Tuesday, February 25, 2014

சினிமா கதைகள்- எங்கேயிருந்து உருவப் பட்டன? -லிஸ்ட்.


வணக்கம் மக்கள்ஸ்!!

நாமும் தமிழ் திரைப்படம் ஒன்றுக்காவது ஆஸ்கார் விருது வராதா?  தமிழராய் பிறந்ததற்காக பெருமை பட்டுக் கொள்ள முடியாதா என்று வெகு வருடங்களாய் ஏங்கிக் கிடந்தோம்.  ஆஸ்கார் எப்படியும் வாங்கி சாதிப்பாரு என்று சிலருக்கு ஆஸ்கார் நாயகன் என்றெல்லாம் பட்டம் கொடுத்து பார்த்து மகிழ்ந்தோம்.  சப்தமில்லாமல் அதைச் சாதித்து நம்மை ஏ ஆர் ரஹ்மான் திக்குமுக்காடச் செய்து விட்டார் என்பது ஒருபுறம் இருந்தாலும் ஏன் நேரடித் தமிழ்ப் படத்திற்கு இன்னமும் ஆஸ்கார் கிடைக்கவில்லை என்ற கேள்வி இன்னமும் நம்மை தூங்கவிடாமல் செய்து கொண்டிருப்பதும் உண்மை.  அதற்கான விடை கிடைத்துள்ளது.

ஆஸ்கார் விருதுக்கு முக்கியமாக வேண்டிய தகுதி  அந்தப் படத்தின் வேலைகள் அனைத்திலும் ஆங்கிலத்தில்  Originality எனப்படும் சுயத் தன்மை இருக்க வேண்டும்.   அதாவது ஊரைச் சுத்தி எடுக்கப் படும் படங்களின் கதைகளை எடுத்து தன்  ஊருக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் டிங்கரிங் வேலை பண்ணி அதையே ஆஸ்காருக்கு அனுப்பினால் பருப்பு வேகாது.  மூஞ்சி மேல காறித் துப்பி, திரும்பி நில்லுடா என்று சொல்லி பம்ஸ் மேல எட்டி உதச்சு விரட்டி விட்டு விடுவான் வெள்ளைக் காரன்!!  The God Father படத்தை அந்த மாதிரி எடுத்து கொண்டு போய் காமிச்சவனுக்கு அதுதான் நடந்தது.  வில்லனை அடித்து கீழே தள்ளி, பின்னர் சுத்தியலால் அவனைத் தாக்கும் சமயத்தில் ஒரு தண்ணீர் குழாய் உடைத்து தண்ணீர் வெகு உயரத்துக்கு பீச்சியடிக்கும் காட்சியைப் பார்த்த வெள்ளைக்காரன், இது தான் The God Fatherபடத்திலே பார்த்திட்டோமே இன்னொரு தடைவையா? -என்று கேட்டு காறித் துப்ப அதையும் வாங்கிக் கொண்டு வந்து ஒன்னுமே நடக்காத மாதிரி இன்னமும் ஊரை ஏமாத்திகிட்டு இருக்கான் ஒரு மானங் கெட்டவன்.


அப்படியானால் நம்மாளுங்களுக்கு ஒரிஜினாலிட்டி இல்லை என சொல்ல வருவதாக நீங்கள் நினைத்தால் அது தவறு!!  சொல்லப் போனால், கதையை  யோசித்து மூளையை செலவு செய்து [அங்க யாருப்பா களிமண்ணிலா படத்தை எடுப்பாங்கன்னு பேசுறது?  சும்மா இருக்க மாட்டீங்களா?] படத்தை எடுக்கிறார்கள்.  இதன் கதைகளை அதன் பின்னர் வெள்ளைக்காரனும் உலகில் உள்ள எல்லா பயலுவலும்  சுட்டு இங்கிலீஷில் படத்தை எடுத்து எல்லா அவார்டுகளையும் வாங்கிடறானுங்க.  ஆனா, அதெப்படி நம்மாளுங்க படம் ரிலீஸ் பண்றதுக்கு ரெண்டு வருஷம், அஞ்சு வருஷம், பத்து வருஷம், இருவது வருஷம்ன்னு முன்னாடியே அவனுங்க வெளியில உட்டுடுறானுங்கன்னு தான் புரியல.

சில வருடங்களுக்கு முன்னாடி வந்த ஜக்குபாய் என்ற அமர காவியத்தைக் கூட ஒரு பாவி பய சுட்டிருக்கான்.  எப்பேர்பட்ட படம் அது?  அந்த படம் ரிலீஸ் ஆவறதுக்கு முன்னாடியே முப்பதாயிரம் திருட்டு சி.டி க்களை ஒருத்தன் போட்டு விற்கப் பார்த்திருக்கான்.  படத்தின் கதி இப்படி ஆயிடுச்சேன்னு பத்திரிகையாளர்களை கூப்பிட்டு வச்சு படத் தயாரிப்பாளர் அம்மா ஒப்பாரி வைக்க, இன்னொரு பக்கம் திருட்டு சி.டி யை ஒரு பயலும் வாங்காமல் விட அதை எடுக்க போட்ட பணம் கூட எடுக்க முடியலையேன்னு அவன் தலை மேல துண்டு போட்டுக் கொண்டு அழுத ஒப்பற்ற படம்.  அந்தப் படத்தின் கதையைக் கூட ஒருத்தன் ஆட்டைய பொட்டிருக்கன்னா பார்த்துக்கோங்க, நம்மாளுங்க எவ்வளவு ஏமாளிங்களா இருந்திருக்காங்கன்னு!!

முதலில் இந்த மாதிரி கதைத் திருட்டு நடக்காமல் நம்மாளுங்க தடுக்க வேண்டும்.  நம்மாளுங்க உழைப்பை வேற எவனோ லவட்டிகிட்டு போய் வருஷா வருஷம் ஆஸ்கார் வாங்கிகிட்டு இருக்கான்.  அதைத் தடுக்க வேண்டும்.  இப்போ இங்கே 1949 ஆம் ஆண்டு வந்த நல்ல தம்பி படத்தில் இருந்து, சமீபத்தில் வெளியான தெய்வத் திருட்டுமகள் ............  சாரி.......  தெய்வத் திருமகள் படம் வரைக்கும் வெள்ளைக்காரனுங்க ஆட்டையப் போட்ட படங்களின் லிஸ்டு இருக்கு.  இது முழுசுன்னு சொல்லறதுக்கில்ல, தெரிஞ்சு இம்புட்டுன்னா தெரியாம இன்னும் எம்புட்டோ, யாரு கண்டது?



கதை மட்டுமல்ல, திரையிசை என்று பார்த்தாலும் இந்த கூத்து தொடர்கிறது.  மெல்லிசை மன்னர் MSV யில் துவங்கி, இளையராஜா, தேவா, ரஹ்மான் வரைக்கும் ...........  எல்லாம் ஒன்னேதான்!!

இந்த யோக்யதையில் இருந்தா ஆஸ்கார் எங்கேயிருந்து வரும்?  எவனாச்சும் உள்ளூர்க்காரன் "பத்மா புருஷன்", வீரன், சூரன் என்று விருது குடுத்து, மவனே அதை பேருக்கு முன்னாடி, பின்னாடி, மேலே, கீழேன்னு எங்கேயாச்சும் தெரிஞ்சோ தெரியாமலோ போட்டா நீ தொலைஞ்சே, திரும்ப பிடுங்கிக்குவோம்னு சொன்னாலும், ஒரு ரயில்வே டிக்கட்டு புக் பண்ணக்  கூட உதாவாத அந்த வெங்காய விருதையே வாங்கி வச்சுகிட்டு சந்தோஷப் பட்டுக்க வேண்டியது தான்.  இதை உணர்ந்த ஆஸ்காருக்குன்னே பிறந்த நாயகன் சொன்னார், "நாம் ஆஸ்கார் எதற்கு வாங்கணும்?  நாம் விருது வழங்க ஆரம்பிப்போம் வெள்ளைக்காரன் இங்கே வந்து அந்த விருதை வாங்கி பெருமையடையும்படி செய்வோம்" -என்று போகாத ஊருக்கு வழி சொல்லிவிட்டு அமுங்கி விட்டார்.




நல்ல தம்பி-Mr.Dead goes to Town

சாந்தி நிலையம்- The Sound of Music

சிவகாமியின் செல்வன்- To Each of His own

ஆஸ்கார் நாயகன்:

 ராஜபார்வை -Butterflies are Free (1972) [கதை]
                             -‘The Graduate’ (1967) [கிளைமேக்ஸ்]

எனக்குள் ஒருவன்  -’The Reincarnation of Peter Proud (1975)


இந்திரன் சந்திரன்’Moon Over Parador (1988)’ &  The Magnificent Fraud

வெற்றிவிழா – ‘Bourne Identity’ என்ற நாவல்

குணா- Tie me up tie me down ! [Spanish] & Rain Man [1988]

நம்மவர்- Class of 1984 & To Sir with Love (1967)

மகளிர் மட்டும் -Nine to Five (1980)

சதி லீலாவதி –  She – Devil (1989)’

அவ்வை சண்முகி – Mrs. doubtfire  & ‘Tootsie (1982)’

பஞ்ச தந்திரம் –’Very bad things (1988)

தெனாலி –‘What about Bob

ஹே ராம்- ‘Barabbas (1961)’

விருமாண்டி -Life of David gale

நாயகன், தேவர் மகன்- The God Father

சூரசம்ஹாரம்- Witness

மகாநதி-Hardcore

மன்மதன் அம்பு- Romance on the High Seas

நளதமயந்தி- Green Card

வசூல் ராஜா MBBS -Patch Adams

அன்பே சிவம்- Planes, Trains & Automobiles

பம்மல் K சம்பந்தம் - The Bachelor

கெளதம் வாசுதேவ் மேனன் 


காக்க காக்க - The Untouchables

வேட்டையாடு விளையாடு- (1) 15 Minutes, (2) The Bone Collector and (3) Mystic River

வானரம் ஆயிரம்- Forest Gump

விண்ணைத் தாண்டி வருவாயா- 500 days of Summer

பச்சைக் கிளி முத்துச் சரம்- Derailed

மணி ரத்னம் 


ரோஜா- Sun Flower

நாயகன் - The God Father

திருடா ...திருடா.......- Butch Cassidy & the Sundance KID

அலைபாயுதே- Bare Foot in the Park

ஆய்த எழுத்து - Amores Perros

 ஷங்கர் 


எந்திரன் - Bicentennial Man & iRobot

அந்நியன் -Se7en

வெங்கட் பிரபு 

சரோஜா- Judgement Night

கோவா- Road Train

K V ஆனந்த் 

கோ-State of Play

அயன்- Maria Full of Grace


 மற்றவை:


வாமணன்- Enemy of the State

யோகி- Tsotsi

அருணாச்சலம்- Brewsters Millioners

மைனா- Dog bite Dog

கஜினி- Memnto

12B-Sliding Doors

கண்டுகொண்டேன்...........கண்டுகொண்டேன்...........- Sense and Sensibility

 பொல்லாதவன் -Bicycle Thieves

மே மாதம் -Roman Holiday

விருத்தகிரி -Taken

காதல் கொண்டேன்- Fear

வானம் -Crash

3 ரோசாஸ்-Charles Angles

கண்களால் கைது செய்- The Thomas Crown Affair

அவள் வருவாளா- Sleeping with enemy

நியூ- Big

பந்தயம்- Good bye Lover

ஜே.........ஜே.......- Serendipity

பேராண்மை- The dawns here are quiet

ரிஷி-The Killer

வேகம்- Cellular

இந்திரவிழா- Disclosure

வல்லவன்-Swim Fan

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது-Addicted to Love

காதல் கிறுக்கன்- Primal Fear

ஆணை- Man on Fire

செங்கோட்டை- Commando

எவனோ ஒருவன்- Falling Down

காதல் கோட்டை-The Shop around the corner

நாம் இருவர் நமக்கு இருவர்- Too Much

எனக்கு 20 உனக்கு 18- On the Line

தாம் தூம்- Red Corner

லண்டன்- A Fish Called Wanda

ஏகன்-Back to School

சர்வம்- 21 Grams

மொழி- Children of a Lesser God

விசில்- Urban Legend

ஜக்குபாய்-Wasabi

சிக்கு புக்கு- The Classic

ஜன்ம நட்சத்திரம்- The Omen

மை டியர் மார்த்தாண்டன் -Coming to America

வா அருகில் வா-Child's Play

ரெட்டை வால் குருவி-Mickiie Maude

ஜூலி கணபதி-Misery

நாளைய மனிதன்-Silent Rage

அதிசய மனிதன்- Friday 13th

பன்னீர் புஷ்பங்கள்- Little Romance

நந்தலாலா- Kikijuro

தெய்வத் திருட்டுமகள் - I am Sam






25 comments:

  1. எங்கிருந்தோ தான் இத்தனை தகவல் திரட்டுனீங்களோ தெரியவில்லை... ம்... பாராட்டுக்கள்... பழைய இயக்குனர்களின் அருமை பெருமை மட்டும் புரிகிறது...

    ReplyDelete
  2. ரொம்ப டென்ஷன் ஆகிட்டிங்க. இது கொஞ்சம் பழைய மேட்டர். இதெல்லாம் லிஸ்ட் போடுர சமாச்சாரமா? அப்படி போட்டால் அது அனுமார்வால் மாதிரி போகும். நான் ஒரிஜினல் என்று நம்பிய பல தமிழ்ப் படங்கள் காப்பி தான். இன்னும் கொஞ்சமாவது ஒழுங்க காப்பியடிச்சி இருக்கலாம்னு தோணும்.

    ReplyDelete
  3. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. தமிழ் படங்கள் எடுப்பது மிக எளிதாக இருக்கும் போலிருக்கிறது... ஆங்கில படத்தை எடுத்து அதில் தொப்புளை காண்பிக்கிற மாதிரி ஒரு டான்ஸ், சரக்கு அடிச்சிட்டு ஒரு டப்பாங்க் குத்து பாட்டு... அப்புறம் ஒரு கோயில் முன்னால் ஒரு கரக ஆட்ட டான்ஸ் சேர்த்துட்டா ஒரு சூப்பர்கிட் படம் ரெடி போல.

    ReplyDelete
  5. நன்றி நண்பரே உங்கள் பதிவின் மூலம் நான் தமிழ்பட டைரக்டர் ஆவாது என்பது பற்றி கற்றுக் கொண்டேன்.. நான் இப்ப படம் எடுக்க ரெடி...முதலீடு போட யாராவது ரெடியாக இருக்கீங்களா?

    ReplyDelete
  6. நீங்கள் சொன்ன ஆங்கிலபடங்களை எல்லாம் பார்த்திட வேண்டியதுதான்

    ReplyDelete
  7. மேட்டர் பழசு தான், ஆனாலும் நல்லா எழுதிருக்கீங்க...

    இவனுங்கள எத்தனை தடவை அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிப்பனுங்க!!

    ReplyDelete
  8. this post is also copycat post. list stolen from youtube.

    :)

    ReplyDelete
    Replies
    1. I agree with you, but my copying has some difference.

      I am not going to make money out of my copying.
      Nobody is going to give Padmasri/Padma Bhushan awards for my being a Blogger.
      At the end of the You Tube Video, the owner has given the freedom to share the information to whoever the viewer wants.
      The original Video also I have shared here for the readers.

      To expose some culprits copying is no harm!!

      Delete
  9. தலைப்பை பார்த்தவுடன் கமல் படங்கள் இதில் இருக்குமே என்று வந்தேன். உண்மை தான்.

    ReplyDelete
    Replies
    1. @ ஜோதிஜி திருப்பூர்

      He is No.1.

      Delete
  10. //என்று கேட்டு காறித் துப்ப அதையும் வாங்கிக் கொண்டு வந்து ஒன்னுமே நடக்காத மாதிரி இன்னமும் ஊரை ஏமாத்திகிட்டு இருக்கான் ஒரு மானங் கெட்டவன்.//

    Konjam mariyathai koduthu eluthi irukkalam.
    His copying does not grant license to you to stoop to so low levels. Shame.
    Otherwise I support you that we lack originality, including the person you talk about.

    ReplyDelete
    Replies
    1. @ Sabareesan

      I agree with you. The extent we have been cheated made me to write that way.

      Delete
  11. நீங்கள் சொல்வது உண்மைதான். இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஏதாவது நல்ல படத்தின் கதையைத்தான் 'கேட்கிறார்கள்'. எழுத்தாளர்களின் கற்பனைகளுக்கு இடமில்லாமல் போய்விட்டது. அதனால்-

    உதவி இயக்குநர்கள் பார்த்துவிட்டு வந்து சொல்லும் டிவிடிக்களின் கதைகள்தாம் படமாகும் வாய்ப்பைப் பெறுகின்றன.

    டிவிடிக்கள் எல்லாம் வருவதற்கு முன்பு ஏதோ ஒரு படம்தான் காப்பியடிக்கப்பட்ட படமாக வரும். இப்போதோ ஏதாவது ஒரு படம்கூட சுயமாக வருகிறதா என்பது தெரியவில்லை.

    இசையும் அப்படித்தான். ஏராளமான டியூன்கள் சிடியிலேயே கிடைக்கின்றன.

    டேப்ரிகார்டர்களும் கேசட்டுகளும் வந்தவுடன் 'உலகளாவிய இசை' சுலபமாகக் கிடைக்கத் துவங்கியது.

    டிவிடிக்கள் வந்தவுடன் 'உலக சினிமா' சரேலென்று தமிழுக்கு வந்தே விட்டது.

    ReplyDelete
  12. தமிழ் படங்கள் 99 வீதமுமே ஆங்கில படங்களின் அப்பட்டமான காப்பி அடிச்சதுன்னு அறிந்திருக்கோம் இப்படி படங்கள்சில என்ன படங்களில் இருந்து களவாடினாங்க என்பதை தெரிவிச்ச நண்பர் ஜெயதேவ் தாஸ்சுக்கு நன்றி.

    ReplyDelete
  13. @ Amudhavan

    சார் இந்த வேலை நல்ல தம்பி படம் வந்த காலத்திலிருந்தே நடந்து வந்திருக்கிறது, அப்படியே அதிகமாகி 35-40 வருடங்களாக எந்தப் படத்தைப் பார்த்தாலும் அது ஏதாவது ஒரு ஆங்கில/உலகப் படம் அல்லது நாவலை நம்மூருக்கு ஏத்தா மாதிரி டச் அப் செய்தது போலத் தான் இருக்கு. CD எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே நம்மாளுங்க இதில் கை தேர்ந்தவங்களா இருந்திருக்காங்க!!

    ReplyDelete
  14. funny these thieves complain about thiruttu dvd!!!

    ReplyDelete
  15. ஆங்கிலப் படங்கள் வெகுவாக மக்களை சென்றடையாத 50 களில் அவற்றை தமிழில் கொண்டுவந்தது குற்றம் என ஆகாது. மேலும் சில பழைய படங்களில் மூலக்கதை என்று கோடிட்டு காட்டுவார்கள். உத்தம புத்திரன் படம் கூட தி மேன் இன் தி ஐயன் மாஸ்க் படத்தின் பாதிப்புத்தான். ஆனால் எந்த ஒரு மொழிப் படமும் எட்டு நிமிடங்களில் சடாரென தரவிறக்கம் செய்யப்படும் இன்றைய யுகத்திலும் நம் இயக்குனர்கள் வெட்கமில்லாமல் அதை பிரதி எடுப்பதுதான் கேவலம்.கமலஹாசனுக்கு கொஞ்சம் துணிச்சல் ஜாஸ்தி. ஆங்கிலப் படங்களையே தமிழ்ப் படுத்தி தன்னை ஆஸ்கார் நாயகன் மற்றும் உலக நாயகன் என்று தற்பெருமை பேசும் அளவுக்கு.

    ReplyDelete
    Replies
    1. காரிகன்,

      சில பழையபடங்களில் மூலக்கதை என போட்டு நாவலை குறிப்பிடுவார்கள். ஏழை படும்பாடு படத்தில் மூலக்கதை "Les Misérables" , அனாதை ஆனந்தன் படத்தில் "oliver twist" என வரும். அக்காலத்தில் இதைப் பார்த்துவிட்டு யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனாலும் குறிப்பிட்டார்கள்.

      //கமலஹாசனுக்கு கொஞ்சம் துணிச்சல் ஜாஸ்தி. ஆங்கிலப் படங்களையே தமிழ்ப் படுத்தி தன்னை ஆஸ்கார் நாயகன் மற்றும் உலக நாயகன் என்று தற்பெருமை பேசும் அளவுக்கு.//

      அவர் ஒரு படத்திலிருந்து காப்பி அடிப்பதில்லை, பல படங்களிலிருந்து அடிப்பார். அதை நாம் கண்டுகொள்ள பல உலக மொழிப்படங்கள் பார்த்திருக்க வேண்டும். சமீபத்தில் தொலைக்காட்சியில் ஆங்கிலப்படம் ஒன்று போய்க்கொண்டிருந்தது, அதில் வரும் கடத்தல்காட்சி அப்படியே டிட்டோவாக் விக்ரம் படத்தில் வரும் தொடக்கக்காட்சி. படத்தின் பெயர் ஞாபகம் வரவில்லை. தெரிந்தால் சொல்லவும்.

      Delete
  16. காரிகன் சொல்வதுபோல் 'எட்டு நிமிடங்களில் சடாரென தரவிறக்கம் செய்யப்படும் வசதிகள் எல்லாம் வந்தபின்னர்தான் இவை அதிகமாகவிட்டன'. என்பதுதான் உண்மை.

    முன்பெல்லாம் நம் புராணக் கதைகளிலிருந்தும் பரம்பரைக் கதைகளிலிருந்தும் கதை எடுத்துப் படம் தயாரிப்பார்கள். பிறகு நாவல்கள் படங்களாயின. கல்கி, அகிலன் , கொத்தமங்கலம் சுப்பு போன்றோரின் நாவல்களெல்லாம் படமாகியிருக்கின்றன.

    ஏ.பி.நாகராஜன் புராணக்கதைகளை இருபதாம் நூற்றாண்டிற்கு எப்படிச் சொல்ல முடியுமோ அப்படி அழகுத் தமிழில் சொல்லமுனைந்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனெல்லாம் குடும்பக்கதைகளைக் கொண்டுவந்தார்கள். அப்போதெல்லாம் காப்பி என்பது எப்போதாவதுதான் என்றே இருந்தது.

    காரிகன் சொல்லியிருப்பதில் இன்னொரு முக்கியமான விஷயம்- \\ஆங்கிலப் படங்கள் வெகுவாக மக்களை சென்றடையாத 50 களில் அவற்றை தமிழில் கொண்டுவந்தது குற்றம் என ஆகாது\\

    இப்போதெல்லாம்...........வெறும் ஆங்கில - மற்றும் உலக சினிமாக்கள்தாம். இதில் கொரிய சினிமாக்கள் ரொம்பவும் தோதாக இருப்பதாக வேறு சொல்லிக்கொள்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. //இதில் கொரிய சினிமாக்கள் ரொம்பவும் தோதாக இருப்பதாக வேறு சொல்லிக்கொள்கிறார்கள்.//

      கொரியப் படங்களில் லவ் சென்டிமென்ட் ஜாஸ்தி. அதை அப்படியே உருவி தமிழ்படமாக்கிவிடலாம்.

      Delete
    2. \\காரிகன் சொல்வதுபோல் 'எட்டு நிமிடங்களில் சடாரென தரவிறக்கம் செய்யப்படும் வசதிகள் எல்லாம் வந்தபின்னர்தான் இவை அதிகமாகவிட்டன'. என்பதுதான் உண்மை. \\ நீங்கள் சொல்வது சரியே. ஆனால் லோக நாயகன் சி.டி எல்லாம் கண்டுபுடிக்காத காலாத்தில் இருந்தே இந்த வேலையை பண்ணிக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு வேலை வீடியோ கேசட்டுகளாக வாங்கி வந்து செய்திருக்கலாம்!!

      Delete
  17. @ காரிகன்

    \\ஆங்கிலப் படங்கள் வெகுவாக மக்களை சென்றடையாத 50 களில் அவற்றை தமிழில் கொண்டுவந்தது குற்றம் என ஆகாது. \\ " நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா, எதுவுமே தப்பில்லை" என்ற வசனத்தை லோக நாயகன், வேலு நாயக்கர் பாத்திரத்தில் உதிர்த்திருப்பார். ஆனால், இவர்கள் படங்களை திருட்டு சி.டி யில் வரும்போது இவர்களால் அதை தாங்கிக் கொள்ள முடிகிறதா? உலக அளவில் தமிழ் சினிமாவை இவர்கள் கொண்டு செல்வதாக இந்திய அளவில் ஊடகங்கள் இவர்களைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கின்றன, அதன் பொருள் உலக படங்கள் எல்லாவற்றையும் காப்பியடித்து நமக்கு இவர்கள் தருகிறார்கள் அவ்வளவுதான். அதே சமயம் இவர்களுக்கு கொடுக்கப் படும் விருதுகள் அந்தஸ்து எல்லாம் இவர்களால் கூச்சமில்லாமல் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடிகிறது என்பதுதான் வியப்பாக இருக்கிறது!!


    முதல் வருகைக்கு மிக்க நன்றி காரிகன்!!

    ReplyDelete
  18. Excellent beat ! I wish to apprentice whilst you amend your web site, how
    could i subscribe for a blog web site? The account helped me a applicable deal.
    I had been tiny bit familiar of this your broadcast offered vibrant transparent concept

    My page; canto vocazione accordi chitarra

    ReplyDelete