Monday, January 25, 2016

பத்மா புருஷன் அவார்டு.

சார் உங்களை பத்மா புருஷன் அவார்டு குடுக்க செலக்ட் பண்ணியிருக்கோம்!!

அப்படியா, ரொம்ப சந்தோசம்.  விருது கிடைச்ச சந்தோஷத்துல கையும் ஓடலை காலும் ஓடலை.  அதுசரி விருது குடுத்ததும், என் பேருக்கு முன்னாடி "பத்மா புருஷன்" அப்படின்னு போட்டுக்கலாமா?

ஏன் சார் அப்படி போட்டா ஒரிஜினல் பத்மாவோட புருஷன் அடிக்க வந்துட மாட்டானா, அதெல்லாம் முடியாது.  மீறி எங்கேயாச்சும் போட்டிங்கன்னு கண்டு பிடிச்சோம்னா  விருதை திரும்ப பிடுங்கிக்குவோம்.

என்னைய்யா இது, உங்ககிட்டா பேஜாரா போச்சு.  சரி பேருக்கு முன்னாடி தான் போட முடியாது, போனா போகட்டும்.  விருதுன்னா எதாச்சும் பணமுடிப்பு தருவாங்களே அதாவது இருக்குமா?

ஒரு ம..ரும் கிடையாது.

அட நாரப் பசங்களா, அதை காமிச்சு ஒரு இரயில் டிக்கெட்டாச்சும் புக் பண்ண முடியுமாடா??

அதுவும் முடியாது.

அப்புறம் என்ன பீப்புக்குடா இந்த அவார்டு, நீங்களே வச்சிக்குங்கடா.......................எனக்கு அவார்டு வேணும்னா நான் நாச்சியப்பன் பாத்திரக் கடையிலேயே வாங்கிக்கிறேன்டா...........

13 comments:

  1. ஹாஹாஹா ஸூப்பர் நண்பரே
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. [[[அப்புறம் என்ன பீப்புக்குடா இந்த அவார்டு, நீங்களே வச்சிக்குங்கடா....]]]
    வாங்கோ! சிம்புவோட அண்ணாவே!
    தமிழ்மணம்+3

    ReplyDelete
  3. சூப்பரு...!!
    மயிருன்ற தமிழ் வார்த்தையை இப்படி நாமளே beep வார்த்தையா பாவிக்கலாமா?!

    ReplyDelete
    Replies
    1. பீப் .........அப்படிங்கிற சப்தம் பல திரைப் படங்களில் மட்டுமல்லாது, எண்ணற்ற தொலைக் காட்சி நிகழ்சிகளிலும் தொடர்ந்து பயன் படுத்தப் பட்டு வருகிறது. எந்தெந்த வார்த்தைகள் பார்ப்பவர்கள் கேட்கக் கூடாதோ அந்த இடங்களில் இந்த சப்தத்தை போட்டு மறைத்து விடுவார்கள். சில சமயம் இது நிறுவத்தின் பெயரோ, தனி நபரின் பெயராகக் கூட இருக்கலாம். வெளிவரக் கூடாது என நினைக்கும் எந்த ஒரு வார்த்தைக்கும் பீப்.......... தான். ஆனால் இந்த உஷாவின் உத்தம புத்திரன் பாட்டு வெளியான பிறகு பீப் என்றால் அது பெண்ணின் பீப்பை மட்டுமே குரிக்கும்னு ஆக்கிட்டாங்க!!

      Delete
    2. [[[அப்புறம் என்ன பீப்புக்குடா இந்த அவார்டு, நீங்களே வச்சிக்குங்கடா......]]
      இந்த உஷாவின் உத்தம புத்திரன் பாட்டு வெளியான பிறகு பீப் என்றால் அது பெண்ணின் பீப்பை மட்டுமே குரிக்கும்னு ஆக்கிட்டாங்க!!

      வாங்க சிம்புவின் அண்ணாவே!

      Delete
  4. ப்பூ இவ்வளவுதானா ,நானும் உங்க கூட கடைக்கு வர்றேன் :)

    ReplyDelete
  5. அதனாலதான் நம்ம ஜெமோ உறுதியா வேணாம்னு சொல்லிட்டாரு

    ReplyDelete
  6. நாச்சியப்பன் பாத்திரக் கடைத் ,,,


    அவார்டு இப்படியெல்லாம் கூட,,

    ReplyDelete
  7. தாசண்ணே,
    அப்ப ஏன் உங்கள் அதிகம் வாசிக்கப்பட்ட , "சிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது?" பதிவில் பீப் சத்தமும் எங்கேயும் போடலை?

    மற்றவர்களுக்கு தான் நியாமாம? புராணத்துக்கு மட்டும் தான் exception-ஆ! மாதர் சங்கங்கள் இதுக்கு எல்லாம் கேஸ் போடமாட்டங்ளா? ஒரு விதத்திலே exception கொடுத்தது சரி தான்! இல்லாவிட்டால் பீப் சத்தம் மட்டும் தான் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. நான் சொந்தமாக எதையாவது சொன்னால் தானே, புரானனத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே சொல்லியிருந்தேன். இந்தியா மதச் சார்பற்ற நாடு என்பதால் அவரவர் நம்பிக்கையை பின்பற்றுவதற்கு முழு சுதந்திரம் உண்டு. ஆகையால் பிரச்சினையில்லை.

      Delete
  8. தமிழ்மணம் +6
    இரண்டு வோட்டு போடமுடின்ச்சா போட்டு இருப்பெண். வாசகர் பரிந்துரையில் உங்க பதிவு வரும்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நம்பள்கி!!

      Delete