Friday, April 4, 2014

மான் கராத்தே...... படம் பார்க்காமலேயே ஒரு விமர்சனம்!!

வணக்கம் மக்கள்ஸ்!!


சற்று முன்னர் தான் கவிதை வீதி சௌந்தர் எழுதிய மான் கராத்தே சினிமா விமர்சனம் 

படித்தேன்.  அவர் கதை என்ன என்று எழுதியிருந்ததை வைத்துப் பார்க்கும் போது எனக்கு நூறு வருஷத்துக்கு முன்னாடி சார்ளி சாப்ளின் நடித்த "சிட்டி லைட்ஸ்" என்ற படத்தின் ஞாபகம் தான் ப்ளாஷ் ஆகியது. 





அந்தப் படத்தில் கண் பார்வையற்ற தனது காதலியின் ஆபரேஷன் செலவுக்கான பணத்தை சம்பாதிக்க குத்துச் சண்டையில் பங்கேற்க சார்ளி சாப்ளின் ஒப்புக் கொண்டு முரட்டு வீரர்களுடன் அந்த உடம்போடே போட்டியிட்டு சிலரைத் தோற்கடிப்பார். ஆனால் இறுதியில் ஒருவரிடம் தோற்றுப் போவார்.
 



இருப்பினும் இரவில் குடிபோதையில் மட்டுமே இவரை நினைவு கொண்டும், பகலில் மறந்து விட்டும் இருக்கும் ஒரு பணக்கார நண்பர் மூலம் பணத்தை பெற்று காதலிக்குத் தந்து விட்டு, அதே நண்பரின் கொலைக்கு இவரே காரணம் என்று குற்றம் சாட்டப் பட்டு ஜெயிலுக்குச் சென்று விடுவார்.  காதலிக்கு இவர் முகம் தெரியாது. கிளைமேக்சில் இவர் தான் தனக்கு கண் பார்வை கிடைக்கச் செய்தவர் என்று தெரிய வரும் காட்சியைப் பார்த்து கண்ணீர் விடாதவர் யாரும் இருக்க முடியாது.

இந்த படத்தின் கண்ணு தெரியாத காட்சி கன்சப்டை எடுத்து  இயக்குனர் எழில் "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தை எடுத்தாரு.

கிளைமாக்ஸ்

இப்போ குத்துச் சண்டை காட்சிகள் "மான் கராத்தே" ஆகியிருக்கு!!

 ஏ.ஆர். முருகதாஸ் அப்படின்னாலே ஆங்கிலப் பட காப்பிதானே!!  ஹி ...........ஹி ...........ஹி ...........

சிட்டி லைட்ஸ் முழுப் படம் 

1 comment:

  1. இனி படத்தின் பெயரையும் அதில் சம்பந்தப் பட்டவர்களின் பட்டியலையும் டைரக்டர் யார் என்பதையும் சொல்லிவிட்டாலேயே போதும், படத்தின் கதையையும் எந்தப் படத்திலிருந்து எடுக்கப்பட்டது போன்ற விவரங்களையும் சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறது.
    ரொம்ப வேகமாய்த்தான் இருக்கீங்க!

    ReplyDelete