Thursday, November 8, 2012

ஆங்கில மருத்துவ முறைகளுக்கு சவால் விட வந்துட்டாரய்யா ஒரு தமிழர்!!

என் அலுவலக நண்பர், அவர் ஒரு கன்னடர், ஒரு நாள் என்னிடம் பரபரப்பாக ஓடி வந்தார்.  [அவர் எப்பவுமே அப்படித்தாங்க!!].  என்கிட்ட ஓடி வந்ததுக்கு ஒரு காரணமிருக்கு, ஏன்னா தமிழ் நல்லா தெரிஞ்சவன் என்பதோடு பிரியமான நண்பன் என்ற முறையில் அவர் என்னிடம் வந்தார்.   தான் ஒரு அற்புதமான தமிழ் வைத்தியர் ஒருவரை பற்றி கேள்விப் பட்டதாகவும், அவர் பேசிய வீடியோக்கள் சிலவும் எனக்குத் தந்தார்.  பின்னர் அவை எல்லோருக்கும் பயன்பட வேண்டுமென்று YouTube லும் பகிர்ந்தார்.  அந்தத் தமிழ் வைத்தியர் பெயர் Healer  பாஸ்கர்.  தற்போது இவரை என் கன்னட நண்பர் வானளாவ புகழ்ந்து கொண்டிருக்கிறார் இவர் சொல்வது ஒவ்வொன்றும் வாழ்வில் பின்பற்ற வேண்டியவை என்றும் சொல்கிறார்.  முடிந்தால் இவரை பெங்களூருக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண்டும் என்று திட்டமும் வைத்துள்ளார்.  

இவற்றில் சிலவற்றை நானும் பார்த்தேன்.  குழந்தைகளுக்கு தடுப்பூசி என்று போடுகிறார்களே, அது மருந்து இல்லையாம், எதற்கு தடுப்பூசி போடுகிறார்களோ அந்த நோயை உருவாக்கும் கிருமிகளாம்.  குழந்தை உடல் அதை எதிர்த்து போராடி அந்தக் கிருமிகளுக்கான எதிர்ப்பு  மருந்தை/சக்தியை உடலில் உற்பத்தி செய்து வாழ்நாளில் மீண்டும் எப்போது வந்தாலும் சமாளிக்கும் திறனைப் பெறுகிறதாம்.  வயது ஆக ஆக இந்த திறனை நமது உடல் இழக்கிறதாம்.  நம் உடலை குழந்தையின் உடலைப் போலவே மாற்றவேண்டும், மீண்டும் அந்தத் திறனை கொண்டு வரவேண்டும் என்கிறார்.

நாம் உண்ணும் உணவை பல பிரிவுகளாகப் பிரிக்கிறார்.

1. உயிருள்ள உணவு.  -பச்சைக் காய்கறிகள் பழங்கள்.
2.உயிரூட்டப் பட்ட உணவு.- முளைவிட்ட தானியங்கள், பயறுகள்.
3. செத்த உணவு. -சமைக்கப் பட்டது.
4. லாபமும் இல்லாத நஷ்டமும் இல்லாத உணவு - மாமிச உணவுகள்.
5. உடலைக் கெடுப்பவை. -டீ , காபி, சாராயம், பாண் பராக், புகையிலை போன்றவை.

இவற்றில் முதல் இரண்டும் லாபமாம், மூன்றாவது குறைந்த லாபம், நான்காவது பூஜ்யம் 5 வது நஷ்டமாம்.  லாபம்-உடலுக்கு நல்லது!!

இன்னும் இது போல பல சுவராஷ்யமான தகவல்களை இவர் கூறுகின்றார், காசா, பணமா சும்மா பாருங்க, முடிஞ்சதை ஏற்றுக் கொள்ளுங்கள்!!

நண்பர்களே, கீழே இரண்டு காணொளிகள் பாஸ்கர் அவர்களின் தொலைகாட்சி பேட்டிகள், அடுத்த மூன்று என் நண்பர் பகிர்ந்துள்ள வீடியோக்கள்.  பாருங்கள், இவரை நேரிலும் சந்திக்கலாம், காணொளிகள் பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லலாம்.  இது மட்டுமல்லாது YouTube-ல் Healer பாஸ்கர் என்று தேடினால் மேலும் பல காணொளிகள் கிடைக்கின்றன பார்த்து பயன் பெறுங்கள்.  



Jaya TV

Makkal TV
 

என் நண்பர் பகிர்ந்துள்ள வீடியோக்கள்.

வீடியோ-1


வீடியோ-2


வீடியோ-3


மேலும் சில வீடியோக்கள்:

உணவுகள், எத்தனை வகை, அவற்றை எப்படி உன்ன வேண்டும்? சுட்டி

மேலும், தொடர் வீடியோ  சுட்டிகள் 

Wednesday, November 7, 2012

ரத்த அழுத்தம் சில தகவல்கள்............

கீழே இருக்கும் படங்களைப் பாருங்க  எல்லா படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு..............  முடிஞ்சா கண்டுபுடிங்க!! 









பாத்துடீங்களா?  படங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை என்னன்னு கண்டுபுடிச்சீங்களா?  முடியலையா!!  சரி நானே சொல்லிடறேன்.  எல்லா படத்திலும் இரத்த அழுத்தத்தை கையில் முழங்கைக்கு சற்று மேலே தான் அளக்கிறார்கள்.  ஹி ...........ஹி ...........ஹி ...........ஹி ...........  அது சரி ஏன் அந்த இடத்தையே மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்?  ஊசியை கையில் போடுறாங்க, இடுப்பில் குத்துறாங்க, ஏன் இரத்த அழுத்தத்தை காலில் அல்லது  கழுத்தில் அளக்கக் கூடாது?  இதுக்குப் பின்னாடி இயற்பியல் இருக்கிறது!!   [ஆஹா..........  வந்துட்டான்யா........வந்துட்டான்!!]

வெவ்வேறு வடிவங்கள் [Shapes], அளவுகள்[Sizes] கொண்ட  களன்களை ஒன்றாக இணைத்து, அதில் திரவத்தை நிரப்பும்போது, திரவத்தின் மட்டம் எல்லா களன்களிலும் ஒரே உயரத்தில் இருக்கும்.
நமது உடலில் இரத்த அழுத்தம் கால் முதல் தலைவரை உயர்ந்துகொண்டே போகிறது.  காலில் அதிகமாகவும் தலையை நோக்கி செல்லச் செல்ல குறைந்து கொண்டே செல்லும்.  ஆகையால் கண்ட கண்ட இடங்களில் இரத்த அழுத்தத்தை அளக்க முடியாது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அளக்க வேண்டும்.  ஏன் கையைத் தேர்ந்தெடுத்தார்கள்?  அந்த உயரத்தில் உடலின் எந்த உறுப்பு இருக்கு அப்படின்னு கொஞ்சம் யோசிங்களேன்!!  இன்னும் தெரியலையா?  இதயமுங்க...... இதயம்!!  இதயத்தில் என்ன இரத்த அழுத்தம் இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னா அதே உயரத்தில் இருக்கும் கையில் தானே அளக்கனும் அதான்!!



வால்நட் பருப்புகள் இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்தும், குறைந்த இரத்த அழுத்தம் இருக்கிறவங்க, இதைத் தொட்டுடாதீங்க!!
உயர் இரத்த அழுத்தம் அப்படின்னா என்ன, வராம தடுப்பது எப்படி, வந்தா சமாளிப்பது எப்படி, அதற்க்கான உணவு முறைகள் உடற்ப் பயிற்சிகள் என பல நண்பர்கள் விரிவா எழுதியிருக்காங்க.  அவற்றில் எனக்குப் பிடித்த கட்டுரைகள் சில இதோ:


 இரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?

 உயர் ரத்த அழுத்தம் – சமாளிப்பது எப்படி?

உயர் இரத்த அழுத்தம் [பாட்டி வைத்தியம்]

இரத்த கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

ரத்த அழுத்தம் வராமல் தடுக்க

உயர் இரத்த அழுத்தம் - ஓர் அமைதிக் கூற்றுவன்

 

Sunday, November 4, 2012

1,2,3,4.......... அரபு எண்கள் வடிவம் பெற்றது எப்படி?

நாம் இன்று உலகெங்கும் பயன்படுத்தும் 1,2,3......  என்ற எண்கள் அரேபிய முறையில் எழுதுவதாகும்.  இவை இவ்வடிவம் பெற்றது தற்செயலா, அல்லது ஏதாவது காரணம் இருக்கிறதா?  தற்செயல் அல்ல காரணம் இருக்கிறது.




நாம் பயன்படுத்தும் இன்றைய வடிவம், ஆரம்ப காலத்தில் பயன் படுத்திய வடிவத்துடன்  கிட்டத் தட்ட ஒத்துவருகிறது.  ஒரே திசையில் செல்லாத இரண்டு கோடுகள் சந்திக்கும் புள்ளியில் கோணம் ஏற்படுகிறது.  ஒவ்வொரு எண்ணும் அதனுள் அடங்கிய இத்தகைய கோணங்களின் [Angles] எண்ணிக்கையே அந்த எண்ணின் மதிப்பும் ஆகும்.  இதை கீழ்க் கண்ட படங்கள் விளக்குகின்றன.


 
சுழியில் எந்த கோணமும் இல்லை!!  ஆனால் இந்த எண்ணைக் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்.

Saturday, November 3, 2012

நான், எனது என்று நினைப்பதே குற்றமா? ஆன்மீகத்தில் அ.....ஆ........

நான், எனது -இந்த இரண்டு வார்த்தைகளும் அகந்தையைக் குறிப்பதாகவும், ஆன்மீகத்தில் முன்னேற நினைப்பவர்களுக்கு இது தடைகள் எனவும் ரொம்ப நாளாக பல இடங்களில் படித்து வந்துள்ளேன்.  தற்போதும் இது குறித்து நம்மாளுங்க எழுதிக்கிட்டுத்தான் இருக்காங்க  அவங்க ஒரு கதையை உதாரணமா குடுக்குறாங்க.

ஒரு மன்னன் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்குப் போனாராம், உள்ளே நுழைந்ததும்,

"யார் வந்திருப்பது?" என முனிவர் கேட்டாராம், அதற்க்கு,

"நான் மன்னன் வந்திருக்கிறேன்" என்று அரசன் சொன்னான்னாம்.

"நான் செத்த பின்பு வந்து பார்" என்று முனிவர் பதிலளித்தாராம்.  மன்னனுக்கு இது பெரிய குழப்பம், அதெப்படி முனிவர் செத்த பின்னர் அவரைச் சந்திக்க முடியும் என்று.  உடனே அவரது மதிநிறைந்த அமைச்சர்கள் விளக்கம் குடுத்தார்களாம், நான் செத்த பின்பு என்றால் தங்களிடம் உள்ள நான் என்ற அகந்தை மன்னா, அதை விட்டொழித்து போய்ச் சந்திக்க வேண்டும்.  அதைக் கேட்ட மன்னன் திரும்ப சென்று

"அடியேன் வந்திருக்கிறேன் " என்றானாம், உடனே முனிவர் சந்தித்தாராம்.  [அகந்தையை  ரொம்ப சீக்கிரமா விடுறதுக்கு இப்படியெல்லாம் வழி இருக்கு போல!!].

இது ஒரு கதை.  அடுத்து எனது என்ற வார்த்தையை மட்டும் நம்மாளுங்க சும்மா விடுவார்களா!!  அதற்க்கு அர்த்தம் கற்ப்பிக்கிறார்கள்.   இங்க உலகில் உள்ளது எதுவுமே நமக்குச் சொந்தம் இல்லையாம், எழுத வச்சிருக்கும் பேனாவைக் கூட என்னதுன்னு சொல்லக் கூடாதாம், சொன்னால் அகந்தை வந்துடுமாம்.  இத்தனையும் சொல்ற பயலுக உண்மையில் எதையாச்சும் விட்டுடுவாங்களா என்று பார்த்தால் அதுதான் இல்லை.  வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதிச்சிருக்கே, அதில் என்னதில்லைன்னு எவ்வளவு நீ விட்டுட்டு இருக்கே என்று கேட்டால், "எதுவுமே என்னதில்லை, எல்லாம் என்னோட பெண்டாட்டிக்கும் பிள்ளை குட்டிங்களுக்கும் விட்டு கொடுத்திட்டேன்னு சொல்லுவானுங்க!! வியாக்கியானம் மட்டும் வண்டி வண்டியா ஏகத்துக்கும் அவிழ்த்து விட்டுகிட்டு இருப்பானுவ.

நல்ல ஆசிரியராக இருக்க வேண்டுமானால் முதலில் நல்ல மாணவனாக இருந்து கசடறக் கற்க வேண்டும், கற்ற பின்னர் அதற்க்கு தக நிற்க வேண்டும், பின்னர் தான் போதிக்க முடியும்.  ஆனால், நம்மில் எவருமே  மாணவனாக இருப்பதில்லை நேரா வாத்தியாராகி விடுகிறார்கள்.  அடிப்படைத் தகுதியோ, ஆசிரியரோ தேவையே இல்லை.  நேரடியா போதனைதான்.  இவன் மாணவனாக இருக்க மாட்டான், ஆனால் இவனுக்கு சிஷ்யர்கள் வேண்டும், அதுவும் ஆயிரக் கணக்கில் வேண்டும்.  ஆன்மீகத்தைப் போதிக்க ஆசிரியரே தேவை இல்லை என்று இவன் போதித்துக் கொண்டிருப்பதுதான் விந்தையிலும் விந்தை.  எல்லாம் உனக்குள்ளே இருக்கிறது என்றால், அவனவனுக்கே தெரிந்து விடுமே அப்புறம் உன்னோட போதனைகள் எதற்கு?  இந்த மாதிரி ஓட்டை தத்துவங்களில் உள்ள கூமுட்டைத் தனம் ஒருவருக்கும் புரிவதில்லை!!

சரி இப்போது விஷயத்திற்கு வரும்.  நான், எனது என்பதற்கு அர்த்தம் தான் என்ன?  அதை ஏன் விட்டொழிக்க வேண்டும்?

பொதுவாக நீங்கள் யார் என்று கேட்டால் என்ன பதில் சொல்வோம்?

"நான் ஜெயதேவ்"- யோவ்  உன் பேரு என்னன்னு நான் கேட்கவில்லை, நீ யாருன்னு தான் கேட்டேன்.

"நான் ஜெயதேவ், பச்சைத் தமிழன்" -யோவ் நீ எங்கே பிறந்தேன்னு கேட்கவில்லை, நீ யாருன்னுதான் கேட்டேன்.

"நான் கந்தசாமியின் மகன்"  யோவ் உங்கப்பன் பேரு என்னன்னா கேட்டேன்?  நீ யாருன்னுதான் கேட்டேன்.

"நான் மன்னார் & கோ வில்  ஆணி பிடுங்கறேன்"  -அது உன் தொழிலு, நீ யாருன்னு இன்னமும் சொல்லவில்லை.

"பாருங்க இந்த கையீ, காலு, தலை எல்லாம் சேர்ந்த இந்த உடம்புதான் நானு "- சொல்லும் போதே என்னோட கை, என்னோட தலைன்னு சொல்றே, என்னோட காரு, என்னோட பைக்கு என்பது போல, காரோ, பைக்கோ நீ இல்லை.  அப்படின்னா அதெல்லாம் உன்கிட்ட இருக்கு,  அதே மாதிரி இந்த உடம்பும் என்னோடதுன்னு சொல்றே, அதனால இந்த உடம்பு உன்கிட்ட இருக்கு.  அப்ப நீ இந்த உடம்பும் இல்லை, நீ யாரு?

"ஐயா சாமி, ஆளை விடுங்க!!"

ஆன்மீகத்தின் அரிச்சுவடி "நான் யார்" என்பதில் தான் ஆரம்பிக்கிறது, கண்ணனும் அர்ஜுனனுக்கு இந்த போதனையில் தான் கீதையை ஆரம்பிக்கிறார்.

குழந்தைப் பருவம், வாலிப வயது வழியாக வயதான தோற்றம் வரை ஆன்மா வெவ்வேறு உடல்களை இப்பிறவியில் எடுப்பது போல இந்த உடல் முற்றிலும் பயனற்று போகும் போது இறப்பு ஏற்ப்பட்டு வேறு உடலுக்குச் செல்கிறது.  தன்னை உணர்ந்த ஆன்மா இத்தகைய மாற்றங்களைப் பார்த்து குழம்பிப் போவதில்லை. [ப.கீ.-2.13]
இந்த தேகம் ஒரு எந்திரத்தைப் போல [யந்த்ரா ருதானி மாயயா  -ப.கீ.-18.61], அதனுள் நாம் உட்காரவைக்கப் பட்டிருக்கிறோம்.  இந்த யந்திரம் இரண்டு பிரிவுகளாக ஆக்கப் பட்டிருக்கிறது.  ஒன்று நம் புலன்களுக்கு அறியும் வகையிலான ஸ்தூல சரீரம், இது நீர், நெருப்பு, வாயு, நிலம் ஆகாயம் [இடத்தை அடைத்துக் கொள்ளும் பண்பு] ஆகியவற்றால் ஆனது.  இன்னொன்று மனம், புத்தி, அகங்காரம் ஆகியவற்றால் ஆனா சூட்சும சரீரம் இது நம் ஐம்புலன்களுக்கும் புலப்படாது [பார்த்தல், நுகர்தல் ,கேட்டல், சுவைத்தல், தொடுதல்].  உணர மட்டுமே முடியும்.  எல்லோருக்கும் புத்தி இருக்கிறது என்று தெரியும், ஆனால் அது கருப்பா சிவப்பா என்று தெரியாது, இனிக்குமா புளிக்குமா என்று தெரியாது.  எல்லோருக்கும் மனம் இருகிற தென்றும் தெரியும், ஆனால் சொரசொரப்பாக இருக்குமா, மென்மையாக இருக்குமா என்று யாருக்கும் தெரியாது.  எனவே இவை சூட்சும சரீரம் என்று பெயர்.  இவற்றுக்கும் உள்ளே உட்கார்ந்திருப்பது தான் ஆன்மா, அது தான் உண்மையில் நாம் என்பதாகும்.  ஆனால், இந்த ஸ்தூல, சூட்சும சரீரங்களை நாம் என்று நினைக்க வைப்பது ஒன்று இருக்கிறது.  அது தான் அகங்காரம்.

நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் [வெற்றிடம்], மனம், புத்தி அகங்காரம் இந்த எட்டும் என்னுடைய பிரிக்கப் பட்ட ஆற்றலே.  [ப.கீ. 7.4]

 எனவே, நான் என்று நினைப்பதே தவறல்ல, ஆனால் நான் இந்த தேகம் தான் என்று நினைக்கிறோம் அல்லவா, அது தான் மாயை, அந்த மாயையில் இருந்து தான் வெளியே வர வேண்டும். அந்த நான் என்பதைத்தான் விட்டொழிக்க வேண்டும்.  அதே சமயம், நான் ஆன்மா, இறைவனின் பிரிக்க முடியாத அங்கம் என்ற நிஜ ஈகோ வளர வேண்டும்.

அடுத்து எனது என்பதன் பொருள், இந்த தேகத்திற்க்குச் சொந்தமானதெல்லாம், என்னுடையது என்று நினைக்கிறோம் அல்லவா அந்த எண்ணம்.  நான் தமிழன், இந்தியன், ஆண், பெண், கருப்பானாவன், சிவப்பானவன், இன்ன சாதியைச் சார்ந்தவன், இன்னாருடைய புருஷன், இன்னாருக்கு தகப்பன், நான் அறிவாளி, நான் முட்டாள்  போன்ற அத்தனையும் நான் இந்த தேகம் என்ற எண்ணத்தால் வருவதே.  இந்த தேகமே நாம் இல்லை என்பதால் இந்த தேகத்தால் வரும் எதுவுமே நாம் இல்லை.

உண்மையில் நாம் ஆன்மா, இறைவனின் நிரந்தர ஊழியர்கள், இந்த நிஜ ஈகோ நமக்குள் வளர வேண்டும், அது வளர கலி யுகத்தில் இறைவனின் திருநாமங்களை பாடி வர வேண்டும்!!
  

Friday, November 2, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் மனைவியரை பப்ளிக்காக கிஸ் பண்ணுவதன் சூட்சுமம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் மற்றும் போட்டி வேட்பாளருடனான நேருக்கு நேர் விவாதங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது ஒரு முக்கியமான நிகழ்வை நீங்கள் அவ்வப்போது கவனித்திருக்கலாம்.  அதிபர் வேட்பாளர் பேசுவதற்கு முன்னரோ பின்னரோ மனைவியை தொலைகாட்சி கேமராவுக்கு நன்கு தெரியும் விதத்தில் பப்ளிக்காக லிப் டு லிப் கிஸ் அடிப்பார்.  அப்புறம் அவரு போட்ட குட்டிங்க ஒன்னோ ரெண்டோ, தூர நின்னுகிட்டு இருக்கும் ஓடி வந்து அப்பாவை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிடும்.  இந்த மாதிரி ஒரு காட்சியை நாம் இந்தியாவில் காண முடியாது, அமெரிக்காவில் மட்டும் ஏன்?


பெண்டாட்டிஎல்லாம் வச்சு காப்பாத்தறேன் நான் பொறுப்பானவன் அதனால ஒட்டு போடுங்க.......[...........க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......................... தூ............]

இந்த சூட்சுமம் அமெரிக்காவில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் நம்ம பயலுவளுக்கே தெரியாது, நாமதான் முதலில் போட்டு உடைக்கப் போகிறோம்.  ஹி .....ஹி .....ஹி ..............[இப்படியெல்லாம் ஒரு பெருமையா..........].  அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் கணவன் மனைவி குடும்ப உறவில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.  இந்தியாவில் தாலி கட்டிய பின்னர் மனைவி கணவனைப் பிரிவதில்லை, அவ்வாறு பிரிந்தால் அது அதிசயம், துரதிர்ஷ்டம்.  அமெரிக்காவில் அது தலைகீழ்.  முதல் இரண்டு மூன்று வருடத்திற்குள்ளாகவே 75% கேஸ்களில் டைவர்ஸ் ஆகிவிடும்,  ஒருத்தன் தன் பெண்டாட்டியுடன் வாழ்கிறான், குழந்தைகளை வைத்துக் காப்பாற்றுகிறான் என்றால் அது அதிசயம்.  அந்த மாதிரி அதிசய தன்மையுடன் நான் உள்ளேன், பொறுப்பானவன் பெண்டாட்டிஎல்லாம் வச்சிருக்கேன், பிள்ளைங்களை கூட வளர்த்திருக்கேன், என் பொறுப்பை மெச்சி ஒட்டு போடுங்க என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும், அதற்குத்தான் இந்த பப்ளிக் கிஸ்.  இந்தியாவில் இதைச் செய்தால் என்ன?  அட நீ என்னடா காப்பாத்திட்டே, மவுண்டு ரோட்டில் பிச்சை எடுக்கிறவன் கூட இதைச் செய்வான்டா என்று பதில் கிடைக்கும்.  அதை பெரிய ஷோ பீசாக இங்கே காட்ட முடியாது, ஆனால் அங்கே காட்ட முடியும், அதுதான் வேறுபாடு!!

ஜோதிடம், வாஸ்து, ராசிக்கல், நியூமரலாஜி- கோடீஸ்வரனாவதற்கு 100% நிச்சயமான வழி எது?

சுகபோக வாழ்க்கை எல்லோருக்கும் அமைவதில்லை, சிலருக்கே அது கிட்டுகிறது.  வஞ்சனை இல்லாமல் உழைக்கிறோம், ஆனாலும் பலர் வறுமையிலும் துன்பத்திலும் வாடுகிறோம். இதிலிருந்து விடுபட ஏதாவது மேஜிக் வழி இருக்கிறதா என்று பார்க்கிறோம், ஜோதிடம், வாஸ்து, ராசிக்கல், நியூமரலாஜி, கைரேகை என எத்தனையோ தெரிகின்றன.  இவற்றில் எது நம் கஷ்டங்களைத் தீர்த்து, நம்மைக் கோடீஸ்வரனாக்கும்  என பார்க்கலாம்.

சோதிடம் காலங்காலமாக நம்பப் பட்டு வருவது.  இதன் மூலம் பணக்காரனாக முடியுமா? நம் கஷ்டங்கள் தீருமா?  எனக்குத் தெரிய இரண்டு சோதிடர்கள், ஒரே ஊர், ஒரே திறமை. ஒருத்தரைப் பார்க்க வெளி மாவட்டங்களில் இருந்து கார்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் வருக்கிறார்கள், ஆயிரக்கணக்கில் கொட்டுகிறார்கள், கார், பங்களா என கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்த்து விட்டார்.  இன்னொருத்தர் அதையே தான் சொல்கிறார் அவரிடம் செல்பவர்கள் பத்தும் இருபதும் மட்டுமே தருகிறார்கள், இன்னமும் அதே பழைய கூரை வீட்டில் தான் வசிக்கிறார் சைக்கிளிலேயே தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.  ஊருக்கே சோதிடம் சொல்கிறார், இவர் சோதிடத்தைப் பயன் படுத்தி இவரும் அந்த சோதிடர் மாதிரியே சம்பாதித்திருக்கலாமே?  ஆனால் முடியவில்லையே!!  தன்னுடைய பொருளாதார நிலையையே மேம்படுத்திக் கொள்ளத் தெரியாத சோதிடரிடம் போய் நமது பொருளாதார நிலையைக்கு எங்கே தீர்வு கண்டு பிடிப்பது!!



அப்படியானால் சோதிடம் பொய்யா?  அது தான் இல்லை, அது உண்மைதான், அதை வைத்து நீங்கள் பணக்காரராக வாய்ப்பு உள்ளதா இல்லையா என்றுதான் பார்க்க முடியுமே தவிர அது எல்லோரையும் பணக்காரனாக மாற்றும் வித்தை இல்லை.  அது கண்ணாடி மாதிரி, அதில் தெரியப் போவது சல்மான் கானா, இல்லை உராங்குட்டானா என்பது நம்முடைய உருவத்தைப் பொருத்தது.   அப்படியானால் நம்முடைய உருவத்தை [இன்ப துன்பங்களை] தீர்மானிப்பது எது?



இதற்க்கு பலர் பலவிதமான பதில்களைத் தருகின்றனர்.  கடவுள் இல்லை என்பவர்கள் இதற்க்கு எந்த விளக்கமும் தருவதில்லை.  சிலர் கடவுள் இருப்பதை நம்பினாலும் மறுபிறவியில் நம்பிக்கையில்லாதவர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் கணக்குப் படி  நாம் இப்பிறவியில் செய்த நல்லது கெட்டதுகளைப் பொறுத்தே நம் இன்ப துன்பங்கள் தீர்மானிக்கப் படுகின்றன.  அப்படியானால் பிறக்கும்போதே ஏன் ஏழை குடும்பத்தில் நான் பிறக்க வேண்டும்?  ஒன்றுமறியா குழந்தை என்ன நல்லது கெட்டதை செய்திருக்க முடியும்?  அப்படியென்றால் கடவுள் குற்றமற்ற குழந்தையை தண்டித்தவனாகிறான்.  அதாவது கருணையற்றவனாகிறான்.   இல்லையில்லை, அவன் கருணைக் கடல் தான் என வைத்துக் கொள்வோம்,  இந்த அப்பாவிக் குழந்தையின் கஷ்டத்திற்கு என்ன பதில்?    கருணைக் கடலாக இருந்தும் அப்பாவி தண்டிக்கப் படுவதை தடுக்க இயலவில்லை என்றால் அவன் கையாலாகாதவன் என்று ஆகிவிடும்.  இது ஏற்கத் தக்க விளக்கமல்ல.


அடுத்து  நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்கள் நம்மை வந்து சேர்கின்றன என்று சிலர் கருதுகின்றனர்.  இது உண்மையல்ல.  எதற்காக ஒரு பாவம் செய்த முன்னோர்களைக் கொண்ட குடும்பத்தில் பிறக்க வைக்கப் பட்டோம் என்ற கேள்வி அடுத்து எழும்.  நம் முன்னோர்கள் செய்த பாவத்தால் நாம் கஷ்டப் படவில்லை, நாம் படவேண்டிய கஷ்டத்திற்காக நம்முடைய தகுதிக்கேற்ற ஒரு குடும்பத்தில் பிறக்க வைக்கப் படுகிறோம் என்பதே உண்மை.

அப்படியானால் எது நம்முடைய சுக துக்கங்களைத் தீர்மானிக்கிறது?  நாம் இந்தப் பிறவியிலும், முற்பிறவிகளிலும் செய்த பாவ புண்ணியங்களே.  நம்முடைய இன்ப துன்பங்களுக்கு நாமே காரணம், கடவுளோ நம் முன்னோரோ அல்ல.  இதன் படியே நம் வாழ்க்கை அமைகிறது, இதற்க்கான சில ஆதாரங்கள் தான் சோதிடம் போன்றவையாகும்.  ஆகையால் நம் இன்ப துன்பங்களை எதனாலும் மாற்ற முடியாது. 



சரி, ஏதோ பழைய பாக்கி விட்ட குறை தொட்டகுறை இப்போ கஷ்டப் படுகிறோம், இதை சுளுவா தீர்க்க, நம்மை பணக்காரனாக்க தொலைக்காட்சிகளில் விடிய விடிய நம்மைக் காப்பத்துவதர்க்காக மொட்டையசிச்சுகிட்டு ஜிப்பா போட்டுக்கிட்டு பலர் கஷ்டப் படுறாங்களே.  அவற்றில் எதையாவது நாடலாமா?


இதில முதலில் வருவது பெயரை மாற்றும் நியுமராலஜி.   உங்க பேரில் ஒரு எழுத்தோ, பல எழுத்தோ சேர்க்கணும் அல்லது பேரையே மாத்தணும். அதை விடிய விடிய உட்கார்ந்துகிட்டு எழுதணும்.  இது எவ்வளவு பேத்தல்னு பார்ப்போம்.  இப்போ ஒருத்தன் ஒரு கொலையை செஞ்சிடறான்.  அதற்க்கான கைரேகை போன்ற தடயங்கள் போலீஸ் கிட்ட இருக்கு, ஆனா இவன் பேரை மட்டும் மாத்தி வச்சுகிட்டான்.  இவனைப் பிடிக்க போலீஸ் வருது, ஆனா இவன் போலீஸ் கிட்ட, சார் என் பேர்ல கடைசியா ஒரு a சேர்த்திட்டேன், அதனால என்னை உட்டுடுங்க என்கிறான்.  போலீஸ் விடுமா? விடாது அள்ளி போட்டுக்கிட்டு போயிடும்.  சாதா போலீசை ஏமாற்றிவிடலாம் இந்த கடவுளோட போலீஸ் விதி, அதை யாராலும் ஏமாற்ற முடியாது.  பேரை மாற்றி ஒருபோதும் அதை ஏமாற்ற முடியாது.  

 இதே பதில்தான் ராசிக்கல், கைரேகைக்கும்.  வாஸ்து என்பது வீட்டை, தொழில் செய்யும் இடத்தை சவுகரியமான முறையில் கட்ட மட்டுமே அதற்கும் பணம் சேர்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 கஷ்டம் என்பது நாம் தேடித் போகமலேயே நம்மை வந்தடைவது போல சுகமும் தானாகவே வரும் அதற்காக மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ளத் தேவையில்லை நம்மால் முடிந்தததைச் செய்தாலே போதும், வேறு எந்த குறுக்கு வழியையும் நாட வேண்டியதில்லை.