Sunday, November 18, 2012

சைவம் உண்போர்..... அசைவம் உண்போர்.... குணம் எப்படி இருக்கும்?

மாமிச உணவு உண்பவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று CBSC பாடத்திடத்தில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.


அதுசரி, சைவ, அசைவ உணவுகள் ஒரு நபரின் குணாதிசயங்களை எந்த அளவுக்குப் பாதிக்கும்?  பார்த்து விடுவோமா!!  அன்னை தெரசாவைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை.  கருணைக் கடல்!!  அவர் அசைவம் சாப்பிடக் கூடியவர்!!





அப்படியே இன்னொருத்தர்.  சாப்பிட்டது என்னவோ சைவம்.  தன் படை வீரர்களும் தானியங்கள பழங்களை உண்ண வேண்டுமென்று கேட்டுக் கொண்டவர். முகப்பூச்சுக்கள் பிராணிகளில் கொழுப்பால்  ஆனவை எனபதாலே அதை வெறுத்தவர்!! ஆனால் வரலாற்றிலேயே அதிகபட்ச மக்களைக் [60 லட்சத்துக்கும் மேல்]  கொன்று தீர்த்தவர்.


ஆக,  சைவம்/அசைவம் எதை சாப்பிட்டாலும் ஒன்னும் பிரச்சினை இல்லையா?  அதுதான் இல்லை.  நம் உடல் எந்த மாதிரி உணவை உண்ண தகுதியானது என்று பார்க்கவேண்டும்.  அதை உண்ண வேண்டும்.  நம் உடல் தாவர உணவுகளை உண்ணவே தகுதியானது, எனவே வேண்டாத அசைவ உணவை ஒதுக்குவோம்,  அவற்றுக்காக ஒதுக்கப் படும் விளைநிலங்களை உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தி உணவுப் பஞ்சத்தைப் போக்குவோம்.  உடல் நலம் காப்போம்.



88 comments:

  1. நாற்பது வயது வரை சாப்பிடுவதற்காக வாழு... பிறகு வாழ்வதற்காக சாப்பிடு என்று சொல்வார்கள்...

    இப்போது 'நவீன உலகம்' இல்லையா...?

    அதனால் வயதை மட்டும் குறைத்துக் கொண்டால் சரியாகி விடும்...

    இருபது வயது வரை........ மேலே உள்ளது ரீப்பீட்டு....!

    விரிவான தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. தெரசா - ஹிட்லர் சிறந்த ஒப்பீடு!

    ReplyDelete
  3. Some of the above are sweeping statements. நான் zoology படித்தது P.U.C மற்றும் முதல் வருடம் மருத்துவத்தில்...இருந்தாலும், நீங்கள் சொல்வது சரியல்ல...

    It is usually classified as a hierarchy, and mammals go on top of the animal kingdom...

    பண்ணி கறி தின்பதில்லை; It does not sweat! I believe both elephants and pigs do not have sweat glands. I may be wrong!

    ReplyDelete
    Replies
    1. @நம்பள்கி

      தாவர உண்ணிகளின் உடலின் பெரும்பாலான குணங்களோடு மனித உடல் ஒத்துப் போகிறது சார். சில விலங்குகளின் விதி விளக்குகள் இருக்கலாம். 100% அதே மாதிரி இருந்தா அதுவும் மனுஷங்கலாயிடுமே!!

      Delete
  4. ****நம் உடல் தாவர உணவுகளை உண்ணவே தகுதியானது, எனவே வேண்டாத அசைவ உணவை ஒதுக்குவோம், ****

    யானை, குதிரை, மாடு எல்லாம் அசைவம் சாப்பிடுறதில்லை. ஏனென்றால் அவைகள் உடல் தாவர உணவுகளை சாப்பிடவே தகுதியானது என்பது உண்மை. மனிதனும் அதேபோல் இயற்கைப் படைப்பில் இருந்தால் அவன் தாவரங்களோட நிறுத்தியிருப்பான். இந்த "தகுதி"னு நீங்க சொல்வது அர்த்தமில்லாத வார்த்தை.

    உங்களுக்கு தவறாத் தெரிந்தால் ஒதுக்குங்க..சும்மா உங்க தோதுக்கு, உங்க தேவைக்காக உங்க சுயநலத்துக்காக தேவையான விஞ்ஞானத்தை மட்டும் எடுத்துக்காதீங்க.

    சரி, முதல் மனிதன்/மனுஷி எப்படி உருவானான்/ள்?? 100000=>1000=> 2. இந்த முதல் ரெண்டு பேரு எப்படி உருவானாங்க? அதை யோசிக்க ஏன் உங்களால முடியலை?? வெஜிடேரியன் சாப்பிட்டால் மூளை ஒரு மாதிரியாக வேலை செய்யுமா?

    அந்த 2 பேரு எப்படி உருவானாங்கனு சொல்லுங்க!

    வளவள்னு பகவத்கீதை, கிருஷ்ணர்லாம் இல்லாமல் திருக்குறள் மாதிரி 2 வரில சொல்லுங்க. நன்றி



    ReplyDelete
    Replies
    1. \\அந்த 2 பேரு எப்படி உருவானாங்கனு சொல்லுங்க!\\ வருண் நான் ஒரு சாரட்டு குடுத்திருக்கேன் பார்த்தீங்களா, அதில் எங்கேயாவது 2 பேரால தான் உருவானாகன்னு போட்டிருக்கேனா? நீங்க மறுக்கனும்னா அந்த சார்ட்டைத்தான் மறுக்கனும். மனிதன் குடல் நீளம் கம்மின்னு சொல்வீங்களா? அரைக்கும் வகையில் தாடை அசையாதும்பீங்களா? வியர்வைத் துளைகள் இல்லைம்பீங்களா?

      \\உங்களுக்கு தவறாத் தெரிந்தால் ஒதுக்குங்க..சும்மா உங்க தோதுக்கு, உங்க தேவைக்காக உங்க சுயநலத்துக்காக தேவையான விஞ்ஞானத்தை மட்டும் எடுத்துக்காதீங்க.\\

      அந்த சார்ட்டு தவறுன்னா, நீங்க சிங்கம், புலி எப்படி ஒரு மிருக்கத்தை பதுங்கி பாய்ஞ்சு அமுக்கி அதோட பல்லாலும் நகத்தாலுமே கொன்னு ஓபன் பண்ணி அப்படியே இரத்தைத்தையும் குடிச்சிட்டு, மாமிசத்தை அப்படியே சமைக்காம மசாலா போடாம சாப்பிட்டு சாகும் வரை ஆரோக்கியமா பல் டாக்டர், கண் டாக்டரைப் பார்க்காமல், indegestion மாத்திரைகளை உள்ளே தள்ளாமல் வாழுதோ, அதே மாதிரி நீங்களும் சாப்பிட்டு வாழ்ந்து காமிக்கணும். என்னை வேணுமின்னா பழங்கள் இருக்கும் மரங்கள் நிறைந்த காட்டில் விட்டுடுங்க நான் இதே மாதிரி எந்த ஆயுதமும் பயன்படுத்தாம, சமைக்காம உப்பு போடாம, சாப்பிட்டு ஆரோக்கியமா சாகும்வரை வாழ்ந்து காண்பிக்கிறேன்.

      Delete
    2. ஏன் மாடுமாரி புல்லையை வைக்கோலையும் ஒரு வருடம் சாப்பிட்டு வாழ்ந்து காட்டுங்களேன்???இப்போக்கூட நீங்க செய்யலாம்??

      Delete
    3. மாட்டோட உடலமைப்புக்கு அது உகந்தது அதால அது சாப்பிடுது, நான் அதைப் பிடுங்கி தின்ன மாட்டேன். நீங்க தான் நாய்க்கு, ஓநாய்க்கு, சிங்கம், புலிக்கு சேர வேண்டியதெல்லாம் அதுங்ககிட்ட இருந்து பிடுங்கி சாப்பிடுறீங்க.

      Delete
  5. இப்போ வெஜி சாப்பிடுறங்களையே பல வகைப் படுத்துறீங்க! மாட்டுக்கு ஆப்பிலையும் ஆரஞ்சையும் கொடுத்தீங்கனா அது சப்பிடாது. உங்களுக்கு புல்லைக் கொடுத்தால் சாப்பிட முடியாது. இப்படி இருக்கும்போது பல் அமைப்பை வச்சு "பொதுவா" யாரு வெஜ் யாரு நான் வெஜ்னு ஒரு தியரி விடுறீங்க. உங்க தியரில பல ஓட்டைகள் இருக்கு என்பதற்கு உதாரணம்தான் மாட்டுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம். :)

    ReplyDelete
    Replies
    1. நீங்க நான் வெஜ் சாப்பிடுவதில் ஆட்சேபனையே இல்லை, அது மனிதனின் உடலமைப்புக்கு ஏற்றதா என்பதுதான் கேள்வி. மாட்டுக்கு ஆப்பிள் கிடைச்சா சாப்பிடாது, வாஸ்தவம்தான். புல் கிடைக்கலைன்னா அகத்தி கீரை கிடைக்குமான்னுதான் மாட்டு பார்க்குமே தவிர கட்டுத்தறியில் இருக்கும் ஆட்டை புடிச்சு சாப்பிடாது. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. அதே மாதிரி மனிதனுக்கு ஏற்ற தாவர உணவு புல்லு வைக்கோல் இல்லை, பழங்கள், கொட்டை பருப்புகள், காய்கறிகள் தானியங்கள் தான். எந்த ஒரு கட்டத்திலும் மாமிசமாகாது. அப்படி மாமிசமும் உகந்தது என்று நீங்கள் நிரூபிக்கனும்னா மற்ற மாமிசம் உண்ணும் பிராணிகள் உண்பதைப் போலவே நீங்களும் உண்டு நிரூபிக்கணும். நான் மற்ற தாவர உண்ணிகள் மாதிரியே பழங்களை, காய்கறிகளை உண்டு வாழ்ந்து காண்பிக்கத் தயார்.

      Delete
    2. ஆக்ச்சுவலா நான் சொன்னது தப்புங்க. மாடு ஆப்பிள் ஆரஞ்செல்லாம் சாப்பிடுமாம். :)

      Delete
    3. அப்படியா? மாட்டுக்கு ஆப்பிளையும் ஆரஞ்சையும் நாங்க யாரும் வச்சு பார்த்ததில்லை வருண். மனுஷனுகளுக்கே அது காஸ்ட்லி, மாட்டுக்கு எங்க போறது. தகவலுக்கு நன்றி வருண்!!

      Delete
    4. மாட்டின் பாலை திருடி தயிர், மோர், நெய், வெண்ணெய்(களா) தின்பது மட்டும் உயர் குணமா? தாவரப் பட்சிணி என்பது மனிதர்களில் சாத்தியமில்லைங்கோ, சாத்தியப்படுத்திக் காட்ட ஜெயதேவ் தாஸ் புறப்படுவாராக.

      Delete
  6. மனிதன் மொதல்ல பச்சையாத்தான் உணவு வகைகளை சாப்பிட்டு இருப்பான். பழங்கள் போன்றவை. பிறகு குக் பண்ணி சாப்பிட்டு இருப்பான். பிறகு பஞ்சம் அது இதுனு வந்தபோது விலங்குகளை "சர்வைவலுக்காக" சாப்பிட்டு இருக்கலாம்.

    பச்சைக்காய்கறியும் பழங்களும் மட்டும் சாப்பிட்டே வாழலாம்தான். ஆனால் அப்படியா வாழ்றிங்க??? பொரிச்சு, காய்ச்சி, உப்பு உறைப்பெல்லாம் போட்டுத்தானே சப்பிடுறீங்க?

    ReplyDelete
  7. Just now I checked it out and realized! :-)

    -------------------

    What vegetables and fruits do cows eat?



    Well, almost all of them.
    the Shorter list is the ones to avoid, which are large quantities of onions, potatoes, rhubarbs, tomatoes, broccoli and cauliflower, although smaller amounts are tolerated reasonably well.
    Also total avoidance of the nightshade plants like the pepper family are a good idea
    Otherwise they will eat:
    cabbages, kale, mangels, rutabaga's, turnips, carrots, parsnips, sugar beets, sweet potatoes, pumpkin
    lettuce, squash, swede.
    apples, oranges, bananas, cherries, all the berries, peaches, plums, apricots, pears, cantaloupe, watermelons, grapes
    coconut flesh, not whole.


    plus a whole variety of trees and shrubs, like willows, poplars, comfrey
    but should avoid pine needles - they will eat them just not good for them.
    If feeding vegetables ideally shred them and sun dry them for less choke risk and help over the winter time feed.
    I am sure I forgot some they can eat; these are the ones we grow and/or feed them.

    ReplyDelete
  8. \\பச்சைக்காய்கறியும் பழங்களும் மட்டும் சாப்பிட்டே வாழலாம்தான். ஆனால் அப்படியா வாழ்றிங்க??? பொரிச்சு, காய்ச்சி, உப்பு உறைப்பெல்லாம் போட்டுத்தானே சப்பிடுறீங்க?\\ என்னால் உப்பு போடாமல் சமைக்காமல் உணவை உண்டு in principle வாழ முடியும். ஆனால் உங்களால் மாமிசத்தை சமைக்காமல் உணவை உண்டு even in principle வாழ முடியாது. மற்றபடி திருநெல்வேலி ஆழ்வார் குறிச்சியில் நல்வாழ்வு [பெயரே அதான்!!] என்பவர் பிறந்ததில் இருந்தே சமைக்கப் பட்ட உணவுகள் உண்ணாமல் தான் வாழ்ந்து வருகிறார், பெரிய விவசாய நிலம், மரங்கள் நிறைந்த இடத்தில் இயற்கை வைத்தியம் செய்து வருகிறார். மருந்துகள் மாத்திரைகள் இல்லை, சமைக்கப் பட்டாத உணவைக் கொடுத்து நிறைய நோய்களைக் குணப் படுத்துகிறார். அவர் பின்னால் ஒரு பெரிய கிராமமே அவ்வாறு வாழ்ந்து வருகிறது.

    http://universalgoodlife.webs.com/

    http://frootarians.blogspot.in/2010/12/blog-post_06.html

    ReplyDelete
  9. மனிதன் herbivore என்ற அட்டவணை தவறானது, மனிதன் ஒரு omnivore மிருகம். என் கருத்தை மறுத்தால் பதிவாகவே விளக்க முடியும், மனிதன் தீங்கில்லாத எதையும் திங்கக் கூடிய விலங்கினமே...!

    ReplyDelete
    Replies
    1. @ இக்பால் செல்வன்

      உங்களுக்கு என்னென்ன திங்க ஆசை இருக்கோ அதையெல்லாம் மனிதன் திங்கக் கூடியவன்னு சொல்லக் கூடாது. நான் வருணுக்கு சொன்ன பதில்களைப் படிங்க, அந்த முறையில் நீங்க omnivore மிருகம் என்று நிரூபிங்க ஏன்னா எல்லா omnivore மிருகமும் உப்பு போடாம, சமைக்காம, ஆயுதங்களைப் பிரயோகிக்காம இயற்கையில் கிடைப்பதை தங்கள் உடல் உறுப்புகளைக் கொண்டே தமது உணவைத் தயார் செய்து உண்கின்றன. அதே மாதிரி நீங்களும் செய்து காண்பிங்க. எதையாச்சும் Non-sense பண்ணிட்டு நீங்க சொல்வதுதான் நிரூபணம் என்ற பொய்ப் பிரச்சாரம் வேண்டாம்.

      Delete
    2. எப்பா ஜெயதேவ் தாஸ், நீங்கள் சமணத்தை பிழைப்புக்காக காப்பியடித்து, மரக்கறிக்கு மாறிவிட்டதால் . வேதங்களில் மறைக்கப்பட்ட மாமிச பட்சிணிக் குணத்தை மறைக்க முடியுமா.. நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மனிதர்கள் Omnivore மிருகமே ... !

      இவ்வளவு வாய் கிழிய பேசுறீங்களே உங்களுக்கு உயிரியலில் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது என்பதை நாம் நன்கு அறிவோம் ... ! ஏன் உங்கள் கடவுள் செடி கொடி மிருங்களை பிடித்து தின்னுமாறு மனிதனை படைத்தான்.. தனக்கு தானே Photosynthesis செய்து உணவை உருவாக்கும் படி படைத்திருக்க வேண்டியது தானே. ஒரு வேளை மனிதனை படைக்கும் போது ரம்பையோடு இடுப்பாட்டம் பார்க்க போய்விட்டாரோ என்னவோ ... !

      உங்களின் non-sense பதிவுகளை கவனித்து தான் வருகின்றேன் .. மனிதன் தாவிர பட்சிணி தான் என்றால் என்ன மயித்துக்கு இன்று சப்பான் காரன் பாம்பு, தவளை திங்கிறான். மத்தியக் கிழக்கில் ஆடு, மாடு ஒட்டகம் திங்கிறான் .. தாய்லாந்தில் கரப்பான் பூச்சி திங்கிறான் .. போங்க பாஸ் ! போய் திருவாய் மொழி பாராயணம் செய்யுங்கள், இல்லை என்றால் பிள்ளைக் குட்டிகளை படிக்க வையுங்க, அதுகளாவது புத்தியோடு வளரட்டும் .. !

      கடவுள் என்ற மண்ணாங்கட்டிக்கு இது வரை ஒரு நிரூபணம் காட்ட முடியாத அரைவேற்காடுகள் எல்லாம் இணையத்தில் அறிவியல் ( உயிரியல் ) பேச வந்துவிட்டன .. ! எங்கே போய் முடியுமோ .. !

      Delete
  10. [[தாவர உண்ணிகளின் உடலின் பெரும்பாலான குணங்களோடு மனித உடல் ஒத்துப் போகிறது சார். சில விலங்குகளின் விதி விளக்குகள் இருக்கலாம். 100% அதே மாதிரி இருந்தா அதுவும் மனுஷங்கலாயிடுமே!!]]

    தவறு! சார், தவறு!
    நீங்க பசுவைப் பத்தி முதலில் படியுங்க? மனிதனுக்கும் பசுவிற்கும் உள்ள ஒற்றுமையை சொல்லுங்கள் பார்க்கலாம்.

    முக்கியமான் இறைப்பபையே முழுவதும் வேறுபடுகிறது; நமக்கு ஒண்ணு; பசுவுக்கு நாலு என்று நினைக்கிறேன்! நாம் அசை போடுகிரோமோ?

    பண்ணி, யானையைப் பற்றி படித்ததில்லை.

    கன்னுக்குட்டி பிறந்துடன் துள்ளும், ஓடும்; மனிதக் குழந்தைகள்?
    குளம்புகள்...கால் விரல், கை விரல்கள்...உடல் தசை அமைப்பே வேற; பல் அமைப்பு, இப்படி பல், சும்மா இஷ்டத்துக்கு சொள்ளதீங்க சார்.

    வெண்ணிற ஆடை மூர்த்துய் மாதிரி சொல்லணும் என்றால், டோட்டலா ஒரு சம்பந்தமும் கிடையாது.

    மன்னிக்கணும் ஒரே ஒரே ஒரு சம்பந்தம்...பசுவும் நாமும் "மா' என்று கதுபது தான்...! அம்புடுதேன்!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் ஒவ்வொரு இனமும் மற்ற இனத்தில் இருந்து மாறு பட்டது தான், ஆனால் சில similarities இருக்கிறதல்லவா? மனிதனின் முகம் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதால் அவன் வெவ்வேறு இனம் என்று ஆகி விடுவானா? எல்லோரும் மனித இனம் தானே? இங்கே மேலே உள்ள chart -ல் மனிதன் தாவரங்களை உண்ணும் வகையறாவைச் சார்ந்தவன் என்று கொடுத்துள்ளார்கள். மற்ற பாகுபாடுகள் இருந்துவிட்டுப் போகட்டுமே. if you want to prove you are an omnivore, நான் வருணுக்கு சொன்ன பதில்களைப் படிங்க, அந்த முறையில் நீங்க omnivore மிருகம் என்று நிரூபிங்க ஏன்னா எல்லா omnivore மிருகமும் உப்பு போடாம, சமைக்காம, ஆயுதங்களைப் பிரயோகிக்காம இயற்கையில் கிடைப்பதை தங்கள் உடல் உறுப்புகளைக் கொண்டே தமது உணவைத் தயார் செய்து உண்கின்றன. அதே மாதிரி நீங்களும் செய்து காண்பிங்க.

      Delete
  11. நீங்க என்ன பேசுகிரீர்கள்; நான் பசுவையும் மனிதனையும் ஒப்பிடுங்கள் என்றால், வெவேறு முகமுள்ள மனிதர்களை ஒப்பிட்டு தவறான விவாதம் செய்கிறீர்கள்.

    நியாமனான விவாதம் செய்பவர்களிடம் விவதாம் செய்யலாம்; விதண்டாவாதம் செய்பவர்களிடமும் செய்யலாம். ஆனால், நீங்க செய்வது தமாஷா இல்ல இருக்கு.

    பசுவும் மனிதனும் ஒப்பீடு எங்கே?

    ReplyDelete
  12. @ நம்பள்கி

    Dear Sir,

    Every living being has its own type of food. Its digestive system, [starting from tongue, liver, intestine, saliva, digestive juice segregated in the liver etc.,] is so designed to deal with it. In addition their bodily limbs are also so designed to gather that particular food. That is why the meat eating animals have claws, and high concentration of acids in their stomach.

    Since there are varieties of plant eating creatures, obviously their system design is also going to be different, but for all of them there are certain similarities shown in the above table.

    If you wish to disprove that human are meant to eat only plant food, you should eat them the way every creature gathers and prepares it food and eat the same. None of the creatures in the planet except humans mutilate the food by cooking and adding salt and never use weapons to make their food, you should therefore use the same methodology to prove that meat is your food.

    All other forms of explanations and reasoning are meaningless. If you want a proof for people who solely survive on uncooked plant based food please check the following website.

    http://universalgoodlife.webs.com/

    Thanks for your coming, and continuing support!!

    ReplyDelete
  13. எதையும் அளவுடன் சாப்பிடவேண்டும்.எஸ்கிமோவரிடம் போய் நீ
    காய்கறி பழம்தான் சாப்பிட வேண்டுமெனக்கூறினால் அது எடுபடுமா?
    நம் நாட்டில் தான் இந்த மோட்சம் என்ற ஒரு சொல்லை வைத்து , மக்களை மோசம் செய்யும் பழக்கமுண்டு.
    ஐரோப்பியர்கள் இன்னும் பச்சை இறைச்சியும் உண்கிறார்கள். நம் நாட்டவர்களுடன் ஒப்பிடும் போது
    அவர்கள் நோய்நொடி குறைந்து, நீண்ட நாள் வாழ்கிறார்கள்.
    ஊர்வனவற்றில் ரெயினைவிட, பறப்பவற்றில் பிளேனைவிட எல்லாம் சாப்பிடுவோம்
    ,எனும் சீனர்கள் உலகில் அதிககாலம் வாழ்வதாக ஆய்வு கூறுகிறது.
    பிரான்சின் 122 வயது வாழ்ந்த பெண்மணியின் நாளாந்த உணவில் மாமிசம், வைன் ,4 சிகரட், 100 கிராம் சொக்களேட் அடக்கம்.
    அத்துடன் நான் பார்த்த பல விபரணப்படங்களில் மங்கோலியர்கள், இமயமலைச் சாரரில் வாழும் ஆதி குடிகள் தங்கள் கால் நடைகளுக்கு உப்பு தினமும் கொடுப்பதை வழக்கமாகக் கொள்கிறார்கள்.
    உப்பு வாங்க அவர்கள் பலநூறு கிலோமீற்றர் கடந்து வந்து செல்கிறார்கள்.
    அத்துடன் அவர்கள் வளர்க்கும் விலங்குகள் , உப்புக்காக வளர்ப்பவர் வெளியேற்றும் சிறுநீர் பனியில் விழுந்து உறைந்த போது அதையும் உண்டது. விவரணகாரர் அதைத் தெளிவாகக் கூறினார்.
    யானை உப்பத்தைதேடிச் சென்று உண்கிறது. விலங்குகளும் வாழ உப்பு, சர்க்கரை தேவை.

    சைவம் சாப்பிட்ட சங்கராச்சாரி அத்தனை வியாதியுடனும் அல்லாடுவதாக , சிறையில் இருந்தபோது கூறினார்.

    சைவம் சாப்பிடும் பலர் மருந்துச்சாக்குடன் அலைவதையும் பார்க்கிறோம்.
    ஆகவே எது விருப்பமோ, உனக்குக் கிடைக்கிறதோ, உன் உடல் உழைப்புக்குத் தக்க வகையில் அதை அளவுடன் உண்.
    கோவிலில் மணியைக் கிலுக்கிக் கொண்டு , பூவை எறிபவர்களுக்கு ஏன் மூட்டைக்கணக்கில் பருப்பும், குடக் கணக்கில் நெய்யும்- அதுவும் அடுத்தவனைக் கடவுளுக்கு எனக் கொடுக்கவைத்தது.

    அவர்களுக்கு நோய் வருவதில் ஆச்சரியமில்லை.ஏனெனிலகூடல் உழைப்புக்கு அதிகமாகச் சப்பிடுகிறார்கள்.

    அத்துடன் வேதகாலத்தில் ஓமகுண்டலங்களில் குதிரைகள், பன்றிகளைத் தானமாக இட்டு வெந்த அந்த இறைச்சிகளை உண்டு, சோமபானமும் அருந்தியதை
    வேதங்களில் குறிப்பிட்டுள்ளதாக, நக்கீரனில் ஒரு ஆச்சாரியார் தொடராக எழுதினார்.

    ஆகவே உலகத்தை அகலக்கண்ணால் பார்க்கவும். நம் நாடு எனும் குறுகிய வட்டத்துள் பார்க்காதீர்கள்.

    சைவ உணவு சாப்பிடும் நாம் உலகுக்கு என்ன? கொடுத்தோம். சாதிப்பிரிவினை -தலையால் பிறந்த கதை(நடைமுறைக்கு நம்பமுடியாதவை)

    மாமிசம் உண்ட, உண்கின்றவர்கள் தான் இன்றைய உலக வசதிகள் யாவும் கண்டு பிடித்தார்கள்.
    அந்த மாமிசம் சாப்பிடும் அமெரிக்கனின் விசாவுக்குத் தான் சைவம் சாப்பிடும் நாம் தவம் செய்கிறோம்.

    அடுத்தவன் உழைப்பில் நோகாமல் கிடைக்கும் சைவஉணவு சாப்பிட்டு, மனிதனைப் பிரித்தது தவிர நாம் என்னத்தைச் உலகுக்குச் செய்தோம்.

    இனிமேலாவது இப்படி எழுதுவதைத் தவிர்ப்போம்.
    நமக்கு விருப்பமானால் எதையும் சாப்பிடுவோம். அடுத்தவர் சாப்பிடுவதெல்லாம் கூடாதெனக் கூறுவதைத் தவிர்ப்போம்.

    வறுமையால் எலியை உண்ண மக்களை வைத்துக்கொண்டு, கோவிலுக்கு கோபுரங்களும், கற்சிலைகளுக்கு தங்க கவசமும் செய்யும் கோமாளிகளாக எம்மைப் பார்த்து இவர்கள் சிரிக்கிறார்கள் ஐயா!

    ஏழைகளை உயிர் வாழவிடுங்கள். ஏளனம் செய்யாதீர்கள்.

    ஏதோ நான் பார்த்த சைவமுண்போர் -குணக்கேடானவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. @ யோகன் பாரிஸ்

      தங்களது நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி!! தாங்கள் நியாயம் என்று நம்புவதை சொல்லியிருக்கீங்க. அதில் சில தவறான புரிதல் இருக்கு என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும்.

      \\எஸ்கிமோவரிடம் போய் நீ காய்கறி பழம்தான் சாப்பிட வேண்டுமெனக்கூறினால் அது எடுபடுமா?\\ அவங்க தானியங்கள், பருப்புகள், பழங்களைச் சாப்பிடவே மாட்டார்களா? அதெல்லாம் கிடைக்குதுன்னா அவற்றை மட்டும் உண்டு உயிர் வாழவே முடியாதா?

      Delete
    2. @ யோகன் பாரிஸ்

      \\ஐரோப்பியர்கள் இன்னும் பச்சை இறைச்சியும் உண்கிறார்கள். நம் நாட்டவர்களுடன் ஒப்பிடும் போது
      அவர்கள் நோய்நொடி குறைந்து, நீண்ட நாள் வாழ்கிறார்கள்.
      ஊர்வனவற்றில் ரெயினைவிட, பறப்பவற்றில் பிளேனைவிட எல்லாம் சாப்பிடுவோம்
      ,எனும் சீனர்கள் உலகில் அதிககாலம் வாழ்வதாக ஆய்வு கூறுகிறது.\\ இங்க நீங்க மனிதனின் நலத்தை மட்டும்தான் பார்க்கிறீங்க. அவன் நீண்ட நாள் வாழ்வதை மட்டும்தான் பார்க்கிறீங்க. அதற்காக அவன் கொன்ற "நிலத்தில் ரயிலைத் தவிர, வானத்தில் விமானத்தைத் தவிர, கடலில் கப்பலைத் தவிர" உயிரிநகல் தங்கள் வாழ்நாளை விரைவாக முடித்துக் கொண்டதை நீங்கள் ஏன் பார்க்கவில்லை? அதுமடுஉமல்ல அந்த உயிர்கள் வேறு உயிர்களுக்கான உணவு அல்லவா? அதை நீங்கள் பிடுங்கித் தின்று விட்டால் அந்த ஜீவன்கள் என்ன செய்யும்? நமது நலனுக்காக மற்ற உயிர்களை Exploit செய்வது தவறு இல்லை என்று நீங்கள் சொல்வதானால், அமரிக்கா காரன் தாங்கள் நலமாக இருக்க வேண்டுமென்று வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் என்று எல்லா நாடுகளையும் துவம்சம் செய்தானே அதையும் சரி என்று நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? ராஜ பக்ஷே தமிழர்களை கொன்றால்தான் நான் நலமாக இருப்பேன் என்று கொன்றானே அதையும் சரி என்பீர்களா? மனிதன் தனது நலனுக்காக மிருகங்களை கொள்ளலாம் இன்னொரு மனிதனையும் கொன்றால் என்ன? அதுதான் ஜனத்தொகை வேறு ரொம்ப ஓவராக போய்கொண்டு இருக்கிறது, கொஞ்சம் குறைந்து போகட்டுமே, ஒப்புக் கொள்வீர்களா? முடியாது என்றால் உங்களுக்கு போனால் உயிர், வலிக்கும் , மற்ற ஜீவன்களுக்குப் போனால் அது சும்மா, அதுங்களுக்கு உண்டாகும் வலி பற்றி உங்களுக்கு கவலையில்லை. உங்களுக்கு வந்தா இரத்தம், மற்ற ஜீவன்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னியாக அவை எடுத்துக் கொள்ள வேண்டும்!! என்ன நியாயம் இது?

      Delete
    3. \\பிரான்சின் 122 வயது வாழ்ந்த பெண்மணியின் நாளாந்த உணவில் மாமிசம், வைன் ,4 சிகரட், 100 கிராம் சொக்களேட் அடக்கம்.\\ புகைப் படித்தல் உடல் நலனுக்கு கேடு என்று ஒவ்வொரு சிகரெட் பெட்டியிலும் போடுவதை நிறுத்தச் சொல்லுங்க, உடனடியாக உங்க குழதைகளுக்கும் தினாலும் நாலு தம் வாகிக் கொடுத்து அடிக்கச் சொல்லுங்க. 122 ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.

      Delete
    4. \\யானை உப்பத்தைதேடிச் சென்று உண்கிறது. விலங்குகளும் வாழ உப்பு, சர்க்கரை தேவை.\\ யானை தான் உண்ணும் உணவில் உப்பை போட்டு உண்டாதா? மேலும் ஆப்பிரிக்க காடுகளில் வாழும் யானைகளுக்கு கடல் உப்பு கிடைக்கிறது என்று நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும், நன்றி.

      \\சைவம் சாப்பிட்ட சங்கராச்சாரி அத்தனை வியாதியுடனும் அல்லாடுவதாக , சிறையில் இருந்தபோது கூறினார்.\\ அதனால மனித உடலுக்கு ஏற்றது தாவர உணவு இல்லை என்பது நிரூபணமாகி விடுமா? மாமிச உணவு உண்டு கிட்னி Failure ஆனவன், சின்ன வயதிலேயே ஹார்ட் அட்டாக்கில் போனவன் என்று ஆயிரம் பேர் லிஸ்டை நான் உங்களுக்குத் தரவா?

      சைவம் சாப்பிடும் பலர் மருந்துச்சாக்குடன் அலைவதையும் பார்க்கிறோம்.
      ஆகவே எது விருப்பமோ, உனக்குக் கிடைக்கிறதோ, உன் உடல் உழைப்புக்குத் தக்க வகையில் அதை அளவுடன் உண்.
      கோவிலில் மணியைக் கிலுக்கிக் கொண்டு , பூவை எறிபவர்களுக்கு ஏன் மூட்டைக்கணக்கில் பருப்பும், குடக் கணக்கில் நெய்யும்- அதுவும் அடுத்தவனைக் கடவுளுக்கு எனக் கொடுக்கவைத்தது.\\ மனித உடலுக்கு ஏற்றது தாவர உணவா என்பது மட்டும்தான் இங்கே விவாதம், கோவில் மனியாடிகள் செய்வதைப் பற்றி நான் எதுவும் நான் கொடுத்த அட்டவணையில் இல்லை.

      Delete
    5. \\அவர்களுக்கு நோய் வருவதில் ஆச்சரியமில்லை.ஏனெனிலகூடல் உழைப்புக்கு அதிகமாகச் சப்பிடுகிறார்கள்.

      அத்துடன் வேதகாலத்தில் ஓமகுண்டலங்களில் குதிரைகள், பன்றிகளைத் தானமாக இட்டு வெந்த அந்த இறைச்சிகளை உண்டு, சோமபானமும் அருந்தியதை
      வேதங்களில் குறிப்பிட்டுள்ளதாக, நக்கீரனில் ஒரு ஆச்சாரியார் தொடராக எழுதினார்.\\ இதுகுறித்து நான் இந்தப் பதிவில் எதுவும் சொல்லவில்லை. சம்பந்தமில்லாதது. நான் கொடுத்த சார்ட்டில் உங்களுக்கு ஆட்சேபகரமானதாக ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

      Delete
    6. \\ஆகவே உலகத்தை அகலக்கண்ணால் பார்க்கவும். நம் நாடு எனும் குறுகிய வட்டத்துள் பார்க்காதீர்கள்.\\ நான் சொல்லியுள்ளது அறிவியல். எந்த குறுகிய பார்வையும் இல்லை. சைவத்துக்கு மாறினால் உணவுப் பஞ்சம் போகும் எல்லோருக்கும் உணவு கிடைக்கும்.

      \\சைவ உணவு சாப்பிடும் நாம் உலகுக்கு என்ன? கொடுத்தோம். சாதிப்பிரிவினை -தலையால் பிறந்த கதை(நடைமுறைக்கு நம்பமுடியாதவை)\\ சைவ உணவு உண்பவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள், இந்தியாகாரர்கள் ஒன்றும் கொடுக்கவில்லைஎன்றாலும் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்

      \\அடுத்தவன் உழைப்பில் நோகாமல் கிடைக்கும் சைவஉணவு சாப்பிட்டு, மனிதனைப் பிரித்தது தவிர நாம் என்னத்தைச் உலகுக்குச் செய்தோம்.\\ சைவம் சாப்பிடும் எல்லோரும் இப்படி இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. உழைப்பில் வாழும் சைவ உணவு உண்போரும் எண்ணற்றோர் உள்ளனர், ஊரை அடித்துத் தின்னும் அசைவம் உண்போரும் எக்கச் சக்கம்.

      \\நமக்கு விருப்பமானால் எதையும் சாப்பிடுவோம். அடுத்தவர் சாப்பிடுவதெல்லாம் கூடாதெனக் கூறுவதைத் தவிர்ப்போம்.\\ நான் சொல்லியிருப்பது மனித உடலின் அமைப்பு, அதற்கேற்ற உணவு எது எனபது மட்டுமே. விமானத்துக்கு பெட்ரோலும், பேருந்துக்கு டீசலும் ஊற்றவேண்டும் என்று சொன்னால் நான் என்னுனடைய கருத்தை திணிக்கிறேன் என்று அர்த்தமல்ல அந்தந்த என்ஜின்களின் வடிவமைப்பை பொறுத்தே இது அமையும்.

      \\வறுமையால் எலியை உண்ண மக்களை வைத்துக்கொண்டு, கோவிலுக்கு கோபுரங்களும், கற்சிலைகளுக்கு தங்க கவசமும் செய்யும் கோமாளிகளாக எம்மைப் பார்த்து இவர்கள் சிரிக்கிறார்கள் ஐயா!\\ சுவிஸ் வங்கியில் உள்ள கள்ளப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள், எல்லோருக்கும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து, எல்லா ஊருக்கும் சாலைகள் போட்டு, எல்லோருக்கும் இலவச கல்வி, மருத்துவம் கொடுத்து, அடுத்த நூறாண்டுகளுக்கு வரியில்லா பட்ஜெட்டைப் போடா முடியும். அங்கே வங்கிக் கணக்கில் கள்ளப் பணம் வைத்திருப்பவர்களில் பெரும்பாலும் அசைவம் உண்பவர்கள் தான். ஏனெனில் அவேராஜாக அசைவம் உண்போர் அதிகம்!!

      \\ஏழைகளை உயிர் வாழவிடுங்கள். ஏளனம் செய்யாதீர்கள்.\\ பணக்காரனுங்க மாமிசம் சாப்பிட ஏழைகளுக்கு உணவு உற்பத்தி செய்யும் விலை நிலங்களில் தீவனம் வளர்க்கப் பயன் படுத்தி அவர்கள் தான் ஏழைகள் வயிற்றில் அடிக்கிறார்கள். உண்மையில் சைவத்துக்கு மாறினால் உணவுப் பஞ்சம் இல்லாமல் போகும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியாதது வியப்பாக இருக்கிறது.

      \\ஏதோ நான் பார்த்த சைவமுண்போர் -குணக்கேடானவர்களாகத்தான் இருக்கிறார்கள்.\\ உங்களுக்கு உண்டானதை நீங்க உண்ணுங்க, நாய், சிங்கம் புலிக்கு உண்டானதை நீங்க பிடுங்கி உன்னதீங்க மற்ற உயிர்களுக்கும் வாழும் உரிமை இருக்கு என்பதை மறக்காதீங்க.

      Delete
  14. கோயகன் பாரிஸ் - அண்மையக் காலமாக வளரும் அறிவியல், பகுத்தறிவினால் இதுகளுக்கு அடி வயிறு கலங்கி போய், உச்சந்தலையில் பித்து ஏறி எதைக் குடித்தால் கலக்கம் குறையும் என கண்டதையும் வாந்தி எடுக்கின்றன. மண்ணுக்குள் தலையை புதைத்துவிட்டு உலகமே இருட்டு என சொல்லுமாம் தீக்கோழி அது போலத் தான்.. என்ன தான் இருட்டு என சொன்னாலும், தீட்டு என சொன்னாலும்.. உலக சான்றோர்கள் ஆய்ந்து, கற்று, அலசி, பரிசோதித்து ஆதாரங்களோடு ஏற்றுக் கொள்வதே நிற்கும், நிலைக்கும்.. மற்றவை எல்லாம் விக்கும், திக்கு தெரியாமல் ஓடி விடும் .. !

    ஆரியக் காவு பகவதி அம்மன் கோவிலில் அல்லது கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலில் தீர்த்தம் வாங்கி குடித்து வாந்தி எடுத்தால் தான் இவர்களின் பித்தம் அடங்கும் .. ஐயகோ .. !!!

    ReplyDelete
    Replies
    1. \\மண்ணுக்குள் தலையை புதைத்துவிட்டு உலகமே இருட்டு என சொல்லுமாம் தீக்கோழி அது போலத் தான்.\\ மண்ணுக்கு தலையைப் புதைச்சுகிட்டு இருக்கும் ஒருத்தரே இதைச் சொல்லலாமா?

      \\ஆரியக் காவு பகவதி அம்மன் கோவிலில் அல்லது கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலில் தீர்த்தம் வாங்கி குடித்து வாந்தி எடுத்தால் தான் இவர்களின் பித்தம் அடங்கும் .. ஐயகோ .. !!! \\ கோவிலுக்குப் போறவங்க பலருக்கே இப்படி ஒரு கோவில் இருக்குன்னு தெரியாதே, அடிக்கடி போயிட்டு வந்திருப்பீங்க போலிருக்கே!!

      Delete
  15. மாட்டின் மலம், மூத்திரம் குடிக்கும் மனிதன் ஆம்னிவோராகத் தான் இருக்க முடியும்... ஹாஹா.

    ReplyDelete
    Replies
    1. @ இக்பால் செல்வன்

      \\மாட்டின் மலம், மூத்திரம் குடிக்கும் மனிதன் ஆம்னிவோராகத் தான் இருக்க முடியும்... ஹாஹா. \\ நீங்க உள்ளே தள்ளும் ஆங்கில மருந்துகளில் எல்லா சாணமும் மூத்திரமும் இருக்கு, அதுவே தெரியா உலாத்திக்கிட்டு இருக்கீங்க............. ஹே ......ஹெ......ஹெ......ஹெ...... ஹே ............

      Delete
  16. @ இக்பால் செல்வன்

    \\எப்பா ஜெயதேவ் தாஸ், நீங்கள் சமணத்தை பிழைப்புக்காக காப்பியடித்து, மரக்கறிக்கு மாறிவிட்டதால் . வேதங்களில் மறைக்கப்பட்ட மாமிச பட்சிணிக் குணத்தை மறைக்க முடியுமா..\\ நீங்க எப்பவுமே பதிவுக்கு சம்பந்தப் பட்டதை பேசுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியுரீங்கன்னு நினைக்கிறேன். குடலின் நீளம், தொழில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் இரைப்பையில் ஊரும் அமிலத்தின் அளவு, தாடை அசைவது இதெல்லாம் சமணர்கள் கண்டுபிடிப்பா? எதுக்கு அனாவசியமா கண்ட கண்டதை இழுக்குறீங்க பாஸ்?

    \\நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மனிதர்கள் Omnivore மிருகமே ... ! \\ உங்களுக்கு சிக்கன் மட்டன்னு அடிக்க ஆசை இருக்குன்னு சொல்லிட்டுப் போங்க.

    \\இவ்வளவு வாய் கிழிய பேசுறீங்களே உங்களுக்கு உயிரியலில் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது என்பதை நாம் நன்கு அறிவோம் ... ! \\ சாமியார் காற்றில் கையை அசைத்து வாட்சை வரவழைக்கிறான் என்றால், அவன் மேஜிக் செய்கிறான், வாட்ச் கடையில் வாங்கப் பட்டதுதான் என்று தெரிந்துகொள்ள குவாண்டம் மெக்கானிக்ஸ் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே மாதிரி நீங்க விட்டுகிட்டு திரியறது பக்கா புருடா, உங்கள் முட்டாள் தனங்களை ஏமாளிகள் மேல் சுமத்தப் பார்க்கிறீர்கள். இதுக்கு ஆஹா ஓஹோ.....ன்னு ஒன்னும் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.


    \\ஏன் உங்கள் கடவுள் செடி கொடி மிருங்களை பிடித்து தின்னுமாறு மனிதனை படைத்தான்.. தனக்கு தானே Photosynthesis செய்து உணவை உருவாக்கும் படி படைத்திருக்க வேண்டியது தானே. ஒரு வேளை மனிதனை படைக்கும் போது ரம்பையோடு இடுப்பாட்டம் பார்க்க போய்விட்டாரோ என்னவோ ... !\\ அவன் படைச்சது இருக்கட்டும், உம்மால ஒரு கொசுவையாவது படைக்க முடியுமான்னு பாரும் அப்புறம் பேசும்.

    \\உங்களின் non-sense பதிவுகளை கவனித்து தான் வருகின்றேன் .. மனிதன் தாவிர பட்சிணி தான் என்றால் என்ன மயித்துக்கு இன்று சப்பான் காரன் பாம்பு, தவளை திங்கிறான். மத்தியக் கிழக்கில் ஆடு, மாடு ஒட்டகம் திங்கிறான் .. தாய்லாந்தில் கரப்பான் பூச்சி திங்கிறான் .. போங்க பாஸ் ! \\ ஊரைச் சுத்தி உங்களை மாதிரியே முட்டாள்கள் நிறைஞ்சு இருக்காங்கன்னு அர்த்தம். எல்லோரும் பண்றான் என்பதால் அது சரி என்றாகி விடுமா என்ன? அப்படிப் பார்த்தால் உலகம் பூராவும் குடிக்கிறான், ஏன் தமிழ் நாட்டில் சாராயக் கடையை திறந்து விட்டு நாடே குட்டிச் சுவராயிட்டுதுன்னு புலம்புறாங்க? உலகம் பூராவும் விபச்சாரம் தாராளமா நடக்குது, அதனால அது நல்லதுன்னு ஆயிடனுமே? எவன் எதை வேண்டுமானாலும் தின்னட்டும், ஆனால், அவை மனித உடலுக்கு ஏற்றவை என்று உம்மால் நிறுவ முடியுமா? அப்படியென்றால் தீயிளிடாமல் உப்பு போடாமல், ஆயுதங்களை பிரயோகிக்காமல் அப்படியே பிடித்து தின்று வாழ்ந்து காமியம் நம்புகிறோம்


    \\போய் திருவாய் மொழி பாராயணம் செய்யுங்கள், இல்லை என்றால் பிள்ளைக் குட்டிகளை படிக்க வையுங்க, அதுகளாவது புத்தியோடு வளரட்டும் .. !\\ உங்க நல்ல மனசுக்கு நன்றி.

    \\கடவுள் என்ற மண்ணாங்கட்டிக்கு இது வரை ஒரு நிரூபணம் காட்ட முடியாத அரைவேற்காடுகள் எல்லாம் இணையத்தில் அறிவியல் ( உயிரியல் ) பேச வந்துவிட்டன .. ! எங்கே போய் முடியுமோ .. !\\ உங்களுக்கு எந்த அளவுக்கு உயிரியல் தெரியும்னு கொஞ்சம் விஷயம் தெரிஞ்சவங்களைக் கேட்டா சொல்லிடுவாங்க அப்படி ஒரு ஆளைத்தான் தேடிகிட்டு இருக்கிறேன் பாஸ். ஆனால், உயிரியல் பற்றி உமக்குத் தெரிந்தது சரியாக இருக்கலாம், அதிலிருந்து எடுக்கும் conclusions கூமுட்டைத் தனமானது என்பது மட்டும் உறுதி.

    ReplyDelete
    Replies
    1. விபச்சாரம் தப்பே இல்லீங்க உங்க கிருஸ்ண பரமாத்மா அதைத் தானே செய்தார்... மாற்றான் மனைவிகளோடு கும்மியடித்தவர் செய்வது தப்பே இல்லீங்க, நீங்க எது சொன்னாலும் அது வேத மந்திரமுங்கோ. அது நல்லதுங்கோ. அவ்வ்வ்வ்

      Delete
    2. மனிதன் பரிணாம ரீதியாக ஆம்னிவோரே, இந்த குடல் நீளம், மலம் நாறும் கதையை விட்டு விட்டு அறிவியல் ரீதியாக விளக்குமய்யா, முடியலைனா, கொல்லிமலைக்கு போய்டு வாரும். தெளியும்...!

      Delete
    3. \\விபச்சாரம் தப்பே இல்லீங்க உங்க கிருஸ்ண பரமாத்மா அதைத் தானே செய்தார்... மாற்றான் மனைவிகளோடு கும்மியடித்தவர் செய்வது தப்பே இல்லீங்க, நீங்க எது சொன்னாலும் அது வேத மந்திரமுங்கோ. அது நல்லதுங்கோ. அவ்வ்வ்வ்\\ ஐந்து வயதாக இருக்கும்போது பிரம்மா மாடு மேய்க்கும் சிறுவர்களையும், கன்றுக்குட்டிகளையும் பிரம்மா கடத்திக் கொண்டு பொய் ஒரு கணம் [=பூமியில் ஒரு வருடம்] ஒழித்து வைக்க, ஸ்ரீ கிருஷ்ணர் சிறுவர்களாகவும் கன்றுகளாகவும் மாறி ஒரு வருடம் எல்லோர் வீட்டிலும் இருக்கிறார். அப்போது செல்லத் திருமணம் நடக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் விருந்தாவனத்தில் அத்தனை போரையும் இந்தச் சிறுவர்கள் வடிவில் மனந்தார். எனவே உண்மையில் அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவியரே, அவர்கள் கணவர்கள் வெறும் பாதுகாப்பு மட்டுமே. ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களுக்கு மட்டுமல்ல அவர்களது husband களுக்கும் husband[பாது காவலர்]. This is the real story.

      Delete
    4. \\மனிதன் பரிணாம ரீதியாக ஆம்னிவோரே, இந்த குடல் நீளம், மலம் நாறும் கதையை விட்டு விட்டு அறிவியல் ரீதியாக விளக்குமய்யா, முடியலைனா, கொல்லிமலைக்கு போய்டு வாரும். தெளியும்...! \\இக்பால் செல்வன், நானும் உங்களை மாதிரியே பேச ஆரம்பிக்க ரொம்ப நேரம் ஆகாது. கொஞ்சம் அடக்கி தலைப்பைப் பத்தி மட்டும் பேசுங்க. நீங்க இப்போ செய்வது கருத்துத் திணிப்பு. பன்றியின் குடலை வறுத்துப் போட்டா பசுமாடு கூட தின்னும் அப்படித்தான் லண்டனில் mad cow disease வந்தது. மாட்டை இயல்பா விட்டா புள்ளையோ, இலைகலோயோ உண்ணுமே தவிர மாமிசத்தை தொடாது. ஆம்னிவோர் விலங்குகளே ஆனாலும் அவை ஒருபோதும் சமைப்பதில்லை, உப்பு சேர்ப்பதில்லை, கத்தி போன்ற ஆயுதங்களைப் பிரயோக்கிக்காமல் தான் உண்கின்றன. நீர் ஆம்னிவோர் என நிரூபிக்கனும்னா இதைப் போல உண்டு ஆரோக்கியமா வாழ்ந்து காமியம், நான் சமைக்காமல் உப்பு சேர்க்காமல் ஆயுதங்களை பிரயோக்கிக்காமல் தாவர உணவுகளை உண்டு காண்பிக்கிறேன். இது தான் கடைசி நிரூபணம். நீங்க எதையாவது திநிப்பீங்க அதையெல்லாம் மத்தவங்க எல்லோரும் ஏத்துகிட்டு தலையாட்ட நாங்க ஒன்னும் தஞ்சாவூர் பொம்மைகள் அல்ல. தயவு செய்து தரக்குறைவான வார்த்தைகளைத் தவிர்க்கவும் படித்ததற்கு அடையாளமாக நடந்து கொள்ளவும். நன்றி.

      Delete
  17. அருமையான பதிவு. சைவ உணவே உடல் நலத்துக்கும், ஆன்மிக முன்னேற்றத்துக்கும் சிறந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அறிவுள்ள யாரும் உங்கள் கருத்தை மறுக்க மாட்டார்.

    ReplyDelete
  18. அடேங்கப்பா பதிவை விட நாலு மடங்கு பெருசாய் ஆர்கியூமென்ட் போயிருக்கு !

    ReplyDelete
  19. முட்டாள்களோடு சம்ஸ்காரிப்பதை விட, மூடிக் கொண்டு போவலாம். பதிவுலக்கு இன்னொரு காமெடியன் றெடி. பாவம் சுபி எவ்ளோ நாள் தான் சோலோ பெர்மான்ஸ் கொடுப்பாருங்க

    ReplyDelete
  20. ஜெயதேவ்,
    நீங்கள் கொடுத்திருக்கும் சார்ட் அறிவியல் பூர்வமானது என்றே நானும் படித்திருக்கிறேன்..

    மேலும் சைவ உணவே மனிதர்களது உடலமைப்புக்கு உகந்தது என்பதும் அனுபவ பூர்வமான உண்மை.

    ஆனால் இன்று சைவ உணவைப் பழக்கமாகக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கூட இளையர்கள் அசைவ உணவிற்கு வேக வேகமாக அடிமையாகிக் கொண்டு வருவது கண்கூடு.

    இந்தப் பதிவில் உள்ள பல வாதங்கள் அந்த மாற்றத்தினால் ஏற்பட்ட, குற்றக் கழிவிரக்கதால் கூட இருக்கலாம் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அறிவன்!!

      Delete
  21. மாட்டுக் கறியும், பன்னிக்கறியும் கலந்து கட்டும் என்னிடம் கேட்டால்.. கறி தும்பது தப்புங்க சாமி....
    எல்லாரும் துன்னா...
    வெலையெல்லாம் கூடிப்போச்சி சாமி...
    அவனுக துன்னலின்ன நமக்கு சீப்பா கெடைக்கும் சாமி.

    ReplyDelete
  22. என்னோட ஒடம்புக்கு என்ன வேணுமுன்ன நாந்தான் சாமி முடிவு செய்யோனும்.

    அத சமிச்சி சாப்பிடுவதா...இல்ல அப்படியே சாப்பிடுவதா என்னு எனக்குத் தெரியும் சாமி.

    ஆச்சி மசாலா போடுவதா...? இல்ல சக்தி மசாலா போடுவதா..? இல்ல வெறும் உப்பப் போட்டு வறுப்பதா...? என்னோட விரும்பம் சாமி.

    மனுசிங்க இப்படிதான்னு யார் சாமி எலக்கணம் எழுதுனது?

    ReplyDelete
    Replies
    1. @ ராவணன்

      ரொம்ப அப்பாவியா கேள்வி கேட்கிறீங்களே!! உங்களுக்கு எது உணவுன்னு நீங்கதான் தீர்மானிக்கணும், அதுசரி உங்களுக்கு உணவாக சம்மதமான்னு அந்த பன்னியை என்னைக்காவது ஒரு வார்த்தை கேட்டிருக்கீங்ககளா?

      ஆப்பிரிக்க காடுகளில் ஆதிவாசிகள் இருக்காங்களாம், வேற ஆள் போனா அன்னைக்கு மசாலா அறைச்சிடுவாங்களாம். பசிக்கு யார் யாரை வேண்டுமானாலும் தின்னலாம் என்பதே உங்க கொள்கை என்றால் அவங்க பசிக்கு நீங்க போக ரெடியா?
      மற்றபடி வருண், யோகன் பாரிஸ் ஆகியோருக்கு எழுதிய பதில்களில் உங்கள் மற்ற கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. You can read them if you wish so, வருகைக்கு நன்றி.

      Delete
  23. ****என்னால் உப்பு போடாமல் சமைக்காமல் உணவை உண்டு in principle வாழ முடியும். ஆனால் உங்களால் மாமிசத்தை சமைக்காமல் உணவை உண்டு even in principle வாழ முடியாது***

    இதுக்கு பேர் தான் அர்த்தமில்லாமல் பேசுவது. "இன் ப்ரிண்ஸிப்பிள்" னு நீங்க கையாளும் "பொய்க் கூற்று"

    ஜப்பானில் இன்றும் ஒரு சில மீன்களை பச்சையாக சாப்பிடுறாங்க தெரியுமா? உடனே அது மாமிசம் இல்லைனு சொல்லிப்புடாதீங்க! :)))

    உப்புப்போடாமல், சமைக்காமல் முருங்கைக்காய், கத்திரிக்காய், சுரைக்காய், புடலங்காய் எல்லாம் வச்சு சாப்பிடுவீங்களா? இல்லைனா இதுவரை சாப்பிட்டு இருக்கீங்களா? சேணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு எல்லாம் பச்சையா சாப்பிடுற வழக்கம் உண்டா??

    எதுக்கு இந்த "இன் ப்ரிண்ஸிப்பில்" வெட்டிப்பேச்சு????.

    அண்ணே உப்பில் இருக்கிற சோடியம் உங்களுக்கு ரொம்ப அவசியம். எதையாவது வித்தியாசமா செஞ்சு எதையாவது வாங்கிக்கட்டிக்காதீங்க.


    ReplyDelete
    Replies
    1. @ வருண்

      ஒரு பெரிய கிராமமே சமைக்காமல் உப்பு சேர்க்காமல் உண்டு வாழ்கிறார்கள்ன்னு உங்களுக்கு லிங்கும் குடுத்துட்டேன். இன்னமும் இதே பேச்சா? ஒன்னு பண்ணுங்க, என்னால அமெரிக்கா வர முடியாது நீங்க வேணுமின்னா பெங்களூருக்கு வாங்க. உங்களையும் என்னையும் ஒரு அறையில் வைத்து பூட்டி விடலாம். எனக்கு சப்ளை வெறும் பழங்கள், உங்களுக்கு ஆடு கோழி பன்னி எல்லாம். [எதுவுமே தோல் உரிக்காம உசிரோட]. நீங்க பல்லாலே அதுகளை கடிச்சு கொன்னு சாப்பிடனும் நான் சமைக்காமல் உப்பு சேர்க்காமல் ஏன் பற்களாலேயே கடிச்சு பழங்கள், Nuts மட்டும் உண்கிறேன். நீங்களே முடிவு பண்ணுங்க எத்தனை நாளைக்குன்னு. நான் ரெடி நீங்க ரெடியா?

      Delete
    2. நானும் உங்க கூட வரேன், அனால் பலம் என்றால் பலாபழம் தருவோம், தேங்காய் , பாதம் கொட்டை தருவோம், பல்லால் மட்டும் கடித்து சாப்பிடனும் செரியா

      Delete
    3. @ mubarak kuwait

      உப்பு சேர்த்தல் தீயிலிடல் இதை எந்த ஜீவனும் செய்வதில்லை. சில பறவைகள் குட்டி ஆமைகளை தூக்கிப் போய் உயரத்தில் இருந்து கீழே போட்டு ஓடு உடைந்ததும் உள்ளே இருக்கும் ஆமையை உண்கின்றன. ஆனால் இதுவும் அரிதே. பலாப் பழங்கள் பழுத்தவுடன் தானாகவே உடைத்துக் கொள்ளும்.

      http://www.youtube.com/watch?v=_MgHBvp1uwk

      Delete
    4. @ mubarak kuwait

      அப்படியே பார்த்தாலும் உங்களுக்குத் தேவையான பழங்கள் கிடைக்கும் அதை உண்டே வாழ முடியும். ஆனால் காடுகளை அழித்ததால் மற்ற தானியங்கள் நட்ஸ் இதற்க்கெல்லாம் செல்ல வேண்டியிருக்கு. ஆனாலும் தாவர உணவிலேயே இருப்பதில் எமக்கு மகிழ்ச்சியே.

      Delete
  24. ***ஆப்பிரிக்க காடுகளில் ஆதிவாசிகள் இருக்காங்களாம், வேற ஆள் போனா அன்னைக்கு மசாலா அறைச்சிடுவாங்களாம். பசிக்கு யார் யாரை வேண்டுமானாலும் தின்னலாம் என்பதே உங்க கொள்கை என்றால் அவங்க பசிக்கு நீங்க போக ரெடியா?****

    Well, well, well..

    In that case, plants are more useful to the world that of polluting animals like Jeyadev and Varun. Lett us leave varun as he is selfish, Sriman ngaani Jeyadev can sincerely kill himself and decompose himself and feed the plants and help the world. Are you ready to do that???

    You need to realize what you are talking is not sensible!

    ReplyDelete
    Replies
    1. Varun, whatever you have said would be applicable to those who advocate you can eat anything if you are hungry, I don't advocate that, and therefore it is not for me, maybe it is for you and Ravanan.

      Delete
  25. ****@ வருண்

    ஒரு பெரிய கிராமமே சமைக்காமல் உப்பு சேர்க்காமல் உண்டு வாழ்கிறார்கள்ன்னு உங்களுக்கு லிங்கும் குடுத்துட்டேன். ***

    So what??

    Are you DOING it???

    ReplyDelete
    Replies
    1. Though I may not do it, yet I have not shifted from what I am supposed to ea. I am still with plant food.

      Delete
    2. Well I can also give links where people EAT RAW FISH and they LIVE longer than INDIANS!

      Check out the life expectancy of Japanese who eat raw fish and Vegetarian people in INDIA!

      Who lives longer???

      Delete
    3. ***Though I may not do it,***

      The fact is YOU DONT DO IT!

      ---------------

      If I study, I will become the topper..

      If I work hard, I will become a millionaire...

      such talks are meaningless in a practical world!

      Delete
    4. I am still with plant food, have not changed to other kind on false grounds!!

      Delete
  26. \\Well I can also give links where people EAT RAW FISH and they LIVE longer than INDIANS!\\

    I can show you people eating broken tube lights, sand, bolts and nuts, does it mean they are meant for human consumption? Exceptions can not be made rules. Anybody can eat raw plant food and survive, but not everybody can survive on raw fish.

    \\Check out the life expectancy of Japanese who eat raw fish and Vegetarian people in INDIA!

    Who lives longer???\\ you want to live long, but what about those fishes which ended their lives abruptly? Don't they have their choice to live like you?

    A tiger eating deer is allowed, a wolf eating goat id allowed, Varun eating pigs are not allowed since it is not meant for his digestive system, and he should allow the pig with its husband/wife and piglets to lead a peaceful life.


    ReplyDelete
    Replies
    1. ***\\Well I can also give links where people EAT RAW FISH and they LIVE longer than INDIANS!\\

      I can show you people eating broken tube lights, sand, bolts and nuts, does it mean they are meant for human consumption?***

      You are not saying VEG diet is healthy and appropriate for humans?

      Then why humans who follow such diet live shorter (indians who eat only veg) and people eat non-veg diet (japanese) live longer??

      Look at the life expectancy of people all over world..

      http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_life_expectancy

      1 Japan 82.7 79.0 86.1

      139 India 64.7 63.2 66.4

      Delete
    2. The life expectancy is not all discussed, the core of discussion is whether your bodily design is meant for plant food / animal food. That's all.

      Delete
  27. உங்க வாதம்:

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்தியாவில் உலகில் அதிகம். அவர்கள் உணர்வுகளை மைனாரிட்டி மதிக்கனும்.

    உலகில் நாந்வெஜ் சாப்பிடுறவங்களவிட வெஜிடேரியன் சாப்பிடுறவங்க மைனாரிட்டி.

    நீங்க ஏன் அதே லாஜிக்கை இங்கே பய்னபடுத்த மாட்டேன்கிறீங்க??

    உங்க தோதுக்கு பேசிக்கிறீங்க???

    ReplyDelete
    Replies
    1. நான் குடுத்த சார்ட்டில் மைனாரிட்டி, மெஜாரிடின்னு எங்கே போட்டிருக்கு?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Your chart does not talk about sodium/NaCl either. Are we not talking about it? You are giving a link to justify that

      BUT, When you dont have an answer, you go back to chart and remind me that we need to talk ONLY about that chart or not?. :)

      Delete
    4. Don't think that salt means NaCl alone. In fact the common salt is called mineral poison, white sugar being sweet poison. the are so dangerous to health. The natural food that we contain so many salts that are more than sufficient for our bodily requirements, and in fact the urine and sweat of animals which don't eat salt also contain salts in them. You should take salt- blah ....blah .... are the modern doctors evil advice to increase their bank balance.

      Delete
  28. //ஆனால் இன்று சைவ உணவைப் பழக்கமாகக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கூட இளையர்கள் அசைவ உணவிற்கு வேக வேகமாக அடிமையாகிக் கொண்டு வருவது கண்கூடு.
    இந்தப் பதிவில் உள்ள பல வாதங்கள் அந்த மாற்றத்தினால் ஏற்பட்ட, குற்ற க் கழிவிரக்கதால் கூட இருக்கலாம் !//
    இது தான் உண்மை... நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள், இக்கட்டுப்பாடு கைமீறுதே எனும் கவலையே!
    இறை நம்பிக்கை குறையும் போது, கோவிலை அண்டிப்பிழைப்போர் கூக்குரலிடிவதுபோல்
    //Eskimos ate a large variety of sea animals such as Whale, herring, and seal. They would eat the skin and freeze it for later use, or bake it in herbs to add flavor. They also ate carribou, fox (when available) and a large variety of Alaskan birds. Of course today you might see them enjoying the fare at a McDonalds or a Taco Bell or having an Eskimo Pie at the local 7-Eleven.//
    நாம் வாழும் சூழலே, நம் உடல் உழைப்பின் அளவே நாம் என்ன? உண்ண வேண்டுமெனத் தீர்மானிப்பது. வேலையற்ற மதகுருக்கள் அல்ல!
    மாடு,ஆடு, பன்றி, கோழி யிடம் கேட்டுவிட்டா? சாப்பிடுகிறீர்கள்,என உன்னதாமான கேள்வி கேட்டீர்கள்.
    நான் கேட்கிறேன் கத்தரிக்காய் கடிதமா போட்டது உங்களைச் சாப்பிடும்படி, கீரை தந்தியடிச்சதா? காய்கறியும்,பழமும், விதையும்
    மனிதனுக்கென எவர் சொன்னது.அவர்தான் ஆடு,மாடும் மனிதனுக்கெனச் சொன்னதாக கொள்ளுங்களேன்.
    நீங்கள் கேலியும், கிண்டலுக்குமென கிளம்பிவிட்டீர்கள். வைத்தியர்களைக் கூட பைத்தியக்காரர் ( modern doctors evil advice to increase their bank balance.)
    என்கிறீர்கள்.
    உங்களைப் போன்றோருக்கு உள்ள பிரச்சனை வேறு...இப்போ உங்கள் இளைஞர்களில் கூடப் பலர் வீட்டில் அசைவம் சமைக்காததால் வெளியே சென்று உண்டு மகிழுமளவுக்கு மனத் தெளிவு அடைந்து அதிலுள்ள சாதக பாதகங்களை அறிந்து வாழ முற்பட்டுவிட்டார்கள்.
    வெளிநாடுகளுக்கு உழைக்கச் சென்றோர் மறைவாக அசைவம் சாப்பிடுகிறார்கள் இதனால் உங்கள் அத்திவாரம் ஆட்டம் காணுகிறது.

    அதனால் ஏற்பட்ட பயம் இன்னும் தெளிவாகக் கூறினால் 'Paranoia'- நீங்களோ? நானோ விரும்பியோ விரும்பாமலோ உலகின் பெரும்பகுதி அசைவம் உண்பவர்களாகவே மாறுகிறார்கள்.
    குறிப்பாக இந்தியாவில் சைவம் உண்ணும் பல குடும்பத்துச் சிறுசுகள்
    இப்போ அசைவம் உண்பவர்களாக வெகுவேகமாக மாறுகிறார்கள்,வரவேற்போம்.
    இவர்களால் விலை அதிகமாவது கவலையே ஆனாலும் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
    இதென்ன காயத்திரி மந்திரமா? குறிப்பிட்ட ஒரு சிலரே அனுபவிக்க...
    பலர் தங்கள் நாய்க்கென வாங்கிச் சென்றும் மறைவாக உண்டு மகிழ்கிறார்கள். அவர்கள் வெளிப்படையாக வாழ ஈஸ்வரன் வழி காட்ட வேண்டும்.
    லண்டனில் ஒரு தெரிந்த சைவம் உண்ணும் கோவில் பூசகர், தமிழ்நாட்டவர், அவரை பஸ்சில் சந்தித்த போது பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். என்ன? இதைச் சாப்பிடிகிறீர்களே இதில் முட்டை, மிருகக் கொழுப்பு கலந்துள்ளதே! எனக் கூறியபோது, என்னை எரிப்பது போல் பார்த்துவிட்டு, இந்தக் குளிரில் பசியில் சாகவா? சொல்கிறீர்கள் என்றார். பிழைக்கத் தெரிந்தவர். அவர் நல்ல தடித்த பூநூல் போட்டிருப்பார்.அவரை நான் வரவேற்கிறேன். அவர் தன் விருப்பப்படியும் தேவைப்படியும் வாழ்கிறார்.
    நீங்கள் விதண்டவாதம் - அடுத்தவரைக் கேலி செய்வதற்கென்றே செய்கிறீர்கள்.
    உலகில் ஜீவகாருணியத் திலகமாக நிலைநிறுத்த தலையால் கிடங்கு எடுக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. \\நாம் வாழும் சூழலே, நம் உடல் உழைப்பின் அளவே நாம் என்ன? உண்ண வேண்டுமெனத் தீர்மானிப்பது. வேலையற்ற மதகுருக்கள் அல்ல!\\ நான் மேலே கொடுத்துள்ள chart - ஐ எந்த மதகுருவும் தயார் செய்யவில்லை. அதில் தவறு இருந்தால் காண்பியுங்கள் பார்க்கலாம்.

      \\மாடு,ஆடு, பன்றி, கோழி யிடம் கேட்டுவிட்டா? சாப்பிடுகிறீர்கள்,என உன்னதாமான கேள்வி கேட்டீர்கள்.
      நான் கேட்கிறேன் கத்தரிக்காய் கடிதமா போட்டது உங்களைச் சாப்பிடும்படி, கீரை தந்தியடிச்சதா? காய்கறியும்,பழமும், விதையும் மனிதனுக்கென எவர் சொன்னது.அவர்தான் ஆடு,மாடும் மனிதனுக்கெனச் சொன்னதாக கொள்ளுங்களேன்.\\ ஒரு புலி மானைக் கொன்று சாப்பிடுகிறது என்றால், அந்தப் புலியிடம் போய் மானின் சம்மதக் கடிதம் பெற்றுவிட்டீர்களா என்று கேட்கமாட்டோம். என்னில் மானின் கரி புலியின் உணவு. அதே மாதிரி மனிதன் தன்னுடைய ஜீரண உருப்புகளுக்கேற்ற உணவை உண்பதற்கு எந்த சம்மதக் கடிதமும் தேவையில்லை. . மேலும் பசிக்காத சமயத்தில் சிங்கம் புலி போன்ற விலங்குகளின் மிக அருகில் கூட மான் கூட்டம் மேய்ந்து கொண்டிருக்கும், எண்ணின் பசிக்காத சமயத்தில் அவற்றை அவை தீண்டாது. இந்த அடிப்படை நியதியை எந்த மனிதனாவது கடை பிடிக்கிறானா? தனக்கு ஒதுக்கப் படாததை அளவுக்கு மீறி உள்ளே தள்ளுகிறான். இவனுக்காக மற்ற உயிர்கள் தங்களை மாய்த்துக் கொள்ள வேண்டுமா? என்ன நியாயம் இது?

      \\நீங்கள் கேலியும், கிண்டலுக்குமென கிளம்பிவிட்டீர்கள். \\ உங்களிடம் பதில் இல்லை என்று சொல்லுங்கள்.

      \\வைத்தியர்களைக் கூட பைத்தியக்காரர் ( modern doctors evil advice to increase their bank balance.) என்கிறீர்கள்.\\ நீங்கள் இந்தியாவில் உள்ள பொது மக்களிடம் இது குறித்து ஒரு கருத்து கணிப்பு எடுத்துப் பாருங்கள் அப்புறம் பேசுங்கள். ரொம்ப அப்பாவியாக இருக்கிறீர்கள். ரமணா படம் பார்த்தீர்கள் அல்லவா? எல்லாம் நிஜத்தில் நடக்கிறது.

      \\உங்களைப் போன்றோருக்கு உள்ள பிரச்சனை வேறு...இப்போ உங்கள் இளைஞர்களில் கூடப் பலர் வீட்டில் அசைவம் சமைக்காததால் வெளியே சென்று உண்டு மகிழுமளவுக்கு மனத் தெளிவு அடைந்து அதிலுள்ள சாதக பாதகங்களை அறிந்து வாழ முற்பட்டுவிட்டார்கள். வெளிநாடுகளுக்கு உழைக்கச் சென்றோர் மறைவாக அசைவம் சாப்பிடுகிறார்கள் இதனால் உங்கள் அத்திவாரம் ஆட்டம் காணுகிறது.\\ உண்மையைக் கூறுகிறேன், ஆடுவதற்கு ஒன்றுமில்லை.


      \\லண்டனில் ஒரு தெரிந்த சைவம் உண்ணும் கோவில் பூசகர், தமிழ்நாட்டவர், அவரை பஸ்சில் சந்தித்த போது பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். என்ன? இதைச் சாப்பிடிகிறீர்களே இதில் முட்டை, மிருகக் கொழுப்பு கலந்துள்ளதே! எனக் கூறியபோது, என்னை எரிப்பது போல் பார்த்துவிட்டு, இந்தக் குளிரில் பசியில் சாகவா? சொல்கிறீர்கள் என்றார். பிழைக்கத் தெரிந்தவர். அவர் நல்ல தடித்த பூநூல் போட்டிருப்பார்.அவரை நான் வரவேற்கிறேன். அவர் தன் விருப்பப்படியும் தேவைப்படியும் வாழ்கிறார்.\\ that is his ignorance+foolishness, what can I do?

      \\நீங்கள் விதண்டவாதம் - அடுத்தவரைக் கேலி செய்வதற்கென்றே செய்கிறீர்கள்.
      உலகில் ஜீவகாருணியத் திலகமாக நிலைநிறுத்த தலையால் கிடங்கு எடுக்கிறீர்கள்.\\ ஜீவா காருண்யம் என்றால் புலிகளையும் சிங்கங்களையும் பிகட் தின்னச் சொல்லுங்கப்பா என்று சொல்லியிருப்பேனே. அவை மிருங்கன்களைக் கொள்வது தவறே இல்லை என்கிறேனே!! அப்புறமென்ன? உங்க தியரி ரொம்ப அடி வாங்குது அன்பரே!!

      Delete
    2. \\நீங்கள் விதண்டவாதம் - அடுத்தவரைக் கேலி செய்வதற்கென்றே செய்கிறீர்கள்.
      உலகில் ஜீவகாருணியத் திலகமாக நிலைநிறுத்த தலையால் கிடங்கு எடுக்கிறீர்கள்.\\ ஜீவகாருண்யம் என்றால் புலிகளையும் சிங்கங்களையும் பழங்கள் பிஸ்கட் தின்னச் சொல்லுங்கப்பா என்று சொல்லியிருப்பேனே. அவை மிருங்கங்களைக் கொள்வது தவறே இல்லை என்கிறேனே!! அப்புறமென்ன? உங்க baseless தியரி, ரொம்ப அடி வாங்குது அன்பரே!!

      Delete
    3. [[//ஆனால் இன்று சைவ உணவைப் பழக்கமாகக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கூட இளையர்கள் அசைவ உணவிற்கு வேக வேகமாக அடிமையாகிக் கொண்டு வருவது கண்கூடு.
      இந்தப் பதிவில் உள்ள பல வாதங்கள் அந்த மாற்றத்தினால் ஏற்பட்ட, குற்ற க் கழிவிரக்கதால் கூட இருக்கலாம் !//
      இது தான் உண்மை... நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள், இக்கட்டுப்பாடு கைமீறுதே எனும் கவலையே!]]

      யோகன், நான் கூறியது அசைவர்களின் வாதம் பற்றி...அசைவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை நியாயப் படுத்தவே இவ்வளவு வன்மத்துடன்(இல்லையென்று சொல்லாதீர்கள்!) வாதங்களை முன்வைக்கிறார்கள்.பெரும்பாலும் அவை தனிப்பட்ட தாக்குதலாக இல்லாவிட்டால், அவற்றிற்கு மிக அருகில் செல்கின்றன.

      சைவ உணவின் அடிப்படை உலகளாவிய அன்பு..வலி உணரும் எந்த ஒரு உயிரியையும் துன்புறுத்தக் கூடாது என்ற அன்பின் அடிப்படையில் வந்தது.

      அந்த அன்பு வளர்ந்து அருளாகும் போது ஆன்மிக முன்னேற்றமும், மனதளவில் உயர்நிலையடையும் நோக்கமும் முகிழ்கின்றன.

      ஆன்மிகமும், ஆன்ம விடுதலையும் தங்களுக்குத் தொடர்பில்லை என்று நினைக்கும் மக்கள் தொகை பெரும்பான்மையாகி விட்டது..அவர்களை எந்த வாதத்தினாலும் மாற்றுதல் அரிது.

      உணவு என்ற அளவில் அவரவர் விருப்பம் என்றாலும், உண்ணும் உணவின் தன்மை சிந்தனையின்,உயிரின், ஆன்மாவின் தன்மையைப் பாதிக்கிறது என்பது அசைக்க முடியாத உண்மை.இது பொய் என்று சொல்பவர்களைத் திருத்துவது என் வேலையல்ல.

      நான் நற்கல்வி கற்றால், நல்ல வேலையைத் தேடிக் கொண்டால் உலகாதாய அளவில் என்னுடைய முன்னேற்றம் நன்றாக இருப்பதால் அதை முயற்சிக்கிறேன். இதே போல ஆன்ம நிலைக்கான முன்னேற்றத்திற்கான சில பயிற்சிகள் அவசியம்; அவற்றில் சைவ உணவுப் பழக்கம் முதன்மையானது.

      இவற்றைக் கைக் கொள்வோர் மற்றவர்களும் அதைப் பின்பற்றுவது அவசியம் என்று வற்புறுத்துவது இல்லை; வேண்டுமானால் அறிந்ததை சொல்லலாம்..அவரவர் முன்னேற்றம் அவரவர் பாடு !

      ஆனால் சைவ உணவுப் பழக்கமுடைய குடும்பங்களில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் அசைவம் சாப்பிடுகிறார்கள் என்று தெரிய வரும் பெற்றோர்கள் மனதிற்குள் அழுகிறார்கள்..இவர்களில் பலரிடம் நான் நேரடியாகப் பேசியிருக்கிறேன்..

      குழந்தைகள் சம்பாத்தித்து ஆயிரக் கணக்கில் பணம் கொண்டு வந்து கொடுப்பதால் அவர்கள் செய்யும் எந்த செயலும் சரியானது என்பது உண்மையாகி விடாது; ஆனால் பெற்றோர்கள் வாயற்று இருக்கிறார்கள்..

      நான் சொன்னது போல அவரவருக்கான கதி அவரவரால் தீர்மானிக்கப் படுகிறது!

      Delete
    4. @ அறிவன்.

      நான் சொல்ல நினைத்து எழுத முடியாததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள், மிக்க நன்றி. இதைச் சொன்னால் மதத்தை இங்கே புகுத்துகிறாயா என்பார்கள், அல்லது கத்திரிக்காயை பறிக்கும் பொது அந்த செடி வழியால் துடிக்குமே அதற்க்கு என்ன செய்வாய் என்பார்கள். முடியலை...........

      Delete
    5. [[இதைச் சொன்னால் மதத்தை இங்கே புகுத்துகிறாயா என்பார்கள்,]]

      கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், நான் எங்குமே மதம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை..

      என்னைப் பொறுத்த வரை ஆன்மிகம் வேறு..மதம் வேறு...
      இந்து மதம் என்ற ஒரு கட்டமைப்பையும் நான் புறந்தள்ளுபவன்..ஆனால் ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.

      வளர்த்தினால் உங்களுக்குமே குழப்பம் வரலாம். :))

      Delete
  29. மூட்டைபூச்சியையும், நுளம்பையும் கடிக்க விட்டு விசிறியால் விசிறுவது போல் பேசுகிறீர்கள்.
    உங்களுக்கு நெல் பயிரிட உழும் போது எத்தனைகோடி உயிர்கள் கொல்லப்படுகிறது. இன்று பயிர்களுக்கு எவ்வளவு பூச்சி கொல்லி தெளிக்கிறார்கள்.
    நீங்கள் காய்கறியும் சாப்பிடக் கூடாது.
    நம் ஆண்டவனுக்கு கட்டும் பட்டுத்துணிக்கு எத்தனை கோடி பட்டுப்பூச்சிகள் குடம்பியாக கொதிநீரில் அவிக்கிறார்கள் தெரியுமா?
    நம் கற்சிலைகளினாலான ஆண்டவனுக்கு செய்யும் தங்கக் கவசங்களுக்கு
    தங்கம் தோண்டும் போது எத்தனை கோடி உயிர்களும், எத்தனை மனிதனும் சாகிறார்கள் தெரியுமா?
    தேனெடுக்கும் போது தேனியை கொஞ்சித்தானே! குலாவுகிறீர்கள். அதின் கருவையே அழித்துத்தான் தேனை எடுத்து, நீங்களும் குடித்து
    நம் கடவுள் கல்லுக்கும் ஊற்றுகிறீர்கள்.
    ஆகவே! இவ்வுலகில் எவருமே ஜீவகாருணியத்துடன் வாழவில்லை. முடியாது இது தான் உண்மை.
    நான் தலையால் பிறந்தவன், நான் பேண்டதை காலால் பிறந்தவன் அள்ளவேண்டுமென்கிறோமே! இதுவும் ஜீவகாருணியத்தின் ஒரு அம்சமா? முதல் மனிதனையும் அவன் பழக்க வழக்கங்களையும் மதிக்கப்பழகி மனிதாபிமானத்தை வளர்த்து, பின் ஜீவகாருணியம் பற்றிப் பேசுவோம்.

    ஜீவகாருணியத்துடன் வாழ்வதானால் மூச்சே விடக்கூடாது.

    ஆகவே கூச்சப்படாமல் விரும்பினால் அசைவம் உண்ணுங்கள்.

    கொசுறாக....கலைஞர் கருணாநிதி இப்போ பல வருடங்களாக உடல் உழைப்பு அதிகமில்லாததாலும், முதுமையாலும் சைவ உணவே உண்கிறாராம். ஆனால் அசைவம் சாப்பிட்ட காலத்தை விட சைவம் சாப்பிடும் காலத்தில் அவர் செய்யும் விரும்பத்தகாத செயல்களும், பொய்களும் அதிகமாக உள்ளது( உங்களுக்குச் சந்தோசமாக இருக்கும்)

    இளையராஜா....அசைவம் சாப்பிட்டபோது கலக்கியடித்தார். சைவம் சாப்பிடத் தொடங்கினார். பழைய கெத்தைக் காணவில்லை.

    ஏன்? ஊருக்காக இந்த வேசம் .

    நீங்கள் மாறமாட்டீர்கள்.மாற வேண்டாம்.எல்லோரும் அசைவமானால்
    எங்களுக்கும் கட்டுப்படியாகாது.
    நான் எதையும் அளவுடன், வைத்தியர்களின்
    ஆலோசனையுடன் உண்பேன். மற்றவர்களையும் அனுமதிப்பேன்.

    இக்பால் செல்வன், வருண்....இவர் பிடித்துவிட்டார். விடார்.மற்றது இந்தியா மற்றும் தமிழ்நாட்டைத் தாண்ட மாட்டேன் என அடம் பிடிக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. \\மூட்டைபூச்சியையும், நுளம்பையும் கடிக்க விட்டு விசிறியால் விசிறுவது போல் பேசுகிறீர்கள்.\\ அப்படி நான் என்ன பண்ணிட்டேன்... ம்ம்.... விளங்கலையே.???

      \\உங்களுக்கு நெல் பயிரிட உழும் போது எத்தனைகோடி உயிர்கள் கொல்லப்படுகிறது. இன்று பயிர்களுக்கு எவ்வளவு பூச்சி கொல்லி தெளிக்கிறார்கள். நீங்கள் காய்கறியும் சாப்பிடக் கூடாது.\\ நடக்கும்போது நிறைய எறும்பு சாகும், மூச்சை இழுத்து வெளியே விடும்போது ஏகப்பட்ட நுண்ணுயிரிகள் நம் உடலில் மாயும், குடிக்கும் தண்ணீரில் நிறைய நுண்ணுயிரிகள் இருக்கு, அதை நாம் குடித்தால் அது அசைவம்.......... அப்புறம் மிளகு ஜீரகம் போன்றவற்றை கல்லால் இடிக்கும்போதும் தீக்குச்சியைப் பற்றவைக்கும்போதும் எக்கச் சக்கமான நுண்ணுயிரிகள் சாகும். இதெல்லாம் எனக்குத் தெரியாதா என்ன? அம்மணி, இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை. உதாரணத்துக்கு ஒவ்வொரு வருடமும், சாலை விபத்துகளில் ஆயிரக் கணக்கில் மக்கள் சாகிறார்கள், புயல், சுனாமியிலும் லட்சக்கணக்கில் செத்திருக்கிறார்கள். அதற்காக ஒரு திருடன், இவ்வளவு பேர் சாகிறார்களே, நான் கொள்ளையடிக்கப் போகும் வீட்டில் உள்ளவர்களை போட்டுத் தள்ளிவிட்டு அங்குள்ளவற்றை எடுத்துக் கொண்டு ஓடுகிறேனே, எத்தனயோ பேர் சாகும்போது இந்த நாலு பேர் செத்தால் என்ன, ஒரு வேலை அவர்கள் சாலை விபத்தில் கூட சாகலாம் என்றெல்லாம் நியாயம் பேச முடியுமா? போலிஸ் முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போட்டு விடாதா? அது போன்ற நியாயத்தை நீங்களும் வைக்கிறீர்கள்? தவிர்க்க முடியாமல் மாள்வது என்பது வேறு, வேண்டுமென்றே கொள்வது என்பது வேறு.


      \\நம் ஆண்டவனுக்கு கட்டும் பட்டுத்துணிக்கு எத்தனை கோடி பட்டுப்பூச்சிகள் குடம்பியாக கொதிநீரில் அவிக்கிறார்கள் தெரியுமா?
      நம் கற்சிலைகளினாலான ஆண்டவனுக்கு செய்யும் தங்கக் கவசங்களுக்கு
      தங்கம் தோண்டும் போது எத்தனை கோடி உயிர்களும், எத்தனை மனிதனும் சாகிறார்கள் தெரியுமா?
      தேனெடுக்கும் போது தேனியை கொஞ்சித்தானே! குலாவுகிறீர்கள். அதின் கருவையே அழித்துத்தான் தேனை எடுத்து, நீங்களும் குடித்து
      நம் கடவுள் கல்லுக்கும் ஊற்றுகிறீர்கள்.
      ஆகவே! இவ்வுலகில் எவருமே ஜீவகாருணியத்துடன் வாழவில்லை. முடியாது இது தான் உண்மை.
      நான் தலையால் பிறந்தவன், நான் பேண்டதை காலால் பிறந்தவன் அள்ளவேண்டுமென்கிறோமே! இதுவும் ஜீவகாருணியத்தின் ஒரு அம்சமா? முதல் மனிதனையும் அவன் பழக்க வழக்கங்களையும் மதிக்கப்பழகி மனிதாபிமானத்தை வளர்த்து, பின் ஜீவகாருணியம் பற்றிப் பேசுவோம்.\\ இதெல்லாம் தலைப்பில் இல்லை. ஒரு ஜீவனை இன்னொரு ஜீவன் கீழ்த்தரமாக நடத்துவதற்கே இந்த பொங்கு பொங்குகிரீர்களே, நீங்கள் இன்னொரு ஜீவனை கொலையே செய்கிறேன் என்கிறீர்களே நியாயமா?

      \\ஆகவே கூச்சப்படாமல் விரும்பினால் அசைவம் உண்ணுங்கள். \\ நான் எல்லாத்தையும் தின்னு பார்த்திட்டு காறித் துப்பிட்டு வெளியே வந்தவன்மா, ஒன்றும் தெரியாதவன் என்று என்ன வேண்டாம்.

      \\கொசுறாக....கலைஞர் கருணாநிதி இப்போ பல வருடங்களாக உடல் உழைப்பு அதிகமில்லாததாலும், முதுமையாலும் சைவ உணவே உண்கிறாராம். ஆனால் அசைவம் சாப்பிட்ட காலத்தை விட சைவம் சாப்பிடும் காலத்தில் அவர் செய்யும் விரும்பத்தகாத செயல்களும், பொய்களும் அதிகமாக உள்ளது( உங்களுக்குச் சந்தோசமாக இருக்கும்)\\ நான்தான் இந்தப் பதிவில் ஹிட்லர்-தெரசா உதாரணமே கொடுத்துவிட்டேனே!! உண்ணும் உணவில் எந்தப் பிரச்சினையுமில்லை, புத்தியில் தான் பிரச்சினை என்று.

      \\இளையராஜா....அசைவம் சாப்பிட்டபோது கலக்கியடித்தார். சைவம் சாப்பிடத் தொடங்கினார். பழைய கெத்தைக் காணவில்லை.\\ இதெல்லாம் இளையராஜா ரசிகர்கள் கேட்டால் உங்களை சும்மா விடமாட்டார்கள். ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு கால கட்டம் இருக்கிறது, மக்கள் ரசனை மாறிப் போனால் அந்தக் கலைஞன் என்ன செய்வான்? ராஜ்குமார் எம்ஜியார் போல எல்லோரும் நிலைக்க முடிவதில்லையே?

      \\ஏன்? ஊருக்காக இந்த வேசம் .
      நான் எதையும் அளவுடன், வைத்தியர்களின்
      ஆலோசனையுடன் உண்பேன். மற்றவர்களையும் அனுமதிப்பேன்.\\ பார்ரா ......பார்ரா ...... எல்லாரும் இவங்ககிட்ட அனுமதி வாங்கிகிட்டு தான் நான் வெஜ் சாப்பிடனுமாமே!!

      \\இக்பால் செல்வன், வருண்....இவர் பிடித்துவிட்டார். விடார்.மற்றது இந்தியா மற்றும் தமிழ்நாட்டைத் தாண்ட மாட்டேன் என அடம் பிடிக்கிறார்.\\ நான் சொல்லியிருப்பது தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும் Universal truth. எஸ்கிமோக்களை விட்டு வெளியே வரவே மாட்டேன் என்று குறுகிய வட்டத்துக்குள் சிக்கியிருப்பது நீங்கள்தான். வெளியே வாருங்கள் பரந்த உலகைக் காணுங்கள்.

      Delete
  30. ஜெயதேவ தாசு,

    நீங்கள் சைவத்தினை மட்டுமே உண்பீர்கள் ,அதை மட்டுமே உண்டு வாழ்வீர்கள் என நம்புகிறேன்,

    பலாப்பழம் தோல் உரிக்காமல் முழுசாகவும்,

    தேங்காய் உரிக்காமல் முழுசாகவும்,

    வாழைப்பழம் என்றாலும் தோலுடன் சாப்பிடவும்.

    பாவாக்காய் பச்சையாகவும் சாப்பிடவும்,

    நெல் என்றால் அதன் தோலை உரித்து அரிசியாக்காமல் அப்படியே நெல்லாக சாப்பிடவும் :-))

    ஏன் என்றால் எந்த தாவர உண்னியும் ரைஸ் மில்லை அரைத்து தீட்டி சாப்பிடுவதில்லை.

    ஆப்பிள்,ஆரஞ்ச் தமிழ் நாட்டில் விளைவதில்லை பின்னட் எப்படி அதை சாப்பிட்டு உயிர் வாழ்வேன் என்கிறீர்கள்.

    நீங்கள் கும்பகோணம் டிகிரி காப்பி எல்லாம் குடிப்பதுண்டா?

    மாடு என்ன ஜெய தேவ தாசருக்கு என்றா பால் சுரக்கிறது, அது அதன் கன்றுக்கு சுறக்கும் பாலை திருடி குடிக்கலாமோ :-))

    இல்லை எந்த விலங்கு காபி கொட்டையை வறுத்து ,அரைத்து பில்டரில் போட்டு குடிக்கிறது :-))

    எனவே காப்பி கொட்டை அப்படியே கடித்து தின்னவும் , தேயிலையை அப்படியே மேய்ந்துவிடவும் :-))

    ReplyDelete
  31. \\பலாப்பழம் தோல் உரிக்காமல் முழுசாகவும், \\பலாப் பழம் பழுத்தால் அதன் தொலை மனிதன் கைகளிலேயே பிளக்கும் அளவுக்கு மென்மையாகிவிடும்.

    \\தேங்காய் உரிக்காமல் முழுசாகவும்,\\ யானையிடம் முழுத் தேங்காயைக் கொடுத்தால் அது களால் உடைத்து மேலேயுள்ள ஓட்டை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை மட்டும் உண்ணும்.

    \\வாழைப்பழம் என்றாலும் தோலுடன் சாப்பிடவும்.\\ குரங்குகள் தொலை உரித்து சாப்பிடும். எனவே கிடைக்கும் உணவை mutilate செய்யாமல் உன்ன வேண்டும் என்பதுதான் பேச்சே தவிர, அதில் ஒரு பகுதியை தவிர்ப்பது பிரச்சினையே இல்லை.

    \\பாவாக்காய் பச்சையாகவும் சாப்பிடவும்,

    நெல் என்றால் அதன் தோலை உரித்து அரிசியாக்காமல் அப்படியே நெல்லாக சாப்பிடவும் :-))

    ஏன் என்றால் எந்த தாவர உண்னியும் ரைஸ் மில்லை அரைத்து தீட்டி சாப்பிடுவதில்லை.\\ தானியம் இல்லாவிட்டாலும் பழங்களாலும், தேங்காய், பருப்புகளை உண்டும் வாழ முடியும். அப்படியே இருந்தாலும் தாவர உணவை விட்டு விலகவில்லையே? தாவர உணவு நமக்கு என்று ஆன பின்னர், அவற்றை எப்படி உண்டால் தான் என்ன?

    \\ஆப்பிள்,ஆரஞ்ச் தமிழ் நாட்டில் விளைவதில்லை பின்னட் எப்படி அதை சாப்பிட்டு உயிர் வாழ்வேன் என்கிறீர்கள். \\ போக்கு வரத்து இல்லாத கால கட்டத்தில் ஆப்பிள் ஆரஞ்சுகளை மற்ற பகுதியினர் சாப்பிடாமல் தான் வாழ்ந்தார்கள். அந்தந்த பகுதிக்குத் தேவையான உணவு அங்கே விளையும்.

    \\நீங்கள் கும்பகோணம் டிகிரி காப்பி எல்லாம் குடிப்பதுண்டா?

    மாடு என்ன ஜெய தேவ தாசருக்கு என்றா பால் சுரக்கிறது, அது அதன் கன்றுக்கு சுறக்கும் பாலை திருடி குடிக்கலாமோ :-))

    இல்லை எந்த விலங்கு காபி கொட்டையை வறுத்து ,அரைத்து பில்டரில் போட்டு குடிக்கிறது :-))

    எனவே காப்பி கொட்டை அப்படியே கடித்து தின்னவும் , தேயிலையை அப்படியே மேய்ந்துவிடவும் :-))\\ நான் டீ காபி குடிப்பதில்லை பால் குடிதேயாக வேண்டுமென்ற கட்டாயமில்லை..

    ReplyDelete
    Replies
    1. ஜெயதேவரே,

      மாடு போன்ற சைவ பட்சிணியின் பல் அமைப்பை பாருங்கள்,அதே போல தான் மனிதனுக்கும் பல்ல் இருக்கிறது எனவே சைவமே மனித உணவு என்கிறீர்களே,

      மனிதனுக்கு பகுத்தறிவு இருப்பதை ஏற்பதாயில்லையா? அவனால் தேவையான கருவிகளை உருவாக்க முடியும், வேட்டையாட முடியும், ஆடு,மாடு,கோழி ஆகியவற்றை உணவுக்காக வளர்க்க முடியும், சமைத்து உண்ன முடியும், எனவே சிங்கம்,புலி போல வாழத்தேவையில்லை என்பதை உணரவும்.

      அப்படியும்,ஆடு,மாடு, போன்றவற்றின் பல் தான் மனிதனுக்கு இருக்கிறது ,அதே போன்ற உணவைத்தான் உண்ண வேண்டும் என்றால்,நானும் மேலும் சில ஒப்பீடுகளை செய்கிறேன்.

      ஆடு,மாடு ஆகியவற்றிற்கு கொம்பு உள்ளது.

      வால் உள்ளது.

      நான்கு காலில் நடக்கிறது, ஒரு இடத்திற்கு செல்ல வாகனங்களை பயன்ப்படுத்த தெரியாது,நடந்தே செல்லும் எனவே கால்நடைகள் என்பார்கள்.

      சைவ உணவினை பயிரிட்டு உண்ணாது இயற்கையாக வளர்வதை, அந்த இடத்துக்கே சென்று உண்ணும்.

      உண்ட உணவினை மீன்டும் இரைப்பையில் இருந்து வாய்க்கு கொன்டு வந்து அசைப்போட்டு உண்னும்.

      வயிறு நிறைந்த உடன் ,சாப்பிடுவதை நிறுத்திவிடும்,அடுத்த வேளைக்கு,அடுத்த நாளுக்கு என அறுவடை செய்து சேமிக்காது.

      தாகம் எடுத்தால் மினரல் வாட்டர் குடிக்காது,குளம் ,குட்டையில் போய் நீர் அருந்தும்.

      சாணி போட்டதும் பின் புறங்களை ஜலம் கொண்டு அலசிக்கொள்ளாது.

      பருத்தி பயிரிட்டு,பஞ்சு எடுத்து,நூல் நூற்று ,நெசவு செய்து துணியாக்கி விதவிதமா தைத்து உடை அணியாது.

      கல் சிமெண்ட் வைத்து வீடு கட்டிக்கொள்ளாது, வெட்ட வெளியில் உறங்கும்.

      இன்னொரு மாட்டை தெய்வம் என வணங்காது, கோயில் கட்டிக்கொள்ள தெரியாது.

      இன்னொரு மாட்டின் மூத்திரத்தையும் குடிக்காது,ஏன் எந்த சைவ பட்சிணி விலங்கும் இன்னொரு விலங்கின் மூத்திரம் குடிக்காது.

      குறிப்பாக இணையம், வலைப்பதிவு என்றெல்லாம் அதற்கு தெரியாது.

      எனவே இதை எல்லாம் நீங்களும் செய்ய வல்லவர் என்றால் ,தாராளமாக சைவம் மட்டுமே உண்டு உயிர் வாழவும்.

      நாங்கள் மனிதர்கள் ஆக பரிணாமம் பெற்றவர்கள், அறிவும்,ஆற்றலும் உள்ளதால் சுவையாக சில்லி சிக்கன் செய்து சாப்பிடுவோம் :-))

      Delete
    2. \\மாடு போன்ற சைவ பட்சிணியின் பல் அமைப்பை பாருங்கள்,அதே போல தான் மனிதனுக்கும் பல்ல் இருக்கிறது எனவே சைவமே மனித உணவு என்கிறீர்களே,\\ எந்த மாடும் கோல்கேட் பற்பசை போட்டு பிரஷ் தேச்சு பல் துலக்குவதில்லை, ஆனாலும் அதன் வாய் ஒரு போதும் நாறுவதில்லை, பல் டாக்டரிடம் ஒருபோதும் போவதுமில்லை. ஆனால் நீர் ஒரு நாள் பல் துலக்கவிட்டாலும் என்ன ஆகும் நினைத்துப் பாரும். அது மட்டுமல்ல அவ்வப்போது ரெண்டு ரெண்டு பல்லா பிடிங்கிகிட்டே இருக்கீரே, எது பெட்டரு?

      Delete

  32. \\மனிதனுக்கு பகுத்தறிவு இருப்பதை ஏற்பதாயில்லையா? அவனால் தேவையான கருவிகளை உருவாக்க முடியும், வேட்டையாட முடியும், ஆடு,மாடு,கோழி ஆகியவற்றை உணவுக்காக வளர்க்க முடியும், சமைத்து உண்ன முடியும், எனவே சிங்கம்,புலி போல வாழத்தேவையில்லை என்பதை உணரவும்.\\ மிருகங்களி விட மனிதனுக்கு அறிவு அதிகம் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது, ஆனால் காட்டில் நாலு மிருகம் எல்லாத்தையும் தின்னுவதாகவோ, மிச்ச 96 மிருகம் பட்டினியால் சாவதாகவோ எங்கேயாவது கேள்விப் பட்டிருக்கிரீரா? வரிக்குதிரைகள் இன்னொரு வரிக்குதிரைகள் கூட்டத்தை அணுகுண்டு போட்டு தீர்த்துக் கட்டியதாக பார்த்ததுண்டா? இயற்கையில் ஒவ்வொன்றுக்கும் என்ன படைக்கப் பட்டுள்ளதோ, அதை மட்டும், அதுவும் தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை விட்டு விட வேண்டும். பசியில்லாத பொது ஒரு புலி மானைக் கொள்ளாது, அப்போது அவை மிக அருகிலேயே பயமில்லாமல் மேய்ந்து கொண்டிருக்கும் இந்த அடிப்படை கூட தெரியாமல் என்ன அறிவு இருந்து எதற்கு பிரயோஜனம்?

    ReplyDelete
  33. \\ஆடு,மாடு ஆகியவற்றிற்கு கொம்பு உள்ளது.

    வால் உள்ளது.\\ அடடா.......... யாருக்குமே இது தெரியாதே......!!

    \\நான்கு காலில் நடக்கிறது, ஒரு இடத்திற்கு செல்ல வாகனங்களை பயன்ப்படுத்த தெரியாது,நடந்தே செல்லும் எனவே கால்நடைகள் என்பார்கள்.\\ பெட்ரோல் வாகனங்கள் கண்டுபிடிக்கும் வரை கழுதை, குதிரை, ஒட்டகங்கள், காளைகள் தான் உம்மையும் உம்மோட லக்கேஜுகளையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு போக உதவுச்சு மீண்டும் பெட்ரோல் [இன்னும் இருவது முப்பது வருஷம்தான்] தீர்ந்து போனா இதுங்க தான் உதவும்.

    \\சைவ உணவினை பயிரிட்டு உண்ணாது இயற்கையாக வளர்வதை, அந்த இடத்துக்கே சென்று உண்ணும்.

    உண்ட உணவினை மீன்டும் இரைப்பையில் இருந்து வாய்க்கு கொன்டு வந்து அசைப்போட்டு உண்னும்.\\ மீண்டும் அரிய கண்டுபிடிப்பு....!!

    \\வயிறு நிறைந்த உடன் ,சாப்பிடுவதை நிறுத்திவிடும்,அடுத்த வேளைக்கு,அடுத்த நாளுக்கு என அறுவடை செய்து சேமிக்காது.\\ ஏன் எறும்புகள் சேமித்து வைக்குமே பார்த்ததில்லையா? அதுங்களோட தத்துவம், தனக்குண்டானத்தை மட்டும், அதுவும் தேவையான அளவில் எடுத்துக் கொள், மற்றதைத் விட்டுவிடு என்பதே . உலகில் உணவுப் பஞ்சம், பட்டினிச் சாவு எல்லாம் இந்த மாதிரி கண்ணா பின்னா என்று பேராசையால் பதுக்கி வைத்ததால் தான்.

    \\தாகம் எடுத்தால் மினரல் வாட்டர் குடிக்காது,குளம் ,குட்டையில் போய் நீர் அருந்தும்.\\ ஆற்று நீர், குளத்து நீரை விட மினர் நீர் வேறெங்கும் கிடையாது. புத்திசாலி மனிதன் ஆற்றில் விஷத்தையும் சாக்கடையும் கலந்தான் கங்கை, யமுனை நதிகளை கொலையே செய்துவிட்டான், இன்னமும் பல நதிகளை கொன்று கொண்டே இருக்கிறான். வெட்கக் கேடு.

    ReplyDelete
  34. \\சாணி போட்டதும் பின் புறங்களை ஜலம் கொண்டு அலசிக்கொள்ளாது.\\ உலகிலேயே நாகரீகமா நீங்க நினைக்கும் அமரிக்கா காரன் என்ன செய்யுறான் தெரியுமா? அதுசரி, தினமும் சாணி போட்டாலும் அதுங்க சுத்தமாக்க அப்பபோ பொய் தண்ணீரில் விழுந்து குளிக்குமே?

    \\பருத்தி பயிரிட்டு,பஞ்சு எடுத்து,நூல் நூற்று ,நெசவு செய்து துணியாக்கி விதவிதமா தைத்து உடை அணியாது.

    கல் சிமெண்ட் வைத்து வீடு கட்டிக்கொள்ளாது, வெட்ட வெளியில் உறங்கும்.\\ \\ உடலில் உள்ள Fur அவற்றை காக்கும், அதுவே போதும். அதுங்க நலமோடுதான் வாழ்ந்துகிட்டு இருக்கு, நீர் எத்தனை போத்தியும் அப்பப்போ காய்ச்சல் வந்து ஏகப்பட்ட மருந்துகளை உள்ளே தள்ள வேண்டியிருக்கே?


    \\இன்னொரு மாட்டை தெய்வம் என வணங்காது, கோயில் கட்டிக்கொள்ள தெரியாது.\\ என்னை பாலூட்டியதால் எனக்கு அன்னை, நிலத்தில் உழுது உணவு தயாரித்த வகையில் காலை தந்தைக்குச் சமம். வணங்குவதால் தப்பில்லை.

    \\இன்னொரு மாட்டின் மூத்திரத்தையும் குடிக்காது,ஏன் எந்த சைவ பட்சிணி விலங்கும் இன்னொரு விலங்கின் மூத்திரம் குடிக்காது.\\ மருத்துவ குணம் எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உபயோகிக்கும் ஆங்கில மருந்துகளில் எத்தனை மூத்திரம் எத்தனை கக்கா இருக்கிறது, கணக்கே இல்லையே..........

    \\குறிப்பாக இணையம், வலைப்பதிவு என்றெல்லாம் அதற்கு தெரியாது.\\ அதை வச்சு பாருங்க நீங்களும் நானும் தண்டத்துக்குத்தானே பேசிகிட்டு இருக்கோம்!!

    \\\நாங்கள் மனிதர்கள் ஆக பரிணாமம் பெற்றவர்கள், அறிவும்,ஆற்றலும் உள்ளதால் சுவையாக சில்லி சிக்கன் செய்து சாப்பிடுவோம் :-)) \\ That is your choice, I have nothing to do with that...!!

    ReplyDelete
  35. ஜெயதேவுடு,

    நீர் தான் மாட்டைப்பார் அதே போல உண்ணனும் என சொன்னது ,நான் மனிதனை பார் என சொல்கிறேன், அதான் மனிதன் எல்லாம் கண்டுப்பிடிச்சு செய்துகொள்கிறான் என சொன்னப்பிறகு ஏன் என கேட்க தேவையில்லை, ஆனால் கண்டிப்பிடிக்காமல் மாடு போலவே உண்ணலாம், சமைக்க வேண்டாம் என இயற்கையா வாழலாம் என சொல்பவர் தான் இயற்கையாக வாழ்ந்து காட்ட வேண்டும்.

    //உலகிலேயே நாகரீகமா நீங்க நினைக்கும் அமரிக்கா காரன் என்ன செய்யுறான் தெரியுமா?//

    அமெரிக்காகாரன் அசைவம் சாப்பிடுறான் ,அதை சொல்லும் :-))

    வீடு கட்டாமால்,ஆடை உடுத்தாமல், வாகனம்,மின்சாரம், கணினி , விவசாயம் செய்யாமல், என்ன கிடைக்கிறதோ உண்டு வாழ வேண்டும்.

    என்ன தான் நீர் நிலை பாழானாலும் எந்த மாடும் மினரல் வாட்டர் பாட்டிலில் குடிப்பதில்லை :-))

    எந்த மாடும் தன்னுடைய மல, ஜலத்தை அள்ள சக மாட்டினை வற்புறுத்துவதில்லை.

    குப்பை அள்ள சொல்லுவதில்லை.

    வர்ணாசிரமம் பேசுவதில்லை.

    அவதாரம் உள்ளதாக சொல்வதில்லை.

    கோயில் கட்டுவதில்லை,அதனுள் நுழையாதே என யாரையும் தடுப்பதில்லை.

    நான் தான் கண்டிப்பிடிச்ச மருந்தும் சாப்பிடுவேன் ஆச்சே, மாடு போல உண்ணும் நீர் மாடு கூட குடிக்காத மூத்திரம் குடிக்கலாமோ?

    //என்னை பாலூட்டியதால் எனக்கு அன்னை, நிலத்தில் உழுது உணவு தயாரித்த வகையில் காலை தந்தைக்குச் சமம். வணங்குவதால் தப்பில்லை.//

    மாடு என்ன உமக்காகவா பால் கொடுக்கிறது என கேட்டப்போது பால் குடிக்க தேவையில்லை என சொன்னது என்னாச்சு?

    அப்புறம் எந்த மாடு தானாக ஏர்கலப்பை செய்து உழுது விவசாயம் செய்தது, நீர் மாட்டை பிடிச்சு கட்டிப்போட்டு உழ சொல்லிவிட்டு ,மாடு உழுததாமா?

    எறும்பு உணவை சேமிக்கிறது ,என வசதிக்கு கூட்டு சேரும், எறும்பு சைவ உணவை மட்டுமா உண்ணுகிறது, பூச்சி ,புழு,கரப்பான், என அனைத்தும் உண்ணும்,அப்போ நீரும் உண்ணுவீரா :-))

    மாடு போல சைவம் உண்ண வேண்டும் என்றால் மாடு போல வாழ தகுதி இருக்கணும் இல்லையா மனிதன் போல வாழ வேண்டும், மற்றவர்களுக்கு விலங்கை காட்டி உதாரணம் சொல்லும் முன் நாம் எந்த அளவுக்கு அப்படி வாழ முடியும் நினைத்து பார்க்க வேண்டும், சும்மா ஊருக்கு உபதேசம் செய்து ஏமாற்ற இது அந்தக்காலம் இல்லை :-))

    ReplyDelete
    Replies
    1. \\நீர் தான் மாட்டைப்பார் அதே போல உண்ணனும் என சொன்னது ,நான் மனிதனை பார் என சொல்கிறேன், அதான் மனிதன் எல்லாம் கண்டுப்பிடிச்சு செய்துகொள்கிறான் என சொன்னப்பிறகு ஏன் என கேட்க தேவையில்லை, ஆனால் கண்டிப்பிடிக்காமல் மாடு போலவே உண்ணலாம், சமைக்க வேண்டாம் என இயற்கையா வாழலாம் என சொல்பவர் தான் இயற்கையாக வாழ்ந்து காட்ட வேண்டும்.\\ உணவைத் தீயிலிடாமல் உப்பு சேர்க்காமல் உண்ணும் கிராமம் திருநெல்வேலியில் உள்ளது, அங்கே பல் ஊர்கள், நாடுகளில் இருந்து வந்து இயற்க்கை உணவு முறைகளைப் பின்பற்றி பல நோய்கள் குணமடைந்து செல்கிறார்கள் வேண்டுமென்றால் பார்த்துக் கொள்ளவும்.

      http://universalgoodlife.webs.com/

      \\வீடு கட்டாமால்,ஆடை உடுத்தாமல், வாகனம்,மின்சாரம், கணினி , விவசாயம் செய்யாமல், என்ன கிடைக்கிறதோ உண்டு வாழ வேண்டும்.\\ மனிதன் civilized animal. கொஞ்சம் civilized ஆகவும் நடந்து கொள்ள வேண்டும். நீர் சொன்ன எல்லாத்தையும் செய்துவிட்டு மிருகத்தை விட கேவலமாக அல்லவா போய்க் கொண்டிருக்கிறான்?

      \\என்ன தான் நீர் நிலை பாழானாலும் எந்த மாடும் மினரல் வாட்டர் பாட்டிலில் குடிப்பதில்லை :-)) \\ இயற்கையில் ஓடும் ஆறுகளைப் போன்ற மினரல் வாட்டர் வேறெதுவும் இல்லை, அதை குடித்துதான் கடந்த இருபது வருடங்களுக்கு முன்புவரை கூட மனிதன் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தான். இன்னைக்கு அக்கா மாலாக்காரன் வந்து உன் நிலத்தில் துளைபோட்டு அந்த நீரையே சுத்தம் பண்ணி அதையே உம கையில் கொடுத்து லிட்டருக்கு இருவது ரூவாக்கு குடுக்குறான். அவன்கிட்ட இழிச்சவாத் தனமா ஏமாந்ததோடு மட்டுமல்லாது அதை டம்பம் வேறு அடித்துக் கொள்கிறீர். தமாசாக இருக்கிறது.

      \\எந்த மாடும் தன்னுடைய மல, ஜலத்தை அள்ள சக மாட்டினை வற்புறுத்துவதில்லை.\\ மனிதனும் கிராமத்தில் வாழ்ந்தால் இந்தத் தேவை இருக்காது.

      \\குப்பை அள்ள சொல்லுவதில்லை.\\ ஊருபட்ட பிளாஸ்டிக்கை எவன் உம்மை உபயோகப் படுத்தச் சொன்னான்? கண்ட கண்ட சூப்பர் மார்க்கெட் ஐட்டம் அத்தனையும் குப்பை யை உண்டு பண்ணும். இதெல்லாம் வெள்ளைக்காரன் கொண்டாந்த பிரச்சினை. 1960 ஆம் ஆண்டு கூவம் ஆற்றில் குளிக்க முடியும், தண்ணீரைக் குடிக்க முடியும் இப்போ? இதெல்லாம் யார் பண்ணியது?

      \\வர்ணாசிரமம் பேசுவதில்லை.

      அவதாரம் உள்ளதாக சொல்வதில்லை.

      கோயில் கட்டுவதில்லை,அதனுள் நுழையாதே என யாரையும் தடுப்பதில்லை.

      நான் தான் கண்டிப்பிடிச்ச மருந்தும் சாப்பிடுவேன் ஆச்சே, மாடு போல உண்ணும் நீர் மாடு கூட குடிக்காத மூத்திரம் குடிக்கலாமோ?\\ இதெல்லாம் இப்போதைய தலைப்பே இல்லை.

      \\மாடு என்ன உமக்காகவா பால் கொடுக்கிறது என கேட்டப்போது பால் குடிக்க தேவையில்லை என சொன்னது என்னாச்சு?\\ உமக்கு வேண்டாம் என்றால் குடிக்கத் தேவையில்லை, பாலை கரைப்பதால் மாடு சாவதில்லை, முப்பது லிட்டர் பால் ஒரு கன்றுக்கு தேவைப் படாது, மீதத்தை எடுத்துக் கொள்வதில் தப்பேயில்லை உமது அறிவியலால் உண்ணும் உணவு நாசமாச்சு, வேலை செய்யாததால் பெண்களால் பாலூட்டக் கூட முடியவில்லை, உதவிக்கு வருவது பசு தானே?

      \\அப்புறம் எந்த மாடு தானாக ஏர்கலப்பை செய்து உழுது விவசாயம் செய்தது, நீர் மாட்டை பிடிச்சு கட்டிப்போட்டு உழ சொல்லிவிட்டு ,மாடு உழுததாமா?\\ நாங்களாச்சும் அதனிடமிருந்து வேலை தான் வாங்குகிறோம் நீர் அதை கொன்னே சாப்பிடுகிரீரே? எது மோசம்?

      \\எறும்பு உணவை சேமிக்கிறது ,என வசதிக்கு கூட்டு சேரும், எறும்பு சைவ உணவை மட்டுமா உண்ணுகிறது, பூச்சி ,புழு,கரப்பான், என அனைத்தும் உண்ணும்,அப்போ நீரும் உண்ணுவீரா :-)) \\ உமது மேல்மாடி சுத்தமா காலி புலி கூடத்தான் மானி அடித்து சாப்பிடுது, அதனால நானும் சாப்பிடனும்னு ஆயிடுமா? என்னோட உடலின் அமைப்புக்கு ஏற்றதுன்னு தானே பதிவில் சொல்லியிருக்கேன். மத்த ஜீவன்களுக்கானத்தை தொடாதேன்னுதானே சொல்லியிருக்கேன்?

      \\மாடு போல சைவம் உண்ண வேண்டும் என்றால் மாடு போல வாழ தகுதி இருக்கணும் இல்லையா மனிதன் போல வாழ வேண்டும், மற்றவர்களுக்கு விலங்கை காட்டி உதாரணம் சொல்லும் முன் நாம் எந்த அளவுக்கு அப்படி வாழ முடியும் நினைத்து பார்க்க வேண்டும், சும்மா ஊருக்கு உபதேசம் செய்து ஏமாற்ற இது அந்தக்காலம் இல்லை :-)) \\ எல்லா ஜெவனுக்கும் அதோட உடலமைப்புக்கு ஏற்ற உணவை உன்னனும்தான் சொன்னேன், நீர் ஏன் மாட்டியே பிடிச்சு தொங்கிகிட்டு இருக்கீரு? அதை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுமையா.......

      Delete
  36. nice job jayadev ., எனக்கொரு சந்தேகம் ., கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க சைவம் சாப்ட கூடாத என்ன?? ., சைவம் சாப்ட சொன்னா எதுக்குய்யா தேவையில்ல்லாம இவங்க சாமிய இழுக்குறீங்க ., .,


    (சைவம் திங்குறவன்லாம் கோவில்ல மணியடிக்குறான்.,
    அசைவம் திங்குறவன் பகுத்தறிவ பேசுவான்னு எவன்யா சொன்னான் ???? )

    நான் சைவம் உண்பவன் ., அவ்வளவாக கடவுள் நம்பிக்கை இல்லை .,போதுமா ??
    -pradeep-

    ReplyDelete
  37. Pradeep!!


    நாத்தீகன் என்றால் அறிவியல் ரீதியாகவும், நெறி நூல்களைப் பின்பற்றுபவர் என்றால் திருக்குறள் மூலமாகவும், ஆத்தீகர்கள் என்றால் பகவத் கீதை வாயிலாகவும் மனிதன் மாமிசம் உண்ணத் தக்கவன் அல்ல என்று நிறுவ முடியும், தங்கள் எடுத்துள்ள நிலை வரவேற்கத் தக்கது.

    ReplyDelete