Friday, February 8, 2013

உலக நாயகன்: யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை

"ஒரு அற்புதமான நடிகர், தமிழ் திரையுலகிற்க்குக் கிடைத்த பொக்கிஷம்" உலக நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப் படும் திரு.கமல்ஹாசன் அவர்களைப் பற்றி ஒரு வரி சொல் என்றால் நான் இதைத்தான் சொல்வேன்!!  திரைப் படங்களில் நடிக்கும் போது ஓவ்வொரு படத்திலும், தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாகவே மாறிவிடும் திறமை முன்னர் நடிகர் திலகத்திற்கு மட்டுமே இருந்தது, அவருக்கு அடுத்து அந்தத் திறமையைப் பெற்ற ஒரே கலைஞன் திரு.கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே.

இவரது தற்போதைய படம் விஸ்வரூபம், படத்துக்கு சொந்தக்காரன் நான், அது எப்போ எப்படி வெளியிடனும்னு நான்தான் முடிவு செய்வேன்னு சொல்லிக்கிட்டு இருந்தார்.  ஆனா, அவரே நம்பாத விதி வேற மாதிரி செயல் பட ஆரம்பித்தது.  படத்தை இவர் எடுத்திருக்கலாம், ஆனா ரிலீசை பலர் பல விதமாக முடிவு செய்து விட்டனர்.   ஒருபுறம் அரசு 144 போட்டு இழுத்தடித்தது.  இவரு கேசை போட்டு ஜெயித்தாலும் ஆத்தாவின் அரசு, அடுத்த நாள் காலை வரை கூட விடக்கூடாதுன்னு நட்ட நடு இராத்திரியில உயர் நீதி மன்ற ஜட்ஜ் வீட்டுக்குப் போய் தூங்கிகிட்டு இருந்தவரை எழுப்பி தடையுத்தரவு வாங்கி  மக்கள் நலனைக் காப்பதில் தன்னுடைய எல்லையில்லா  கடமையுணர்ச்சியை  நிரூபித்து, ரிலீசை மேலும் இழுத்தடித்தது.  ஒரு வழியா சம்பந்தப் பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை எல்லாத்தையும் முடித்து படத்தை பிப்ரவரி 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகுதுன்னு பார்த்தா, அதற்க்கு முதல் நாளே சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் தெருத் தெருவுக்கு உயர்தர டிஜிட்டல் DVD -க்களை, எடிட் செய்யாத முழுப்படம் என்று கூவிக் கூவி  அஞ்சுக்கும் பத்துக்கும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். போதாது என்று பல புண்ணியவான்கள் இணைய தளங்களிலும் இந்தப் படத்தை நல்ல தரத்துடன் லீக் செய்து விட்டனர் !!  தியேட்டரில் ரிலீசுக்கு முதல் நாளே காணலாம் என்ற உறுதிமொழியை நம்பி DTH -ல் படம் பார்க்க 1000 ரூபாய் கட்டியவர்கள், இன்னமும் படம் வராமல் காத்துக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டுக்காரன் அஞ்சோ பத்தோ கொடுத்து படத்தை பார்ப்பதைக் கண்டால் நொந்து தான் போயிருப்பார்கள்!

ஏதோ பிரச்சினை வரும், அப்படி இப்படின்னு அது பெரிசானாலும் அதுவே விளம்பரமாவும் ஆயிடும், படம் எதிர் பார்த்தபடியே ரிலீஸ் ஆயிடும் என்றெல்லாம் தப்புக் கணக்கு போட்ட உலக நாயகனுக்கு,  எங்க பொறுமைக்கும் ஒரு எல்லையிருக்கிறது என்று இஸ்லாமியர்கள் காட்டிவிட்டனர்.  இந்த சமயத்தில், நாட்டை விட்டே போய்விடுவேன் என்று இவர் பேட்டிகளில் சொன்னபோது மனம் ஒரு புறம் கணக்கவே செய்தது.   ஆனாலும், திரைப்படங்களில் தத்ரூபமாக இவர் நடித்ததைப் பார்த்துப் பார்த்து நிஜத்திலும் இவர் எதையாவது சீரியசாகச் சொன்னாலும் அல்லது கண்ணீரின் விளிம்பிற்கே சென்றாலும் இதுவும் நடிப்போ என்ற சந்தேகமும் எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது!! 

இவரைப் பற்றிய பிம்பம் லேசாக சரிய ஆரம்பித்தது இவர் நடித்த நாயகன் திரைப் படம் ஆங்கிலத்தில் வந்த The God Father என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்று தெரிய வந்தபோதுதான்.  கதை மட்டுமல்ல, பல காட்சிகளையும் கூட அப்படியே சுட்டிருந்தார்கள். உதாரணத்துக்கு நாயகன் ஒரு காட்சியில் வில்லனை மார்பில் பெரிய சுத்தியலால் அடிக்கும் சீனில், ஒரு தண்ணீர் குழாயை உடைத்து விடுவார், தண்ணீர் Fountain போல உயரமாக எழும்பும், அந்தக் காட்சி அப்படியே  The God Father படத்தில் வரும்.  முதலில் ஏதோ இது ஒரு படம் தான், அதுவும் மணி ரத்னம் எடுத்த படம் என நினைத்தால்,  இவரது டஜனுக்கும் மேலான  படங்கள் உலகப் படங்களில் இருந்து  காப்பியடிக்கப் பட்டவை என்றும் அவற்றில் பலவற்றில் கதை என்று இவரது பெயரையே  போட்டிருக்கிறார் என்றும் சமீபத்தில் தான் தெரிய வந்தது. பதிவர் கருந்தேள் அவர்கள் தனது பதிவுகளில் இவரைப் பற்றி அழகாக தோலுரித்துக் காட்டியிருந்தார்.  அதன்படிப் பார்த்தால், உலகப் படங்களின் கதைகளை சுடும் வேலையை இவர் ராஜபார்வையில் இருந்தே ஆரம்பித்திருக்கிறார்.

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா ? 
Inspired kamal Hassan 
கமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா? புதிய தகவல்கள் – வீடியோக்களுடன்


"உலக நாயகன்" என்றால் தமிழ்ப் படத்தை உலக அளவில் எடுத்துச் செல்பவர் என நாம் தவறாக நினைத்திருந்தோம், உண்மையில் இதன் அர்த்தம் உலகப் படங்களின் கதைகளை கள்ளத் தனமாக உருவி, ஆங்கிலம் தெரியாத தமிழனுக்கு படமெடுத்து கலைச் சேவை செய்பவர் என்பதே!! 

இவரை பலகாலம் நிறைய பேர் ஆஸ்கார் நாயகன் என்று அழைத்துக் கொண்டிருந்தனர்.  எதை வைத்து என்று இன்னமும் யாருக்கும் தெரியாது என்பது வேறு விஷயம்!!  ஆனால், சத்தமே போடாமல் இரண்டு ஆஸ்கார்களை தட்டி வந்த தமிழன் AR ரஹ்மானை இவரால் மனதாரப் பாராட்ட முடியவில்லையே?!!  "இளையராஜாவுக்கு அப்புறம் இவர்தான் சிறந்த இசையமைப்பாளர்" என்று இவர் ஒருத்தர் பெயரை முன்மொழிந்தாரே..!!  அதை என்னவென்று சொல்வது??!! 

இவர் எல்லோருக்கும் கைக்குழந்தையாம்.  நான் சிவாஜியின் மடியில் உட்கார வைக்கப் பட்டு வளர்க்கப் பட்டவன், எம்ஜியாரால் தோளின் மேல் தூக்கிவிடப் பட்டவன் [அது மாதிரி ஒரு படத்துல சீன் வருதாம்!!], கருணாநிதி கைகளில் ஏந்தி அரவணைக்கப் பட்ட குழந்தை என்று 58 வயசாகியும் யாரை எடுத்தாலும் அவர்களுக்கெல்லாம்  தான் ஒரு குழந்தை என்றே சித்தரித்துக் கொள்கிறார்.  ஆக மொத்தத்தில், ஆத்தாவைத் தவிர மற்ற எல்லோருக்கும் இவரு பச்சிளங் குழந்தை தான்!! போதாததுக்கு ரஜினிகாந்த்தும்  சேர்ந்துகிட்டு, "கலைத்தாய் எல்லாக் குழந்தைகளையும் நடக்க விட்டுட்டா, ஒரே ஒரு குழந்தையை மட்டும் இடுப்பில் தூக்கி மார்பில் அனைச்சுகிட்டா, அந்த குழந்தைதான் உலக நாயகன்" என்றெல்லாம்  உவமை சொல்லி புல்லரிக்க வைக்கிறார்!!

என்ன கொடுமை ரஜினி சார்..... இது!!

தான் சமூகப் பொறுப்புள்ளவன், சமுதாயத்துக்கு எனது கடமையைச் செய்கிறேன் என்று மூச்சுக்கு  மூச்சு சொல்லிக் கொள்கிறார்.  அப்படி இவருக்கு யார் கடமையைக் கொடுத்தாங்கன்னுதான் விளங்க மாட்டேங்குது.  அப்படியெல்லாம் கடமையுணர்ச்சி இருக்கும் ஆள், முன்னாள் முதல்வரின் பாராட்டு விழாக்கள் எல்லாவற்றிலும் பங்கெடுத்திருந்தாலும் அதில் ஒன்றிலாவது குடி குடியைக் கெடுக்கும் என்றும் அதை தடுக்க வேண்டும் என்று பேசியிருப்பாரா?  நான் உங்கள் கரங்களில் தவழ்ந்த குழந்தை என்று சோப்பு தானே போட்டார்?  அப்புறம் எங்கேயிருக்கிறது சமுதாயக் கடமை உணர்ச்சி?

தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்கிறார்.  அப்படி மீறிப் பேசுபவர்களைப் பற்றி இவர் சொன்ன வார்த்தைகளை நான் இங்கே போடக் கூட முடியாத அளவுக்கு காட்டமான கெட்ட வார்த்தைகளால் சாடியிருக்கிறார்.  சரி, இவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அடுத்தவர் பேசக் கூடாதுதான்.  அதே மாதிரி, இவரும் நடிப்பை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கலாமே? அவ்வாறு இராமல், மக்கள்  நெடுங்காலமாக கொண்டுள்ள நம்பிக்கைகளைப் பற்றி மேடை போட்டு பேசலாமா?  உதாரணத்திற்க்கு, திருமணத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என்கிறார்.  அது உண்மையாகவே இருக்கட்டும், அதை ஊரறிய மைக் போட்டு கூறத்தான் வேண்டுமா? என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ஒருபோதும் வற்ப்புறுத்தியதில்லை, அதனால் அவள் ரொம்ப நல்லவள் - என்று தற்போது தன்னுடன் வசிக்கும் நடிகையைப் பற்றி கூறுகிறார்.   காலங் காலமாக திருமண பந்தத்தில் வாழ்ந்து வரும் மக்கள் என்ன முட்டாள்களா?  இவரது பேச்சு அந்த நம்பிக்கையில் விழும் அடியல்லவா?  இது மக்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சொல்ல முடியுமா?  சினிமாக்காரர்கள் போடும் சட்டை, பேன்ட், புடவை ரவிக்கை தானே பின்னர் ஃபேஷனாக உருவாகிறது?  பாட்ஷா படம் வெளியானபோது காக்கி, சட்டையும் பேண்டையும் போட்டு கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் எண்ணற்றோர் உள்ளனரே?

அடுத்து இவர் நாத்தீகர் என்று சொல்லிக் கொள்கிறார்.  "கடவுள் இல்லை எனச் சொல்லவில்லை, ஆனால் இருந்தால் பரவாயில்லை" என்று தான் சொன்னேன் என்கிறார்.  இந்த மாதிரி விஷக் கருத்துக்களை பேசி மக்கள் மனதில் நஞ்சை வார்க்கலாமா?  இறை நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம் அல்லவா?  இவரது பேச்சுக்கள் அந்த நம்பிக்கையை நசுக்குவதாக இல்லையா?  நடிகன் நடிப்போடு தனது வேலையை நிறுத்திக் கொள்ளாமல், இந்த மாதிரி சமுதாய விஷயங்களில் எதற்காக மூக்கை நுழைக்க வேண்டும்?  இதெல்லாம் இவரது கருத்து சுதந்திரம் என்றால்,  பெண்களை திருமணம் செய்து அம்போ என விட்டவர்களைப் பற்றியும், திருமணம் செய்யாமலேயே பெண்ணுடன் வாழ்பவர்களைப் பற்றியும் மற்றவர்கள் பேசவும் அதே கருத்து சுதந்திரம் உள்ளது.  அங்கே வந்து, இதைப் பேச உரிமையில்லை என்று யாரும் சொல்ல முடியாது.

நண்பர்களே,  இந்த இணைய தளத்தில் பல 'பழைய' திரைப்படங்கள் உள்ளன பார்த்து மகிழுங்கள்.  இங்கு சென்ற பின்னர் படங்கள் இல்லையென மத்தியில் செய்தி வந்தால், இடது ஓரத்தில் உள்ள படத்தின் போஸ்டர் மீது கிளிக் செய்து பாருங்கள், உங்கள் அதிர்ஷ்டம் படம் வந்தாலும் வரும்.  படத்தை  விளம்பரம் ரெட்டையா வந்து மறைச்சாலும், கீழேயுள்ள Play மீது சொடுக்கவும், சில வினாடிகள் பொறுத்து படம் வந்ததும்  விளம்பரம் மறைஞ்சிடும் [or Fullscreen போடுங்க].  இதே இணைய பக்கத்தில்  New Tamil Movies  என்றும் ஒரு லிங்க் உள்ளது, அது என்ன என்று யாரவது விளக்கினால் நலம்.

63 comments:

  1. It is impossible to write a sentence in English without using alphabets,for which I have the copyright...-:)

    Come to the 19th century man...Shackingup is reaaly old...

    ReplyDelete
    Replies
    1. எவனாச்சும் கஷ்டப்பட்டு மூளையை கசக்கி கதையை ரெடி பண்ணுவான் அதை சி.டி . வாங்கிப் போட்டு பாத்து தமிழில் காசு பண்ணுவீங்க, அவார்டு வாங்கிக்குவீங்க!! இதை நியாயப் படுத்த இந்த மாதிரி ஒரு தன்னிலை விளக்கம்!! ஐயோ...... ஐயோ.........

      அதை கூட மன்னிச்சுடலாம் ஆனா, அதையே ஆஸ்கார் மாதிரி உலகத் தரமான இடங்களுக்கு அனுப்பலாமுங்களா?

      Delete
    2. The secret to creativity is knowing how to hide your sources...-:)

      Sorry Einstein...

      Delete
    3. The most creative people imitate rarer, more brilliant sources and cover their tracks...

      Yah everyone tries to be creative...Unfortunately in this day and age...we live in a small glass house...

      BTW...nice writeup..very different from your other ones...

      Delete
    4. அவரு எந்த அர்த்தத்தில் சொன்னாரோ, அவரு பேரை இங்கே இழுத்து அவருக்குண்டான மதிப்பை கெடுக்கக் கூடாது. எல்லா மாணவர்களும் பாடப் புத்தகத்தையே படித்துவிட்டு பரீட்சைக்குப் போனாலும், படிச்சதை ஞாபகப் படுத்தி எழுதுவதற்கும் அப்படியே முன்னாடி இருக்கிறவன் பேப்பரைப் பார்த்து எழுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

      சீனுக்கு சீன் அப்படியே எல்லாம் எடுத்துவிட்டு "ரெண்டு பேருக்கு ஒரே மாதிரி கற்பனை வந்திருக்காதா?", mere coincidence, inspiration என்றெல்லாம் பசப்புவது, வீடியோவில் சிக்கிய கள்ளச் சாமியார் "வீடியோ மார்பிங் செய்யப்பட்டது" என்பது போல உள்ளது.

      Delete
    5. \\The most creative people imitate rarer, more brilliant sources and cover their tracks...\\ தாங்கள் அன்றாட வாழ்க்கையில் சந்தித்தவர்கள், பார்த்த சம்பவங்கள், கேள்விப்பட்ட விஷயங்களே தங்களது நாவல்களுக்கு அடிப்படை என பல எழுத்தாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இருந்தாலும் அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வருவதற்கும் சுவைபட தருவதற்கும் அவர்களுடை தனித்திறமை தேவைப் படுகிறது. அவ்வாறு வந்த பின் அது அவர்களுடைய intellectual property ஆகிறது. சிலவற்றுக்கு காப்புரிமை உண்டு, சிலவற்றுக்கு இல்லை. அதனால் தானே கண்ணா லட்டு தின்ன ஆசியா என் கதை என பாக்கியராஜ் போராடுகிறார்?

      \\Yah everyone tries to be creative...Unfortunately in this day and age...we live in a small glass house...\\ முன்னாடி காப்பியடிச்சா யாருக்கும் தெரியாது இப்போ நம்மாளுங்க நோண்டி நொங்கெடுத்து விடுகிறார்கள் அவ்வளவுதான்.

      \\BTW...nice writeup..very different from your other ones...\\ வாவ்!! நன்றிங்க!!

      Delete
    6. Revere: If Kamal is stealing and "creating", that does not mean, nobody can create without stealing!

      The problem with Kamal Hassan's plagiarism is that HE NEVER ADMITS that. The lack of honesty is something I would not see in a "rationalist"! Because we dont have God to forgive us! We only have conscience. When KH's conscience is questionable, he is can not be a rationalist anymore!

      Delete
  2. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ஜெயதேவ். வழக்கம் போல் எல்லோரும் எங்கே நாம் வேறு மாதிரி எழுதினால் நம்மை கட்டம் கட்டிவிடுவார்களோ என்று கூட்டத்தோடு கோரஸ் பாடுகிறார்கள். உங்கள் பதிவு தான் டாப்

    ReplyDelete
    Replies
    1. @மருதநாயகம்
      உங்க இந்த ஒரு கமாண்டே எனக்குப் போதும் சார்!! முதல் வருகைக்கு நன்றி!!

      Delete
  3. ஜெயதேவ்: யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை

    ReplyDelete
  4. தனக்கு ஒரு நியாயம், அடுத்தவருக்கு ஒரு நியாயம் என்ற சுயநல மற்றும் முரண்பாட்டின் உதாரணம்தான் கமல்!

    ReplyDelete
    Replies
    1. Thanks Vijayakumar, Your profile picture is fantastic, very creative, I am mused every time I see that, Thanks.

      Delete
  5. மாப்ளே தாசு,

    ஏன் இந்த கொலைவெறி? கமல் ஒரு நடிகர்& வியாபாரி. பிடித்தால் படம் பாரும் ,இல்லையேல் பார்க்காதீர்.

    கமல் பிரபலம் என்பதால் அவரின் வாழ்வு வெளியே தெரிகிறது. நம் வாழ்வு வெளியே தெரியாததால் யோக்கியன் ஆகிறோம்!!

    திரைப்படங்களில் சுட்ட காட்சிகள் இருப்பது வழக்கம்தான்!!!

    ஆப்கானிஸ்தான் காட்சிகள் கூட அல்கொய்தா,தலிபான்களின் யுட்யூப் காட்சிகளில் இருந்து சுட்டதுதான்.


    ஃப்ரெடெரிக் ஃபோர்சைத்தின் ஆஃப்கன், ப்ராட் தாரின் அபோஸ்தல் போன்ற‌
    புத்தகங்களின் காட்சிகளும் படம் பார்க்கும் போது மனதில் ஓடின!!

    படம் கொஞ்சம் புரிவது கடினம், மார்க்க பந்துக்களின் விளம்பர பிரச்சாரம் இல்லை எனில் படம் ஓடியே இருக்காது!!


    இனும் பாருங்கள் மார்க்க பந்துக்களின் விளம்பர எதிர்ப்பினால் நரேந்திர மோடியும் பிரதமர் ஆவதும் உறுதி!!


    நாத்திகம் படத்தில் பேசுவது எப்படி தவறு ஆகும்?. பிடிக்காவிட்டால் படம் பார்க்காதீர்!!!.
    **
    பதிவின் ஹை லைட்டே இதுதான் ஹி ஹி!!

    இணையத்தில் பழைய படங்களுடன் ______ இணைப்பு இருப்பதைக் கண்டுபிடித்தீரா? ஹி ஹி

    பழைய படம் கூட காப்பிரைட் இல்லாமல்தான் செய்யும் திருட்டுவேலையே!!

    ஏதேனும் பிரச்சினையில் சிக்கி கொள்ளாதீர்!!. யோசித்து எழுதும் மாப்ளே!!

    நீரு ஆத்திகர்,மிக மிக நல்லவரு!!

    வாழ்க வளமுடன்!!!!!


    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. மாமூல் மாமு,

      \\கமல் பிரபலம் என்பதால் அவரின் வாழ்வு வெளியே தெரிகிறது. நம் வாழ்வு வெளியே தெரியாததால் யோக்கியன் ஆகிறோம்!!\\ அதை வெளியிலேயே காட்ட வேண்டாம், ஊரு கேட்டு போகும்னு தான் சொல்றேன். லிவிங் டுகதேர் எல்லாம் இவர் வாயால் உளறிக் கொட்டியவைதான்.

      \\திரைப்படங்களில் சுட்ட காட்சிகள் இருப்பது வழக்கம்தான்!!!

      ஆப்கானிஸ்தான் காட்சிகள் கூட அல்கொய்தா,தலிபான்களின் யுட்யூப் காட்சிகளில் இருந்து சுட்டதுதான். \\ அப்போ கண்ணா லட்டு திங்க ஆசையா கேசை பாக்கியராஜ் வாபஸ் வாங்கட்டும். இது கூட அவருக்குத் தெரியாம சின்னபுள்ளை தனமா கேசு போட்டிருக்காரு.

      \\நாத்திகம் படத்தில் பேசுவது எப்படி தவறு ஆகும்?. பிடிக்காவிட்டால் படம் பார்க்காதீர்!!!.\\ அவரு பப்ளிக்காவே பேசுறாரு மாமு. பேசுவது சுதந்திரம் என்றாலும் மக்கள் மனம் புண்படாமலும், அவர்களது ஆயிரங்காலத்து நம்பிக்கையை புண்படுத்தாமலும் இவர் பெசலாமல்லவா?

      Delete
    2. சார்வாகன் மச்சான் என்ன சொல்றாக. நாத்திகன் சொம்பு திருடினாலும் அதில் ஒரு நாயம் இருக்கும்ணா?!!

      நாத்திகன் கேவலமா நடந்துக்கிட்டான்னா வெட்கப்பட வேண்டியது இன்னொரு நாத்திகன்!

      நம்ம மச்சான் நாத்திகரா என்ன? சும்மா பரிணாமம் பேசிக்கிட்டு திரிகிறாரு, அம்புட்டுத்தான்! :)))

      Delete
    3. @ வருண்

      \\சார்வாகன் மச்சான் என்ன சொல்றாக. நாத்திகன் சொம்பு திருடினாலும் அதில் ஒரு நாயம் இருக்கும்ணா?!!\\ LOL

      Delete
    4. அன்புள்ள வருண் மச்சான்,

      நலமா? இங்கும் அனைவரும் நலம். கமல் ஒரு நாத்திகர் என அறிவிப்பதால் நான் அவர் செய்யும் காப்பி அடிப்பதை நான் ஏன் நியாயப் படுத்த வேண்டும். நாம் எப்போதும் பதிவில் மூலத் தகவல் சுட்டி கொடுப்பது வழக்கம்!!.கமல் காப்பி அடிப்பதை ஒத்துக் கொள்வது இல்லை என்பது தவறே!!!

      அப்புறம் நான் ஆத்திகன், முஸ்லிம் என பல் புரளிகள் இருப்பது உண்மைதான்.நமக்கு இயற்கைக்கு மேற்பட்ட சக்தி,இறப்புக்கு பின் வாழ்வில் நம்பிக்கையோ,ஈடுபாடோ இல்லை!!. மனிதர்களின் பிரச்சினைக்கு இங்கே,இப்போதே தீர்வு வேண்டும்.இதுதான் நம் நாத்திகம்.இதனை நாத்திகம் என் ஏற்க/மறுக்க உமக்கு உரிமை உண்டு!!

      அப்புறம் பரிணாமத்திற்கும் நாத்திகத்திற்கும் தொடர்பு இல்லை. அது இப்போதைய ஏற்கப்படும் உயிரினத் தோற்ற பரவல் அறிவியல் கொள்கை.அவ்வளவுதான்!!!


      [வழிநடத்தப்பட்ட ]பரிணாமத்தை ஏற்கும் ஆத்திகர்களும் உண்டு !!1

      இக்கடிதம் கண்டவுடன் பதில் போடவும்!!

      மாப்ளே தாசையும் விசாரித்ததாக சொல்லவும்

      நன்றி!!

      Delete
    5. ***அன்புள்ள வருண் மச்சான்,

      நலமா? இங்கும் அனைவரும் நலம். கமல் ஒரு நாத்திகர் என அறிவிப்பதால் நான் அவர் செய்யும் காப்பி அடிப்பதை நான் ஏன் நியாயப் படுத்த வேண்டும்?***

      படுத்தாதீங்க! போற வர்ரவன் எல்லாம் அறையட்டும்!

      ***"கமல் காப்பி அடிப்பதை ஒத்துக் கொள்வது இல்லை" என்பது தவறே!!!**

      அப்பாட!!! இதைக் கொண்டு வர என்ன பாடு பட வேண்டியிருக்கு!!

      ****அப்புறம் பரிணாமத்திற்கும் நாத்திகத்திற்கும் தொடர்பு இல்லை. அது இப்போதைய ஏற்கப்படும் உயிரினத் தோற்ற பரவல் அறிவியல் கொள்கை.அவ்வளவுதான்!!![வழிநடத்தப்பட்ட ]பரிணாமத்தை ஏற்கும் ஆத்திகர்களும் உண்டு !!***

      யார் அந்த அறிவாளினு சொல்லீட்டுப் போறது. தொடுப்பெல்லாம் வேணாம். வெறும் பேரு மட்டும் கொடுத்தால்ப் போதும்! :)

      Delete
    6. மச்சான் வருண்,

      தங்களின் நலம் அறிந்து மகிழ்ச்சி. பரிணாமம் என்பது அறிவியல் கொள்கையாக ஏற்று,ஆன்மீகத்தை வேறுபடுத்திப் பார்க்கும் பலர் உண்டு.
      இரண்டு எ.கா தருகிறேன்.

      1. கென்னெத் ஆர். மில்லர்.

      பரிணாமக் கொள்கையின் மிகப் பெரிய ஆய்வாளர். ஃப்ரௌன் பல்கலைக் கழக்த்தில் பேராசிரியர்.
      http://en.wikipedia.org/wiki/Kenneth_R._Miller
      Miller is noted as a co-author of a major introductory college and high school biology textbook published by Prentice Hall since 1990.[4] Miller, who is Roman Catholic, is particularly known for his opposition to creationism, including the intelligent design (ID) movement. He has written two books on the subject: Finding Darwin's God, which argues that a belief in evolution is compatible with a belief in God;

      2. முகம்மது நூர், ட்யூக் பல்கலைக் கழக பேராசிரியர்.
      http://en.wikipedia.org/wiki/Mohamed_Noor

      பயோ லோகோஸ் என்னும் கிறித்த்வ மத நிறுவனம் ,பரிணாமக் கொள்கையை பரப்புகிறது.
      http://biologos.org/

      அகமதியா பிரிவு இஸ்லாமியர்கள் பரிணாமத்தை ஏற்கின்றனர்.
      http://en.wikipedia.org/wiki/Ahmadiyya_views_on_evolution

      இந்துக்களிலும் பலர் [ இஸ்க்கான் பிரியன் தாஸ் போன்றோர் தவிர] ஏற்கின்றனர்.
      http://en.wikipedia.org/wiki/Hindu_views_on_evolution

      இவர்கள் பரிணாமம் என்பதும் இறைவனின் செயல் என்பவர்கள், நாத்திகன் ஆகிய நான் அது இயற்கையின் செயல் என்கிறேன் அவ்வளவுதான்.


      நன்றி!!!!

      Delete
  6. நடு இராத்திரியில உச்ச நீதி மன்ற ஜட்ஜ் வீட்டுக்குப் போய் தூங்கிகிட்டு இழுந்தவரை எழுப்பி தடையுத்தரவு

    Is it?? to my knowledge it is High Court chief judge...

    so before blaming, pls. check your writings.. and also, how many of us, without copying the content from other projects in the final college projects.. ? May be he is limelight, so it is easy to point faults from him...

    also, the photos//images you placed in your blog, do you have copyrights for those? or just suddathu......

    anyway, both kamal and we, copy paste of other's work is wrong...

    ReplyDelete
    Replies
    1. \\Is it?? to my knowledge it is High Court chief judge... \\ அது குழப்பமாகத்தான் இருக்கு நண்பரே, திருத்தியமைக்கு நன்றி.

      \\so before blaming, pls. check your writings.. and also, how many of us, without copying the content from other projects in the final college projects.. ? \\ பசங்க புராஜக்டை காபி பண்றதை வச்சு இதை நியாயப் படுத்த முடியுமா!!

      \\also, the photos//images you placed in your blog, do you have copyrights for those? or just suddathu...... \\ பிளாக்குகளில் எல்லா படங்களுமே காப்பிதான் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் இவர் ராஜ பார்வை காப்பி என்று உங்களுக்கு எப்போது தெரிந்தது மேலும் பிளாக்கில் படத்தை போடுவதால் நாம் சம்பாதித்தது எவ்வளவு, இவர் படத்தின் கதையைத் திருடி சம்பாதித்தது எவ்வளவு, இரண்டும் ஒன்றா?

      Delete
    2. Jayadev,

      copy/paste is always wrong in any form.. so stealing 50rs is not wrong compared to 500rs...

      இவர் படத்தின் கதையைத் திருடி சம்பாதித்தது எவ்வளவு, இரண்டும் ஒன்றா?

      very simple, both are same... (rendu perum thirudanthaan)

      again, it is all upto us.. if we want to sshow us a good person, we have to just keep blame on others.. this is one simple.. this is what you and me are doing.....

      Delete
  7. ஜெயதேவ் உலகநாயகன் என்கிற பாசாங்கு பேர்வழியை நன்றாக அலசியிருக்கிறீர்கள். இவர் தன்னை நாத்திகவாதி என்று சொல்லிக்கொள்வதெல்லாம் சுத்த பொய்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உங்கக்களுக்கும் தெரிஞ்சு போச்சா! :)

      கமலு, நாத்திகவாதியா இருக்கலாம். ஆனால் நிச்சயம் பகுத்தறிவுவாதி கெடையாது. பகுத்தறிவுவாதி உண்மை பேசுவான். திருடிப்புட்டு கேவலமாக மழுப்ப மாட்டான். இது ரெண்டும் இல்லாத இந்த ஒலகநாயகன் எப்படி பகுத்தறிவுவாதியா ஆவான்??

      Delete
    3. @ கும்மாச்சி

      உங்கள் வருகைக்கு நான் இத்தனை நாள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது, முதல் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!!

      Delete
  8. லோகத்தை உரிச்சு உப்புகண்டம் போட்டிருக்கீங்க. கடைசியா வவ்வாலும் நீங்களும் ஒரு புள்ளியில ஒத்துப் போயிருக்கீங்க போல... சந்தோசம்!

    லோகம் மற்றும் சுஜாதா போன்ற போன தலைமுறை ஆட்கள் மேற்குலகத்தில் சுட்டே அறிவுஜீவி பட்டம் பெற்றுவிட்டார்கள். ஆனால் தற்காலத்தில் இன்டர்நைட் புண்ணியத்தில் தமிழனின் அறிவு விசாலப்பட்டதால் இனி இம்மாதிரியான ஆட்கள் காலம் தள்ளுவது கடினமாகிவிட்டது. சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைபூ; கோடம்பாக்கத்துக்கு உல்கநாயகன். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. @ நந்தவனத்தான்

      ஹா....ஹா....ஹா.... அவர் சுடலை மாடனை கும்பிடுறார், நான் கிருஷ்ணனை கும்பிடுறேன் அவ்வளவுதான் வித்தியாசம்!! வருகைக்கு நன்றி நண்பரே....

      Delete
    2. நந்தவனம்,

      பாகவதர் எநன்னோட உரையாடிக்கிட்டு இருக்காருள்ள அதான் நம்ம தாக்கம் ஒட்டிக்கிச்சு.

      பாகவதர் இப்படி எழுத ஒரு காரணம் என்னன்னா, வைணவரான லோகம் ,வெளிப்படையா வைணவ பற்றைக்காட்டாம,வியாபாரத்துக்காக புரட்சிகர நாத்திக ,முகமூடிப்போட்டுக்கிச்சேன்னு ஆதங்கமா இருக்கும் :-))

      சுஜாதா ரெங்கராஜ அய்யங்கார் பத்தி மூச்சே விடமாட்டார்,ஏன்னா அவரு வெளிப்படையா வைணவ பற்றாளர் ,எப்படி விட்டுக்கொடுக்க முடியும்,காப்பி அடிச்சாலும் ஜீனியஸ்னு தான் சொல்லுவா :-))

      ---------

      பாகவதரே,

      சுடலை மாடன் எங்க கொள்ளுப்பாட்டன்,கிருஸ்ணா உம்ம கொள்ளுப்பாட்டனா?

      கெடா வெட்டி பொங்க வச்சு,சாராயம் வச்சுப்படைச்சு,நானே கும்பிடலாம்,இடையில் மணியாட்ட ஒரு ஆள் தேவையில்ல.

      உம்மால சிரி ரெங்கம் கோயிலில் போய் பெருமாலுக்கு நேரா பூஜை செய்ய முடியுமா?

      சுடலை மாடனே ஏக இறைவன், சொர்க்கத்து வழிக்காட்டுவார் ,வேணும்னா நீரும் கெட வெட்டி பொங்க வச்சு,சாராயம் படைச்சுப்பாரும் சொர்க்கத்துக்கு விசா கிடைக்கும் :-))

      Delete
    3. நக்ஸ் அண்ணாத்த,

      நல்லா கேட்க்கிறார்பா டீடெயிலு, பாண்டில ஏது ஆரோ 3டி,எல்லாம் டிடிஎஸ் தான். ரத்னாவில் ஓடுது, அனேகமா ஜீவா, ருக்மணியிலும் ஓடும்னு நினைக்கிறேன்.

      பாண்டில இருந்த பல தியேட்டர்கள் இடிச்சு காம்ப்ளெக்ஸ் ஆக்கிட்டாங்க, இப்போ இருக்கும் தியேட்டர்கள் எல்லாம் இன்னும் எவ்ளோ நாள் தாங்குமோ.

      Delete
    4. நாய்-நக்ஸ்February 8, 2013 at 11:54 PM

      தாஸ்....என் கமெண்ட்-ஐ ஏன் நீக்குநீர்கள்????

      by...
      நாய்-நக்ஸ்...

      Delete
    5. நாய்-நக்ஸ்...February 8, 2013 at 11:56 PM

      நன்றி வவ்வால்........

      Delete
    6. நாய்-நக்ஸ்...February 8, 2013 at 11:57 PM

      இதுக்குன்னே லாக் இன் ஆகணும் போல....

      Delete
    7. நீங்க இருவரும் subscribe பண்ணியிருப்பீங்க, உங்களுக்கு தகவல் வந்து சேர்ந்திடும்னு நினைச்சேன், சாரி, இனி நீக்கவில்லை.

      Delete
    8. நாய்-நக்ஸ்...February 8, 2013 at 11:59 PM

      இன்னும்....நடராசரு.,,,முட்டா பையன் வரணும்...

      இங்க எல்லாரும் வந்திருக்காங்க....வாம்மா மின்னல்களா....

      Delete
    9. நாய்-நக்ஸ்...February 9, 2013 at 12:01 AM

      :))))))))) நன்றி தாஸ்...லாக் இன் இன்னிக்கு பண்ண முடியலை...
      மொபைல் இப்ப கைல இல்லை...code வரும்....அதான்...
      புரிதலுக்கு நன்றி....

      Delete
  9. சரியான பதிவு.

    இவரும் நான் சமுதாயக் கடமை செய்றேன் சொல்றாரு, அப்படி என்ன தான் செஞ்ச்சாருனு தெரியல.

    எல்லாக் கூத்தாடிகளும் இது மாதிரிதான் பேசி திரியுது....

    ReplyDelete
    Replies
    1. @ ஜீவா பரமசாமி

      முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!!

      Delete
  10. புத்த மதத்தில் எழுதப்பட்ட பழங்குடி கதையை காப்பிரைட் இல்லாமல் காப்பியடித்த ராமாயணமும்: காட் பாதரை காப்பியடித்த நாயகனும் அயோக்கியத்தனம். திருமணம் செய்யாமல் மாற்றான் மனைவி ராதையோடு ஜல்சா செய்த கண்ணனும் : மணம் செய்யாமல் மாற்றான் மனைவியோடு வாழும் கமல் காமவெறியர்கள். குத்துக்க தாசு குத்துங்க ! இந்த ஆளுங்களே இப்புடித்தான் குத்துங்க .. :

    ReplyDelete
    Replies
    1. @ இக்பால் செல்வன்

      புத்த மதம் தோன்றியது எப்போ, இராமாயணம் தோன்றியது எப்போ? இது உங்களுக்கே நியாமமாப் படுதா இக்பால் செல்வன்?

      கண்ணன் எதைச் செய்தாலும், அதை பெரியோர்கள் போற்றிப்பாடியுள்ளனர், உ.ம். ஆழ்வார்கள். மேலும் அவற்றைப் படிக்கும் பொது மனம் நிறைவு பெறுகிறது, கவலைகள் தீருகிறது, கெட்டவை மனதை விட்டு வெளியேறுகின்றன. கண்ணன் அருளிய கீதை காலத்தை வென்று இன்னமும் மக்கள் மனத்தைக் கொள்ளை கொள்கிறது. அதே சமயம், ஒருத்தன் தன்னுடைய குடும்பப் பாங்கான, பார்த்தால் கையெடுத்து கும்பிட வேண்டும் என்று தோன்றும் அழகான மனைவியை விரட்டியடித்து விட்டு, அப்புறம் ஒரு குரங்கோடு வாழ்ந்து, பின்னர் ஒருத்தியுடன் திருமணம் செய்யாமல் Living together செய்கிறான் என்ற கற்பனைக் கதையை எழுதி வைத்துக் கொண்டு படித்தால் கண்ணனின் லீலைகளைப் படித்த அதே மன நிறைவு வருமா? அது காலத்தை வென்று நிற்கும் காவியமாகுமா அது வருங்கால சந்ததிகளையும் வியக்க வைக்குமா? யோசியுங்கள் இக்பால் செல்வன்................

      Delete
  11. மற்றப்படி விமலதாசனின் உலகத்தர படைப்பு என்ற ஒன்றாவது காட்டமுடியுமா! ஒன்னியும் இல்லை, சிங்கள் இயக்குநர் அசோகா ஹந்தகமா, அடூர் கோபாலகிருஸ்ணன் படைப்புகளுக்கு முன் லோகநாயக்கர் வெறும் உலோகநாயக்கர் தான்.

    ReplyDelete
  12. தாஸ்:
    உங்களுக்கே தெரியும், இது உங்கள் மனசாட்சியை கொன்று எழுதிய இடுகை; கமல் சார்ந்துள்ள கொள்கையின் மேல் உள்ள ஆரா தீரா வெறுப்பில் எழுதின இடுகை. முற்றிலும் நிராகரிக்கிறேன்...இந்த இடுகையின் சாரத்தை...!

    99 விழுக்கக்காடு ஆத்திகர்களும் கோவிலுக்கு செல்வதே இல்லாக்-கடவுளிடம் பேரம் பேசவே. இல்லை! நாங்கள் அப்படி இல்லை என்று சொன்னால், அப்படி சொல்பவர்கள் அந்த 1 விழுக்காட்டில் வருகிரவர்கள் மட்டுமே...

    மீதி 99 விழுக்கக்காடு ஆத்திகர்களும் கோவிலுக்கு போவது வியாபாரம் பேசவே!

    ReplyDelete
  13. நம்பள்கி, நான் இங்கே நடவாத எதையாவது எழுதியிருக்கிறேனா? இருந்தால் சொல்லுங்கள். தனி மனிதனிடம் நல்லது கேட்டது இருக்கும், நாடறிந்த மனிதன் என்றால் எல்லோரும் உற்று நோக்குவார்கள். எனவே அதை பப்ளிக்காக எல்லோர் மத்தியிலும் போட்டு உடைத்து விளம்பரப் படுத்த வேண்டாம் என்று தான் சொல்கிறேன். கோவிலுக்குச் செல்பவர்கள் வியாபாரமே பேசச் சென்றாலும், இறைவனால் தாங்கள் நினைத்தத்தை முடித்துத் தர முடியும் என்ற நம்பிக்கையோடு செல்கிறார்கள். இது 100% பக்தி இல்லை என்றாலும், இதுவும் பக்திதான். இறைவன் இல்லை என்பது கொள்கை என்றால் அதை அவருக்குள் வைத்துக் கொள்ளட்டும், வெளியில் இறை நம்பிக்கையாளர்களைத் தாக்கிப் பேசி மனதைப் புண்படுத்த வேண்டாமே?

    ReplyDelete
  14. சூடான பதிவு.. விவாதங்கள். ஜெயதேவ்.. நல்லா எழுதறிங்க. எல்லாவற்றையும் படிப்பேன். உங்கள் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களும் விவாதங்களும் பெண்கள் கருத்திட சற்று தயக்கம் வரத்தான் செய்கிறது. நல்ல எழுத்தாற்றல் உள்ள நீங்கள் இதை கொஞ்சம் கவனத்தில் வைத்துக் கொண்டால் பல்வேறு படைப்புகளை தந்து அனைவரின் பாராட்டையும் பெறலாம். மனதில் பட்ட யோசனையை சொல்லிவிட்டேன். தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது நானே பலமுறை னியாநித்த வருத்தப் பட்டு, மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்த விஷயங்கள் தான் உ ஷா!! நீங்கள் மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். இதே காரணத்துக்காக ஒரு பெண் வாசகியை நிரந்தரமாக இழந்தும் விட்டேன். நிச்சயம் தங்களது யோசனையை மனதில் வைத்துக் கொள்கிறேன் உ ஷா!! Thanks for coming!!

      Delete
  15. பதிவு ரசிக்கும்படியாக இருந்தது. நன்றி.
    உலக நாயகனின் சொம்பு லோக்கல் சொம்புதான் ரொம்ப அடிப்பட்டிருக்கும். அதை உலக சொம்பு என்று சொல்வதால் தான் பிரச்சனை.
    எதற்கும் நல்லா விசாரிச்சு பாருங்க, காட் ஃபாதரை, நாயகனை பார்த்து காப்பியடித்து எடுத்திருந்தாலும் எடுத்திருப்பார்கள்- முன்ஜென்மத்தில் ))))

    எப்படியோ கடைசியில் ரஜினி சொன்னதுதான் நடந்தது, மார்க்கப்பந்துகளிடம் பேசி கட் பண்ண வேண்டிய காட்சிகளை கட் பண்ணி ரிலீஸ் பண்ணுங்கப்பா எனறது. ரஜினி ஒரு தீர்க்கதரிசி.))))
    நன்ரி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நரேன்!!

      Delete
  16. சின்ன வயசில் இருந்து சினிமாவில் இருந்து இன்னமும் சாமர்த்தியமாக மூளை குழம்பாமல் அடுத்தவரை குழப்புகிறானே என்று சந்தோஷ படுங்கள். சினிமாக்காரர்களால் ( மக்களின் மடத்தனதினாலும் ) தமிழர்களின் அரசியல் தலையெழுத்து தறிகெட்டு உள்ளது. சினிமா, மீடியா ஒழிந்தால் தான் உலகம் உருப்படும்.

    ReplyDelete
  17. தாஸ் அவர்களே ........
    தொடர்ந்து உங்க பதிவுகளை படித்துக்கொண்டு வருகிறேன் ஆனால் பின்னூட்டம் இட முடியவில்லை, என் MINI S 111 யால்..
    உங்க ரைடிங் ஸ்டைலும், சகோ வருண் ரைடிங் ஸ்டைலும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறது .....
    கமலுக்கு "தாஸ்" கொடுக்கும் "டோஸ்" நியாயமாகவே படுது...
    இந்த கூத்தாடிகளே இப்படித்தான்...இவர்களை விட்டுத்தள்ளும்.
    முன்பு "ஹிக்ஸ் போசான்" ஜீரோ கிராவிட்டி" பத்தி எழுதினிங்க
    இப்ப அப்படி எழுத மாட்டிங்களா ..??!!

    ReplyDelete
    Replies
    1. @ Nasar

      அறிவியல் கட்டுரைகள் எழுதலாம் வரவேற்ப்பு இல்லை!! அதான். மீண்டும் எழுதுவோம், தங்களுக்காக!!

      Delete
  18. [[[Jayadev Das...இது 100% பக்தி இல்லை என்றாலும், இதுவும் பக்திதான்.]]]
    கமலைப் பத்தி எழுதி அவர் மாதிரியே பேசறீங்க...மேலும், இப்படியும் எழுதலாம்..

    இது 100% பக்தி இல்லை என்றாலும், இதுவும் பக்திதான்.

    இது 100% திருட்டு இல்லை என்றாலும், இதுவும் திருட்டு தான்.

    இது 100% கற்பழிப்பு இல்லை என்றாலும், இதுவும் கற்பழிப்பு தான்.

    இவர்களுக்கு 100% கற்பு இல்லை என்றாலும், இதுவும் கற்பு தான்

    இது 100% நாத்திகம் இல்லை என்றாலும், இதுவும் நாத்திகம் தான்...!

    சரியா, அதுக்கு தான் கமல் படங்களைப் பார்க்காதீர்கள் அவரிப் பற்றி பேசாதீர்கள் என்று சொல்கிறேன்..

    நீங்க கமலையும் மிஞ்சிட்டீங்க!

    ReplyDelete
    Replies
    1. \\இது 100% பக்தி இல்லை என்றாலும், இதுவும் பக்திதான்.\\ இது +ve ஆனா விஷயம். கூடுதலாகவோ குறைச்சலாகவோ இருந்தாலும் தப்பில்லை.

      இது 100% திருட்டு இல்லை என்றாலும், இதுவும் திருட்டு/கற்பழிப்பு /நாத்திகம்/ தான்.- இதெல்லாம் -ve சமாச்சாரங்கள், எவ்வளவு இருந்தாலும் தப்பு தான். கரப்பு பத்தி நான் பேச விரும்பவில்லை. குஷ்பு கதை ஞாபகத்துக்கு வருகிறது.

      \\சரியா, அதுக்கு தான் கமல் படங்களைப் பார்க்காதீர்கள் அவரிப் பற்றி பேசாதீர்கள் என்று சொல்கிறேன்..\\ கமல் படங்கள் பார்க்கக் கூடாது என்பது ஏன் வாதமல்ல அவர் படங்கள் பார்க்கத் தக்கவையா இல்லையா என்பதை முடிவு செய்ய சென்சார் போர்டு உள்ளது. அதைத் தவிர்த்து பொது இடங்களில் அவரது வாயை பொத்திக் கொண்டிருந்தாள் பரவாயில்லை என்று தான் சொல்கிறேன். அவர் இறைநம்பிக்கை, முறைப்படி திருமணம் செய்து குடும்ப பந்தத்தில் வாழ்தல் இவற்றில் நம்பிக்கை இல்லை என்று பேசுவது அவரது கருத்து சுதந்திரம் என்றால், திரையுலகில் உள்ளவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்று எங்களுக்கும் பேச சுதந்திரம் இருக்கிறது. கூவம் சாக்கடையை விட கேவலமான நாற்றம் புடிச்ச கதை அது. அது அத்தனையும் உண்மை, அப்போது இவனுங்க குய்யோ முறையோ என்று கூச்சல் போடாம இருப்பானுங்கலான்னு கேட்டு சொல்லுங்க.

      \\நீங்க கமலையும் மிஞ்சிட்டீங்க!\\ அப்போ அந்த ஆள் பண்றது தப்புன்னு நீங்களும் ஒத்துக்கறீங்க. நன்றி.

      Delete
  19. ஜெயதேவ்! ரொம்ப நாளா வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டுகிட்டிருந்தீங்களே!இப்ப வந்துட்டேன்.

    கமல் மீதான தொடர் எதிர் விமர்சன சபதம் கொண்டவர்களும்,பின்னூட்டங்களில் ஒளித்து வைக்கும் சொம்பால் கீறிக்கொள்பவர்களும், விஸ்வரூபத்திலும் மார்க்கம் தேடுபவர்கள் என பன் முகங்கள் கொண்டவர்களாக இருந்தாலும் அனைவரும் கமல் என்ற கலைஞனையும்,தனி மனித குணங்கள் தனக்கு ஒவ்வாது என்பதால் கமலின் தனி மனித வாழ்க்கை பற்றியும் கூட விமர்சனங்கள் எழுகின்றன.நான்கெழுத்து உரிமையாளர்கள் நாகரீகவான்களாகப் போகிறார்கள்.

    ஓவியம் வரைபவன் கூட காப்பியடிக்கத்தான் செய்கிறான்.எம்.எஃப் ஹுசைன் பெண் உருவங்களுக்கு மாதுரி தீட்சித்தான் இன்ஸ்பிரேஷன்.

    வட்டத்துக்குள் சுற்றுபவர்களுக்கு சுதந்திரமாக நடப்பவன் விமர்சனப்பொருளாகிப் போகிறான்.

    சிவாஜிகணேசனை நன்றாக கௌரவித்து அனுப்பி விட்டோம்.இப்ப சிவாஜி இல்லாத ஊருக்கு கமல்.

    ஏய் என்ற உச்ச வசனங்களும்,பஞ்ச் டயலாக்குகளும்,மொக்கை படங்களுக்குத்தான் வாழ்க்கைப்படுவர்களுக்கான சொர்க்கம்.

    கலையின் தாயகமே!தமிழகமே!இன்னுமொரு கலைஞனை தமிழகத்தில் படைத்து விடாதே.தமிழகத்தில் சிலர் கணினி ஞானம் பெற்று விட்டார்கள்.இவர்களின் மூளையின் மில்லி கிராம் புதிய ரூப கலவையில் ஹாலிவுட் அல்ல செவ்வாய் கிரகத்தில் டூயட் பாடலெடுத்து தமிழகத்தை மகிழ வைப்பார்கள்.

    நக்ஸ்!அதென்ன போற இடமெல்லாம் எனக்கு வத்தி வச்சுகிட்டிருக்கீங்க:)

    ReplyDelete
    Replies
    1. @ ராஜ நடராஜன்

      \\கமல் மீதான தொடர் எதிர் விமர்சன சபதம் கொண்டவர்களும்,பின்னூட்டங்களில் ஒளித்து வைக்கும் சொம்பால் கீறிக்கொள்பவர்களும், விஸ்வரூபத்திலும் மார்க்கம் தேடுபவர்கள் என பன் முகங்கள் கொண்டவர்களாக இருந்தாலும் அனைவரும் கமல் என்ற கலைஞனையும்,தனி மனித குணங்கள் தனக்கு ஒவ்வாது என்பதால் கமலின் தனி மனித வாழ்க்கை பற்றியும் கூட விமர்சனங்கள் எழுகின்றன.நான்கெழுத்து உரிமையாளர்கள் நாகரீகவான்களாகப் போகிறார்கள்.\\உலகநாயகன் பேசும்போது மண்டையைப் பிச்சுக்குவாங்க, அவரோட ரசிகர்களும் அப்படியேதான் பேசுவாங்களா !! சார் என்ன சொல்லியிருக்கீங்கன்னு நீங்களே ஒரு பொழிப்புரை போட்டுடுங்க, முடியல..........


      \\ஓவியம் வரைபவன் கூட காப்பியடிக்கத்தான் செய்கிறான்.எம்.எஃப் ஹுசைன் பெண் உருவங்களுக்கு மாதுரி தீட்சித்தான் இன்ஸ்பிரேஷன்.\\ ஓவியம் வரைபவனுக்கு முதலில் மாடல் என்பது மிக முக்கியம். அதைப் பார்த்துதான் அவன் வரைவான். அவன் வரைந்து முடிக்கும்வரை அந்த மாடல் ஆடாமல் அசையாமல் அதே போஸில் இருக்க வேண்டும். அது காப்பி என்று சொல்ல முடியாது, ஓவியக் கலையின் அடிப்படை. அதை ஓவியமாக வடிக்கிறானே அவன் கலைஞன், ஓவியக் கலை எல்லோருக்கும் வந்துவிடாது. அதே சமயம், ஒருத்தன் வரைந்த ஓவியத்தை அப்படியே பிரிண்ட் போட்டு இது தன்னுடைய ஓவியம் என்பவனை என்ன செய்வது?

      \\வட்டத்துக்குள் சுற்றுபவர்களுக்கு சுதந்திரமாக நடப்பவன் விமர்சனப்பொருளாகிப் போகிறான்.\\ உலகத்தில் எந்த மூலையில் எவன் படமெடுத்தாலும் அவன் கதையையும், ஐடியாக்களையும் லவட்டி தனதாக்கிக் கொள்வதை "சுதந்திரமாக நடப்பது" என்கிறீர்களா?

      \\சிவாஜிகணேசனை நன்றாக கௌரவித்து அனுப்பி விட்டோம்.இப்ப சிவாஜி இல்லாத ஊருக்கு கமல்.\\ இதை நானே ஒப்புக் கொள்கிறேனே!!

      \\ஏய் என்ற உச்ச வசனங்களும்,பஞ்ச் டயலாக்குகளும்,மொக்கை படங்களுக்குத்தான் வாழ்க்கைப்படுவர்களுக்கான சொர்க்கம்.\\ மற்றவர்கள் இதைச் செய்வதாகவே வைத்துக் கொள்வோம், அவர்களின் அச்செயல், உலகநாயகன் கதைகளைத் திருடியதை நியாயப் படுத்துமா?

      \\கலையின் தாயகமே!தமிழகமே!இன்னுமொரு கலைஞனை தமிழகத்தில் படைத்து விடாதே.தமிழகத்தில் சிலர் கணினி ஞானம் பெற்று விட்டார்கள்.இவர்களின் மூளையின் மில்லி கிராம் புதிய ரூப கலவையில் ஹாலிவுட் அல்ல செவ்வாய் கிரகத்தில் டூயட் பாடலெடுத்து தமிழகத்தை மகிழ வைப்பார்கள்.\\ கணினி அறிவு வளர்ந்தது, உலகப் படங்கள் சாமான்யனுக்கும் கிடைக்க ஆரம்பித்தது, அவற்றைப் பார்த்ததும் அடடே நம்ம உலக நாயகன் போன வருஷம் எடுத்த படத்தை எப்படியோ மோப்பம் பிடிச்சு பத்து வருஷத்துக்கு முன்னாடியே வேற நாட்டுக்காரன் எடுத்து உட்டுட்டாண்டான்னு தெரிஞ்சுகிட்டோம். அவ்வளவுதான். ராஜ நடராஜன் சார், என்னதான் இருந்தாலும் நீங்க இப்படி பேசுவது உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா!! உலக நாயகன் திறமையை இங்கே மட்டமாக சொன்னேனா? அல்லது அவர் சொந்த கதையை வைத்து படமெடுப்பதை மட்டமாக விமர்சித்தேனா? உலக அளவில் காபிரைட் .........காபிரைட் ......... அப்படின்னு ஒன்னு இருக்கு. அதன் அடிப்படையில் ஒருவர் எடுக்கும் கதையை உரிய முறையில் அனுமதி பெறாமல் இன்னொருத்தர் காப்பியடிக்க முடியாது. அதனால் தான் பாக்கியராஜ் இன்றைக்கு லட்டு படத்துக்கு கோர்ட்டு ஏறியிருக்கிறார். இப்படி அப்பட்டமா திருடன் வேலையை முப்பது வருஷத்துக்கும் மேல செய்து விட்டு, அவற்றைக் காண்பித்து பல தேசிய விருதுகளையும் வாங்கிவிட்டு, எல்லாம் என் மூளையில் உதித்தவை என்று நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு இந்தியா முழுவதும் சுற்றி வந்தது எல்லாம் சரியா? நல்ல கலைஞனாக இருக்கலாம், ஆனால் அதுவே இன்னொரு கலைஞனின் உடைமையை அவனையறியாமல் திருட லைசன்ஸ் ஆகாது!! வருகைக்கு நன்றி!!

      Delete

  20. \\கமலின் தனி மனித வாழ்க்கை பற்றியும் கூட விமர்சனங்கள் எழுகின்றன.\\ இந்தப் பதிவில் நாம் கேட்டுக் கொள்வது, இவரது வாழ்க்கையை நாலு சுவத்துக்குள் வைத்துக் கொள்ளட்டும், அதை தயவு செய்தது பப்ளிக்கில் வந்து அவிழ்த்து விடவேண்டாம் என்பதுதான். காரணம், அது மிகவும் கண்றாவியாக இருக்கிறது, அதைப் பார்த்து அப்பாவி ஜனம் கெட்டு போய்விடும். சொல்ல வாய் கூசுமாறு உவ்வே........... வாழ்க்கை வாழும் ஒருவரது வாழ்க்கையை விமர்சிக்க வேண்டும் என்று எனக்கு ஆசையில்லை.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. ///ஓவியம் வரைபவன் கூட காப்பியடிக்கத்தான் செய்கிறான்.///

    திருடி கையும் களவுமாக பிடிப்பட்டு அதை மழுப்பி பொழைப்பு நடத்தும் கமல்ஹாசனை யோக்கியனாக்கனும்... என்ன பண்ணலாம்? நாங்க உலகத்தில் வாழும் எல்லா கலைஞன், ஓவிவன் எல்லாரையும் திருடனாவும், அயோக்கியனாகவும ஆக்கி, கமலஹாசனை நல்லவனாக்கி விடுவோம்! ஆமாம், வாய் கூசாமல்! வெட்கமேயில்லாமல்! இது எங்களுக்கு பிடித்திருக்கும் ஒரு வியாதி!

    ReplyDelete
  23. இப்படி கோவம் புட்டு புட்டு பொலந்து இருக்கீங்க ஆனா இங்கு எல்லாமே பழயது தானா ஏற்கனவே சொல்ல பட்டவைதான்

    ReplyDelete
    Replies
    1. நடுவில் இருக்கும் படம் சூப்பர்

      Delete
    2. \\நடுவில் இருக்கும் படம் சூப்பர்\\ இந்தப் படத்தைப் பத்தி கேள்விப் படவில்லையா!! அதுதாங்க சூப்பர் ஸ்டார் உலகநாயகனுக்கு பரிசா கொடுத்தது!!

      Delete
    3. \\ஆனா இங்கு எல்லாமே பழயது தானா ஏற்கனவே சொல்ல பட்டவைதான் \\அதுக்கேதான் அவரோட ரசிகர்கள் சிலருக்கு ஏகப் பட்ட கோவம் வந்துடுச்சே!!

      Delete
  24. ஐ ஆ கமல் பான் பட் நீங்கள் கூறிய பெரும்பாலானவிடயங்களை நான் அறிந்திருக்கின்றேன்...மறுக்கப்போவதில்லை..உண்மைதான்..அவரின் படங்களில் ரொம்ப பிடித்தபடம் அன்பேசிவம்... போதாததுக்கு ரஜினிகாந்த்தும் சேர்ந்துகிட்டு, "கலைத்தாய் எல்லாக் குழந்தைகளையும் நடக்க விட்டுட்டா, ஒரே ஒரு குழந்தையை மட்டும் இடுப்பில் தூக்கி மார்பில் அனைச்சுகிட்டா, அந்த குழந்தைதான் உலக நாயகன்" என்றெல்லாம் உவமை சொல்லி புல்லரிக்க வைக்கிறார்!!
    கமல் 50 இல அந்த சீனை நானும் பார்த்தேன்

    ReplyDelete