Thursday, March 13, 2014

இது குதிர்வேலன் மோதல்-சினிமா விமர்சனமல்ல!!

வணக்கம் மக்கள்ஸ்!!

சமீபத்தில "இது கதிர்வேலன் காதல்" படம் தியேட்டருக்குப் போயி பார்த்தோம்.  ["அத சொல்லனுமாக்கும், தியேட்டருக்குப் போயி பாக்காம கிரிக்கெட் கிரௌன்டில போயா பார்க்க முடியும்?"   என்று நீங்க கேட்பது எனக்குப் புரிகிறது!!].  படம் பார்த்துகிட்டே இருந்தோம், ஓரு சீன்ல சந்தானத்துக்கு ஹீரோ கட்டிங் ஊத்தி குடுக்குறாரு.  உடனே நான், "அடேய்....  இதே சீனை OK.........OK......... படத்தில கூட பார்ததோமேடா?  இடம் கூட அதே மாதிரியே இருக்கே?!!"  என கத்தினேன்.




அதுக்கு எங்க பையன் சொன்னான், அட அதுமட்டுமில்லேப்பா...........


அம்மா கூட அதே அம்மா..........




அதே சந்தானம் ஃ பிரண்டு................




அவன் கூட நடிக்குதே அந்தப்  பொண்ணு மட்டும் மாத்திட்டாங்க, மிச்சம் எல்லாம் அதே தான்பா...........!!  என்று அத்தனையும் அடுக்கித் தள்ளினான.



 அட ஆமான்யா.............!!


முன்பெல்லாம் பாக்கியராஜ் படங்களில் அவர் போட்டிருப்பது போலவே பெரிய சைசு கண்ணாடியை அவரோட ஐஞ்சு வயசு மகன் உட்பட படத்தில் வரும் கதாநாயகி, அவருடைய தோழிகள், உறவினர், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் என அத்தனை பேருக்கும் வாங்கி மாட்டி விட்டுவிடுவார்.  அதே வேலையை இந்தப் படத்திலும் செய்திருக்கிறார் கதா நாயகன்!!

அண்ணா, நமக்குத்தான் எக்ஸ்பிரஷன் வராது, கூலிங் கிளாஸ் வேணும்.............

ஆனா படத்துல பாட்டுக்கு கூட ஆடும் துணை நடிக நடிகைகளுக்கும் அது தேவையா!!



அதேன்னேமோ தெரியல, ஒரு பாட்டு முதல்வன் படத்தை ஞாபகப் படுத்தியது!



முதல்வனில் அழகான இராட்சசியே .............

காதல விட பெத்தவங்கதான் முக்கியம்................  இதென்ன காதலுக்கு மரியாதையா?


எம்ஜிஆர் படமா........??  ரெண்டு ஹீரோயின்கள், கடைசியில் ஒருத்தர் காதலி, இன்னொரு அம்மணி தங்கச்சி. [அது கனவு சீனில் இவரோட கட்டிப் பிடிச்சு உருண்டு பொரண்டிருக்கும், அதெல்லாம் கணக்கில வைக்கப் படாது........கடைசி சீன்ல அதுவாவே அண்ணா.........அப்படின்னு கத்திகிட்டே ஓடி வந்து இன்னொரு தடவையும் கட்டிப் பிடிக்கும்].

ரஜினி படமா........?  ஒரு பணக்காரன் வீட்டிற்கு இவரு வேலைக்காரனா இருப்பாரு, கொஞ்ச காலம் கழிச்சு அந்த சொத்துக்கு உண்மையான வாரிசே இவருதான்னு தெரியவரும்.

ஷங்கர் படங்களில் கதையா?  வேறென்ன நாட்டில் சட்டத்தை ஏமாத்தி பணம் சேர்ப்பவர்களை கண்டுபிடித்து ஹீரோ காலி பண்ணுவார்.  அநியாயமா சேர்த்த பணத்தையெல்லாம் என்னென்னமோ ஜகஜால வேலையெல்லாம் பண்ணி ஏழைகளுக்கு போய்ச் சேருமாறு பண்ணிவிடுவார்.    இவர் பட ஹீரோக்களுக்கு சட்டத்தை மதிக்காதவங்கன்னாலே ஆகாது!!   [அங்க யாருப்பா இவரு வருஷா வருஷம் வரி பாக்கியில்லாம கட்டிட்டாரான்னு கமண்டு அடிக்கிறது?  சும்மா இருக்க மாட்டீங்களா?]

இந்த வரிசயில, ஒரு பொண்ணு, அவரை சந்தானத்து உதவியோட கரெக்டு பண்ணு, கூட ஒரு அம்மா...............  இது தான் ஓகே ....ஓகே..............வா...........??!!  [வடிவேலு பாணியில்]  ஐயோ..........ஐயோ.............. 


3 comments:

  1. நயனுக்கு படத்துக்குப் படம் தாவணியில் டூயட் வேண்டுமோ...? ஐயோ...! அய்யய்யோ...!

    ReplyDelete
  2. பிரிக்க முடியாதது "சந்தானமும் தண்ணி அடிக்கும் காட்சியும்"

    ReplyDelete
  3. ஜூப்பர் ஜி...ஜூப்பர் ஜி

    ReplyDelete