தை ஒப்புக்கிட்டீங்க. டெக்னாலஜி இருக்கிறவன் அது இல்லாதவனிடம் கொள்ளையடிக்கத்தான் செய்வான். ஏலியன் ஆரம்பத்திலிருந்தே கொள்ளையடிக்கப் படுவதை மறுக்கவில்லை. வவ்வால் பாலிஷாக இது அரசியல்வாதிகளின் சூழ்ச்சி, தவிர்க்கக் கூடியது என்கிறார். மேலும் உனக்கு வேண்டாமென்றால் வாங்காமல் போ, அல்லது நீயும் அவர்களுக்குச் சமமாக டெக்னாலஜியை டெவலப் பண்ணு, நீ ஏய்க்கப் பட மாட்டாய் என்கிறார்.

      வகுப்பில் எல்லோரும் புத்திசாலி மாணவர்களாக இருப்பதில்லை. இதில் டெக்னாலஜியில் மட்டும் எல்லோரும் சமமாக முன்னேற இயலுமா?

      டெக்னாலஜியில் இதுவரை தீய பக்க விளைவுகள் இல்லாத ஒன்று வந்ததாகத் தெரியவில்லை. சூரிய சக்தியில் இயங்கும் கார், சைக்கிள் போன்ற அனைத்தும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன, எதுவும் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் நடைமுறைக்கு வரவில்லை.

      மனிதன் டெக்னாலஜியை சரியாகப் பயன்படுத்தினால் சுற்றுப் புறச் சூழல் பாதிக்காது என்கிறார். சாராயக் கடையை அரசு திறக்கும், மக்கள் தான் பார்த்து உடல் நலத்துக்கு கேடு வராம குடிக்கணும் -என்று சோ சொன்னது போலிருக்கு!! நடக்கிற காரியமா இது?

      டெக்னாலஜியையும் பயன்படுத்த வேண்டும், சுற்றுச் சூழலையும் காக்க வேண்டுமானால் ஊருக்கே ஒரே ஒரு கார் மட்டும் தான் ஓட்ட முடியும். அப்புறம் அவன் மேல்சாதிக்காரன் மட்டும் தான் ஓட்ட வேண்டுமா? மலம் அள்ளுபவன் காரில் போகக் கூடாதா? என்று கொடி பிடிக்க ஆரம்பிப்பார்கள், அது இப்போதைய நிலையில் தான் வந்து முடியும்.

      ஏழை நாடுகளை ஏய்க்க தொழில்நுட்பம் நேரடிக்காரணம் இல்லாவிட்டாலும் மறைமுகக் காரணமாகிப் போனதென்னவோ உண்மையே. அதை தவறாகப் பயன்படுத்தி விட்டார்கள் என்பது வேறு விஷயம். AK47 துப்பாக்கி செய்து கொடுத்துவிட்டு பாதுகாப்பாய் பயன்படுத்த வேண்டும் என்றால் அதை தோசை சுடப் பயன்படுத்தினால் மட்டுமே முடியும். ஆனால் அது நடக்காது.

      Delete
    5. பாகவதரே,

      //ஏழை நாடுகளை ஏய்க்க தொழில்நுட்பம் நேரடிக்காரணம் இல்லாவிட்டாலும் மறைமுகக் காரணமாகிப் போனதென்னவோ உண்மையே//

      ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு நன்றி!

      எப்போ தொழில்நுட்பம் நேரடிக்காரணம் இல்லை என உண்மையை ஒப்புக்கொண்டீரோ அப்பவே மேட்டர் ஓவர்!

      வேறு ஒரு நேரடிக்காரணம் இருக்கு அதுவே மக்களைப் பரதேசியாக்குகிறது என்ற உண்மை உமக்கும் தெரிகிறது,ஆனால் அதனைக்குறிப்பிடாமல் விஞ்ஞானமே காரணம் என சொன்னதில் அர்த்தமில்லை ,எனவே பதிவை அழித்துவிட்டு மீண்டும் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்து அந்த நேரடிக்காரணம் என்ன என விளக்கவும் :-))

      #நாச்சியப்பன் கடையில கப்பு வாங்கி பேரு போட்டுக்கவும் :-))

      Delete
    6. பாகவதரே,

      இப்போ காமெடி டைம், ஸ்டார்ட்ஸ் மியூஜிக்!

      //டெக்னாலஜி இருக்கிறவன் அது இல்லாதவனிடம் கொள்ளையடிக்கத்தான் செய்வான்.//

      இப்போ உம்மிடம் "பருப்பு" இல்லை ,ஐ மீன் சாம்பார் வைக்கிற பருப்பு ,ஆனால் உமக்கோ ஊசிப்போன பருப்பு சாம்பாரா இருந்தாலும் சட்டிக்குள்ள(ஜட்டியல்ல) தலைய விட்டு நக்க ஆசை,எனவே பருப்பு இருக்கிறவனிடம் போய் கேட்கிறிர் , கிலோ 100 ரூவா என சொல்லிக்காசுக்கேட்டால் ,அந்த பருப்பு வச்சிருப்பவன் உம்மிடம் கொள்ளையடிக்கிறான் என்பீரா?

      பருப்பு கேட்டுப்போனதால் அதனை விக்குறான் ,, இல்லைனா உம்ம வீட்டுக்கே வந்து கதவை தட்டி பருப்பு வாங்க சொல்லி மிரட்டவா போறான்/

      நீர் வேண்டுமானால் அந்த பருப்பு வியாபாரியிடம் , பருப்பு வச்சிருக்கவன் ,பருப்பு இல்லாதவனிடம் ஏய்த்து கொள்ளையடிக்கிறான் என சொல்லிப்பாரும் ,எடைக்கல்லை எடுத்து நடு மண்டையில நச்சுனு அடிச்சு டாப்ப ஓப்பன் பண்ணிப்புடுவான் அவ்வ்1

      உமது சொத்தை வாதங்களை இனியாவது கடைப்பரப்பாமல் வழக்கம் போல பஜனையை தொடரவும் :-))

      Delete