Friday, December 21, 2012

ரூம் போட்டு தனியா உட்கார்ந்து யோசிச்சே ஞானியாக முடியுமா?

பல வருடங்களுக்கு முன்னர் சினிமா....... சினிமா.........  அப்படின்னு ஒரு படத்தை எடுத்தாங்க.  அந்த படத்தின் மையக் கருத்து இதுதான்:  சினிமாவில் அசகாய சூரனாக நடிப்பவன் நிஜ வாழ்விலும் அவ்வாறு இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, ஆனால் தமிழ் சினிமாவில் ஹீரோவாயிட்டாலே அடுத்து முதலமைச்சர் நாற்காலிக்குத் தாவ வேண்டியது தான் பாக்கி என்று எல்லா பயலும் அலையுறான், சினிமா என்பது நிழல், நிஜமல்ல எனவே நம்பாதீங்க.

அன்னைக்கு அந்தப் படத்தில் சொன்னது இன்னைக்கும் பொருந்துது என்பதுதான் வேடிக்கையாக இருக்கு!!  ஆனால்,  இந்தப் படம் அதன் நோக்கத்தை நிறைவேற்றியதா என்றால் அதுதான் இல்லை.   நிஜ வாழ்விலும் ஹீரோவை நல்லவனாகவும் வில்லனை அயோக்கியனாகவுமே  கற்பனை பண்ணி பழகிப் போன நம்ம பன்னாடைங்க,  அதில் நடித்த நிழல்கள் ரவி தான் ஹீரோவா நடிச்சு மக்களை ஏமாத்தும் அயோக்கியன் என்று அவர் போகுமிடமெல்லாம் அவரைக் கரித்துக் கொட்ட ஆரம்பித்தனர்.  அட தேவுடா இப்படி ஆயிடிச்சேடா என்று படத்தை எடுத்தவர்கள் முக்காடு போட வேண்டியதாயிற்று.

இந்த மாதிரி முயற்சிகளில் ஒரு முரண் இருக்கு.  சினிமாவின் தீங்குகளைப் பற்றி எடுத்துக் கூற இன்னொரு திரைப் படத்தை எடுத்தது ஒரு முரண்.  ஆனாலும், சினிமாவுக்கு குடுக்க வேண்டியதை விட அதிக முக்கியத்துவம் தர வேண்டாம் என்று சொன்ன வகையில் இதை விட்டு விடலாம்.  ஆனால், வேறு சில முரண்களை நம்மாளுங்க செய்வாங்க அது அப்படி ஈசியா விட்டு விட முடியாத அளவுக்கு கொடுமையானதா இருக்கும்.  புத்தகத்தை படிக்காதீர்கள் என்று அமெரிக்காவில் ஒருத்தன் புத்தகத்தைப் போட்டான்!!  அந்த புத்தகம் பயங்கர சேல்ஸ் ஆகி ரெகார்டு பண்ணியது!! இது மாதிரி ஏற்க முடியாத ஒரு முரணை நம்ம ஐயா Dr. பழனி கந்தசாமி பண்ணி காமடியாக்கிகிட்டு இருக்கார்!!

இவர் சமீபத்தில் சிந்தனைத் தெளிவு என ஒரு பதிவு போட்டிருந்தார், இதில் அவர் இவ்வாறு சொல்கிறார்:

 \\நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று வேறு யாரும் சொல்லிக்கொடுக்க முடியாது. ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கை. நீங்களாக ஒரு தெளிவு பெற்று வாழ்ந்தால்தான் அந்த வாழ்க்கையில் சிக்கல்கள் வரும்போது உங்களால் சிந்தித்து ஒரு தீர்வு காண முடியும். 

இதற்கெல்லாம் ஒரே தீர்வு சிந்தனைத் தெளிவுதான். நன்றாக சிந்தியுங்கள். சிந்தித்து தெளிவு பெறுங்கள். \\

ஆஹா..!! என்னாமா எழுதியிருக்காரு, மெய் சிலிர்க்குதே, இதில் என்ன முரண் என்று நீங்கள் கேட்கலாம். முதலில் "வாத்தியாரே தேவையில்லை" என்று வாழ்நாளில் பெரும்பகுதி வாத்தியார் தொழிலில் இருந்த ஒருத்தர் சொல்வது முரண்.  இதைக் கூட விட்டு விடலாம், இவர் சொல்வதை இவரே நம்பவில்லை என்பது தான் கொடுமை. அதற்க்கு இவர் போட்ட இந்த பதிவே சாட்சி.  வெளியில் இருந்து யாரும் நமக்குச் சொல்லிக் கொடுக்க முடியாது என்று இவர் இந்தப் பதிவில் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்  வாத்தியார் வேண்டாமென்று சொல்ல வந்த இவர், இதை சொல்லிக் கொடுப்பதன் மூலம் வாத்தியார் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார். நமக்கே எல்லாம் தெரியும் என்றால், "நாமே சிந்தித்து தீர்வை எட்ட முடியும்" என்ற செய்தியும் நமக்கே இன்னொருத்தர் வந்து சொல்லாமலேயே தெரிந்திருக்க வேண்டும். இவர் "நீங்களே சிந்தியுங்க" என்று சொல்லி பதிவும் போட்டிருக்கத் தேவையில்லையே!!  ஆக இவர் சொன்னதை இவரே நம்பவில்லை.  அடுத்தவங்க கிட்ட போயி அறிவுரை கேட்காதே என்பதே அறிவுரை தானே!!  இது தான் முரண் என்பது!!  

இத்தோடு நில்லாமல் நாம் கற்கும் பல நூல்களும் அவற்றில் இருந்து பெரும் அறிவும் உதவாது, குழப்பும் என்று சொல்கிறார்.  இதோ:


\\பல நூல்களைக் கற்கிறோம். பலருடன் கலந்து பழகுகிறோம். அறிஞர்களின் பேச்சைக் கேட்கிறோம். மதத் தலைவர்களின் அறிவுரைகளைக் கேட்கிறோம். இவைகளினால் நம் மூளையில் ஏகப்பட்ட செய்திகள் சேர்ந்திருக்கின்றன.

இத்தனை செய்திகளையும் ஏதோ ஒரு வகையில் நம் வாழ்க்கையை வாழ உபயோகப்படுத்துகிறோம். ஆனாலும் ஒரு வகைக் குழப்பத்தோடுதான் பெரும்பாலானவர்கள் வாழ்கிறார்கள். ஏன் என்றால், நாம் செய்வது சரிதானா இல்லையா என்ற குழப்பம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து கொண்டே இருக்கிறது.\\

இவர் சொல்படி பார்த்தா பகவத் கீதை, திருக்குறள் இதெல்லாம் படிச்சு நமக்கு ஒன்னும் கிடைக்காது, வேஸ்டு!! 

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம், வாழ்வில் குழப்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?  இவர் சொல்வது போல தனியா ரூம் போட்டு முகட்டுவளையைப் பார்த்து உட்கார்ந்து யோசிச்சாலே போதுமா? அப்படின்னா பகவத் கீதை மாதிரி நூல் எதற்கு, ஸ்ரீ ராமானுஜர், சங்கராச்சாரியார் போன்ற மஹான்கள் எதற்கு?  நமக்கு இந்த மாதிரி கொள்கைகள் எற்ப்புடையதாக இல்லை. நாம் பகவத்கீதை காட்டிய பாதை நமது பாதை என்று ஏற்றுக் கொண்டு விட்டதால், அதில் இது குறித்து என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.


அர்ஜுனனின் குழப்பத்தில் தான் பகவத் கீதையே ஆரம்பிக்கிறது. தன்னை எதிர்த்துப் போரிட வந்துள்ள தன்னுடைய பாட்டனார், ஒன்று விட்ட சகோதர்கள், அவர்களின் மகன்கள் போன்ற நெருங்கிய சொந்தங்களைப் பார்த்து அர்ஜுனன் புத்தி தடுமாறுகிறான், இவர்களை கொன்று குவிக்கும் போரில் ஈடுபடத்தான் வேண்டுமா, பேசாமல் பிச்சை எடுத்து வாழலாமே என்று பல்வேறு விதமாகச் சிந்தித்து குழம்பிப் போகிறான்.  அந்த குழப்பத்தில் இருந்து மீண்டு வர அவன் தனியே உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பித்தானா?  இல்லை.  வாழ்வில் குழப்பம் நம்மை மொத்தமாக மூழ்கடிக்கும்போது அதிலிருந்து தப்பி கரையேற முக்கியமாக நாம் செய்ய வேண்டியது நமது வழிகாட்டியாக ஒரு குருவைத் தேர்ந்தெடுப்பது தான்.  அதைத்தான் அர்ஜுனன் முதலில் செய்தான்.  ஸ்ரீ கிருஷ்ணனரைப் பார்த்து, 

BG 2.7: நான் தற்போது என்னுடைய கடமை என்னவென்று தெரியாமல் முற்றிலும் குழம்பிய நிலையில் இருக்கிறேன், என்னுடைய கோழைத் தனத்தால் முற்றிலும் என்னையிளந்த நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டேன்.  இந்த நிலையில், எனக்கு மிகவும் உகந்தது எது என்று உறுதியாக எடுத்துரைக்கும்படி  உன்னைக் கேட்கிறேன்.  நான் இப்போது உனது சீடன், உன்னைச் சரணடைந்து விட்ட ஆன்மா, அருள்கூர்ந்து எனக்கு போதிக்கவும்.

இது தான் நாம் வாழ்வில் குழப்பத்தில் சிக்கினால் மீள்வதற்கான வழி.  புதை குழிக்குள் மாட்டிக் கொண்டவனால் தானாக தப்பி வெளியே வர இயலாது.  அவன் அவ்வாறு தப்புவதற்கு எந்த அளவுக்கு முயல்கிறானோ அந்த அளவுக்கு மேலும் மேலும் ஆழத்திற்க்குத்தான் செல்வானே தவிர தப்பி வெளியே வர இயலாது.  அதே சமயம், வெளியில் இருந்து ஒருத்தர் ஒரு கயிற்றைத் தூக்கிப் போட்டால் அதைப் பிடித்து நிச்சயமாக தப்பி வெளியேற முடியும்.

எனவே வாழ்வில் குழப்பம் ஏற்ப்பட்டால் தனியே உட்கார்ந்து சிந்திப்பது உதவாது, நல்ல ஆன்மீக வழிகாட்டியைத் தேர்ந்தெடுத்து அவர் வழிகாட்டுதலில் நடந்தால் மட்டுமே கரையேற முடியும்.


 

Thursday, December 20, 2012

மேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3

அந்தமான் டூர் பகுதி 1 , பகுதி 2
அந்தமானில் மூன்றாவது நாளாக எங்களை அழைத்துச் சென்ற  இடம்  பாரா டங் [Bara Tang] எனப்படும் பகுதியாகும்.  இது போர்ட் பிளேரில் இருந்து 97 கி.மீ. தொலைவில் உள்ளது.  இங்கே செல்லும் வாகனங்கள் அதிகாலை நான்கு மணிக்கே புறப்படும்.    

இங்கு காணவேண்டிய இடங்கள்:

சுண்ணாம்பு கல் குகை [Limestone Caves]
சேற்று எரிமலை [Mud Volcano]
கிளிகள் தீவு [Parrots Island]- [நாங்கள் இங்கு செல்லவில்லை.  நீங்கள் சென்றால் தவற விடாதீர்கள் சண்டையிட்டு இங்கேயும் காண்பிக்கச் சொல்லுங்கள்!!]

போர்ட் பிளேரில் இருந்து பாரா டங் செல்லும் வழியில், ஜராவா என்னும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி உள்ளது.  இவர்கள் அந்தமானில் வசிக்கும் 7 பழங்குடியினரில் ஒரு இனமாவர்.  இவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து தற்போது வெறும் 350 பேர்களே எஞ்சியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   புறப்படும் முன்னர் வழிகாட்டி,  "ஜராவா மக்களைப் பார்க்க முடியும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை சார், ஏமாந்து போனால் எங்களை திட்டாதீர்கள்" என்று Disclaimer Clause ஐப் போட்டார்.  ஏனெனில், அங்கு செல்பவர்கள் பலர் பார்க்காமலேயே ஏமாந்து வந்தாதாகச் சொன்னார்.  இதைக் கேட்கும்போதே மனதில் சற்று கலக்கமாக இருந்தது, சரி நமது அதிர்ஷ்டம் என்று புறப்பட்டோம். 


இதற்க்குச் செல்லும் வழியில் சாலையைத் தவிர மற்றவை மனிதன் கைப்படாத இயற்கையாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது.  இருமருங்கிலும் ஓங்கி வளர்ந்த மரங்கள் காணப் படுகின்றன.


இதில் முதல் 50 கி.மீ. கடந்த பின்னர் ஜிர்கா டங் [Jirka  Tang] என்ற இடத்தில் ஒரு செக் போஸ்ட் உள்ளது, இங்குதான் ஜராவா என்னும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி ஆரம்பமாகிறது.  இந்த இடத்தில் எல்லா வாகனங்களும் வரிசையாக நிறுத்தப் பட்டு 6:00 AM, 9:00 AM, 12:00 PM [மதியம்], மற்றும் 2:30 PM ஆகிய நேரங்களில் அனுப்பப் படுகின்றன.  திரும்ப வருவதும் இதே போல குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப் படும். முதலிலும் கடைசியிலும் காவல் துறையினர் வண்டி இருக்கும்.  எங்கும் நிறுத்தக் கூடாது.  ஜராவா மக்களை  [ஒருவேளை உங்களுக்கு Luck  இருந்து பார்த்தால்]  புகைப் படம் எதுவும் எடுக்கக் கூடாது, [மீறினால் ஜாமீனில் வெளியே வர இயலாத வகையில் கைது செய்யப் படுவீர்கள்], அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் எதுவும் வழங்கக் கூடாது.  [அவ்வாறு உண்ட சிலர்  இறந்து போனதே இதற்க்குக் காரணமாம்]. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முக்கியமான தகவல், சிவப்பு வண்ணம் இவர்களுக்கு மிகவும் பிடித்தமானது, உங்களை சிவப்பு ஆடையுடன் பார்த்துவிட்டால் அவற்றை பீய்த்து எடுத்து விடுவார்கள்


ஜராவா இனக் குழந்தைகள்.  இதே நிறத்தில் தான் எல்லோரும் இருக்கின்றனர்.   இந்தியாவில் வேறெங்கும் நாம் பார்த்திராத கலப்பே இல்லாத 100% கருமை நிறம்.  இது போல நிறத்தினரை சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அரசு விருந்தினர்களாக எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது மட்டுமே பார்த்திருக்கிறேன்.  எப்படி இந்தத் தீவில் மட்டும் இவர்கள் வசிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.  இவர்கள் ஆண்/பெண் எல்லோருக்கும் இதே போல சுருட்டையான குட்டையான கரிய முடி, யாருக்கும் கண்ணுக்குத் தெரியுமளவில்  தாடி இல்லை.  [தாடி பற்றிய தகவல் திருத்தம் Courtesy : நம்பள்கி !!]
ஜராவா மக்கள் வாழும் பகுதியில் காலையில் செல்லும்போதும், மாலையில் திரும்ப வரும்போதும், ஆண்/பெண் இருபாலரிலும் கிட்டத் தட்ட ஐம்பது பேரைக் கண்டோம்.  [எங்களுக்கு நிறையவே அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது !! ].  இடுப்பில் மட்டுமே உடை அணிந்திருந்தனர், [அதுவும் சிவப்பு வண்ணத்தில் ஒரு மாதிரி பட்டை பட்டையாக தொங்கும் துணி].


உடலில் லேசான மஞ்சள்/பழுப்பு  நிறத்தில் ஏதோ பூசியிருந்தனர்.  தலையில் BAND எல்லோருக்கும் இருக்கிறது.  இளம் பெண்கள் நைட்டி போல உடை அணிய ஆரம்பித்துள்ளனர், ஆனால் நடுத்தர வயதினர்/அதற்க்கு மேல் வயதானவர்கள் தங்கள் பாரம்பரியப் படியே வாழ்கின்றனர்.  நம்மைப் பார்த்தாலும் அவர்கள் முகத்தில் எந்த வித ரியாக்ஷனும் காட்டாமலேயே இருக்கின்றனர்!!  இந்தப் பெண்களை விட்டால் மிஸ் இந்தியா, மிஸ் யுனிவர்ஸ் கூட வெல்லுவார்கள் என்று நினைக்கும் அளவுக்கு ஒரு வித நளினமாக இருக்கிறார்கள்.  இவர்களுடைய படங்கள் இணையத்தில் எக்கச் சக்கமாகக் கொட்டிக் கிடக்கின்றன. இதே சாம்பிளுக்கு சில.  சுட்டி1  சுட்டி2  சுட்டி3  சுட்டி4  சுட்டி 5 சுட்டி 6 சுட்டி 7  சுட்டி 8

சில டூரிஸ்டு நிறுவனங்கள் இவர்கள் இருக்கும் இடத்திற்கு காவல் துறையினர் உதவியோடு ஆட்களை அழைத்துச் சென்று வேடிக்கை காட்டி காசு பார்த்ததாக பாராளுமன்றத்தில் குற்றச் சாட்டு எழ, அது குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்க ப.சிதம்பரம் உத்தரவிட்டார்.  தற்போது இந்தப் பாதையே மாற்றிவிடலாமா என்ற யோசனையும் உள்ளதாம்.


பாரா டங்கை அடைந்தவுடன், இந்த கப்பலில் ஐந்து நிமிடப் பயணத்தில் பாரா டங் ஜெட்டி என்ற இடத்திற்க்குச் செல்ல வேண்டும். இது ஒரே சமயத்தில் இரண்டு பேருந்துகள், இரண்டு டாடா சுமோ, பத்து பைக்குகள்  மற்றும் முன்னூறு ஆட்களை ஏற்றிச் செல்லத் தக்கது.

பாரா டங் ஜெட்டி இது தான்.  இங்கிருந்து மோட்டார் படகில் Lime Stone Caves க்குச் செல்ல வேண்டும், 25 நிமிட உல்லாசப் பயணம் அது.

Lime Stone Caves க்குச் செல்லும் மோட்டார் படகு, எல்லோருக்கும் மிதவை மேலாடை [Life Jacket]  வழங்கப் படுகிறது.


Lime Stone Caves க்குச் செல்லும் வழியில் இடது புறம் மாங்குரூவ் காடுகள்.

வலதுபுறம் ஓங்கி வளர்ந்த மாரங்கள்.



பயண முடிவில் மாங்குரூவ் காடுகளில் நுழைந்து...........

இந்த இடத்திற்கு கொண்டு வந்து விடுவார்கள்.  இங்கேயிருந்து 15 நிமிடம் நடந்து  Lime Stone Caves-ஐ அடையலாம்.


Lime Stone Caves க்குச் செல்லும் வழியில்.............


   காட்டிற்கு  நடுவில் பயணம், இங்கு நின்றால் எப்படி இருக்கும் என்பதை அடுத்த காணொளி காட்டுகிறது.








Lime Stone Caves அருகில் செல்லச் செல்ல......
இதோ இவைதான் சுண்ணாம்புக் கல் குகைகள்.
குகையின் சுவற்றில்...........

சுவற்றிலிருந்து தொங்கும் விளக்குகள் போல.......  சுண்ணாம்புப் படிவம்.


தரையில் சொட்டும் நீரால் கீழேயிருந்து எழும்பும் படிவம், மேலேயிருந்து இறங்கும் ஒன்றுடன் சேர்ந்து தூண் போல......!!  மேற்கண்ட அத்தனையும் எளிதல் உருவானவை அல்ல, ஒரு இன்ச் உருவாகவே நூறு ஆண்டுகள் பிடிக்குமாம்!!



இவை எவ்வாறு தோன்றுகின்றன?  ஆங்கிலத்தில் படிக்க சொடுக்கவும்.  அங்கே கொடுக்கப் பட்டிருந்த விளக்கப் பலகைகளின் படங்களை பதிவின் இறுதியில் பார்க்கவும்.




Limestone Caves லிருந்து திரும்பும் போது.

அங்கேயிருந்து Mud Volcano பார்க்க அழைத்துச் சென்றனர்.  பூமிக்குள் இருந்து சேறு கொப்பளிக்கிறது.  இது இருக்கும் இடமே உருப்படதாம்!! [அதுக்கு ஏன்டா எங்களை கூட்டி வந்தீங்க!!]

சேற்று எரிமலை.




Limestone Caves விளக்கப் பலகைகள் [எனக்கு இது புரியவில்லை,யாருக்காச்சும் இது புரிஞ்சா பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்!!!]






சேற்று எரிமலை பகுதியில் இருந்த தகவல் பலகைகள்.





Tuesday, December 18, 2012

எதெல்லாம் இருந்தா சுவர்க்கம், எதெல்லாம் சேர்ந்தா நரகம்?

இது இணையத்தில் பிரபலமான ஜோக்!!  [ஒரு வேலை உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா என்னை திட்டக் கூடாதுன்னு ஒரு எஸ்கேப் ரூட்டுதான்!!  ஹி ....ஹி ....ஹி ....]  சமீபத்தில நான் ஒரு conference போயிருந்தப்போ சொல்லி கேட்டது.  [நீயெல்லாம் conference போயி.....  விளங்கிடும்...]

உலகில் சில விஷயங்கள் ஒண்ணா சேர்ந்தா அது சுவர்க்கம், அது என்னென்னன்னு பார்ப்போம்.  இது நான் சொல்லவில்லை, உலகினர் நோக்கு [view] அது!!   கீழ்க் கண்ட நாலும் இருந்தா அது சுவர்க்கமாம். [அது எப்படி ஒன்னாகும்னு அவங்க சொல்லலை, அதனால நீங்களும் கேட்கபடாது.]

1. அமேரிக்கா காரன் சம்பளம்

2. பிரிட்டிஷ் காரன் வீடு

3. சைனாக்காரன் உணவு [அய்யய்யோ பாம்புக்கால் பாயாவெல்லாம் போடுவானேடா........]

4. இந்திய பெண்மணி, மனைவியாக......... [முதலில் இந்தப் படத்தைத் தான் போட்டேன், ஏன் பத்மினி அல்லது கே.ஆர். விஜயா படம் போடவில்லை என்று செங்கோவி ஆட்சேபித்தார்.  அதெல்லாம் இணையத்திலே பார்த்துக் கொள்ளவும்னு சொல்லிட்டேன்!!]
அதையடுத்து உஷா வந்து, சினேகாவுக்கு என்ன குறைச்சல் என்றதால், இந்திய மனைவிக்கு இந்தப் படம்!!  திருப்தி தானே உஷா........!!

சரி இப்போ நரகம்னா என்னன்னு பார்த்திடுவோமா?


1. சைனா வீடு 

2. பிரிட்டிஷ் சாப்பாடு.

3.  அமெரிக்க மனைவி 

கடைசியா .........
: :
: :
: :
: :
: :
: :
: :
: :
: :
: :
: :
: :
: :
: :
:

4.  இந்தியாவில் வழக்கப் படும் சம்பளம்!!
இது உலக மக்களின் கருத்து.  நம்மூரு சம்பளத்தை கேவலபடுத்திபுட்டாய்ங்கன்னு வருத்தப் பட வேண்டாம், நம்மூரு பெண்களை அவங்க எவ்வளவு உயர்வா நினைக்கிறாங்கன்னு பாருங்க.  என்ன அப்படி சிறப்பு?  கணவனிடத்தில் அவர்கள் காட்டும் dedication.  அதையும் மேற்க்கத்திய நாகரீகத்தை கொண்டாந்து குட்டிச் சுவராக்கிகிட்டு இருக்கோம்.  அதை மாத்தி குட்டி சுவர்க்கமாக்கணும்னா, மக்காஸ்!! அது உங்க கையில் தான் இருக்கு!!  Say no to westernization of our culture!!

Monday, December 17, 2012

ஓட்டு வாங்குவதில் முறியடிக்க முடியாத சாதனை படைத்த மாணவர்

அப்போ நான் பத்தாம் வகுப்பு படிச்சிகிட்டு இருந்தேன்.  [இப்ப வரைக்கும் நீ படிச்சதே அவ்வளவு தானே...... அப்படின்னு யாரோ சொல்றது என் காதில விழுது!!  இருக்கட்டும்.... இருக்கட்டும்.]  எங்க கணக்கு ஆசிரியர் வகுப்பில்  ஒரு நாள் ஒரு கதை சொன்னார்.  இதை எதுக்காக சொன்னார்னு கடைசியா சொல்றேன், சஸ்பென்ஸ் போயிடுமே!!



அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது [அய்யய்யோ, ஃ பிளாஷ் பேக்குக்குள்ள இன்னொரு ஃ பிளாஷ் பேக்கா........  சாரி.......  இதுக்கு மேல போகாது!!]  நடந்த சுவராஷ்யமான சம்பவம்.  அவர்களது கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவர் ஒருத்தர்.  பணக்கார வீட்டுப் பையன், சுற்றி இருக்கும் நண்பர்களுக்கு பணத்தை வாரியிரைப்பவர்.   அவனைச் சுற்றி எப்போதும் ஆமாம் சாமி போட்டு வாங்கித் தின்னும் பெரிய கூட்டமே இருக்கும்.   கேரக்டர் கொஞ்சம் வீக்.  கொஞ்சம் ஊதாரி மாதிரின்னு சொல்லலாம்.  எங்க ஆசிரியர் உட்பட மாணவர்கள் பலருக்கு அவரைப் பிடிக்காதாம்.  ஒருமுறை கல்லூரி மாணவர் தலைவர் தேர்தல் வந்தது.  அதில் இவருக்கு போட்டியிட விருப்பம்.  இதை தன் நண்பர்களிடம் தெரிவித்தார்.  கூட இருந்த மாணவர்கள், நீங்க தேர்தலில் நில்லுங்க, உங்க பின்னாடி இந்த கல்லூரியே இருக்கு, தேர்தல் வேலையை நாங்க பாத்துக்கறோம், உங்களை எதிர்க்கறவன் நிச்சயம் மண்ணைக் கவ்வுவான்  என்று உசுப்பேத்தி விட்டு தேர்தலில் நிற்க வைத்து விட்டனர். 

கல்லூரித் தேர்தலில் வழக்கமாய் நடப்பது போல எல்லா பிரசாரமும் நடந்தது. தன்னைச் சுற்றி இருந்த ஆதரவைப் பார்த்த அந்த மாணவர் மிகவும் நெகிழ்ந்து போனார்.  நம்மை அடிக்க எவனும் இல்லைடா என்ற போதை தலைக்கேறியது.  தேர்தல் நாள் வந்தது.  ஓட்டுப் போடும் சமயத்தில் இந்த மாணவருக்கு திடீரென ஒரு விசித்திரமான எண்ணம் வந்தது.  நமக்குத்தான் நூற்றுக் கணக்கில் இத்தனை பேர் ஆதரவாக இருக்கிறார்களே, ஒருத்தன் விடாமல் நமக்குத்தான் ஓட்டுப் போடப் போகிறார்கள், நம்மை எதிர்ப்பவனுக்கு ஐஞ்சோ பத்தோ ஓட்டு தான் விழப் போகிறது.  ஜெயிக்கப் போவது நாம் தான், நம் ஓட்டை நம் ஓட்டை நமக்கே போடாமல் இன்னொருத்தனுக்கு போட்டால் தான் என்ன? இப்படியெல்லாம் மமதையாக நினைத்து தன்னுடைய ஓட்டை தனக்கு எதிர்த்து நிற்கும் மாணவனுக்குப் போட்டு விட்டார்.

ஓட்டு போட்ட அன்றைக்கு மாலை நண்பர்களுக்கு பார்ட்டி வைத்தார்.  வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் தன் நண்பர்களிடம் இந்த விஷயத்தை போட்டு உடைத்தார்.  "டேய் உங்களுக்கெல்லாம் ஒரு மேட்டர் தெரியுமாடா?  இன்னைக்கு, என் ஒட்டையே நான் எனக்குப் போடலைடா"   என்றார்.   ஆனால் அதை யாரும் நம்பவில்லை.  அவர் எவ்வளவு சொல்லியும்  "அதெப்படிடா உன் ஓட்டை உனக்குப் போடாம போயிருப்பே, ரீல் விடாதே, எந்த மடையனாச்சும் இதைச் செய்வானா?" என்று இதை நம்ப மறுத்தனர்.

வாக்கு என்னும் நாள் வந்தது.  வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகளும் வெளியாயின.  அந்த மாணவர் வாங்கிய வாக்கு எண்ணிக்கை தான் எல்லோரையும் வியக்க வைத்தது!!  யாரும் கனவிலும் கற்பனையிலும் கூட நினைத்துப் பார்த்திருக்காத ஓட்டுகளை அவர் பெற்றிருந்தார்!!  அவர் தனக்கே தன்னுடைய ஓட்டைப் போடவில்லை என்பதையும் அது நிரூபித்தது!! அவர் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை '0'!!  ஆமாங்க, ஒரு பய கூட அந்தாளுக்கு ஓட்டு போடவேயில்லை!!  அடப் பாவிங்களா இத்தனை நாளா என் பின்னாடி சுத்திகிட்டு என்னை உசுப்பேத்தி விட்டுகிட்டு இருந்த அத்தனை பேரும் டுபக்கூருங்க தானாடா.........   என்று அன்றைக்கு அவர் ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொண்டார்!!

அதுசரி, இந்தக் கதையை எதுக்கு எங்க ஆசிரியர் சொன்னார்னு உங்களுக்கு நான் சொல்லவேயில்லையே!!  அன்றைக்கு அவர் அவர் திரிகோணமிதி  [Trigonometry] நடத்திக் கொண்டிருந்தார்.  ஒரு மாணவனிடம் ஒரு கேள்வியை கேட்டார், அதற்க்கு அவன் கூமுட்டைத் தனமா ஒரு பதிலைச் சொன்னான்.  ஆசிரியர் வகுப்பைப் பார்த்து இந்த பதில் சரிதான் என்று உங்களில் சொல்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார்.  சிலர் உயர்த்தினார்கள், இந்தப் பதிலைச் சொன்ன மாணவன் உயர்த்தலாமா வேண்டாமா என்று பம்மிக் கொண்டிருந்தான், இதைப் பார்த்ததும்சிரித்துவிட்ட ஆசிரியர் மேற்கண்ட கதையைச் சொன்னார்!!

எனவே, பதிவு போடும் மக்காஸ், உங்களுக்கு ஆஹா.....  ஓஹோ........ என்று பின்னூட்டங்கள் 'நண்பர்களிடம்' இருந்து வந்தால், கொஞ்சம் நிதானமாவே  இருங்க, அதில் உண்மையும் இருக்கலாம், சில சமயம் just  உங்களை திருப்திபடுத்துவதற்காகக் கூட இருக்கலாம்!! Take them with a pinch of salt!!

Saturday, December 15, 2012

உலகின் மிகப் பெரிய பூ...... ஏழரை அடி உயரம்!!


பூக்களிலே மிகவும் உயரமான பூ எது தெரியுமா?

டைட்டன் ஆரம் எனப்படும் [Titan arum] கீழே படத்தில் உள்ள பூ தான்!

இதன் தாவரவியல் பெயர்: Amorphophallus titanum

இது சுமத்ரா தீவுகளைத் தாயகமாகக் கொண்டது.

சுவிட்சர்லாந்தின் பேசல் தாவரவியல் பூங்காவில் நவம்பர்  19, 2012 தேதி இது பூத்துள்ளது.  ஏழரை அடி உயரம் வளர்ந்துள்ளது, இவை பத்தடி உயரம் வரை வளரக் கூடியவை.  
"பூதான் பெரிசா இருக்கே, நம்ம ஊரு மல்லியப்பூ மாதிரி கம கம.... என்று ஆளையே தூக்கும்டா..." என்று நினைச்சுடாதீங்க, இது அழுகிய பிண நாத்தம் அடிக்குமாம்!!  [யாருக்காவது தெரியுமா அந்த நாற்றம் எப்படி இருக்கும்னு...?!!] இது என்ன நாறினாலும் பரவாயில்லை, பார்த்தே தீருவோம்னு தூரத் தொலையிலிருந்து மக்காஸ் கூட்டம் கூட்டமாய் மூக்கை பிடித்துக் கொண்டே வந்து பாத்துட்டு போறாங்களாம்.
இள மொட்டாயிருந்து.....


பூவாகி ..........



மலர்ந்து விரிய 6 வருடங்கள் ஆனாலும் இரண்டே நாளில் வாடிப் போயிடுமாம்.


மலரும் தினத்திற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு பத்து செ.மீ. வரை வளருமாம் [1 மி.மீ வளர எட்டு நிமிடங்கள்], அதை ஆன்லைனில்  இந்தம்மா கண்காணிப்பாங்களாம் !!   நீங்க மூக்கை பிடிக்காமல் ஆன்லைனிலேயே பார்க்கலாமாம்!!

அதுசரி, எதுக்கு இது இப்படி நாரனும்...  சீ.... வாசனை அடிக்கணும்?  வேறெதுக்கு மகரந்தச் சேர்க்கை நடக்க விட்டில் பூச்சிகள், மற்றும் பல பூச்சியினங்களை ஈர்க்கத்தானாம்........ நடுவில் உள்ள தண்டு ஒரே பூ இல்லை, இது தான் பூங்கொத்து.  இதில் நூற்றுக் கணக்கில் பூக்கள் உள்ளன, அவை காய்களாக மாறும்.










மகரந்தச் சேர்க்கை அடைஞ்சதுக்கப்புறம் என்ன நடக்கும்?  காயாகி பழம் பழுக்கும்.  [ஐயைய..... அத எவன் தின்பான்... உவ்வே.......] இதிலிருந்து சில மாதங்களுக்குப் பின்னர் நன்கு முதிர்ந்த விதைகள் கிடைக்குமாம்.  அதை போட்டா செடியா முளைச்சு  வரும் அதை கண்ணாடி அறையில் [Green House]  வச்சு வளர்ப்பாங்களாம், ஆறு வருஷம் கழிச்சு பூவாகுமாம் திரும்பவும் மூக்கைப் பிடித்துக் கொண்டே பார்க்க வேண்டுமாம்...  ஐயோ தாங்கலைடா சாமி..................