Saturday, December 20, 2014

பகவத் கீதையை தேசிய நூலாக்கலாமா? சோ இராமஸ்வாமிக்கு பதில்.

பத்திரிகையாளர் திரு.சோ இராமஸ்வாமி அவர்கள் தனது முகநூல் பக்கத்தில், 17-12-14 தேதியிட்ட அவரது துக்ளக் வார இதழில் "சுஷ்மா ஸ்வராஜ், ‘பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்க வேண்டும்’ என்று கோரியிருப்பது உள்ளிட்டவை குறித்து  அவர் வெளியிட்டுள்ள தலையங்கத்தைப் பகிர்ந்துள்ளார். 

துக்ளக் தலையங்கம் (17-12-14) வாசிக்க: சுட்டி

அவரது தலையங்கத்தில் இது பற்றி முக்கியமான கருத்துகள்:

 ‘பகவத் கீதை ஒரு மதச்சார்பற்ற நூல்’ என்று சிலர் வாதிடுகிறார்கள். இது, ஏற்கவே முடியாத வாதம்.

கிருஷ்ணரின் அல்லது விஷ்ணுவின் மேன்மையை விளக்குகிற நூலை முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ எப்படி ஏற்பார்கள்? 

இந்த கருத்துக்கள் கருத்துக்கள் சரிதானா என்பதை அலசுவதே இந்த பதிவு.


பகவத் கீதையை பா.ஜ.க வில் எத்தனை பேருக்கு ஆழமாகத் தெரியும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. திருவாளர் சோ அவர்களுக்கும் ஒன்னும் தெரியாது என்பதே வெகுநாட்களுக்கு முன்னர் நான் அறிந்து கொண்ட உண்மை. இன்னொரு பக்கம் பகவத் கீதையை புரிந்து கொள்ள வெறும் சமஸ்க்ருதம் மட்டும் தெரிந்தால் போதும், சோ வுக்கு அம்மொழி மிக நன்றாகத் தெரியும் ஆகையால் அவருக்கு பகவத் கீதையைப் பற்றி பேச எழுத தகுதி இருப்பதாகப் பலர் நினைக்கக் கூடும், அது சரியா? உதாரணத்துக்கு ஆங்கிலம் பிரமாதமாகத் தெரிந்தவனை அழைத்து வந்து ஆங்கிலத்தில் மெடிக்கல், எஞ்சினியரிங், கம்பியூட்டர் சயன்ஸ் புத்தகங்களைக் கொடுத்து படித்து விளக்கம் கொடு என்றால் கொடுத்து விடுவானா? மாட்டான். காரணம் மொழி வேறு விஞ்ஞானம் வேறு.   ஒரு துறையைப் பற்றி பேச அந்த துறையில் பாண்டித்தியம் [expertise] பெற்றிருக்க வேண்டும்.  ஒரு மொழியை தெரியும் என்பதாலேயே அதில் எழுதப் பட்டுள்ள அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்பது அறியாமை.   ஒரு வேலை நாடறிந்த நகைச்சுவை நடிகன் பிரமாதமா எழுதுவார், பேசுவார் என்று அவரிடம் மேற்கண்ட அதே புத்தகங்களை கொடுத்து விளக்கச் சொன்னால் என்ன செய்வார்? அவரும் ஞே...... என்று தான் விழிப்பார். இங்கே இது தான் நடந்து கொண்டிருக்கிறது. 

பா.ஜ.க வினருக்கு மட்டுமல்ல, உயர்திரு சோ இராமசாமிக்கும் விஞ்ஞான ரீதியாக பகவத் கீதையைத் தெரியாது. ஏனென்றால் இவர்கள் யாரும் பகவத் கீதை சொன்னபடி அதைக் கற்றவர்கள் இல்லை. தகுதியுடைய குருவை சரணடைந்து, சேவை செய்து, அவரிடம் கேள்விகள் கேட்டு இந்த விஞ்ஞானத்தைக் கற்றுக் கொள்வாயாக என்று கீதையில் சொல்லப் பட்டுள்ளது.  இவர் அதைப் பின்பற்றியாகத் தெரியவில்லை.  இவருக்கு சமஸ்க்ரிதம் தெரியும், இவரே படித்தார், இவருக்கு என்ன தோன்றியதோ அதை அதற்ககு வியாக்யனமாக கொடுக்கிறார். "சர்வ தர்மான் பரித்யஜ்ய" என்று சொன்னவரையே ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு சொந்தமானவர் என்று சொல்லியிருப்பதே இதற்குச் சான்று.  

sarva-dharman parityajya 
mam ekam saranam vraja 
aham tvam sarva-papebhyo 
moksayisyami ma sucah 
BG-18.66

TRANSLATION
Abandon all varieties of religion and just surrender unto Me. I shall deliver you from all sinful reaction. Do not fear.


"சர்வ யோனிசு கவுந்தேயா" என்று எல்லா உயிர்களுக்கும் தந்தை நானே என்று பகவான் சொல்கிறார், என்றால் மத பாகுபாடின்றி அனைவரையும் படைத்தவர் அவர் அல்லவா? அவரை குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமே சொந்தம் என்பது அறியாமை அல்லவா?  
sarva-yonisu kaunteya 
murtayah sambhavanti yah 
tasam brahma mahad yonir 
aham bija-pradah pita-BG 14.4
 
TRANSLATION It should be understood that all species of life, O son of Kunti, are made possible by birth in this material nature, and that I am the seed-giving father.
 


ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை வணங்கியே தீர வேண்டுமென்றா சொல்கிறார்? நான் உண்மையைச் சொல்லிவிட்டேன், அதை ஏற்பதும் மறுப்பதும் உனது விருப்பம் என்றல்லவா சொன்னார்? அப்புறம் கீதை எங்கே வற்புறுத்துகிறது?  

 iti te jñānam ākhyātaḿ
guhyād guhyataraḿ mayā
                                                           vimṛśyaitad aśeṣeṇa
                                                         yathecchasi tathā kuru BG-18.63

Thus I have explained to you knowledge still more confidential. Deliberate on this fully, and then do what you wish to do.

இதையெல்லாம் மெத்தப் படித்த அறிவாளி சோ ஏன் இந்த தவறைச் செய்ய வேண்டும்? முன்னர் சொன்னபடி வெறும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர் கணினி புத்தகத்தைப் படித்தால், விண்டோஸ் என்பது ஜன்னல் என்று, ஆப்பிள் ஒரு பழம் என்றும், வைரஸ் ஒரு நோய்க் கிருமி என்றும்........ வியாக்யானம் தருவார். இப்போது சோ அவர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.  


இறுதியாக:

பகவத் கீதை இந்துக்களுக்கோ, இந்தியர்களுக்கோ மட்டுமல்ல மனிதர்கள் அனைவருக்கும் சொந்தமானது.

ஸ்ரீ கிருஷ்ணரே கடவுள், அவரே இந்த பிரபஞ்சத்தை படைத்து, காத்து அழிக்கிறார். [இது பொய் என்றால் அதை பைபிள், குரானை வைத்து நிறுவலாம்]

ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட வேண்டும் என்று பகவத் கீதை கட்டாயப் படுத்தவில்லை.

பகவத் கீதை மதச் சார்பற்ற நூல், ஏனென்றால் எல்லா மதங்களையும் விட்டொழித்து என்னை மட்டுமே சரணடைவாக என்கிறார் பகவான், விட்டொழிக்கும் லிஸ்டில் இந்து மதமும் அடக்கம்.

 
குருவை நாடி சரணடைந்து, சேவை செய்து பகவத் கீதையை பயில வேண்டும். அப்படி பயிலாதவர் பகவத் கீதை இதைத்தான் சொல்கிறது அதைத்தான் சொல்கிறது என்று சொல்லும் தகுதியை இழக்கிறார். தகுதிக்கு மீறிய செயலை யாரும் செய்யக் கூடாது, துக்ளக் ஆசிரியர் சோ வும் இதற்க்கு விதி விலக்கல்ல.
 
 

25 comments:

  1. சோ-வே தனக்கு இந்தி தேரியாது அடிக்கடி சொல்லியிருக்கிறார். மோடி பேச்சின் அர்த்தம் தெரியவில்லை என்று இப்போ கூட-மொழி ப்ராப்ளம் என்று கூறி இருக்கிறாரர். இருந்தாலும் எல்லரோரையும் ஹிந்தி படிக்க சொல்வார் (காரணம் இதுக்கு சொல்லவேணுமா; தமிழ் விரோதியாச்சே )

    அவருக்கு சமஸ்க்ரிதமும் தெரிய வாய்ப்பில்லை! ஆம் அது தான் உண்மையாக இருக்கும். பின் எப்படி? பலர் தமிழில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கின்றனர். அதை வைத்து அவர் பாணியில் அவர் எழுதியிருக்கார். நான் புலவன் அல்ல தமிழில்--ஆனால், திருக்குறளுக்கு மு.வ. உரையில் இருந்து மு.க. உரை வரை படித்துள்ளேன். இப்படி பலர் உரை படித்து என்னாலும் உரை எழுதமுடியும். சோ தனது celebrity status வைத்து பகவத் கீதை பற்றி எழுதியிருக்கால்ம். இல்லை- ஒரு ghost குரு வைத்து இவர் எழுதியிருக்கலாம்.

    எப்படி இருந்தாலும்..கிருஷ்ணன் பாதிக்கு மேல் உள்ள இந்துக்களுக்கு மனிதனே! கடவுள் இல்லை-எம்பெருமான் ஈசனை வேண்டுமானலும் சொல்லுங்கோ கடவுள் என்று ஒத்துக்கொள்கிறேன்! பெரிய புராணத்தை தேசிய நூலாக வைத்தால் [உங்களுக்கு] எப்படி இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. சோ வுக்கு இந்தியும் தெரியாது, சமஸ்க்ரிதமும் தெரியாது!! ஆஹா...... இது இத்தனை நாள் எனக்குத் தெரியாமப் போச்சே!! அவர் ஹிந்தியை ஆதரிப்பதாலும், மகாபாரதம், இராமாயணம் பற்றி நிறைய எழுதியிருப்பதாலும் அவருக்கு சமஸ்க்ரிதம் தெரிந்திருக்கலாம் எனத் தவறாக யூகித்து விட்டேன், தகவலுக்கு நன்றி நம்பள்கி!!

      \\இல்லை- ஒரு ghost குரு வைத்து இவர் எழுதியிருக்கலாம்.\\ ROFL

      \\எப்படி இருந்தாலும்..கிருஷ்ணன் பாதிக்கு மேல் உள்ள இந்துக்களுக்கு மனிதனே!\\

      பகவத் கீதையை படித்து உணர்ந்தவர்கள் இவ்வாறு சொல்ல மாட்டார்கள். If one reads the Gita he can appreciate that it is divine................

      Delete
  2. //எப்படி இருந்தாலும்..கிருஷ்ணன் பாதிக்கு மேல் உள்ள இந்துக்களுக்கு மனிதனே! கடவுள் இல்லை//
    அப்பிடியா?
    சோ- வீண் சர்ச்சைகள் வேண்டாமெனத் தானே கூறுகிறார். பகவத் கீதை இந்து மத நூலென பரவலாகப் புரிதலில் உள்ளது. அதை மதச் சார்பில்லாதது என இனிக் கூறுவது பிரச்சனையைக் கிளப்பும்.
    சமஸ்கிருதம் தெரியாதவர்களும், புரியாதவர்களுமே நம்மில் பலர். நாம் எதை நம்புவது.

    ReplyDelete
    Replies
    1. ஆம்! சிவனை வழிபடுபவர்களுக்கு கிருஷ்ணன் மனிதனே! சைவமதத்தில் உள்ளவர்களை கூறுகிறேன்! பகவத் கீதை இந்து மத நூலென அவர்கள் சொன்னால் போதுமா?

      சைவமதம், சமணமதம், அந்த மதம் இந்த மதம் எல்லாம் கலந்து சமீபத்தில் உண்டானது தான் இந்த மதம்!

      தமிழ்நாட்டில் ஏது கிருஷ்ணன் ராமர் கோவில்கள்? இருந்தால் என்ன என்று கூறுங்கள்? நான் கேட்பது பழமையான கோவில்கள்.. ஒரு முப்பது அல்லது ஐம்பது வருடம் முன்பு ஏது? இப்ப க்ரிஷனனுக்கு கட்டியிருக்கலாம்!

      Delete
    2. சைவமதம், சமணமதம், அந்த மதம் இந்த மதம் எல்லாம் கலந்து சமீபத்தில் உண்டானது தான் இந்த மதம்!
      ------இந்து மதம் என்று இருக்கவேண்டும்!

      Delete
    3. \\சோ- வீண் சர்ச்சைகள் வேண்டாமெனத் தானே கூறுகிறார். பகவத் கீதை இந்து மத நூலென பரவலாகப் புரிதலில் உள்ளது. அதை மதச் சார்பில்லாதது என இனிக் கூறுவது பிரச்சனையைக் கிளப்பும்.
      சமஸ்கிருதம் தெரியாதவர்களும், புரியாதவர்களுமே நம்மில் பலர். நாம் எதை நம்புவது.\\

      இப்படியெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் உண்மையை எப்படித்தான் சொல்வது? பகவத் கீதையை பிறருக்கு எடுத்துச் சொல்பவரைப் போல எனக்கு பிரியமானவர் வேறு யாரும் இல்லை என்று பகவான் கீதையில் சொல்கிறார். அவர் கோபித்துக் கொள்வார், இவருக்கு சங்கடமாகிப் போகும்.......... என்பதற்கு இடமேயில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதைச் செய்வோம் அவ்வளவே.

      na ca tasman manushyeshu

      kascin me priya-krittamah

      bhavita na ca me tasmad

      anyah priyataro bhuvi
      Bhagavad-gita 18.69

      TRANSLATION

      There is no servant in this world more dear to Me than he, nor will there ever be one more dear.

      Bhaktivedanta VedaBase

      Delete
  3. தான் இந்தி படிக்காவிட்டாலும் மற்றவரை இந்தி படிக்க சொன்னால் அது தமிழ் விரோதம்.

    மற்றவரை இந்தி படிக்காதே என்று சொல்லிவிட்டு, தன் பேரனை மட்டும் இந்தி படிக்க வைத்து- அவனுக்கு இந்தி தெரியும், அதனால்தான் சின்னபயலாக இருந்தாலும் அவனை மத்திய அமைச்சராக்குறேன் என சொன்னால் தமிழ்ப்பற்று.

    இந்த அதிஅற்புதமான திராவிட கொள்கை புரியாவிட்டால் கீழ்கண்ட லிங்கை பாருங்கள். ஒருவேளை புரியலாம்.

    http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-s-hindi-posters-election-campaign-196013.html

    ReplyDelete
  4. @ஜெயதேவ்

    சோ இப்போதெல்லாம் ஜெயாவுக்கு அடிக்கும் ஜால்ராவில் காது கிழிகிறது. அது போக இந்த தலையங்கத்தில் சீனு மாமாவுக்கும் ஜால்ரா அடித்துள்ளார். காசு கிடைக்கும் என்றால் தாங்கள் எதிர்க்கும் பார்ப்பனரிடம் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கலாம் என கருணாநிதியின் புதிய பகுத்தறிவு கொள்கைக்கு உதாரணமே சீனு-கருணாநிதி குடும்ப கூட்டு வியாபாரம். இப்போது இந்த யாவாரிகளை சோ ஆதரிக்கிறார். ஆக ஒரு காலத்தில் இந்திராவிற்கு எதிராக போராடிய சோவின் நிலமை இப்படி பரிதாபகரமாக ஆகிவிட்டது. இந்த லட்சணத்தில் எப்போதாவதுதான் உருப்படியாக ஏதாவது சொல்கிறார், அதையும் எதிர்க்கிறீர்கள்.

    மேலும் இந்துத்துவா எழுத்தாளர் என 'புகழப்படும்' ஜெமோவும் கீதையை தேசியநூலாக்குவது குறித்து எழுதியதை படித்தீரா? "கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? " என்றெல்லாம் கட்டுரை எழுதிய அவரையும் கீதை ஒழுங்காக படிக்காதவர் என்று சொல்லிவிடுவீரோ என பயமாக உள்ளது!!!

    ReplyDelete
    Replies
    1. \\இந்துத்துவா எழுத்தாளர் என 'புகழப்படும்'\\ நந்தவனத்தான் இந்து, இந்துத்துவா இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு அலையும் பயல்களில் ஒருத்தனுக்கும் உண்மையில் பகவத் கீதையைப் பற்றியோ புராணங்கள், வேதங்கள் பற்றியோ ஒரு துளியும் தெரியாது. வெறுமனே சச்சரவுகளைக் கிளப்பி விடுவதே இவர்கள் தொழில். சொல்லப் போனால் இந்து என்ற பெயரே சிந்து நதிக்கு அப்பால் இருப்பவர்கள் என்ற அர்த்தத்தில் ஆப்கானிதானில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பயன்படுத்திய வார்த்தை, அந்த பெயர் எந்த வேத இலக்கியங்களிலும் இல்லை. இஸ்லாமியர்களை கண்டபடிக்கு எதிர்க்கும் இவர்கள் சூட்டிக் கொண்ட பெயர்களே அவர்கள் கொடுத்தது என்பது வேடிக்கையல்லவா?

      Delete
  5. அனைவருக்கும் சொந்தம் என்பது அவரவர் மனதைப் பொறுத்து...!

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் சார்!! நியூட்டன் விதிகளை நியூட்டன் கண்டுபிடிச்சிருந்தாலும் அது அவரது விதி அல்ல, இறைவன் உண்டாக்கிய விதி, அந்த விதி நியூட்டனின் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்த பூமிக்கு மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்துக்கே பொருந்தும் விதி. அதே மாதிரி பகவத் கீதை இந்தியாவில் தோன்றினாலும், இந்திய மொழியில் இருந்தாலும் அது இந்த உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும். சூரியன் மேற்கு வடக்கு தெற்கு என எந்த திசையில் வேண்டுமானாலும் உதிக்கும் என்று அவரவர் மனதில்நினைத்துக் கொண்டாலும், அது உதிப்பதென்னவோ கிழக்கில் மட்டுமே. [தயவுசெய்து நார்வே நாட்டை மட்டும் இங்கே இழுத்து விடாதீர்கள், என்னால் இன்னும் வேறு நல்ல உதாரணம் தேடி அலைய முடியாது !! ]

      Delete
    2. [[[சூரியன் மேற்கு வடக்கு தெற்கு என எந்த திசையில் வேண்டுமானாலும் உதிக்கும் என்று அவரவர் மனதில்நினைத்துக் கொண்டாலும், அது உதிப்பதென்னவோ கிழக்கில் மட்டுமே.]]]

      இந்த பதிவிற்கு தேவையில்லாத வாதம். எனினும்...சூரியன் உதிப்பதே இல்லை--அன்றும், இன்றும், என்றும்--அப்புறம் என்ன கிழக்கு? அது அங்கேயே தான் இருக்கு; இனியும் அங்கேயே தான் இருக்கும்.

      Delete
  6. Jeyadev,
    I have one serious doubt. (Because, I was brought up in christian background).
    நம்பள்கி மற்றும் உங்களுடைய கருத்திலிருந்து எழுந்த கேள்வி இது.

    யார் நிஜ கடவுள்?
    கிருஷ்ணரா? சிவனா? விஷ்ணுவா?

    ReplyDelete
    Replies
    1. மூணு பேரும் இல்லை தம்பி--நான் தா கடவுள்!

      Delete
  7. நீர் சொல்லும் இதையே தான் கிறிஸ்தவ மதத்திலும் உளறிக்கொண்டு திரிகிறார்கள். Bible எல்லோருக்கும் பொதுவானது.
    "கிறிஸ்தவ மதத்தை பின்பற்ற வேண்டாம். இயேசுவை நம்பினால் போதும். நீங்கள் பரலோகத்திற்கு போய்விடலாம் என்கிறார்கள்."
    இஸ்லாமியர்களும் கிட்டத்தட்ட இதையே தான் கூறுவார்கள். இஸ்லாம் மதமல்ல. மார்க்கம் என்று.

    நீங்கள் மூன்று பேரும், இப்படி சொன்னால், என்னை போல உள்ள ஒரு common layman எதை நம்புவது?

    ReplyDelete
    Replies
    1. எண்னை நம்பு-பா! தாஸ் பதில் சொல்லமாட்டார்-பா!

      Delete
  8. Jayadev Das
    \\[தயவுசெய்து நார்வே நாட்டை மட்டும் இங்கே இழுத்து விடாதீர்கள், என்னால் இன்னும் வேறு நல்ல உதாரணம் தேடி அலைய முடியாது !! ]\\
    சாதி பற்றிய விஷயங்களிலும், மதம் பற்றிய விஷயங்களிலும் எந்தக் கருத்தும் சொல்லாமல் பதிவுகளையும் விவாதங்களையும் மட்டும் ரசித்துக்கொண்டிருப்பது என்பது என்னுடைய வழக்கம். அல்லது கொள்கை. நான் நினைத்ததற்கேற்ப மேற்கண்ட பதிலைச்சொல்லி ரசிக்க வைத்த உங்களுக்கு என்னுடைய நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அதவும் நல்லது தான்--வேடிக்கை மட்டும் பார்ப்போமே

      Delete
  9. நால் வர்ணம் சரியா..குழப்பமாக உள்ளது. இதை எந்த நாட்டிலாவது ஏற்று ;கொள்வார்களா ?
    அடிப்படையே சரியாக இல்லையே தோன்றுகிறது ..
    கிருஷ்ணனுக்கு இப்படி பார்பானை மட்டும் உயர்த்தி பிடிக்க காரணம் என்ன.
    இப்படி செய்து உள்ளதால் இங்கு மக்கள் மாட்டு மூத்திரத்தை குடித்தும் , எச்சில் இலை மேல் உருண்டும் இன்னும் பல தேவை யற்ற செயல்களை செய்கிறார்கள். இது சரியா.

    ReplyDelete
    Replies
    1. [[[நால் வர்ணம் சரியா..குழப்பமாக உள்ளது. இதை எந்த நாட்டிலாவது ஏற்று ;கொள்வார்களா ? அடிப்படையே சரியாக இல்லையே தோன்றுகிறது]]
      ====>.>>இந்தியாவில் அம்சாமாக ஏற்றுக் கொள்வார்கள்! இதிலென்ன சந்தேகம்? சூத்திர கூமுட்டைகள் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இதில் உங்களுக்கு என்ன வலிக்குது? (பிராமணரைத் தவிர 96% எல்லாரும் சூத்திரன்கள் தான்!)

      [[[இப்படி செய்து உள்ளதால் இங்கு மக்கள் மாட்டு மூத்திரத்தை குடித்தும் , எச்சில் இலை மேல் உருண்டும் இன்னும் பல தேவை யற்ற செயல்களை செய்கிறார்கள். இது சரியா]]]

      இதைக் கேட்க நீ யார்பா SSK.! நாங்கள் மாட்டு பீயில் உருளுவோம் ;பிரளுவோம்... அதை சாப்பிடவும் செய்வோம். --எங்க இந்து மதம் அப்படி சொல்லுது--மேலும், எங்க இந்து மத காவலர்கள் கடவுள்கள் -சங்கராச்சாரியர்கள் இப்படி உருளுவதும் பிரளுவதும் மாட்டுப் பீயை மூத்திரத்தை சாப்பிடுவது தப்பு என்று சொல்லவில்லையே! அவர்கள் தப்பு என்று சொல்லாதவரை நங்கள் சூதிரப் பயல்கள் மூத்திரத்தை குடிப்போம்..அதை சாப்பிடுவோம்!

      பின்குறிப்பு: பிராமணர்களைத் தவிர மீதி மக்களும் சத்-சூத்திரன்களே--நீங்கள் அரசாங்கத்தால் முற்படுத்தப்பட்ட ஜாதிகள் என்று சொன்னாலும்-பிராமணர்களைத் தவிர நாம் எல்லோரும் சூத்திரப் பயல்கள் தான்!

      Delete
  10. //பகவத் கீதை இந்துக்களுக்கோ, இந்தியர்களுக்கோ மட்டுமல்ல மனிதர்கள் அனைவருக்கும் சொந்தமானது.// கீதை திருநங்கைகள், பெண்கள், பார்ப்பனரல்லாதோரைச் செய்யும் இழிவை வெட்கம், சூடு, சொரணை எதுவுமற்று ஏற்றுக்கொள்பவர்களும் மனிதர்கள் ஏன்றால்.

    //ஸ்ரீ கிருஷ்ணரே கடவுள், அவரே இந்த பிரபஞ்சத்தை படைத்து, காத்து அழிக்கிறார். [இது பொய் என்றால் அதை பைபிள், குரானை வைத்து நிறுவலாம்]
    //
    அவ்வளவு தூரம் போகத்தேவையில்லை. இந்தியாவில் தோன்றிய சமணர்களே, கிருஷ்ணனைக் கடவுளாக ஏற்றுக்கொள்வதில்லை. அகிம்சையையே அடிப்படையாகக் கொண்ட அவர்கள், மாபெரும் போருக்குக்காரணமானதால் அவனை ஏழாம் நகரத்தில் தள்ளியிருக்கிறார்கள் http://muktimantra.com/2012/07/25/being-krishna/.

    ReplyDelete
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. மிக்க நன்றி சார், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  13. //இதையெல்லாம் மெத்தப் படித்த அறிவாளி சோ ஏன் இந்த தவறைச் செய்ய வேண்டும்? முன்னர் சொன்னபடி வெறும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர் கணினி புத்தகத்தைப் படித்தால், விண்டோஸ் என்பது ஜன்னல் என்று, ஆப்பிள் ஒரு பழம் என்றும், வைரஸ் ஒரு நோய்க் கிருமி என்றும்........ வியாக்யானம் தருவார். இப்போது சோ அவர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்//
    best explanation ever...

    ReplyDelete
  14. வருகைக்கும் கருத்திட்டு ஆதரித்தமைக்கும் நன்றி செங்கதிரோன்!!

    ReplyDelete